10
வசமிழந்து போகிறேன்
உன் நினைவுகளைக்
கடந்து செல்ல
முயலும் நேரங்களில்...
தன் வேலையில் மூழ்கியிருந்த நந்தாவின் மொபைல், அவனை அழைத்தது.
புன்னகையுடன், “அம்மா! சாரி சாரி..., வேலையை முடிசிட்டு நானே போன் பண்ணலாம்னு இருந்தேன்.”
“அதுக்குள்ள நான் முந்திட்டேன்” என்று சிரித்தார் நந்தாவின் அன்னை.
“அப்புறம், எப்படியிருக்கீங்க?”
“திவ்யமா இருக்கேன். நீ கல்யாணம் செய்துக்கறேன்னு சொல்லு, இன்னும் சந்தோஷமா இருப்பேன்” என்று சொல்ல எதிர்முனையில் நிசப்தமாக இருக்க, “டேய்! லைனில் இருக்கியா இல்லையா?” எரிச்சலுடன் கேட்டார்.
“ஆ... ஹலோ..., என்னம்மா சொல்றீங்க? காதில் எதுவுமே விழமாட்டேன்னுதே... காது திடீர்னு அடைத்த மாதிரி இருந்ததும்மா” என்றான்.
“அடைக்குமே...! காது மட்டுமா அடைக்கும்? பேச்சு வராது, லைன் கட்டாகிடும்...” என்று சொல்லிக்கொண்டிருக்க மறுமுனையிலிருந்தவனுக்குச் சிரிப்பு வந்தது.
“சிரிச்சி என் எரிச்சலை அதிகமாக்காதே. ரிசாட் வேலை முடிந்ததும் கல்யாணம் செய்துக்கறேன்னு, எனக்கு வாக்குக் கொடுத்திருக்க. நான் மறக்கல...” என்றார் கண்டிப்பான குரலில்.
பெருமூச்சொன்றை வெளியேற்றியவன், “இதைத் தவிர பேச எதுவும் இல்லையா?” என்று சலித்துக்கொண்டான்.
“ஏன் இல்ல? நிறைய இருக்கு. ஆனா, இப்போதைக்கு இதுதான் எல்லாத்தையும் விட ரொம்ப முக்கியம்.”
“ஆனா, எனக்கு இதைவிட முக்கியமான வேலைகள் நிறைய இருக்கு” என்றான்.
“நீ சொன்னதை நம்பி, நான் இங்கே பொண்ணு பார்க்க வரேன்னு சொல்லிட்டேன்.”
“அதுக்கு, நான் பொறுப்பாக முடியாதும்மா! என்னிடம் முதலிலேயே சொல்லியிருக்கணும். இப்போ, எனக்குப் பொண்ணு பார்க்கும் வேலையைவிட, இன்னொரு முக்கியமான வேலை வந்திருக்கு. ரகசியமும் கூட” என்று மெதுவாக கிசுகிசுத்தவன், “உங்களுக்கு மட்டும் அந்த ரகசியத்தைச் சொல்லவா?” என்று பீடிகை போட்டான்.
‘கல்யாணப் பேச்சை மாற்ற என்ன வேண்டுமானாலும் சொல்வான்’ என்று நினைத்துக் கொண்டு, “என்ன ரகசியம்...?” என்று அசிரத்தையாக கேட்டார்.
“எவ்வளவு முக்கியமான விஷயம் சொல்லப் போறேன். நீங்க என்னடான்னா இத்தனை அசால்ட்டாக கேட்கறீங்க? சொல்லமாட்டேன் போங்க” என்றான் விளையாட்டாக.
“சொல்லலைனா போயேன். நான் போனை வைக்கிறேன்..” என்றார் கடுப்புடன்.
“கல்யாண விஷயம் பத்திச் சொன்னா கூடவா..” என்று வேகமாகச் சொல்ல,
“கல்யாணமா! யாருக்கு...? உனக்கா...?”அவனது வேகத்துக்கு ஈடுகொடுத்து அதே வேகத்தில் கேட்டவர், கடைசி வார்த்தையை மட்டும் கிண்டலாகக் கேட்டார்.
