Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript திரை விமர்சனம் | SudhaRaviNovels

திரை விமர்சனம்

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
ஹிச்கி ( ஹிந்தி திரைப்படம்)


hichki.jpeg


ஹிச்கி என்பதன் அர்த்தம் விக்கல். தூரட் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வாழ்க்கையையும், அதை அவர் எவ்வாறு தைரியமாக எதிர்கொண்டு ஜெயிக்கிறார் என்பதை மிக அழகாக காண்பித்திருக்கிறார் இயக்குனர் சிதார்த்த் மல்ஹோத்ரா. தூரட் என்பது மரபுவழி சார்ந்து நரம்பியல் மனநல சீர்கேடு. இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பவரின் தசைகள் திடீர் நடுக்கத்தால் உடலின் ஏதேனும் ஒரு பாகம் தன்னை அறியாமல் அசைவைக் காட்டும். அதோடு வார்த்தைகளும் வெளிப்படும். அதை அந்த நோயால் பாதிக்கப்பட்டவரால் கட்டுப்படுத்த முடியாது.



இப்படிப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர் தான் ராணி முகர்ஜி. நைனா மாத்துராக இந்த படம் முழுவதும் வந்து நம்மை சிந்திக்க வைக்கிறார், தன்னம்பிக்கையை நம்முள் விதைத்து விட்டு செல்கிறார்.



சிறுவயதில் இந்த நோயின் அறிகுறி தெரிய ஆரம்பிக்கும் போது சுற்றி உள்ளவர்களால் அவர் அடையும் அவமானங்கள் ஆரம்பத்தில் தனக்குள் சுருங்கிப் போக செய்கிறது. அவரின் தந்தையே தனது குழந்தையின் நோயின் தன்மையை உணராமல் குடும்பத்தை விட்டு விலகி செல்கிறார். நிஜத்திலும் இது போன்ற நிகழ்வுகள் நிறைய உண்டு. பல தந்தையர் தனக்கு பிறந்த குழந்தைகளின் குறைபாடுகளை அறிந்த பின் விலகிச் செல்வதை கண்டிருக்கிறோம். ஆனால் எந்தவொரு தாயும், தன்னுடைய குழந்தையை இம்மாதிரியான சூழலில் விட்டு விலகிச் செல்வதில்லை.



நைனாவின் இந்த நோய்அவர் படிக்கும் பள்ளியில் பல பிரச்சனைகளை உருவாக்குகிறது. கூட படிப்பவர்களும் சரி, வழி நடத்தும் ஆசிரியரும் சரி அவரை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். முடிவில் அவரை அந்த பள்ளியில் இருந்து வெளியேற்றுகிறார்கள். அவருக்கேற்ற பள்ளி இதுவல்ல, மனநலம் குன்றியவர்களுக்கான பள்ளிக்குத் தான் செல்ல வேண்டும் என்கிற அறிவுரையுடன்.



அந்த நிமிடத்தில் இருந்து தாயாரின் உதவியுடன் தனது வாழ்க்கைப் போராட்டத்தை துவங்குகிறார். சாதாரண பள்ளியிலேயே படித்து பட்டங்களும் பெற்று கார்டூனிஸ்ட்டாக வேலை பார்த்தாலும், தான் ஒரு டீச்சர் ஆக வேண்டும் என்றே பிரியப்படுகிறார். அதற்காக பல பள்ளிகளின் படிகளை ஏறி இறங்குகிறார். அவரின் இந்த குறைப்பாட்டைக் கண்டு வேலை கொடுக்க மறுக்கின்றனர்.



இதன் நடுவே அவரது தந்தை மீண்டும் குடும்பத்தில் இணைந்து நைனாவின் ஆசைக்கு தடை போட முயல்கிறார். ஆனால் நைனாவின் பல வருடக் கனவு நனவாகிறது. நைனா வெளியேற்றப்பட்ட பள்ளியிலேயே அவருக்கு வேலை கிடைக்கிறது. தற்காலிகமாக மட்டுமே அந்த பள்ளியில் வேலை கிடைக்கிறது.



