அத்தியாயம் - 21
மூன்று நாட்களுக்குப் பிறகு, அன்று தான் சற்று நிதானத்திற்கு வந்திருந்தாள் மதுமிதா.
சித்தார்த்தைச் சந்தித்துவிட்டு வந்த இருவரும், அவன் கூறிய அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூற, அனைவரும் மௌனமாக கேட்டுக் கொண்டனர். ராஜேஷ் முதன்முதலில் சித்தார்த்திற்குத் தான், மதுவைக் கொடுக்கலாம் என்று கேட்டேன் என்று சொல்ல, விமலா அவனை ஆழ்ந்து பார்த்தார்.
யாருமே எதுவும் சொல்லாமல் அமர்ந்திருக்க, “நான் அந்தப் பையனைப் பார்க்கணும்” என்றார் விமலா.
அனைவரும் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தனர்.
“எனக்கு அந்தச் சித்தார்த்தோட குணம், ரொம்பவே பிடிச்சிருக்கு. அவன் நம்மகிட்ட பழைய விஷயத்தைச் சொல்ல வேண்டிய அவசியமே இல்ல. தான் செய்தது தவறு என்ற உறுத்தல் இருந்ததால் தான், சொல்லியிருக்கான். நாம பொண்ணையும் நல்லபடியா வைத்திருப்பான்” என்றார் நெகிழ்ச்சியுடன்.
“விமலாம்மா! கொஞ்சம் நாள் போகட்டும்...” என ஆரம்பித்தக் கணவரை, “எதுவும் சொல்லாதீங்க. அவள் கொஞ்சம் கொஞ்சமா சாகறதுக்குள்ள, அவளுக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சிக் கொடுக்கறது தான் நல்லது. சின்னக் கோட்டுக்குப் பக்கத்துல பெரிய கோட்டைப் போட்டாதான், அவளை இதிலேயிருந்து வெளியே கொண்டு வர முடியும்” என்று அவர் சொல்ல, எல்லோரும் அதை ஒப்புக்கொண்டனர்.
“சித்தார்த்தை எப்போ பார்க்கலாம்ன்னு கேட்டேனே!” என்றார்.
“தீபக் கல்யாணத்துக்கு முன்னாலேயே பார்க்கலாம்” என்றான் ராஜேஷ்.
இது எதையும் அறியாத மது, அனைவருக்கும் நடந்த விஷயம் தெரிந்தும் தன்னிடம் கேட்கவில்லை என்று உணர்ந்தே இருந்தாள். இதுவும் நன்மைக்கே என்று ஒரு பக்கம் தோன்றினாலும், கடந்த இரு தினங்களில் சித்தார்த் ஏதும் செய்யாமல் இருப்பதே அவளுக்குப் பயத்தைக் கொடுத்தது.
அன்று காலையில், ரமேஷ் அலுவலகம் வந்து பொறுப்பை ஏற்றுக்கொண்டான். பிற்பகல் வரையில் வேலையில் கவனமாக இருந்த சித்தார்த், மதுவின் வீட்டிற்கு போன் செய்தான்.
போனை எடுத்த வித்யா, சித்தார்த் பேசுகிறான் என்று அறிந்ததும், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவனையும் விசாரித்தாள்.
"தெரியும்மா!” எனச் சிரித்தவன், “மதுகூட பேச முடியுமா?” என்று கேட்டான்.
முன்தினம் தான் சித்தார்த் போன் செய்தாரா என்று மதுமிதா, வித்யாவிடம் விசாரித்தாள். இல்லை என்றதற்கு, அவர் போன் செய்தா என்னைக் கூப்பிடாதே வித்யா! ப்ளீஸ் நீயே ஏதாவது சொல்லி சமாளிச்சிடு” என்று அவள் சொல்வதற்குள் கண்கள் கரித்து, மூக்கு நுனி சிவந்து வெளுத்த முகத்துடன் பேசியவளைப் பார்க்கவே அவளுக்குப் பாவமாக இருந்தது.
இப்போது, அவள் உண்மையாகவே உறங்கிக் கொண்டிருந்தாள். "அவள் இப்போ தான்ண்ணா டேப்லட்ஸ் எடுத்துக்கிட்டுத் தூங்கினா. எழுந்ததும் பேசச் சொல்லட்டுமா!" என்றாள் தன்மையாக.
"வேண்டாம்மா! நானே திரும்பப் பேசறேன்” என்று போனை வைத்தான்.
அவள் எழுந்ததும், சித்தார்த் போன் செய்ததைச் சொல்ல, அவளுக்குப் பயம் குடிகொண்டது.
‘இரண்டு நாள்களாக பேசாமல் இருந்தவன் இப்போது பேசவேண்டும் என்று வந்திருக்கிறான். இனி, சித்தார்த் அமைதியாக இருக்க மாட்டான். அவனுடைய கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது? எந்த முகத்தோடு அவனைப் பார்ப்பது?’ எனக் கலங்கினாள்.
