அத்தியாயம் – 29
சமூக ஊடகங்கள் முழுவதிற்கும் தீனி கொடுத்தது நானாஜியின் குடும்பம். தந்தை ,மகன், மகள் என்று அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிற்க வைத்திருந்தான் சிவதாஸ். அவர்களால் தொழிலை இழந்தவர்கள் அனைவரும் முன் வந்து நடந்தவைகளை பற்றிய வாக்குமூலம் கொடுக்க, அவர்களின் தவறுகள் வெளியுலகிற்கு தெரிந்தது. தவறுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்க, இனி அவர்கள் வெளியில் வருவது கஷ்டம் என்பது புரிந்து போனது. அதோடு சட்டத்திற்கு புறம்பான காரியங்களிலும் ஈடுபட்டிருக்க, அவர்களின் சொத்தும் முடக்கப்பட்டது.
இவை எல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க சித்தார்த் தங்களது சட்டக் குழுவினரின் உதவியுடன் பிம்லாவை தொழிலில் இருந்து நீக்கி விட்டு தானே அனைத்து தொழில்களுக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டான். நீரஜ் தான் அனைத்தையும் ஏற்பாடு செய்தார். அதே நேரம் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய வர்ஷினியை காயத்ரியுடன் தங்க வைக்கபட்டாள்.
தாதி தான் நல்ல நாள் பார்த்து காயத்ரியையும் சேர்த்து மாளிக்கைக்கு அழைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டார். அதற்கான ஏற்பாடுகளை மும்மரமாக கவனிக்க ஆரம்பித்தார். தங்களின் அனைத்து சொந்தங்களுக்கும் அழைப்பு விடுத்தார். காயத்ரியை முறையாக அனைவருக்கும் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதே அவரின் ஆசை. அவருக்கு நடந்த தவறுக்கு ஞாயம் செய்து விட வேண்டும் என்று எண்ணினார்.
அதனால் ஏற்பாடுகள் தடபுடலாக நடக்க தொடங்கியது. அன்று மருத்துவமனையில் பார்த்த பின் சித்தார்த் வேலைகளில் பிசியாகி போக வர்ஷூவை சென்று பார்க்க நேரமில்லாமல் போனது. ஆனால் தினமும் அவளிடம் போனில் பேசி நடப்பவற்றை அனைத்தையும் தெரிவிப்பான். இருவரும் அடுத்தவரின் அருகாமையை அதிகம் தேடினர்.
தான்யா காயத்ரியிடம் நன்றாக ஒட்டிக் கொண்டாள். அவர் மிக அமைதியானவராக இருந்தார். அவரின் இதழில் எந்நேரமும் மெல்லிய புன்னகை இழையோடிக் கொண்டிருந்தது. அதை பார்க்கும் போதேல்ல்லாம் மாமா ஏன் மயங்கினார் என்று தெரிகிறது என்று நினைத்துக் கொள்வாள். பெண்கள் இருவரையும் தன் உள்ளங்கையில் வைத்து தாங்கினார்.
தாதி அவ்வப்போது போனில் பேசி மாளிகைக்கு வருவதற்கு முன் அவர்களுக்கு தேவையானதை எல்லாம் செய்து கொள்ள சொன்னார். நீரஜ் அதற்காக ஓரிரு முறை அங்கு வந்து சென்றார். வர்ஷினியிடம் தன்னால் அவளுக்கு உதவ முடியாததற்கு மன்னிப்பு கேட்டார் நீரஜ். தான்யாவை இருவரும் தங்கள் மகள் போல பார்த்துக் கொண்டனர். அதில் வர்ஷினிக்கு அத்தனை சந்தோஷம்.
மாளிகைக்கு செல்லும் நாளும் வந்தது. நீரஜும், சித்தார்த்தும் வந்து அவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்றனர். அவர்களின் உறவுக்காரர்கள அனைவரும் வந்திருக்க, தாதி நீரஜையும், காயத்ரியையும் நிற்க வைத்து ஆரத்தி எடுத்து மாளிகையினுள் அழைத்தார். அதே போல சித்தார்த், வர்ஷிநியையும் அழைத்துச் சென்றார்கள். அனைவருக்கும் தனது மருமகளையும், அவர்களின் மருமகளையும் அறிமுகப்படுத்தி வைத்தார் தாதி.
