Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript தினம் ஒரு தகவல் | SudhaRaviNovels

தினம் ஒரு தகவல்

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
கடல்நாயின் கழிவில் இருந்த பென்-டிரைவ்... அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்!
நியூஸிலாந்து நாட்டில், அவ்வப்போது நீர்நில வாழ் உயிரினமான கடல்நாய்களின் (seal) கழிவுகளை எடுத்து சோதனை செய்வது வழக்கம். இந்த விலங்குகளின் உடல்நலம் சீராக இருக்கிறதா, இவை என்ன உணவை எடுத்துக்கொண்டிருக்கின்றன போன்றவற்றைத் தெரிந்துகொண்டு, அவற்றைக் கண்காணிக்க இச்சோதனையைச் செய்வார்கள். இப்படித்தான், சமீபத்தில் leopard seal இனத்தைச் சேர்ந்த ஒரு கடல்நாயின் கழிவு சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது.

இந்தக் கடல் நாயின் கழிவில் ஒரு பென்-டிரைவ் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பென்-டிரைவ் முழுதாக இயங்கும் நிலையில் இருந்தது இன்னொரு ஆச்சர்யம். அதில் ஒரு தாய் தனது குழந்தையுடன் விளையாடும் வீடியோ ஒன்றும், கடல் நாய்களின் புகைப்படங்களும் இருந்துள்ளன. இதன் உரிமையாளர் யாரென்று இன்னும் கண்டறியப்படவில்லை. இதை ஓர் உடல்நிலை சரியில்லாத leopard seal-லின் கழிவில் இருந்து கண்டறிந்ததாகச் சோதனைசெய்த கால்நடை மருத்துவர் தெரிவித்தார்.



இது ஒருபுறம் ஆச்சர்யமாக இருந்தாலும், மறுபுறம் பெரும் கேள்வியையும் எழுப்பியுள்ளது. இப்படி அன்டார்டிகாவை நெருங்கியுள்ள பகுதியில் வாழும் கடல்வாழ் விலங்குகளில், இப்படி பிளாஸ்டிக் பொருள்கள் கண்டறியபடுவது மிகவும் கவலை அளிப்பதாக ஆர்வலர்கள் பலரும் தெரிவித்துவருகின்றனர். கடல்களில் பிளாஸ்டிக் என்பது இன்று சிறிய மீன்களில் தொடங்கி திமிங்கிலங்கள் வரை பாதிப்பை ஏற்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
ஆரோக்கியத்துக்கு அச்சு வெல்லம்!



வெல்லம்... முன்பெல்லாம் எல்லோர் வீடுகளிலும் வெல்லம் பயன்பாடு தினமும் இருக்கும். வெள்ளை சர்க்கரையின் வருகைக்குப் பிறகு வெல்லத்தின் மவுசு கொஞ்சம் குறைந்தாலும், ஆரோக்கியத்தை நாடுவோர் வெல்லத்துக்கே முன்னுரிமை கொடுத்தனர்.அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் என வெவ்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படும் வெல்லத்தின் சுவை அலாதியானது. கடந்த சில ஆண்டுகளாக வெல்லத்தின் பயன்பாடு குறைந்திருந்த போதிலும், அண்மைக் காலமாக மீண்டும் மக்கள் வெல்லம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் அதிக அளவில் வெல்லம் தயாரிக்கப்படுகிறது. ஜேடர்பாளையத்தைச் சேர்ந்த வெல்ல உற்பத்தியாளர் ஆர்.நடராஜன் கூறும்போது, "பொத்தனுார், பிலிக்கல்பாளையம், ஜேடர்பாளையம் உள்ளிட்ட காவிரிக் கரையோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இதை மையப்படுத்தி, வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் செயல்படுகின்றன. உருண்டை, அச்சு வெல்லம் 30 கிலோ மூட்டைகளாக கட்டப்பட்டு, பிலிக்கல்பாளையம் வெல்ல ஏல மண்டிக்கு கொண்டுசெல்லப்பட்டு, தேவையைப் பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. வாரந்தோறும் புதன், சனிக்கிழமைகளில் வெல்ல மண்டி கூடும். பின்னர், சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டுசெல்லப்படுகிறது. மேலும், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களுக்கும் வெல்லம் அனுப்பிவைக்கப்படுகிறது.
