அத்தியாயம் - 35
“ஹலோ அம்மா! எப்படியிருக்கீங்க?” உற்சாகத்துடன் கேட்டான் விஜய்மித்ரன்.
“நாங்க எல்லோரும் நல்லா இருக்கோம். நீ எப்படியிருக்க? எப்போ இங்கே வர்ற?”
“என்னைத் தான் அந்தப் பக்கமே தலைய வச்சிப் படுக்காதேன்னு சொல்லிட்டீங்களே…” என்றான் வேண்டுமென்றே.
“ம், நான் சொன்னதும் நீ கேட்டுடுவ. அப்படித்தானே…” வித்யாவும் வீம்பாக மகனிடம் வார்த்தையாடினார்.
“எத்தனை விஷயத்தில் அப்படிக் கேட்கலன்னு சொல்லுங்களேன் பார்ப்போம்” என்றான் விடாமல்.
“அதுக்குப் பத்து விரல் போதாதே…” என்றார் சிரிப்புடன்.
“என்கிட்ட பத்து விரல்கள், உங்ககிட்ட பத்து விரல்கள்ன்னு இருபது விரல்கள் இருக்கே… இன்னுமா தேவைப்படும்?” என்ற மகனின் வாதத்திற்குக் கிளுக்கெனச் சிரித்தார் வித்யாவதி.
“உன்கிட்ட பேசமுடியாதே…” என்றவர், “சரி, சொல்லு. எப்போ வர்ற? விடிஞ்சா நியூ இயர். தாத்தாவும் நீ வர்றதைப் பத்திக் கேட்டாங்க” என்றார்.
“ம், அதுக்குத் தான் இந்த என்கொயரியா?” எனச் சிரித்தவன், “சரி, அப்படியே போர்ட்டிக்கோவைக் கொஞ்சம் எட்டிப் பாருங்களேன்” என்றான்.
“போர்ட்டிக்கோவா…” என்று ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டே வந்து கதவைத் திறந்தவர், மகனின் கார் வந்து நிற்பதைப் பார்த்ததும் சிரிப்புடன் வெளியே வந்தார்.
“ஹா ஹா நீங்க நினைச்சாது போலவே வந்துட்டேனா…” எனச் சிரித்தான்.
“வர்றவன் கொஞ்சம் நேரத்தோட கிளம்பி வரக்கூடாதா! சரி கைகால கழுவிக்கிட்டு வா சாப்பிடலாம். மணி மூணாகப் போகுது” மகனைப் பார்த்தச் சந்தோஷத்தில் உற்சாகத்துடன் பேசினார் வித்யா.
“ம், கொஞ்சம் வேலை இருந்ததும்மா!” என்றவன், “வீடே அமைதியா இருக்கு. அப்பாவும், குட்டி ராட்சஷியும் எங்கே?” எனக் கேட்டான்.
“அப்பாவைத் தாத்தா எங்கேயோ அனுப்பி வச்சிருக்காங்க. பவி ஏதோ ஷாப்பிங் போறேன்னு கிளம்பிப் போயிருக்கா” என்றவர், “உன் தம்பி எங்கேன்னு விசாரிக்கலயா?” எனக் கேட்டார் அவனது அன்னை.
“அவன் வழக்கம் போல பைக்கை எடுத்துகிட்டு ரைட் போயிருப்பான்…” என சிரித்துக்கொண்டே சொன்னவன், “நீங்க லஞ்ச் எடுத்து வைங்கம்மா! நான் போய்த் தாத்தாவைப் பார்த்துட்டு வந்திடுறேன்!” என்றபடி எழுந்தான்.
“தாத்தா இப்போதான் படுத்தாங்க…”
“நான் சத்தம் போடாம பார்த்துட்டு வந்திடுறேன்” என இரகசியமாகச் சொல்லிவிட்டுச் செல்லும் மூத்த மகனை, மெச்சுதலுடன் பார்த்துவிட்டுச் சமையலறைக்கு நகர்ந்தார்.
மெல்லக் கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே சென்றவன், அலுங்கிய தோற்றத்துடன் கண்களை மூடி ஈஸி சேரில் உறங்கிக்கொண்டிருந்த தாத்தாவைப் பார்த்தான்.
சுறுசுறுவென சுற்றித் திரிந்தே பார்த்தவரை, இப்படி ஒடுங்கிய உருவமாகக் காண அவனுக்கு வேதனையாக இருந்தது.
‘மூப்பு ஒரு காரணமாக இருந்தாலும், ஆறே மாதங்களில் ஒருவர் இத்தனைச் சீக்கிரத்தில் தளர்ந்துவிடுவாரா!’ என்ற கேள்வியும் எழுந்தது.
பெருமூச்சுடன் கதவை நோக்கி நடந்தவனை, “இந்தர்!” என அழைத்தார் இராமநாதன்.
சட்டெனத் திரும்பியவன், “தாத்தா! நான் மித்ரன்” என்றபடி அவரை நெருங்கியவன் அவரது கரத்தைப் பற்றிக்கொண்டான்.
“மித்ரன்!” என்றவரது குரலில், மனச்சோர்வையும் மீறி பேரனைக் கண்டுவிட்ட சந்தோஷத்துடன் வெளிப்பட்டது.
“என்ன தாத்தா இப்படிச் சோர்ந்து போய் உட்கார்ந்திருக்கீங்க? நல்லா காலை நீட்டிக் கட்டில்ல படுத்துக்கலாம் இல்ல” என்றான்.
“எனக்கென்னப்பா சோர்வு! நீங்கள்லாம் என் பக்கதிலேயே இருக்கீங்களே…” என்றவரது குரலில் தொணித்த சிறு விரக்தியை அவன் கண்டுகொண்டான்.
மிருதுவாக புன்னகைத்தவன், “நீங்க நல்லா தூங்கி எழுந்து ஃப்ரெஷாகி வாங்க தாத்தா! ஈவ்னிங் பேசுவோம்” என அவரை எழுப்பி கட்டிலில் படுக்கவைத்துவிட்டு, கதவை மூடிக்கொண்டு வெளியே சென்றான்.
ஏதோ யோசனையுடனேயே, தட்டிலிருந்த சால்ட்டை எடுத்துச் சுவைத்துக் கொண்டிருந்தான் மித்ரன்.
“கிச்சடி ஆறிப்போகுது. சாப்பிடாம என்ன யோசனை?” என்றபடி மகனின் தட்டில் ஃபுல்காவை வைத்துவிட்டு அவனருகில் அமர்ந்தார் வித்யாவதி.
“ம்” என்றபடி திரும்பி அன்னையைப் பார்த்தவன், “நீங்க எல்லோரும் சேர்ந்து என்ன விஷயத்தை என்கிட்ட மறைக்கறீங்க?” என நேரடியாகக் கேட்டான்.
இந்தக் கேள்வியை எதிர்பார்த்திருந்த வித்யா, “நீயா ஏதாவது யோசிக்காதே. சாப்பிடும்போது எதையும் நினைக்காம சாப்பிடு” என்றார்.
“அப்போ, விஷயம் ரொம்பப் பெரிசு. அப்படித்தானே…” என்ற மகனைப் பார்த்தார்.
