அத்தியாயம் - 27
சுபாஷிணியின் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாமல், மௌனமாக இருந்தவன் மீது கடும் கோபம் பொங்கியது அவளுக்கு.
‘எப்படியாவது தன்னுடைய பிடிவாதத்தால் சாதித்து விட வேண்டும் என்று இப்படி வெறிகொண்டு அலைகிறானே! இதற்கு மேல் என்னால் பொறுமையாக இருக்க முடியாது. இன்று என் முடிவைத் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும்’ என்று ஆழமூச்செடுத்துத் தன்னைத் தயார் செய்துகொண்டு அவனைப் பார்த்தாள்.
அவள் நிமிர்ந்து அமர்ந்ததிலிருந்தே, ஏதோ முடிவுடன் இருக்கிறாள் எனப் புரிந்து கொண்டவன், “என்ன அப்படிப் பார்க்கற?” என்று கேட்டான்.
"என்னை ஏன் இப்படித் தொல்லை செய்றீங்க?" என்றாள் கடுமையாக.
அவளைப் பார்த்தவன், “நான் என்ன செஞ்சேன்? நீயும், சுபாவுமே பேசி, முடிவும் எடுத்துட்டு, எல்லாத்துக்கும் நான்தான் காரணம்ன்னு என் மேலேயே போட்டாச்சு. நான் எந்தத் தப்பும் செய்யலனாலும், அடுத்தவங்க செய்றதுக்கும் சேர்த்து நானே தண்டனை அனுபவிக்கிறதா இருக்கு. எல்லாம் நான் வாங்கிட்டு வந்த வரம்" என்று தலையில் அடித்துக் கொள்ளாத குறையாகச் சொன்னான்.
அவன் சொன்ன வார்த்தைக்கான அர்த்தத்தை உணர்ந்து, அந்த உண்மை அவளைத் தாக்க, “நான் என்ன சின்னக் குழந்தையா... ஆட்டோல போனா காணாமல் போக. நான் போற இடத்துக்கெல்லாம் உங்களால் வர முடியுமா?"
“நீ எங்க போனாலும், உனக்கு துணையா வர நான் தயார். அது எங்கேயாக இருந்தாலும். வாழ்க்கை முழுசுக்கும். ஆனா, நீதான் ஒரு நல்ல பதிலா சொல்ல மாட்டேன்னு பிடிவாதமா இருக்கியே" என்றான் போலியான சலிப்புடன்.
அவன் பதிலைக் கேட்டு விதிர்த்துப் போன மனத்துடன், “எல்லாம் என் தலையெழுத்து. இப்படி வந்து மாட்டிக்கிட்டு முழிக்கணும்னு இருக்கு” என்று முணுமுணுத்தாள்.
நிலைமையைச் சற்றுக் குளிர்விக்க, ரேடியோவை ஆன் செய்தான். இருவரையும் சோதிப்பது போல அதிலும், ‘உன்னிடம் மயங்குகிறேன்; உள்ளத்தால் நெருங்குகிறேன்' என்ற பாடல் ஒலிக்க, அவளது முகம் எரிச்சலின் உச்சத்தில் இருக்க, கைகளைப் பிசைந்தபடி ஆத்திரத்துடன் அமர்ந்திருந்தாள்.
அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தாலும், இப்படி நெருக்கடி கொடுக்கா விட்டால், தன் மனத்தைத் திறக்க மாட்டாள்’ என எண்ணிக்கொண்டே, அவனும் உடன் சேர்ந்து பாட, அவள் ரேடியோவை அணைத்தாள்.
“ஹும்... காதலிக்கிற பொண்ணுகிட்ட இப்படி நேரடியா பாடத்தான் முடியல. அட்லீஸ்ட், பாட்டாவது கேட்டுச் சந்தோஷப்பட்டுக்கலாம்னு நினைச்சா அதுக்கும் முடியல. எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும்னு சும்மாவா சொன்னாங்க" என்று மிகவும் கவலையுடன் சொன்னான்.