“கல்யாண விஷயம்தான். ஆனால், எனக்கு இல்ல விஷாலுக்கு...”
“விஷாலுக்கா?”
“அதுவும் சாருக்குக் காதல்ன்னு சொன்னால்?” என்றவன் மறுமுனையில் சப்தம் இல்லாமல் போக, “என்னம்மா? சத்தமே இல்ல. இப்போ, உங்களுக்குக் காது அடைச்சிடுச்சா?” என்று சிரித்தான்.
“உன் பையன் இப்படிச் செய்தான்னு, யாராவது சொன்னாக் கூட நான் நம்புவேன். ஆனா, விஷால் இப்படிச் செய்தான்னு சொன்னா, நிச்சயமா நம்பமாட்டேன்” என்றார்.
“பெத்த பிள்ளை மேலே, எங்க அம்மாவுக்கு எவ்வளவு நம்பிக்கை?” என்று ஏக்கப் பெருமூச்சுவிட்டவன், “அப்போ, நான் சொல்றதுல உங்களுக்கு நம்பிக்கை இல்ல. அப்படித்தானே.”
“முதல்ல, இந்த மாதிரி உனக்கு யாரு இப்படி ஒரு கதையைச் சொன்னது?”
“என் ரெண்டு கண்ணாலும் பார்த்தேன்...”
”உனக்கு நிச்சயமா தெரியுமா?” இப்போது அவர் குரலில் சற்று ஆர்வம் கூட கேட்டார்.
“ம்ம்… ஒரு டவுட்தான்.”
“அப்படிச் சொல்லு...” நான் சொன்னது தான் சரி என்பது போல அவரின் தோரணை வெளிப்பட்டது.
“ஆனால், கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சிடுவேன்”
“வெங்காயத்தை உரிக்க உரிக்க, ஒண்ணுமிருக்காது.”
“நீங்க என்னை நம்பவே வேண்டாம். போகப் போகத் தெரியும்… அது வெங்காயமா! இல்ல விவகாரமான்னு...” என்று சொல்லிவிட்டுச் சிரித்தான்.
“ஹும். அதெல்லாம் போகட்டும். நீ ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வர்றதானே!”
“வீட்டுக்கு வரேன். ஆனா, பொண்ணு பார்க்கவெல்லாம் என்னால் வரமுடியாது சாரி. முக்கியமான ஒருத்தருக்குப் போன் பேசணும். நாளைக்கு உங்களுக்குப் போன் செய்றேம்மா!” என்று மொபைலை அணைத்தவன், லாயர் பரசுராமனின் வீட்டு எண்ணிற்குத் தொடர்பு கொண்டான்.
மாலையிலிருந்து அழுகை, சினம், அவமானம் என்று அனைத்தையும் ஒருவருக்கும் தெரியாமல், வைராக்கியத்துடன் அடக்கி வைத்துக் கொண்டிருந்தவளது மனமும், அடுப்பிலிருந்த பாலைப் போலக் கொதித்துக் கொண்டிருந்தது.
இத்தனை ஆண்டுகளில் நடந்துமுடிந்த நிகழ்விலிருந்து, தான் வெளிவந்துவிட்டோம் என்று நினைத்து தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டிருந்த நிகழ்வுகள், அவளது கண் முன்னே வந்து நின்று கைகொட்டிச் சிரிப்பது போலிருந்தது.
சலனமில்லாமல் இருந்த தனது வாழ்வில் சலனத்தையும், சந்தோஷத்தையும், பிரியத்தையும், காதலையும், எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற் போன்று மறையாத வடுவையும் உண்டாக்கிய அந்த நாளை நினைக்க நினைக்க, பெருங்குரலெடுத்து அழவேண்டும் போலிருந்தது. ஆனால், அவளது கண்களிலிருந்து ஒரு துளிக் கண்ணீர் கூட வெளிவர மறுத்தது.
