அத்தியாயம் -20
பத்த்ரனின் முயற்சிகள் ஒவ்வொன்றும் தோல்வியடைய, நவபாஷான லிங்கத்தை எடுக்கவில்லை என்றாலும் அவர்களை அழித்து விட வேண்டும் என்றெண்ணி தனது மொத்த சக்திகளையும் உபயோகிக்க ஆரம்பித்தான்.
விக்கிரம்னுக்கோ விடிவெள்ளி வரும் நேரம் நெருங்குகிறது, அதற்கு முன்னே அருவியின் அருகே செல்ல வேண்டும் என்கிற எண்ணம் உதயமாக, ரத்னாவிடம் திரும்பியவன் “ரத்னா! நான் இவனை கவனித்துக் கொள்கிறேன். நீ அருவியிடம் சென்று லிங்கத்தை எடுப்பதற்கு வன பத்ரகாளியிடம் அனுமதி கேள்” என்றான்.
சிந்தனையுடன் அவனைப் பார்த்தவள் “தங்களால் அவனை சமாளிக்க முடியுமா பிரபோ?” என்றாள்.
தனது கரத்துடன் இணைத்திருந்த அவளது கரத்தை அழுந்தப் பிடித்தவன் குறுநகையுடன் “பயம் வேண்டாம் ரத்னா...நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறி அவளை அங்கிருந்து போகச் செய்தான்.
மேகக் குடையைத் தாண்டி பத்ரனின் முன்பு சென்று நின்ற விக்கிரமன் தனது முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று “பத்ரா! இப்பொழுதாவது விழித்துக் கொள்! செய்த தவறுகளை எண்ணி மனம் திருந்தி மன்னிப்புக் கேள்! உன்னை விட்டு விடுகிறேன்” என்றான்.
தன் முன்னே நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்பவனை பார்த்த பத்ரன் காடே அதிர சிரித்து “சிறுவனே! எனக்கு நீ மன்னிப்பு அளிக்கிறாயா? ரத்னாவை என்னிடம் அளித்து விட்டு ஓடிப் போய் விடு” என்று மிரட்டினான்.
“என்னை மீறி அவள் மீது உன் சுண்டு விரல் கூட பட முடியாது பத்ரா” என்றவனை பலமாக வீசிய காற்று தூக்கி அந்தரத்தில் நிற்க வைத்தது.
அதக் கண்டு பலமாக சிரித்தவன் “சிறுவனே! என்னிடமே உனது வித்தையை காட்டுகிறாயா? ரத்னாவை என்னிடம் வரச் சொல்” என்றான்.
தான் நின்ற இடத்திலிருந்தே பத்ரனின் மீது தனது மந்திரத்தை பிரயோகிக்க, அடுத்த நிமிடம் அவன் கீழே உருண்டு கொண்டிருந்தான். அதைக் கண்டு சிரித்தபடி கீழே இறங்கி வந்த விக்கிரமன் “ஏழு ஜென்மங்களுக்கு முன்பு பார்த்த விக்கிரமன் அல்ல இவன்! எனது எண்ணங்கள் என்னை வழி நடத்தி வெற்றிக்கு அடிபோடுகிறது. உன்னை நீ மாற்றிக் கொள்” என்றான்.
இவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள, ரத்னா மெல்ல அருவியை நோக்கி முன்னேறினாள். விண்ணிலிருந்து வெள்ளியை உருக்கி ஊற்றியது போன்று, நிலவின் ஒளியில் ஊற்றிக் கொண்டிருந்த அருவியின் அருகே சென்று நின்றவள் இரு கை கூப்பி “தாயே! வன தேவதை! இங்கிருக்கும் பாஷான லிங்கத்தை எடுப்பதற்கு வழி காட்டுங்கள்” என்று கண் மூடி வேண்டினாள்.
சற்று நேரம் அருவியின் சப்தத்தை தவிர அங்கு எதுவுமில்லை. திடீரென்று பாறைகள் நகரும் ஓசை காடே அதிரும்படி கேட்டது. எதிரே ஊற்றிக் கொண்டிருந்த அருவியின் நடுவே பாறைகள் நகர்ந்து வழி விட்டிருந்தது.
அதைக் கண்டு வன பத்ரகாளிக்கு நன்றியைக் கூறிக் கொண்டு அருவியை நோக்கி நகர ஆரம்பித்தாள். விக்கிரமனும், பத்ரனும் சண்டையிட்டுக் கொண்டிருக்க, அருவியின் நடுவே பாறை அசைந்து இடம் கொடுத்ததை அறிந்து கொண்டவன், விக்கிரமனை விடுத்து ரத்னா இருந்த பக்கம் பாய்ந்தான்.
