Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 18 | SudhaRaviNovels

அத்தியாயம் - 18

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,827
113
அத்தியாயம் – 18

கடந்தகால நிகழ்வுகளின் தாக்கத்தில் அந்த வேதனைகளின் வலி இருவரையும் தாக்கியதில் வெகு நேரம் அப்படியே அமர்ந்திருந்தார்கள்.

காலையில் ஒரு காப்பிக் குடித்ததோடு வேறு ஒன்றும் சாப்பிடாததால் வழக்கம் போல் நிகிலின் வயிறு சப்தமிட ஆரம்பித்தது.

தன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளின் காதருகே குனிந்தவன் “ஸ்ருதி”என்றான் கிசுகிசுப்பாக.

அவனது உதடுகள் அவளது காதில் உரசியதும், அவனது மூச்சுக் காற்றுக் கழுத்தில் சூடாகப்பட்டதும் சற்று குறுகுறுப்புடன் அவன் முகத்தைப் பார்த்தாள்.

அவனோ லேசாக முகத்தைச் சுருக்கி “பசிக்குது ஸ்ருதி” என்றான்.

என்னவோ சொல்லப் போகிறான் என்று ஆர்வமாக எதிர்பார்த்தவளுக்கு, அவன் பசிக்குது என்றதும் சப்பென்று ஆனது.

அவனிடமிருந்து தள்ளி உட்கார்ந்தவள்,அப்போது தான் சுற்றுப்புறத்தை ஆராய்ந்தாள்.இருள் சூழ்ந்திருந்தது.கையிலருந்த கடிகாரத்தைப் பார்த்தாள்.மணி எட்டு என்று காட்டியது. அவ்வளவு நேரமா பேசிக் கொண்டு இருந்திருக்கிறோம் என்றெண்ணி அவசரமாக எழுந்தாள்.

அவனும் எழுந்து சென்று விளக்குகளைப் போட்டு “நீ போய் முகம் கழுவி டிரஸ் பண்ணிட்டு வா ஸ்ருதி,சாப்பிட்டிட்டு வந்திடலாம்”என்றான்.

அவள் கிளம்பியதும் கதவை பூட்டிக் கொண்டு கிளம்பினர்.மெல்லிய வெளிச்சமும்.இருள் சூழ்ந்த அமைதியும் அவர்களின் மனங்களுக்கு இதமளித்தது.

உணவை முடித்துக் கொண்டு அறை வாயிலுக்குத் திரும்பியவர்கள், அங்கே இருந்த படியிலேயே அமர்ந்து கொண்டனர்.

அவனுக்கு இன்றோடு அவளிடம் அனைத்தையும் சொல்லி முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தான்.அவளோ அதுவரை கேட்டவையே மனதை அழுத்திக் கொண்டிருந்தது.

அவனோ எதிரே தெரிந்த பால் நிலவை வெறித்துக் கொண்டிருந்தவன், நீண்ட பெருமூச்சுடன் “அந்த மூணு வருஷங்கள் என் வாழ்க்கையோட அந்திம காலங்கள்-னு தான் சொல்லணும்.”

அவன் மீண்டும் பழைய கதையை ஆரம்பித்ததுமே “வேண்டாம் நிக்கி! விட்டுடுங்க!அதையே பேசி பேசி மனதை புண்ணாக்கிக்க வேண்டாமே.”

அவள் புறம் லேசாகத் திரும்பி பார்த்தவன் “இல்ல ஸ்ருதி!இன்னைக்கே எல்லாத்தையும் சொல்லி முடிச்சிடுறேன்.அதன் பிறகு பேச மாட்டேன்.”

அவனுடைய மனதை புரிந்து கொண்டவள் அமைதி காத்தாள்.

“கேஸ் முடிஞ்சதும், உடனே இங்கிருந்து கிளம்பத் தயாரானேன். எனக்கு யார் முகத்திலேயும் முழிக்கவே பிடிக்கல.”

