அத்தியாயம்—34
காலையில் எழுந்தவளின் சிவந்த கண்களும், அதில் தெரிந்த சோர்வும் அவளது தூக்கமின்மையை நன்கு பறைசாற்றியது. முன்தினம் நடந்ததை நினைத்துக்கொண்டே, கல்சுரல் ப்ரோக்ராமுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு கீழே வந்தாள்.
அனைவரும் சேர்ந்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க, பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு பூஜையறைக்குச் சென்று தன் பெற்றோரின் படத்தை வணங்கி விட்டு வந்தாள்.
அனைவரும் டைனிங் ஹாலிற்குச் செல்லும் போது தான் அங்கே அர்ஜுன் இல்லாதது நினைவிற்கு வந்தது. இல்லாத வரை சந்தோஷம் என எண்ணிக் கொண்டு கடமைக்காக உணவை விழுங்கினாள்.
அவள் கல்லூரிக்குக் கிளம்பும் நேரம் அவளை அழைத்த ராஜி, “மதும்மா! கல்சுரல் முடிஞ்சதும் நைட் டின்னருக்கு ஹோட்டல் போறோம். அர்ஜுன் உன்னை மீட் பண்ணணும்னு சொன்னார்” என்றதும் சலனமற்ற விழிகளுடன் அத்தையைப் பார்த்தாள்.
“பயப்படாதே. பேசு... உனக்குப் பிடிச்சிருந்தா தான் கல்யாணம். புரிஞ்சுதா” என்று அன்புடன் சொன்னவரிடம் அவனைப் பற்றிய அனைத்தையும் சொல்லிவிடலாமா! என்ற எண்ணம் தோன்றியது. ஆனா, என்ன என்று சொல்வது? அவனைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? வீணாக மனத்தை அலையவிடக் கூடாது. மாமா, அத்தையின் சந்தோஷத்தைக் கெடுக்கக் கூடாது’ என்ற முடிவுடன், “சரிங்கத்தை” என்றாள்.
“நான் கோவில் போயிட்டு அப்படியே காலேஜ் போறேன்" என்றவள் கோவிலின் அருகில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே செல்லும் போது தான் அந்தக் காரை கவனித்தாள்.
‘கடவுளே! இன்னைக்குமா இவனைப் பார்க்கணும்? அவன் கண்ணில் படும் முன் இங்கிருந்து போய்விட வேண்டும் என்று நினைத்துக்கொண்டே குனிந்த தலையுடன் படிகளைக் கடந்தவள் முன்னால் நின்றிருந்தவரின் மீது மோதாமல் நிற்க முயன்று தள்ளாடினாள்.
அவள் விழ்ந்துவிடாமல் பிடித்தவருக்கு நன்றி சொல்ல நிமிர்ந்தவள், தனது கரத்தைப் பிடித்திருந்தவனைப் பார்த்ததும், வெளிறிப் போனாள்.
“இது கோயில். அதோட உன்னை மீறி எதுவும் நடந்திடாது. வா நேரம் ஆகுது” என்றவன் அவள் கையை விடாமல் பற்றியபடி அழைத்துச் சென்றான்.
அர்ச்சனை முடித்து சன்னதியை வலம் வந்தபின் அவள் புறப்பட, “நானே உன்னைக் காலேஜில் விடுறேன்” என்று அவளை அழைத்தான்.
பட்டும் படாமலும், “நான் வண்டியில் வந்தேன்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தவளை, “இப்படிச் சொன்னா கேக்க மாட்ட...” என்றவன் அவளது கையைப் பிடித்து இழுத்துச் செல்லாத குறையாக காரில் ஏற்றினான்.
அச்சத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தாள். அங்கே யாருமே இல்லை.
“ப்ளீஸ்! என்னை விடுங்க. நான் காலேஜ் போகணும்...” என்றவளுக்குப் பதிலே சொல்லாமல் காரைக் கிளப்பினான்.
அவள் கதவைத் திறக்க முயல, “சைல்ட் லாக் போட்டிருக்கேன்” என்றான்.
அவளது பொறுமை பறந்தது. இவன் யார் என்னை வற்புறுத்தி அழைத்துச் செல்ல என்று கோபத்துடன் நினைத்தவள், “என்னை எங்கே கூட்டிக்கிட்டுப் போற? இதெல்லாம் நல்லதுக்கு இல்ல. வீணா உனக்குப் பிரச்சனை வரும். என்னை விட்டுடு” என்றவளை அவன் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.
சற்று நேரம் பொறுத்து, “இன்னைக்கு, நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம். இங்கயிருந்து பதினைந்து கிலோ மீட்டர் உன்னால ஓடி வர முடியாதுன்னு, கார்ல கூட்டிட்டுப் போறேன். நம்மள யாரும் ஓடிப்போய்க் கல்யாணம் செய்துகிட்டாங்கன்னு சொல்லமுடியாது. ஏன்னா, நான் தான் உன்னைக் கார்ல கூட்டிகிட்டுப் போறேனே" என்றான் சிறிதும் அலட்டிக்கொள்ளாமல்.
அவனை உற்றுப் பார்த்தவள், "நீங்க அப்படியெல்லாம் கல்யாணம் செய்ய மாட்டீங்க" என்றவளைப் பார்த்து சிரித்தபடி, "திடீர்னு மரியாதை வருது, திடீர்ன்னு தேயுது” என்று சிரித்தவன், “என் மேல உனக்கு அவ்வளவு நம்பிக்கையா?" என்றான் கனிவுடன்.
“ஆமாம்" என்றாள்.
"ரொம்பத் தேங்க்ஸ் தேனு! ஆனா, நான் அவ்ளோ நல்லவன் இல்ல” என்று சிரித்தவனை ஆழ்ந்து பார்த்தாள்.
அதைக் கவனித்தும் எதுவும் பேசாமல் அவன் காரைச் செலுத்திக் கொண்டிருந்தான்.
“நான் பதினொரு மணிக்கு எனக்கு ரிகர்சல் இருக்கு. நான் காலேஜ்ல இருக்கணும்” என்றாள்.
"மணி ஒன்பது கூட ஆகல. உன்னைப் பதினோரு மணிக்குக் காலேஜில் சேர்ப்பது என்னோட வேலை. அதுவரைக்கும் என் கூடவே இரு தேனு..." என்று கெஞ்சலும் கொஞ்சலும் கலந்து சொன்னவனைப் பார்த்தவளுக்கு வேதனையாக இருந்தது.