“தயவுசெய்து கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு வரீங்களா?" என்று சினத்துடன் சொல்ல, சற்று தூரம் சென்றவுடன் யாரும் இல்லாத ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் காரை நிறுத்தினான்.
அவள், ‘என்ன?’ என்பதைப் போல அவனைப் பார்க்க, நிதானமாக இருகைகளையும் உயர்த்திச் சோம்பல் முறித்துவிட்டு புஷ்பாக் சீட்டைப் பின்னால் தள்ளிச் சாய்ந்து அமர்ந்தான் சித்தார்த்.
அவனது செய்கைகள் படபடப்பைக் கொடுக்க, "எதுக்காக காரை இங்கே நிறுத்தனீங்க? நான் வீட்டுக்குப் போகணும்" எனச் சொல்ல, அவன் கைகளிரண்டையும் தலைக்கு அடியில் வைத்துக்கொண்டு கண்களை மூடினான்.
அவளுக்கு ஆத்திரமாக வந்தது. ‘இவன் வேண்டுமென்றே என்னை எரிச்சல்படுத்த இப்படிச் செய்கிறான்’ என்று நினைத்தவள், “இப்போ நீங்க காரை எடுக்கப் போறீங்களா… இல்லையா?” என்று கேட்க, அவன் மூடிய கண்களைத் திறக்கவே இல்லை.
“நீங்க எடுக்கலைன்னா என்ன? நான் ஆட்டோல போறேன்” என்றவள், கதவைத் திறக்க முடியாமல் தடுமாறினாள்.
சீட்டைச் சரிசெய்து அமர்ந்தபடி, “என்னை மீறி உன்னால கதவைத் திறக்க முடியாது மது! சென்ட்ரல் லாக் போட்டிருக்கேன். கண்ட்ரோல் சுவிட்ச் என்கிட்டேயிருக்கு" என்றான்.
மனதளவில் ஓய்ந்து போனவளாக, "உங்களுக்கு என்னதான் வேணும்? ஏன் என்னை இப்படி ஆட்டிப் படைக்கறீங்க?" என்று வேதனையுடன் கேட்டாள்.
“எனக்கு என்ன வேணும்னு, உனக்கே தெரியும். என்னால் இனியும் பொறுமையாய் இருக்க முடியாது. எனக்கு உன்னோட பதில் வேண்டும். இன்னைக்கே சொன்னாலும் சந்தோஷம். இல்லை யோசித்து நாலைந்து நாள் கழித்துச் சொன்னால்கூடப் பரவாயில்லை. ஆனால், உன்னோட பதில் சம்மதம்ன்னு இருக்கணும்."
“என்னோட பதிலை ஏற்கெனவே ரெண்டு முறை சொல்லிட்டேன். இன்னும் என்னை ஏன் தொல்லை செய்றீங்க?"
சில நொடிகள் கண்களை இறுக மூடி ஸ்டியரிங் வீலில் மெல்ல தாளமிட்டவன், சலனமற்ற விழிகளுடன் அவளைப் பார்த்தான். அந்தப் பார்வையில் அவளுக்கு பயத்தை உண்டாக்க, "ப்ளீஸ்! என்னைக் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க சித்தார்த்" எனக் கெஞ்சலாகச் சொன்னாள்.
"அதையே தான் நானும் சொல்றேன். ஏன் என்னைப் புரிஞ்சிக்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்க? நீ எதுக்கு இப்படி உன்னோட வாழ்க்கையை விளையாட்டா நினைத்து வாழ்ந்துட்டிருக்க. அடுத்தவங்க சந்தோஷமா இருக்கணும்னு சொல்லுவியே... எத்தனைப் பேரோட சந்தோஷத்துக்குத் தடையா நீ இருக்கன்னு ஏன் உனக்குப் புரியல?” என்றான் கோபத்துடன்.