அருவியின் பக்கம் சென்று கொண்டிருந்தவளின் அருகே சென்று அவளது கரங்களைப் பற்றிக் கொண்டு வேகமாக அருவியினுள் பாய முயற்சித்தான். அவனது கரம் தனது மேனியில் பட்டதுமே உடல் இறுகி போனவள், அடுத்த நிமிடம் அவனை தூக்கி வீசி இருந்தாள்.
விழிகளை பெரிதாக்கி உருத்து விழித்தவள் விக்கிரமன் “விக்கிரமரே! அவனது உடலின் பாகங்கள் ஒவ்வொன்றையையும் கிழித்து திசைக்கொன்றாக வீசுங்கள். அவனது தலையைக் கிள்ளி அனலில் இடுங்கள். இதை எல்லாம் முடித்து விட்டு வாருங்கள். நான் தங்களுக்காக அங்கே காத்திருக்கிறேன்” என்று கூறி விட்டு விறுவிறுவென்று அருவியின் உள்ளே நுழைந்தாள்.
அவள் கூறிச் சென்றதும் அடுத்த நிமிடம் விக்கிரமனின் உருவம் கிடுகிடுவென்று உயர ஆரம்பித்தது. காட்டையே அடைத்துக் கொண்டவன் போல் நின்றிருந்தவன் பத்ரனை பிடித்து தனது இரு விரல்கால் தூக்கினான்.
அவனிடமிருந்து விடுபட்ட பத்ரன் துள்ளி குதித்து தனது உருவத்தையும் பெரிதாக்கி விக்ரமனின் எதிரே நின்றவன் அவனிடம் கடுமையாக சண்டயிட ஆரம்பித்தான். தன் பெற்ற சித்திகளை எல்லாம் அவனுக்கு எதிராக உபயோக்கிக்க, அதை எல்லாம் தூசி போல தட்டினான் விக்கிரமன்.
ஒரு கட்டத்திற்கு மேல் பத்ரனின் கரங்களைப் பிடித்து உடலிலிருந்து பியித்து எறிந்தான். அடுத்து கால்கள், உடலை இரு கூறுகளாக்கி திசைக்கொன்றாக வீசி எறிந்தவன், மீதமிருந்த தலையை எடுத்துக் கொண்டு பத்ரன் வளர்த்த ஹோம குண்டத்திற்கு சென்றான்.
அப்போதும் பத்ரனின் தலையானது “விக்கிரமா! நான் அழிவே இல்லாதவன்! எனது உயிர் இவ்வாறெல்லாம் போகாது” என்றுரைத்தான்.
இவை எல்லாம் நடந்து கொண்டிருக்க, அங்கே மரத்தின் பின்னே நடந்து கொண்டிருந்தவைகளை பார்த்துக் கொண்டிருந்த சுரேஷிற்கு மயக்கம் வரும் போலிருந்தது. தன்னைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஏதோ மேஜிக் ஷோவிற்குள் நுழைந்ததை போன்ற உணர்வை கொடுத்தது.
ஹோம குண்டத்தின் முன் அவனது தலையை நீட்டியவன் “உனது உயிரின் ரகசியத்தை நானறிவேன் பத்ரா” என்றவன் கண்களை மூடி “நந்திவர்மா! நான் இங்கே இந்த தலையை போடும் நேரம், அவனது உயிர் பறவை அங்கே அந்த சிலையை விட்டு பிரிந்திருக்க வேண்டும்” என்றான்.
அதைக் கேட்டதும் பதறி போன பத்ரனின் தலை “வேண்டாம் விக்கிரமா! என்னை விட்டு விடு” என்று கெஞ்சியது.
அதே நேரம் விக்கிரமனின் உடலில் இருந்து பிரிந்த நந்திவர்மனின் ஆன்மாவானது ஒளியின் வேகத்தை விட, பல மடங்கு வேகத்துடன் கல் மண்டப சிவன் கோவிலுக்குச் சென்று அங்கிருந்த கிளியினுள் புகுந்தது. அடுத்து அங்கிருந்து கிளியானது பத்ரனின் குகை நோக்கி பறந்து சென்றது. அங்கு வைக்கப்பட்டிருந்த காளியின் சிலை அருகே சென்ற கிளி, காளியின் நெஞ்சில் பதிக்கப்பட்டிருந்த ரத்தினத்தை தனது அலகால் ஓங்கி உடைத்து. அந்த ரத்தினம் உடைந்து அதிலிருந்து புகை மண்டலம் எழுந்து காற்றோடு கலந்தது.