உஸ்ஸென்ற சப்தத்துடன் பால் பொங்கிவர அடுப்பை அணைத்தவள், பனக்கற்கண்டைத் தட்டிப்போட்டு, கண்ணாடி டம்ளரில் ஊற்றி எடுத்துக்கொண்டு மாடிப் படியை நெருங்கினாள்.
அதேநேரம் தொலைபேசி ஒலிக்கும் சப்தம் கேட்டு வேகமாகத் திரும்பி வந்து ரிசீவரைக் காதுக்குக் கொடுத்து, “ஹலோ” என்றாள்.
எதிர்முனையில் இருந்தவன், அவளது குரலைக் கேட்டதும் திகைத்துப் போனான்.
‘இப்படி ஒரு குரலா! பலநாள் கேட்டுப் பழகியது போலப் பிரமை. பெரிய பூந்தோட்டத்தின் நடுவில் பரவியிருந்த பூக்களின் நறுமணத்தை முகர்ந்தது போல, ஒரு மோன நிலையில் இருந்தான்.
மறுபக்கம்... ஒரு கையில் பால் டம்ளரும், மற்றொரு கையில் போனுமாக நின்றிருந்த பூர்ணிமாவிற்கு எரிச்சலாக இருந்தது.
‘போன் பண்ணிட்டு யாராவது பேசாமல் இருப்பாங்களா?’ என்று எண்ணிக்கொண்டே நான்காவது முறையாக, “ஹலோ!” என்று உரக்கச் சொன்னாள்.
தன் உணர்வுக்கு வந்தவன், “சாரி! லைனில் ஏதோ ப்ராப்ளம்” என்று சமாளித்துவிட்டு, “லாயர் பரசுராமன் சார் வீடு தானே...” என்று கேட்டான்.
“ஆ..மாம்...” என்றவளுக்கு வார்த்தைகள் தொண்டையில் சிக்குவது போலிருந்தது.
“ஆனால், அப்பா ஒன்பதரை மணிக்கெல்லாம் தூங்கிடுவாங்களே மணி இப்போ பத்தாகுது.”
“சாரி! நான் கொஞ்சம் முன்னாலேயே போன் செய்திருக்கணும். இல்லைனா, காலையில் பேசியிருக்கணும்...” என்றான் சமாளிப்பாக.
“பரவாயில்லை சார்! உங்க பேர் சொன்னீங்கன்னா, அப்பாவிடம் காலையில் சொல்ல வசதியாக இருக்கும்” என்றாள்.
“ஒன்ஸ் அகைன் சாரி! நான் லஷ்மி குரூப் ஆஃப் கம்பெனீஸ் எம்.டி...” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, “நந்தா!” என்றழைத்தபடி விஷால் உள்ளே வரவும் சரியாக இருந்தது.
மறுமுனையில் இருந்தவளது இதயம் படக்படக்கென அடித்துக் கொண்டது. யார் பேசுவது என்று தெளிவானது. பெயரை அழைத்தபடி வந்தவனையும், தன்னிடம் பேசிக்கொண்டிருந்தவனும் யாரென புரிந்து போக, ரிசீவரை அதனிடத்தில் வைத்தாள்.
‘இவன் எதற்காக இப்போது போன் செய்தான்? விஷால் ஏதேனும் சொல்லியிருப்பானோ?’ என எண்ணியவளுக்கு, அதற்குமேல் எதையும் யோசிக்க முடியவில்லை. தலைச் சுற்றுவது போலிருந்தது.
தன்னை அழைத்தபடி அறைக்குள் வந்த விஷாலுக்கு, இரு என்பது போலச் சைகை காட்டியவன் போன் துண்டிக்கப்பட்டிருப்பது புரிய, ‘மீண்டும் போன் செய்யலாமா!’ என்று நினைத்து அதே வேகத்தில் அந்த யோசனையைக் கைவிட்டான்.
“முக்கியமான போனா? டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” வருத்தத்துடன் கேட்டான் விஷால்.
யோசனையுடனேயே, “பரவாயில்லை. காலைல பேசிக்குவேன். சொல்லு, என்ன விஷயம்?” என்றவனுக்கு, போன் தானாகத் துண்டிக்கப்படவில்லை என்று தோன்றியது.