"நான், யாரோட சந்தோஷத்தையும் கெடுக்கல. அப்படி உங்களுக்குக் கல்யாண ஆசை வந்தா, உங்க வீட்ல சொல்லி ஒரு பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் செய்துகோங்க இஷ்டம் இல்லாத என்னைக் கஷ்டப்படுத்த உங்களுக்கு எந்த ரைட்ஸும் இல்ல.”
எரிச்சலை அடக்கிக்கொண்டு, "மது! நான் உன்னை மனதார காதலிக்கிறேன். நீ இல்லாத ஒரு வாழ்க்கையை, என்னால் நினைச்சிக்கூடப் பார்க்க முடியாது" என்றான்.
அவனது இறங்கிய பிடிவாதமான குரல் அவளுக்குக் கோபத்தை உண்டாக்க, " உங்களை வேண்டாம்னு சொல்ற பொண்ணுகிட்ட, என்னைக் கல்யாணம் செய்துக்கோன்னு கெஞ்சறீங்களே அசிங்கமா இல்ல உங்களுக்கு" என்றாள் ஆத்திரத்துடன்.
தன்னுடைய கோபத்தை இழுத்துப் பிடித்தபடி, "நீயே உன்னை ஏமாத்திக்கிற மது! உன்னோட ஆழ் மனசைக் கேளு. உனக்குள்ளே நான் இருக்கேனா இல்லையான்னு..."
“இல்லை இல்லை இல்லை நீங்க என்னோட மனசுக்குள்ளே ஒரு நாளும் வர முடியாது” என்று கண்ணை மூடிக்கொண்டு சத்தமாகச் சொல்ல, "ஏன் வர முடியாது?" என்று அவனும் அதே அளவிற்குக் குரலை உயர்த்தினான்.
“வர முடியாதுன்னா... வர முடியாது. என்னை இப்படி அலைக்கழிக்காதீங்க சித்தார்த்! தினம் தினம் என்னால போராட முடியல. ஏற்கெனவே, எல்லாத்தையும் தொலைச்சிட்டு நிக்கிறேன். இதுக்கு மேல எதையும் தாங்கிக்கிற சக்தி எனக்கு இல்ல... ப்ளீஸ்!" என்றவள் கண்ணீருடன் கெஞ்சினாள்.
அவளது பிடிவாதமான பேச்சுக்கு எதிர் பேச்சு பேசியவன், அவளது கண்ணீருக்குப் பதிலாக ஆறுதலாகச் சாய்ந்து கொள்ள தனது நெஞ்சைக் கொடுக்கத் தயாராக இருந்தான். ஆனால், அவள் ஏற்கத் தயாராக இல்லையே…
சில நொடிகள் அமைதியாக இருந்தவன், "நீ ஏன் வேண்டாம்னு சொல்றங்கற காரணத்தை நான் சொல்லவா?" என்று கேட்க, அவள் மிரட்சியுடன் அவனைப் பார்த்தாள்.
அவன் சொன்னதைக் கேட்டவளுக்கி உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைந்தது போலிருக்க, கண்கள் கலங்க அமர்ந்திருந்தாள்.
“நீ, வருதப்படணும்னு சொல்லலை மது! நல்லா யோசி... நடந்து முடிந்து போனதை இன்னும் எத்தனை நாளைக்கு நினைச்சிட்டு இருப்ப? உன் வாழ்க்கையை நீயே ஏன் ஒண்ணுமில்லாம அழிச்சிக்கிற. இன்னும் உன்னோட வாழ்க்கையை நீ ஆரம்பிக்கவே இல்ல. எவ்வளவோ பிரச்சனையோட இருக்கும் எத்தனையோ பேர், தங்களோட கடந்த காலத்தை ஒதுக்கிட்டுச் சந்தோஷமா வாழறபோது நீ ஏன் தயங்கற?
