அனைவருக்கும் வணக்கம் நான் லக்ஷ்மி, சகோதரி சுதா ரவி அவர்கள் த்ரெட்டில் நான் எங்கோ வாசித்ததை, எனக்கு தெரிந்ததை உங்கள் வாழ்த்துக்களுடன் எழுதப் போகிறேன்.
கிரேக்க ஞானி ஒருவர், தமது சீடர்களிடம் ஓர் அழுகிய ஆரஞ்சு பழத்தைக் காட்டி, இதிலிருந்து சுவையான ஆரஞ்சுப் பழத்தை உருவாக்க முடியுமா? என்று கேட்டார், யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.
அப்போது அந்தக் கூடத்தை பெருக்கிக் கொண்டிருந்த வேலைக்கார பெண்மணி, முடியுமே என்றார்.
எப்படியம்மா என்று வியந்து கேட்டனர், அந்த அழுகிய ஆரஞ்சுப் பழத்தை உரித்து, அதிலிருந்த விதைகளை கவனுத்துடன் எடுத்தார். இவற்றை விதைத்தால் அவற்றிலிருந்து,புதிய சுவைமிக்க ஆரஞ்சுப் பழங்கள் தோன்றும் என்றார் அந்தப் படிப்பறிவில்லாத பெண்மணி.