அத்தியாயம் – 16
காலை நேர பரபரப்பில் அக்காவும் தங்கையும் இருக்க, வசந்தா அவர்களுக்கு தேவையானதை செய்து கொண்டிருந்தார். அந்நேரம் வாயில் மணி அழைக்க யாராக இருக்கும் என்கிற யோசனையுடன் சென்று கதவை திறந்தாள் வர்ஷு. அங்கே மாமா நின்றிருந்தார். அந்த நேரம் அவரை எதிர்பார்க்காதவள் “வாங்க மாமா” என்றழைத்து விட்டு உள்ளே சென்றாள்.
மகனை பார்த்த வசந்தா “என்ன ராஜேந்திரா இந்நேரம் வந்திருக்க?” என்றார் குழப்பத்துடன்.
“ஒண்ணுமில்லம்மா அந்த நிலம் இன்னைக்கு பதிவு பண்ண ஏற்பாடாகி இருக்கு. அதுக்கு தான் ரெண்டு பேரும் கிளம்புறதுக்கு முன்னே வந்துட்டேன்”.
“ஒ..அப்படியா” என்றவர் வர்ஷினியிடம் திரும்பி “மாமாவுக்கு காப்பி கொண்டு வா” என்றார்.
தான்யாவோ பள்ளி சீருடையில் வந்து நின்று “அக்கா மட்டும் வந்தா போதுமில்ல மாமா? நான் ஸ்கூல் போகவா?” என்றாள்.
“இல்லடா நீயும் வரணும்” என்றார்.
அதே நேரம் கேஷ்வி ஹோட்டலில் இருந்து கிளம்பி வர்ஷினியை சந்திக்க அவளின் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். முதலில் நேரடியாகப் பேசி சித்தார்த்தின் வாழ்க்கையில் இருந்து விலக சொல்லிப் பார்க்க வேண்டும் என்பது அவளின் எண்ணம். அதற்கு மறுத்தால் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.
சித்தார்த்தும் வந்து இறங்கி இருக்க அவனது நண்பர்கள் கூட்டம் ஹோட்டலில் கூடி இருந்தது. வெகு நாட்களுக்குப் பிறகு நடந்த சந்திப்பு ஆகையால் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி தங்களின் பிரிவை ஈடுகட்டிக் கொண்டிருந்தனர்.
“நீ இப்படி பண்ணுவேன்னு கொஞ்சம் கூட நினைக்கல சித்து. வர்ஷு ரொம்ப உடைஞ்சு போயிட்டா” என்றான் சரவணன்.
அதன் பின்னர் அன்று நடந்தவைகளை எல்லாம் அவர்களிடம் சொல்லியவன் தன் வாழ்க்கையின் முக்கியம்மான நிகழ்வுகளை அவர்களுடன் பகிர்ந்து கொண்டான். அதைக் கேட்டதும் அவனது நிலை புரிய, வர்ஷிணியின் பெற்றவர்கள் இறந்த சம்பவத்தை அவனிடம் கூறினார்கள். அதைக் கேட்டு அதிர்ந்து போனான். தானும் அவளை விட்டு விலகிச் சென்றிருக்க, பெற்றவர்களையும் இழந்து எப்படி நொறுங்கிப் போயிருப்பாள் என்றெண்ணி முகம் கசங்கிப் போக “இதை நான் எதிர்பார்க்கவே இல்ல சரவணா” என்றான் உடைந்த குரலில்.
அவன் காதருகே குனிந்து மெல்லிய குரலில் “அது கூட வேண்டுமென்றே செய்யப்பட்ட விபத்துன்னு சந்தேகப்படுறாங்க சித்து. உன்னுடைய ஆட்களோட வேலையாக இருக்குமோன்னு தோணுது. இது தெரிந்தால் வர்ஷூ உன்னை அதிகம் வெறுக்க காரணமாகிடும்”.
மனதிற்குள் எழுந்த எரிமலையை அடக்கிக் கொண்டவன் “நிச்சயமாக அவர்கள் வேலையாகத் தான் இருக்கும். விட மாட்டேன் சரவணா. ஒவ்வொருத்தரையும் இதுக்கு பதில் சொல்ல வைக்காம விட மாட்டேன்”.
“இப்போ உன் ப்ளான் என்ன?”
அவனிடம் அன்று நடக்கவிருப்பவற்றை கூறியவன் “கேஷ்வி வந்திருக்கா சரவணா. அவள் முந்திக் கொள்ளும் முன் நான் அனைத்தையும் முடித்துக் கொண்டு வர்ஷுவை இங்கிருந்து அழைச்சிட்டுப் போயிடுவேன்” என்றான்.
“ம்ம்...நாங்க என்ன செய்யணும்?”
அவனிடம் சில பல வேலைகளை செய்ய சொன்னவன் அவனை அணைத்து விடுவித்து “தேங்க்ஸ்-டா! என்னைச் சுற்றி எந்த உறவுகளுமே உண்மையாக இல்லை வர்ஷினியையும் உங்களையும் தவிர. எல்லாம் சரியானதும் உங்களை எல்லாம் வந்து பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு அறைக்குச் சென்று விட்டான்.