ஒவ்வொரு நொடியையும் பயத்துடனே கழித்தாள். இரவு எட்டு மணி. இதற்கு மேல் வீட்டிற்குப் போன் செய்யமாட்டான் என்ற எண்ணத்துடன் மதுமிதா, வித்யாவுடன் பேசிக்கொண்டு ஹாலில் அமர்ந்திருக்க, அருகில் தீபக் தனது அலுவலக வேலையில் மூழ்கி இருந்தான்.
அவளது எண்ணத்தைத் தகர்ப்பதைப் போல தொலைபேசி ஒலிக்க, அவளது முகம் வெளுத்தது.
“என்னடி இது? வேற யாராவதா இருக்கும்” என்று வித்யா அவளை ஆசுவாசப்படுத்தினாள்.
போனை எடுத்த தீபக், "ஹலோ சித்தார்த்! எப்படியிருக்கீங்க?" என்றவாறே மதுவின் முகத்தைப் பார்க்க, நடுங்கிய விரல்களுடன் கால்களைக் கட்டிக்கொண்டாள்.
கண்கள் கெஞ்சலுடன் அவனைப் பார்த்துக்கொண்டிருக்க, தீபக்கிற்குப் பாவமாக இருந்தது.
"இல்லை சித்தார்த்! அவள் இப்போதான் தூங்கப் போனா. எழுப்பட்டுமா?" என்றான்.
அவன் பேசும் தொனியை வைத்தே, சித்தார்த் புரிந்துகொண்டான். தன்னுள் எழுந்த கோபத்தை அடக்கிக்கொண்டு. "வேண்டாம் தீபக்! நான் அப்புறம் பேசறேன்" என்று போனை வைத்தான்.
அவனைத் தவிப்பதாக நினைத்து அவள் செய்யும் ஒவ்வொரு செயலும், சித்தார்த்தின் கோபத்தை அதிகப்படுத்துவதை அறியாமல் இருந்தாள்.
அவன் போனை வைத்ததும், நன்றியுடன் பார்த்தவள் எழுந்து மொட்டை மாடிக்குச் சென்றாள்.
வானத்தை வெறித்துக் கொண்டிருந்தவள் தன்னருகில் வந்து அமர்ந்த தீபக்கைக் கண்டுகொள்ளாமல், மீண்டும் ஆகாயத்தை வெறித்தாள். அவன் ஏதேதோ சொல்லி அவளது கவனத்தைத் திசைத்திருப்ப முயன்றான்.
ஆனால், அத்தனையும் விழலுக்கு இறைத்த நீராகப் போனது. அவனுக்கு ஆயாசமாக இருந்தது. அவளைத் திருமணத்திற்குச் சம்மதிக்க வைப்பது அத்தனைச் சுலபமாக இருக்கப் போவதில்லை என்று புரிந்தது.
“மதும்மா!" என்று அவளது தலையைத் தடவிக்கொடுக்க, அந்தப் பரிவில் அவனது தோளிலேயே சாய்ந்து அழத் துவங்கினாள். சற்றுநேரம் அவளை அழவிட்டவன், மெல்ல அவளது கையைத் தட்டிக் கொடுத்து, கண்களைத் துடைத்துவிட்டான்.
"இப்போ சொல்லு உனக்கும், சித்தார்த்துக்கும் என்ன பிரச்சனை? ஏன் இந்த மாதிரி உன் உடம்பைக் கெடுத்துக்கற?" என்று வாஞ்சையுடன் கேட்டான்.
மதுவின் முகமோ நடந்ததை நினைத்து குற்றவுணர்வில் தடுமாற, "எதுவா இருந்தாலும் பேசும்மா? உனக்குள்ளேயே வச்சி இப்படி உருகாதே. நீ தானே சொல்லுவ. நாம என்ன அழவா பிறந்தோம்? இருக்கும் வரைக்கும் சந்தோஷமா, அடுத்தவங்களுக்குப் பிரயோஜனமா இருக்கணும்னு. அப்படித் தெளிவா யோசிக்கும் நீயே, இப்படி அழுதிட்டு இருக்கலாமா?" என்று அவன் கேட்க, நடந்த அனைத்தையும் குன்றலுடன் சொன்னாள்.
அவள் சொன்னதையும், அதன் விளக்கத்தையும் கேட்ட தீபக்கிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தான் நினைத்ததைப் போலவே, விஷயம் அந்தர் பல்டி அடித்து நின்றிருப்பதை எண்ணித் தடுமாறினான்.
சற்றுநேரம் பேசாமல் இருந்தவன், "சரி, நடந்தது நடந்து போச்சு. இந்த விஷயத்தால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை, நீ பேஸ் பண்ணித்தான் ஆகணும். இதில் நாங்க யாரும் தலையிட முடியாது" என்றான்.