மிகப் பெரிய அளவில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொழில் முறை உறவுகளும் அழைக்கப்பட்டிருந்தனர். தொழில் துறையை சேர்ந்தவர்கள் அனைவரும் சித்தார்த்திற்கும், நீரஜிற்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இனி சுதந்திரமாக தங்களால் தொழில் செய்ய முடியும் என்பதில் அத்தனை மகிழ்ச்சி. சிவதாசும் அந்த விருந்திற்கு அழைக்கப்பட்டிருந்தான்.
கேஷ்வியும் அவளது பெற்றோர்களும் கூட அழைக்கப்பட்டிருந்தார்கள். அவளைப் பொறுத்தவரை சூழ்நிலை தான் தவறாக செயலபட வைத்தது.அதிலிருந்து வெளி வந்து வர்ஷினிக்கு உதவியதால் சித்தார்த்தின் குடும்பம் அவளை மன்னித்தார்கள்.
வர்ஷினி அழகிய வேலைபாடுகள் செய்யப்பட்ட லேஹங்கா உடை அணிந்திருக்க, அவளது முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியின் சாயல் அவளை மேலும் அழகியாக காட்டியது. அதுநாள் வரை வேலைப்பளுவிலும் டென்ஷனிலும் சுற்றித் திரிந்து கொண்டிருந்த சித்தார்த்தின் பார்வை அவளையே சுற்றி சுற்றி வந்தது. எங்கு திரும்பினாலும் அவளிடமே வந்து நின்றது.
வர்ஷினியும் அவனது பார்வையை உணர்ந்தே இருந்தாள். அவளது அலங்காரமும், நளினமும் அவனை பித்தாக்கியது. அவனிடம் ஏதோ பேச வந்த சிவதாஸ் அவனது பார்வையை கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு “சித்தார்த்! நீங்க பிசியா இருக்கீங்க போல. நான் அப்புறம் வரவா?” என்று கேட்டு வர்ஷ்ணியை நோக்கி கையை காட்டினான்.
அதில் சித்தார்த்தின் முகம் லேசாக சிவந்து போக அதை கண்டு முதன்முறையாக சத்தமாக சிரித்தான் சிவதாஸ்.
“இண்டரெஸ்ட்டிங்” என்றான் குறுகுறு பார்வையுடன்.
“தாஸ்” என்றான் தயக்கத்துடன்.
“என்ன மேன்? ஒரு ஆணை வெட்கப்பட வைக்க கூடியதா காதல்? ம்ம்...எனக்கு சம்மதம் இல்லாத சப்ஜெக்ட்” என்று தலையை தட்டிக் கொண்டான்.
“உங்களுக்கும் ஒரு நாள் காதல் வரும் தாஸ்”.
“நெவர்! என் வாழ்க்கையில் அதற்க்கெல்லாம் சாத்தியமில்லை”
“என்ன பேசணும் தாஸ்?” என்று அவனை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்கு சென்றான்.
“உங்க நானாஜி குடும்பம் வெளியே வராத அளவிற்கு செய்ய வேண்டிய எல்லாம் செய்தாச்சு. நாம செய்ததை விட அவர்கள் செய்திருப்பதே அவர்களை வெளியே வர விடாது. அதோடு எனக்கு தமிழ்நாட்டிற்கு ட்ரான்ஸ்பார் கிடைச்சிருக்கு. ஒன் வீக்கில் கிளம்பனும்”.
“ஒ...நீங்க கிளம்புறீங்களா? இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல தாஸ். நீங்க செய்திருப்பது பெரிய உதவி” என்று கைகளைப் பற்றிக் கொண்டான்.
லேசாக தோள்களை குலுக்கியவன் “நான் எதுவும் செய்யல சித்தார்த். நீங்க உண்மையா இருந்தீங்க. அது தான் உங்களை காப்பாற்றி இருக்கு. உங்க நானாஜி மாதிரி இல்லாமல் தொழிலை நன்றாக நடத்தி மேல வாங்க. நான் கிளம்புறேன்” என்றான்.