நீண்ட பெருமூச்சை வெளியிட்டவர், “தாத்தாவோட அனுமதியில்லாம, இப்போதைக்கு என்னால எதையும் சொல்ல முடியாதுப்பா” என்ற அன்னையை ஆழ்ந்து பார்த்தான்.
“அம்மா! நான் விஷயத்தைத் தெரிஞ்சிக்கக் கேட்கல. என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்ணத்தான் கேட்கறேன். தாத்தாவோட மனசுல அப்படி என்னயிருக்கு? அதுவும், எங்களுக்குத் தெரியக்கூடாதுன்னு நினைக்கிற அளவுக்கு” என்றான் ஆற்றாமையுடன்.
வித்யாவதி பதிலேதும் சொல்லாமல், மடியில் கோர்த்திருந்த கரங்களைப் பார்த்தார்.
“எனக்கும், உங்ககிட்ட எதையும் மறைக்கணுங்கற எண்ணம் இல்ல மித்ரன்! இவ்வளவு நாள் பொறுத்துக்கிட்டீங்க இல்ல. இன்னும் கொஞ்சநாள் காத்திருங்க. நம்ம தாத்தாவுக்காக…” என்றவர் ஆதரவுடன் மகனின் இடது கரத்தைப் பற்றினார்.
மித்ரன் ஏதோ சொல்லத் துவங்கும் முன், “ஹலோ ப்ரோ! எப்ப வந்தீங்க?” பைக் சாவியைச் சுழற்றிக்கொண்டே, அண்ணனின் எதிரில் வந்து அமர்ந்தான் இந்தர்.
“ஹாய்டா! அரைமணி நேரம் ஆகுது” எனத் தம்பிக்குப் பதிலளித்தான்.
“ரெண்டு பேரும் பேசிட்டிருங்க. ஃப்ரிட்ஜ்ல கீர் வச்சிருக்கேன் எடுத்துட்டு வந்திடுறேன்” என அங்கிருந்து எழுந்து சென்றார் வித்யா.
“அம்மா! எனக்கும் ஒரு கப் கொண்டுவாங்க… உங்க சீமந்தப் புத்திரனைப் பார்த்ததும் என்னை மறந்துடாதீங்க” என்றான் இந்தர்.
“இந்த வக்கணைல குறைச்சல் இல்ல…” என சலித்துக்கொண்டே அவர் செல்ல, “நாம யாரு… சிவராமனோட பிளட் இல்லயா” என்று பி.எஸ் வீரப்பாவைப் போல ஒரு சிரிப்புச் சிரித்தான்.
அண்ணனின் பக்கமாகத் திரும்பியவன், “என்னண்ணா! உன்கிட்டயாவது ஏதாவது சொன்னாங்களா?” எனக் கேட்டான்.
“உனக்குச் சொன்ன அதே பதில்தான் எனக்கும்” என்றான் மித்ரன்.
“அப்படியா!” என சலிப்புடன் தலையை அசைத்தவன், “அப்போ நம்ம வீட்ல நம்ம ரெண்டு பேரையும் ஒரே மாதிரிதான் ட்ரீட் பண்றாங்களா! இது தெரியாம இவ்வளவு நாள் என்மேல பாசமே இல்லன்னு நினைச்சி ஃபீல் பண்ணிட்டேனே” எனப் போலியாக அலுத்துக்கொண்ட பேசிய சகோதரனை மௌனமாகப் பார்த்தான் மித்ரன்.
ஓரக்கண்ணால் தமையனைப் பார்த்தவன், “சியர் அப் ப்ரோ! என்னைக்கா இருந்தாலும் விஷயம் வெளியே வந்துதான் ஆகணும். இன்னும் மூணு நாள் நான் இங்கே இருக்கப்போறேன் இல்ல… எப்படியாவது விஷயத்தைக் கறக்கப் பார்க்கறேன்” என்றான் சமாதானமாக.
“ம்” என்றவன், “இன்னும் மூணு நாள் இங்கே என்னடா செய்யப்போற? ஆஃபிஸைப் பார்க்கணும்னு, அக்கறையே இல்லயா. அப்பாவும் இங்கே இருக்காங்க. நீயாவது வரலாமில்ல” என்றான்.
“அடப்போங்க ப்ரோ! எப்போ சுமி கண்ணுல படுவேன்னு நானே தலைமறைவா இருக்கேன்” என்றவனை முறைத்துப் பார்த்தான்.
“என்னடா ரொம்ப உரிமையா சுமிங்கற?” என்றான்.
விஷமமாகச் சிரித்த இந்தர், “என்னோட ஸ்டாஃப் தானே. அதோட, என்னைவிட ரெண்டு வயசு சின்னப் பொண்ணு வேற. அப்புறம் என்ன?” என்றான்.
மித்ரன் எதுவும் சொல்லாமல் அவனது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“ஆனா, ஆளு செம ஷார்ப்! அன்னைக்கு மால்ல அவங்களைப் பார்த்ததுல இருந்து இந்த ஆதியும் அவங்களுக்குப் பயந்துகிட்டு நாலு நாளா ஃபேக்ட்ரியே கதின்னு இருக்கானாம். எனக்குப் போன் பண்ணி, உங்க கம்பெனில வந்து சேர்ந்த பாவத்துக்காக அண்ணனும், தம்பியுமா சேர்ந்து இந்த அப்பாவியோட வாழ்க்கைல விளையாடுறீங்களேன்னு புலம்பறான். எனக்கே அவனைப் பார்க்கக் கொஞ்சம் பாவமாதான் இருந்தது” என்றான் பாவனையுடன்.
“உன்னை யாருடா அந்தக் காரை எடுத்துட்டுப் போகச் சொன்னது? எடுத்துட்டுப் போன சரி. அவளுக்கு முன்னால போய் நிப்பியா நீ!” எனக் கடுகடுத்தான்.
“ஏன் கேட்கமாட்டீங்க? நான் கேட்க வேண்டிய கேள்வியை நீங்க கேட்கறீங்க. வீட்ல எத்தனைக் கார் இருக்கு. நீங்க வேற காரை எடுத்துட்டுப் போக வேண்டியது தானே. என்னவோ காருக்கு வாட்ச்மேன் மாதிரி அங்கேயே நின்னுட்டிருந்தா நான் என்ன செய்றது?” எனக் கேட்டவன் தங்களது அன்னை வருவதைக் கண்டதும் சப்தமாக, “அப்புறம் ப்ரோ! உங்க ப்ரொஃபசரோட பொண்ணு என்ன சொல்றாங்க?” என விசாரித்தான்.
கீர் அடங்கிய கப்பை இருவருக்கும் கொடுத்த வித்யாவதி, “ஆமாம் மித்ரன் நானே கேட்கணும்னு நினைச்சேன். அந்தப் பொண்ணு எப்படியிருக்கா?” எனக் கேட்டார்.
“ம், நல்லாயிருக்கா” எனத் தம்பியை முறைத்துக்கொண்டே சொன்னவன், “உங்ககிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும்” என்றவன் மித்ரா அவர்களது அலுவலகத்தில் வேலை செய்வது வரை சொல்லவேண்டியதை மட்டும் சொல்லி முடித்தான்.
