அத்தியாயம் – 19
வேம்பநாட்டுக் காயலில் அந்தப் படகு வீடு லேசாக ஆடியபடி நின்றிருந்தது.இரு தளங்களைக் கொண்ட படகு வீட்டில் ஒவ்வொருவராக ஏறினர்.ஸ்ருதி ஏறும் போது சிரமப்பட, மற்றவர்களைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாது ஒரு கையால் அவள் இடுப்பை வளைத்து தூக்கிக் கொண்டு தானும் ஏறினான்.
காயத்ரி அவனது செயலைக் கண்டு நிறைந்த மனதுடன் நின்றார். ஆர்த்தியும், அகல்யாவும் தங்களது கணவர்களின் புறம் திரும்பி கண்ணைக் காண்பித்துக் கேலியாகச் சிரித்தனர்.அண்ணன்கள் இருவரும் தம்பியின் செயலைக் கண்டு வெட்கப் புன்னகையுடன் திரும்பிக் கொண்டனர்.
ஸ்ருதிகோ அவன் இப்படிச் செய்வான் என்று எதிர்பார்க்காததால் வெட்கத்தில் முகம் சிவந்து, ஒருவரையும் நிமிர்ந்து பார்க்காது ஓரமாகச் சென்று நின்று கொண்டாள்.
அங்கு நடந்தவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த மதி, திரும்பி சரண்யாவை பார்த்தான். அவளோ ஆர்த்தியுடன் வளவளத்துக் கொண்டிருந்தாள்.பெருமூச்சுடன் ‘எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும்! எனக்கு வாச்சது சரியில்லை!இதுல அடுத்தவங்களைக் குறை சொல்லி என்ன பண்றது’என்று மனதிற்குள்ளேயே புலம்பிக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்துக்கு எல்லோரும் படகு வீட்டை சுற்றி வந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
“எவ்வளோ அழகா பண்ணி இருக்காங்க?இதுக்குள்ளேயே படுக்கையறை,வாஷ் ரூம் எல்லாமே வச்சிருக்காங்களே”என்று அதிசயபட்டுக் கொண்டிருந்தார் காயத்ரி.
எல்லா அறைகளையும் பார்த்துவிட்டு வந்த ஆகாஷ் நிகிலிடம் “நீயும், மதியும் மேலே இருக்கிற அறைகளை எடுத்துக்கோங்க.கீழே இருக்கிற மூணு அறையை நாங்க எடுத்துக்கிறோம்”
அவன் சொன்னதைக் கேட்டதும் நிகில் விரைவாக மாடிக்கு சென்று ஒரு அறைக்குள் நுழைந்தான்.சிறிது நேரத்திற்குப் பிறகு “ஸ்ருதி! என் பெட்டியை கொஞ்சம் எடுத்திட்டு வாயேன்” என்றழைத்தான்.
அவள் பெட்டியை எடுத்துக் கொண்டு மேலே செல்ல, ஆர்த்தி நீரஜிடம் திரும்பி “செம வேகம் தான் என் மச்சினர்”என்று கிண்டலாகச் சிரித்தாள்.
அவளைப் பார்த்து முறைத்து “ஏய்! வெளில வேடிக்கை பாரு! சும்மா அவனை வம்பு வளர்த்துக்கிட்டு”என்று அரட்டி விட்டு சென்றாலும், ஆகாஷுடன் சேர்ந்து மெலிதாகச் சிரித்துக் கொண்டே சென்றான்.
மேலே சென்ற ஸ்ருதி அவன் எந்த அறையிலிருக்கிறான் என்று தெரியாமல் ஒரு அறை வாயிலில் தயங்கியபடி நின்றாள்.சடாரென்று கதவு திறக்கப்பட, அவள் கையைப் பிடித்து உள்ளே இழுத்துக் கொண்டு கதவு சாத்தப்பட்டது. என்ன நடந்தது என்று உணரும் முன்பே அவனது பிடியிலிருந்தாள்.
அதிர்ச்சியில் உறைந்து நின்றவள், அவனது பிடியின் இறுக்கத்தை உணர்ந்து அவனிடமிருந்து விலக முயற்சித்து முடியாமல் “விடுங்க! என்ன பண்றீங்க?”.