நான் உன்னை என்ன கேட்கிறேன்? நடந்ததை ஒரு கனவா நினைச்சி ஒதுக்கிட்டு, உன் மனசுல எனக்கு ஒரு இடம் கொடுன்னு தானே கேட்கிறேன். உனக்காக எவ்வளவு காலம் வேணும்னாலும் காத்திருக்க தயாராக இருக்கேன். என்னைப் புரிஞ்சிக்கிட்டு, என் வாழ்க்கைத் துணையா வந்தா ரொம்பவே சந்தோஷப்படுவேன்" என உணர்ச்சி ததும்ப சொன்னவன், அவள் பதிலை எதிர்பாராமல் காரைக் கிளப்பினான்.
வீட்டின் முன்பாக காரை நிறுத்திவிட்டு அவளைத் திரும்பிப் பார்த்தான். தன் நிலையறியா சிலை போல் அமர்ந்திருக்க, "மது! வீடு வந்தாச்சு" என்று அவள் கையைத் தட்டிச் சொன்னான்.
கனவிலிருந்து எழுபவளைப் போல விழித்தவள் இறங்க முற்பட, அவளது வலது கரத்தைப் பிடித்தான்.
அவள் கோபத்துடன் கையை இழுக்க, அவன் விடாமல், “காலம் பூராவும் உன் கையைப் பிடிச்சிக்கிட்டு உன் துணையா வரணும்னு ஆசைப்படுகிறேன். உன்கிட்டயிருந்து நல்ல பதிலை எதிர்பார்க்கறேன்" என்றான்.
"என்னால, உங்களைக் கல்யாணம் செய்துக்க முடியாது. நீங்க எதிர்பார்க்கற நல்ல மனைவியா, என்னால உங்களோட வாழமுடியாது. வாழ்க்கைல உங்களுக்கு எந்தவித சந்தோஷத்தையும் கொடுக்க முடியாது. தயவுசெஞ்சி இனி, என்னை வற்புறுத்தாதீங்க” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னவள், தன் கையை இழுத்து விடுவித்துக்கொண்டு இறங்கினாள்.
சித்தார்த் கோபத்தோடு இறங்கி அவளுக்கு எதிரில் வந்து நின்றான். இருவரும் நேருக்கு நேராகப் பார்த்துக்கொள்ள, “நீ நிச்சயம் மனசு மாறுவ. என்னைக் கல்யாணம் செய்துக்க சம்மதம்ன்னு சொல்லுவ. என் மனைவியா என் கூட வாழத்தான் போற. என்னோட காதல் உண்மைன்னா, அது கூடிய சீக்கிரம் நடக்கத்தான் போகுது” என்று உறுதியோடு சொல்லிவிட்டுச் சென்றவனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.
சித்தார்த்தின் வீட்டில் குடும்பமே ஹாலில் கூடி இருந்தது. அனைவரும் காஃபி அருந்தியபடி பேசிக்கொண்டிருந்தனர். ராமமூர்த்தி, தனது மாப்பிள்ளையிடம் எல்லாவற்றையும் விளக்கமாகச் சொன்னார்.
“நல்ல விஷயம் மாமா! சுபா எல்லா விஷயமும் சொன்னா. நம்ம சித்தார்த்துக்குப் பிடிச்சிருந்தா முடிச்சிடலாம். அவங்க குடும்பம் எங்கே இருக்கு?"
"பொண்ணு பேரு மதுமிதா. திருவான்மியூர்ல இருக்காங்க. அவங்க அப்பா பேரு சந்திரசேகர். " என்றார் சித்தார்த்தின் தந்தை ராமமூர்த்தி.