"எப்படி அத்தான் இதைச் சொல்லமுடியும்? சித்தார்த் மனசுல சலனம் வர, நான் காரணமா இருந்திருக்கேன். அது போதாமல், புதுசா ஒரு குழப்பத்தையும் உருவாகிட்டேன். நான் எந்த முகத்தோடு சித்தார்த்திடம் பேசுவேன்?" என்றாள் தழுதழுத்தபடி.
"அதுக்காக, எத்தனை நாளைக்கு அவனைப் பார்த்துப் பயந்து ஓடுவ? இன்னைக்கு நீ செய்திருக்க காரியம், அவனோட கோபத்தை அதிகப்படுத்தி இருக்கும்னு நீ புரிஞ்சிக்கவே இல்ல. சித்தார்த், திரும்பவும் உன்னோடு பேச முயற்சி செய்வான். நீயும் பேசு. அவனோட மனதை அவன் புரிய வைத்ததைப் போல, உன் பக்கக் கருத்தை, அவனுக்குச் சொல்லி புரியவை" என்றான்.
அவள் அவனையே பார்த்தாள்.
‘அவ்வளவு சீக்கிரம் தன்னால், சித்தார்த்திடம் பேசிவிட முடியுமா? பேசினாலும், அதை அவன் புரிந்து கொள்வானா?’ என்ற அச்சம் மனத்தை வண்டாகக் குடைந்தது.
“நீ காலத்தைக் கடத்தக் கடத்த, பிரச்சனை முடிஞ்சிடப் போறதில்ல. தைரியமா பேஸ் பண்ணு. யார் கண்டா? உன்னால, அவன் கன்வின்ஸ் ஆனாலும் ஆகலாமே!” என்று கடைசியாக தனது அஸ்திரத்தை எறிந்து விட்டு நிராயுதபாணியாக நின்றான்.
அவனுக்குமே உள்ளுக்குள் பயம் தான். இவளை விட்டுப் பிடிக்கிறேன் என்று, விட்ட நேரமெல்லாம் போதும்’ என்று எண்ணி ஒரு முடிவுடன் பேசிவிட்டான். இனி, முடிவு அவள் கையில்.
யோசனையுடன் அமர்ந்திருந்தவளைப் பார்த்தவன், ‘யோசிக்கிறா. நல்ல முடிவை எடுத்திடணும்’ என்ற நினைப்புடன், “எழுந்திரு! கீழே போகலாம்" என்று அவளையும் அழைத்துக் கொண்டு கீழே வந்தான்.
‘அத்தான் சொல்வதும் சரி. எவ்வளவு நாளைக்குப் பேசுவதைத் தடுக்க முடியும்? சித்தார்த்திடம் என் நிலையைச் சொல்லி மன்னிப்பு கேட்டால், நிச்சயம் மன்னித்து விடுவான்’ என்று தப்புக் கணக்கு போட்டபடி கட்டிலில் சாய்ந்தாள்.
***********
விமலாவும், சந்திரசேகரும் வீடு வரை சென்று வருவதாகக் கூறிச் சென்றிருக்க, ராஜியும் – ஈஸ்வரனும் கல்யாண வேலையாக வெளியே சென்றிருந்தனர். ராஜேஷ் அவசர வேலை என்று வெளியே சென்றுவிட, நண்பர்களுக்குப் பத்திரிகை கொடுத்துவிட்டு வருகிறேன் என்று தீபக்கும் கிளம்பினான்.
மதுவிற்குத் துணையாக வித்யா மட்டுமே இருந்தாள்.
மாடியில் ஊஞ்சலில் அமர்ந்திருந்தவளிடம், “இந்த மாத்திரையைப் போடு. உனக்குக் கொஞ்சம் ஹார்லிக்ஸ் கொண்டு வரேன்" என்று அவளிடம் மருந்தை கொடுத்தாள்.
"ஹார்லிக்ஸ்லாம் வேண்டாம் வித்யா! ஏற்கெனவே, நாக்கெல்லாம் கசப்பா இருக்கு" என்றாள் சிணுங்களுடன்.
"என்கிட்ட நல்லா உதை வாங்கப் போறே. டாக்டர் என்ன சொன்னார்? ரொம்ப வீக்கா இருக்கே நல்ல சத்துள்ள ஆகாரம் கொடுங்கன்னு சொன்னார். நீ முதலில் மாத்திரையைப் போடு" என்று அதட்டிச் சொல்ல, அவளும் மாத்திரையை விழுங்கினாள்.
"ரெண்டே நிமிஷம் வந்திடுறேன்" என்று அவள் சமையலறைக்குச் செல்ல, மதுமிதாவின் கைப்பேசி அழைத்தது.
கண்களை மூடிய நிலையிலேயே கைப்பேசியை எடுத்து சோர்ந்த குரலில், “ஹலோ!" என்றாள்.
