அத்தியாயம் – 13
வீட்டிற்கு சென்ற பின்னும் அவளால் அவனது குரலில் இருந்து விடுபட முடியவில்லை. தன்னை விட்டு விட்டு சென்று விட்டான் என்கிற கோபத்தை தாண்டி அவனது குரலில் தெரிந்த வலி அவளை வேதனை கொள்ள செய்தது. அவளது மனம் அவனுக்கு ஏதோவொரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது என்று அடித்துக் கூறியது. ஆனால் அதையும் மீறி அவனது திருமண புகைப்படம் அவள் கண்முன்னே தோன்றி அவன் மீது எழுந்த பரிதாபத்தை அடித்து உடைத்து.
போன் வந்ததில் இருந்து அவளையே கவனித்துக் கொண்டிருந்த தான்யாவிற்கு அவளின் வலி நன்றாக புரிந்தது. மெல்ல அவள் அருகே வந்தமர்ந்தவள் “என்னக்கா? யார் போன் பண்ணினது?” என்றாள்.
தங்கையை திரும்பி பார்த்தவள் “சித்தார்த்” என்றாள்.
அவனது பெயரைக் கேட்டதும் கோபமடைந்தவள் “எதுக்கு போன் பண்ணினார்? அது தான் நம்ம குடும்பத்தையே நாசம் பண்ணிட்டு போயாச்சு? இன்னும் என்ன மிச்சம் இருக்கு?”
“எதுவும் சொல்லல தானு ஆனா அவர் குரலில் ஏதோ வலி இருந்தது”.
அக்காவை முறைத்து பார்த்தவள் “இவ்வளவு பட்டுமாக்கா அவரை நம்புற? உன்னுடைய காதலால மொத்த குடும்பமும் சிதைஞ்சு போச்சு. மிச்சம் இருக்கிறது நீயும் நானும் தான். இதுல அவருக்கு வேற கல்யாணம் வேற ஆகிடுச்சு. இன்னும் உனக்கு அவர் மேல நம்பிக்கையா?” என்றாள் வெறுப்புடன்.
தங்கையின் கேள்விகள் அவளது இதயத்தை தாக்க கண்ணீருடன் எழுந்தமர்ந்தவள் “அவரோட காதல் வேணா பொய்யா இருக்கலாம் தானு. ஆனா நான் உண்மையா தானே காதலிச்சேன். எனக்கு அந்த வலி இருக்கும் தானே?”
“அம்மா அப்பா போனதை விடவா இந்த வலி பெரிதாக இருந்துட போகுது?”
“தான்யா!”
“பின்ன என்ன அக்கா? உன்னுடைய காதல், கல்யாணம் அதன்பின் நடந்தவைகள் எல்லாவற்றையும் யோசிச்சு பார். ஆறு மாசம் ஆச்சு. இப்போ வரை உன்னை அந்த இடத்தில் விட்டுட்டுப் போனதற்கான விளக்கமும் இல்லை, நம்ம குடும்பத்தில் நடந்த இழப்பை பற்றிய விசாரணையும் இல்லை. இதுல இன்னொரு கல்யாணம் வேற. இப்போ திடீர்னு உன்னைக் கூப்பிட்டு பேச முயற்சி செஞ்ச உடனே நீயும் ஐயோ அவர் குரலில் வேதனை தெரியுதுன்னு சொல்ற, முட்டாளா இருக்கிறதுக்கும் ஒரு அளவு இருக்கு அக்கா” என்று விட்டாள்.
தங்கையின் பேச்சில் இருந்த கோவமும் உண்மையும் விளங்க அவளது கைகளைப் பற்றிக் கொண்டவள் “உண்மை தான் தானு. தப்பு தான். இனி என்ன சூழ்நிலை வந்தாலும் சித்தார்த் என் வாழ்க்கையில் இல்லை. போதும் இந்த காதலால் நாம பட்டது” என்று விட்டாள்.
அக்காவின் கண்களை துடைத்து விட்டவள் “தப்பா நினைச்சுக்காதே அக்கா. எனக்கு உன் மனசு புரியுது. ஆனா நம்மோட இந்த எமோஷனல் அட்டச்மென்ட்டை வைத்து தான் இந்த ஆண்கள் நம்மோட வாழ்க்கையில் விளையாடிடுறாங்க. நம்மோட முடிவுகள் ஒரு முறை தவறாக போகலாம். அதற்காக ஒவ்வொரு முறையும் நம்பி ஏமாற கூடாது”.