“ம்ம்..”

“குடும்பத்தில் இருந்தவங்களும் என்னைப் புரிஞ்சிகிட்டு என்னோட முடிவுக்குத் துணை போனாங்க.ஆனா, நான் மனுஷங்களைக் கண்டு ஓடி ஒளிய நினைச்சனே தவிர, என் மனசை பத்தி சுத்தமா மறந்து போயிட்டேன்.வெளியில் உள்ளவங்க என்னைப் பார்க்கிறப்ப மட்டும் தான் கேலி பேசுவாங்க.ஆனா, என் மனசு எனக்குள்ளேயே இருந்துகிட்டு நடந்த நிகழ்வுகளை ஒவ்வொன்னையும் எனக்கு நியாபகப்படுத்தி எனக்குள்ள இருந்த மென்மையான உணர்வுகளைக் கொன்னு போட ஆரம்பிச்சுது.தனிமை தான் என் ரணத்துக்கு மருந்து-னு நினைச்சது தப்பு.என் உறவுகளோட இருந்திருந்தா நாளடைவில் என் மன காயங்கள் ஆறி இருக்கும்.”

பகல் நேரங்களில் என்னை முழுமையா வேலையில் ஈடுபடுத்திக்கும் போது மறந்திருக்கிற சிந்தனைகள், இரவு படுக்கும் போதும் பேயாட்டம் போடும்.அதிலும் என் மனைவி என்கிற உரிமையில் அவளிடம் பேசிய விஷயங்கள், அவள் அதைப் பற்றி அவனிடம் எப்படிப் பேசி சிரித்திருப்பாள் என்று நினைக்கும் போது அந்த நிமிடமே மாடியிலிருந்து குதித்து விட மாட்டோமான்னு தோணும்.

அவனது வேதனையைப் புரிந்து கொண்டவள் அவனது கைகளை எடுத்து தன்னுடைய கைகளுக்குள் வைத்துக் கொண்டாள்.

என்னைப் பற்றி,என் உணர்வுகளைப் பற்றிக் கொஞ்சமும் சிந்திக்காத அந்தப் பெண்ணை நினைக்காதே என்று மனம் அறிவுறுத்தினாலும், அவளால் அடைந்த அவமானத்தை மட்டும் என்னால மறக்க முடியல.

அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் “நான் ஒன்னு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?”

“ம்ம்..கேளு”

“நீங்க ஏன் மெடிக்கல் டெஸ்ட் எடுத்து, உங்க மேல எந்தத் தவறும் இல்லை-னு நிருபிக்கல?”

அவளது கேள்வியைக் கண்டு இகழ்ச்சியாகச் சிரித்தவன் “என் மேல இந்தக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டவுடனே,நீதிபதி என்னை மெடிக்கல் டெஸ்ட் தான் பண்ண சொன்னார்.”

“அப்போ அதில் தெரிஞ்சிருக்குமே, உங்க மேல குற்றமில்லை-னு.”

அவளைத் திரும்பி பார்த்து “எல்லாத்துக்குமே ஒரு விலையிருக்கு ஸ்ருதி. நீயும், நானும் அப்பாவிகள்.ஆனா, அந்த நந்தனாவும், ராஜ்-ம் அப்படிபட்டவங்க இல்லை.தாங்கள் நினைத்ததைச் சாதிக்க எதை வேணும்னாலும் செய்வாங்க.நீதிபதிக்கு வந்த ரிப்போர்ட்டில் என் மேல குறைன்னு ரிசல்ட் வந்திருந்தது.”

அவன் சொன்னதைக் கேட்டு தன் கைகளால் வாயை மூடிக் கொண்டாள். அவளால் இப்படி ஒரு கேவலமான நடத்தையை எதிர்கொள்ளவே முடியவில்லை.