மறுமுனையில் சப்தமே இல்லாதிருக்க, ஹலோ... என்று மீண்டும் சொன்னவளுக்குப் பொறிதட்ட, "சித்..தா..ர்த்!" என்றாள் நடுங்கும் குரலில்.
பதிலுக்குச் சீறலாக ஒரு பெருமூச்சு மட்டுமே வந்தது. அவன் பேச ஆரம்பிக்கும் முன், வேகமாகத் தொடர்பைத் துண்டித்தவளது முகம் வியர்த்தது. முன்தினம் யோசித்து வைத்த எதுவும் நினைவிற்கு வரவில்லை.
"ஹார்லிக்ஸ் ரெடி" என்றபடி வந்த வித்யா, “என்னடி இப்படி வேர்த்திருக்கு? ஓஹ்! ஜுரம் விடுது இல்லையா. அதனால் இருக்கும்" என அவளே சமாதானமும் சொல்லிக் கொண்டாள்.
சற்று நேரம் அமர்ந்திருந்த வித்யா, "நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. நான் வீட்டைப் பூட்டிட்டு லைப்ரரி போய்ட்டு வரேன். ஒரே போர் அடிக்குது" என்றாள்.
"பூட்ட வேண்டாம். அண்ணன் எப்போ வேண்டுமானாலும் வருவாங்க. நான் கீழே வந்து உட்கார்ந்துக்கறேன்" என்றவள், ஹாலின் மூலையிலிருந்த ஈசிசேரில் கால்களை மடக்கி வைத்து அமர்ந்து கொண்டாள்.
வித்யா கிளம்பும் நேரம் லேண்ட்லைன் ஒலிக்க, மது பயத்துடன் போனையே பார்த்தாள்.
“சொல்லுங்க ரமேஷ் அண்ணா!” என்றவுடன் தான் அவளது மனம் சற்று நிம்மதி அடைந்தது. பேசிக்கொண்டிருக்கும் போதே இணைப்பு துண்டாக, சலிப்புடன் போனை வைத்தாள். "சரி மது! நான் போயிட்டு வந்திடுறேன்" எனக் கிளம்பினாள்.
சிரித்துக்கொண்டே தன் கையிலிருந்து ரிசீவரை வாங்கி, இணைப்பைத் துண்டித்த சித்தார்த்தைப் புரியாமல் பார்த்தான் ரமேஷ்.
"என்னடா! நீ தானே அவங்க வீட்டு லேண்ட் லைனுக்குப் போன் செய்யச் சொன்ன. இப்போ, நீயே பாதில வாங்கி கட் பண்ணிட்டியே" என்றான்.
"எல்லாம் காரணமா தான்" என்றவன், ரமேஷின் கைப்பேசியை வாங்கி அதிலிருந்து மதுவின் மொபைலுக்கு அழைத்தான்.
ரமேஷின் பெயரைப் பார்த்ததும், லைன் கட் ஆனதால் மொபைலில் அழைக்கிறான் என எண்ணி, "ரமேஷ் அண்ணா! எப்படியிருக்கீங்க?" என்றாள் மெல்லிய குரலில்.
“ஏன்? ரமேஷ்கிட்டத் தான் பேசுவியா? என்னிடம் பேசமாட்டியா?" என்று சித்தார்த்தின் குரல் ஒலிக்க, அவள் அதிர்ந்து போனாள்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காதவள் பதட்டத்துடன், “சித்தார்த் ப்ளீஸ்!" என்றாள் கெஞ்சலாக.
“மது! நான் உன்னிடம் பேசணும். திரும்பப் போனைக் கட் பண்ணாதே..." என்று அவன் சொல்லும் போதே, இணைப்பு துண்டானது. அவன் மீண்டும் முயற்சிக்க, ஸ்விட்ச் ஆஃப் என்று வர, அவனது முகம் கோபத்தில் சிவந்தது.
கோபத்துடன் கார் சாவியை எடுத்தவனை வேகமாகத் தடுத்தான் ரமேஷ். “சித்தார்த்! கொஞ்சம் நிதானமா இரு. எங்கே கிளம்பிட்ட?" என்று நண்பனின் கரத்தைப் பிடித்தான்.
கிண்டலாகச் சிரித்தவன், “வேற எங்கே? உன் அருமை தங்கையைப் பார்க்கத் தான். அவளுக்கு, தான் தான் புத்திசாலின்னு நினைப்பு. அதான், நேர்ல போய் பாராட்டிட்டு வரலாம்னு கிளம்பறேன்" என்றவன் ரமேஷின் கையை எடுத்துவிட்டு விட்டுக் கிளம்பினான்.
ரமேஷ், மதுவிற்குத் தொடர்பு கொள்ள மொபைல் ஸ்விட்ச் ஆஃப் என்றும் லேண்ட் லைன் ரிசீவரும் எடுத்து கீழே வைக்கபட்டிருக்க ரமேஷ் தலையிலே அடித்துக் கொண்டான். உடனே, தீபக்கின் மொபைலுக்கு முயன்றான்.
