அத்தியாயம் – 16
கண்களை மூடி அமர்ந்திருந்தவனின் முகம் மரணத்தின் வாயிலில் இருக்கும் ஒருவனின் முகம் போல் அத்தனை வலியையும், வேதனையையும் காட்டியது.
தன்னை விட அவனுக்கும் காயங்களும், வேதனைகளும் இருக்கும் போல என்றெண்ணி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
மெல்ல கண்களைத் திறந்தவன் எழுந்து வந்து அவள் காலடியில் அமர்ந்து கொண்டான்.பதறி எழுந்தவளை பிடித்து உட்கார வைத்து அவள் கைகளைத் தன் கைகளுக்குள் புதைத்துக் கொண்டவன் “இப்படியே இரு ஸ்ருதி.ப்ளீஸ்! நான் சொல்லப் போறதை இப்படி இருந்தே கேளு!” என்றான்.
அவன் தனது காலடியில் அமர்ந்த சங்கடத்திலிருந்தவளுக்கு, அவனது குரலில் இருந்த வேதனையும், அவனது கைகளில் தெரிந்த நடுக்கமும் அமைதியாக இருக்கச் சொன்னது.
“குடும்பத்தோட அன்பிலும், அரவணைப்பிலும் வளருகிற ஒவ்வொரு ஆணுக்குள்ளும் மனைவி என்கிற பிம்பம் வயது வந்த பிறகு, பொக்கிஷமாகப் பூட்டி வைக்கப்பட்டிருக்கும். திருமணக்
கனவு பெண்களுக்கு மட்டுமில்ல ஆண்களுக்கும் உண்டு.மனைவி என்கிற அந்தப் பிம்பம் மட்டும் தான் இருக்குமே தவிர, தனக்கென்று ஒருத்தி வந்த பின் தான் அந்தப் பிம்பம் முழுமையடையும்.”
அவன் பேசுவதையே இமைகளை மூட மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
நானும் அப்படித்தான்!
என் வாழக்கையில் பள்ளி, கல்லூரி காலங்களிலும் சரி, வேலை பார்க்கும் போதும் சரி பல பெண்கள் என்னைக் கடந்து போனார்கள்.ஆனால் குடும்பத்தினரால் எனக்காகப் பார்த்து வைக்கும் பெண்ணுக்காக என்னுடைய மனசை, என்னுடைய ஆசைகளை, என்னுடைய ரகசியங்களைப் பாதுகாத்துக் கொண்டிருந்தேன்.அழகான பெண்களைப் பார்க்கும் போது அந்தநிமிடம் ஒரு சராசரி ஆணாக ரசிப்பேன்.அதே சமயம் எனக்கே எனக்காக வரப் போகும் என் மனைவி தான் எனக்கு அழகி என்பதில் உறுதியாக இருந்தேன்.
“நான் எதிர்பார்த்த அந்தத் தருணம் வந்தது.மூன்று வருடங்களுக்கு முன்பொரு நாள் இரவு அம்மாவிடமிருந்து போன் வந்தது.பெண் பார்த்திருப்பதாகவும்,அவர்களைப் பொறுத்தவரை எல்லாமே திருப்தியாக இருப்பதாகக் கூறினார்கள். மெயிலில் போட்டோ அனுப்பியிருப்பதாகவும் அதைப் பார்த்துவிட்டு எனக்குப் பிடித்திருந்தால் மேற்கொண்டு பேசலாம் என்றார்கள்.
அம்மாவிடம் பேசி முடித்துவிட்டு மெயிலை ஓபன் செய்து பார்க்க தொடங்கினேன்.மனதிற்குள் இனம் புரியாத படபடப்பு.இன்பாக்சை ஓபன் செய்ய முடியாமல் கைகளில் ஒரு நடுக்கம்.எப்படி இருப்பாளோ? எனக்கு அவளைப் பிடிக்குமோ?இந்த பெண் எனக்கானவள் தானா? என்று ஆயிரத்தெட்டுச் சந்தேகங்களுடன் மெதுவாக அம்மா அனுப்பிய மெயிலை ஓபன் செய்தேன்.