“ஆகாஷும்,நீரஜும் வேற ரிப்போர்ட் வாங்கலாம்-னு குதிச்சாங்க.எனக்கு அவமானமா இருந்தது.ஆண்மை என்பது எது?குழந்தை பெற தகுதி உள்ளவன் தான் ஆம்பிள்ளையா? இல்ல!எவன் தன்னை நம்பி வருபவளை கண் கலங்காம காப்பாத்துறானோ அவன் தான் உண்மையான ஆம்பிள்ளை.அப்படி பார்த்தா நீ அந்தக் குற்றசாட்டை என் மேல வச்சா அது உண்மையான குற்றசாட்டு.ஏன்னா நான் உன்னை அந்த அளவுக்கு அழ வச்சிருக்கேன்.ஆனா, பெண்மைக்கே கேவலத்தை உண்டாக்கிய அவகிட்ட என்னை நிருபிக்கணும்-னு அவசியமில்லையே.அதனால என் மேல அந்தப் பழி இருந்தா இருந்திட்டு போகட்டும்-னு சொல்லி இன்னொரு டெஸ்ட் எடுக்க மறுத்திட்டேன்.”

அவன் அப்படிச் சொன்னதும் கன்னங்களில் கண்ணீர் வழிய அப்படியே அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள்.

“ப்ளீஸ்..வேண்டாம் இதுக்கு மேல எனக்குக் கேட்க தெம்பில்லை.போனது போகட்டும் அதைப் பற்றிப் பேச வேண்டாமே”.

அவனும் அவளது கூற்றில் பேசாமல் அமர்ந்திருந்தான்.சிறிது நேரம் வரை அப்படியே உட்கார்ந்திருந்தார்கள்.

மெல்ல அவள் முகம் பார்த்து “உள்ளே போகலாமா? ரொம்ப அசதியா இருக்கு.”

அவள் சரி என்றதும், இருவரும் எழுந்து உள்ளே சென்றார்கள். ஹாலிற்குள் நுழையும் வரை மற்றதை எண்ணாமல் இருந்தவள்,எங்கே சென்று படுப்பது என்று விழித்துக் கொண்டு நின்றாள்.

அவள் தயங்கி நிற்பதை பார்த்தவன் “மேலே வா ஸ்ருதி!பேசிகிட்டு இருந்ததில் நேரம் போனதே தெரியல”என்றவன் விரைந்து மாடிப்படியில் ஏற ஆரம்பித்தான்.

தயக்கத்துடனே அவன் பின்னே சென்றாள். அவன் ஒரு புறம் கண்களை மூடி படுத்து விட்டான்.சுவரில்லாத பக்கம் படுக்கப் பயமாக இருந்ததால் யோசித்துக் கொண்டே நின்றாள். மெல்ல கண்ணைத் திறந்து பார்த்து “படுக்கலையா”என்றான்.

அவன் கேட்டதும் அவசரமாகப் படுத்துக் கண்களை மூடிக் கொண்டாள். சிறிது நேரம் வரை ஆடாது அசையாது அமைதியாகப் படுத்திருந்தாள்.அவன் புறமிருந்து மெல்லிய குறட்டை ஒலி கேட்கத் தொடங்கியது.மெதுவாக எழுந்தவள் அவன் உறங்குகிறானா என்று பார்த்து விட்டு அங்கிருந்து பலகையில் சென்று அமர்ந்து கொண்டாள்.
 