மூன்று நாட்களுக்குப் பிறகு, அன்று தான் சற்று நிதானத்திற்கு வந்திருந்தாள் மதுமிதா.
சித்தார்த்தைச் சந்தித்துவிட்டு வந்த இருவரும், அவன் கூறிய அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூற, அனைவரும் மௌனமாக கேட்டுக் கொண்டனர். ராஜேஷ் முதன்முதலில் சித்தார்த்திற்குத் தான், மதுவைக் கொடுக்கலாம் என்று கேட்டேன் என்று சொல்ல, விமலா அவனை ஆழ்ந்து பார்த்தார்.
யாருமே எதுவும் சொல்லாமல் அமர்ந்திருக்க, “நான் அந்தப் பையனைப் பார்க்கணும்” என்றார் விமலா.
அனைவரும் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தனர்.
“எனக்கு அந்தச் சித்தார்த்தோட குணம், ரொம்பவே பிடிச்சிருக்கு. அவன் நம்மகிட்ட பழைய விஷயத்தைச் சொல்ல வேண்டிய அவசியமே இல்ல. தான் செய்தது தவறு என்ற உறுத்தல் இருந்ததால் தான், சொல்லியிருக்கான். நாம பொண்ணையும் நல்லபடியா வைத்திருப்பான்” என்றார் நெகிழ்ச்சியுடன்.
“விமலாம்மா! கொஞ்சம் நாள் போகட்டும்...” என ஆரம்பித்தக் கணவரை, “எதுவும் சொல்லாதீங்க. அவள் கொஞ்சம் கொஞ்சமா சாகறதுக்குள்ள, அவளுக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சிக் கொடுக்கறது தான் நல்லது. சின்னக் கோட்டுக்குப் பக்கத்துல பெரிய கோட்டைப் போட்டாதான், அவளை இதிலேயிருந்து வெளியே கொண்டு வர முடியும்” என்று அவர் சொல்ல, எல்லோரும் அதை ஒப்புக்கொண்டனர்.
“சித்தார்த்தை எப்போ பார்க்கலாம்ன்னு கேட்டேனே!” என்றார்.
“தீபக் கல்யாணத்துக்கு முன்னாலேயே பார்க்கலாம்” என்றான் ராஜேஷ்.
இது எதையும் அறியாத மது, அனைவருக்கும் நடந்த விஷயம் தெரிந்தும் தன்னிடம் கேட்கவில்லை என்று உணர்ந்தே இருந்தாள். இதுவும் நன்மைக்கே என்று ஒரு பக்கம் தோன்றினாலும், கடந்த இரு தினங்களில் சித்தார்த் ஏதும் செய்யாமல் இருப்பதே அவளுக்குப் பயத்தைக் கொடுத்தது.
அன்று காலையில், ரமேஷ் அலுவலகம் வந்து பொறுப்பை ஏற்றுக்கொண்டான். பிற்பகல் வரையில் வேலையில் கவனமாக இருந்த சித்தார்த், மதுவின் வீட்டிற்கு போன் செய்தான்.
போனை எடுத்த வித்யா, சித்தார்த் பேசுகிறான் என்று அறிந்ததும், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவனையும் விசாரித்தாள்.
"தெரியும்மா!” எனச் சிரித்தவன், “மதுகூட பேச முடியுமா?” என்று கேட்டான்.
முன்தினம் தான் சித்தார்த் போன் செய்தாரா என்று மதுமிதா, வித்யாவிடம் விசாரித்தாள். இல்லை என்றதற்கு, அவர் போன் செய்தா என்னைக் கூப்பிடாதே வித்யா! ப்ளீஸ் நீயே ஏதாவது சொல்லி சமாளிச்சிடு” என்று அவள் சொல்வதற்குள் கண்கள் கரித்து, மூக்கு நுனி சிவந்து வெளுத்த முகத்துடன் பேசியவளைப் பார்க்கவே அவளுக்குப் பாவமாக இருந்தது.
இப்போது, அவள் உண்மையாகவே உறங்கிக் கொண்டிருந்தாள். "அவள் இப்போ தான்ண்ணா டேப்லட்ஸ் எடுத்துக்கிட்டுத் தூங்கினா. எழுந்ததும் பேசச் சொல்லட்டுமா!" என்றாள் தன்மையாக.
"வேண்டாம்மா! நானே திரும்பப் பேசறேன்” என்று போனை வைத்தான்.
அவள் எழுந்ததும், சித்தார்த் போன் செய்ததைச் சொல்ல, அவளுக்குப் பயம் குடிகொண்டது.
‘இரண்டு நாள்களாக பேசாமல் இருந்தவன் இப்போது பேசவேண்டும் என்று வந்திருக்கிறான். இனி, சித்தார்த் அமைதியாக இருக்க மாட்டான். அவனுடைய கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது? எந்த முகத்தோடு அவனைப் பார்ப்பது?’ எனக் கலங்கினாள்.
