அத்தியாயம் – 15
மாமா வந்து சென்ற பிறகு எப்பவும் போல நாட்கள் அதே வேகத்தோடு தான் சென்றது. புதிதாக எந்த பிரச்னையும் இன்றி சாதரணமாக தான் சென்றது. மூன்று நாட்கள் கடந்திருந்த நிலையில் அன்று கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருக்கும் நேரம் மீண்டும் மாமா வந்து நின்றார்.
அவரை பார்த்ததும் அக்கா தங்கை இருவருக்கும் உள்ளுக்குள் பயம் எழ ஆரம்பித்தது. நிச்சயம் ஏதோவொரு பிரச்சனையுடன் தான் அவர் வந்திருக்கிறார் என்று எண்ணினார்கள்.
“என்னப்பா திடீர்னு வந்திருக்க? அந்த மாப்பிள்ளை வீட்டுல எதுவும் பிரச்சனையா?” என்றார் வசந்தா.
சிரித்த முகத்துடன் “அதெல்லாம் இல்லம்மா. இது வேற. தங்கச்சி லான்ட் ஒன்னு துடியலூர் பக்கம் இருக்குதில்ல அதை கேட்டு பார்ட்டி ஒன்னு வந்திருக்கு. நல்ல விலைக்கு கேட்கிறாங்க. அதை முடிச்சு விட்டு பசங்களுக்கு பாங்கில் பணத்தை போட்டு விட்டுடலாமேன்னு தான் கேட்க வந்தேன்” என்றார்.
அதுவரை இழுத்துப் பிடித்திருந்த சுவாசத்தை வெளியே விட்டவர்கள் “எங்களை கேட்கணுமா மாமா? உங்களுக்கு சரின்னு தோணுச்சுன்னா பண்ணிடுங்க” என்று விட்டாள் வர்ஷினி.
அதை கேட்டதும் சந்தோஷத்தோடு சிரித்தவர் தனது பையிலிருந்து ஒரு சில காகிதங்களை எடுத்து வைத்து “இதை படிச்சு பார்த்திட்டு கையெழுத்துப் போடுங்கம்மா” என்றார் இருவரையும்.
மாமா நீட்டிய காகிதங்களை வாங்கிக் கொண்ட வர்ஷினி சிலவற்றை படித்து பார்த்துவிட்டு ஒவ்வொன்றாக கையெழுத்துப் போட ஆரம்பித்தாள். அடுத்து தான்யாவும் கையெழுத்து போட்டு மாமாவிடம் கொடுத்து விட்டாள்.
“லான்ட் அவங்க பேரில் ரெஜிஸ்டர் பண்ண ஒரு நாள் ரெஜிஸ்டறார் ஆபிஸ் போக வேண்டி இருக்கும். நான் எப்போன்னு சொல்றேன்” என்று எழுந்து கொண்டார்.
“சரி மாமா” என்றனர் இருவரும்.
பாட்டியோ “ஏன் ராஜேந்திரா அந்த மாப்பிள்ளை வீட்டில் மறுபடியும் பேசினாங்களா?” என்றார்.
அக்கா பெண்கள் இருவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு “இல்லம்மா நானே அவங்க கிட்ட இப்போ கல்யாணம் பண்ணலன்னு சொல்லிட்டேன்” என்றார்.
அதைக் கேட்டு கடுப்பான வசந்தா “என்னமோ போ நீயும் இவளுங்களோட சேர்ந்து ஆடு” என்று விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார்.
வர்ஷினியோ மாமனின் கைகளைப் பற்றிக் கொண்டு “நன்றி மாமா!” என்றாள்.
அவளது கைகளை விலக்கி விட்டு “வாழ்க்கையில் எல்லாவற்றிலும் கவனமா இருக்கணும் வர்ஷு” என்று சொல்லிவிட்டு விடுவிடுவென்று வெளியேறி விட்டார்.
அவர் ஏன் அப்படி சொன்னார் என்று புரியாமல் திகைத்து நின்றவளை பிடித்து உலுக்கிய தான்யா “என்னக்கா?” என்றாள்.
