அத்தியாயம் – 20
இருள் சூழ்ந்த நீர் பரப்பில் சித்திர காயலின் ஓரம் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது படகு வீடு.மரங்களடர்ந்த ஒரு சிறிய திட்டில், ஓர் சிறிய அறை மட்டுமிருந்தது.அந்த இடத்திற்கு வரும் படகுகளுக்கு மின்சாரத்தை வழங்க அமைக்கப்பட்டிருக்கும் அறை அது.
சுவர்கோழிகளின் ரீங்காரமும், சில்லென்று வீசிய காற்றும் மேனியை வருட, அனைவரும் அந்த இடத்தை ரசித்துக் கொண்டிருந்தனர்.
அதுநாள் வரை அனைவரையும் உறுத்திக் கொண்டிருந்த சங்கடங்கள் அகன்று, மனம் அமைதியடைந்ததால் அந்தச் சூழலை அனுபவித்தனர்.
“எல்லோரும் இப்படிச் சும்மா உட்கார்ந்திருந்தா எப்படி? அந்தாக்ஷரி விளையாடலாமா?” என்றான் ஆகாஷ்.
“சூப்பர்!விளையாடலாம்!நான் ரெடி..நான் ரெடி!”என்று பறந்தாள் சரண்யா.
எல்லோரும் ஆர்வமாகச் சுற்றி உட்கார்ந்து கொள்ள,ஆர்த்தியின் அருகில் உட்கார சென்ற ஸ்ருதியை இழுத்து தன் அருகில் அமர்த்திக் கொண்டான்.மதி சரண்யாவை தன்னருகே அழைக்க, அவளோ காயத்ரியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.
‘இருடி! வீட்டுக்கு வருவே இல்ல.அப்போ பார்த்துக்கிறேன்’என்று கருவி கொண்டான்.
“அப்பா! நீங்க ஏதாவது பாடி ஆரம்பிங்க, நாங்க கண்டினியு பண்ணிக்கிறோம்.”
தொண்டையைச் சரி செய்து கொண்டு பாட ஆரம்பித்தார் சாம்பு.
அதைப் பார்த்த காயத்ரி “பெரிய பாகவதர், பண்ற அலம்பலை பாரேன்”என்று தோளில் இடித்துக் கொண்டார்.
அறியாத வயசு புரியாத மனசு ரெண்டும்
இப்போ காதல் செய்யும் நேரம்...
அவர் பாட ஆரம்பித்ததும் மகன்கள் மூவரும் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொள்ள முயற்சிக்க, காயத்ரியோ கொலைவெறியோடு பார்த்தார்.
“உன் மாமானாருக்கு மூளை குழம்பி போச்சு. மருமகளை வச்சுகிட்டு பாடுற பாட்டைப் பாரு”என்று அகல்யாவிடம் கடுப்படித்தார்.
ஒருமணி நேரத்திற்கு மாற்றி மாற்றிப் பாடிக் கொண்டிருந்தார்கள்.ஸ்ருதி மட்டும் மௌனமாக எல்லோர் பாடுவதையும், ரசித்துக் கொண்டிருந்தாள். அவள் மனது மிகவும் சந்தோஷத்தில் ஆழ்ந்திருந்தது.இப்படி ஒரு வாழ்க்கை கனவில் மட்டுமே என்றிருந்தவளுக்கு, இன்று அந்த வாழ்க்கை தன் கையில் என்று எண்ணி கண்கலங்க அமர்ந்திருந்தாள்.
அவளது உணர்வுகளைப் புரிந்து கொண்ட நிகில், எவரும் அறியாது அவள் கைகளை இறுக பற்றிக் கொண்டான்.
“ஸ்ருதி! நீ ஏதாவது பாடு!நைசா பாடாம எஸ்கேப் ஆகிட்டே இருக்க”என்றாள்.
“இல்லக்கா..நான் பாடல”என்றாள்.
நிகிலோ அவளிடம் “ப்ளீஸ்!எனக்காகப் பாடு ஸ்ருதி.”
அனைவரையும் ஒரு முறை பார்த்தவள்
மனம் விரும்புதே உன்னை...உன்னை
உறங்காமேலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன்முகம் தானடா
என்று பாடியவுடன் “ஆஹா! ஸ்ருதி செம போ” என்று ஆர்த்தி அவளைக் கட்டிக் கொண்டாள்.
“பார்த்து ஆர்த்தி! தம்பி கண்ணுல பொறாமை தாண்டவம் ஆடுது”என்றாள் அகல்யா.