“சின்ன பெண்ணாக இருந்தாலும் உனக்கு இருக்கிற தெளிவு எனக்கு இல்லாமல் போயிடுச்சே”.
மெல்லிய சிரிப்புடன் “இது நீ எனக்கு கொடுத்தது தான் அக்கா. அம்மா எனக்கு சொல்லி கொடுத்ததை விட நீ எனக்கு சொல்லிக் கொடுத்தது தான் அதிகம்”.
அந்நேரம் உள்ளே வந்த வசந்தா “ரெண்டு பேருக்கும் பசியில்லையா? பேசிகிட்டே உட்கார்ந்திருக்கீங்க?”
“இல்ல பாட்டி ரொம்ப நாளைக்குப் பிறகு நானும் தான்யாவும் மனசு விட்டு பேசினோம் அது தான்”.
“ஒ...சரி சீக்கிரம் வந்து சாப்பிடுங்க. மாமா வரேன்னு போன் பண்ணினான். என்னவோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னான்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்.
இருவருக்கும் மாமா ஏன் வருகிறார் என்கிற யோசனை எழுந்தது. அதிலும் முக்கியமான விஷயம் என்ன பேசப் போகிறார் என்கிற கேள்வியும் இருந்தது. உணவருந்தி விட்டு இருவரும் அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க, ஒரு மணி நேரம் கழித்து மாமா வந்து சேர்ந்தார்.
அவர் இத்தனை தடவை இங்கு வந்து போன போது ஒரு தடவை கூட மாமன் மனைவியோ, பிள்ளைகளோ வரவில்லை. அவர்களுக்கு எல்லாம் மாமா செய்வது சுத்தமாக பிடிக்கவில்லை. தேவை இல்லாத சுமையை தூக்கி சுமப்பதாக எந்நேரமும் சண்டை தான். அதை உணர்ந்திருந்த இரு பெண்களும் அவருக்கு தொந்திரவு கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள்.
மகனுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த வசந்தா “என்ன முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்ன ராஜேந்திரா?”
வீட்டிற்கு சென்ற பின்னும் அவளால் அவனது குரலில் இருந்து விடுபட முடியவில்லை. தன்னை விட்டு விட்டு சென்று விட்டான் என்கிற கோபத்தை தாண்டி அவனது குரலில் தெரிந்த வலி அவளை வேதனை கொள்ள செய்தது. அவளது மனம் அவனுக்கு ஏதோவொரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது என்று அடித்துக் கூறியது. ஆனால் அதையும் மீறி அவனது திருமண புகைப்படம் அவள் கண்முன்னே தோன்றி அவன் மீது எழுந்த பரிதாபத்தை அடித்து உடைத்து.
போன் வந்ததில் இருந்து அவளையே கவனித்துக் கொண்டிருந்த தான்யாவிற்கு அவளின் வலி நன்றாக புரிந்தது. மெல்ல அவள் அருகே வந்தமர்ந்தவள் “என்னக்கா? யார் போன் பண்ணினது?” என்றாள்.
தங்கையை திரும்பி பார்த்தவள் “சித்தார்த்” என்றாள்.
அவனது பெயரைக் கேட்டதும் கோபமடைந்தவள் “எதுக்கு போன் பண்ணினார்? அது தான் நம்ம குடும்பத்தையே நாசம் பண்ணிட்டு போயாச்சு? இன்னும் என்ன மிச்சம் இருக்கு?”
“எதுவும் சொல்லல தானு ஆனா அவர் குரலில் ஏதோ வலி இருந்தது”.
அக்காவை முறைத்து பார்த்தவள் “இவ்வளவு பட்டுமாக்கா அவரை நம்புற? உன்னுடைய காதலால மொத்த குடும்பமும் சிதைஞ்சு போச்சு. மிச்சம் இருக்கிறது நீயும் நானும் தான். இதுல அவருக்கு வேற கல்யாணம் வேற ஆகிடுச்சு. இன்னும் உனக்கு அவர் மேல நம்பிக்கையா?” என்றாள் வெறுப்புடன்.