இரண்டு மனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும், மனத்தை கட்டுப்படுத்தும் தைரியம் இல்லாமல் மௌனமாக அமர்ந்திருந்தாள். ‘இவனைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொன்னால், நிச்சயம் தன் வீட்டில் எந்த மறுப்பும் சொல்லப் போவதில்லை. ஆனால், மாமாவின் மரியாதை தன்னால் கெட்டுவிட்டால் என்ற எண்ணமும் எழ, அவளுக்கு ஆயாசமாக இருந்தது.
‘கடவுளே! எனக்கு ஒரு நல்ல வழியைக் காண்பி’ என்று வேண்டிக்கொண்டாள்.
காரை ஒரு ஹோமிற்கு உள்ளே கொண்டு நிறுத்தியவன், “தேனு! நீ எந்த முடிவெடுத்தாலும், எனக்கு அது சாதகமாதான் இருக்கும். மனசைக் குழப்பிக்காம இறங்கு. இன்னைக்கு எல்லாத்துக்கும் நல்லதா முடிவு கிடைக்கும்" என்று அவளுக்கு ஆறுதல் சொல்லி உள்ளே அழைத்து சென்றான்.
அங்கிருந்த குழந்தைகளைப் பார்க்கும் போது, அவளுக்கு வேதனையாக இருந்தது. ‘கடவுள் நமக்குஅற்புதமான வாழ்க்கையைக் கொடுத்தும், அதை பாழ் படுத்திக் கொண்டிருக்கும் சமுதாயத்தின் மீது பரிதாபம் வந்தது.
கலங்கிய விழிகளுடன் நின்றிருந்தவளை, நிர்வாகியின் அறைக்கு அழைத்துச் சென்றான். ஒரு நடுத்தர வயதுள்ளவரை எதிர்பார்த்தவள், அங்கே அமர்ந்திருந்தவனைக் கண்டதும் திகைத்தாள்.
“மது இவன் ஸ்ரீராம். ஏரோனாட்டிக்கல் எஞ்ஜினியர். ரெண்டு பேரும் டேராடூன்ல ஒண்ணா படிச்சோம். ஒண்ணாவே வேலைக்குச் சேர்ந்தோம். அவனோட அப்பாவுக்குப் பிறகு, இந்த ஹோமை பார்த்துக்க வேலையை விட்டுட்டு வந்துட்டான்" என்று தன் நண்பனைப் பற்றிப் பெருமையாக சொன்னான்.
இளம் வயதில், இவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்று நடத்துபவன் மீது மதிப்பும், மரியாதையும் பெருக, இருகைகளை கூப்பி வணங்கினாள்.
ஸ்ரீராம், அவளுக்கு இல்லத்தைச் சுற்றிக் காட்டியபடி, " இந்த ஹோம் எங்க தாத்தா காலத்தில் இருந்து நடத்திகிட்டு இருக்கோம். இப்போ நிறைய பேர் ஹெல்ப் பண்றாங்க. இவனும், மாசா மாசம் ஒரு தொகையை ட்ரஸ்ட்க்கு அனுப்பிடுவான்” என்றான்.
அங்கே குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தவன் மீது, அவளுக்கு மரியாதை உண்டானது.
அதைக் கவனித்த ஸ்ரீராம் புன்னகையுடன், “சாரை சாதாரணமா நினைச்சிடாதீங்க. பார்க்கத் தான் விளையாட்டுதனமா இருப்பான். ஆனால், ரொம்ப ஹெல்ப்பிங் மைண்ட். மாசம் பிறந்தவுடன் அவனிடமிருந்து செக் வந்திடும்” என்று அவளை அழைத்து வந்தவனைப் பற்றிப் புகழ்ந்தவன், மறந்தும் கூட அவன் பெயரைக் குறிப்பிடவில்லை.
அங்கு இருந்த இரண்டு மணி நேரத்தில், அந்த இரு இளைஞர்களின் சமூக அக்கறையும், நற்குணமும் அவளுக்கு நன்மதிப்பை உண்டாக்கியது. அதேநேரம் அவள் மனத்திலும் குழப்பம் அதிகரித்துக் கொண்டிருந்தது.
பத்து மணிக்கு, “மது கிளம்பலாமா?" எனக் கேட்டுக்கொண்டே வந்தான்.
மது, “ம்ம்ம்...." என்றவள் குழந்தைகளை ஒரு நொடி திரும்பிப் பார்த்துவிட்டு ஸ்ரீராமிடம், “நானும், எனக்கு நேரம் கிடைக்கும் போது இங்கே வரேன். என்னால் முடிந்த ஹெல்ப் பண்றேன். என் ஃப்ரெண்ட்ஸுக்கும் சொல்றேன்" எனச் சொல்லிவிட்டு காரில் சென்று அமர்ந்தாள்.
அவளைக் கல்லூரியில் இறக்கிவிடும் வரை, இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை.
கல்லூரி வாசலில் கார் நின்றதும் வேகமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டவள், “தேங்க்ஸ்! நான் இதுவரை இவ்வளவு நிம்மதியா, சந்தோஷமா இருந்ததில்ல. ஆனா, இதையே காரணமா வச்சி... என்னைப் பார்க்க வராதீங்க. நாம ரெண்டு பேரும் சந்திக்கறது இதுவே கடைசியா இருக்கட்டும்" என்றவள் அவனுடைய பதிலை எதிர்பாராமல் இறங்கிச் சென்றாள்.
அவளது கண்ணீர் முகம், அவனுக்குக் கவலையைக் கொடுத்தாலும், ‘ஈவ்னிங் நாம யாருன்னு சொல்லிடப் போறோமே...’ என்றெண்ணிக் கொண்டான்.
அன்று முழுதும் ஒரு செயற்கையான புன்னகையை இதழ்களில் தேக்கியபடியே இருந்தாள். ஒரு வழியாக ப்ரோக்ராம் முடிய ஆறு மணியாகிவிட்டது. மது சோர்வுடன் அங்கிருந்த மேக்கப் அறையில் சென்று அமர சுரேஷ் அவளெதிரில் வந்து நின்றான்.
அதேநேரம் மேகலாவிடம் இருந்து போன் வர, “இதோ வரேன்” சொல்லிவிட்டுப் போனை வைக்க, அவள் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு, “நீதான் மது ஹெல்ப் பண்ணணும். கீதாகிட்ட பேசு” என்றவன் மேற்கொண்டு பேச, கைகளை உதறி கொண்டுக் கதவைத் திறந்து வெளியே வந்தாள்.