“என்னைக்காவது எங்க அண்ணன்னை பார்த்து பாடி இருக்கீங்களா அண்ணி? என் பொண்டாட்டியை பாருங்க” என்று காலரை தூக்கி விட்டுக் கொண்டான்.
“அண்ணா! நான் பாடுவேன் உங்க பிரெண்டை பார்த்து, பாடவா”என்றாள் சரண்யா.
அவள் சொன்னதைக் கேட்ட மதிக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது, ‘என்ன இவ திடீர்ன்னு சேம் சைட் கோல் போடுறாளே, ஏதோ இருக்கு’என்று எண்ணியபடி அவளைப் பார்த்தான்.
“நீ பாடு சரண்யா”என்றார் காயத்ரி
போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு என்று பாட ஆரம்பித்தாள்.
அதைக் கேட்டதும் காயத்ரி அவள் முதுகில் ரெண்டு அடி போட்டு “என்ன பண்ற நீ?அவனும் என் புள்ள தான்.நீ ஓவரா தான் துள்ளுற” என்று மொத்தினார்.
அதற்குள் தான் இருந்த இடத்திலிருந்து எழுந்த மதி, பாய்ந்து அவளைப் பிடிக்க முயற்சி செய்ய, அவன் எழுந்ததுமே உஷாரான சரண்யா மாடியை நோக்கி ஓடினாள்.அவளை துரத்திக் கொண்டே மதியும் மேலே சென்றான்.
அதைப் பார்த்த அனைவரும் சிரித்தனர்.
தங்கள் அறைக்குள் நுழைந்த சரண்யா கதவோரம் நின்று கொண்டாள். வேகமாக உள்ளே நுழைந்த மதி அவளைத் தேடினான்.சரண்யாவோ மெல்ல சப்தம் வராமல் கதவை தாழிட்டவள், அவன் பின்னே நின்று “வாங்க சார்! ஹனிமூன் ட்ரிப் எப்படியிருக்கு?” என்றாள் நக்கலாக.
வேகமாகச் சென்று அவள் காதை பிடித்தவன் “பாட்டா பாடுற,ரொம்பத் தாண்டி ஆடுற”என்றான் சீறலுடன்.
அவனைக் கண்டு கிண்டலாகச் சிரித்தவள் “ஏமாற்றத்தோட வலி எப்படி இருக்கும்-னு இப்போ தெரியுதா?நான் எத்தனை நாள் வெளில போறதுக்கு உங்களை எதிர்பார்த்து ஏமாந்து போயிருக்கேன். என்னை மறந்திட்டு ஸ்கூலில் படிச்ச பிரெண்டு வந்தான், காலேஜ்ஜில் கூடப் படிச்சவன் வந்தான்னு சொல்லி வராம ஏமாத்தி இருக்கீங்க.என்னடா இது பொண்டாட்டி காத்துகிட்டு இருப்பாளே ஒரு போன் பண்ணி சொல்லுவோம்னு கூட இல்லாம இருந்தீங்க இல்ல, அதுக்குத் தான் இப்படிப் பண்ணினேன்.உண்மையா சொல்லுங்க உங்களுக்கு எப்படி வலிச்சுது?”
அவள் சொன்னதைக் கேட்டதும், தான் இத்தனை நாள் சாதரணமாகச் செய்து வந்த விஷயங்கள் அவளை எவ்வளவு காயப்படுத்தி இருக்கிறது என்பதை உணர்ந்தான்.
அவள் இருகைகளையும் பிடித்துக் கொண்டவன் “சாரி அம்மு! நான் தெரிஞ்சு செய்யல.கல்யாணத்துக்கு முன்னாடி இருந்த மாதிரியே இருந்துட்டேன். நமக்காக ஒருத்தி வீட்டில் காத்துகிட்டு இருப்பான்னு எண்ணமே இல்லாம இருந்திருக்கேன்.இனி, இந்தத் தப்பு நடக்காம பார்த்துக்கிறேன்.என் மேல கருணை காட்டு-டா”
அவனிடமிருந்து கைகளை விடுவித்துக் கொண்டவள், எம்பி அவன் மண்டையில் ஒரு கொட்டு கொட்டி “அதானே,காரியத்திலேயே கண்ணா இருப்பீங்களே”.
“எந்தக் காரியம்...” என்றபடி காதலுடன் பார்த்தவன், அவளது இடுப்பை பற்றித் தன்னருகே இழுத்தவன், மெல்ல அவள் முக வடிவை அளந்தான்.
அதுவரை அதிரடியாகப் பேசிக் கொண்டிருந்தவள் அவனது செயலில் மதி மயங்கி நின்று “என்ன..என்..ன” என்றாள் திணறலாக.