தங்கையின் கேள்விகள் அவளது இதயத்தை தாக்க கண்ணீருடன் எழுந்தமர்ந்தவள் “அவரோட காதல் வேணா பொய்யா இருக்கலாம் தானு. ஆனா நான் உண்மையா தானே காதலிச்சேன். எனக்கு அந்த வலி இருக்கும் தானே?”
“அம்மா அப்பா போனதை விடவா இந்த வலி பெரிதாக இருந்துட போகுது?”
“தான்யா!”
“பின்ன என்ன அக்கா? உன்னுடைய காதல், கல்யாணம் அதன்பின் நடந்தவைகள் எல்லாவற்றையும் யோசிச்சு பார். ஆறு மாசம் ஆச்சு. இப்போ வரை உன்னை அந்த இடத்தில் விட்டுட்டுப் போனதற்கான விளக்கமும் இல்லை, நம்ம குடும்பத்தில் நடந்த இழப்பை பற்றிய விசாரணையும் இல்லை. இதுல இன்னொரு கல்யாணம் வேற. இப்போ திடீர்னு உன்னைக் கூப்பிட்டு பேச முயற்சி செஞ்ச உடனே நீயும் ஐயோ அவர் குரலில் வேதனை தெரியுதுன்னு சொல்ற, முட்டாளா இருக்கிறதுக்கும் ஒரு அளவு இருக்கு அக்கா” என்று விட்டாள்.
தங்கையின் பேச்சில் இருந்த கோவமும் உண்மையும் விளங்க அவளது கைகளைப் பற்றிக் கொண்டவள் “உண்மை தான் தானு. தப்பு தான். இனி என்ன சூழ்நிலை வந்தாலும் சித்தார்த் என் வாழ்க்கையில் இல்லை. போதும் இந்த காதலால் நாம பட்டது” என்று விட்டாள்.
அக்காவின் கண்களை துடைத்து விட்டவள் “தப்பா நினைச்சுக்காதே அக்கா. எனக்கு உன் மனசு புரியுது. ஆனா நம்மோட இந்த எமோஷனல் அட்டச்மென்ட்டை வைத்து தான் இந்த ஆண்கள் நம்மோட வாழ்க்கையில் விளையாடிடுறாங்க. நம்மோட முடிவுகள் ஒரு முறை தவறாக போகலாம். அதற்காக ஒவ்வொரு முறையும் நம்பி ஏமாற கூடாது”.
“சின்ன பெண்ணாக இருந்தாலும் உனக்கு இருக்கிற தெளிவு எனக்கு இல்லாமல் போயிடுச்சே”.
மெல்லிய சிரிப்புடன் “இது நீ எனக்கு கொடுத்தது தான் அக்கா. அம்மா எனக்கு சொல்லி கொடுத்ததை விட நீ எனக்கு சொல்லிக் கொடுத்தது தான் அதிகம்”.
அந்நேரம் உள்ளே வந்த வசந்தா “ரெண்டு பேருக்கும் பசியில்லையா? பேசிகிட்டே உட்கார்ந்திருக்கீங்க?”
“இல்ல பாட்டி ரொம்ப நாளைக்குப் பிறகு நானும் தான்யாவும் மனசு விட்டு பேசினோம் அது தான்”.
“ஒ...சரி சீக்கிரம் வந்து சாப்பிடுங்க. மாமா வரேன்னு போன் பண்ணினான். என்னவோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னான்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்.
இருவருக்கும் மாமா ஏன் வருகிறார் என்கிற யோசனை எழுந்தது. அதிலும் முக்கியமான விஷயம் என்ன பேசப் போகிறார் என்கிற கேள்வியும் இருந்தது. உணவருந்தி விட்டு இருவரும் அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க, ஒரு மணி நேரம் கழித்து மாமா வந்து சேர்ந்தார்.
அவர் இத்தனை தடவை இங்கு வந்து போன போது ஒரு தடவை கூட மாமன் மனைவியோ, பிள்ளைகளோ வரவில்லை. அவர்களுக்கு எல்லாம் மாமா செய்வது சுத்தமாக பிடிக்கவில்லை. தேவை இல்லாத சுமையை தூக்கி சுமப்பதாக எந்நேரமும் சண்டை தான். அதை உணர்ந்திருந்த இரு பெண்களும் அவருக்கு தொந்திரவு கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள்.
மகனுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த வசந்தா “என்ன முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்ன ராஜேந்திரா?”