Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript தெரிந்து கொள்வோம் | SudhaRaviNovels

தெரிந்து கொள்வோம்

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
லஷ்மி நிறைய புதிய விஷயங்களை பகிர்ந்திருக்கீங்க...மிகவும் நன்றிமா..தொடர்ந்து பகிருங்கள் ...
 

lakshmi

Active member
May 9, 2018
398
54
43
லஷ்மி நிறைய புதிய விஷயங்களை பகிர்ந்திருக்கீங்க...மிகவும் நன்றிமா..தொடர்ந்து பகிருங்கள் ...
Thank you sis???
 

lakshmi

Active member
May 9, 2018
398
54
43
காஞ்சி மகா பெரியவா அவதார தினம்

மகா பெரியவா என்று பக்த கோடிகளால் அன்புடன் அழைக்கப்படுபவர் காஞ்சி ஶ்ரீகாமகோடி பீடத்தின் 68 -வது பீடாதிபதியான ஶ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவதரித்த தினம் இன்று.

தமிழ்நாட்டில் தென்னாற்காடு மாவட்டம் விழுப்புரத்தில் 1894-ம் ஆண்டு மே மாதம் 20-ம் தேதி அனுக்ஷ நட்சத்திரத்தில் பிராமண குடும்பத்தில் பிறந்த மகா பெரியவா என்று அழைக்கப்படும் மகா ஸ்வாமிகளுக்கு பெற்றோர் இட்ட பெயர் ஸ்வாமி நாதன் என்பதாகும்.

நாடும் உலகமும் போற்றும் மாபெரும் துறவி,எளிய தவ வாழ்க்கை வாழ்ந்தவர்.ஆதி சங்கரரால் தோற்றிவிக்கப் பட்ட பரம்பரையில் இருந்து வந்த ஞானகுரு.


நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்து பக்தர்களுக்கு நன்னெறி புகட்டி அவர்களை நல்வழி படுத்திய மகான் அவர். மகா பெரியவா அவதரித்த தினமான இன்று அவரை வழிபட்டு பெரியவா ஆசியை வேண்டுவோமாக.
 

lakshmi

Active member
May 9, 2018
398
54
43
பூலோக கற்பக விருட்சம்


பனை மரத்தை பூலோக கற்பக விருட்சம் என்கிறார்கள். இதன் அனைத்து பகுதிகளும் மக்களுக்கு பயன் தருவதினால் பூலோக கற்பக விருட்சம் என்று அழைக்கப்படுகிறது.

வீடு கட்ட மரமும், உண்பதற்கு காய் கனிகளும், முன் காலத்தில் செய்திகளை ஆவணப்படுத்த அதன் ஓலைகளும், விசிறி, நார்ப் பொருட்கள், மருத்துவ குணம் கொண்ட பதநீர் என்று பனை மரத்தின் அத்தனை பாகங்களும் நமக்கு பயன் படுகிறது. இவை சிறந்த உயிர் வேலியும் கூட அதனால் இதை பூலோக கற்பக விருட்சம் என்கிறார்கள்.
 

lakshmi

Active member
May 9, 2018
398
54
43
அக்னிஜாதர்

முருகனை சாதாரணமாக ஒரு தலையுடனோ அல்லது ஆறுமுகத்துடனோ தரிசித்திருப்போம். ஆனால் இரண்டுதலை,மூன்றுதலை,நான்குதலை,ஐந்துதலை,பத்துதலை,பதினோருத் தலைகளையுடைய முருகனின் திருவடிகளும் உண்டு.


இவற்றுள் இருமுகங்களுடன் காட்சித் தரும் முருகனை அக்னிஜாதர் என்பார்கள். ஈரோட்டிலிருந்து 32கி.மீ தொலைவில் உள்ள சென்னிமலையில் அக்னிஜாதரை தரிசிக்கலாம்.