“மாமா ஏன் அப்படி சொல்லிட்டுப் போனார் தான்யா?”
“ம்ச்...நாம தனியா இருக்கோம். கவனமா இருக்கணும்னு சொல்லிட்டு போறார் அக்கா”.
“எதுக்கு என் கிட்ட மட்டும் சொல்லிட்டுப் போறார்? என் விஷயம் எதுவும் தெரிஞ்சிருக்குமோ?’
“அக்கா! நீ தானே பெரியவ அதனால சொல்லிட்டுப் போறார். தேவையில்லாம நினைக்காம காலேஜிற்கு கிளம்பு”.
மனதிற்குள் எழுந்த குழப்பத்துடனேயே கல்லூரிக்கு கிளம்பி வந்தவளின் பார்வை அயர்ன் கடைகாரர் அருகே நின்றிருந்த பஜ்ரங் மீது படிந்தது. சமீப நாட்களாக இந்த ஆள் இங்கே சுற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை கவனித்திருந்தாள். நிச்சயம் அது தங்களின் வீட்டை நோட்டம் விட தான் என்பது தெரிந்தது. ஆனால் யாருக்காக இதை செய்கிறார் என்று புரியவில்லை. அவரை பார்த்தால் அவளுக்கு பயம் வரவில்லை. ஏனோ அவர் தங்களுக்கு காவலாக இருக்கிறார் என்கிற எண்ணமே எழுந்தது.
தான்யா வருவதற்கு நேரம் எடுக்க, ஒரு நிமிடம் யோசித்தவள் சட்டென்று முடிவெடுத்து அவர் முன்னே சென்று நின்றாள்.
அவள் தன் முன்னே வந்து நின்றதும் உள்ளுக்குள் திடுக்கிட்டாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாது இதழில் எழுந்த புன்னகையுடன் எதுவும் பேசாமல் நின்றார்.
அவளோ ஆராயும் பார்வையுடன் “நீங்க யார் சொல்லி இங்கே இருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?’ என்று நேரடியாக கேட்டாள்.
மாமா வந்து சென்ற பிறகு எப்பவும் போல நாட்கள் அதே வேகத்தோடு தான் சென்றது. புதிதாக எந்த பிரச்னையும் இன்றி சாதரணமாக தான் சென்றது. மூன்று நாட்கள் கடந்திருந்த நிலையில் அன்று கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருக்கும் நேரம் மீண்டும் மாமா வந்து நின்றார்.
அவரை பார்த்ததும் அக்கா தங்கை இருவருக்கும் உள்ளுக்குள் பயம் எழ ஆரம்பித்தது. நிச்சயம் ஏதோவொரு பிரச்சனையுடன் தான் அவர் வந்திருக்கிறார் என்று எண்ணினார்கள்.
“என்னப்பா திடீர்னு வந்திருக்க? அந்த மாப்பிள்ளை வீட்டுல எதுவும் பிரச்சனையா?” என்றார் வசந்தா.
சிரித்த முகத்துடன் “அதெல்லாம் இல்லம்மா. இது வேற. தங்கச்சி லான்ட் ஒன்னு துடியலூர் பக்கம் இருக்குதில்ல அதை கேட்டு பார்ட்டி ஒன்னு வந்திருக்கு. நல்ல விலைக்கு கேட்கிறாங்க. அதை முடிச்சு விட்டு பசங்களுக்கு பாங்கில் பணத்தை போட்டு விட்டுடலாமேன்னு தான் கேட்க வந்தேன்” என்றார்.
அதுவரை இழுத்துப் பிடித்திருந்த சுவாசத்தை வெளியே விட்டவர்கள் “எங்களை கேட்கணுமா மாமா? உங்களுக்கு சரின்னு தோணுச்சுன்னா பண்ணிடுங்க” என்று விட்டாள் வர்ஷினி.
அதை கேட்டதும் சந்தோஷத்தோடு சிரித்தவர் தனது பையிலிருந்து ஒரு சில காகிதங்களை எடுத்து வைத்து “இதை படிச்சு பார்த்திட்டு கையெழுத்துப் போடுங்கம்மா” என்றார் இருவரையும்.