“முடிஞ்சது முடிஞ்சதா இருக்கட்டும். உடைஞ்ச மனசை ஒட்ட வைக்க முடியாது. உன் மனசை மாத்திக்க முயற்சி செய். முட்டாள்தனமா நடந்ததையே நினைச்சிக்கிட்டு, உன் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்ளாதே. இன்னொரு முறை என்னிடம் சொன்னாயே தற்கொலை செய்து கொள்ளவேன் என்று அது போல உளறாதே. சொல்றதை யாரும் சொல்லிட்டுச் செய்ய மாட்டாங்க” என்றவள் விறுவிறுவென நடந்தாள்.
“அப்போ, என் காதல் பொய்யா? இவ்வளவு நாள் என்கூட சிரிச்சிப் பேசினது பொய்யா? இப்போது அப்பா சொல்லும் மாப்பிள்ளையை தான் கல்யாணம் செய்து கொள்வேன்னா எந்த விதத்தில் நியாயம்?” என்று விரக்தி நிறைந்த குரலில் கேட்டான்.
“இங்கே பார் சுரேஷ், இந்த நியாயம், அநியாயம் இதெல்லாம் எனக்குத் தெரியாது. என் உயிரை வாங்காதே. நானே குழப்பத்தில் இருக்கிறேன். எதுவா இருந்தாலும், கொஞ்சம் நாள் ஆகட்டும் பார்க்கலாம். படிப்பை முடிச்சிட்டு கிடைத்திருக்கும் வேலைக்குப் போறதைப் பார்.
இனியும், நீதான் என் உயிர்; நீ இல்லனா நான் இல்லைன்னு சினிமா டயலாக் விடாதே. அதெல்லாம் சினிமாவுக்குத்தான் பொருந்தும். வாழ்க்கைக்கு ஒத்துவராது” எனச் சொல்லிவிட்டு, நடந்தவளுக்கு யாரோ தூணின் பின்புறம் நிற்பது போலத் தோன்றியது. ‘அது யார் என்று பார்க்கக் கூடத் தோன்றவில்லை அவளுக்கு.
குழப்பதுடனே வந்தவளைக் கண்ட மேகலா, “என்ன மது? வெளியே போகணும்னு மாமா சொல்லி தானே அனுப்பினாங்க. கிளம்பு" என்றாள்.
அப்போதுதான் காலையில் வண்டியை கோவில் அருகிலேயே விட்டுவிட்டு வந்தது நினைவு வர, "என் வண்டி" என்று அவள் ஆரம்பிக்க, “ஆமாம். நீதான் காலைல வண்டில ஏதோ பிரச்சனைன்னு, மெக்கானிக் ஷெட்ல விட்டுட்டு வந்தியாம். மதியம் கொண்டு வந்து கொடுத்தாங்க. நேரமாகுது கிளம்பு” என்று துரிதப்படுத்தி அவளை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.
வீட்டிற்கு வந்தவளிடம், “மது! அம்மா இந்தப் புடவையைக் கட்டிக்கிட்டு வரச்சொன்னாங்க" என்று கொடுத்துவிட்டுச் சென்றாள் வித்யா.
முகத்தைக் கழுவிவிட்டுக் கண்ணாடியைப் பார்த்தவளுக்கு, அர்ஜுனின் முகம் தான் தெரிந்தது. இந்த ஆறே நாட்களில், தன் வாழ்க்கையில் ஒன்றாகக் கலந்து விட்டவனை மறக்க முடியாமல் தவித்தாள்.
“ஏய் மது! என்னடி அங்கேயே தூங்கறியா? குரலாவது கொடுடி. நீ உள்ளே போய்ப் பத்து நிமிஷம் ஆகுது" என்று மேகலா சத்தம் போட., “இதோ வரேன்" என்று குரல் கொடுத்தாள்.
“தலையை வாரி, இந்தப் பூவை வச்சிக்க. சீக்கிரம் பத்து நிமிஷம் தான் உனக்கு டைம்" என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.
அவள் தயாராகவும் வித்யாவும், மேகலாவும் வந்தனர். மேகலா, “ஹும்! இந்தப் புடவைல அம்சமா இருக்க. உன்னைப் பார்த்து அர்ஜுன் இப்பவே தாலிகட்டிடறேன்னு சொல்லாம இருந்தா சரி" என்று சிரிக்க, அவள் அமைதியாக நின்றாள்.
அவளது முகவாயைப் பற்றிய வித்யா, “மது! எல்லாம் உன் மனசு போலவே நல்லதா நடக்கும் கவலைப்படாதே” என்றவள், அதற்கும் மேல் அங்கே நின்றிருந்தால் எல்லாவற்றையும் சொல்ல வேண்டி இருக்கும் என்ற எண்ணத்தில் மேகலாவை அழைத்துக்கொண்டு சென்றாள்
மேலே வந்துகொண்டிருந்த தீபக், நீங்கள்லாம் அங்கிள், ஆன்ட்டியைக் கூட்டிட்டு ராஜேஷோட கார்ல வாங்க. நான் அப்பா, அம்மாவோட மதுவைக் கூட்டிட்டு வரேன்” என்றவன் மதுவின் அறைக்குச் சென்றான்.
“கிளம்பிட்டிய?” என்றவனுக்கு, “ம்” என்று தலையை ஆட்டினாள்.
அவளை ஆழ்ந்து பார்த்தவன், “ஒரு வாரமா எங்ககிட்ட எதையோ மறைக்கிற. சொல்லு யாரையாவது விரும்பறியா?" என்று நேரடியாகக் கேட்டான்.
இந்தத் திடீர் கேள்வியை எதிர்பாராத மது தயங்கி நிற்க, “நீ யாரையாவது விரும்பறியா? வீட்ல சொல்ல பயப்படறியா? நீ இப்படியிருப்பது எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு" என்றதும் மது மடை திறந்த வெள்ளமாக எல்லாவற்றையும் கொட்டினாள்.
"அவ்வளவு தானே விஷயம். நீ எதையும் காட்டிக்காதே. திரும்ப வீட்டுக்கு வந்ததும் நானே, அப்பாகிட்ட சொல்றேன்" என்றவனைப் பார்த்து, "எனக்குப் பயமாயிருக்கு அத்தான்" என்றாள்.
“உன் விருப்பம் இல்லாம எதுவும் நடக்காது. அப்பாவும் புரிஞ்சிப்பாங்க. என்ன இந்த விஷயத்தை நீ முதலிலேயே சொல்லியிருக்கலாம். சரி, கொஞ்சம் சிரியேன்" என்றதும், லேசாகப் புன்னகைத்தாள்.