அவளை மேலும் தன்னுடன் இறுக்கிக் கொண்டவன் “இது கூடத் தெரியலையா மக்கு பொண்டாட்டி”என்றவன் அவள் இதழ்களை நோக்கி குனிந்தான்.
அவனது நெருக்கத்தைக் கண்டு அஞ்சி, பிரியாத உதடுகளைக் கஷ்டப்பட்டுப் பிரித்து “நீங்க ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துகுறீங்க. நான் இன்னும் உங்களை மன்னிக்கவேயில்லை.”
“அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?” என்றவன் அவள் இதழோடு இதழ் பதித்தான்.
அதுநாள் வரை இரு மனங்களிலிருந்த சஞ்சலங்கள் நீங்கி, இருவரும் ஒருமனதாக அந்த நெருக்கத்தை அனுபவித்தனர். நீண்டு நெடு நேரம் தொடர்ந்த இதழ் முத்தம் இருவரின் மூச்சுகாற்றை மட்டுமின்றி, மனதையும் நெருங்க செய்தது.
தன்னவனின் நெஞ்சில் சாய்ந்த ஸ்ருதியின் நெஞ்சம் சொல்ல முடியாத மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது.அவளது நிலையை உணர்ந்து கொண்ட நிகிலும், அதுநாள் வரை அனைத்தையும் கண்டு ஓடி ஒளிந்து கொண்டிருந்தவனை ஸ்ருதியின் அன்பு கட்டிப் போட்டிருப்பதை எண்ணி சந்தோஷத்தில் அவள் தலையை வருடிக் கொடுத்தான்.
நிகில் மேலே சென்று ஸ்ருதியை வரவழைத்தது போல் தானும் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்துடன் மதி மாடிக்குச் சென்றான்.
மெல்ல எட்டிப் பார்த்து “சரண் கொஞ்சம் என் பெட்டியை மேலே எடுத்திட்டு வா?” என்று கூப்பிட்டான்.
காயத்ரியுடனும், அகல்யாவுடனும் பேசிக் கொண்டிருந்த சரண்யா அவனது அழைப்பை கேட்டு “இவங்களுக்குச் சரியான நியாபக மறதி” என்றவள் “நாம தான் பெட்டியே கொண்டு வரலியே.உங்களுக்கு மறந்து போச்சா? என்றாள்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த காயத்ரிக்குச் சிரிப்பு வர, அடக்கிக் கொண்டு “அவன் உன்கிட்ட ஏதோ பேசணும்னு கூப்பிடுறான்-மா, போய் என்ன-னு தான் கேட்டுட்டு வாயேன்” என்றார்.
மறுப்பாகத் தலையசைத்தவள் “வீட்டுல தான் அவர் போடுற மொக்கையைக் கேட்க வேண்டியிருக்கு, இங்கேயும் வந்து அதைக் கேட்கணுமா? போங்க ஆன்டி இவரோட செம போர்”.
அவள் சொன்னதைக் கேட்டுச் சிரிப்பை அடக்க முடியாமல் எழுந்த அகல்யா, தன்னறைக்குப் போவது போல் சென்று, சிரிக்க ஆரம்பித்தாள்.
“என்ன அகல்!அபி தூங்கிட்டிருக்கான்னு தெரியுமில்ல!எதுக்கு இப்படிச் சிரிக்கிற?” என்று ஆகாஷ் கடிந்து கொண்டான்.
சிரிப்பை நிறுத்தி விட்டு “இந்த மதியை நினைச்சாலே பாவமா இருக்குங்க”என்று வெளியில் நடந்ததைக் கூறினாள்.
அதைக் கேட்ட ஆகாஷும் சிரித்து விட “வந்த அன்னையிலிருந்து இப்படித்தான் பண்ணுது அந்தப் பொண்ணு. பாவம் தான்.”
“சரி விடுங்க! ஆனா, ஒன்னு நாம இந்த டூர் வந்தது நடந்திடுச்சு போலருக்கு” என்றாள் அகல்யா.