அதுவும் எப்படிப்பட்ட வகுப்பிற்கு என்றால் அந்த பள்ளியிலேயே மிக மோசமான மாணவர்களை கொண்ட வகுப்பிற்கு ஆசிரியராக பொறுப்பேற்கிறார். தனது குறைப்படுகளையும் மீறி அந்த மாணவர்களின் மனதில் இடம் பிடித்து எப்படி வெற்றி பெறுகிறார் என்பதை ரசிக்கும் வகையில் நகர்த்தி செல்கிறார்.



அந்த மாணவர்களும் பிறப்பிலேயே மோசமானவர்கள் அல்ல. அவர்கள் வளர்ந்து வரும் சூழலும், அவர்களை மற்றவர்கள் நடத்தும் முறையுமே தவறானவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் சூழ்நிலையை உணர்ந்து அவர்களை அந்த பள்ளியின் முதல் மாணவர்களாக மாற்ற போராடுகிறார்.



இந்த படத்திற்கு ஸ்க்ரீன் ப்ளே எழுதியவர்களை பாராட்டியே ஆக வேண்டும். ஒவ்வொரு வசனமும் நிதர்சனத்தை முகத்தில் அறைந்து சொல்லுகிறது. இது போன்று குறைபாடு உடையவர்களை நம் சமூகத்தில் எப்படி நடத்துகிறோம் என்பதை திரையில் பார்க்கும் போது மனம் வலிக்கிறது. எந்தவொரு உயிரும் தான் இப்படித்தான் பிறக்க வேண்டும் என்று விரும்பி பிறப்பதில்லை. அப்படி இருக்கும் போது பிற உயிரின் வேதனையை நாம் கண்டிப்பாக உணர வேண்டும்.



படம் முடிந்த பின்பும் நைனா மாத்துரின் ஓசை காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ராணி முகெர்ஜி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். மிகையான நடிப்பை காட்டாது இயல்பாக அந்த நைனாவாக நம் முன் வந்து செல்கிறார்.



காதல் இல்லாத, காமம் இல்லாத ஒரு படம் நம்மை திரையோடு ஒன்ற வைத்திருக்கிறது. வெகுநாட்களுக்குப் பிறகு ரசித்துப் பார்த்த படம்.
 
Last edited:

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
நான் இன்று ஒரு விமர்சனத்துடன் வந்திருக்கிறேன்,சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம்.நான்கு கதைகள்,அவற்றை அழகாக இணைத்து ஒரு படம்.திரைப்படமாக ரசித்து பார்க்க வேண்டிய படம்தான்.எங்கோ யார் வீட்டிலோ நடப்பது பார்க்க சுவாரஸ்யமா இருக்கு!நம் வீட்டில் நடந்தால் நாம் ஒத்துக் கொள்ளவே மாட்டோம்!நடப்பதை தான் காட்டுகிறோம் என சொல்லலாம்,எதுவுமே குற்றம் இல்லை என படம் சொல்கிறது!ஆரம்பத்திலேயே சமந்தா தன் பழைய காதலனிடம் போனில் பேசுகிறார்,அவனை வீட்டுக்கு அழைக்கிறார்,அவன் ஏதோ பிரச்சினையில் இருப்பதாகவும் அதை மறக்க வைக்க போவதாகவும் சொல்வார்!அவன் வந்ததும் இருவரும் உறவு கொள்வார்கள்,உடனே அவன் இறந்து விடுவான்!கணவனான பகத் பாஸில் வந்ததும் உண்மையை சொல்வாள்!உரையாடல் எல்லாமே அப்பட்டமான வார்த்தைகள்!நமக்கு அதிர்ச்சியாக இருக்கும்!