“ஓஹ்! இவ்வளவு விஷயம் நடந்திருக்கா. நல்லவேலை செய்த. பாவம். சின்னப் பொண்ணு. நாங்க ஜெய்பூருக்கு வந்ததும், அவளை ஒரு நாளைக்கு வீட்டுக்குக் கூட்டிட்டு வாப்பா!” என்றார்.
“ம், சரிம்மா!” என்றான் மித்ரன்.
“என்ன அம்மா நீங்க? உங்க பையன், உங்களுக்குத் தெரியாம பேப்பர்ல அட் கொடுத்து இண்டர்வியூ வச்சி, வேலைக்கும் ஒரு பொண்ணை சேர்த்திருக்கார். ஏன்னு கேட்காம நல்ல வேலை செய்தன்னு பாராட்டு பத்திரம் கொடுக்கறீங்க…” என்றான் இந்தர்.
“போதும்டா திருடா! நீயும் தானே கூட்டுக்களவாணி வேலை பண்ண?” என்றதும், அசடு வழிய சிரித்தான்.
“உங்க அண்ணன் எது செய்தாலும், அதுல நியாயம் இருக்கும்” என்றவர் பெரியவனைப் பார்த்துச் சிரித்தார்.
“ஹப்பா! நீ டெபாசிட் இழந்த வேட்பாளராகிட்ட. இனி அடக்கி வாசிப்பா!” என தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்.
“இவன் ஒருத்தன் சும்மா…” என்றவர், “அந்தப் பொண்ணு, ப்ரொஃபசர் பொண்ணுன்னே சொல்லிட்டிருக்கோம். அவளோட பேர் என்னடா?” எனக் கேட்டார்.
மித்ரன் வாயைத் திறக்கும் முன்பே, “மித்ராம்மா! மித்ரா!” என்றான் இந்தர்.
“மித்ராவா!” என ஆச்சரியமாகச் சொன்னவர், மூத்த மகனின் முகத்தைப் பார்த்தார்.
அவனோ, மும்முரமாக அன்னையின் கைப்பக்குவத்தில் தயாரான கீர் –ஐச் சுவைத்துக் கொண்டிருந்தான். சற்றுநேரம் அவனது முகத்தையே பார்த்தவர், திரும்பி இளைய மகனைப் பார்த்தார். அவனும் அன்னையின் பார்வையைப் புரிந்துகொண்டு, அதை ஆமோதிப்பதைப் போல மெல்லப் புன்னகைத்தான்.
“அவளோட போட்டோ இருந்தா காட்டேன் மித்ரன்!” என்றார் ஆசையுடன்.
இந்தர் குறுகுறுவென அண்ணனைப் பார்க்க, “போட்டோவா! என்கிட்ட ஏதும்மா? நீங்க ஜெய்பூர் வந்ததும், நேர்லயே கூட்டிட்டு வந்து அறிமுகப்படுத்தறேன்” என்றான்.
“அப்போ உன்கிட்ட போட்டோ இல்ல…” எனக் கேட்டவருக்கு, “இல்ல” என்று கறாராகச் சொல்லிவிட்டு எழுந்து சென்றான்.
மெல்ல அன்னையின் அருகில் வந்து அமர்ந்த இந்தர், “நீங்க இப்படிக் கேட்டிருக்கக்கூடாதும்மா! உன் மொபைல்லை போட்டோ வச்சிருப்பியே அதைக் காட்டுன்னு கேட்டிருக்கணும்” என்றான்.
புருவத்தை உயர்த்தி கேள்வியாகப் பார்த்தவர், “டேய்! நீதானே அவனுக்குப் போன் பண்ணி வரச்சொன்ன?” எனக் கேட்டார்.
“மாம்! திஸ் இஸ் டூ டூ மச்! என்னைப் போய் இப்படிச் சந்தேகப்படலாமா? மீ பாவம்” என்றான்.
“சந்தேகமெல்லாம் இல்ல. உறுதியாவே சொல்றேன். மித்ரன்கிட்ட நீதான் ஏதோ சொல்லியிருக்க. கீர் எடுத்துடு வர்றதுக்கு எனக்கு அவ்வளவு நேரமாகுமா! நீ என்ன பண்றன்னு பார்க்கத்தான் அவ்வளவு நேரம் உள்ளேயே இருந்தேன். பெரியவங்களுக்குத் தெரியும் உங்ககிட்ட எதைச் சொல்லணும், சொல்லக்கூடாதுன்னு. புரிஞ்சிதா!” என்றார்.
அவன் விழித்தபடி தலையை ஆட்ட, அங்கிருந்து எழுந்து சென்றார் வித்யாவதி.
“ஹப்பா! இந்த லேடீஸெல்லாம் பின் லேடிங்களா இல்ல இருக்காங்க. பத்திரமா இருந்துக்கடா இந்தர்!” எனத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்.
மாலையில் எழுந்து வந்த தாத்தாவுடன், பேரன்கள் இருவரும் பேசிப் பேசி அவரைச் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தனர்.
“ரொம்ப நாளைக்குப் பிறகு, மனசுவிட்டுச் சிரிக்கிறேன் மித்ரன்!” என்ற பெரியவரை ஆறுதலுடன் அணைத்துக்கொண்டான் பேரன்.
“அதுக்குத்தான் நம்ம வீட்டுக்கு வந்திடுங்கன்னு சொல்றேன். நீங்களும் அங்கே வந்துட்டா எல்லோருக்குமே சந்தோஷம். நீங்களும் இப்படிச் சிரிச்சிகிட்டே இருக்கலாம். நாங்களும் நிம்மதியாக இருப்போம்” என்றான்.
“மனுஷன் வெளியே சிரிக்கிறா மாதிரி காட்டிக்கிட்டாலும், மனசுக்குள்ள இருக்கற சுமை உள்ளுக்குள்ள இருந்தே கொல்லுதே. சோகத்திலேயே பெரிய சோகம் புத்திர சோகம்னு தெரியாமலா சொன்னாங்க” மனம் சற்று இலகுவாக தன்னையறியாமல் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட பேரன்கள் இருவரும், ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
“ஓஹ் கிராண்ட்ப்பா! நடக்கறதெல்லாம் நல்லதுக்குன்னு நீங்கதானே சொல்வீங்க. நீங்களே இப்படி மனசொடிஞ்சி போனா எப்படி? சியர் அப்! பிறக்கப் போற புது வருஷம் நம்ம எல்லோருக்கும் நல்லதையே கொடுக்கும்னு நம்புவோமே!” என்றான் இந்தர்.
மெல்லத் தலையை அசைத்தவர், “நம்புவோம்! நம்பிக்கை தான் வாழ்க்கை. நம்பிக்கைத்தான் தெய்வம்” என்று மெலிதாகப் புன்னகைத்தார்.
“எஸ் தாத்தா!” என்றபடி பேரன்கள் இருவரும் பாட்டனாரை அணைத்துக்கொள்ள, அவரும் பாசத்துடன் அவர்களை உச்சிமோர்ந்தார்.