அவள் படம் கண்முன்னே வந்ததும், மனதிலிருந்த படபடப்பு இதயத்தில் பிரதிபலிக்க ஆரம்பித்தது.என் கண்களுக்கு மிக அழகாகத் தெரிந்தாள்.இவள் எனக்கானவளா?இத்தனை அழகும் எனக்கேவா?அவளுக்கு என்னைப் பிடிக்குமா? என்று அடுத்தடுத்த கேள்விகள் என்னைச் சூழ்ந்தது.
தனது முதல் மனைவியைப் பற்றி அவன் வர்ணித்ததை ரசிக்க முடியாமல் அவஸ்த்தையுடன் அவனிடமிருந்து கைகளை உருவி கொள்ள முனைந்தாள்.துயரத்துடன் சொல்லிக் கொண்டிருந்தவன் அவள் கைகளை உருவி கொள்ள முயன்றதும் அவளது மனநிலையைப் புரிந்து கொண்டான்.
அவள் புறம் திரும்பி முகத்தைப் பார்த்து “உனக்கு இதைக் கேட்க பிடிக்காது தான்.ஆனா, எனக்காகக் கொஞ்சம் பொறுமையா முழுக்கக் கேளு ஸ்ருதி. இதுவரை என் மனதிலிருந்த துக்கத்தைப் பூட்டி பூட்டி வச்சிருந்தேன்.அதனோட பாதிப்பு தான் உன்கிட்ட காட்டிட்டேன்.தயவு செஞ்சு என்னைப் பேச விடு”என்று கெஞ்சினான்.
அவனது கெஞ்சலில் அவள் மனதிலிருந்த சஞ்சலங்கள் அகல அமைதியாக அமர்ந்தாள்.
எனக்குப் பிடிச்சிருக்குன்னு உடனே அம்மாவுக்குப் போன் பண்ணி சொல்லிட்டேன்.அதன்பிறகு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவள் படத்தைப் பார்ப்பது தான் வேலை.மனம் முழுவதும் அவள் தான். உலகத்தில் வேற வார்த்தைகளே இல்லாத மாதிரி நந்தனா-நந்தனா என்று ஒரே ஜபம்.நானோ இப்படிச் சுத்திக் கொண்டிருக்க, அம்மாவோ பெண் பார்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பிச்சாங்க.அவளுடைய புகைப்படம் வந்து பத்தே நாளில் அவளைப் பார்க்க சென்றேன்.
நெஞ்சத்தில் ஒரு பரபரப்புப் போட்டோவில் பார்த்த மாதிரி தான் இருப்பாளா இல்ல வேற மாதிரி இருப்பாளா?அவளைப் பார்த்த அந்த நிமிடம் இவள் தான் என் மனைவி என்று முடிவு செய்தேன்.அதே சமயம் அவளுக்கு என்னைப் பிடிக்க வேண்டுமே என்று கலக்கமும் எழுந்தது.அம்மாவிடம் சொல்லி அதையும் கேட்க சொன்னேன்.அவளுக்கும் சம்மதம் என்று தெரிந்தது.
அதே வாரத்தில் ஒருநாள் நான் ஊருக்கு போகும் முன் நிச்சயதார்த்தை நடத்தி விடலாம் என்று பேசி முடிவு செய்தார்கள்.எனக்கு அவளிடம் ஓரிரு வார்த்தைகள் பேச வேண்டும் என்று ஆர்வம் எழுந்தது.என்னை புரிந்து கொண்ட ஆகாஷ் அம்மாவிடம் சொல்லி அதற்கு ஏற்பாடு செய்தான்.