அதைக் கேட்டு சந்தோஷத்துடன் சிரித்தவன் “தேங்க்ஸ் அகல்! தம்பி முகத்துல ஆயிரம் வாட் வெளிச்சம் தெரியுதே.இனி, அவன் வாழ்க்கை நல்லாயிடும்.அந்த மூதேவியைப் பிடிச்சு நல்லா நாக்கை பிடுங்கிற மாதிரி நாலு வார்த்தை கேட்கணும்.”
அவனது சந்தோஷத்தையும்,கோபத்தையும் கண்டவள், அவன் கைகளில் தட்டிக் கொடுத்து “இவங்க நல்லா வாழப் போறதே அவங்களுக்குக் கிடைக்கிற அடிதாங்க.அதுமட்டுமில்ல கடவுள் அவங்களுக்குத் தண்டனை வழங்காம விடாது” என்றாள் ஆதரவாக.
கண்ணுக்கெட்டிய வரை நீர் மட்டுமே தெரிந்த காயலில் மெதுவாகப் பயணித்துக் கொண்டிருந்த படகு வீட்டில், மதிய உணவிற்காக அனைவரும் கூடியிருந்தனர்.
படகு நீண்ட தூர பயணத்திற்குப் பின்னர் ஒரு புறம் வயல்வெளியாக இருந்த இடத்தின் அருகில் சென்று நங்கூரமிட்டு நின்றது. வயலில் ஆட்கள் வேலை செய்து கொண்டிருக்க, படகில் அமர்ந்தபடி நீரின் ஓட்டத்தையும், ,ஆட்கள் வேலை செய்வதையும் வேடிக்கை பார்க்க ரம்யமாக இருந்தது.
படகு வீட்டிலிருந்த சமையல்காரர் கேரள வகை உணவுகளைச் சமைத்து அனைவருக்கும் பரிமாறினார்.
“இது நேந்திரங்காய் தானே? அதைப் போட்டு மோர் குழம்பா?ம்ம்..செமையா இருக்கு” என்றான் நீரஜ்.
“ம்ம்..ஆமாம்” என்றான் ஆகாஷ்.
வேம்பநாட்டுக் காயலில் அந்தப் படகு வீடு லேசாக ஆடியபடி நின்றிருந்தது.இரு தளங்களைக் கொண்ட படகு வீட்டில் ஒவ்வொருவராக ஏறினர்.ஸ்ருதி ஏறும் போது சிரமப்பட, மற்றவர்களைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாது ஒரு கையால் அவள் இடுப்பை வளைத்து தூக்கிக் கொண்டு தானும் ஏறினான்.
காயத்ரி அவனது செயலைக் கண்டு நிறைந்த மனதுடன் நின்றார். ஆர்த்தியும், அகல்யாவும் தங்களது கணவர்களின் புறம் திரும்பி கண்ணைக் காண்பித்துக் கேலியாகச் சிரித்தனர்.அண்ணன்கள் இருவரும் தம்பியின் செயலைக் கண்டு வெட்கப் புன்னகையுடன் திரும்பிக் கொண்டனர்.
ஸ்ருதிகோ அவன் இப்படிச் செய்வான் என்று எதிர்பார்க்காததால் வெட்கத்தில் முகம் சிவந்து, ஒருவரையும் நிமிர்ந்து பார்க்காது ஓரமாகச் சென்று நின்று கொண்டாள்.
அங்கு நடந்தவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த மதி, திரும்பி சரண்யாவை பார்த்தான். அவளோ ஆர்த்தியுடன் வளவளத்துக் கொண்டிருந்தாள்.பெருமூச்சுடன் ‘எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும்! எனக்கு வாச்சது சரியில்லை!இதுல அடுத்தவங்களைக் குறை சொல்லி என்ன பண்றது’என்று மனதிற்குள்ளேயே புலம்பிக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்துக்கு எல்லோரும் படகு வீட்டை சுற்றி வந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
“எவ்வளோ அழகா பண்ணி இருக்காங்க?இதுக்குள்ளேயே படுக்கையறை,வாஷ் ரூம் எல்லாமே வச்சிருக்காங்களே”என்று அதிசயபட்டுக் கொண்டிருந்தார் காயத்ரி.