அங்கே விக்கிரமனும் பத்ரனின் தலையை ஹோம குண்டத்தில் போட்டிருந்தான். குகையில் எழுந்த புகையும், ஹோமத்திலி எழுந்த புகையும் ஒன்றோடு ஒன்றாக கலந்து காற்றில் மறைந்தது.
பத்ரனின் குரல் மட்டும் அசிரீரியாக விக்கிரமனை அடைந்தது.
“இப்போது நீ ஜெயித்திருக்கலாம் விக்கிரமா! நீ எங்கிருந்தாலும் உன்னைத் தேடி நான் வருவேன்” என்றது இடி போல.
பெரும் நிம்மதியுடன் காதிலிருந்த குண்டலங்கள் ஆட, இதழில் சிறு புன்னகையுடன் தனது கம்பீரமான நடையுடன் அருவியை நோக்கிச் சென்றான்.
மரத்தின் பின்னே நின்றிருந்த சுரேஷ் அவனது கம்பீரத்தையும், தேஜஸையும் ரசித்தான். எதிரே சென்று கொண்டிருப்பவன் தான் ரிஷிவர்மன் என்பதையும் அறிந்து கொண்டான். இதைத் தான் சொன்னாரா அந்த சித்தர்? என்று சிந்தித்தபடி மேலும் சற்று முன்னேறி அருவியை பார்க்க ஆரம்பித்தான்.
அருவியின் அருகே சென்ற விக்கிரமன் ஒரே பாய்ச்சலில் அருவியினுள் நுழைந்து உள்ளே சென்றான். அங்கிருந்த குகையினுள் சற்று தூரம் நடந்தவன், ஓரிடத்தில் ரத்னா இரு கைகளையும் கூப்பி எதிரே இருந்த லிங்கத்தை தொழுது கொண்டிருப்பதை கண்டான்.
அவளருகே சென்றவனின் விழிகள் லிங்கத்தை ஆராய்ந்தது. லிங்கத்தின் மீது ஆறடி நீளமிருக்கும் கருநாகமொன்று படமெடுத்து கொண்டு இவர்களை பார்த்தது சீறிக் கொண்டிருந்தான். சின்னஞ்சிறிய லிங்கம் அந்த குகைக்கே வெளிச்சத்தை அளித்துக் கொண்டிருந்தது.
அருவியின் நடுவே இருந்த அந்த லிங்கத்திற்கு தினமும் யாரோ பூஜை செய்திருப்பதைப் போல, மலர்கள் கொட்டிக் கிடந்தது. தெய்வீகமாக இருந்த அந்த சூழ்நிலையில் ரத்னாவின் குரல் கலைத்தது.
“ஐயா சிவனே! ஜென்ம ஜென்மங்களாக உங்களை அடைவதற்காக பல போராட்டங்களை மேற்கொண்டோம். இதோ இன்று அனைத்தையும் வென்று உங்கள் முன்னே நிற்கின்றோம். தயை கூர்ந்து தங்களின் இருப்பிடம் செல்ல, எங்களிடம் வாருங்கள்” என்றாள்.
விக்கிரமனும் அவளுடன் இணைந்து நின்று “ஆம்! பிரபோ! தாங்கள் எங்களுடன் வர வேண்டும்” என்று கண்களை மூடி பிரார்த்தித்தான்.
அடுத்த நிமிடம் அந்த கருநாகம் அங்கிருந்து சரசரவென்று இறங்கி வந்து ரத்னாவிடம் வந்து மலர் ஒன்றை அவள் கையில் வைத்துவிட்டு நகர்ந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு எதிரே இருந்த லிங்கத்தைப் பார்க்க, லிங்கத்தின் நெற்றியிலிருந்து ஒளி ஒன்று குகை எங்கும் பரவ ஆரம்பித்தது. விக்கிரமன் தன்னிடமிருந்த கமடலத்திலி இருந்த நீரை லிங்கத்தின் மீது தெளித்து வணங்கினான்.
அந்நேரம் அசிரீரி “விக்கிரமா! எனை எடுத்து ரத்னாவின் கரங்களில் வை! இருவரும் ஒன்றாக சென்று கல் மண்டபத்தில் எனை பிரதிஷட்டை செய்யுங்கள்” என்றது.
இருவரும் முன்னே சென்று நிற்க, விக்கிரமன் லிங்கத்தை எடுத்து ரத்னாவின் கரங்களில் வைக்க, அவளது மேனியில் ஒரு தேஜஸ் வந்தது. விக்கிரமன் உடலிலும் ஒருவித புதிய உணர்வொன்றை உணர்ந்தான். இருவரும் லிங்கத்துடன் நடந்து அருவியை விட்டு வெளியேறி வனத்தினுள் நடக்க ஆரம்பித்தனர்.