இயற்கையான முறையில், தரமாக தயாரிக்கப்படும் ப.வேலூர் வெல்லத்துக்கு அதிக வரவேற்பு உள்ளது. அதேசமயம், வெல்லம் தயாரிப்பில் கலப்படம் உள்ளதாகக் கூறப்படும் புகாரும் உண்மைதான். அதிக லாபத்துக்காக சிலர் 90 சதவீதம் வெள்ளைச் சர்க்கரையும், 10 சதவீதம் கரும்பு பாலும் சேர்த்து வெல்லம் தயாரிக்கின்றனர். சிலர் ரசாயன உரத்தையும் கலந்துவிடுகின்றனர். சிலரது செயல்பாடுகளால், நேர்மையாக தொழில் செய்வோரும் பாதிக்கப்படுகின்றனர்.
அதேபோல, காவிரி ஆற்றில் கலக்கப்படும் சாயக்கழிவுகளால், அந்த தண்ணீரை விவசாயத்துக்குப் பயன்படுத்தும்போது மண்ணின் தன்மை மாறிவிடுகிறது. இங்கு விளைவிக்கப்படும் கரும்பில் எடுக்கப்படும் சாறும் தரம் குறைந்ததாக உள்ளது. அதிக விளைச்சலுக்காக யூரியாவைப் பயன்படுத்தும்போது, கரும்புச் சாறில் போதிய சர்க்கரை இருப்பதில்லை. சிலர் வெல்லத்தை உருண்டையாக பிடிப்பதற்காக சூப்பர் பாஸ்பேட்டை பயன்படுத்துவதால், உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வுகாண வேண்டும். அதேசமயம், வெல்ல உற்பத்தியாளர்கள் சங்கம் தொடங்கி, கலப்படமின்றி வெல்லம் தயாரிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
ப.வேலுார் பகுதியில் 200 வெல்ல தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இதில் 150 மட்டுமே தற்போது செயல்படுகின்றன. கலப்பட பிரச்சினையால் பல ஆலைகள் மூடப்பட்டுவிட்டன. தற்போது சீசன் இல்லாததால், பிலிக்கல்பாளையம் வெல்ல மண்டிக்கு வரத்து பாதியாக குறைந்துள்ளது. ரேஷன் கடைகளில் சர்க்கரை வழங்குவதுபோல, வெல்லமும் விற்பனை செய்ய வேண்டும். முதல்கட்டமாக, ரேஷன்கார்டுகளுக்கு வழங்கப்படும் சர்க்கரையில், பாதியை வெல்லமாக வழங்க வேண்டும். இதனால், வெல்லத்துக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதுடன், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். கரும்பு விவசாயமும் செழிக்கும்" என்றார்.
நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆ.புஷ்பராஜ் கூறும்போது, "வெல்லத்தில் 92 சதவீதம் இனிப்பு சுவை இருக்க வேண்டும். இதற்கு குறைந்தால், அது தரமற்ற வெல்லமாகும். இனிப்பை அதிகரிப்பதற்காக வெள்ளைச் சர்க்கரையை உற்பத்தியாளர்கள் பயன்படுத்துகின்றனர். இது தவறு என்பதால், தொடர் ஆய்வு மேற்கொண்டு, 76 மாதிரிகள் கிண்டியில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், 20 பேர் மீது வழக்கு தொடர்ந்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
கருப்பா இருந்தா அது ‘டூப்ளிகேட்’:
"கரும்பு பாலை காய்ச்சி, இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் வெல்லம் காவி நிறத்தில் இருக்கும். இதுதான் கலப்படமற்ற வெல்லம். வெல்லம் கருப்பு நிறமாக இருக்க, சுண்ணாம்பு கலக்கப்படுகிறது. இது உடலுக்கு கேடு தரும்" என்கின்றனர் வெல்ல உற்பத்தியாளர்கள்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
திருச்சி




திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் வையம்பட்டியை அடுத்த கருங்குளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் தண்ணீர் அருந்துவதற்காக தினமும் 3 முறை தனியாக மணி அடித்து ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
மனித உடலில் பெரியவர் களுக்கு 50 முதல் 60 சதவீத மும், குழந்தைகளுக்கு 70 முதல் 75 சதவீதமும் தண்ணீர் நிறைந் துள்ளது. உடல் உறுப்புகள் சீராக செயல்பட தினமும் குறைந்தபட்சம் 2 லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டுமென மருத்துவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், பெற்றோர்களோ, ஆசிரியர்களோ கட்டாயப்படுத்தினால் தான் குழந்தைகள் தண்ணீரை அருந்துவார்கள். தண்ணீர் அருந்தாததன் காரணமாக உடல் உறுப்புகள் சீராக செயல்படாமல், சிறுநீரகம் உள்ளிட்ட பாதிப்புகள் சிறுவயதிலேயே ஏற்படுகின்றன.