மாமா நீட்டிய காகிதங்களை வாங்கிக் கொண்ட வர்ஷினி சிலவற்றை படித்து பார்த்துவிட்டு ஒவ்வொன்றாக கையெழுத்துப் போட ஆரம்பித்தாள். அடுத்து தான்யாவும் கையெழுத்து போட்டு மாமாவிடம் கொடுத்து விட்டாள்.
“லான்ட் அவங்க பேரில் ரெஜிஸ்டர் பண்ண ஒரு நாள் ரெஜிஸ்டறார் ஆபிஸ் போக வேண்டி இருக்கும். நான் எப்போன்னு சொல்றேன்” என்று எழுந்து கொண்டார்.
“சரி மாமா” என்றனர் இருவரும்.
பாட்டியோ “ஏன் ராஜேந்திரா அந்த மாப்பிள்ளை வீட்டில் மறுபடியும் பேசினாங்களா?” என்றார்.
அக்கா பெண்கள் இருவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு “இல்லம்மா நானே அவங்க கிட்ட இப்போ கல்யாணம் பண்ணலன்னு சொல்லிட்டேன்” என்றார்.
அதைக் கேட்டு கடுப்பான வசந்தா “என்னமோ போ நீயும் இவளுங்களோட சேர்ந்து ஆடு” என்று விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார்.
வர்ஷினியோ மாமனின் கைகளைப் பற்றிக் கொண்டு “நன்றி மாமா!” என்றாள்.
அவளது கைகளை விலக்கி விட்டு “வாழ்க்கையில் எல்லாவற்றிலும் கவனமா இருக்கணும் வர்ஷு” என்று சொல்லிவிட்டு விடுவிடுவென்று வெளியேறி விட்டார்.
அவர் ஏன் அப்படி சொன்னார் என்று புரியாமல் திகைத்து நின்றவளை பிடித்து உலுக்கிய தான்யா “என்னக்கா?” என்றாள்.
“மாமா ஏன் அப்படி சொல்லிட்டுப் போனார் தான்யா?”
“ம்ச்...நாம தனியா இருக்கோம். கவனமா இருக்கணும்னு சொல்லிட்டு போறார் அக்கா”.
“எதுக்கு என் கிட்ட மட்டும் சொல்லிட்டுப் போறார்? என் விஷயம் எதுவும் தெரிஞ்சிருக்குமோ?’
“அக்கா! நீ தானே பெரியவ அதனால சொல்லிட்டுப் போறார். தேவையில்லாம நினைக்காம காலேஜிற்கு கிளம்பு”.
மனதிற்குள் எழுந்த குழப்பத்துடனேயே கல்லூரிக்கு கிளம்பி வந்தவளின் பார்வை அயர்ன் கடைகாரர் அருகே நின்றிருந்த பஜ்ரங் மீது படிந்தது. சமீப நாட்களாக இந்த ஆள் இங்கே சுற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை கவனித்திருந்தாள். நிச்சயம் அது தங்களின் வீட்டை நோட்டம் விட தான் என்பது தெரிந்தது. ஆனால் யாருக்காக இதை செய்கிறார் என்று புரியவில்லை. அவரை பார்த்தால் அவளுக்கு பயம் வரவில்லை. ஏனோ அவர் தங்களுக்கு காவலாக இருக்கிறார் என்கிற எண்ணமே எழுந்தது.
தான்யா வருவதற்கு நேரம் எடுக்க, ஒரு நிமிடம் யோசித்தவள் சட்டென்று முடிவெடுத்து அவர் முன்னே சென்று நின்றாள்.
அவள் தன் முன்னே வந்து நின்றதும் உள்ளுக்குள் திடுக்கிட்டாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாது இதழில் எழுந்த புன்னகையுடன் எதுவும் பேசாமல் நின்றார்.
அவளோ ஆராயும் பார்வையுடன் “நீங்க யார் சொல்லி இங்கே இருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?’ என்று நேரடியாக கேட்டாள்.