“இன்னைக்கு லாயர் சாரைப் பார்த்துட்டு வரேன்னு போனியே, என்ன ஆச்சுன்னு கேட்கலாமேன்னு...” என்றவனைப் புருவத்தை உயர்த்திப் பார்த்தான்.
“பரவாயில்லயே நினைவிருக்கா?” என்றவனது கேள்வியில் கேலி இழையோட, விஷால் பதில் சொல்லாமல் நின்றான்.
“மதியம் போனேன். நம்ம லாயர் அவரோட ஃபிரெண்ட் மிஸ்டர்.பரசுராமனைப் பற்றிச் சொன்னார். அவர்கிட்ட பேசறதா சொல்லியிருக்கார். நாளைக்குப் ப்ரீயா இருக்கேன். அதான், அவரைப் போய்ப் பார்த்துட்டு வந்திடலாமேன்னு அப்பாயின்மெண்ட் கேட்க போன் செய்தேன். பாதியில கட் ஆகிடுச்சி” என்றான்.
“லாயர் பேர் என்ன சொன்ன?” என்று திகைப்புடன் கேட்டான் விஷால்.
“பரசுராமன்... செகந்திராபாத்திலிருந்து வந்து இங்கே எரவிபுரத்துல செட்டிலாகியிருக்கார். நாளைக்கு, நீயும் என்னோடு வரணும்.”
“நானா! நாளைக்கு எனக்குக் கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு. இந்தமுறை நீ மட்டும் போய்ட்டு வா. அடுத்தமுறை நான் வரேன்” என்று நழுவப் பார்த்தான்.
“அந்தக் கதையே வேண்டாம். நீ வந்தே ஆகணும்” என்று உறுதியான குரலில் சொல்ல, விஷால் என்ன சொல்வதெனப் புரியாமல் நின்றான்.
“வர்ற தானே...” என்று சந்தேகத்துடன் கேட்டான்.
“ம்ம்...” என்ற விஷால், தன் அறைக்குத் திரும்பினான்.
‘இனி என்ன நடக்குமோ?’ என்று பயமாக இருந்தது. அதிலும், இப்போதிருக்கும் சூழ்நிலையில் அவன் அதிகமாகப் பயந்தது பூர்ணிமாவை எண்ணித்தான்.
கையிருந்த பாலில் ஆடை படிய ஆரம்பித்ததைக் கூட உணராமல் நின்றிருந்தவளை, “ஏன்டி உன்னைப் பால் கேட்டால்… மாடு வாங்கி, பால் கறந்து... கொதிக்கவச்சி கொண்டு வர்றியா?” என்று மாடியிலிருந்து கத்தினாள் மேகா.
அது எதுவும் கருத்தில் பதியாமல் நின்றிருந்ததைக் கவனித்த மேகா, இறங்கி வந்து பூர்ணிமாவின் தோளில் பட்டென தட்டினாள்.
“ஏய்! சென்டிமெண்ட் பைத்தியம். இப்போ, என்ன நினைப்பில் இப்படி நின்னுட்டிருக்க?” என்று எரிச்சலுடன் சப்தமிட்டாள்.
திடுக்கிட்டு உணர்விற்கு வந்தவள், “அது... ஒண்ணுமில்லை... அப்பாவுக்கு ஒரு போன் வந்தது…” என்றாள்.
நெற்றிச் சுருங்க, “ஃபோனா! இந்த நேரத்துல… யாராம்?” என்று கேட்டுக்கொண்டே அவளிடமிருந்து பால் டம்ளரை வாங்கிக் கொண்டாள்.
“ஆ..மாம்... லஷ்மி க்ரூப் ஆஃப் கம்பெனீஸ் எம்.டி. மிஸ்டர்.ரி.ஷி. ந.ந்.த.ன்...” என்ற போது அவளது குரல் கம்மியது.
“ரிஷி நந்தன்! ம்ம்... நைஸ் நேம்” என்று புருவத்தை உயர்த்தி மெச்சியபடி, தன் அறையை நோக்கி நடந்தாள் மேகா.