  • Like
Reactions: Chitrasaraswathi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,827
113
ஜன்னல் வழியே தெரிந்த நிலவை பார்த்துக் கொண்டிருந்தவளின் மனம், அவன் சொன்னவற்றையே அசை போட்டுக் கொண்டிருந்தது. உறங்கி கொண்டிருந்தவனைப் பார்த்தவள், எத்தனை கஷ்டங்களைக் கடந்து வந்திருக்கிறான் என்றெண்ணினாள்.நானாவது பிறந்ததில் இருந்தே அன்பை கண்டறியாது வளர்ந்தவள்.ஆனால், அவனோ அன்பான குடும்பத்தில், நல்ல சூழ்நிலைகளை மட்டுமே பார்த்து வளர்ந்தவன்.எத்தனை எதிர்பார்ப்புகளுடன் அவளை மணந்திருக்கிறான்.அவனுடைய உணர்வுகளை மொத்தமாகக் கொன்று புதைதிருக்கிறாளே. அப்போது கூட அவன் என்னிடம் ஒதுங்கி இருந்தானே தவிர, தவறாக நடந்து கொள்ளவில்லையே.

இதுவே வேறொரு ஆளாக இருந்தால், தன் மேல் அப்படிப்பட்ட பழி வந்ததற்கு என் ஆண்மையை நிரூபிக்கிறேன் என்று வக்கிரமாக அல்லவா நடந்திருப்பான்.இவன் எந்தச் சமயத்திலும் கண்ணியத்தைத் தவற விடவில்லையே.என்ன! அன்று கோவிலில் பேசியதை தவிர, அவன் என்றுமே அநாகரீகமாக நடந்து கொள்ளவில்லை என்று அவன் புறம் இருந்த நியாயங்களை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

மெல்ல எழுந்து பூனை நடை நடந்து அவனருகில் சென்றவள் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள்.அயர்ந்து உறங்கும் முகத்தில் தெரிந்த துயரம் தோய்ந்த சுருக்கங்களைப் பார்த்ததும், தன்னை அறியாமலே கையை உயர்த்தி வருடிக் கொடுக்கச் சொன்னது.குனிந்து அவன் நெற்றியில் இதழ் பதித்தாள்.

‘சாரி-டா! என்னை விட நீ தான் நிறையக் கஷ்டப்பட்டிருக்க. உன்னோட வாழ்நாள் முழுக்க உன் சுக துக்கங்களில் நான் பங்கெடுக்கனும்-னு நினைக்கிறேன்.அதுக்குக் கொஞ்சம் டைம் வேணும்’ என்று தனக்குத் தானே பேசிக் கொண்டவளின் கைகள் அவன் தலையை வருடிக் கொடுத்தது.

சற்று நேரம் நின்று அவனைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு திரும்பி சென்று அமர்ந்து கொண்டவள், தன்னை அறியாமலே உறங்கத் தொடங்கினாள்.

விடியலின் நேரம் பறவைகளின் கூக்குரலில் விழித்தவன், எதிரே அமர்ந்த நிலையிலேயே தூங்கிக் கொண்டிருப்பவளை கண்டான்.

நீண்ட பெருமூச்சுடன் எழுந்து சென்று, அவளைப் பூப்போலக் கைகளில் எடுத்து வந்து படுக்க வைத்தான். ‘இனி, உன்னை உன் இஷ்டத்துக்கு விடப் போறதில்லை. ஸ்ட்ரைட்டா ஹனிமூன் தான்’ என்றவன் குனிந்து அவள் நெற்றியில் ஒரு முட்டு முட்டிவிட்டு கீழிறங்கி சென்றான்.

ஆறரை மணியளவில் உறக்கம் களைய மெதுவாக உருண்டு பிரண்டு படுக்கையை ரசித்தவளுக்கு, தான் எப்படி அங்கே வந்தோம் என்று கேள்வி எழ, அவசரமாக வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தமரந்தாள்.நெற்றியில் ஒரு தட்டுதட்டி ‘அச்சச்சோ! அவன் தூக்கிட்டு வந்து போட்டிருப்பான் போலருக்கே’என்று வெட்கமாகப் புன்னகைத்துக் கொண்டாள்.

படியில் மெதுவாகச் சப்தம் எழுப்பாமல் இறங்கி, அவன் புறம் திரும்பாது குளியறைக் கதவை திறந்தாள்.

