Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript தினம் ஒரு தகவல் | SudhaRaviNovels

தினம் ஒரு தகவல்

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
மதுபாலாவின் 86-வது பிறந்த தினம்: அழகிய ஓவியத்தில் மிளிரும் கூகுள் டூடுள்


பாலிவுட் நடிகை மதுபாலாவின் 86-வது பிறந்த தினத்தில் அவரை நினைவுகூரும் விதமாக ஓர் அழகிய ஓவியப் பாவையாக்கி இன்றைய கூகுள் டூடுள் கொண்டாடுகிறது.
மிகப்பெரிய இணையதள தேடுபொறியான கூகுள் நிறுவனம், உலகில் மிகச் சிறந்த பிரமுகர்கள், வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் அவ்வப்போது தனது ‘டூடுளை’ வித்தியாசமாக வடிவமைத்து வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், இந்தியாவின் மர்லின் மன்றோ என்றழைக்கப்படும் மறைந்த பாலிவுட் நடிகை மதுபாலாவின் 86-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஓர் அற்பதமான ஓவியத்தை டூடுளாக கூகுள் வடிவமைத்துள்ளது. பெங்களூருவை பூர்வமாகக் கொண்ட முகமது சாஜித் என்ற ஓவியர் இன்றைய கூகுள் டூடுளில் தீட்டியுள்ளார்.


அவர் நடித்த படங்களிலேயே மிகவும் சிறந்த படங்களில் ஒன்றான முகல் ஏ ஆஸம் (1960) என்ற திரைப்படத்தில் அனார்கலியாக தோன்றிய நடித்த ஒரு நடனக் காட்சிதான் இன்றைய கூகுள் டூடுளில் நாம் காண்கிறோம்.
1933ல் டெல்லியில் பிறந்த மதுபாலாவின் இயற்பெயர் மும்தாஜ் ஜெகன் பேகம் தெஹ்லவி. பின்னர் அவருடைய குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. திரைப்பட உலகின் கடைக்கண் பார்வை கிடைக்கும்விதமாக அவர் வளர்ந்தது எல்லாம் பாம்பே டாக்கீஸ் பிலிம் ஸ்டூடியோவுக்கு அருகில்தான்.
மதுபாலா ஒரு குழந்தை நட்சத்திரமாகத்தான் முதன்முதலில் வெள்ளித்திரையில் தோன்றினார். அப்போது அவரது வயது 9. பேபி மும்தாஜ் என்ற பெயரில் அவர் நடித்த முதல் பாலிவுட் திரைப்படம் ''பசந்த்''. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நீல் கமலில் ராஜ்கபூருடன் தோன்றினார்.
மதுபாலா, 1949 ஆம் ஆண்டில் மட்டும் ஒன்பது திரைப்படங்களில் நடித்தார். மிகப்பெரிய வெற்றிப் படமான ''மஹால்'' திரைப்படம் வசூலை அள்ளித்தந்தது.
அடுத்த இருபதாண்டுகளில் மதுபாலா பாலிவுட்டின் முடிசூடா ராணியாக திகழ்ந்தார். 70 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். பெக்கசூர், படால், ஹவுரா பாலம், கலா பாணி, சால்டி கா நாம் காடி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. அவரது படங்களிலேயே மணிமகுடமாகத் திகழ்ந்தது முகல்-ஏ-ஆஸம் திரைப்படம்.
சரித்திரப் படமான முகம் ஏ ஆஜம் திரைப்படத்தில் மதுபாலா அனார்க்கலியாக நடித்திருந்தார். ஒரு நாட்டியம் ஆடும் குடும்பத்தைச் சேர்ந்த அனார்க்கலி பேரரசர் அக்பரின் மகன் சலீம் மீது காதல் கொள்கிறாள். ஒரு காவியக் காதலாகவே இறுதியில் சோகத்தைத் தழுவி நிற்கும் கதையம்சம் கொண்டது.
இத்திரைப்படத்தில் சலீம் பாத்திரம் ஏற்றிருந்தவர் அன்றைய இளம் நாயகன் திலீம் குமார். இக்காதல் திரைப்படப் பணிகள் நிறைவு பெறுவதற்குள்ளாக இருவரும் உள்ளம்ஒன்றிய காதலர்களானார்கள். ஆனால் திரைப்படம்போலவே அவர்கள் காதலும் ஈடேறவில்லை என்பதுதான் நிஜம்.
முகல் ஏ ஆஜம் திரைப்படம் வெளியான ஆண்டில்தான் மதுபாலாவின் திருமணம் நடைபெற்றது. ஆனால் அவரைக் கரம்பிடித்தவர் கிஷோர் குமார் எனும் புகழ்பெற்ற பாடகர். அவர்கள் ஒரு நல்ல மனமொத்த தம்பதிகளாக மதுபாலாவின் இறுதிக்காலம்வரை அன்போடு வாழ்ந்தனர்.