வசமிழந்து போகிறேன்
உன் நினைவுகளைக்
கடந்து செல்ல
முயலும் நேரங்களில்...
தன் வேலையில் மூழ்கியிருந்த நந்தாவின் மொபைல், அவனை அழைத்தது.
புன்னகையுடன், “அம்மா! சாரி சாரி..., வேலையை முடிசிட்டு நானே போன் பண்ணலாம்னு இருந்தேன்.”
“அதுக்குள்ள நான் முந்திட்டேன்” என்று சிரித்தார் நந்தாவின் அன்னை.
“அப்புறம், எப்படியிருக்கீங்க?”
“திவ்யமா இருக்கேன். நீ கல்யாணம் செய்துக்கறேன்னு சொல்லு, இன்னும் சந்தோஷமா இருப்பேன்” என்று சொல்ல எதிர்முனையில் நிசப்தமாக இருக்க, “டேய்! லைனில் இருக்கியா இல்லையா?” எரிச்சலுடன் கேட்டார்.
“ஆ... ஹலோ..., என்னம்மா சொல்றீங்க? காதில் எதுவுமே விழமாட்டேன்னுதே... காது திடீர்னு அடைத்த மாதிரி இருந்ததும்மா” என்றான்.
“அடைக்குமே...! காது மட்டுமா அடைக்கும்? பேச்சு வராது, லைன் கட்டாகிடும்...” என்று சொல்லிக்கொண்டிருக்க மறுமுனையிலிருந்தவனுக்குச் சிரிப்பு வந்தது.
“சிரிச்சி என் எரிச்சலை அதிகமாக்காதே. ரிசாட் வேலை முடிந்ததும் கல்யாணம் செய்துக்கறேன்னு, எனக்கு வாக்குக் கொடுத்திருக்க. நான் மறக்கல...” என்றார் கண்டிப்பான குரலில்.
பெருமூச்சொன்றை வெளியேற்றியவன், “இதைத் தவிர பேச எதுவும் இல்லையா?” என்று சலித்துக்கொண்டான்.
“ஏன் இல்ல? நிறைய இருக்கு. ஆனா, இப்போதைக்கு இதுதான் எல்லாத்தையும் விட ரொம்ப முக்கியம்.”
“ஆனா, எனக்கு இதைவிட முக்கியமான வேலைகள் நிறைய இருக்கு” என்றான்.
“நீ சொன்னதை நம்பி, நான் இங்கே பொண்ணு பார்க்க வரேன்னு சொல்லிட்டேன்.”
“அதுக்கு, நான் பொறுப்பாக முடியாதும்மா! என்னிடம் முதலிலேயே சொல்லியிருக்கணும். இப்போ, எனக்குப் பொண்ணு பார்க்கும் வேலையைவிட, இன்னொரு முக்கியமான வேலை வந்திருக்கு. ரகசியமும் கூட” என்று மெதுவாக கிசுகிசுத்தவன், “உங்களுக்கு மட்டும் அந்த ரகசியத்தைச் சொல்லவா?” என்று பீடிகை போட்டான்.
‘கல்யாணப் பேச்சை மாற்ற என்ன வேண்டுமானாலும் சொல்வான்’ என்று நினைத்துக் கொண்டு, “என்ன ரகசியம்...?” என்று அசிரத்தையாக கேட்டார்.
“எவ்வளவு முக்கியமான விஷயம் சொல்லப் போறேன். நீங்க என்னடான்னா இத்தனை அசால்ட்டாக கேட்கறீங்க? சொல்லமாட்டேன் போங்க” என்றான் விளையாட்டாக.
“சொல்லலைனா போயேன். நான் போனை வைக்கிறேன்..” என்றார் கடுப்புடன்.
“கல்யாண விஷயம் பத்திச் சொன்னா கூடவா..” என்று வேகமாகச் சொல்ல,
“கல்யாணமா! யாருக்கு...? உனக்கா...?”அவனது வேகத்துக்கு ஈடுகொடுத்து அதே வேகத்தில் கேட்டவர், கடைசி வார்த்தையை மட்டும் கிண்டலாகக் கேட்டார்.