அவர் சொன்ன பெயர்களைக் கேட்ட ஹரி பிரசாத் ஏதோ தோன்ற, “சந்திர சேகர்? அவர் ரிடையர்ட் மிலிட்டரி ஆஃபிஸரா? அவங்க மனைவி பேரு விமலா தானே? அவங்களுக்கு ஒரு பையன் கூட இருந்தானே…" என்று இடைமறித்து அவசரமாகக் கேட்டவனை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
“சரியா சொல்றீங்களே! உங்களுக்கு அவங்களைத் தெரியுமா? ஆனா, அவள் ஒரே பொண்ணு தானே… பையன்" என்று இழுத்தான் ஆதி.
“அது இருக்கட்டும். மதுமிதாவுக்கு இந்தக் கல்யாணத்தில் சம்மதமான்னு தெரியுமா?" என்றான்.
“நம்ம சித்தார்த் கூட நல்லா தானே பழகறா. நம்ம வீட்டுக்குக்கூட வந்திருக்காளே. அவளுக்கும் சம்மதம்னு தான் நினைக்கிறோம்" என்று சந்தேகத்துடனே பதில் சொன்னார் தேவகி.
“எனக்கு என்னவோ நம்பிக்கை இல்லை. மாமா! முதல்ல, சித்தார்த்கிட்ட நல்லா விசாரிங்க” என்று ஹரி பிரசாத் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, உள்ளே நுழைந்த சுபா, “என்ன வட்ட மேஜை மாநாடா?” என்று கேட்டுக்கொண்டே கணவனின் அருகில் அமர்ந்தவள், “என்னங்க இன்னைக்கு ஒரு சர்ப்ரைஸ்! லேண்ட்மார்க்ல நம்ம மதுமிதாவைப் பார்த்தேன்" என்றாள்.
“அண்ணியைப் பார்த்தீங்களா அக்கா! அண்ணாவோட செலெக்ஷன் எப்படி?" என்று கேட்டாள் நேத்ரா.
“நான் எங்கே மதுவைப் பார்த்தேன்? நான் சொல்ற மதுமிதா, எங்களுக்குத் தெரிஞ்ச பொண்ணு" என்றவளிடம், “இல்லை சுபா. மதுமிதான்னு ஒரே பொண்ணுதான். நம்ம சித்தார்த், அவளைத்த் தான் விரும்பறான்" என்றார் ஹரி பிரசாத்.
அதிர்ச்சியுடன் கணவரைப் பார்த்தவள், “அதெப்படிங்க முடியும்? இப்போகூட அவளோட தான் பேசிட்டு வரேன். இன்னமும் மனசளவுல அவள் கொஞ்சங்கூட மாறாம தான் இருக்கா” என்றவள் புரியாமல் ஜீவாவைப் பார்த்தாள்.
அவன் என்ன சொல்வதெனத் தெரியாமல் நின்றிருக்க, “நீ சித்தார்த் கூடத் தானே போன. இப்போ, ஜீவா கூட வந்திருக்க. சித்தார்த் எங்கே?" என்று விசாரித்தான் ஆதி.
“நான்தான் மதுமிதாவை, அவங்க வீட்ல விட்டுட்டு வான்னு சொன்னேன்" என்றாள்.
இப்போது அனைவரின் பார்வையும் ஜீவாவிடம் திரும்ப, அவன் தவிப்புடன் நின்றிருந்தான்.
“ஜீவா! சித்தார்த் எல்லாத்தையும் உன்கிட்டச் சொல்வானே... நீ சொல்லு. ரெண்டு பேரும் காதலிக்கறது உண்மைதானே?" என்று தவிப்புடன் கேட்டார் தேவகி.
தலையைக் கோதிக்கொண்டவன், “இல்லம்மா, சித்தார்த் மட்டும்தான்...” என்றதைக் கேட்ட அனைவரும் அதிர்ந்து போயிருக்க, சித்தார்த்தின் கார் போர்டிக்கோவில் வந்து நின்றது.
உள்ளே வந்தவனை அனைவரும் பார்க்க, அவர்களது பார்வையே எதோ பிரச்சனை என அவனுக்குப் புரிய வைத்தது.