எல்லா அறைகளையும் பார்த்துவிட்டு வந்த ஆகாஷ் நிகிலிடம் “நீயும், மதியும் மேலே இருக்கிற அறைகளை எடுத்துக்கோங்க.கீழே இருக்கிற மூணு அறையை நாங்க எடுத்துக்கிறோம்”
அவன் சொன்னதைக் கேட்டதும் நிகில் விரைவாக மாடிக்கு சென்று ஒரு அறைக்குள் நுழைந்தான்.சிறிது நேரத்திற்குப் பிறகு “ஸ்ருதி! என் பெட்டியை கொஞ்சம் எடுத்திட்டு வாயேன்” என்றழைத்தான்.
அவள் பெட்டியை எடுத்துக் கொண்டு மேலே செல்ல, ஆர்த்தி நீரஜிடம் திரும்பி “செம வேகம் தான் என் மச்சினர்”என்று கிண்டலாகச் சிரித்தாள்.
அவளைப் பார்த்து முறைத்து “ஏய்! வெளில வேடிக்கை பாரு! சும்மா அவனை வம்பு வளர்த்துக்கிட்டு”என்று அரட்டி விட்டு சென்றாலும், ஆகாஷுடன் சேர்ந்து மெலிதாகச் சிரித்துக் கொண்டே சென்றான்.
மேலே சென்ற ஸ்ருதி அவன் எந்த அறையிலிருக்கிறான் என்று தெரியாமல் ஒரு அறை வாயிலில் தயங்கியபடி நின்றாள்.சடாரென்று கதவு திறக்கப்பட, அவள் கையைப் பிடித்து உள்ளே இழுத்துக் கொண்டு கதவு சாத்தப்பட்டது. என்ன நடந்தது என்று உணரும் முன்பே அவனது பிடியிலிருந்தாள்.
அதிர்ச்சியில் உறைந்து நின்றவள், அவனது பிடியின் இறுக்கத்தை உணர்ந்து அவனிடமிருந்து விலக முயற்சித்து முடியாமல் “விடுங்க! என்ன பண்றீங்க?”.
அவளை மேலும் தன்னுடன் இறுக்கிக் கொண்டவன் “இது கூடத் தெரியலையா மக்கு பொண்டாட்டி”என்றவன் அவள் இதழ்களை நோக்கி குனிந்தான்.
அவனது நெருக்கத்தைக் கண்டு அஞ்சி, பிரியாத உதடுகளைக் கஷ்டப்பட்டுப் பிரித்து “நீங்க ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துகுறீங்க. நான் இன்னும் உங்களை மன்னிக்கவேயில்லை.”
“அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?” என்றவன் அவள் இதழோடு இதழ் பதித்தான்.
அதுநாள் வரை இரு மனங்களிலிருந்த சஞ்சலங்கள் நீங்கி, இருவரும் ஒருமனதாக அந்த நெருக்கத்தை அனுபவித்தனர். நீண்டு நெடு நேரம் தொடர்ந்த இதழ் முத்தம் இருவரின் மூச்சுகாற்றை மட்டுமின்றி, மனதையும் நெருங்க செய்தது.
தன்னவனின் நெஞ்சில் சாய்ந்த ஸ்ருதியின் நெஞ்சம் சொல்ல முடியாத மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது.அவளது நிலையை உணர்ந்து கொண்ட நிகிலும், அதுநாள் வரை அனைத்தையும் கண்டு ஓடி ஒளிந்து கொண்டிருந்தவனை ஸ்ருதியின் அன்பு கட்டிப் போட்டிருப்பதை எண்ணி சந்தோஷத்தில் அவள் தலையை வருடிக் கொடுத்தான்.
நிகில் மேலே சென்று ஸ்ருதியை வரவழைத்தது போல் தானும் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்துடன் மதி மாடிக்குச் சென்றான்.
மெல்ல எட்டிப் பார்த்து “சரண் கொஞ்சம் என் பெட்டியை மேலே எடுத்திட்டு வா?” என்று கூப்பிட்டான்.