“பார்க்க தான் ஒல்லி, தூக்கினா செம வெயிட்”என்றான் சப்தமாக.

அவன் சொன்னதைக் கேட்டு முகம் சிவந்து போனவள் அவசரமாகக் கதவை சாத்திக் கொண்டாள். அதைப் பார்த்துச் சத்தமாகச் சிரித்தான்.

அவள் குளித்து முடித்து வந்ததும்,அவளுக்காகப் போட்டு வைத்திருந்த காப்பியை தந்தான்.அதை வாங்கிக் கொண்டு,அன்றைய நாளிதழை எடுத்துக் கொண்டு சோபாவில் சென்றமர்ந்தாள். அவனும் தன்னுடைய காப்பியுடன் அவளது அருகில் மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டான்.

அவன் வந்து தன் பக்கத்தில் அமர்ந்ததுமே ஒருவித பதட்ட நிலைக்கு வந்தவள், அவனது அடுத்தடுத்த செயலில் நிலைகுலைந்து போனாள்.அவள் கையிலிருந்த பேப்பரை காட்டி, அந்த நியூசை பாரு, இதைப் பாரு என்று நன்றாக அவள் மேல் சாய்ந்து, அவள் தோளை சுற்றி கையைப் போட்டுக் கொண்டான்.ஓரளவிற்கு மேல் பொறுக்க முடியாது போக, “நாம பர்ட் வாட்சிங் போகலாமா?” என்றாள் எழுந்து நின்றபடி.

அவளின் நிலையை உணர்ந்தவன் மெல்லிய சிரிப்போடு “ம்ம்.போலாமே!

அவனது கண்களில் தெரிந்த விஷம சிரிப்பை கண்டவள், அயர்ந்து போனாள்.

இருவரும் கிளம்பி ரிசெப்ஷனுக்குச் சென்று பர்ட் வாட்சிங் செல்பவர்களுடன் கலந்து கொண்டார்கள்.சூர்யகுமார் மட்டும் இருவரையும் சற்றுக் குறுகுறுவெனப் பார்த்து சிரித்தார்.

இன்றும் தனது கைகளில் பைனாகுலரை வாங்கியவன், முதல்நாள் போன்றே அதை அட்ஜஸ்ட் செய்து தருகிறேன் பேர்வழி என்று அவளைப் படுத்தி எடுத்தான்.சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் மனதிற்குள்ளேயே அவனைத் தாளித்துக் கொண்டிருந்தாள்.

ஏண்டா இங்கு வந்தோம் என்று நொந்து போகும் அளவிற்கு அவன் நெருக்கம் காட்ட, ஒருநிலைக்கு மேல் தாங்க முடியாது போக “கொஞ்சம் இடிக்காம வரீங்களா?” என்றாள்.

அதைக் கேட்டு அப்படியே நின்றவன் “என்ன இப்படிச் சொல்லிட்டே”.

“ஏன்? சொன்னா என்ன தப்பு?”

“நான் வந்தததே அதுக்காகத் தான். நீ அதைச் செய்யக் கூடாதுன்னு சொன்னா என்ன செய்வேன்?” என்றான் விஷமமாக.

மானசீகமா தலையில் கை வைத்துக் கொண்டவள் “ப்ளீஸ்! புரிஞ்சுகோங்க!” என்றாள்.

அவனும் அவளை மாதிரியே கண்களைப் பரிதாபமாக வைத்துக் கொண்டு “ப்ளீஸ்!புரிஞ்சுக்கோ!” என்றான்.

அவனது பாவனையில் தன்னையும் அறியாமல் சிரிக்க ஆரம்பித்தாள்.அவளது சிரிப்பை கண்டவனுக்கும் சிரிப்பு வர, அவர்களைப் பார்த்த சூர்யகுமாரும், மற்றவர்களும், புதுமணத் தம்பதிகளின் விளையாட்டு என்றெண்ணி சிரித்துக் கொண்டே சென்றனர்.