அவர்களை வழிமறிக்க நினைத்த சுரேஷை தடுத்த முனியன் “இளவரசரும், இளவரசியும் கல் மண்பம் செல்லும் வரை யாரும் இடைமறித்தால் அந்த நிமிடமே மண்ணாகப் போவது உறுதி!” என்றான்.
அவனை முறைத்த சுரேஷ் “என்ன மிரட்டுறியா?” என்று கூறி முன்னே நடந்தவனின் கால்கள் இழுத்துக் கொண்டது.
அதைக் கண்டு சிரித்த முனியன் “அவர்களை தடுக்க நினத்ததற்க்கே இந்த கதி” என்றான்.
எதுவும் பேசாமல் அவர்களின் பின்னே நடக்க ஆரம்பித்தனர்.
பல காத தூரம் நடந்து கல் மண்டபம் அருகே செல்லும் போது நன்றாக விடியத் தொடங்கி இருந்தது. விடியலின் நேரம் நடந்து சென்ற இருவரையும் பார்க்கும் போது சிவனும், பார்வதியும் மண்ணில் இறங்கி வந்தது போலிருந்தது.
அவர்கள் கல் மண்டபத்தின் அருகே செல்லும் போது இருளர்கள் முழுவதும் அங்கு குழுமி இருந்தனர். அடுத்து ரத்னாவதியின் வம்சாவழியினரும் கூடி இருந்தனர். அவர்களின் நடுவே கருணாகரனும், உதயணனும் நின்றிருந்தனர்.
கையில் நவபாஷான லிங்கத்துடன் வந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்ததும் அனைவரும் மண்ணில் விழுந்து நமஸ்கரித்து “ஓம் நமசிவாய!” என்று சொல்ல ஆரம்பித்தனர்.
அவர்கள் கூறியது வனமெங்கும் ஒலிக்க ஆரம்பித்தது. ஆலயத்தின் மணிகள் தானாக ஒலிக்க ஆரம்பித்தது. அங்கு குடமுழுக்கு நடப்பது போன்ற உணர்வினை அளித்தது. இருவரும் ஒன்று போல பாதங்களை வைத்து உள்ளே நுழைய, இருவரின் கழுத்திலும் எங்கிருந்தோ மாலைகள் வந்து விழுந்தது. மேல தாளங்கள் இசைக்க, கணவன், மனைவியாக கருவறைக்குள் நுழைந்து கையிலிருந்த லிங்கத்தை வைக்க, அது அப்படியே பொருந்திக் கொண்டது.
லிங்கம் வைக்கப்பட்ட அந்த நொடி விண்ணில் பல ஜாலங்கள் நிகழ்ந்தது. கருவறையில் நின்றவர்களின் மீது பூமாரி பொழிய, இறைவனை வழிப்பட்டு தம்பதி சமேதராக கருவறையை விட்டு வெளியே வந்தனர்.
வெளியில் காத்திருந்த மக்கள் “விக்ரம ராஜா வாழ்க! ரத்னாவதி தேவியார் வாழ்க!” என்று முழக்கமிட்டனர்.
அவர்களின் முழக்கத்தில் தனதருகே நின்றவளைப் பார்த்தவனின் விழிகளில் அத்தனை காதல். ரத்னாவதியின் முகத்திலும் கம்பீரத்தை மீறி, சிறு துளி நாணம் வந்தமர்ந்து கொண்டது.
சூரிய ஒளி காட்டின் அடர்த்தியை மீறி கிழித்துக் கொண்டு உள்ளே வர, விக்கிரமன் மீதும், ரத்னாவதியின் மீது அந்த ஒளி விழ, இருவரும் ஒன்று போல மயக்கத்தில் வீழ்ந்தார்கள். அவர்கள் அப்படி விழுவார்கள் என்று காத்திருந்ததைப் போல மக்கள் உடனடியாக ஓடிச் சென்று அவர்களைத் தாங்கிக் கொண்டார்கள்.
அவர்களை தங்கள் குடிலுக்கு எடுத்துச் சென்று படுக்க வைத்துவிட்டு, அவர்களின் மயக்கத்தை தெளிவிக்க முயற்ச்சிக்கும் நேரம், அவர்களின் ஆடை அணிகலன்கள் அனைத்தும் மாறி, அங்கு ரிஷியும், சிந்துவும் படுத்திருந்தார்கள்.