“சித்தப்பா சீக்கிரமே நம்ம கூட வந்திடுவாங்கன்னு எனக்கு நம்பிக்கை வந்துடுச்சி. மித்ரன் முன்னமே வந்திருந்தா, எப்பவோ இது நடந்திருக்கும்” என்ற கணவனைப் பார்த்துச் சிரித்தார் வித்யாவதி.
“என்ன சிரிக்கிற?”
“இதைத்தான் நான் ஆரம்பத்திலேயே சொன்னேன். பார்த்துட்டே இருங்க சீக்கிரமே மாமாகிட்டயிருந்து அவன் விஷயத்தையும் வாங்கிடுவான்” என்றார் பெருமையாக.
“ஏன் நீயேதான் சொல்லிடேன்” என்றார் சிவராமன்.
“மாமா பேச்சை மீற, நான் தயாரா இல்ல. அவங்களே சொல்லட்டும்” என்றார்.
“என்ன கணக்கோ உன் கணக்கு” என்ற சிவராமன், “அப்பா! அம்மா! ஹேப்பி நியூ இயர்” என்ற மகளின் கூச்சலில் தானும் உற்சாகமாக பங்கெடுத்துக்கொண்டார்.
“ஹேப்பி நியூ இயர் தாத்தா!” என்ற பேரன்களின் தலையைத் தடவிக்கொடுத்து, “ஹேப்பி நியூ இயர் மை சில்ட்ரன்” எனச் சிரித்தார் இராமநாதன்.
பூஜையறையில் விளக்கேற்றி வைத்து வணங்கிவிட்டு வந்த அனைவருக்கும் இனிப்பை வழங்கினார் வித்யாவதி.
“சரிசரி, நேரத்தோட தூங்குங்க. காலைல எழுந்து கோவிலுக்குப் போகணும்” என்றார்.
“ஓகே… குட் நைட்” என இந்தர் எழுந்து செல்ல, தாத்தாவுடன் அவரது அறைக்குச் சென்ற மித்ரன் அவர் உறங்கும் வரை பக்கத்திலேயே அமர்ந்திருந்தான்.
அவர் உறங்கிவிட்டதை உறுதிபடுத்திக்கொண்டு வெளியே வந்தவன், பெற்றோரின் அறைக்கதவைத் தட்டினான்.
உறங்காமல் விழித்திருந்த வித்யா கதவைத் திறந்தார். அவரது பார்வை, உன்னை எதிர்பார்த்தேன் என்று கூறுவதைப் போலிருந்தது.
“அம்மா! நான் ஜெய்பூர் கிளம்பறேன்” என்றான்.
அதைச் சற்றும் எதிர்பார்க்காதவர், “இந்த நேரத்திலேயா!” என கேட்டார்.
“டோண்ட் வொர்ரிம்மா! நான் பார்த்துக்கறேன். உங்க பர்மிஷன் மட்டும் போதும்” என்றான்.
தாய் அறியாத சூலா! அவனது முகத்தில் தெரிந்த பரிதவிப்பைக் கண்டு சிரித்துக்கொண்டார் வித்யாவதி.
“இன்னைக்கு என்ன புதுசா பர்மிஷனெல்லாம். எத்தனையோ முறை நோட் எழுதி வச்சிட்டுக் கிளம்பிடுவியே!” என்றார் கேள்வியாக.
“ம், இன்னைக்கு ஸ்பெஷல் டே இல்லயா!” என்றவன், “நாளைக்கு ப்ரொஃபசரோட பொண்ணைப் பார்க்கப் போறேன்ம்மா! தனியா இருக்கறதை நினைச்சி ஃபீல் பண்ணுவா. அதான்…” என இழுத்தான்.
கைகளைக் கட்டிக்கொண்டு மகனை ஆழ்ந்த பார்வை பார்த்தவரது இதழ்களில் புன்னகை உறைந்திருந்தது.
“ம், நீயா வாயைத் திறந்து என்கிட்ட எதுவும் சொல்லமாட்ட…” என்றார்.
தலையைக் கோதிக்கொண்டவன், “அவள் இன்னும் எனக்குச் சரியா பிடிகொடுக்கலம்மா! அவள் ஓகேன்னு சொல்லட்டும். முதல்ல உங்களுக்குத் தான் சொல்வேன்” என்றான்.
“ஹும்! போட்டோ கூட காட்டமாட்ட…” என்றார் போலியான வருத்தத்துடன்.
“என் மொபைல்லயிருந்த போட்டோ எப்படியோ டெலிட் ஆகிடுச்சி. போட்டோவைக் காட்டுறதுல எனக்கென்ன தயக்கம் இருக்கு” என்றான்.
“சரி, என் மருமகளை நான் நேர்லயே பார்த்துக்கறேன்” என்று பெருமூச்சு விட்டவர், “அவளுக்கு நியூ இயர் விஷ் பண்ணினேன்னு சொல்லு” எனச் சிரித்துக்கொண்டே சொன்னார்.
“தேங்க்யூம்மா! கண்டிப்பா சொல்லிடுறேன்” என்றவன், “இப்போதைக்கு வீட்ல யாருக்கும் தெரியவேணாம். ப்ளீஸ்!” என்றான்.
“ம், கிராண்டட்!” என்று புன்னகைத்தார்.
“ஓகேம்மா! பை” என்றவன தன் அறைக்குச் சென்றான்.
உடையை மாற்றிக்கொண்டு உற்சாகமாகச் செல்லும் மகனை மனங்குளிரப் பார்த்தார் வித்யாவதி.
************
‘இந்தப் புத்தாண்டின் முதல் நாள் உனக்காக பிறந்ததென நம்பிக்கைக் கொள். அந்த நம்பிக்கை உன்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்தும், தைரியப்படுத்தும், தன்னம்பிக்கைக் கொள்ளச் செய்யும். உனது ஆக்கங்கள் அனைத்தையும் வெற்றிபெறச் செய்யும். அன்புடன் உன் விஜய்!’
அவன் அனுப்பிய குறுஞ்செய்தியை மீண்டும் மீண்டும் படித்தவளுக்கு, உள்ளுக்குள் உற்சாகம் ஊற்றெடுத்தது.
எத்தனை முறை அதைப் படித்தாளென அவளுக்கே தெரியாத அளவிற்குப் படித்தாள் சுமித்ரா.
‘ஆனாலும், உனக்குக் கல் நெஞ்சம் சுமி! பதிலுக்கு ஒரு நன்றியாவது மெசேஜில் அனுப்பி இருக்கலாம்’ என தன்னையே திட்டிக்கொண்டாள்.
‘அதற்கு எதற்காகக் கவலை? விடிந்ததும் போன் செய்து ஒரு நன்றியைச் சொல்லிவிடலாமே…’ என மனம் சொல்ல, அதுவும் சரிதான் என்ற எண்ணத்துடன் படுத்தவளுக்கு உறக்கம் தான் வரமறுத்தது.
அவனிடம் பேசப்போகும் அந்தநேரத்தை எதிர்பார்த்து உறங்காமல் காத்திருந்தாள் அவள்.