எனவே, தண்ணீர் அருந்துவதன் முக்கியத்துவம் குறித்து பள்ளியில் தினமும் நடைபெறும் பிரார்த்தனைக் கூட்டங்களில் வலியுறுத்தி வந்தார் கருங்குளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை யாசிரியர் அந்தோனி லூயிஸ் மத்தியாஸ்.
மாணவர்கள் தண்ணீரை அருந்த வைக்க சக ஆசிரியர் களுடன் கலந்தாலோசித்து, வகுப்பறையிலேயே மாணவர்கள் தண்ணீர் அருந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதுகுறித்து, இப்பள்ளியின் தலைமையாசிரியர் அந்தோனி லூயிஸ் மத்தியாஸ், ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியதாவது: இந்த பள்ளியில் கருங்குளம், பாம்பாட்டி பட்டி, மண்பத்தை, மணியாரம்பட்டி, வையம்பட்டி, செக்கனம், அணைக்கரைப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து 6 முதல் பிளஸ் 2 வரையில் 647 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 27 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மாணவ, மாணவிகள் பெரும் பாலான நேரத்தை பள்ளியில்தான் செலவிடுகின்றனர். ஆனால், அந்த நேரத்தில் இயற்கை உபாதைக்காக எழுந்து செல்ல வேண்டியிருக்கும் என்பதால் தாகம் எடுத்தால் கூட தண்ணீரை அருந்துவதில்லை. குறிப்பாக மாணவிகள் சரியாக தண்ணீர் அருந்துவதில்லை.
எனவே, தண்ணீர் அருந்துவதன் முக்கியத்துவத்தை மாணவ, மாணவிகளுக்கு உணர்த்தி, தினமும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரும்போது ஒரு பாட்டிலில் தண்ணீர் கொண்டு வருவதைக் கட்டாயமாக்கி, அதை வகுப்பறையில் உரிய இடைவெளியில் குடிக்க வேண்டுமென அறிவுறுத்தினோம். அதற்கென பள்ளி வேலைநேரத்தில் காலை 10.30 மணி, பகல் 12.50 மணி, பிற்பகல் 2.10 மணி என 3 முறை மாணவர்கள் தண்ணீர் அருந்துவதற்காக தனியாக மணியை ஒலிக்கச் செய்கிறோம். அந்த நேரத்தில் அனைத்து மாணவ, மாணவிகளும் தாங்கள் கொண்டு வந்திருக்கும் பாட்டில்களில் உள்ள தண்ணீரை வகுப்பில் உள்ள ஆசிரியர் முன்னிலையிலேயே தேவையான அளவுக்கு குடித்து வருகின்றனர்.
கடந்த ஒரு மாதமாக இந்த முறையை கடைப்பிடித்து வருகிறோம். தற்போது மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் பாட்டில்களில்தான் தண்ணீரை கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு எவர்சில்வர் பாட்டில்களை வழங்க முடியுமா என்றும் யோசித்து வருகிறோம்.
பள்ளியில் பாழடைந்து கிடந்த ஒரு அறையை தூய்மை செய்து, அதை நூலகமாக மாற்றியுள்ளோம். அங்கு நாளிதழ்கள் மற்றும் நூல்களை வைத்துள்ளோம். மாணவ, மாணவிகள் ஓய்வு நேரத்தில் வாசிக்கும் பழக்கத்தையும் ஊக்குவித்து வருகிறோம் என்றார்.