சரவணனும் மற்றவர்களும் அவன் சொன்ன வேலைகளை கவனிக்க சென்று விட, முக்கியமான போன் காலுக்காக காத்திருந்தான் சித்தார்த். அதே நேரம் பத்திர பதிவிற்காக மாமாவுடன் இருவரும் கிளம்பி வாசலுக்கு வரும் நேரம் படகு போன்ற கார் வந்து வழியை மறைத்து நின்றது.
தங்கள் வீட்டின் முன்னே வந்து நின்ற காரை யோசனையுடன் பார்த்தபடி நின்றிருந்தாள் வர்ஷினி. காரின் கதவைத் திறந்து கொண்டு இறங்கிய கேஷ்வியோ வர்ஷினியை பார்வையாலேயே எடை போட்டுக் கொண்டிருந்தாள். அவளது மனமோ இவளுக்ககவா அவன் தன்னை ஒதுக்கிறான் என்று எண்ணம் எழுந்தது. அழகில் தன்னை விட அவள் ஒன்றும் பிரமாதம் இல்லை. அப்படி என்ன தான் காதலோ என்கிற யோசனையுடன் அவர்களின் முன்னே வந்து நின்றாள்.
தான்யா தான் முந்திக் கொண்டு “யார் நீங்க?” என்றாள்.
வர்ஷூவோ உடல் இறுக வாயை அழுந்த மூடியபடி அவளை பார்த்துக் கொண்டிருந்தாள். தான்யாவைப் பார்த்து சிரித்த கேஷ்வி “உள்ளே கூப்பிட மாட்டியா?” என்றாள் வர்ஷூவைப் பார்த்து.
அவள் வர்ஷினியிடம் பேசவும் அவசரமாக திரும்பிய தான்யா “அக்கா இவங்களை உங்களுக்கு தெரியுமா?” என்றாள்.
“ம்ம்...நாங்க வெளியில் போறோம். உங்க கிட்ட பேச எனக்கு எதுவுமில்லை” என்றாள் கடுப்புடன்.
அவளோ விடாது “ஆனா எனக்கு இருக்கே. சோ நான் உள்ளே போறேன்” என்று அவர்களைத் தாண்டி வீட்டினுள் நுழைந்து விட்டாள்.
அவளின் செய்கையில் எரிச்சல் அடைந்தவளை மாமாவின் கேள்வி சுதாரிக்க வைத்தது.
காலை நேர பரபரப்பில் அக்காவும் தங்கையும் இருக்க, வசந்தா அவர்களுக்கு தேவையானதை செய்து கொண்டிருந்தார். அந்நேரம் வாயில் மணி அழைக்க யாராக இருக்கும் என்கிற யோசனையுடன் சென்று கதவை திறந்தாள் வர்ஷு. அங்கே மாமா நின்றிருந்தார். அந்த நேரம் அவரை எதிர்பார்க்காதவள் “வாங்க மாமா” என்றழைத்து விட்டு உள்ளே சென்றாள்.
மகனை பார்த்த வசந்தா “என்ன ராஜேந்திரா இந்நேரம் வந்திருக்க?” என்றார் குழப்பத்துடன்.
“ஒண்ணுமில்லம்மா அந்த நிலம் இன்னைக்கு பதிவு பண்ண ஏற்பாடாகி இருக்கு. அதுக்கு தான் ரெண்டு பேரும் கிளம்புறதுக்கு முன்னே வந்துட்டேன்”.
“ஒ..அப்படியா” என்றவர் வர்ஷினியிடம் திரும்பி “மாமாவுக்கு காப்பி கொண்டு வா” என்றார்.
தான்யாவோ பள்ளி சீருடையில் வந்து நின்று “அக்கா மட்டும் வந்தா போதுமில்ல மாமா? நான் ஸ்கூல் போகவா?” என்றாள்.
“இல்லடா நீயும் வரணும்” என்றார்.
அதே நேரம் கேஷ்வி ஹோட்டலில் இருந்து கிளம்பி வர்ஷினியை சந்திக்க அவளின் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். முதலில் நேரடியாகப் பேசி சித்தார்த்தின் வாழ்க்கையில் இருந்து விலக சொல்லிப் பார்க்க வேண்டும் என்பது அவளின் எண்ணம். அதற்கு மறுத்தால் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.
சித்தார்த்தும் வந்து இறங்கி இருக்க அவனது நண்பர்கள் கூட்டம் ஹோட்டலில் கூடி இருந்தது. வெகு நாட்களுக்குப் பிறகு நடந்த சந்திப்பு ஆகையால் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி தங்களின் பிரிவை ஈடுகட்டிக் கொண்டிருந்தனர்.
“நீ இப்படி பண்ணுவேன்னு கொஞ்சம் கூட நினைக்கல சித்து. வர்ஷு ரொம்ப உடைஞ்சு போயிட்டா” என்றான் சரவணன்.