ஒவ்வொரு நொடியையும் பயத்துடனே கழித்தாள். இரவு எட்டு மணி. இதற்கு மேல் வீட்டிற்குப் போன் செய்யமாட்டான் என்ற எண்ணத்துடன் மதுமிதா, வித்யாவுடன் பேசிக்கொண்டு ஹாலில் அமர்ந்திருக்க, அருகில் தீபக் தனது அலுவலக வேலையில் மூழ்கி இருந்தான்.
அவளது எண்ணத்தைத் தகர்ப்பதைப் போல தொலைபேசி ஒலிக்க, அவளது முகம் வெளுத்தது.
“என்னடி இது? வேற யாராவதா இருக்கும்” என்று வித்யா அவளை ஆசுவாசப்படுத்தினாள்.
போனை எடுத்த தீபக், "ஹலோ சித்தார்த்! எப்படியிருக்கீங்க?" என்றவாறே மதுவின் முகத்தைப் பார்க்க, நடுங்கிய விரல்களுடன் கால்களைக் கட்டிக்கொண்டாள்.
கண்கள் கெஞ்சலுடன் அவனைப் பார்த்துக்கொண்டிருக்க, தீபக்கிற்குப் பாவமாக இருந்தது.
"இல்லை சித்தார்த்! அவள் இப்போதான் தூங்கப் போனா. எழுப்பட்டுமா?" என்றான்.
அவன் பேசும் தொனியை வைத்தே, சித்தார்த் புரிந்துகொண்டான். தன்னுள் எழுந்த கோபத்தை அடக்கிக்கொண்டு. "வேண்டாம் தீபக்! நான் அப்புறம் பேசறேன்" என்று போனை வைத்தான்.
அவனைத் தவிப்பதாக நினைத்து அவள் செய்யும் ஒவ்வொரு செயலும், சித்தார்த்தின் கோபத்தை அதிகப்படுத்துவதை அறியாமல் இருந்தாள்.
அவன் போனை வைத்ததும், நன்றியுடன் பார்த்தவள் எழுந்து மொட்டை மாடிக்குச் சென்றாள்.
வானத்தை வெறித்துக் கொண்டிருந்தவள் தன்னருகில் வந்து அமர்ந்த தீபக்கைக் கண்டுகொள்ளாமல், மீண்டும் ஆகாயத்தை வெறித்தாள். அவன் ஏதேதோ சொல்லி அவளது கவனத்தைத் திசைத்திருப்ப முயன்றான்.
ஆனால், அத்தனையும் விழலுக்கு இறைத்த நீராகப் போனது. அவனுக்கு ஆயாசமாக இருந்தது. அவளைத் திருமணத்திற்குச் சம்மதிக்க வைப்பது அத்தனைச் சுலபமாக இருக்கப் போவதில்லை என்று புரிந்தது.
“மதும்மா!" என்று அவளது தலையைத் தடவிக்கொடுக்க, அந்தப் பரிவில் அவனது தோளிலேயே சாய்ந்து அழத் துவங்கினாள். சற்றுநேரம் அவளை அழவிட்டவன், மெல்ல அவளது கையைத் தட்டிக் கொடுத்து, கண்களைத் துடைத்துவிட்டான்.
"இப்போ சொல்லு உனக்கும், சித்தார்த்துக்கும் என்ன பிரச்சனை? ஏன் இந்த மாதிரி உன் உடம்பைக் கெடுத்துக்கற?" என்று வாஞ்சையுடன் கேட்டான்.
மதுவின் முகமோ நடந்ததை நினைத்து குற்றவுணர்வில் தடுமாற, "எதுவா இருந்தாலும் பேசும்மா? உனக்குள்ளேயே வச்சி இப்படி உருகாதே. நீ தானே சொல்லுவ. நாம என்ன அழவா பிறந்தோம்? இருக்கும் வரைக்கும் சந்தோஷமா, அடுத்தவங்களுக்குப் பிரயோஜனமா இருக்கணும்னு. அப்படித் தெளிவா யோசிக்கும் நீயே, இப்படி அழுதிட்டு இருக்கலாமா?" என்று அவன் கேட்க, நடந்த அனைத்தையும் குன்றலுடன் சொன்னாள்.
அவள் சொன்னதையும், அதன் விளக்கத்தையும் கேட்ட தீபக்கிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தான் நினைத்ததைப் போலவே, விஷயம் அந்தர் பல்டி அடித்து நின்றிருப்பதை எண்ணித் தடுமாறினான்.
சற்றுநேரம் பேசாமல் இருந்தவன், "சரி, நடந்தது நடந்து போச்சு. இந்த விஷயத்தால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை, நீ பேஸ் பண்ணித்தான் ஆகணும். இதில் நாங்க யாரும் தலையிட முடியாது" என்றான்.