“ஹலோ அம்மா! எப்படியிருக்கீங்க?” உற்சாகத்துடன் கேட்டான் விஜய்மித்ரன்.
“நாங்க எல்லோரும் நல்லா இருக்கோம். நீ எப்படியிருக்க? எப்போ இங்கே வர்ற?”
“என்னைத் தான் அந்தப் பக்கமே தலைய வச்சிப் படுக்காதேன்னு சொல்லிட்டீங்களே…” என்றான் வேண்டுமென்றே.
“ம், நான் சொன்னதும் நீ கேட்டுடுவ. அப்படித்தானே…” வித்யாவும் வீம்பாக மகனிடம் வார்த்தையாடினார்.
“எத்தனை விஷயத்தில் அப்படிக் கேட்கலன்னு சொல்லுங்களேன் பார்ப்போம்” என்றான் விடாமல்.
“அதுக்குப் பத்து விரல் போதாதே…” என்றார் சிரிப்புடன்.
“என்கிட்ட பத்து விரல்கள், உங்ககிட்ட பத்து விரல்கள்ன்னு இருபது விரல்கள் இருக்கே… இன்னுமா தேவைப்படும்?” என்ற மகனின் வாதத்திற்குக் கிளுக்கெனச் சிரித்தார் வித்யாவதி.
“உன்கிட்ட பேசமுடியாதே…” என்றவர், “சரி, சொல்லு. எப்போ வர்ற? விடிஞ்சா நியூ இயர். தாத்தாவும் நீ வர்றதைப் பத்திக் கேட்டாங்க” என்றார்.
“ம், அதுக்குத் தான் இந்த என்கொயரியா?” எனச் சிரித்தவன், “சரி, அப்படியே போர்ட்டிக்கோவைக் கொஞ்சம் எட்டிப் பாருங்களேன்” என்றான்.
“போர்ட்டிக்கோவா…” என்று ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டே வந்து கதவைத் திறந்தவர், மகனின் கார் வந்து நிற்பதைப் பார்த்ததும் சிரிப்புடன் வெளியே வந்தார்.
“ஹா ஹா நீங்க நினைச்சாது போலவே வந்துட்டேனா…” எனச் சிரித்தான்.
“வர்றவன் கொஞ்சம் நேரத்தோட கிளம்பி வரக்கூடாதா! சரி கைகால கழுவிக்கிட்டு வா சாப்பிடலாம். மணி மூணாகப் போகுது” மகனைப் பார்த்தச் சந்தோஷத்தில் உற்சாகத்துடன் பேசினார் வித்யா.
“ம், கொஞ்சம் வேலை இருந்ததும்மா!” என்றவன், “வீடே அமைதியா இருக்கு. அப்பாவும், குட்டி ராட்சஷியும் எங்கே?” எனக் கேட்டான்.
“அப்பாவைத் தாத்தா எங்கேயோ அனுப்பி வச்சிருக்காங்க. பவி ஏதோ ஷாப்பிங் போறேன்னு கிளம்பிப் போயிருக்கா” என்றவர், “உன் தம்பி எங்கேன்னு விசாரிக்கலயா?” எனக் கேட்டார் அவனது அன்னை.
“அவன் வழக்கம் போல பைக்கை எடுத்துகிட்டு ரைட் போயிருப்பான்…” என சிரித்துக்கொண்டே சொன்னவன், “நீங்க லஞ்ச் எடுத்து வைங்கம்மா! நான் போய்த் தாத்தாவைப் பார்த்துட்டு வந்திடுறேன்!” என்றபடி எழுந்தான்.
“தாத்தா இப்போதான் படுத்தாங்க…”
“நான் சத்தம் போடாம பார்த்துட்டு வந்திடுறேன்” என இரகசியமாகச் சொல்லிவிட்டுச் செல்லும் மூத்த மகனை, மெச்சுதலுடன் பார்த்துவிட்டுச் சமையலறைக்கு நகர்ந்தார்.
மெல்லக் கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே சென்றவன், அலுங்கிய தோற்றத்துடன் கண்களை மூடி ஈஸி சேரில் உறங்கிக்கொண்டிருந்த தாத்தாவைப் பார்த்தான்.
சுறுசுறுவென சுற்றித் திரிந்தே பார்த்தவரை, இப்படி ஒடுங்கிய உருவமாகக் காண அவனுக்கு வேதனையாக இருந்தது.
‘மூப்பு ஒரு காரணமாக இருந்தாலும், ஆறே மாதங்களில் ஒருவர் இத்தனைச் சீக்கிரத்தில் தளர்ந்துவிடுவாரா!’ என்ற கேள்வியும் எழுந்தது.
பெருமூச்சுடன் கதவை நோக்கி நடந்தவனை, “இந்தர்!” என அழைத்தார் இராமநாதன்.
சட்டெனத் திரும்பியவன், “தாத்தா! நான் மித்ரன்” என்றபடி அவரை நெருங்கியவன் அவரது கரத்தைப் பற்றிக்கொண்டான்.
“மித்ரன்!” என்றவரது குரலில், மனச்சோர்வையும் மீறி பேரனைக் கண்டுவிட்ட சந்தோஷத்துடன் வெளிப்பட்டது.
“என்ன தாத்தா இப்படிச் சோர்ந்து போய் உட்கார்ந்திருக்கீங்க? நல்லா காலை நீட்டிக் கட்டில்ல படுத்துக்கலாம் இல்ல” என்றான்.
“எனக்கென்னப்பா சோர்வு! நீங்கள்லாம் என் பக்கதிலேயே இருக்கீங்களே…” என்றவரது குரலில் தொணித்த சிறு விரக்தியை அவன் கண்டுகொண்டான்.
மிருதுவாக புன்னகைத்தவன், “நீங்க நல்லா தூங்கி எழுந்து ஃப்ரெஷாகி வாங்க தாத்தா! ஈவ்னிங் பேசுவோம்” என அவரை எழுப்பி கட்டிலில் படுக்கவைத்துவிட்டு, கதவை மூடிக்கொண்டு வெளியே சென்றான்.
ஏதோ யோசனையுடனேயே, தட்டிலிருந்த சால்ட்டை எடுத்துச் சுவைத்துக் கொண்டிருந்தான் மித்ரன்.
“கிச்சடி ஆறிப்போகுது. சாப்பிடாம என்ன யோசனை?” என்றபடி மகனின் தட்டில் ஃபுல்காவை வைத்துவிட்டு அவனருகில் அமர்ந்தார் வித்யாவதி.
“ம்” என்றபடி திரும்பி அன்னையைப் பார்த்தவன், “நீங்க எல்லோரும் சேர்ந்து என்ன விஷயத்தை என்கிட்ட மறைக்கறீங்க?” என நேரடியாகக் கேட்டான்.
இந்தக் கேள்வியை எதிர்பார்த்திருந்த வித்யா, “நீயா ஏதாவது யோசிக்காதே. சாப்பிடும்போது எதையும் நினைக்காம சாப்பிடு” என்றார்.
“அப்போ, விஷயம் ரொம்பப் பெரிசு. அப்படித்தானே…” என்ற மகனைப் பார்த்தார்.