முதன்முறையாக நானும் அவளும் தனியறையில் சந்தித்தோம்.எனக்கு அவளை அவ்வளவு கிட்டே பார்த்த போது நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக் கொண்டது.அவளுமே குனிந்த தலை நிமிராது நின்றிருந்தாள். மெல்ல என்னை நிதானப்படுத்திக் கொண்டு “உட்காரு நந்தனா”என்று சொல்லி அவள் எதிரே இருந்த நாற்காலியில் நானும் அமர்ந்து கொண்டேன்.
அவள் அமர்ந்ததும் அவளது அழகை கண்களால் நிறைத்துக் கொண்டே “உன்னைப் போலவே உன் பெயரும் ரொம்ப அழகாயிருக்கு”என்றேன்.
அவளோ தலையை நிமிர்த்தாது “தேங்க்ஸ்” என்றாள்.
“என்னை உனக்குப் பிடிச்சிருக்கா?”
“ம்ம்..” என்று ஒரே வார்த்தையில் பதிலளித்தாள். சரி என்னைக் கண்டு தயங்குகிறாள் என்றெண்ணி மேலும் பேச்சுக் கொடுக்காமல் என்னுடைய போன் நம்பரை அவளுக்குக் கொடுத்து அவளுடையதை வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.
மனமோ குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தது. குடும்பத்திலுள்ளவர்கள் எல்லாம் என்னை ஓட்டி எடுத்தனர்.அதற்காகவெல்லாம் நான் அசரவில்லை.இரவானதும் அவளிடம் போனில் பேசத் தொடங்கினேன்.ஆரம்பத்தில் சற்று தயங்கியவள் நிச்சயதார்த்திற்குள் இயல்பாகப் பேச ஆரம்பித்தாள்.
இரு மாதங்களுக்குப் பிறகே மண்டபம் கிடைத்ததால், அந்தத் தேதியில் திருமணம் முடிவாயிற்று.நிச்சயத்தன்று தனிமையில் பேசும் போது அவள் கைகளைப் பிடித்துக் கொள்ள முயன்றேன்.
கண்களை மூடி அமர்ந்திருந்தவனின் முகம் மரணத்தின் வாயிலில் இருக்கும் ஒருவனின் முகம் போல் அத்தனை வலியையும், வேதனையையும் காட்டியது.
தன்னை விட அவனுக்கும் காயங்களும், வேதனைகளும் இருக்கும் போல என்றெண்ணி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
மெல்ல கண்களைத் திறந்தவன் எழுந்து வந்து அவள் காலடியில் அமர்ந்து கொண்டான்.பதறி எழுந்தவளை பிடித்து உட்கார வைத்து அவள் கைகளைத் தன் கைகளுக்குள் புதைத்துக் கொண்டவன் “இப்படியே இரு ஸ்ருதி.ப்ளீஸ்! நான் சொல்லப் போறதை இப்படி இருந்தே கேளு!” என்றான்.
அவன் தனது காலடியில் அமர்ந்த சங்கடத்திலிருந்தவளுக்கு, அவனது குரலில் இருந்த வேதனையும், அவனது கைகளில் தெரிந்த நடுக்கமும் அமைதியாக இருக்கச் சொன்னது.
“குடும்பத்தோட அன்பிலும், அரவணைப்பிலும் வளருகிற ஒவ்வொரு ஆணுக்குள்ளும் மனைவி என்கிற பிம்பம் வயது வந்த பிறகு, பொக்கிஷமாகப் பூட்டி வைக்கப்பட்டிருக்கும். திருமணக்
கனவு பெண்களுக்கு மட்டுமில்ல ஆண்களுக்கும் உண்டு.மனைவி என்கிற அந்தப் பிம்பம் மட்டும் தான் இருக்குமே தவிர, தனக்கென்று ஒருத்தி வந்த பின் தான் அந்தப் பிம்பம் முழுமையடையும்.”
அவன் பேசுவதையே இமைகளை மூட மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
நானும் அப்படித்தான்!