பிணத்தை மறைக்க இருவரும் அலைவார்கள்.ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்கள் செக்ஸ் படம் பார்க்க ஒரு நண்பன் வீட்டில் சேர்வார்கள்,படத்தில் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன் மகனும் இந்த படம் பார்க்க வந்திருப்பான்!அவன் அதிர்ச்சியில் டி வியை உடைத்து கத்தி கதறுவான்!உடைந்த டிவிக்கு பதில் புதிது வாங்க அலைவார்கள்!விஜய் சேதுபதி கல்யாணம் ஆகி ஒரு மகன் பிறந்ததும் வீட்டை விட்டு ஓடி ஒரு அரவாணியாக திரும்பி வருவார்! அவரை குட்டி பையன் பள்ளிக்கு கூட்டி செல்ல ஆசைப்படுவான்!அங்கு அவர் சந்திக்கும் பிரச்சினைகள்,போலிஸிடம் மாட்டி அனுபவிக்கும் செக்ஸ் டார்ச்சர்கள் என அவரின் கதை!மிஷ்கின் ஒரு மத போதகர் போல வருவார்,சுனாமியில் உயிர் பிழைத்து வரும் போது ஒரு சிலையுடன் தப்பித்து வருவார்!அதை வைத்து மக்களிடம் பிரார்த்தனை செய்வது போல வருவார்!அவர் மனைவிதான் ரம்யா கிருஷ்ணன்,அவரும் தான் நடிக்கும் படங்கள் குறித்து ஒரு கருத்து சொல்வார்,தான் நடிக்கும் படத்தை ஏன் லட்சக் கணக்கான மக்கள் பார்க்கிறார்கள் என கேட்பார்!அதுவும் தப்பில்லை!இப்படி படம் முழுக்க அவரவர் கோணங்கள்!அப்பட்டமான கெட்ட வார்த்தைகள் சகஜமான வரம்பு மீறல்கள் என படம் நகர்கிறது.நான்கு கதைகளும் ஒரு புள்ளியில் இணைகிறது.விதியாசமான படம்.தியேட்டர் முழுக்க விசில்களும் கை தட்டல்களும் சிரிப்பும் அள்ளுது!வசனங்கள் அருமை!ஜாதி பத்தி யும் ,இன்ற்றைய சமூக நிலவரங்கள் பற்றியும் நிறைய கருத்துக்கள் போகிற போக்கில் அனாயாசமா பேசப்படுது!லிப்ட்டில் சமந்தாவும் பகத்தும் பேசும் ஒரு இடம்,நீ பெரிய பத்தினி சொன்னதும் கரண்ட் வந்துடும் பாரு என சொன்னதும் கரண்ட் வரும் இடம்,ஒரு பாட்டி விஜய் சேதுபதியிடம் உனக்கு பிடிச்ச மாதிரி நீ வாழலாம் ஆனா நடைமுறைன்னு ஒண்ணு இருக்கில்ல என சொல்லும் இடம்,குட்டி பையன் நீ ஆம்பளையா இரு இல்ல பொம்பளையா இரு ஆனா எங்க கூடவே இருன்னு சொல்லும் இடம் என அங்கு அங்கு அழகான சீன்கள்!
 
Last edited by a moderator:

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
நான் இன்று ஒரு விமர்சனத்துடன் வந்திருக்கிறேன்,சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம்.நான்கு கதைகள்,அவற்றை அழகாக இணைத்து ஒரு படம்.திரைப்படமாக ரசித்து பார்க்க வேண்டிய படம்தான்.எங்கோ யார் வீட்டிலோ நடப்பது பார்க்க சுவாரஸ்யமா இருக்கு!நம் வீட்டில் நடந்தால் நாம் ஒத்துக் கொள்ளவே மாட்டோம்!நடப்பதை தான் காட்டுகிறோம் என சொல்லலாம்,எதுவுமே குற்றம் இல்லை என படம் சொல்கிறது!ஆரம்பத்திலேயே சமந்தா தன் பழைய காதலனிடம் போனில் பேசுகிறார்,அவனை வீட்டுக்கு அழைக்கிறார்,அவன் ஏதோ பிரச்சினையில் இருப்பதாகவும் அதை மறக்க வைக்க போவதாகவும் சொல்வார்!அவன் வந்ததும் இருவரும் உறவு கொள்வார்கள்,உடனே அவன் இறந்து விடுவான்!கணவனான பகத் பாஸில் வந்ததும் உண்மையை சொல்வாள்!உரையாடல் எல்லாமே அப்பட்டமான வார்த்தைகள்!நமக்கு அதிர்ச்சியாக இருக்கும்!