“கல்யாண விஷயம்தான். ஆனால், எனக்கு இல்ல விஷாலுக்கு...”
“விஷாலுக்கா?”
“அதுவும் சாருக்குக் காதல்ன்னு சொன்னால்?” என்றவன் மறுமுனையில் சப்தம் இல்லாமல் போக, “என்னம்மா? சத்தமே இல்ல. இப்போ, உங்களுக்குக் காது அடைச்சிடுச்சா?” என்று சிரித்தான்.
“உன் பையன் இப்படிச் செய்தான்னு, யாராவது சொன்னாக் கூட நான் நம்புவேன். ஆனா, விஷால் இப்படிச் செய்தான்னு சொன்னா, நிச்சயமா நம்பமாட்டேன்” என்றார்.
“பெத்த பிள்ளை மேலே, எங்க அம்மாவுக்கு எவ்வளவு நம்பிக்கை?” என்று ஏக்கப் பெருமூச்சுவிட்டவன், “அப்போ, நான் சொல்றதுல உங்களுக்கு நம்பிக்கை இல்ல. அப்படித்தானே.”
“முதல்ல, இந்த மாதிரி உனக்கு யாரு இப்படி ஒரு கதையைச் சொன்னது?”
“என் ரெண்டு கண்ணாலும் பார்த்தேன்...”
”உனக்கு நிச்சயமா தெரியுமா?” இப்போது அவர் குரலில் சற்று ஆர்வம் கூட கேட்டார்.
“ம்ம்… ஒரு டவுட்தான்.”
“அப்படிச் சொல்லு...” நான் சொன்னது தான் சரி என்பது போல அவரின் தோரணை வெளிப்பட்டது.
“ஆனால், கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சிடுவேன்”
“வெங்காயத்தை உரிக்க உரிக்க, ஒண்ணுமிருக்காது.”
“நீங்க என்னை நம்பவே வேண்டாம். போகப் போகத் தெரியும்… அது வெங்காயமா! இல்ல விவகாரமான்னு...” என்று சொல்லிவிட்டுச் சிரித்தான்.
“ஹும். அதெல்லாம் போகட்டும். நீ ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வர்றதானே!”
“வீட்டுக்கு வரேன். ஆனா, பொண்ணு பார்க்கவெல்லாம் என்னால் வரமுடியாது சாரி. முக்கியமான ஒருத்தருக்குப் போன் பேசணும். நாளைக்கு உங்களுக்குப் போன் செய்றேம்மா!” என்று மொபைலை அணைத்தவன், லாயர் பரசுராமனின் வீட்டு எண்ணிற்குத் தொடர்பு கொண்டான்.
****************
மாலையிலிருந்து அழுகை, சினம், அவமானம் என்று அனைத்தையும் ஒருவருக்கும் தெரியாமல், வைராக்கியத்துடன் அடக்கி வைத்துக் கொண்டிருந்தவளது மனமும், அடுப்பிலிருந்த பாலைப் போலக் கொதித்துக் கொண்டிருந்தது.
இத்தனை ஆண்டுகளில் நடந்துமுடிந்த நிகழ்விலிருந்து, தான் வெளிவந்துவிட்டோம் என்று நினைத்து தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டிருந்த நிகழ்வுகள், அவளது கண் முன்னே வந்து நின்று கைகொட்டிச் சிரிப்பது போலிருந்தது.
சலனமில்லாமல் இருந்த தனது வாழ்வில் சலனத்தையும், சந்தோஷத்தையும், பிரியத்தையும், காதலையும், எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற் போன்று மறையாத வடுவையும் உண்டாக்கிய அந்த நாளை நினைக்க நினைக்க, பெருங்குரலெடுத்து அழவேண்டும் போலிருந்தது. ஆனால், அவளது கண்களிலிருந்து ஒரு துளிக் கண்ணீர் கூட வெளிவர மறுத்தது.