பத்த்ரனின் முயற்சிகள் ஒவ்வொன்றும் தோல்வியடைய, நவபாஷான லிங்கத்தை எடுக்கவில்லை என்றாலும் அவர்களை அழித்து விட வேண்டும் என்றெண்ணி தனது மொத்த சக்திகளையும் உபயோகிக்க ஆரம்பித்தான்.
விக்கிரம்னுக்கோ விடிவெள்ளி வரும் நேரம் நெருங்குகிறது, அதற்கு முன்னே அருவியின் அருகே செல்ல வேண்டும் என்கிற எண்ணம் உதயமாக, ரத்னாவிடம் திரும்பியவன் “ரத்னா! நான் இவனை கவனித்துக் கொள்கிறேன். நீ அருவியிடம் சென்று லிங்கத்தை எடுப்பதற்கு வன பத்ரகாளியிடம் அனுமதி கேள்” என்றான்.
சிந்தனையுடன் அவனைப் பார்த்தவள் “தங்களால் அவனை சமாளிக்க முடியுமா பிரபோ?” என்றாள்.
தனது கரத்துடன் இணைத்திருந்த அவளது கரத்தை அழுந்தப் பிடித்தவன் குறுநகையுடன் “பயம் வேண்டாம் ரத்னா...நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறி அவளை அங்கிருந்து போகச் செய்தான்.
மேகக் குடையைத் தாண்டி பத்ரனின் முன்பு சென்று நின்ற விக்கிரமன் தனது முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று “பத்ரா! இப்பொழுதாவது விழித்துக் கொள்! செய்த தவறுகளை எண்ணி மனம் திருந்தி மன்னிப்புக் கேள்! உன்னை விட்டு விடுகிறேன்” என்றான்.
தன் முன்னே நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்பவனை பார்த்த பத்ரன் காடே அதிர சிரித்து “சிறுவனே! எனக்கு நீ மன்னிப்பு அளிக்கிறாயா? ரத்னாவை என்னிடம் அளித்து விட்டு ஓடிப் போய் விடு” என்று மிரட்டினான்.
“என்னை மீறி அவள் மீது உன் சுண்டு விரல் கூட பட முடியாது பத்ரா” என்றவனை பலமாக வீசிய காற்று தூக்கி அந்தரத்தில் நிற்க வைத்தது.
அதக் கண்டு பலமாக சிரித்தவன் “சிறுவனே! என்னிடமே உனது வித்தையை காட்டுகிறாயா? ரத்னாவை என்னிடம் வரச் சொல்” என்றான்.
தான் நின்ற இடத்திலிருந்தே பத்ரனின் மீது தனது மந்திரத்தை பிரயோகிக்க, அடுத்த நிமிடம் அவன் கீழே உருண்டு கொண்டிருந்தான். அதைக் கண்டு சிரித்தபடி கீழே இறங்கி வந்த விக்கிரமன் “ஏழு ஜென்மங்களுக்கு முன்பு பார்த்த விக்கிரமன் அல்ல இவன்! எனது எண்ணங்கள் என்னை வழி நடத்தி வெற்றிக்கு அடிபோடுகிறது. உன்னை நீ மாற்றிக் கொள்” என்றான்.
இவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள, ரத்னா மெல்ல அருவியை நோக்கி முன்னேறினாள். விண்ணிலிருந்து வெள்ளியை உருக்கி ஊற்றியது போன்று, நிலவின் ஒளியில் ஊற்றிக் கொண்டிருந்த அருவியின் அருகே சென்று நின்றவள் இரு கை கூப்பி “தாயே! வன தேவதை! இங்கிருக்கும் பாஷான லிங்கத்தை எடுப்பதற்கு வழி காட்டுங்கள்” என்று கண் மூடி வேண்டினாள்.
சற்று நேரம் அருவியின் சப்தத்தை தவிர அங்கு எதுவுமில்லை. திடீரென்று பாறைகள் நகரும் ஓசை காடே அதிரும்படி கேட்டது. எதிரே ஊற்றிக் கொண்டிருந்த அருவியின் நடுவே பாறைகள் நகர்ந்து வழி விட்டிருந்தது.
அதைக் கண்டு வன பத்ரகாளிக்கு நன்றியைக் கூறிக் கொண்டு அருவியை நோக்கி நகர ஆரம்பித்தாள். விக்கிரமனும், பத்ரனும் சண்டையிட்டுக் கொண்டிருக்க, அருவியின் நடுவே பாறை அசைந்து இடம் கொடுத்ததை அறிந்து கொண்டவன், விக்கிரமனை விடுத்து ரத்னா இருந்த பக்கம் பாய்ந்தான்.