நீண்ட பெருமூச்சை வெளியிட்டவர், “தாத்தாவோட அனுமதியில்லாம, இப்போதைக்கு என்னால எதையும் சொல்ல முடியாதுப்பா” என்ற அன்னையை ஆழ்ந்து பார்த்தான்.
“அம்மா! நான் விஷயத்தைத் தெரிஞ்சிக்கக் கேட்கல. என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்ணத்தான் கேட்கறேன். தாத்தாவோட மனசுல அப்படி என்னயிருக்கு? அதுவும், எங்களுக்குத் தெரியக்கூடாதுன்னு நினைக்கிற அளவுக்கு” என்றான் ஆற்றாமையுடன்.
வித்யாவதி பதிலேதும் சொல்லாமல், மடியில் கோர்த்திருந்த கரங்களைப் பார்த்தார்.
“எனக்கும், உங்ககிட்ட எதையும் மறைக்கணுங்கற எண்ணம் இல்ல மித்ரன்! இவ்வளவு நாள் பொறுத்துக்கிட்டீங்க இல்ல. இன்னும் கொஞ்சநாள் காத்திருங்க. நம்ம தாத்தாவுக்காக…” என்றவர் ஆதரவுடன் மகனின் இடது கரத்தைப் பற்றினார்.
மித்ரன் ஏதோ சொல்லத் துவங்கும் முன், “ஹலோ ப்ரோ! எப்ப வந்தீங்க?” பைக் சாவியைச் சுழற்றிக்கொண்டே, அண்ணனின் எதிரில் வந்து அமர்ந்தான் இந்தர்.
“ஹாய்டா! அரைமணி நேரம் ஆகுது” எனத் தம்பிக்குப் பதிலளித்தான்.
“ரெண்டு பேரும் பேசிட்டிருங்க. ஃப்ரிட்ஜ்ல கீர் வச்சிருக்கேன் எடுத்துட்டு வந்திடுறேன்” என அங்கிருந்து எழுந்து சென்றார் வித்யா.
“அம்மா! எனக்கும் ஒரு கப் கொண்டுவாங்க… உங்க சீமந்தப் புத்திரனைப் பார்த்ததும் என்னை மறந்துடாதீங்க” என்றான் இந்தர்.
“இந்த வக்கணைல குறைச்சல் இல்ல…” என சலித்துக்கொண்டே அவர் செல்ல, “நாம யாரு… சிவராமனோட பிளட் இல்லயா” என்று பி.எஸ் வீரப்பாவைப் போல ஒரு சிரிப்புச் சிரித்தான்.
அண்ணனின் பக்கமாகத் திரும்பியவன், “என்னண்ணா! உன்கிட்டயாவது ஏதாவது சொன்னாங்களா?” எனக் கேட்டான்.
“உனக்குச் சொன்ன அதே பதில்தான் எனக்கும்” என்றான் மித்ரன்.
“அப்படியா!” என சலிப்புடன் தலையை அசைத்தவன், “அப்போ நம்ம வீட்ல நம்ம ரெண்டு பேரையும் ஒரே மாதிரிதான் ட்ரீட் பண்றாங்களா! இது தெரியாம இவ்வளவு நாள் என்மேல பாசமே இல்லன்னு நினைச்சி ஃபீல் பண்ணிட்டேனே” எனப் போலியாக அலுத்துக்கொண்ட பேசிய சகோதரனை மௌனமாகப் பார்த்தான் மித்ரன்.
ஓரக்கண்ணால் தமையனைப் பார்த்தவன், “சியர் அப் ப்ரோ! என்னைக்கா இருந்தாலும் விஷயம் வெளியே வந்துதான் ஆகணும். இன்னும் மூணு நாள் நான் இங்கே இருக்கப்போறேன் இல்ல… எப்படியாவது விஷயத்தைக் கறக்கப் பார்க்கறேன்” என்றான் சமாதானமாக.
“ம்” என்றவன், “இன்னும் மூணு நாள் இங்கே என்னடா செய்யப்போற? ஆஃபிஸைப் பார்க்கணும்னு, அக்கறையே இல்லயா. அப்பாவும் இங்கே இருக்காங்க. நீயாவது வரலாமில்ல” என்றான்.
“அடப்போங்க ப்ரோ! எப்போ சுமி கண்ணுல படுவேன்னு நானே தலைமறைவா இருக்கேன்” என்றவனை முறைத்துப் பார்த்தான்.
“என்னடா ரொம்ப உரிமையா சுமிங்கற?” என்றான்.
விஷமமாகச் சிரித்த இந்தர், “என்னோட ஸ்டாஃப் தானே. அதோட, என்னைவிட ரெண்டு வயசு சின்னப் பொண்ணு வேற. அப்புறம் என்ன?” என்றான்.
மித்ரன் எதுவும் சொல்லாமல் அவனது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“ஆனா, ஆளு செம ஷார்ப்! அன்னைக்கு மால்ல அவங்களைப் பார்த்ததுல இருந்து இந்த ஆதியும் அவங்களுக்குப் பயந்துகிட்டு நாலு நாளா ஃபேக்ட்ரியே கதின்னு இருக்கானாம். எனக்குப் போன் பண்ணி, உங்க கம்பெனில வந்து சேர்ந்த பாவத்துக்காக அண்ணனும், தம்பியுமா சேர்ந்து இந்த அப்பாவியோட வாழ்க்கைல விளையாடுறீங்களேன்னு புலம்பறான். எனக்கே அவனைப் பார்க்கக் கொஞ்சம் பாவமாதான் இருந்தது” என்றான் பாவனையுடன்.
“உன்னை யாருடா அந்தக் காரை எடுத்துட்டுப் போகச் சொன்னது? எடுத்துட்டுப் போன சரி. அவளுக்கு முன்னால போய் நிப்பியா நீ!” எனக் கடுகடுத்தான்.
“ஏன் கேட்கமாட்டீங்க? நான் கேட்க வேண்டிய கேள்வியை நீங்க கேட்கறீங்க. வீட்ல எத்தனைக் கார் இருக்கு. நீங்க வேற காரை எடுத்துட்டுப் போக வேண்டியது தானே. என்னவோ காருக்கு வாட்ச்மேன் மாதிரி அங்கேயே நின்னுட்டிருந்தா நான் என்ன செய்றது?” எனக் கேட்டவன் தங்களது அன்னை வருவதைக் கண்டதும் சப்தமாக, “அப்புறம் ப்ரோ! உங்க ப்ரொஃபசரோட பொண்ணு என்ன சொல்றாங்க?” என விசாரித்தான்.
கீர் அடங்கிய கப்பை இருவருக்கும் கொடுத்த வித்யாவதி, “ஆமாம் மித்ரன் நானே கேட்கணும்னு நினைச்சேன். அந்தப் பொண்ணு எப்படியிருக்கா?” எனக் கேட்டார்.
“ம், நல்லாயிருக்கா” எனத் தம்பியை முறைத்துக்கொண்டே சொன்னவன், “உங்ககிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும்” என்றவன் மித்ரா அவர்களது அலுவலகத்தில் வேலை செய்வது வரை சொல்லவேண்டியதை மட்டும் சொல்லி முடித்தான்.
