அத்தியாயம் – 14
ரெப்ரெஷ் செய்து கொண்டு வெளியே வந்தவன் பால்கனியில் நின்று தான் எடுக்கப் போகும் முடிவுகளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். அப்போது அவன் அருகே வந்து நின்ற கேஷ்வி இரு கைகளையும் கட்டிக் கொண்டு அவனையே பார்த்தபடியே நின்றாள்.
அவள் நிற்பதை உணர்ந்தவன் “என்ன வேணும்?” என்றான் புருவத்தை உயர்த்தி.
“ரெஜிஸ்டர் மேரேஜை நிறுத்துவதற்காக என்னுடைய பாக்டரியை கொளுத்தியாச்சு. நல்ல கணவன்” என்றாள் இதழ்களை வளைத்து.
“சொன்னா கேட்க மாட்டீங்க நீயோ உன்னுடைய சொந்தங்களோ. அது தான் என்ன செய்யணுமோ செய்துட்டேன்” என்றான் தோள்களை குலுக்கியபடி.
அவனை சுற்றி வந்தவளின் பார்வை ரசனையுடன் அவனை தழுவிச் செல்ல “சொல்லப் போனா எனக்குமே இந்த கல்யாணத்தில் இண்டரெஸ்ட் இல்லாமல் தான் இருந்தது. பட் இப்போ ஐ லைக் யு. சோ உன்னை விடுவதாக இல்லை”.
தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றவன் இறுகிய முகத்துடன் “என் மனைவி மதுவர்ஷினி தான். அவளைத் தவிர வேறு யாரும் என் வாழ்க்கையில் வர முடியாது”.
அவளும் அவன் கண்களைப் பார்த்தபடியே தன் கழுத்தில் இருந்த தாலியை காண்பித்து “அப்போ இதுக்கு பேர் என்ன? நான் யார் உனக்கு?” என்றாள்.
லேசாக தாடையை வருடியபடியே “கட்டாயப்படுத்தி கட்ட வைத்த ஒன்றிற்கு அதற்க்கான மதிப்பு கிடையாது. நான் மனதார காதலித்து என்னில் சரி பாதியாக நினைத்திருக்கும் அவள் மட்டுமே என் மனைவி”.
“நான் கோர்ட்டிற்கு போனா கேஸ் என் பக்கம் தான் நிற்கும்” என்றாள் இளக்காரமாக.
கேலி கலந்த புன்னகையுடன் “நடந்த எல்லாவற்றிற்கும் என்னிடம் ஆதாரம் இருக்கு. கோர்ட்டுக்குப் போனால் உனக்கு அவமானம் மட்டுமே மிஞ்சும்” என்றான் கூர்மையான பார்வையுடன்.
அவனது பதிலில் அவள் முகம் யோசனையை சுமந்து கொண்டது. அந்நேரம் அவர்களின் அறைக் கதவு தட்டப்பட, வேகமாக சென்று திறந்தவன் அங்கே நின்றிருந்த வேலை ஆள் அவனை பிம்லா தேவி அழைப்பதாக கூறினான்.
கேஷ்வியை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான். பிம்லா தேவியின் அறைக்குள் நுழைந்தவனுக்கு தாதி சொன்னவைகள் யாவும் நினைவில் வந்து போனது. விருப்பமின்றி ஒருவருடன் எப்படி அவரால் வாழ முடிந்தது? அப்படி என்ன வாழ்க்கையை வாழ்ந்து விட்டார் இவர் என்று அவரை பார்த்தான்.
பிம்லாவோ ராணியின் தோரணையுடன் அமர்ந்திருந்தவர் எதிரே நின்றவனின் முகத்தில் தெரிந்த உணர்வுகளை அவதானித்துக் கொண்டிருந்தார். அவரது முகமோ துடைத்து வைத்தது போல இருந்தது. எந்தவித உணர்வுகளையும் வெளிக் காட்டாது அவனையே பார்த்தவண்ணம் இருந்தார்.
அவனும் அவரே பேசட்டும் என்று இரு கைகளையும் கட்டிக் கொண்டு அமைதியாக நின்றான்.
“சோ உனக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு? இனி நாங்க எதையும் மறைச்சு செய்ய வேண்டியது இல்லை” என்றான் அவனது கண்களைப் பார்த்து.
அவனும் நன்றாக நிமிர்ந்து நின்று “இத்தனை நாள் வளர்த்த பாசமாவது இருக்கும்னு நினைச்சேன்” என்றான் வெற்றுக் குரலில்.