அன்றும் பாதியிலேயே திரும்பியவர்கள், காயத்ரியும், மற்றவர்களும் இருந்த குடில்கள் பக்கம் வந்தனர்.

அங்கு அபியை விளையாட விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்தார் காயத்ரி.மகனும், மருமகளும் ஒன்றாகச் சிரித்துப் பேசிக் கொண்டு வருவதைப் பார்த்தவருக்குக் கண்கள் நிறைந்தது.

அவர்களிருவரையும் பார்த்த அபி ஓடி வந்து நிகிலின் கால்களைக் கட்டிக் கொண்டு “ந..”என்று ஆரம்பிக்கும் முன்னே குனிந்து அவசரமாக அவன் வாயை பொத்திய நிகில் “வேணாம்-டா மகனே! என் மானதை வாங்காதே” என்றான்.

அப்போது பக்கத்து குடிலிலிருந்து வெளியே வந்த மதி, நிகிலை பார்த்துவிட்டு, அவனருகில் வந்தான்.

நிகிலை ஒரு சுற்று சுற்றி வந்தவன் “ம்ம்..கண்ணெல்லாம் சிவந்திருக்கு. நைட் தூங்கவே இல்லையோ?” என்றான் நக்கலாக.

நிகிலோ மதியை அங்கே எதிர்பார்க்காததால் “டேய்! நீ எப்படி-டா இங்கே?”

அவனை எரிச்சலாகப் பார்த்து “ஹனிமூனுக்கு வந்தேன்.ஆனா,எல்லா கிரகமும் இங்கே தான் இருக்கும்-னு தெரியாம போச்சு. இப்போ சனிமூனா ஆகிடுச்சு”.

“ஹாஹா..எப்படி-டா இந்த மாதிரி பேச கத்துகிட்ட?தங்கச்சி ட்ரைனிங்கா?” என்றான் அவனது எரிச்சல் புரியாமல்.

“அதை விடு! நீ என்ன ஆளையே காணும்? தங்கச்சியை வேற தள்ளிகிட்டு போயிட்டே ரொம்பப் பிஸியா?”

“டேய்! அம்மா இருக்காங்க! உளறாத!”

“பின்ன என்ன மச்சி!உன் வழக்கு கோர்ட்ல இருக்கு. ஆனா, நீ இங்கே ஹனிமூன் கொண்டாடிகிட்டு இருக்கே.என் நிலைமையைப் பாரு!” என்றான் கடுப்புடன்.

அவர்கள் வழக்கடித்துக் கொண்டிருக்க, அங்கே வந்த ஆகாஷ் “நிக்கி! நானே வரணும்-னு நினைச்சேன். ஒன்பது மணிக்கு ஹவுஸ் போட் புக் பண்ணி இருக்கேன்.எட்டு மணிக்குப் போய்ச் சாப்பிட்டிட்டு அங்கே போனா தான் சரியாயிருக்கும்.உங்க திங்க்ஸ் எல்லாம் பாக் பண்ணி கொண்டு வந்திடுங்க.மதி உனக்கும் தான். மசமசன்னு நிற்காம போய்க் கிளம்புங்க” என்றான்.

அதைக் கேட்டு “ம்க்கும்..இது ஒன்னு தான் குறைச்சல்”என்று முணுமுணுத்துக் கொண்டே

நகர்ந்தான் மதி.
 
  • Like
Reactions: Chitrasaraswathi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,827
113
வன் சோகமாகப் போவதை பார்த்த நிகில் “பாவம் ஆகாஷ்! எப்படி இருந்தவனை இப்படி ஆக்கிட்டீங்களே?”

அதற்கு மறுப்பாகத் தலையாட்டியவன் “நாம ஒன்னும் பண்ணலடா.அந்த பொண்ணு எல்லாரோடவும் இருக்கணும்-னு பிரியபடுது.அதை இவன் புரிஞ்சுக்க மாட்டேங்குறான்.”