சமூக ஊடகங்கள் முழுவதிற்கும் தீனி கொடுத்தது நானாஜியின் குடும்பம். தந்தை ,மகன், மகள் என்று அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிற்க வைத்திருந்தான் சிவதாஸ். அவர்களால் தொழிலை இழந்தவர்கள் அனைவரும் முன் வந்து நடந்தவைகளை பற்றிய வாக்குமூலம் கொடுக்க, அவர்களின் தவறுகள் வெளியுலகிற்கு தெரிந்தது. தவறுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்க, இனி அவர்கள் வெளியில் வருவது கஷ்டம் என்பது புரிந்து போனது. அதோடு சட்டத்திற்கு புறம்பான காரியங்களிலும் ஈடுபட்டிருக்க, அவர்களின் சொத்தும் முடக்கப்பட்டது.
இவை எல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க சித்தார்த் தங்களது சட்டக் குழுவினரின் உதவியுடன் பிம்லாவை தொழிலில் இருந்து நீக்கி விட்டு தானே அனைத்து தொழில்களுக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டான். நீரஜ் தான் அனைத்தையும் ஏற்பாடு செய்தார். அதே நேரம் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய வர்ஷினியை காயத்ரியுடன் தங்க வைக்கபட்டாள்.
தாதி தான் நல்ல நாள் பார்த்து காயத்ரியையும் சேர்த்து மாளிக்கைக்கு அழைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டார். அதற்கான ஏற்பாடுகளை மும்மரமாக கவனிக்க ஆரம்பித்தார். தங்களின் அனைத்து சொந்தங்களுக்கும் அழைப்பு விடுத்தார். காயத்ரியை முறையாக அனைவருக்கும் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதே அவரின் ஆசை. அவருக்கு நடந்த தவறுக்கு ஞாயம் செய்து விட வேண்டும் என்று எண்ணினார்.
அதனால் ஏற்பாடுகள் தடபுடலாக நடக்க தொடங்கியது. அன்று மருத்துவமனையில் பார்த்த பின் சித்தார்த் வேலைகளில் பிசியாகி போக வர்ஷூவை சென்று பார்க்க நேரமில்லாமல் போனது. ஆனால் தினமும் அவளிடம் போனில் பேசி நடப்பவற்றை அனைத்தையும் தெரிவிப்பான். இருவரும் அடுத்தவரின் அருகாமையை அதிகம் தேடினர்.
தான்யா காயத்ரியிடம் நன்றாக ஒட்டிக் கொண்டாள். அவர் மிக அமைதியானவராக இருந்தார். அவரின் இதழில் எந்நேரமும் மெல்லிய புன்னகை இழையோடிக் கொண்டிருந்தது. அதை பார்க்கும் போதேல்ல்லாம் மாமா ஏன் மயங்கினார் என்று தெரிகிறது என்று நினைத்துக் கொள்வாள். பெண்கள் இருவரையும் தன் உள்ளங்கையில் வைத்து தாங்கினார்.
தாதி அவ்வப்போது போனில் பேசி மாளிகைக்கு வருவதற்கு முன் அவர்களுக்கு தேவையானதை எல்லாம் செய்து கொள்ள சொன்னார். நீரஜ் அதற்காக ஓரிரு முறை அங்கு வந்து சென்றார். வர்ஷினியிடம் தன்னால் அவளுக்கு உதவ முடியாததற்கு மன்னிப்பு கேட்டார் நீரஜ். தான்யாவை இருவரும் தங்கள் மகள் போல பார்த்துக் கொண்டனர். அதில் வர்ஷினிக்கு அத்தனை சந்தோஷம்.
மாளிகைக்கு செல்லும் நாளும் வந்தது. நீரஜும், சித்தார்த்தும் வந்து அவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்றனர். அவர்களின் உறவுக்காரர்கள அனைவரும் வந்திருக்க, தாதி நீரஜையும், காயத்ரியையும் நிற்க வைத்து ஆரத்தி எடுத்து மாளிகையினுள் அழைத்தார். அதே போல சித்தார்த், வர்ஷிநியையும் அழைத்துச் சென்றார்கள். அனைவருக்கும் தனது மருமகளையும், அவர்களின் மருமகளையும் அறிமுகப்படுத்தி வைத்தார் தாதி.