எனினும் மதுபாலா எனும் வெள்ளித்திரை வானின் நட்சத்திரம் வெகு குறுகிய காலமே ஒளிர்ந்து திடீரென ஒருநாள் உதிர்ந்தது. ஆம், இந்த உலகத்தில் அவர் வாழ்ந்தது 36 ஆண்டுகள் மட்டுமே. நீடித்த நோய் ஒன்றில் அவதியுற்று வந்த இளம் தாரகை ஒருநாள் தனது கலைப்பயணத்தை முடித்துக்கொண்டு இவ்வுலகிலிருந்து விடைபெற்றார்.
2008-ல் இந்திய அரசு வெள்ளித்திரை நாயகியின் மகத்தான கலைச்சேவையைக் கொண்டாடும்விதமாக அஞ்சல் தலை வெளியிட்டது.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
அழும்' பாம்பு: விலங்கியலாளர் கண்டுபிடித்த புதியவகை பாம்பு


'அழும்' பாம்பு என்று அழைக்கப்படும் புதியவகைப் பாம்பு அருணாச்சலப் பிரதேசத்தின் லேபா-ராடா மாவட்டத்தில் கண்டுபிடிக்கபட்டுள்ளது.
இந்தப் பாம்பு விஷமற்ற கீல்பேக் வகையைச் (ஆபத்தை விளைவிக்காத நீர்நிலைகளின் அருகே பெரும்பாலும் தவளைகளை உண்டு வாழும் பாம்பு வகை) சேர்ந்தவை. ஹெபியஸ் லேக்ரிமா என்ற விலங்கியல் பெயரால் அழைக்கப்படும் இப்பாம்பின் கண்டுபிடிப்பு குறித்து நியூஸிலாந்தைச் சேர்ந்த விலங்கின அறிவியல் இதழில் வெளியாகியுள்ளது.
இதன் பெயர்க்காரணம் குறித்து குவாஹத்தியைச் சேர்ந்த விலங்கியலாளரும் பாம்பைக் கண்டுபிடித்தவருமான ஜெயதித்யா புர்காயஸ்தா கூறும்போது, ''இந்த வகைப் பாம்பின் கருவிழிகளின் கீழ் கருப்பு நிறத்தில் கண்ணீர்த் துளிகள் உருண்டு விழுவது போல உள்ளது. அதுன் ஊடாக வெள்ளைக் கோடுகள் மேல் தாடையில் இருந்து தலைக்குப் பின்புறம் விரிந்துசெல்கின்றன.
இதனால் இதற்கு 'அழும்' பாம்பு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. லேக்ரிமா என்றால் லத்தீன் மொழியில் கண்ணீர் என்று அர்த்தம்.
48.7 செ.மீ. நீளம் கொண்ட இந்தப் பாம்பை, பாசர் நகரத்தை ஒட்டிய வயல்வெளிகளில் இருந்து கண்டுபிடித்தேன். இதை ஹெபியஸ் பிரிவில் உள்ள 44 வகைப் பாம்புகளோடு ஒப்பிட்டோம். ஆனால் மற்றவகைப் பாம்புகளில் இருந்து இந்த அழும் பாம்பு பல்வேறு வகைகளில் மாறுபட்டிருந்தது.
குறிப்பிடத்தக்க வகையிலான தடிமன், நீளம், உடல் முழுவதும் குறுக்காக ஓடும் கோடுகள், ஒழுங்கற்ற அடர் தழும்புகள் ஆகியவை மற்ற பாம்புகளில் இருந்து இதை வேறுபடுத்தின. சிறீய மீன்கள், தலைப்பிரட்டைகள், தவளைகளை உட்கொண்டு இவை வாழ்கின்றன'' என்று தெரிவித்தார் ஜெயதித்யா.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
விரும்பும் சேனலைப் பார்க்கும் வசதி: வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் அவகாசம்: டிராய் அறிவிப்பு
புதுடெல்லி