பிணத்தை மறைக்க இருவரும் அலைவார்கள்.ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்கள் செக்ஸ் படம் பார்க்க ஒரு நண்பன் வீட்டில் சேர்வார்கள்,படத்தில் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன் மகனும் இந்த படம் பார்க்க வந்திருப்பான்!அவன் அதிர்ச்சியில் டி வியை உடைத்து கத்தி கதறுவான்!உடைந்த டிவிக்கு பதில் புதிது வாங்க அலைவார்கள்!விஜய் சேதுபதி கல்யாணம் ஆகி ஒரு மகன் பிறந்ததும் வீட்டை விட்டு ஓடி ஒரு அரவாணியாக திரும்பி வருவார்! அவரை குட்டி பையன் பள்ளிக்கு கூட்டி செல்ல ஆசைப்படுவான்!அங்கு அவர் சந்திக்கும் பிரச்சினைகள்,போலிஸிடம் மாட்டி அனுபவிக்கும் செக்ஸ் டார்ச்சர்கள் என அவரின் கதை!மிஷ்கின் ஒரு மத போதகர் போல வருவார்,சுனாமியில் உயிர் பிழைத்து வரும் போது ஒரு சிலையுடன் தப்பித்து வருவார்!அதை வைத்து மக்களிடம் பிரார்த்தனை செய்வது போல வருவார்!அவர் மனைவிதான் ரம்யா கிருஷ்ணன்,அவரும் தான் நடிக்கும் படங்கள் குறித்து ஒரு கருத்து சொல்வார்,தான் நடிக்கும் படத்தை ஏன் லட்சக் கணக்கான மக்கள் பார்க்கிறார்கள் என கேட்பார்!அதுவும் தப்பில்லை!இப்படி படம் முழுக்க அவரவர் கோணங்கள்!அப்பட்டமான கெட்ட வார்த்தைகள் சகஜமான வரம்பு மீறல்கள் என படம் நகர்கிறது.நான்கு கதைகளும் ஒரு புள்ளியில் இணைகிறது.விதியாசமான படம்.தியேட்டர் முழுக்க விசில்களும் கை தட்டல்களும் சிரிப்பும் அள்ளுது!வசனங்கள் அருமை!ஜாதி பத்தி யும் ,இன்ற்றைய சமூக நிலவரங்கள் பற்றியும் நிறைய கருத்துக்கள் போகிற போக்கில் அனாயாசமா பேசப்படுது!லிப்ட்டில் சமந்தாவும் பகத்தும் பேசும் ஒரு இடம்,நீ பெரிய பத்தினி சொன்னதும் கரண்ட் வந்துடும் பாரு என சொன்னதும் கரண்ட் வரும் இடம்,ஒரு பாட்டி விஜய் சேதுபதியிடம் உனக்கு பிடிச்ச மாதிரி நீ வாழலாம் ஆனா நடைமுறைன்னு ஒண்ணு இருக்கில்ல என சொல்லும் இடம்,குட்டி பையன் நீ ஆம்பளையா இரு இல்ல பொம்பளையா இரு ஆனா எங்க கூடவே இருன்னு சொல்லும் இடம் என அங்கு அங்கு அழகான சீன்கள்!
அக்கா அழகா சொல்லி இருக்கீங்க....ஆனா நீங்க சொல்றதை பார்க்கும் போது தனியா உட்கார்ந்து தான் பார்க்கணும் போல......
 
  • Like
Reactions: selvipandiyan