இருள் சூழ்ந்த நீர் பரப்பில் சித்திர காயலின் ஓரம் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது படகு வீடு.மரங்களடர்ந்த ஒரு சிறிய திட்டில், ஓர் சிறிய அறை மட்டுமிருந்தது.அந்த இடத்திற்கு வரும் படகுகளுக்கு மின்சாரத்தை வழங்க அமைக்கப்பட்டிருக்கும் அறை அது.
சுவர்கோழிகளின் ரீங்காரமும், சில்லென்று வீசிய காற்றும் மேனியை வருட, அனைவரும் அந்த இடத்தை ரசித்துக் கொண்டிருந்தனர்.
அதுநாள் வரை அனைவரையும் உறுத்திக் கொண்டிருந்த சங்கடங்கள் அகன்று, மனம் அமைதியடைந்ததால் அந்தச் சூழலை அனுபவித்தனர்.
“எல்லோரும் இப்படிச் சும்மா உட்கார்ந்திருந்தா எப்படி? அந்தாக்ஷரி விளையாடலாமா?” என்றான் ஆகாஷ்.
“சூப்பர்!விளையாடலாம்!நான் ரெடி..நான் ரெடி!”என்று பறந்தாள் சரண்யா.
எல்லோரும் ஆர்வமாகச் சுற்றி உட்கார்ந்து கொள்ள,ஆர்த்தியின் அருகில் உட்கார சென்ற ஸ்ருதியை இழுத்து தன் அருகில் அமர்த்திக் கொண்டான்.மதி சரண்யாவை தன்னருகே அழைக்க, அவளோ காயத்ரியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.
‘இருடி! வீட்டுக்கு வருவே இல்ல.அப்போ பார்த்துக்கிறேன்’என்று கருவி கொண்டான்.
“அப்பா! நீங்க ஏதாவது பாடி ஆரம்பிங்க, நாங்க கண்டினியு பண்ணிக்கிறோம்.”
தொண்டையைச் சரி செய்து கொண்டு பாட ஆரம்பித்தார் சாம்பு.
அதைப் பார்த்த காயத்ரி “பெரிய பாகவதர், பண்ற அலம்பலை பாரேன்”என்று தோளில் இடித்துக் கொண்டார்.
அறியாத வயசு புரியாத மனசு ரெண்டும்
இப்போ காதல் செய்யும் நேரம்...
அவர் பாட ஆரம்பித்ததும் மகன்கள் மூவரும் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொள்ள முயற்சிக்க, காயத்ரியோ கொலைவெறியோடு பார்த்தார்.
“உன் மாமானாருக்கு மூளை குழம்பி போச்சு. மருமகளை வச்சுகிட்டு பாடுற பாட்டைப் பாரு”என்று அகல்யாவிடம் கடுப்படித்தார்.
ஒருமணி நேரத்திற்கு மாற்றி மாற்றிப் பாடிக் கொண்டிருந்தார்கள்.ஸ்ருதி மட்டும் மௌனமாக எல்லோர் பாடுவதையும், ரசித்துக் கொண்டிருந்தாள். அவள் மனது மிகவும் சந்தோஷத்தில் ஆழ்ந்திருந்தது.இப்படி ஒரு வாழ்க்கை கனவில் மட்டுமே என்றிருந்தவளுக்கு, இன்று அந்த வாழ்க்கை தன் கையில் என்று எண்ணி கண்கலங்க அமர்ந்திருந்தாள்.
அவளது உணர்வுகளைப் புரிந்து கொண்ட நிகில், எவரும் அறியாது அவள் கைகளை இறுக பற்றிக் கொண்டான்.
“ஸ்ருதி! நீ ஏதாவது பாடு!நைசா பாடாம எஸ்கேப் ஆகிட்டே இருக்க”என்றாள்.
“இல்லக்கா..நான் பாடல”என்றாள்.
நிகிலோ அவளிடம் “ப்ளீஸ்!எனக்காகப் பாடு ஸ்ருதி.”
அனைவரையும் ஒரு முறை பார்த்தவள்
மனம் விரும்புதே உன்னை...உன்னை
உறங்காமேலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன்முகம் தானடா
என்று பாடியவுடன் “ஆஹா! ஸ்ருதி செம போ” என்று ஆர்த்தி அவளைக் கட்டிக் கொண்டாள்.
“பார்த்து ஆர்த்தி! தம்பி கண்ணுல பொறாமை தாண்டவம் ஆடுது”என்றாள் அகல்யா.