அருவியின் பக்கம் சென்று கொண்டிருந்தவளின் அருகே சென்று அவளது கரங்களைப் பற்றிக் கொண்டு வேகமாக அருவியினுள் பாய முயற்சித்தான். அவனது கரம் தனது மேனியில் பட்டதுமே உடல் இறுகி போனவள், அடுத்த நிமிடம் அவனை தூக்கி வீசி இருந்தாள்.
விழிகளை பெரிதாக்கி உருத்து விழித்தவள் விக்கிரமன் “விக்கிரமரே! அவனது உடலின் பாகங்கள் ஒவ்வொன்றையையும் கிழித்து திசைக்கொன்றாக வீசுங்கள். அவனது தலையைக் கிள்ளி அனலில் இடுங்கள். இதை எல்லாம் முடித்து விட்டு வாருங்கள். நான் தங்களுக்காக அங்கே காத்திருக்கிறேன்” என்று கூறி விட்டு விறுவிறுவென்று அருவியின் உள்ளே நுழைந்தாள்.
அவள் கூறிச் சென்றதும் அடுத்த நிமிடம் விக்கிரமனின் உருவம் கிடுகிடுவென்று உயர ஆரம்பித்தது. காட்டையே அடைத்துக் கொண்டவன் போல் நின்றிருந்தவன் பத்ரனை பிடித்து தனது இரு விரல்கால் தூக்கினான்.
அவனிடமிருந்து விடுபட்ட பத்ரன் துள்ளி குதித்து தனது உருவத்தையும் பெரிதாக்கி விக்ரமனின் எதிரே நின்றவன் அவனிடம் கடுமையாக சண்டயிட ஆரம்பித்தான். தன் பெற்ற சித்திகளை எல்லாம் அவனுக்கு எதிராக உபயோக்கிக்க, அதை எல்லாம் தூசி போல தட்டினான் விக்கிரமன்.
ஒரு கட்டத்திற்கு மேல் பத்ரனின் கரங்களைப் பிடித்து உடலிலிருந்து பியித்து எறிந்தான். அடுத்து கால்கள், உடலை இரு கூறுகளாக்கி திசைக்கொன்றாக வீசி எறிந்தவன், மீதமிருந்த தலையை எடுத்துக் கொண்டு பத்ரன் வளர்த்த ஹோம குண்டத்திற்கு சென்றான்.
அப்போதும் பத்ரனின் தலையானது “விக்கிரமா! நான் அழிவே இல்லாதவன்! எனது உயிர் இவ்வாறெல்லாம் போகாது” என்றுரைத்தான்.
இவை எல்லாம் நடந்து கொண்டிருக்க, அங்கே மரத்தின் பின்னே நடந்து கொண்டிருந்தவைகளை பார்த்துக் கொண்டிருந்த சுரேஷிற்கு மயக்கம் வரும் போலிருந்தது. தன்னைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஏதோ மேஜிக் ஷோவிற்குள் நுழைந்ததை போன்ற உணர்வை கொடுத்தது.
ஹோம குண்டத்தின் முன் அவனது தலையை நீட்டியவன் “உனது உயிரின் ரகசியத்தை நானறிவேன் பத்ரா” என்றவன் கண்களை மூடி “நந்திவர்மா! நான் இங்கே இந்த தலையை போடும் நேரம், அவனது உயிர் பறவை அங்கே அந்த சிலையை விட்டு பிரிந்திருக்க வேண்டும்” என்றான்.
அதைக் கேட்டதும் பதறி போன பத்ரனின் தலை “வேண்டாம் விக்கிரமா! என்னை விட்டு விடு” என்று கெஞ்சியது.
அதே நேரம் விக்கிரமனின் உடலில் இருந்து பிரிந்த நந்திவர்மனின் ஆன்மாவானது ஒளியின் வேகத்தை விட, பல மடங்கு வேகத்துடன் கல் மண்டப சிவன் கோவிலுக்குச் சென்று அங்கிருந்த கிளியினுள் புகுந்தது. அடுத்து அங்கிருந்து கிளியானது பத்ரனின் குகை நோக்கி பறந்து சென்றது. அங்கு வைக்கப்பட்டிருந்த காளியின் சிலை அருகே சென்ற கிளி, காளியின் நெஞ்சில் பதிக்கப்பட்டிருந்த ரத்தினத்தை தனது அலகால் ஓங்கி உடைத்து. அந்த ரத்தினம் உடைந்து அதிலிருந்து புகை மண்டலம் எழுந்து காற்றோடு கலந்தது.