காயத்ரியுடனும், அகல்யாவுடனும் பேசிக் கொண்டிருந்த சரண்யா அவனது அழைப்பை கேட்டு “இவங்களுக்குச் சரியான நியாபக மறதி” என்றவள் “நாம தான் பெட்டியே கொண்டு வரலியே.உங்களுக்கு மறந்து போச்சா? என்றாள்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த காயத்ரிக்குச் சிரிப்பு வர, அடக்கிக் கொண்டு “அவன் உன்கிட்ட ஏதோ பேசணும்னு கூப்பிடுறான்-மா, போய் என்ன-னு தான் கேட்டுட்டு வாயேன்” என்றார்.
மறுப்பாகத் தலையசைத்தவள் “வீட்டுல தான் அவர் போடுற மொக்கையைக் கேட்க வேண்டியிருக்கு, இங்கேயும் வந்து அதைக் கேட்கணுமா? போங்க ஆன்டி இவரோட செம போர்”.
அவள் சொன்னதைக் கேட்டுச் சிரிப்பை அடக்க முடியாமல் எழுந்த அகல்யா, தன்னறைக்குப் போவது போல் சென்று, சிரிக்க ஆரம்பித்தாள்.
“என்ன அகல்!அபி தூங்கிட்டிருக்கான்னு தெரியுமில்ல!எதுக்கு இப்படிச் சிரிக்கிற?” என்று ஆகாஷ் கடிந்து கொண்டான்.
சிரிப்பை நிறுத்தி விட்டு “இந்த மதியை நினைச்சாலே பாவமா இருக்குங்க”என்று வெளியில் நடந்ததைக் கூறினாள்.
அதைக் கேட்ட ஆகாஷும் சிரித்து விட “வந்த அன்னையிலிருந்து இப்படித்தான் பண்ணுது அந்தப் பொண்ணு. பாவம் தான்.”
“சரி விடுங்க! ஆனா, ஒன்னு நாம இந்த டூர் வந்தது நடந்திடுச்சு போலருக்கு” என்றாள் அகல்யா.
அதைக் கேட்டு சந்தோஷத்துடன் சிரித்தவன் “தேங்க்ஸ் அகல்! தம்பி முகத்துல ஆயிரம் வாட் வெளிச்சம் தெரியுதே.இனி, அவன் வாழ்க்கை நல்லாயிடும்.அந்த மூதேவியைப் பிடிச்சு நல்லா நாக்கை பிடுங்கிற மாதிரி நாலு வார்த்தை கேட்கணும்.”
அவனது சந்தோஷத்தையும்,கோபத்தையும் கண்டவள், அவன் கைகளில் தட்டிக் கொடுத்து “இவங்க நல்லா வாழப் போறதே அவங்களுக்குக் கிடைக்கிற அடிதாங்க.அதுமட்டுமில்ல கடவுள் அவங்களுக்குத் தண்டனை வழங்காம விடாது” என்றாள் ஆதரவாக.
கண்ணுக்கெட்டிய வரை நீர் மட்டுமே தெரிந்த காயலில் மெதுவாகப் பயணித்துக் கொண்டிருந்த படகு வீட்டில், மதிய உணவிற்காக அனைவரும் கூடியிருந்தனர்.
படகு நீண்ட தூர பயணத்திற்குப் பின்னர் ஒரு புறம் வயல்வெளியாக இருந்த இடத்தின் அருகில் சென்று நங்கூரமிட்டு நின்றது. வயலில் ஆட்கள் வேலை செய்து கொண்டிருக்க, படகில் அமர்ந்தபடி நீரின் ஓட்டத்தையும், ,ஆட்கள் வேலை செய்வதையும் வேடிக்கை பார்க்க ரம்யமாக இருந்தது.
படகு வீட்டிலிருந்த சமையல்காரர் கேரள வகை உணவுகளைச் சமைத்து அனைவருக்கும் பரிமாறினார்.
“இது நேந்திரங்காய் தானே? அதைப் போட்டு மோர் குழம்பா?ம்ம்..செமையா இருக்கு” என்றான் நீரஜ்.
“ம்ம்..ஆமாம்” என்றான் ஆகாஷ்.