"எப்படி அத்தான் இதைச் சொல்லமுடியும்? சித்தார்த் மனசுல சலனம் வர, நான் காரணமா இருந்திருக்கேன். அது போதாமல், புதுசா ஒரு குழப்பத்தையும் உருவாகிட்டேன். நான் எந்த முகத்தோடு சித்தார்த்திடம் பேசுவேன்?" என்றாள் தழுதழுத்தபடி.
"அதுக்காக, எத்தனை நாளைக்கு அவனைப் பார்த்துப் பயந்து ஓடுவ? இன்னைக்கு நீ செய்திருக்க காரியம், அவனோட கோபத்தை அதிகப்படுத்தி இருக்கும்னு நீ புரிஞ்சிக்கவே இல்ல. சித்தார்த், திரும்பவும் உன்னோடு பேச முயற்சி செய்வான். நீயும் பேசு. அவனோட மனதை அவன் புரிய வைத்ததைப் போல, உன் பக்கக் கருத்தை, அவனுக்குச் சொல்லி புரியவை" என்றான்.
அவள் அவனையே பார்த்தாள்.
‘அவ்வளவு சீக்கிரம் தன்னால், சித்தார்த்திடம் பேசிவிட முடியுமா? பேசினாலும், அதை அவன் புரிந்து கொள்வானா?’ என்ற அச்சம் மனத்தை வண்டாகக் குடைந்தது.
“நீ காலத்தைக் கடத்தக் கடத்த, பிரச்சனை முடிஞ்சிடப் போறதில்ல. தைரியமா பேஸ் பண்ணு. யார் கண்டா? உன்னால, அவன் கன்வின்ஸ் ஆனாலும் ஆகலாமே!” என்று கடைசியாக தனது அஸ்திரத்தை எறிந்து விட்டு நிராயுதபாணியாக நின்றான்.
அவனுக்குமே உள்ளுக்குள் பயம் தான். இவளை விட்டுப் பிடிக்கிறேன் என்று, விட்ட நேரமெல்லாம் போதும்’ என்று எண்ணி ஒரு முடிவுடன் பேசிவிட்டான். இனி, முடிவு அவள் கையில்.
யோசனையுடன் அமர்ந்திருந்தவளைப் பார்த்தவன், ‘யோசிக்கிறா. நல்ல முடிவை எடுத்திடணும்’ என்ற நினைப்புடன், “எழுந்திரு! கீழே போகலாம்" என்று அவளையும் அழைத்துக் கொண்டு கீழே வந்தான்.
‘அத்தான் சொல்வதும் சரி. எவ்வளவு நாளைக்குப் பேசுவதைத் தடுக்க முடியும்? சித்தார்த்திடம் என் நிலையைச் சொல்லி மன்னிப்பு கேட்டால், நிச்சயம் மன்னித்து விடுவான்’ என்று தப்புக் கணக்கு போட்டபடி கட்டிலில் சாய்ந்தாள்.
***********
விமலாவும், சந்திரசேகரும் வீடு வரை சென்று வருவதாகக் கூறிச் சென்றிருக்க, ராஜியும் – ஈஸ்வரனும் கல்யாண வேலையாக வெளியே சென்றிருந்தனர். ராஜேஷ் அவசர வேலை என்று வெளியே சென்றுவிட, நண்பர்களுக்குப் பத்திரிகை கொடுத்துவிட்டு வருகிறேன் என்று தீபக்கும் கிளம்பினான்.
மதுவிற்குத் துணையாக வித்யா மட்டுமே இருந்தாள்.
மாடியில் ஊஞ்சலில் அமர்ந்திருந்தவளிடம், “இந்த மாத்திரையைப் போடு. உனக்குக் கொஞ்சம் ஹார்லிக்ஸ் கொண்டு வரேன்" என்று அவளிடம் மருந்தை கொடுத்தாள்.
"ஹார்லிக்ஸ்லாம் வேண்டாம் வித்யா! ஏற்கெனவே, நாக்கெல்லாம் கசப்பா இருக்கு" என்றாள் சிணுங்களுடன்.
"என்கிட்ட நல்லா உதை வாங்கப் போறே. டாக்டர் என்ன சொன்னார்? ரொம்ப வீக்கா இருக்கே நல்ல சத்துள்ள ஆகாரம் கொடுங்கன்னு சொன்னார். நீ முதலில் மாத்திரையைப் போடு" என்று அதட்டிச் சொல்ல, அவளும் மாத்திரையை விழுங்கினாள்.
"ரெண்டே நிமிஷம் வந்திடுறேன்" என்று அவள் சமையலறைக்குச் செல்ல, மதுமிதாவின் கைப்பேசி அழைத்தது.
கண்களை மூடிய நிலையிலேயே கைப்பேசியை எடுத்து சோர்ந்த குரலில், “ஹலோ!" என்றாள்.
மறுமுனையில் சப்தமே இல்லாதிருக்க, ஹலோ... என்று மீண்டும் சொன்னவளுக்குப் பொறிதட்ட, "சித்..தா..ர்த்!" என்றாள் நடுங்கும் குரலில்.