“ஓஹ்! இவ்வளவு விஷயம் நடந்திருக்கா. நல்லவேலை செய்த. பாவம். சின்னப் பொண்ணு. நாங்க ஜெய்பூருக்கு வந்ததும், அவளை ஒரு நாளைக்கு வீட்டுக்குக் கூட்டிட்டு வாப்பா!” என்றார்.
“ம், சரிம்மா!” என்றான் மித்ரன்.
“என்ன அம்மா நீங்க? உங்க பையன், உங்களுக்குத் தெரியாம பேப்பர்ல அட் கொடுத்து இண்டர்வியூ வச்சி, வேலைக்கும் ஒரு பொண்ணை சேர்த்திருக்கார். ஏன்னு கேட்காம நல்ல வேலை செய்தன்னு பாராட்டு பத்திரம் கொடுக்கறீங்க…” என்றான் இந்தர்.
“போதும்டா திருடா! நீயும் தானே கூட்டுக்களவாணி வேலை பண்ண?” என்றதும், அசடு வழிய சிரித்தான்.
“உங்க அண்ணன் எது செய்தாலும், அதுல நியாயம் இருக்கும்” என்றவர் பெரியவனைப் பார்த்துச் சிரித்தார்.
“ஹப்பா! நீ டெபாசிட் இழந்த வேட்பாளராகிட்ட. இனி அடக்கி வாசிப்பா!” என தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்.
“இவன் ஒருத்தன் சும்மா…” என்றவர், “அந்தப் பொண்ணு, ப்ரொஃபசர் பொண்ணுன்னே சொல்லிட்டிருக்கோம். அவளோட பேர் என்னடா?” எனக் கேட்டார்.
மித்ரன் வாயைத் திறக்கும் முன்பே, “மித்ராம்மா! மித்ரா!” என்றான் இந்தர்.
“மித்ராவா!” என ஆச்சரியமாகச் சொன்னவர், மூத்த மகனின் முகத்தைப் பார்த்தார்.
அவனோ, மும்முரமாக அன்னையின் கைப்பக்குவத்தில் தயாரான கீர் –ஐச் சுவைத்துக் கொண்டிருந்தான். சற்றுநேரம் அவனது முகத்தையே பார்த்தவர், திரும்பி இளைய மகனைப் பார்த்தார். அவனும் அன்னையின் பார்வையைப் புரிந்துகொண்டு, அதை ஆமோதிப்பதைப் போல மெல்லப் புன்னகைத்தான்.
“அவளோட போட்டோ இருந்தா காட்டேன் மித்ரன்!” என்றார் ஆசையுடன்.
இந்தர் குறுகுறுவென அண்ணனைப் பார்க்க, “போட்டோவா! என்கிட்ட ஏதும்மா? நீங்க ஜெய்பூர் வந்ததும், நேர்லயே கூட்டிட்டு வந்து அறிமுகப்படுத்தறேன்” என்றான்.
“அப்போ உன்கிட்ட போட்டோ இல்ல…” எனக் கேட்டவருக்கு, “இல்ல” என்று கறாராகச் சொல்லிவிட்டு எழுந்து சென்றான்.
மெல்ல அன்னையின் அருகில் வந்து அமர்ந்த இந்தர், “நீங்க இப்படிக் கேட்டிருக்கக்கூடாதும்மா! உன் மொபைல்லை போட்டோ வச்சிருப்பியே அதைக் காட்டுன்னு கேட்டிருக்கணும்” என்றான்.
புருவத்தை உயர்த்தி கேள்வியாகப் பார்த்தவர், “டேய்! நீதானே அவனுக்குப் போன் பண்ணி வரச்சொன்ன?” எனக் கேட்டார்.
“மாம்! திஸ் இஸ் டூ டூ மச்! என்னைப் போய் இப்படிச் சந்தேகப்படலாமா? மீ பாவம்” என்றான்.
“சந்தேகமெல்லாம் இல்ல. உறுதியாவே சொல்றேன். மித்ரன்கிட்ட நீதான் ஏதோ சொல்லியிருக்க. கீர் எடுத்துடு வர்றதுக்கு எனக்கு அவ்வளவு நேரமாகுமா! நீ என்ன பண்றன்னு பார்க்கத்தான் அவ்வளவு நேரம் உள்ளேயே இருந்தேன். பெரியவங்களுக்குத் தெரியும் உங்ககிட்ட எதைச் சொல்லணும், சொல்லக்கூடாதுன்னு. புரிஞ்சிதா!” என்றார்.
அவன் விழித்தபடி தலையை ஆட்ட, அங்கிருந்து எழுந்து சென்றார் வித்யாவதி.
“ஹப்பா! இந்த லேடீஸெல்லாம் பின் லேடிங்களா இல்ல இருக்காங்க. பத்திரமா இருந்துக்கடா இந்தர்!” எனத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்.
மாலையில் எழுந்து வந்த தாத்தாவுடன், பேரன்கள் இருவரும் பேசிப் பேசி அவரைச் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தனர்.
“ரொம்ப நாளைக்குப் பிறகு, மனசுவிட்டுச் சிரிக்கிறேன் மித்ரன்!” என்ற பெரியவரை ஆறுதலுடன் அணைத்துக்கொண்டான் பேரன்.
“அதுக்குத்தான் நம்ம வீட்டுக்கு வந்திடுங்கன்னு சொல்றேன். நீங்களும் அங்கே வந்துட்டா எல்லோருக்குமே சந்தோஷம். நீங்களும் இப்படிச் சிரிச்சிகிட்டே இருக்கலாம். நாங்களும் நிம்மதியாக இருப்போம்” என்றான்.
“மனுஷன் வெளியே சிரிக்கிறா மாதிரி காட்டிக்கிட்டாலும், மனசுக்குள்ள இருக்கற சுமை உள்ளுக்குள்ள இருந்தே கொல்லுதே. சோகத்திலேயே பெரிய சோகம் புத்திர சோகம்னு தெரியாமலா சொன்னாங்க” மனம் சற்று இலகுவாக தன்னையறியாமல் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட பேரன்கள் இருவரும், ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
“ஓஹ் கிராண்ட்ப்பா! நடக்கறதெல்லாம் நல்லதுக்குன்னு நீங்கதானே சொல்வீங்க. நீங்களே இப்படி மனசொடிஞ்சி போனா எப்படி? சியர் அப்! பிறக்கப் போற புது வருஷம் நம்ம எல்லோருக்கும் நல்லதையே கொடுக்கும்னு நம்புவோமே!” என்றான் இந்தர்.
மெல்லத் தலையை அசைத்தவர், “நம்புவோம்! நம்பிக்கை தான் வாழ்க்கை. நம்பிக்கைத்தான் தெய்வம்” என்று மெலிதாகப் புன்னகைத்தார்.
“எஸ் தாத்தா!” என்றபடி பேரன்கள் இருவரும் பாட்டனாரை அணைத்துக்கொள்ள, அவரும் பாசத்துடன் அவர்களை உச்சிமோர்ந்தார்.