உஸ்ஸென்ற சப்தத்துடன் பால் பொங்கிவர அடுப்பை அணைத்தவள், பனக்கற்கண்டைத் தட்டிப்போட்டு, கண்ணாடி டம்ளரில் ஊற்றி எடுத்துக்கொண்டு மாடிப் படியை நெருங்கினாள்.
அதேநேரம் தொலைபேசி ஒலிக்கும் சப்தம் கேட்டு வேகமாகத் திரும்பி வந்து ரிசீவரைக் காதுக்குக் கொடுத்து, “ஹலோ” என்றாள்.
எதிர்முனையில் இருந்தவன், அவளது குரலைக் கேட்டதும் திகைத்துப் போனான்.
‘இப்படி ஒரு குரலா! பலநாள் கேட்டுப் பழகியது போலப் பிரமை. பெரிய பூந்தோட்டத்தின் நடுவில் பரவியிருந்த பூக்களின் நறுமணத்தை முகர்ந்தது போல, ஒரு மோன நிலையில் இருந்தான்.
மறுபக்கம்... ஒரு கையில் பால் டம்ளரும், மற்றொரு கையில் போனுமாக நின்றிருந்த பூர்ணிமாவிற்கு எரிச்சலாக இருந்தது.
‘போன் பண்ணிட்டு யாராவது பேசாமல் இருப்பாங்களா?’ என்று எண்ணிக்கொண்டே நான்காவது முறையாக, “ஹலோ!” என்று உரக்கச் சொன்னாள்.
தன் உணர்வுக்கு வந்தவன், “சாரி! லைனில் ஏதோ ப்ராப்ளம்” என்று சமாளித்துவிட்டு, “லாயர் பரசுராமன் சார் வீடு தானே...” என்று கேட்டான்.
“ஆ..மாம்...” என்றவளுக்கு வார்த்தைகள் தொண்டையில் சிக்குவது போலிருந்தது.
“ஆனால், அப்பா ஒன்பதரை மணிக்கெல்லாம் தூங்கிடுவாங்களே மணி இப்போ பத்தாகுது.”
“சாரி! நான் கொஞ்சம் முன்னாலேயே போன் செய்திருக்கணும். இல்லைனா, காலையில் பேசியிருக்கணும்...” என்றான் சமாளிப்பாக.
“பரவாயில்லை சார்! உங்க பேர் சொன்னீங்கன்னா, அப்பாவிடம் காலையில் சொல்ல வசதியாக இருக்கும்” என்றாள்.
“ஒன்ஸ் அகைன் சாரி! நான் லஷ்மி குரூப் ஆஃப் கம்பெனீஸ் எம்.டி...” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, “நந்தா!” என்றழைத்தபடி விஷால் உள்ளே வரவும் சரியாக இருந்தது.
மறுமுனையில் இருந்தவளது இதயம் படக்படக்கென அடித்துக் கொண்டது. யார் பேசுவது என்று தெளிவானது. பெயரை அழைத்தபடி வந்தவனையும், தன்னிடம் பேசிக்கொண்டிருந்தவனும் யாரென புரிந்து போக, ரிசீவரை அதனிடத்தில் வைத்தாள்.
‘இவன் எதற்காக இப்போது போன் செய்தான்? விஷால் ஏதேனும் சொல்லியிருப்பானோ?’ என எண்ணியவளுக்கு, அதற்குமேல் எதையும் யோசிக்க முடியவில்லை. தலைச் சுற்றுவது போலிருந்தது.
தன்னை அழைத்தபடி அறைக்குள் வந்த விஷாலுக்கு, இரு என்பது போலச் சைகை காட்டியவன் போன் துண்டிக்கப்பட்டிருப்பது புரிய, ‘மீண்டும் போன் செய்யலாமா!’ என்று நினைத்து அதே வேகத்தில் அந்த யோசனையைக் கைவிட்டான்.
“முக்கியமான போனா? டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” வருத்தத்துடன் கேட்டான் விஷால்.
யோசனையுடனேயே, “பரவாயில்லை. காலைல பேசிக்குவேன். சொல்லு, என்ன விஷயம்?” என்றவனுக்கு, போன் தானாகத் துண்டிக்கப்படவில்லை என்று தோன்றியது.