என் வாழக்கையில் பள்ளி, கல்லூரி காலங்களிலும் சரி, வேலை பார்க்கும் போதும் சரி பல பெண்கள் என்னைக் கடந்து போனார்கள்.ஆனால் குடும்பத்தினரால் எனக்காகப் பார்த்து வைக்கும் பெண்ணுக்காக என்னுடைய மனசை, என்னுடைய ஆசைகளை, என்னுடைய ரகசியங்களைப் பாதுகாத்துக் கொண்டிருந்தேன்.அழகான பெண்களைப் பார்க்கும் போது அந்தநிமிடம் ஒரு சராசரி ஆணாக ரசிப்பேன்.அதே சமயம் எனக்கே எனக்காக வரப் போகும் என் மனைவி தான் எனக்கு அழகி என்பதில் உறுதியாக இருந்தேன்.
“நான் எதிர்பார்த்த அந்தத் தருணம் வந்தது.மூன்று வருடங்களுக்கு முன்பொரு நாள் இரவு அம்மாவிடமிருந்து போன் வந்தது.பெண் பார்த்திருப்பதாகவும்,அவர்களைப் பொறுத்தவரை எல்லாமே திருப்தியாக இருப்பதாகக் கூறினார்கள். மெயிலில் போட்டோ அனுப்பியிருப்பதாகவும் அதைப் பார்த்துவிட்டு எனக்குப் பிடித்திருந்தால் மேற்கொண்டு பேசலாம் என்றார்கள்.
அம்மாவிடம் பேசி முடித்துவிட்டு மெயிலை ஓபன் செய்து பார்க்க தொடங்கினேன்.மனதிற்குள் இனம் புரியாத படபடப்பு.இன்பாக்சை ஓபன் செய்ய முடியாமல் கைகளில் ஒரு நடுக்கம்.எப்படி இருப்பாளோ? எனக்கு அவளைப் பிடிக்குமோ?இந்த பெண் எனக்கானவள் தானா? என்று ஆயிரத்தெட்டுச் சந்தேகங்களுடன் மெதுவாக அம்மா அனுப்பிய மெயிலை ஓபன் செய்தேன்.
அவள் படம் கண்முன்னே வந்ததும், மனதிலிருந்த படபடப்பு இதயத்தில் பிரதிபலிக்க ஆரம்பித்தது.என் கண்களுக்கு மிக அழகாகத் தெரிந்தாள்.இவள் எனக்கானவளா?இத்தனை அழகும் எனக்கேவா?அவளுக்கு என்னைப் பிடிக்குமா? என்று அடுத்தடுத்த கேள்விகள் என்னைச் சூழ்ந்தது.
தனது முதல் மனைவியைப் பற்றி அவன் வர்ணித்ததை ரசிக்க முடியாமல் அவஸ்த்தையுடன் அவனிடமிருந்து கைகளை உருவி கொள்ள முனைந்தாள்.துயரத்துடன் சொல்லிக் கொண்டிருந்தவன் அவள் கைகளை உருவி கொள்ள முயன்றதும் அவளது மனநிலையைப் புரிந்து கொண்டான்.
அவள் புறம் திரும்பி முகத்தைப் பார்த்து “உனக்கு இதைக் கேட்க பிடிக்காது தான்.ஆனா, எனக்காகக் கொஞ்சம் பொறுமையா முழுக்கக் கேளு ஸ்ருதி. இதுவரை என் மனதிலிருந்த துக்கத்தைப் பூட்டி பூட்டி வச்சிருந்தேன்.அதனோட பாதிப்பு தான் உன்கிட்ட காட்டிட்டேன்.தயவு செஞ்சு என்னைப் பேச விடு”என்று கெஞ்சினான்.
அவனது கெஞ்சலில் அவள் மனதிலிருந்த சஞ்சலங்கள் அகல அமைதியாக அமர்ந்தாள்.