அன்னையின் அருகில் சென்றவன், “என்ன எல்லோரும் ஒரு மாதிரி இருக்கீங்க?" என்று கேட்டான்.
“சித்தார்த்! என்னடா இது... புதுசா ஒரு பிரச்சனை?" என்ற தேவகியின் உள்ளம் மகனுக்காகத் துடித்தது.
"என்னன்னு சொன்னா தானே, எனக்குத் தெரியும்" என்றவன் அருகில் வந்த ஹரி, “சித்தார்த் உன்னைக் கல்யாணம் செய்துக்க மதுமிதாவுக்குச் சம்மதமா?" என்று கேட்டார்.
அவனது பார்வை நண்பனைத் தொடர்ந்தது. அவன், தலையை அசைக்க, அழுந்த தலையைக் கோதிக்கொண்டே, “மதுவைப் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சி போச்சா? நம்ம வீட்டு விசேஷம் முடிஞ்சதும் நானே சொல்லலாம்னு இருந்தேன்" என்றவன் முதன் முதலில் அவளைச் சந்தித்தது முதல், அவளது வாழ்க்கையில் நடந்த துயர சம்பவம் வரை அனைத்தையும் சொல்லி முடித்து அங்கிருந்த இருக்கையில் தளர்ந்து போய் அமர்ந்தான்.
மொத்தக் குடும்பமும் திகைத்துப் போய் கண்களில் கண்ணீருடன் அமர்ந்திருந்தனர்.
“இந்தச் சின்ன வயசுல எவ்வளவு கஷ்டத்தை அனுபவிச்சிட்டா. அந்தக் கடவுள் அவளுக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கையைக் கொடுத்திருக்கக் கூடாதா?” என்றபடி முந்தானையால் தனது கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்.
தம்பியின் முதுகில் தட்டிக் கொடுத்த ஆதி, "இவ்வளவு நடந்தும் நீ அவளைக் காதலிக்கிற பாரு... உன்னை நினைச்சா எனக்குப் பெருமையா இருக்குடா. ஆனா, அவளுக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லைன்னா, நீ ஏன் அவளைக் கட்டாயப்படுத்துற?" என்று கேட்டான்.
“தெரிந்தோ தெரியாமலோ, அவளோட வாழ்க்கை இப்படி ஆனதுக்கு, நானும் ஒரு காரணமோன்னு என்னோட மனசு உறுத்திக்கிட்டே இருக்கு. நான் மட்டும் ஆரம்பத்திலேயே அவளிடம் சொல்லியிருந்தா, அவள் இந்த மாதிரிக் கஷ்டத்தை அனுபவிக்காம இருந்திருப்பா இல்லையா?" என்றான் தழுதழுத்தக் குரலில்.
“நான் உன்னை இன்னும் அதே விளையாட்டுப் பையனாவே நினைசிட்டேன்டா. பெருமையா இருக்குடா. நீ எதுக்குமே பொறுப்பாக முடியாதுன்னு இருக்கும் போதே, அவளுடைய கஷ்டத்தைத் தன்னால் தீர்க்க முடியாமல் போச்சேன்னு... உன் காதலை அவளிடம் சொல்லாதது ஒரு காரணமாக இருக்குமோன்னு நினைச்சி கவலைப்படறியே இந்த மனசு எத்தனைப் பேருக்கு வரும்? ஹேட்ஸ் ஆஃப் யூ சித்தார்த்” என்று சல்யூட் அடித்தான்.
“ஹய்யோ! மாமா… நான் உங்களை விடச் சின்னவன்” என்றவன் தன் பெற்றோரைப் பார்த்தான். தான் வந்தது முதல் ஏதும் பேசாமல் இருக்கும் தன் தந்தையின் அருகில் சென்று மண்டியிட்டு, “அப்பா!" என்றவனை ஆரத்தழுவிக் கொண்டார்.