இந்த பள்ளியில் தண்ணீர் வசதி இல்லாததால், தற்போது டேங்கர் லாரியில் தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்துத் தந்தால் அது மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதுகுறித்து மக்கள் பிரதிநிதிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர் கிராம மக்கள்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
ஆனைகட்டியில் காரை அடித்து நொறுக்கிய யானை நூலிழையில் உயிர் தப்பிய நபர்
கோவை




ஆனைகட்டி-கோவை சாலையில் நின்றுகொண்டிருந்த காரை, ஒற்றை யானை தாக்கியதில் கார் பலத்த சேதமடைந்தது. அதில் பயணித்த நபர் நூலிழையில் உயிர் தப்பினார்.
கோவை அன்னூர் சாலை, சக்தி சாய் நகரைச் சேர்ந்தவர் ஜி.செல்வராஜ். இவர் பாலக்காடு மாவட்டம் மன்னார்காட்டிலிருந்து நேற்றுமுன்தினம் இரவு ஆனைகட்டி வழியாக கோவை நோக்கி காரில் வந்துள்ளார். தூமனூர் பிரிவு அருகே இரவு 9.15 மணியளவில், சாலையோர புதரில் இருந்து ஏதோ சப்தம் கேட்கவே காரை நிறுத்தியுள்ளார். அப்போது, புதருக்குள் இருந்து வெளியே வந்த ஒற்றை யானை கார் அருகே நின்றுள்ளது. யானையை பார்த்த செல்வராஜ், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி காருக்குள்ளேயே அமர்ந்துகொண்டார். பின்னர், காரின் முகப்பு பகுதி மற்றும் கண்ணாடியை நொறுக்கிய யானை, சாலையை கடந்து சென்றுள்ளது. இந்த தாக்குதலால் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. யானை கடந்தவுடன், காரைவிட்டு வெளியேறிய செல்வராஜ், அவ்வழியாக வந்த ஒரு வேனில் ஏறி கோவை வந்து, இங்கிருந்து பேருந்து மூலம் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் டி.வெங்கடேஷ் கூறும்போது, “யானையால் தாக்கப்பட்ட கார் சம்பவ இடத்திலேயே நேற்று இருந்தது. முதலில் எவ்வாறு கார் சேதமடைந்தது என யாருக்கும் புலப்படவில்லை. பின்னர், இன்று (நேற்று) காலை செல்வராஜின் மகன் வனத்துறையை தொடர்புகொண்டு, காரை அப்புறப் படுத்துவதற்கான நடைமுறைகளை கேட்டபோதுதான் யானை தாக்கியது தெரியவந்தது. ஆனால், சிலர் கார் மோதி யானை காயமடைந்ததாகவும், காயமைடைந்த யானையை வனத்துறையினர் தேடி வருவதாகவும் சமூக வலைதளங் களில் தவறான தகவலை பரப்பிவிட்டனர்” என்றார்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் மறுபிறவி எடுக்கும் பட்டுப்போன ஆலமரம்: அனுபவத்தைப் பயன்படுத்தி உயிரூட்டிய முன்னாள் வேளாண் துறை அமைச்சர்
திருச்சி




திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் பட்டுப்போன பழமையான ஆலமரத்தை திசு வளர்ப்பு முறையில் மீட்டெடுக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி யின் மையப்பகுதியில் 75 ஆண்டுகள் பழமையான ஆலமரம் இருந்தது. இது, மாணவர்கள் கூடும் இடமாக மட்டுமின்றி, கல்லூரிக்கு வரும் முக்கியத் தலைவர்கள் உரையாற்றும் இட மாகவும் ஒரு காலத்தில் விளங் கியது. கல்லூரியின் அடை யாளமாக திகழ்ந்த இந்த மரத்தின் பெரும்பாலான கிளைகள், கடந்த 2017-ல் அடித்த சூறைக்காற்றில் உடைந்து விழுந்தன. இதையடுத்து, இதை மீண்டும் வளர்த்தெடுக்க முன்னாள் மாண வர் சங்கத்தினரும், முன்னாள் பேராசிரியர்கள் சங்கத்தினரும் முயற்சி மேற்கொண்டனர்.