விரும்பும் சேனல்களைத் தேர்வு செய்வதில் கேபிள், டிடிஹெச் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிரமங்கள் இருந்து வருவதால், அவர்களுக்குக் கூடுதல் அவகாசத்தைத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) வழங்கியுள்ளது.
அதன்படி, மார்ச் 31-ம்தேதி வரை விரும்பும் சேனல்களை நுகர்வோர்கள் தேர்வு செய்து அளிக்கலாம்.
டிராய் அறிக்கையின்படி, இதுவரை கேபிள் வாடிக்கையாளர்களில் 65 சதவீதம் பேர், டிடிஹெச் வாடிக்கையாளர்களில் 35 சதவீதம் பேர் விரும்பும் சேனலைப் பார்க்கும் வசதிகளைப் பெற்றுள்ளனர். ஆனால், நாட்டில் 10 கோடி கேபிள் வாடிக்கையாளர்களும், 6.7 கோடி டிடிஹெச் வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து டிராய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான சேனல்களை, கேபிள் மற்றும் டிடிஎச் சேவைகளில் தேர்வு செய்யும் புதிய முறையை நாட்டிலேயே முதல் முறையாக அமல்படுத்தி இருக்கிறோம். வாடிக்கையாளர்களுக்குப் பிடித்தமான கேபிள், டிடிஎச் சேவைகளை வழங்க சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், விருப்பமான சேனல்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்வதில் சந்தாதாரர்களுக்கு பல்வேறு சிக்கல்கள், சிரமங்கள் இருப்பது தெரியவந்தது. இதனால், வரும் மார்ச் மாதம் 31-ம் தேதி வரை கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

மேலும், வாடிக்கையாளர்களின் மொழி, அவர்கள் வாழும் பகுதி, விருப்பம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, அவர்களுக்குத் தேவையான சேனல்களை கொண்ட புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். புதிய முறைக்கு வாடிக்கையாளர்கள் மாறும் வரையிலும், ஏற்கெனவே அவர்கள் பயன்படுத்தி கொண்டிருக்கும் திட்டத்தையே தொடர்ந்து அளிக்க வேண்டும் என்றும் கேபிள், டிடிஹெச் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது''.
இவ்வாறு டிராய் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
ஆப்பிளுக்குப் பதிலாக ஆப்பிள் ஐபோனை கரடிக்குத் தூக்கி வீசிய சுற்றுலாப் பயணி


சில நேரங்களில் நாம் நினைப்பது ஒன்றாக இருக்கும்; நடப்பது வேறாக இருக்கும். அத்தகைய சம்பவமொன்று சீனாவில் நடந்துள்ளது.
சுற்றுலாப் பயணி ஒருவர், ஆப்பிள் பழம் என நினைத்து தவறுதலாக ஆப்பிள் ஐபோனை கரடிக்குத் தூக்கி வீசியுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் யான்செங் வனவிலங்குகள் பூங்கா அமைந்துள்ளது. இங்கு சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணி ஒருவர், கரடிகளைப் பார்த்து நின்றுள்ளார். இரண்டு கரடிகளும் அவரை ஆர்வமாகப் பார்க்க, கையில் இருந்த ஆப்பிள் பழத்தைத் தூக்கி வீச எத்தனித்துள்ளார்.
ஆனால், எதிர்பாராதவிதமாக மற்றொரு கையில் இருந்த ஆப்பிள் ஐபோனைத் தூக்கி வீசிவிட்டார். ஐபோனை முகர்ந்து பார்த்த கரடி, அதை வாயில் கவ்விக்கொண்டு உள்ளே சென்றது.
எனினும் பூங்காவைச் சேர்ந்த ஊழியர், விலை உயர்ந்த ஐபோனை, மீட்டு சுற்றுலாப் பயணியிடம் அளித்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி: புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்தார்


பிஹாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி இனாயத் கான், புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா நெடுஞ்சாலையில் கடந்த வியாழக்கிழமை சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில், 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர். பாலிவுட் நடிகர்கள், விளையாட்டு வீரர்களும் வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளனர்.
பிஹார் மாநிலத்தில் இருந்து கான்ஸ்டபிள் சஞ்சய் குமார் சின்ஹா மற்றும் ரத்தன் குமார் தாக்கூர் ஆகியோர் வீர மரணமடைந்தனர்.
இந்நிலையில் பிஹாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி இனாயத் கான், புல்வாமா தாக்குதலில் பலியான இரண்டு வீரர்களின் மகள்களைத் தத்தெடுத்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய அவர், ''அவர்கள் இருவருக்கும் தனியாக வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. மார்ச் 10-ம் தேதி வரை அளிக்கப்படும் பணம் இருவருக்கும் சமமாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்படும். மக்கள் தங்களால் முடிந்த அளவு உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தனிப்பட்ட வகையில் நான், வீரர் ஒருவரின் மகளுடைய கல்விச் செலவை ஏற்கிறேன். அவரின் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கான செலவையும் ஏற்றுக் கொள்கிறேன்'' என்று இனாயத் கான் தெரிவித்துள்ளார்.