எனக்குப் பிடிச்சிருக்குன்னு உடனே அம்மாவுக்குப் போன் பண்ணி சொல்லிட்டேன்.அதன்பிறகு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவள் படத்தைப் பார்ப்பது தான் வேலை.மனம் முழுவதும் அவள் தான். உலகத்தில் வேற வார்த்தைகளே இல்லாத மாதிரி நந்தனா-நந்தனா என்று ஒரே ஜபம்.நானோ இப்படிச் சுத்திக் கொண்டிருக்க, அம்மாவோ பெண் பார்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பிச்சாங்க.அவளுடைய புகைப்படம் வந்து பத்தே நாளில் அவளைப் பார்க்க சென்றேன்.
நெஞ்சத்தில் ஒரு பரபரப்புப் போட்டோவில் பார்த்த மாதிரி தான் இருப்பாளா இல்ல வேற மாதிரி இருப்பாளா?அவளைப் பார்த்த அந்த நிமிடம் இவள் தான் என் மனைவி என்று முடிவு செய்தேன்.அதே சமயம் அவளுக்கு என்னைப் பிடிக்க வேண்டுமே என்று கலக்கமும் எழுந்தது.அம்மாவிடம் சொல்லி அதையும் கேட்க சொன்னேன்.அவளுக்கும் சம்மதம் என்று தெரிந்தது.
அதே வாரத்தில் ஒருநாள் நான் ஊருக்கு போகும் முன் நிச்சயதார்த்தை நடத்தி விடலாம் என்று பேசி முடிவு செய்தார்கள்.எனக்கு அவளிடம் ஓரிரு வார்த்தைகள் பேச வேண்டும் என்று ஆர்வம் எழுந்தது.என்னை புரிந்து கொண்ட ஆகாஷ் அம்மாவிடம் சொல்லி அதற்கு ஏற்பாடு செய்தான்.
முதன்முறையாக நானும் அவளும் தனியறையில் சந்தித்தோம்.எனக்கு அவளை அவ்வளவு கிட்டே பார்த்த போது நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக் கொண்டது.அவளுமே குனிந்த தலை நிமிராது நின்றிருந்தாள். மெல்ல என்னை நிதானப்படுத்திக் கொண்டு “உட்காரு நந்தனா”என்று சொல்லி அவள் எதிரே இருந்த நாற்காலியில் நானும் அமர்ந்து கொண்டேன்.
அவள் அமர்ந்ததும் அவளது அழகை கண்களால் நிறைத்துக் கொண்டே “உன்னைப் போலவே உன் பெயரும் ரொம்ப அழகாயிருக்கு”என்றேன்.
அவளோ தலையை நிமிர்த்தாது “தேங்க்ஸ்” என்றாள்.
“என்னை உனக்குப் பிடிச்சிருக்கா?”
“ம்ம்..” என்று ஒரே வார்த்தையில் பதிலளித்தாள். சரி என்னைக் கண்டு தயங்குகிறாள் என்றெண்ணி மேலும் பேச்சுக் கொடுக்காமல் என்னுடைய போன் நம்பரை அவளுக்குக் கொடுத்து அவளுடையதை வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.
மனமோ குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தது. குடும்பத்திலுள்ளவர்கள் எல்லாம் என்னை ஓட்டி எடுத்தனர்.அதற்காகவெல்லாம் நான் அசரவில்லை.இரவானதும் அவளிடம் போனில் பேசத் தொடங்கினேன்.ஆரம்பத்தில் சற்று தயங்கியவள் நிச்சயதார்த்திற்குள் இயல்பாகப் பேச ஆரம்பித்தாள்.
இரு மாதங்களுக்குப் பிறகே மண்டபம் கிடைத்ததால், அந்தத் தேதியில் திருமணம் முடிவாயிற்று.நிச்சயத்தன்று தனிமையில் பேசும் போது அவள் கைகளைப் பிடித்துக் கொள்ள முயன்றேன்.