அதன்படி, வேளாண் கல்லூரி களின் பேராசிரியர்கள், வேளாண் துறை அதிகாரிகள் அந்த ஆலமரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, ‘கேனோடெர்மா' எனப்படும் உயிர்க்கொல்லி பூஞ்சானத்தால் மரத்தின் உட்பகுதிகள் பாதிக்கப் பட்டிருந்ததும், மரத்தின் கிளை களை இயந்திர ரம்பம் கொண்டு அறுத்து அகற்றியிருந்ததால் வெப் பத்தின் காரணமாக மரம் முழு வதும் பட்டுப்போனதும் தெரியவந்தது.
இதையடுத்து, மரத்தின் 6 அடி உயரத்தை மட்டும் வைத்து, சிற்பக் கலைஞர்களின் உதவியுடன் அதனை நினைவுச் சின்னமாக வடிவமைக்க முடிவு செய்தனர்.
இதையறிந்த திருச்சியைச் சேர்ந்த முன்னாள் வேளாண் துறை அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், ஈ.வெ.ரா கல்லூரிக்குச் சென்று, அந்த ஆலமரத்தை பார்வை யிட்டார். பின்னர் தனது விவசாய அனுபவத்தை பயன்படுத்தி, திசு வளர்ப்பு முறையில் ஆலமரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். அதன்பலனாக பட்டுப்போன நிலையில் இருந்த ஆலமரத்தின் மீது தற்போது சுமார் 3 அடி உயரத்துக்கு இலைகள் துளிர்விட்டு வளர்ந்துள்ளன.
உயிர் கொடுத்த விழுதுகள்
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: இக்கல்லூரியின் அடையாளச் சின்னமாக இருந்த ஆலமரத்தை அகற்ற மனமில்லாமல், அதனை நினைவுச் சின்னமாக மாற்றுவதற்கு முன்னாள் மாணவர்களும், முன்னாள் பேராசிரியர்களும் முயற்சி மேற்கொண்டது குறித்த செய்தியை ‘இந்து தமிழ்’ நாளிதழில் படித்தேன். எனது விவசாய அனுபவத்தைப் பயன்படுத்தி, இதற்கு ஏதாவது செய்ய முடியும் என தோன்றியது. உடனே அங்கு சென்று, ஆலமரத்தை பார்த்த போது பெரிய மரம் முற்றிலும் பட்டுப்போய் இருந்தது. ஆனால், அதற்கு அருகில் இருந்த 2 விழுதுகளை வைக்கோல் பிரி சுற்றி வைத்திருந்ததால், அதன் குறிப்பிட்ட ஒரு பகுதியில் உயிர் இருந்தது. அதிலிருந்து திசுக்களை எடுத்துச் சென்று, எனது விவசாய பண்ணையில் வைத்து திசு வளர்ப்பு முறையின்படி 3 ஆலமரக்கன்றுகளை உருவாக்கி னோம். சுமார் அரை அடி உயரம் வளர்ந்த பிறகு, அவற்றை எடுத்துச் சென்று பட்டுப்போன ஆலமரத்தின் மேல் பகுதியில் துளைகளை ஏற்படுத்தி அவற்றில் நட்டு வைத்தோம்.
ஆலமரக் கன்றுகள் நன்கு வளரும் வகையில், அதற்கேற்ற சத்துக்களுடன்கூடிய இயற்கை உரத்தை எனது பண்ணையிலேயே தயாரித்து, அவற்றுக்கு இட்டு வந்தோம். மேலும் சீரான அளவில் சூரிய ஒளி, காற்று செல்லும் வகையில் ஆலமரத்தைச் சுற்றிலும் பசுமை நிற குடில் ஏற்படுத்தினோம். கடந்த 3 மாதங்களாக தமிழ்த் துறைத் தலைவர் வாசுதேவன் தலைமையிலான குழுவினர் அவற்றை தொடர்ந்து பராமரித்து வந்த நிலையில், தற்போது அவை பட்ட மரத்துடன் இணைந்து நன்றாக துளிர்த்து வளரத் தொடங்கியுள்ளன. அடுத்தகட்டமாக மரத்தின் மேல் பகுதியிலிருந்து, கீழ்பகுதி வரை பெரிய துளை ஏற்படுத்தி, அதனுள் மண் மற்றும் இயற்கை உரங்களை இட்டு, அவற்றின் வாயிலாக புதிய கன்றுகளின் வேரை பூமிக்குள் செலுத்த முடிவு செய்துள்ளோம். இதன்மூலம் பழைய மரமும், புதிய மரமும் இணைந்திருக்கும் என்றார்.