அவள் தலையைப் பிடித்து ஆட்டிவிட்டுக் கீழே சென்றவன் ராஜியும், விமலாவும் பேசியது காதில் விழ அப்படியே நின்று கேட்க ஆரம்பித்தான்.
விமலா, நடந்த அனைத்தையும் சொல்ல, ராஜி ஏதும் சொல்லாமல் கேட்டுக்கொண்டார். மதுவை இப்படி அலைக்கழித்தது தீபக்கின் மனதுக்குச் சற்றுக் கஷ்டமாக இருந்தாலும், அவளது வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்ற நம்பிக்கை வந்தது.
அனைவரும் ஹோட்டலுக்குச் சென்று இறங்கியதும், ‘இங்கே தானே என்னிடம் அவ்வளவு உரிமையோடு பேசினான்’ என நினைத்துக்கொண்டே வந்தாள். பெரியவர்கள் ஒரு புறம் அமர, மறுபுறத்தில் மற்றவர்கள் அமர்ந்தனர். நேரம் ஆக ஆக அவளது பதட்டம் அதிகரித்தது.
"என்ன மது டென்ஷனா இருக்கா?"என்று ஆறுதலாகக் கேட்டாள் வித்யா.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல" எனச் சொல்லிவிட்டு அவள் நிமிர, பெரிய பூங்கொத்துடன் டைனிங் ஹாலின் கதவைத் திறந்துகொண்டு வந்தவனைக் கண்டதும், அவளுக்கு மூச்சே நின்றுவிடும் போல ஆனது.
‘கடவுளே! இந்த நேரத்திற்கு இவன் எதற்கு இங்கே வரணும்? என்னை அவன் கண்ணில் படாமல் காப்பாற்று’ என வேண்டிக்கொண்டே ஓரக்கண்ணால் பார்த்தாள். அவனோ, அவர்கள் அமர்ந்திருந்த மேஜையை நோக்கித்தான் வந்து கொண்டிருந்தான்.
அர்ஜுன் வருவதைக் கவனித்த வித்யா, "அர்ஜுன் அண்ணா வந்தாச்சு" என்றாள் சப்தமாக.
மதுவிற்கோ, பயத்தில் காதுகள் அடைத்துக்கொண்டன. ‘இந்த நேரம் பார்த்து அர்ஜுனும் வந்தாச்சா சுத்தம். என்ன நடக்கப் போகிறதோ?’ என்று நினைத்தபடி கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
ஈஸ்வரிடம் வந்த அர்ஜுன், “சாரி அங்கிள் கொஞ்சம் லேட் ஆயிடுச்சி" என்று மென்குரலில் சொன்னவன் மதுவின் அருகில் இருந்த இருக்கையின் அருகில் வந்து நின்றான்.
ராஜேஷ், “மது!” என்று அழைக்க நிமிர்ந்து பார்த்தாள்.
“ஹலோ! ஐயம் அர்ஜுன். விஷ் யூ மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் த டே” என்றபடி பூங்கொத்தை நீட்ட, அவள் திகைப்பும், சந்தோஷம், கோபம், என்று கலவையான முகபாவனைகளை வெளிப்படுத்தினாள்.
“மது...” என்று அருகிலிருந்த வித்யா அழைக்க, நினைவுலகிற்கு வந்தவள், “தேங்க்யூ” என்றபடி வாங்கிக் கொண்டாள்.
பெரியவர்கள் அதற்கு மேல் இவர்களைப் பார்க்காமல் பேசிக்கொண்டிருக்க, மது திரும்பி ராஜேஷையும், தீபக்கையும் பார்த்தாள். இருவரும் மதுவைப் பார்த்து சிரிக்க மதுவும் லேசான மனதுடன் புன்னகைத்துவிட்டுத் திரும்பி அர்ஜுனைப் பார்த்தாள்.
தான் தான் அர்ஜுன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டது முதல், மது உள்ளுக்குள் அவனைத் திட்டுவதாக நினைத்து, அவன் செய்தவைகளை ரசித்துக்கொண்டிருந்தாள்.
‘பேரைப் பார் பேரை... அர்ஜுனாம் அர்ஜுன். ஆனாலும், உனக்கு ரொம்பத் தான்டா லோல்லு. இந்த ஒருவாரமா என்னை என்னம்மா அலைகழிச்ச இடியட்! சிரிப்பை பாரு. பெரிய புன்னகை மன்னன்னு நினைப்பு. நீ வந்து ஐயம் அர்ஜுன்னு சொன்னதும், உன்னைப் பார்த்து மயங்கிடுவேன்னு நினைச்சியா?
நாளைக்கு ஈவ்னிங் வரை, என்னோட பதிலை சொல்லப் போவது இல்லை. நான் என்ன சொல்வேன்னு எதிர்பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியது தான். உனக்கு மட்டும்தான் ஆட்டம் காண்பிக்கத் தெரியுமா? நான் உனக்குக் காட்டுகிறேன் பார்’ என எண்ணிக்கொண்டாள்.
சாப்பிட்டு முடிக்கும் வரை அவளிடம் எதுவும் பேசாமல் இருந்தவன், அவள் எழுந்துச் செல்ல முயல சட்டென கையை பிடித்துக்கொண்டான். மற்றவர்கள் இவர்களைக் கண்டுகொள்ளாமல் வெளியே செல்ல, தன் கையை விடுவிக்க முயன்று தோற்றது தான் மிச்சம்.
"விடுங்க அர்ஜுன்" என்றவளுக்குக் கண்கள் கலங்க, தன் பிடியை விட்டவன், "ஹே தேனு சாரிடா! நான் தமாஷுக்காக தான் அப்படிச் செய்தேன்" என்றவனை கோபத்தோடு பார்த்தவள், "எங்களுக்கும் மனசுன்னு ஒண்ணு இருக்கு மிஸ்டர். அர்ஜுன்" என்றவள் வேகமாக சென்றாள்.
‘ஹும்ம்! இப்போ உன்னோட டேர்ன்? தேனு! நீ என்னதான் கோபப்படறா மாதிரி நடித்தாலும், உன்னை எனக்குத் தெரியும்டி செல்லம். உன் மனசுல என்ன நினைப்பேன்னும் எனக்குத் தெரியும். ஆனால், அது போல நடந்தால் நான் அர்ஜுன் இல்லையே’ என நினைத்துக்கொண்டே சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
காலையில் எழுந்தவளின் சிவந்த கண்களும், அதில் தெரிந்த சோர்வும் அவளது தூக்கமின்மையை நன்கு பறைசாற்றியது. முன்தினம் நடந்ததை நினைத்துக்கொண்டே, கல்சுரல் ப்ரோக்ராமுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு கீழே வந்தாள்.