“சரி ஆகாஷ்! நான் போய்க் கிளம்பி வரேன்” என்றவன் ஸ்ருதியையும் அழைத்துக் கொண்டு அறைக்குச் சென்றான்.



தனது பொருட்களையெல்லாம் எடுத்து வைத்தவள், பீச் கலரில்,பெரிய பெரிய பூக்கள் அதே கலரில் உடலெங்கும் அள்ளி தெளித்திருக்க, கீழே ஆழ்ந்த நீலநிற பேண்டும்,நீலநிற ஷாலும் அணிந்து தயாராகிக் கீழே வந்தாள்.

அவனும் தயாராகி இருந்தான்.இளம் பிங்க் வண்ணத்தில் சிறிய சிறிய புள்ளிகள் பரவியிருந்த டி- ஷர்ட்டும், காப்பர் சல்பட் கலர் பேண்டும் அணிந்திருந்தான்.

அவளைப் பார்த்ததும் மலைத்துப் போய் “உனக்கு இந்தக் கலர் ரொம்பப் பிடிக்குமோ? என்று கேட்டு நாலே எட்டில் அவளருகில் சென்று தன்னுடன் இறுக்கி அணைத்துக் கொண்டு “அன்னைக்கும் இதே கலர் புடவை தானே கட்டியிருந்தே?” என்றான்.

முதலில் அவனது செயலில் அதிர்ச்சியடைந்தவள், அவன் எதைச் சொல்கிறான் என்று புரியாமல் நின்றாள்.

அவனோ “ உடம்பெல்லாம் ரத்தமா நீ கிடந்ததைப் பார்த்தப்ப, என் மூச்சே நின்னு போச்சு ஸ்ருதி.”

“ஒ..விபத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறானா” என்று நினைத்தவளுக்கு அவனது உடலின் நடுக்கம் ஆச்சர்யத்தைக் கொடுத்தது.

அவளிடமிருந்து பிரிந்தவன் முகத்தைக் கைகளில் ஏந்தி “நான் உன் கிட்ட மிருகம் மாதிரி நடந்துகிட்டு இருக்கேன்.அப்படியும் நீ என்னை வெறுக்காம, என்னைப் பார்த்து முகம் திருப்பாம எப்படி உன்னால இருக்க முடியுது.ஐ அம் சாரி ஹனி.நான் செஞ்ச தவறுக்கெல்லாம் என்னை மன்னிப்பியா?” என்றான் கெஞ்சலாக.

நிமிர்ந்து அவன் விழிகளைச் சந்தித்த அவளது விழிகள், அவன் உள்ளத்தில் ஓடிய உணர்வு போராட்டத்தைப் புரிந்து கொண்டது.

“துபாய் நிகில் எப்படிக் காதலில் விழுந்தார்-னு தெரிஞ்சுக்காம நான் மன்னிப்பு கொடுக்கிறதா இல்ல”என்றாள் குறும்புடன்.

அதுவரை உணர்ச்சி பிழம்பாக நின்று கொண்டிருந்தவன் அவள் சொல்லிய செய்தியைக் கேட்டு மகிழ்ந்து “ஒ..ஆர்ஜே நிகிலின் காதலை பத்தி தெரிஞ்சுக்கனுமா?ஆனா, அதுக்கு அப்பப்போ சின்னச் சின்னப் பரிசுகள் கிடைச்சா தான் சொல்ல முடியும்” என்றான் விஷமத்துடன்.

தன்னிடமிருந்து அவனைப் பிடித்துத் தள்ளி “ஆசை தான்” என்று பழிப்பு காட்டி “நேரமாச்சு கிளம்புங்க” என்றாள்.
 
  • Like
Reactions: Chitrasaraswathi
Need a gift idea? How about a tea mug?
Buy it!