இதழில் எழுந்த கேலிப் புன்னகையுடன் “நாங்க நாய்களை வளர்ப்பதில் கூட ப்ரீட் பார்த்து தான் வளர்ப்போம். அப்படி இருக்கும் போது...” என்று இழுத்தவாறு கை காட்டி நிறுத்தியவன் “தேங்க்ஸ்! உங்களுடைய இந்த வாக்குமூலம் எனக்கு இப்போ தேவையாக இருந்தது. என்ன பார்க்குறீங்க? இனி, நான் செய்யப் போகும் செயல்களுக்கு உங்களுக்கு என் மேல பாசம் இருந்தா அது தடையாக இருக்குமேன்னு நினைச்சேன். இனி, கவலையில்லை” என்றான் வன்மம் நிறைந்த குரலில்.
அலட்சியமாக அவனைப் பார்த்து புன்னகைத்தவர் “உனக்கும் உங்கப்பா புத்தி தான் இருக்கு. நம்ம தரத்திற்கு ஏற்ற ஆட்களுடன் பழக தெரியாதவர்கள். நீ என்னை என்ன பண்ணிட முடியும்னு நினைக்கிற? இங்கே உனக்கென்று எதுவுமே இல்லை. எங்கள் பிடிக்குள்ள இருக்கிற உன்னால எங்களுக்கு எதிராக எதுவும் நினைக்க கூட விட மாட்டோம்”.
இரு கைகளையும் கட்டிக் கொண்டு அவரை சிறிது நேரம் நன்றாக பார்த்தவன் “உங்களுக்கு வேணா என் மேல பாசம் இல்லாமல் இருக்கலாம். ஆனா கடந்து போன நிமிடம் வரை உங்களை என்னுடைய அம்மாவாக தான் நினைத்திருந்தேன். எங்களுக்கு மனிதர்களிடம் தராதரம் பார்க்க தெரியாது. அதே சமயம் மனித மிருகங்களை நன்றாக வேட்டையாட தெரியும்”.
உதட்டை வளைத்து இகழ்ச்சியாக பார்த்தவர் “அதிகமா யோசித்து அடிபட்டு உங்கப்பனை மாதிரி மருத்துவமனையில் போய் படுத்திடாதே” என்றார் மிரட்டலாக.
ரெப்ரெஷ் செய்து கொண்டு வெளியே வந்தவன் பால்கனியில் நின்று தான் எடுக்கப் போகும் முடிவுகளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். அப்போது அவன் அருகே வந்து நின்ற கேஷ்வி இரு கைகளையும் கட்டிக் கொண்டு அவனையே பார்த்தபடியே நின்றாள்.
அவள் நிற்பதை உணர்ந்தவன் “என்ன வேணும்?” என்றான் புருவத்தை உயர்த்தி.
“ரெஜிஸ்டர் மேரேஜை நிறுத்துவதற்காக என்னுடைய பாக்டரியை கொளுத்தியாச்சு. நல்ல கணவன்” என்றாள் இதழ்களை வளைத்து.
“சொன்னா கேட்க மாட்டீங்க நீயோ உன்னுடைய சொந்தங்களோ. அது தான் என்ன செய்யணுமோ செய்துட்டேன்” என்றான் தோள்களை குலுக்கியபடி.
அவனை சுற்றி வந்தவளின் பார்வை ரசனையுடன் அவனை தழுவிச் செல்ல “சொல்லப் போனா எனக்குமே இந்த கல்யாணத்தில் இண்டரெஸ்ட் இல்லாமல் தான் இருந்தது. பட் இப்போ ஐ லைக் யு. சோ உன்னை விடுவதாக இல்லை”.
தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றவன் இறுகிய முகத்துடன் “என் மனைவி மதுவர்ஷினி தான். அவளைத் தவிர வேறு யாரும் என் வாழ்க்கையில் வர முடியாது”.
அவளும் அவன் கண்களைப் பார்த்தபடியே தன் கழுத்தில் இருந்த தாலியை காண்பித்து “அப்போ இதுக்கு பேர் என்ன? நான் யார் உனக்கு?” என்றாள்.
லேசாக தாடையை வருடியபடியே “கட்டாயப்படுத்தி கட்ட வைத்த ஒன்றிற்கு அதற்க்கான மதிப்பு கிடையாது. நான் மனதார காதலித்து என்னில் சரி பாதியாக நினைத்திருக்கும் அவள் மட்டுமே என் மனைவி”.