“நான் இன்னைக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கேன் கண்ணா! ஒண்ணு மட்டும் மறந்துடாதே. இன்னைக்கு இருக்கும் இதே மனஉறுதி; உன் வாழ்க்கை முழுசுக்கும் உன் கூடவே இருக்கணும். எந்த நிலையிலும் அவளைக் காயப்படுத்திடாதே" என்றவரிடம் சிரிப்புடன் ஒப்புதலாகத் தலையசைத்தான்.
தேவகி மகனின் நெற்றியில் முத்தமிட, அவ்வளவு நேரமும் தன் மனத்தில் அழுதிக் கொண்டிருந்த சுமையை இறக்கி வைத்ததில் ஏற்பட்ட ஒரு விடுதலை உணர்வில் கண்ணீர் சிந்தினான்.
“நீ அழக்கூடாதுடா ராஜா! உன்னோட நல்ல மனசுக்கு, எல்லாமே நல்லபடியா நடக்கும். மதுவை நாம எல்லோரும் சேர்ந்து நம்ம கண்ணுக்குள்ளே வச்சி பார்த்துக்கலாம். உன்னோட தைரியமும், வார்த்தையும் தான் அவளுக்கு வாழ்க்கையில் பற்றை ஏற்படுத்தணும். உன்னோட ஓவ்வொரு அசைவும், அவளுக்காகத் தான்னு, புரிய வைக்கணும். மது இந்த வீட்டுக்கு வந்து, உன்னோட சந்தோஷமா மன நிறைவோட வாழணும். சீக்கிரமே நாங்க போய்ப் பேசறோம். மதுவை கல்யாணத்துக்குச் சம்மதிக்க வைப்பது எங்களோட பொறுப்பு" என்று மகனைத் தட்டிக் கொடுத்தார்.
நண்பனை இறுக அணைத்துத் தன் வாழ்த்தையும் தெரிவித்தான் ஜீவா.
இரண்டு மணி நேரமாக கால்களைக் கட்டிக்கொண்டு சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் மதுமிதா. அவள் சித்தார்த்தின் காரில் வந்து இறங்கியதையும், இருவரும் முறைத்துக்கொண்டு நின்றிருந்ததையும் பார்த்த விமலாவும், சந்துருவும் அவளை எதுவும் கேட்கவில்லை.
மீண்டும் மீண்டும் அவன் கடைசியாகச் சொல்லிவிட்டுச் சென்ற வாக்கியமே அவளைச் சுற்றி சுற்றி வந்தது. ‘உன்னோட மறுப்புக்குக் காரணம், அர்ஜுன் தானே!’ என்றது முதல், அவளது மனம் நிலை கொள்ளாமல் தவித்தது.
‘அர்ஜுன், அர்ஜுன்’ என்று அவளது மனம் அரற்ற, பழைய நினைவுகள் கொடுத்த அழுத்தத்தை ஒரு நிலைக்கு மேல் தாங்க முடியாமல், "அர்ஜுன்! ஏன் அர்ஜுன் என்னை இப்படித் தவிக்க விட்டுட்டுப் போய்ட்டீங்க?" என்று வாய் விட்டுக் கதறினாள்.
ஹாலில் அமர்ந்திருந்த விமலாவும் அழ, கண்களில் கண்ணீருடன் தன் அறையில் ஷெல்பிலிருந்த புகைப்படத்தைப் பார்த்தவண்ணம் நின்றிருந்தார் சந்துரு.
கண்கள் நிறைய கனவுடனும், முகம் நிறைய பூரிப்பும், வெட்கமும் போட்டியிட மதுமிதா மணக்கோலத்தில் நின்றிருக்க, ஆழ்ந்த நீலநிற கோட் சூட்டில் முகம் நிறைய பரவசத்துடன் அவளை அணைத்தபடி நின்றிருந்தான் அர்ஜுன்.