“சித்தப்பா சீக்கிரமே நம்ம கூட வந்திடுவாங்கன்னு எனக்கு நம்பிக்கை வந்துடுச்சி. மித்ரன் முன்னமே வந்திருந்தா, எப்பவோ இது நடந்திருக்கும்” என்ற கணவனைப் பார்த்துச் சிரித்தார் வித்யாவதி.
“என்ன சிரிக்கிற?”
“இதைத்தான் நான் ஆரம்பத்திலேயே சொன்னேன். பார்த்துட்டே இருங்க சீக்கிரமே மாமாகிட்டயிருந்து அவன் விஷயத்தையும் வாங்கிடுவான்” என்றார் பெருமையாக.
“ஏன் நீயேதான் சொல்லிடேன்” என்றார் சிவராமன்.
“மாமா பேச்சை மீற, நான் தயாரா இல்ல. அவங்களே சொல்லட்டும்” என்றார்.
“என்ன கணக்கோ உன் கணக்கு” என்ற சிவராமன், “அப்பா! அம்மா! ஹேப்பி நியூ இயர்” என்ற மகளின் கூச்சலில் தானும் உற்சாகமாக பங்கெடுத்துக்கொண்டார்.
“ஹேப்பி நியூ இயர் தாத்தா!” என்ற பேரன்களின் தலையைத் தடவிக்கொடுத்து, “ஹேப்பி நியூ இயர் மை சில்ட்ரன்” எனச் சிரித்தார் இராமநாதன்.
பூஜையறையில் விளக்கேற்றி வைத்து வணங்கிவிட்டு வந்த அனைவருக்கும் இனிப்பை வழங்கினார் வித்யாவதி.
“சரிசரி, நேரத்தோட தூங்குங்க. காலைல எழுந்து கோவிலுக்குப் போகணும்” என்றார்.
“ஓகே… குட் நைட்” என இந்தர் எழுந்து செல்ல, தாத்தாவுடன் அவரது அறைக்குச் சென்ற மித்ரன் அவர் உறங்கும் வரை பக்கத்திலேயே அமர்ந்திருந்தான்.
அவர் உறங்கிவிட்டதை உறுதிபடுத்திக்கொண்டு வெளியே வந்தவன், பெற்றோரின் அறைக்கதவைத் தட்டினான்.
உறங்காமல் விழித்திருந்த வித்யா கதவைத் திறந்தார். அவரது பார்வை, உன்னை எதிர்பார்த்தேன் என்று கூறுவதைப் போலிருந்தது.
“அம்மா! நான் ஜெய்பூர் கிளம்பறேன்” என்றான்.
அதைச் சற்றும் எதிர்பார்க்காதவர், “இந்த நேரத்திலேயா!” என கேட்டார்.
“டோண்ட் வொர்ரிம்மா! நான் பார்த்துக்கறேன். உங்க பர்மிஷன் மட்டும் போதும்” என்றான்.
தாய் அறியாத சூலா! அவனது முகத்தில் தெரிந்த பரிதவிப்பைக் கண்டு சிரித்துக்கொண்டார் வித்யாவதி.
“இன்னைக்கு என்ன புதுசா பர்மிஷனெல்லாம். எத்தனையோ முறை நோட் எழுதி வச்சிட்டுக் கிளம்பிடுவியே!” என்றார் கேள்வியாக.
“ம், இன்னைக்கு ஸ்பெஷல் டே இல்லயா!” என்றவன், “நாளைக்கு ப்ரொஃபசரோட பொண்ணைப் பார்க்கப் போறேன்ம்மா! தனியா இருக்கறதை நினைச்சி ஃபீல் பண்ணுவா. அதான்…” என இழுத்தான்.
கைகளைக் கட்டிக்கொண்டு மகனை ஆழ்ந்த பார்வை பார்த்தவரது இதழ்களில் புன்னகை உறைந்திருந்தது.
“ம், நீயா வாயைத் திறந்து என்கிட்ட எதுவும் சொல்லமாட்ட…” என்றார்.
தலையைக் கோதிக்கொண்டவன், “அவள் இன்னும் எனக்குச் சரியா பிடிகொடுக்கலம்மா! அவள் ஓகேன்னு சொல்லட்டும். முதல்ல உங்களுக்குத் தான் சொல்வேன்” என்றான்.
“ஹும்! போட்டோ கூட காட்டமாட்ட…” என்றார் போலியான வருத்தத்துடன்.
“என் மொபைல்லயிருந்த போட்டோ எப்படியோ டெலிட் ஆகிடுச்சி. போட்டோவைக் காட்டுறதுல எனக்கென்ன தயக்கம் இருக்கு” என்றான்.
“சரி, என் மருமகளை நான் நேர்லயே பார்த்துக்கறேன்” என்று பெருமூச்சு விட்டவர், “அவளுக்கு நியூ இயர் விஷ் பண்ணினேன்னு சொல்லு” எனச் சிரித்துக்கொண்டே சொன்னார்.
“தேங்க்யூம்மா! கண்டிப்பா சொல்லிடுறேன்” என்றவன், “இப்போதைக்கு வீட்ல யாருக்கும் தெரியவேணாம். ப்ளீஸ்!” என்றான்.
“ம், கிராண்டட்!” என்று புன்னகைத்தார்.
“ஓகேம்மா! பை” என்றவன தன் அறைக்குச் சென்றான்.
உடையை மாற்றிக்கொண்டு உற்சாகமாகச் செல்லும் மகனை மனங்குளிரப் பார்த்தார் வித்யாவதி.
************
‘இந்தப் புத்தாண்டின் முதல் நாள் உனக்காக பிறந்ததென நம்பிக்கைக் கொள். அந்த நம்பிக்கை உன்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்தும், தைரியப்படுத்தும், தன்னம்பிக்கைக் கொள்ளச் செய்யும். உனது ஆக்கங்கள் அனைத்தையும் வெற்றிபெறச் செய்யும். அன்புடன் உன் விஜய்!’
அவன் அனுப்பிய குறுஞ்செய்தியை மீண்டும் மீண்டும் படித்தவளுக்கு, உள்ளுக்குள் உற்சாகம் ஊற்றெடுத்தது.
எத்தனை முறை அதைப் படித்தாளென அவளுக்கே தெரியாத அளவிற்குப் படித்தாள் சுமித்ரா.
‘ஆனாலும், உனக்குக் கல் நெஞ்சம் சுமி! பதிலுக்கு ஒரு நன்றியாவது மெசேஜில் அனுப்பி இருக்கலாம்’ என தன்னையே திட்டிக்கொண்டாள்.
‘அதற்கு எதற்காகக் கவலை? விடிந்ததும் போன் செய்து ஒரு நன்றியைச் சொல்லிவிடலாமே…’ என மனம் சொல்ல, அதுவும் சரிதான் என்ற எண்ணத்துடன் படுத்தவளுக்கு உறக்கம் தான் வரமறுத்தது.
அவனிடம் பேசப்போகும் அந்தநேரத்தை எதிர்பார்த்து உறங்காமல் காத்திருந்தாள் அவள்.