அனைவரும் சேர்ந்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க, பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு பூஜையறைக்குச் சென்று தன் பெற்றோரின் படத்தை வணங்கி விட்டு வந்தாள்.
அனைவரும் டைனிங் ஹாலிற்குச் செல்லும் போது தான் அங்கே அர்ஜுன் இல்லாதது நினைவிற்கு வந்தது. இல்லாத வரை சந்தோஷம் என எண்ணிக் கொண்டு கடமைக்காக உணவை விழுங்கினாள்.
அவள் கல்லூரிக்குக் கிளம்பும் நேரம் அவளை அழைத்த ராஜி, “மதும்மா! கல்சுரல் முடிஞ்சதும் நைட் டின்னருக்கு ஹோட்டல் போறோம். அர்ஜுன் உன்னை மீட் பண்ணணும்னு சொன்னார்” என்றதும் சலனமற்ற விழிகளுடன் அத்தையைப் பார்த்தாள்.
“பயப்படாதே. பேசு... உனக்குப் பிடிச்சிருந்தா தான் கல்யாணம். புரிஞ்சுதா” என்று அன்புடன் சொன்னவரிடம் அவனைப் பற்றிய அனைத்தையும் சொல்லிவிடலாமா! என்ற எண்ணம் தோன்றியது. ஆனா, என்ன என்று சொல்வது? அவனைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? வீணாக மனத்தை அலையவிடக் கூடாது. மாமா, அத்தையின் சந்தோஷத்தைக் கெடுக்கக் கூடாது’ என்ற முடிவுடன், “சரிங்கத்தை” என்றாள்.
“நான் கோவில் போயிட்டு அப்படியே காலேஜ் போறேன்" என்றவள் கோவிலின் அருகில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே செல்லும் போது தான் அந்தக் காரை கவனித்தாள்.
‘கடவுளே! இன்னைக்குமா இவனைப் பார்க்கணும்? அவன் கண்ணில் படும் முன் இங்கிருந்து போய்விட வேண்டும் என்று நினைத்துக்கொண்டே குனிந்த தலையுடன் படிகளைக் கடந்தவள் முன்னால் நின்றிருந்தவரின் மீது மோதாமல் நிற்க முயன்று தள்ளாடினாள்.
அவள் விழ்ந்துவிடாமல் பிடித்தவருக்கு நன்றி சொல்ல நிமிர்ந்தவள், தனது கரத்தைப் பிடித்திருந்தவனைப் பார்த்ததும், வெளிறிப் போனாள்.
“இது கோயில். அதோட உன்னை மீறி எதுவும் நடந்திடாது. வா நேரம் ஆகுது” என்றவன் அவள் கையை விடாமல் பற்றியபடி அழைத்துச் சென்றான்.
அர்ச்சனை முடித்து சன்னதியை வலம் வந்தபின் அவள் புறப்பட, “நானே உன்னைக் காலேஜில் விடுறேன்” என்று அவளை அழைத்தான்.
பட்டும் படாமலும், “நான் வண்டியில் வந்தேன்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தவளை, “இப்படிச் சொன்னா கேக்க மாட்ட...” என்றவன் அவளது கையைப் பிடித்து இழுத்துச் செல்லாத குறையாக காரில் ஏற்றினான்.
அச்சத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தாள். அங்கே யாருமே இல்லை.
“ப்ளீஸ்! என்னை விடுங்க. நான் காலேஜ் போகணும்...” என்றவளுக்குப் பதிலே சொல்லாமல் காரைக் கிளப்பினான்.
அவள் கதவைத் திறக்க முயல, “சைல்ட் லாக் போட்டிருக்கேன்” என்றான்.
அவளது பொறுமை பறந்தது. இவன் யார் என்னை வற்புறுத்தி அழைத்துச் செல்ல என்று கோபத்துடன் நினைத்தவள், “என்னை எங்கே கூட்டிக்கிட்டுப் போற? இதெல்லாம் நல்லதுக்கு இல்ல. வீணா உனக்குப் பிரச்சனை வரும். என்னை விட்டுடு” என்றவளை அவன் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.
சற்று நேரம் பொறுத்து, “இன்னைக்கு, நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம். இங்கயிருந்து பதினைந்து கிலோ மீட்டர் உன்னால ஓடி வர முடியாதுன்னு, கார்ல கூட்டிட்டுப் போறேன். நம்மள யாரும் ஓடிப்போய்க் கல்யாணம் செய்துகிட்டாங்கன்னு சொல்லமுடியாது. ஏன்னா, நான் தான் உன்னைக் கார்ல கூட்டிகிட்டுப் போறேனே" என்றான் சிறிதும் அலட்டிக்கொள்ளாமல்.
அவனை உற்றுப் பார்த்தவள், "நீங்க அப்படியெல்லாம் கல்யாணம் செய்ய மாட்டீங்க" என்றவளைப் பார்த்து சிரித்தபடி, "திடீர்னு மரியாதை வருது, திடீர்ன்னு தேயுது” என்று சிரித்தவன், “என் மேல உனக்கு அவ்வளவு நம்பிக்கையா?" என்றான் கனிவுடன்.
“ஆமாம்" என்றாள்.
"ரொம்பத் தேங்க்ஸ் தேனு! ஆனா, நான் அவ்ளோ நல்லவன் இல்ல” என்று சிரித்தவனை ஆழ்ந்து பார்த்தாள்.
அதைக் கவனித்தும் எதுவும் பேசாமல் அவன் காரைச் செலுத்திக் கொண்டிருந்தான்.
“நான் பதினொரு மணிக்கு எனக்கு ரிகர்சல் இருக்கு. நான் காலேஜ்ல இருக்கணும்” என்றாள்.
"மணி ஒன்பது கூட ஆகல. உன்னைப் பதினோரு மணிக்குக் காலேஜில் சேர்ப்பது என்னோட வேலை. அதுவரைக்கும் என் கூடவே இரு தேனு..." என்று கெஞ்சலும் கொஞ்சலும் கலந்து சொன்னவனைப் பார்த்தவளுக்கு வேதனையாக இருந்தது.