“என்னைக்காவது எங்க அண்ணன்னை பார்த்து பாடி இருக்கீங்களா அண்ணி? என் பொண்டாட்டியை பாருங்க” என்று காலரை தூக்கி விட்டுக் கொண்டான்.
“அண்ணா! நான் பாடுவேன் உங்க பிரெண்டை பார்த்து, பாடவா”என்றாள் சரண்யா.
அவள் சொன்னதைக் கேட்ட மதிக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது, ‘என்ன இவ திடீர்ன்னு சேம் சைட் கோல் போடுறாளே, ஏதோ இருக்கு’என்று எண்ணியபடி அவளைப் பார்த்தான்.
“நீ பாடு சரண்யா”என்றார் காயத்ரி
போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு என்று பாட ஆரம்பித்தாள்.
அதைக் கேட்டதும் காயத்ரி அவள் முதுகில் ரெண்டு அடி போட்டு “என்ன பண்ற நீ?அவனும் என் புள்ள தான்.நீ ஓவரா தான் துள்ளுற” என்று மொத்தினார்.
அதற்குள் தான் இருந்த இடத்திலிருந்து எழுந்த மதி, பாய்ந்து அவளைப் பிடிக்க முயற்சி செய்ய, அவன் எழுந்ததுமே உஷாரான சரண்யா மாடியை நோக்கி ஓடினாள்.அவளை துரத்திக் கொண்டே மதியும் மேலே சென்றான்.
அதைப் பார்த்த அனைவரும் சிரித்தனர்.
தங்கள் அறைக்குள் நுழைந்த சரண்யா கதவோரம் நின்று கொண்டாள். வேகமாக உள்ளே நுழைந்த மதி அவளைத் தேடினான்.சரண்யாவோ மெல்ல சப்தம் வராமல் கதவை தாழிட்டவள், அவன் பின்னே நின்று “வாங்க சார்! ஹனிமூன் ட்ரிப் எப்படியிருக்கு?” என்றாள் நக்கலாக.
வேகமாகச் சென்று அவள் காதை பிடித்தவன் “பாட்டா பாடுற,ரொம்பத் தாண்டி ஆடுற”என்றான் சீறலுடன்.
அவனைக் கண்டு கிண்டலாகச் சிரித்தவள் “ஏமாற்றத்தோட வலி எப்படி இருக்கும்-னு இப்போ தெரியுதா?நான் எத்தனை நாள் வெளில போறதுக்கு உங்களை எதிர்பார்த்து ஏமாந்து போயிருக்கேன். என்னை மறந்திட்டு ஸ்கூலில் படிச்ச பிரெண்டு வந்தான், காலேஜ்ஜில் கூடப் படிச்சவன் வந்தான்னு சொல்லி வராம ஏமாத்தி இருக்கீங்க.என்னடா இது பொண்டாட்டி காத்துகிட்டு இருப்பாளே ஒரு போன் பண்ணி சொல்லுவோம்னு கூட இல்லாம இருந்தீங்க இல்ல, அதுக்குத் தான் இப்படிப் பண்ணினேன்.உண்மையா சொல்லுங்க உங்களுக்கு எப்படி வலிச்சுது?”
அவள் சொன்னதைக் கேட்டதும், தான் இத்தனை நாள் சாதரணமாகச் செய்து வந்த விஷயங்கள் அவளை எவ்வளவு காயப்படுத்தி இருக்கிறது என்பதை உணர்ந்தான்.
அவள் இருகைகளையும் பிடித்துக் கொண்டவன் “சாரி அம்மு! நான் தெரிஞ்சு செய்யல.கல்யாணத்துக்கு முன்னாடி இருந்த மாதிரியே இருந்துட்டேன். நமக்காக ஒருத்தி வீட்டில் காத்துகிட்டு இருப்பான்னு எண்ணமே இல்லாம இருந்திருக்கேன்.இனி, இந்தத் தப்பு நடக்காம பார்த்துக்கிறேன்.என் மேல கருணை காட்டு-டா”
அவனிடமிருந்து கைகளை விடுவித்துக் கொண்டவள், எம்பி அவன் மண்டையில் ஒரு கொட்டு கொட்டி “அதானே,காரியத்திலேயே கண்ணா இருப்பீங்களே”.
“எந்தக் காரியம்...” என்றபடி காதலுடன் பார்த்தவன், அவளது இடுப்பை பற்றித் தன்னருகே இழுத்தவன், மெல்ல அவள் முக வடிவை அளந்தான்.
அதுவரை அதிரடியாகப் பேசிக் கொண்டிருந்தவள் அவனது செயலில் மதி மயங்கி நின்று “என்ன..என்..ன” என்றாள் திணறலாக.