அதன் பின்னர் அன்று நடந்தவைகளை எல்லாம் அவர்களிடம் சொல்லியவன் தன் வாழ்க்கையின் முக்கியம்மான நிகழ்வுகளை அவர்களுடன் பகிர்ந்து கொண்டான். அதைக் கேட்டதும் அவனது நிலை புரிய, வர்ஷிணியின் பெற்றவர்கள் இறந்த சம்பவத்தை அவனிடம் கூறினார்கள். அதைக் கேட்டு அதிர்ந்து போனான். தானும் அவளை விட்டு விலகிச் சென்றிருக்க, பெற்றவர்களையும் இழந்து எப்படி நொறுங்கிப் போயிருப்பாள் என்றெண்ணி முகம் கசங்கிப் போக “இதை நான் எதிர்பார்க்கவே இல்ல சரவணா” என்றான் உடைந்த குரலில்.
அவன் காதருகே குனிந்து மெல்லிய குரலில் “அது கூட வேண்டுமென்றே செய்யப்பட்ட விபத்துன்னு சந்தேகப்படுறாங்க சித்து. உன்னுடைய ஆட்களோட வேலையாக இருக்குமோன்னு தோணுது. இது தெரிந்தால் வர்ஷூ உன்னை அதிகம் வெறுக்க காரணமாகிடும்”.
மனதிற்குள் எழுந்த எரிமலையை அடக்கிக் கொண்டவன் “நிச்சயமாக அவர்கள் வேலையாகத் தான் இருக்கும். விட மாட்டேன் சரவணா. ஒவ்வொருத்தரையும் இதுக்கு பதில் சொல்ல வைக்காம விட மாட்டேன்”.
“இப்போ உன் ப்ளான் என்ன?”
அவனிடம் அன்று நடக்கவிருப்பவற்றை கூறியவன் “கேஷ்வி வந்திருக்கா சரவணா. அவள் முந்திக் கொள்ளும் முன் நான் அனைத்தையும் முடித்துக் கொண்டு வர்ஷுவை இங்கிருந்து அழைச்சிட்டுப் போயிடுவேன்” என்றான்.
“ம்ம்...நாங்க என்ன செய்யணும்?”
அவனிடம் சில பல வேலைகளை செய்ய சொன்னவன் அவனை அணைத்து விடுவித்து “தேங்க்ஸ்-டா! என்னைச் சுற்றி எந்த உறவுகளுமே உண்மையாக இல்லை வர்ஷினியையும் உங்களையும் தவிர. எல்லாம் சரியானதும் உங்களை எல்லாம் வந்து பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு அறைக்குச் சென்று விட்டான்.
சரவணனும் மற்றவர்களும் அவன் சொன்ன வேலைகளை கவனிக்க சென்று விட, முக்கியமான போன் காலுக்காக காத்திருந்தான் சித்தார்த். அதே நேரம் பத்திர பதிவிற்காக மாமாவுடன் இருவரும் கிளம்பி வாசலுக்கு வரும் நேரம் படகு போன்ற கார் வந்து வழியை மறைத்து நின்றது.
தங்கள் வீட்டின் முன்னே வந்து நின்ற காரை யோசனையுடன் பார்த்தபடி நின்றிருந்தாள் வர்ஷினி. காரின் கதவைத் திறந்து கொண்டு இறங்கிய கேஷ்வியோ வர்ஷினியை பார்வையாலேயே எடை போட்டுக் கொண்டிருந்தாள். அவளது மனமோ இவளுக்ககவா அவன் தன்னை ஒதுக்கிறான் என்று எண்ணம் எழுந்தது. அழகில் தன்னை விட அவள் ஒன்றும் பிரமாதம் இல்லை. அப்படி என்ன தான் காதலோ என்கிற யோசனையுடன் அவர்களின் முன்னே வந்து நின்றாள்.
தான்யா தான் முந்திக் கொண்டு “யார் நீங்க?” என்றாள்.
வர்ஷூவோ உடல் இறுக வாயை அழுந்த மூடியபடி அவளை பார்த்துக் கொண்டிருந்தாள். தான்யாவைப் பார்த்து சிரித்த கேஷ்வி “உள்ளே கூப்பிட மாட்டியா?” என்றாள் வர்ஷூவைப் பார்த்து.
அவள் வர்ஷினியிடம் பேசவும் அவசரமாக திரும்பிய தான்யா “அக்கா இவங்களை உங்களுக்கு தெரியுமா?” என்றாள்.
“ம்ம்...நாங்க வெளியில் போறோம். உங்க கிட்ட பேச எனக்கு எதுவுமில்லை” என்றாள் கடுப்புடன்.
அவளோ விடாது “ஆனா எனக்கு இருக்கே. சோ நான் உள்ளே போறேன்” என்று அவர்களைத் தாண்டி வீட்டினுள் நுழைந்து விட்டாள்.
அவளின் செய்கையில் எரிச்சல் அடைந்தவளை மாமாவின் கேள்வி சுதாரிக்க வைத்தது.