மிகப் பெரிய அளவில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொழில் முறை உறவுகளும் அழைக்கப்பட்டிருந்தனர். தொழில் துறையை சேர்ந்தவர்கள் அனைவரும் சித்தார்த்திற்கும், நீரஜிற்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இனி சுதந்திரமாக தங்களால் தொழில் செய்ய முடியும் என்பதில் அத்தனை மகிழ்ச்சி. சிவதாசும் அந்த விருந்திற்கு அழைக்கப்பட்டிருந்தான்.
கேஷ்வியும் அவளது பெற்றோர்களும் கூட அழைக்கப்பட்டிருந்தார்கள். அவளைப் பொறுத்தவரை சூழ்நிலை தான் தவறாக செயலபட வைத்தது.அதிலிருந்து வெளி வந்து வர்ஷினிக்கு உதவியதால் சித்தார்த்தின் குடும்பம் அவளை மன்னித்தார்கள்.
வர்ஷினி அழகிய வேலைபாடுகள் செய்யப்பட்ட லேஹங்கா உடை அணிந்திருக்க, அவளது முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியின் சாயல் அவளை மேலும் அழகியாக காட்டியது. அதுநாள் வரை வேலைப்பளுவிலும் டென்ஷனிலும் சுற்றித் திரிந்து கொண்டிருந்த சித்தார்த்தின் பார்வை அவளையே சுற்றி சுற்றி வந்தது. எங்கு திரும்பினாலும் அவளிடமே வந்து நின்றது.
வர்ஷினியும் அவனது பார்வையை உணர்ந்தே இருந்தாள். அவளது அலங்காரமும், நளினமும் அவனை பித்தாக்கியது. அவனிடம் ஏதோ பேச வந்த சிவதாஸ் அவனது பார்வையை கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு “சித்தார்த்! நீங்க பிசியா இருக்கீங்க போல. நான் அப்புறம் வரவா?” என்று கேட்டு வர்ஷ்ணியை நோக்கி கையை காட்டினான்.
அதில் சித்தார்த்தின் முகம் லேசாக சிவந்து போக அதை கண்டு முதன்முறையாக சத்தமாக சிரித்தான் சிவதாஸ்.
“இண்டரெஸ்ட்டிங்” என்றான் குறுகுறு பார்வையுடன்.
“தாஸ்” என்றான் தயக்கத்துடன்.
“என்ன மேன்? ஒரு ஆணை வெட்கப்பட வைக்க கூடியதா காதல்? ம்ம்...எனக்கு சம்மதம் இல்லாத சப்ஜெக்ட்” என்று தலையை தட்டிக் கொண்டான்.
“உங்களுக்கும் ஒரு நாள் காதல் வரும் தாஸ்”.
“நெவர்! என் வாழ்க்கையில் அதற்க்கெல்லாம் சாத்தியமில்லை”
“என்ன பேசணும் தாஸ்?” என்று அவனை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்கு சென்றான்.
“உங்க நானாஜி குடும்பம் வெளியே வராத அளவிற்கு செய்ய வேண்டிய எல்லாம் செய்தாச்சு. நாம செய்ததை விட அவர்கள் செய்திருப்பதே அவர்களை வெளியே வர விடாது. அதோடு எனக்கு தமிழ்நாட்டிற்கு ட்ரான்ஸ்பார் கிடைச்சிருக்கு. ஒன் வீக்கில் கிளம்பனும்”.
“ஒ...நீங்க கிளம்புறீங்களா? இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல தாஸ். நீங்க செய்திருப்பது பெரிய உதவி” என்று கைகளைப் பற்றிக் கொண்டான்.
லேசாக தோள்களை குலுக்கியவன் “நான் எதுவும் செய்யல சித்தார்த். நீங்க உண்மையா இருந்தீங்க. அது தான் உங்களை காப்பாற்றி இருக்கு. உங்க நானாஜி மாதிரி இல்லாமல் தொழிலை நன்றாக நடத்தி மேல வாங்க. நான் கிளம்புறேன்” என்றான்.