“நான் கோர்ட்டிற்கு போனா கேஸ் என் பக்கம் தான் நிற்கும்” என்றாள் இளக்காரமாக.
கேலி கலந்த புன்னகையுடன் “நடந்த எல்லாவற்றிற்கும் என்னிடம் ஆதாரம் இருக்கு. கோர்ட்டுக்குப் போனால் உனக்கு அவமானம் மட்டுமே மிஞ்சும்” என்றான் கூர்மையான பார்வையுடன்.
அவனது பதிலில் அவள் முகம் யோசனையை சுமந்து கொண்டது. அந்நேரம் அவர்களின் அறைக் கதவு தட்டப்பட, வேகமாக சென்று திறந்தவன் அங்கே நின்றிருந்த வேலை ஆள் அவனை பிம்லா தேவி அழைப்பதாக கூறினான்.
கேஷ்வியை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான். பிம்லா தேவியின் அறைக்குள் நுழைந்தவனுக்கு தாதி சொன்னவைகள் யாவும் நினைவில் வந்து போனது. விருப்பமின்றி ஒருவருடன் எப்படி அவரால் வாழ முடிந்தது? அப்படி என்ன வாழ்க்கையை வாழ்ந்து விட்டார் இவர் என்று அவரை பார்த்தான்.
பிம்லாவோ ராணியின் தோரணையுடன் அமர்ந்திருந்தவர் எதிரே நின்றவனின் முகத்தில் தெரிந்த உணர்வுகளை அவதானித்துக் கொண்டிருந்தார். அவரது முகமோ துடைத்து வைத்தது போல இருந்தது. எந்தவித உணர்வுகளையும் வெளிக் காட்டாது அவனையே பார்த்தவண்ணம் இருந்தார்.
அவனும் அவரே பேசட்டும் என்று இரு கைகளையும் கட்டிக் கொண்டு அமைதியாக நின்றான்.
“சோ உனக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு? இனி நாங்க எதையும் மறைச்சு செய்ய வேண்டியது இல்லை” என்றான் அவனது கண்களைப் பார்த்து.
அவனும் நன்றாக நிமிர்ந்து நின்று “இத்தனை நாள் வளர்த்த பாசமாவது இருக்கும்னு நினைச்சேன்” என்றான் வெற்றுக் குரலில்.
இதழில் எழுந்த கேலிப் புன்னகையுடன் “நாங்க நாய்களை வளர்ப்பதில் கூட ப்ரீட் பார்த்து தான் வளர்ப்போம். அப்படி இருக்கும் போது...” என்று இழுத்தவாறு கை காட்டி நிறுத்தியவன் “தேங்க்ஸ்! உங்களுடைய இந்த வாக்குமூலம் எனக்கு இப்போ தேவையாக இருந்தது. என்ன பார்க்குறீங்க? இனி, நான் செய்யப் போகும் செயல்களுக்கு உங்களுக்கு என் மேல பாசம் இருந்தா அது தடையாக இருக்குமேன்னு நினைச்சேன். இனி, கவலையில்லை” என்றான் வன்மம் நிறைந்த குரலில்.
அலட்சியமாக அவனைப் பார்த்து புன்னகைத்தவர் “உனக்கும் உங்கப்பா புத்தி தான் இருக்கு. நம்ம தரத்திற்கு ஏற்ற ஆட்களுடன் பழக தெரியாதவர்கள். நீ என்னை என்ன பண்ணிட முடியும்னு நினைக்கிற? இங்கே உனக்கென்று எதுவுமே இல்லை. எங்கள் பிடிக்குள்ள இருக்கிற உன்னால எங்களுக்கு எதிராக எதுவும் நினைக்க கூட விட மாட்டோம்”.
இரு கைகளையும் கட்டிக் கொண்டு அவரை சிறிது நேரம் நன்றாக பார்த்தவன் “உங்களுக்கு வேணா என் மேல பாசம் இல்லாமல் இருக்கலாம். ஆனா கடந்து போன நிமிடம் வரை உங்களை என்னுடைய அம்மாவாக தான் நினைத்திருந்தேன். எங்களுக்கு மனிதர்களிடம் தராதரம் பார்க்க தெரியாது. அதே சமயம் மனித மிருகங்களை நன்றாக வேட்டையாட தெரியும்”.
உதட்டை வளைத்து இகழ்ச்சியாக பார்த்தவர் “அதிகமா யோசித்து அடிபட்டு உங்கப்பனை மாதிரி மருத்துவமனையில் போய் படுத்திடாதே” என்றார் மிரட்டலாக.