பதிலுக்குச் சீறலாக ஒரு பெருமூச்சு மட்டுமே வந்தது. அவன் பேச ஆரம்பிக்கும் முன், வேகமாகத் தொடர்பைத் துண்டித்தவளது முகம் வியர்த்தது. முன்தினம் யோசித்து வைத்த எதுவும் நினைவிற்கு வரவில்லை.
"ஹார்லிக்ஸ் ரெடி" என்றபடி வந்த வித்யா, “என்னடி இப்படி வேர்த்திருக்கு? ஓஹ்! ஜுரம் விடுது இல்லையா. அதனால் இருக்கும்" என அவளே சமாதானமும் சொல்லிக் கொண்டாள்.
சற்று நேரம் அமர்ந்திருந்த வித்யா, "நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. நான் வீட்டைப் பூட்டிட்டு லைப்ரரி போய்ட்டு வரேன். ஒரே போர் அடிக்குது" என்றாள்.
"பூட்ட வேண்டாம். அண்ணன் எப்போ வேண்டுமானாலும் வருவாங்க. நான் கீழே வந்து உட்கார்ந்துக்கறேன்" என்றவள், ஹாலின் மூலையிலிருந்த ஈசிசேரில் கால்களை மடக்கி வைத்து அமர்ந்து கொண்டாள்.
வித்யா கிளம்பும் நேரம் லேண்ட்லைன் ஒலிக்க, மது பயத்துடன் போனையே பார்த்தாள்.
“சொல்லுங்க ரமேஷ் அண்ணா!” என்றவுடன் தான் அவளது மனம் சற்று நிம்மதி அடைந்தது. பேசிக்கொண்டிருக்கும் போதே இணைப்பு துண்டாக, சலிப்புடன் போனை வைத்தாள். "சரி மது! நான் போயிட்டு வந்திடுறேன்" எனக் கிளம்பினாள்.
சிரித்துக்கொண்டே தன் கையிலிருந்து ரிசீவரை வாங்கி, இணைப்பைத் துண்டித்த சித்தார்த்தைப் புரியாமல் பார்த்தான் ரமேஷ்.
"என்னடா! நீ தானே அவங்க வீட்டு லேண்ட் லைனுக்குப் போன் செய்யச் சொன்ன. இப்போ, நீயே பாதில வாங்கி கட் பண்ணிட்டியே" என்றான்.
"எல்லாம் காரணமா தான்" என்றவன், ரமேஷின் கைப்பேசியை வாங்கி அதிலிருந்து மதுவின் மொபைலுக்கு அழைத்தான்.
ரமேஷின் பெயரைப் பார்த்ததும், லைன் கட் ஆனதால் மொபைலில் அழைக்கிறான் என எண்ணி, "ரமேஷ் அண்ணா! எப்படியிருக்கீங்க?" என்றாள் மெல்லிய குரலில்.
“ஏன்? ரமேஷ்கிட்டத் தான் பேசுவியா? என்னிடம் பேசமாட்டியா?" என்று சித்தார்த்தின் குரல் ஒலிக்க, அவள் அதிர்ந்து போனாள்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காதவள் பதட்டத்துடன், “சித்தார்த் ப்ளீஸ்!" என்றாள் கெஞ்சலாக.
“மது! நான் உன்னிடம் பேசணும். திரும்பப் போனைக் கட் பண்ணாதே..." என்று அவன் சொல்லும் போதே, இணைப்பு துண்டானது. அவன் மீண்டும் முயற்சிக்க, ஸ்விட்ச் ஆஃப் என்று வர, அவனது முகம் கோபத்தில் சிவந்தது.
கோபத்துடன் கார் சாவியை எடுத்தவனை வேகமாகத் தடுத்தான் ரமேஷ். “சித்தார்த்! கொஞ்சம் நிதானமா இரு. எங்கே கிளம்பிட்ட?" என்று நண்பனின் கரத்தைப் பிடித்தான்.
கிண்டலாகச் சிரித்தவன், “வேற எங்கே? உன் அருமை தங்கையைப் பார்க்கத் தான். அவளுக்கு, தான் தான் புத்திசாலின்னு நினைப்பு. அதான், நேர்ல போய் பாராட்டிட்டு வரலாம்னு கிளம்பறேன்" என்றவன் ரமேஷின் கையை எடுத்துவிட்டு விட்டுக் கிளம்பினான்.
ரமேஷ், மதுவிற்குத் தொடர்பு கொள்ள மொபைல் ஸ்விட்ச் ஆஃப் என்றும் லேண்ட் லைன் ரிசீவரும் எடுத்து கீழே வைக்கபட்டிருக்க ரமேஷ் தலையிலே அடித்துக் கொண்டான். உடனே, தீபக்கின் மொபைலுக்கு முயன்றான்.