இரண்டு மனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும், மனத்தை கட்டுப்படுத்தும் தைரியம் இல்லாமல் மௌனமாக அமர்ந்திருந்தாள். ‘இவனைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொன்னால், நிச்சயம் தன் வீட்டில் எந்த மறுப்பும் சொல்லப் போவதில்லை. ஆனால், மாமாவின் மரியாதை தன்னால் கெட்டுவிட்டால் என்ற எண்ணமும் எழ, அவளுக்கு ஆயாசமாக இருந்தது.
‘கடவுளே! எனக்கு ஒரு நல்ல வழியைக் காண்பி’ என்று வேண்டிக்கொண்டாள்.
காரை ஒரு ஹோமிற்கு உள்ளே கொண்டு நிறுத்தியவன், “தேனு! நீ எந்த முடிவெடுத்தாலும், எனக்கு அது சாதகமாதான் இருக்கும். மனசைக் குழப்பிக்காம இறங்கு. இன்னைக்கு எல்லாத்துக்கும் நல்லதா முடிவு கிடைக்கும்" என்று அவளுக்கு ஆறுதல் சொல்லி உள்ளே அழைத்து சென்றான்.
அங்கிருந்த குழந்தைகளைப் பார்க்கும் போது, அவளுக்கு வேதனையாக இருந்தது. ‘கடவுள் நமக்குஅற்புதமான வாழ்க்கையைக் கொடுத்தும், அதை பாழ் படுத்திக் கொண்டிருக்கும் சமுதாயத்தின் மீது பரிதாபம் வந்தது.
கலங்கிய விழிகளுடன் நின்றிருந்தவளை, நிர்வாகியின் அறைக்கு அழைத்துச் சென்றான். ஒரு நடுத்தர வயதுள்ளவரை எதிர்பார்த்தவள், அங்கே அமர்ந்திருந்தவனைக் கண்டதும் திகைத்தாள்.
“மது இவன் ஸ்ரீராம். ஏரோனாட்டிக்கல் எஞ்ஜினியர். ரெண்டு பேரும் டேராடூன்ல ஒண்ணா படிச்சோம். ஒண்ணாவே வேலைக்குச் சேர்ந்தோம். அவனோட அப்பாவுக்குப் பிறகு, இந்த ஹோமை பார்த்துக்க வேலையை விட்டுட்டு வந்துட்டான்" என்று தன் நண்பனைப் பற்றிப் பெருமையாக சொன்னான்.
இளம் வயதில், இவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்று நடத்துபவன் மீது மதிப்பும், மரியாதையும் பெருக, இருகைகளை கூப்பி வணங்கினாள்.
ஸ்ரீராம், அவளுக்கு இல்லத்தைச் சுற்றிக் காட்டியபடி, " இந்த ஹோம் எங்க தாத்தா காலத்தில் இருந்து நடத்திகிட்டு இருக்கோம். இப்போ நிறைய பேர் ஹெல்ப் பண்றாங்க. இவனும், மாசா மாசம் ஒரு தொகையை ட்ரஸ்ட்க்கு அனுப்பிடுவான்” என்றான்.
அங்கே குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தவன் மீது, அவளுக்கு மரியாதை உண்டானது.
அதைக் கவனித்த ஸ்ரீராம் புன்னகையுடன், “சாரை சாதாரணமா நினைச்சிடாதீங்க. பார்க்கத் தான் விளையாட்டுதனமா இருப்பான். ஆனால், ரொம்ப ஹெல்ப்பிங் மைண்ட். மாசம் பிறந்தவுடன் அவனிடமிருந்து செக் வந்திடும்” என்று அவளை அழைத்து வந்தவனைப் பற்றிப் புகழ்ந்தவன், மறந்தும் கூட அவன் பெயரைக் குறிப்பிடவில்லை.
அங்கு இருந்த இரண்டு மணி நேரத்தில், அந்த இரு இளைஞர்களின் சமூக அக்கறையும், நற்குணமும் அவளுக்கு நன்மதிப்பை உண்டாக்கியது. அதேநேரம் அவள் மனத்திலும் குழப்பம் அதிகரித்துக் கொண்டிருந்தது.
பத்து மணிக்கு, “மது கிளம்பலாமா?" எனக் கேட்டுக்கொண்டே வந்தான்.
மது, “ம்ம்ம்...." என்றவள் குழந்தைகளை ஒரு நொடி திரும்பிப் பார்த்துவிட்டு ஸ்ரீராமிடம், “நானும், எனக்கு நேரம் கிடைக்கும் போது இங்கே வரேன். என்னால் முடிந்த ஹெல்ப் பண்றேன். என் ஃப்ரெண்ட்ஸுக்கும் சொல்றேன்" எனச் சொல்லிவிட்டு காரில் சென்று அமர்ந்தாள்.
அவளைக் கல்லூரியில் இறக்கிவிடும் வரை, இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை.
கல்லூரி வாசலில் கார் நின்றதும் வேகமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டவள், “தேங்க்ஸ்! நான் இதுவரை இவ்வளவு நிம்மதியா, சந்தோஷமா இருந்ததில்ல. ஆனா, இதையே காரணமா வச்சி... என்னைப் பார்க்க வராதீங்க. நாம ரெண்டு பேரும் சந்திக்கறது இதுவே கடைசியா இருக்கட்டும்" என்றவள் அவனுடைய பதிலை எதிர்பாராமல் இறங்கிச் சென்றாள்.
அவளது கண்ணீர் முகம், அவனுக்குக் கவலையைக் கொடுத்தாலும், ‘ஈவ்னிங் நாம யாருன்னு சொல்லிடப் போறோமே...’ என்றெண்ணிக் கொண்டான்.
அன்று முழுதும் ஒரு செயற்கையான புன்னகையை இதழ்களில் தேக்கியபடியே இருந்தாள். ஒரு வழியாக ப்ரோக்ராம் முடிய ஆறு மணியாகிவிட்டது. மது சோர்வுடன் அங்கிருந்த மேக்கப் அறையில் சென்று அமர சுரேஷ் அவளெதிரில் வந்து நின்றான்.
அதேநேரம் மேகலாவிடம் இருந்து போன் வர, “இதோ வரேன்” சொல்லிவிட்டுப் போனை வைக்க, அவள் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு, “நீதான் மது ஹெல்ப் பண்ணணும். கீதாகிட்ட பேசு” என்றவன் மேற்கொண்டு பேச, கைகளை உதறி கொண்டுக் கதவைத் திறந்து வெளியே வந்தாள்.