“இன்னைக்கு லாயர் சாரைப் பார்த்துட்டு வரேன்னு போனியே, என்ன ஆச்சுன்னு கேட்கலாமேன்னு...” என்றவனைப் புருவத்தை உயர்த்திப் பார்த்தான்.
“பரவாயில்லயே நினைவிருக்கா?” என்றவனது கேள்வியில் கேலி இழையோட, விஷால் பதில் சொல்லாமல் நின்றான்.
“மதியம் போனேன். நம்ம லாயர் அவரோட ஃபிரெண்ட் மிஸ்டர்.பரசுராமனைப் பற்றிச் சொன்னார். அவர்கிட்ட பேசறதா சொல்லியிருக்கார். நாளைக்குப் ப்ரீயா இருக்கேன். அதான், அவரைப் போய்ப் பார்த்துட்டு வந்திடலாமேன்னு அப்பாயின்மெண்ட் கேட்க போன் செய்தேன். பாதியில கட் ஆகிடுச்சி” என்றான்.
“லாயர் பேர் என்ன சொன்ன?” என்று திகைப்புடன் கேட்டான் விஷால்.
“பரசுராமன்... செகந்திராபாத்திலிருந்து வந்து இங்கே எரவிபுரத்துல செட்டிலாகியிருக்கார். நாளைக்கு, நீயும் என்னோடு வரணும்.”
“நானா! நாளைக்கு எனக்குக் கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு. இந்தமுறை நீ மட்டும் போய்ட்டு வா. அடுத்தமுறை நான் வரேன்” என்று நழுவப் பார்த்தான்.
“அந்தக் கதையே வேண்டாம். நீ வந்தே ஆகணும்” என்று உறுதியான குரலில் சொல்ல, விஷால் என்ன சொல்வதெனப் புரியாமல் நின்றான்.
“வர்ற தானே...” என்று சந்தேகத்துடன் கேட்டான்.
“ம்ம்...” என்ற விஷால், தன் அறைக்குத் திரும்பினான்.
‘இனி என்ன நடக்குமோ?’ என்று பயமாக இருந்தது. அதிலும், இப்போதிருக்கும் சூழ்நிலையில் அவன் அதிகமாகப் பயந்தது பூர்ணிமாவை எண்ணித்தான்.
***************
கையிருந்த பாலில் ஆடை படிய ஆரம்பித்ததைக் கூட உணராமல் நின்றிருந்தவளை, “ஏன்டி உன்னைப் பால் கேட்டால்… மாடு வாங்கி, பால் கறந்து... கொதிக்கவச்சி கொண்டு வர்றியா?” என்று மாடியிலிருந்து கத்தினாள் மேகா.
அது எதுவும் கருத்தில் பதியாமல் நின்றிருந்ததைக் கவனித்த மேகா, இறங்கி வந்து பூர்ணிமாவின் தோளில் பட்டென தட்டினாள்.
“ஏய்! சென்டிமெண்ட் பைத்தியம். இப்போ, என்ன நினைப்பில் இப்படி நின்னுட்டிருக்க?” என்று எரிச்சலுடன் சப்தமிட்டாள்.
திடுக்கிட்டு உணர்விற்கு வந்தவள், “அது... ஒண்ணுமில்லை... அப்பாவுக்கு ஒரு போன் வந்தது…” என்றாள்.
நெற்றிச் சுருங்க, “ஃபோனா! இந்த நேரத்துல… யாராம்?” என்று கேட்டுக்கொண்டே அவளிடமிருந்து பால் டம்ளரை வாங்கிக் கொண்டாள்.
“ஆ..மாம்... லஷ்மி க்ரூப் ஆஃப் கம்பெனீஸ் எம்.டி. மிஸ்டர்.ரி.ஷி. ந.ந்.த.ன்...” என்ற போது அவளது குரல் கம்மியது.
“ரிஷி நந்தன்! ம்ம்... நைஸ் நேம்” என்று புருவத்தை உயர்த்தி மெச்சியபடி, தன் அறையை நோக்கி நடந்தாள் மேகா.