அங்கே விக்கிரமனும் பத்ரனின் தலையை ஹோம குண்டத்தில் போட்டிருந்தான். குகையில் எழுந்த புகையும், ஹோமத்திலி எழுந்த புகையும் ஒன்றோடு ஒன்றாக கலந்து காற்றில் மறைந்தது.
பத்ரனின் குரல் மட்டும் அசிரீரியாக விக்கிரமனை அடைந்தது.
“இப்போது நீ ஜெயித்திருக்கலாம் விக்கிரமா! நீ எங்கிருந்தாலும் உன்னைத் தேடி நான் வருவேன்” என்றது இடி போல.
பெரும் நிம்மதியுடன் காதிலிருந்த குண்டலங்கள் ஆட, இதழில் சிறு புன்னகையுடன் தனது கம்பீரமான நடையுடன் அருவியை நோக்கிச் சென்றான்.
மரத்தின் பின்னே நின்றிருந்த சுரேஷ் அவனது கம்பீரத்தையும், தேஜஸையும் ரசித்தான். எதிரே சென்று கொண்டிருப்பவன் தான் ரிஷிவர்மன் என்பதையும் அறிந்து கொண்டான். இதைத் தான் சொன்னாரா அந்த சித்தர்? என்று சிந்தித்தபடி மேலும் சற்று முன்னேறி அருவியை பார்க்க ஆரம்பித்தான்.
அருவியின் அருகே சென்ற விக்கிரமன் ஒரே பாய்ச்சலில் அருவியினுள் நுழைந்து உள்ளே சென்றான். அங்கிருந்த குகையினுள் சற்று தூரம் நடந்தவன், ஓரிடத்தில் ரத்னா இரு கைகளையும் கூப்பி எதிரே இருந்த லிங்கத்தை தொழுது கொண்டிருப்பதை கண்டான்.
அவளருகே சென்றவனின் விழிகள் லிங்கத்தை ஆராய்ந்தது. லிங்கத்தின் மீது ஆறடி நீளமிருக்கும் கருநாகமொன்று படமெடுத்து கொண்டு இவர்களை பார்த்தது சீறிக் கொண்டிருந்தான். சின்னஞ்சிறிய லிங்கம் அந்த குகைக்கே வெளிச்சத்தை அளித்துக் கொண்டிருந்தது.
அருவியின் நடுவே இருந்த அந்த லிங்கத்திற்கு தினமும் யாரோ பூஜை செய்திருப்பதைப் போல, மலர்கள் கொட்டிக் கிடந்தது. தெய்வீகமாக இருந்த அந்த சூழ்நிலையில் ரத்னாவின் குரல் கலைத்தது.
“ஐயா சிவனே! ஜென்ம ஜென்மங்களாக உங்களை அடைவதற்காக பல போராட்டங்களை மேற்கொண்டோம். இதோ இன்று அனைத்தையும் வென்று உங்கள் முன்னே நிற்கின்றோம். தயை கூர்ந்து தங்களின் இருப்பிடம் செல்ல, எங்களிடம் வாருங்கள்” என்றாள்.
விக்கிரமனும் அவளுடன் இணைந்து நின்று “ஆம்! பிரபோ! தாங்கள் எங்களுடன் வர வேண்டும்” என்று கண்களை மூடி பிரார்த்தித்தான்.
அடுத்த நிமிடம் அந்த கருநாகம் அங்கிருந்து சரசரவென்று இறங்கி வந்து ரத்னாவிடம் வந்து மலர் ஒன்றை அவள் கையில் வைத்துவிட்டு நகர்ந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு எதிரே இருந்த லிங்கத்தைப் பார்க்க, லிங்கத்தின் நெற்றியிலிருந்து ஒளி ஒன்று குகை எங்கும் பரவ ஆரம்பித்தது. விக்கிரமன் தன்னிடமிருந்த கமடலத்திலி இருந்த நீரை லிங்கத்தின் மீது தெளித்து வணங்கினான்.
அந்நேரம் அசிரீரி “விக்கிரமா! எனை எடுத்து ரத்னாவின் கரங்களில் வை! இருவரும் ஒன்றாக சென்று கல் மண்டபத்தில் எனை பிரதிஷட்டை செய்யுங்கள்” என்றது.
இருவரும் முன்னே சென்று நிற்க, விக்கிரமன் லிங்கத்தை எடுத்து ரத்னாவின் கரங்களில் வைக்க, அவளது மேனியில் ஒரு தேஜஸ் வந்தது. விக்கிரமன் உடலிலும் ஒருவித புதிய உணர்வொன்றை உணர்ந்தான். இருவரும் லிங்கத்துடன் நடந்து அருவியை விட்டு வெளியேறி வனத்தினுள் நடக்க ஆரம்பித்தனர்.