“முடிஞ்சது முடிஞ்சதா இருக்கட்டும். உடைஞ்ச மனசை ஒட்ட வைக்க முடியாது. உன் மனசை மாத்திக்க முயற்சி செய். முட்டாள்தனமா நடந்ததையே நினைச்சிக்கிட்டு, உன் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்ளாதே. இன்னொரு முறை என்னிடம் சொன்னாயே தற்கொலை செய்து கொள்ளவேன் என்று அது போல உளறாதே. சொல்றதை யாரும் சொல்லிட்டுச் செய்ய மாட்டாங்க” என்றவள் விறுவிறுவென நடந்தாள்.
“அப்போ, என் காதல் பொய்யா? இவ்வளவு நாள் என்கூட சிரிச்சிப் பேசினது பொய்யா? இப்போது அப்பா சொல்லும் மாப்பிள்ளையை தான் கல்யாணம் செய்து கொள்வேன்னா எந்த விதத்தில் நியாயம்?” என்று விரக்தி நிறைந்த குரலில் கேட்டான்.
“இங்கே பார் சுரேஷ், இந்த நியாயம், அநியாயம் இதெல்லாம் எனக்குத் தெரியாது. என் உயிரை வாங்காதே. நானே குழப்பத்தில் இருக்கிறேன். எதுவா இருந்தாலும், கொஞ்சம் நாள் ஆகட்டும் பார்க்கலாம். படிப்பை முடிச்சிட்டு கிடைத்திருக்கும் வேலைக்குப் போறதைப் பார்.
இனியும், நீதான் என் உயிர்; நீ இல்லனா நான் இல்லைன்னு சினிமா டயலாக் விடாதே. அதெல்லாம் சினிமாவுக்குத்தான் பொருந்தும். வாழ்க்கைக்கு ஒத்துவராது” எனச் சொல்லிவிட்டு, நடந்தவளுக்கு யாரோ தூணின் பின்புறம் நிற்பது போலத் தோன்றியது. ‘அது யார் என்று பார்க்கக் கூடத் தோன்றவில்லை அவளுக்கு.
குழப்பதுடனே வந்தவளைக் கண்ட மேகலா, “என்ன மது? வெளியே போகணும்னு மாமா சொல்லி தானே அனுப்பினாங்க. கிளம்பு" என்றாள்.
அப்போதுதான் காலையில் வண்டியை கோவில் அருகிலேயே விட்டுவிட்டு வந்தது நினைவு வர, "என் வண்டி" என்று அவள் ஆரம்பிக்க, “ஆமாம். நீதான் காலைல வண்டில ஏதோ பிரச்சனைன்னு, மெக்கானிக் ஷெட்ல விட்டுட்டு வந்தியாம். மதியம் கொண்டு வந்து கொடுத்தாங்க. நேரமாகுது கிளம்பு” என்று துரிதப்படுத்தி அவளை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.
வீட்டிற்கு வந்தவளிடம், “மது! அம்மா இந்தப் புடவையைக் கட்டிக்கிட்டு வரச்சொன்னாங்க" என்று கொடுத்துவிட்டுச் சென்றாள் வித்யா.
முகத்தைக் கழுவிவிட்டுக் கண்ணாடியைப் பார்த்தவளுக்கு, அர்ஜுனின் முகம் தான் தெரிந்தது. இந்த ஆறே நாட்களில், தன் வாழ்க்கையில் ஒன்றாகக் கலந்து விட்டவனை மறக்க முடியாமல் தவித்தாள்.
“ஏய் மது! என்னடி அங்கேயே தூங்கறியா? குரலாவது கொடுடி. நீ உள்ளே போய்ப் பத்து நிமிஷம் ஆகுது" என்று மேகலா சத்தம் போட., “இதோ வரேன்" என்று குரல் கொடுத்தாள்.
“தலையை வாரி, இந்தப் பூவை வச்சிக்க. சீக்கிரம் பத்து நிமிஷம் தான் உனக்கு டைம்" என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.
அவள் தயாராகவும் வித்யாவும், மேகலாவும் வந்தனர். மேகலா, “ஹும்! இந்தப் புடவைல அம்சமா இருக்க. உன்னைப் பார்த்து அர்ஜுன் இப்பவே தாலிகட்டிடறேன்னு சொல்லாம இருந்தா சரி" என்று சிரிக்க, அவள் அமைதியாக நின்றாள்.
அவளது முகவாயைப் பற்றிய வித்யா, “மது! எல்லாம் உன் மனசு போலவே நல்லதா நடக்கும் கவலைப்படாதே” என்றவள், அதற்கும் மேல் அங்கே நின்றிருந்தால் எல்லாவற்றையும் சொல்ல வேண்டி இருக்கும் என்ற எண்ணத்தில் மேகலாவை அழைத்துக்கொண்டு சென்றாள்
மேலே வந்துகொண்டிருந்த தீபக், நீங்கள்லாம் அங்கிள், ஆன்ட்டியைக் கூட்டிட்டு ராஜேஷோட கார்ல வாங்க. நான் அப்பா, அம்மாவோட மதுவைக் கூட்டிட்டு வரேன்” என்றவன் மதுவின் அறைக்குச் சென்றான்.
“கிளம்பிட்டிய?” என்றவனுக்கு, “ம்” என்று தலையை ஆட்டினாள்.
அவளை ஆழ்ந்து பார்த்தவன், “ஒரு வாரமா எங்ககிட்ட எதையோ மறைக்கிற. சொல்லு யாரையாவது விரும்பறியா?" என்று நேரடியாகக் கேட்டான்.
இந்தத் திடீர் கேள்வியை எதிர்பாராத மது தயங்கி நிற்க, “நீ யாரையாவது விரும்பறியா? வீட்ல சொல்ல பயப்படறியா? நீ இப்படியிருப்பது எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு" என்றதும் மது மடை திறந்த வெள்ளமாக எல்லாவற்றையும் கொட்டினாள்.
"அவ்வளவு தானே விஷயம். நீ எதையும் காட்டிக்காதே. திரும்ப வீட்டுக்கு வந்ததும் நானே, அப்பாகிட்ட சொல்றேன்" என்றவனைப் பார்த்து, "எனக்குப் பயமாயிருக்கு அத்தான்" என்றாள்.
“உன் விருப்பம் இல்லாம எதுவும் நடக்காது. அப்பாவும் புரிஞ்சிப்பாங்க. என்ன இந்த விஷயத்தை நீ முதலிலேயே சொல்லியிருக்கலாம். சரி, கொஞ்சம் சிரியேன்" என்றதும், லேசாகப் புன்னகைத்தாள்.