அவர்களை வழிமறிக்க நினைத்த சுரேஷை தடுத்த முனியன் “இளவரசரும், இளவரசியும் கல் மண்பம் செல்லும் வரை யாரும் இடைமறித்தால் அந்த நிமிடமே மண்ணாகப் போவது உறுதி!” என்றான்.
அவனை முறைத்த சுரேஷ் “என்ன மிரட்டுறியா?” என்று கூறி முன்னே நடந்தவனின் கால்கள் இழுத்துக் கொண்டது.
அதைக் கண்டு சிரித்த முனியன் “அவர்களை தடுக்க நினத்ததற்க்கே இந்த கதி” என்றான்.
எதுவும் பேசாமல் அவர்களின் பின்னே நடக்க ஆரம்பித்தனர்.
பல காத தூரம் நடந்து கல் மண்டபம் அருகே செல்லும் போது நன்றாக விடியத் தொடங்கி இருந்தது. விடியலின் நேரம் நடந்து சென்ற இருவரையும் பார்க்கும் போது சிவனும், பார்வதியும் மண்ணில் இறங்கி வந்தது போலிருந்தது.
அவர்கள் கல் மண்டபத்தின் அருகே செல்லும் போது இருளர்கள் முழுவதும் அங்கு குழுமி இருந்தனர். அடுத்து ரத்னாவதியின் வம்சாவழியினரும் கூடி இருந்தனர். அவர்களின் நடுவே கருணாகரனும், உதயணனும் நின்றிருந்தனர்.
கையில் நவபாஷான லிங்கத்துடன் வந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்ததும் அனைவரும் மண்ணில் விழுந்து நமஸ்கரித்து “ஓம் நமசிவாய!” என்று சொல்ல ஆரம்பித்தனர்.
அவர்கள் கூறியது வனமெங்கும் ஒலிக்க ஆரம்பித்தது. ஆலயத்தின் மணிகள் தானாக ஒலிக்க ஆரம்பித்தது. அங்கு குடமுழுக்கு நடப்பது போன்ற உணர்வினை அளித்தது. இருவரும் ஒன்று போல பாதங்களை வைத்து உள்ளே நுழைய, இருவரின் கழுத்திலும் எங்கிருந்தோ மாலைகள் வந்து விழுந்தது. மேல தாளங்கள் இசைக்க, கணவன், மனைவியாக கருவறைக்குள் நுழைந்து கையிலிருந்த லிங்கத்தை வைக்க, அது அப்படியே பொருந்திக் கொண்டது.
லிங்கம் வைக்கப்பட்ட அந்த நொடி விண்ணில் பல ஜாலங்கள் நிகழ்ந்தது. கருவறையில் நின்றவர்களின் மீது பூமாரி பொழிய, இறைவனை வழிப்பட்டு தம்பதி சமேதராக கருவறையை விட்டு வெளியே வந்தனர்.
வெளியில் காத்திருந்த மக்கள் “விக்ரம ராஜா வாழ்க! ரத்னாவதி தேவியார் வாழ்க!” என்று முழக்கமிட்டனர்.
அவர்களின் முழக்கத்தில் தனதருகே நின்றவளைப் பார்த்தவனின் விழிகளில் அத்தனை காதல். ரத்னாவதியின் முகத்திலும் கம்பீரத்தை மீறி, சிறு துளி நாணம் வந்தமர்ந்து கொண்டது.
சூரிய ஒளி காட்டின் அடர்த்தியை மீறி கிழித்துக் கொண்டு உள்ளே வர, விக்கிரமன் மீதும், ரத்னாவதியின் மீது அந்த ஒளி விழ, இருவரும் ஒன்று போல மயக்கத்தில் வீழ்ந்தார்கள். அவர்கள் அப்படி விழுவார்கள் என்று காத்திருந்ததைப் போல மக்கள் உடனடியாக ஓடிச் சென்று அவர்களைத் தாங்கிக் கொண்டார்கள்.
அவர்களை தங்கள் குடிலுக்கு எடுத்துச் சென்று படுக்க வைத்துவிட்டு, அவர்களின் மயக்கத்தை தெளிவிக்க முயற்ச்சிக்கும் நேரம், அவர்களின் ஆடை அணிகலன்கள் அனைத்தும் மாறி, அங்கு ரிஷியும், சிந்துவும் படுத்திருந்தார்கள்.