அவள் தலையைப் பிடித்து ஆட்டிவிட்டுக் கீழே சென்றவன் ராஜியும், விமலாவும் பேசியது காதில் விழ அப்படியே நின்று கேட்க ஆரம்பித்தான்.
விமலா, நடந்த அனைத்தையும் சொல்ல, ராஜி ஏதும் சொல்லாமல் கேட்டுக்கொண்டார். மதுவை இப்படி அலைக்கழித்தது தீபக்கின் மனதுக்குச் சற்றுக் கஷ்டமாக இருந்தாலும், அவளது வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்ற நம்பிக்கை வந்தது.
அனைவரும் ஹோட்டலுக்குச் சென்று இறங்கியதும், ‘இங்கே தானே என்னிடம் அவ்வளவு உரிமையோடு பேசினான்’ என நினைத்துக்கொண்டே வந்தாள். பெரியவர்கள் ஒரு புறம் அமர, மறுபுறத்தில் மற்றவர்கள் அமர்ந்தனர். நேரம் ஆக ஆக அவளது பதட்டம் அதிகரித்தது.
"என்ன மது டென்ஷனா இருக்கா?"என்று ஆறுதலாகக் கேட்டாள் வித்யா.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல" எனச் சொல்லிவிட்டு அவள் நிமிர, பெரிய பூங்கொத்துடன் டைனிங் ஹாலின் கதவைத் திறந்துகொண்டு வந்தவனைக் கண்டதும், அவளுக்கு மூச்சே நின்றுவிடும் போல ஆனது.
‘கடவுளே! இந்த நேரத்திற்கு இவன் எதற்கு இங்கே வரணும்? என்னை அவன் கண்ணில் படாமல் காப்பாற்று’ என வேண்டிக்கொண்டே ஓரக்கண்ணால் பார்த்தாள். அவனோ, அவர்கள் அமர்ந்திருந்த மேஜையை நோக்கித்தான் வந்து கொண்டிருந்தான்.
அர்ஜுன் வருவதைக் கவனித்த வித்யா, "அர்ஜுன் அண்ணா வந்தாச்சு" என்றாள் சப்தமாக.
மதுவிற்கோ, பயத்தில் காதுகள் அடைத்துக்கொண்டன. ‘இந்த நேரம் பார்த்து அர்ஜுனும் வந்தாச்சா சுத்தம். என்ன நடக்கப் போகிறதோ?’ என்று நினைத்தபடி கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
ஈஸ்வரிடம் வந்த அர்ஜுன், “சாரி அங்கிள் கொஞ்சம் லேட் ஆயிடுச்சி" என்று மென்குரலில் சொன்னவன் மதுவின் அருகில் இருந்த இருக்கையின் அருகில் வந்து நின்றான்.
ராஜேஷ், “மது!” என்று அழைக்க நிமிர்ந்து பார்த்தாள்.
“ஹலோ! ஐயம் அர்ஜுன். விஷ் யூ மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் த டே” என்றபடி பூங்கொத்தை நீட்ட, அவள் திகைப்பும், சந்தோஷம், கோபம், என்று கலவையான முகபாவனைகளை வெளிப்படுத்தினாள்.
“மது...” என்று அருகிலிருந்த வித்யா அழைக்க, நினைவுலகிற்கு வந்தவள், “தேங்க்யூ” என்றபடி வாங்கிக் கொண்டாள்.
பெரியவர்கள் அதற்கு மேல் இவர்களைப் பார்க்காமல் பேசிக்கொண்டிருக்க, மது திரும்பி ராஜேஷையும், தீபக்கையும் பார்த்தாள். இருவரும் மதுவைப் பார்த்து சிரிக்க மதுவும் லேசான மனதுடன் புன்னகைத்துவிட்டுத் திரும்பி அர்ஜுனைப் பார்த்தாள்.
தான் தான் அர்ஜுன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டது முதல், மது உள்ளுக்குள் அவனைத் திட்டுவதாக நினைத்து, அவன் செய்தவைகளை ரசித்துக்கொண்டிருந்தாள்.
‘பேரைப் பார் பேரை... அர்ஜுனாம் அர்ஜுன். ஆனாலும், உனக்கு ரொம்பத் தான்டா லோல்லு. இந்த ஒருவாரமா என்னை என்னம்மா அலைகழிச்ச இடியட்! சிரிப்பை பாரு. பெரிய புன்னகை மன்னன்னு நினைப்பு. நீ வந்து ஐயம் அர்ஜுன்னு சொன்னதும், உன்னைப் பார்த்து மயங்கிடுவேன்னு நினைச்சியா?
நாளைக்கு ஈவ்னிங் வரை, என்னோட பதிலை சொல்லப் போவது இல்லை. நான் என்ன சொல்வேன்னு எதிர்பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியது தான். உனக்கு மட்டும்தான் ஆட்டம் காண்பிக்கத் தெரியுமா? நான் உனக்குக் காட்டுகிறேன் பார்’ என எண்ணிக்கொண்டாள்.
சாப்பிட்டு முடிக்கும் வரை அவளிடம் எதுவும் பேசாமல் இருந்தவன், அவள் எழுந்துச் செல்ல முயல சட்டென கையை பிடித்துக்கொண்டான். மற்றவர்கள் இவர்களைக் கண்டுகொள்ளாமல் வெளியே செல்ல, தன் கையை விடுவிக்க முயன்று தோற்றது தான் மிச்சம்.
"விடுங்க அர்ஜுன்" என்றவளுக்குக் கண்கள் கலங்க, தன் பிடியை விட்டவன், "ஹே தேனு சாரிடா! நான் தமாஷுக்காக தான் அப்படிச் செய்தேன்" என்றவனை கோபத்தோடு பார்த்தவள், "எங்களுக்கும் மனசுன்னு ஒண்ணு இருக்கு மிஸ்டர். அர்ஜுன்" என்றவள் வேகமாக சென்றாள்.
‘ஹும்ம்! இப்போ உன்னோட டேர்ன்? தேனு! நீ என்னதான் கோபப்படறா மாதிரி நடித்தாலும், உன்னை எனக்குத் தெரியும்டி செல்லம். உன் மனசுல என்ன நினைப்பேன்னும் எனக்குத் தெரியும். ஆனால், அது போல நடந்தால் நான் அர்ஜுன் இல்லையே’ என நினைத்துக்கொண்டே சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.