சுபாஷிணியின் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாமல், மௌனமாக இருந்தவன் மீது கடும் கோபம் பொங்கியது அவளுக்கு.
‘எப்படியாவது தன்னுடைய பிடிவாதத்தால் சாதித்து விட வேண்டும் என்று இப்படி வெறிகொண்டு அலைகிறானே! இதற்கு மேல் என்னால் பொறுமையாக இருக்க முடியாது. இன்று என் முடிவைத் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும்’ என்று ஆழமூச்செடுத்துத் தன்னைத் தயார் செய்துகொண்டு அவனைப் பார்த்தாள்.
அவள் நிமிர்ந்து அமர்ந்ததிலிருந்தே, ஏதோ முடிவுடன் இருக்கிறாள் எனப் புரிந்து கொண்டவன், “என்ன அப்படிப் பார்க்கற?” என்று கேட்டான்.
"என்னை ஏன் இப்படித் தொல்லை செய்றீங்க?" என்றாள் கடுமையாக.
அவளைப் பார்த்தவன், “நான் என்ன செஞ்சேன்? நீயும், சுபாவுமே பேசி, முடிவும் எடுத்துட்டு, எல்லாத்துக்கும் நான்தான் காரணம்ன்னு என் மேலேயே போட்டாச்சு. நான் எந்தத் தப்பும் செய்யலனாலும், அடுத்தவங்க செய்றதுக்கும் சேர்த்து நானே தண்டனை அனுபவிக்கிறதா இருக்கு. எல்லாம் நான் வாங்கிட்டு வந்த வரம்" என்று தலையில் அடித்துக் கொள்ளாத குறையாகச் சொன்னான்.
அவன் சொன்ன வார்த்தைக்கான அர்த்தத்தை உணர்ந்து, அந்த உண்மை அவளைத் தாக்க, “நான் என்ன சின்னக் குழந்தையா... ஆட்டோல போனா காணாமல் போக. நான் போற இடத்துக்கெல்லாம் உங்களால் வர முடியுமா?"
“நீ எங்க போனாலும், உனக்கு துணையா வர நான் தயார். அது எங்கேயாக இருந்தாலும். வாழ்க்கை முழுசுக்கும். ஆனா, நீதான் ஒரு நல்ல பதிலா சொல்ல மாட்டேன்னு பிடிவாதமா இருக்கியே" என்றான் போலியான சலிப்புடன்.
அவன் பதிலைக் கேட்டு விதிர்த்துப் போன மனத்துடன், “எல்லாம் என் தலையெழுத்து. இப்படி வந்து மாட்டிக்கிட்டு முழிக்கணும்னு இருக்கு” என்று முணுமுணுத்தாள்.
நிலைமையைச் சற்றுக் குளிர்விக்க, ரேடியோவை ஆன் செய்தான். இருவரையும் சோதிப்பது போல அதிலும், ‘உன்னிடம் மயங்குகிறேன்; உள்ளத்தால் நெருங்குகிறேன்' என்ற பாடல் ஒலிக்க, அவளது முகம் எரிச்சலின் உச்சத்தில் இருக்க, கைகளைப் பிசைந்தபடி ஆத்திரத்துடன் அமர்ந்திருந்தாள்.
அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தாலும், இப்படி நெருக்கடி கொடுக்கா விட்டால், தன் மனத்தைத் திறக்க மாட்டாள்’ என எண்ணிக்கொண்டே, அவனும் உடன் சேர்ந்து பாட, அவள் ரேடியோவை அணைத்தாள்.
“ஹும்... காதலிக்கிற பொண்ணுகிட்ட இப்படி நேரடியா பாடத்தான் முடியல. அட்லீஸ்ட், பாட்டாவது கேட்டுச் சந்தோஷப்பட்டுக்கலாம்னு நினைச்சா அதுக்கும் முடியல. எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும்னு சும்மாவா சொன்னாங்க" என்று மிகவும் கவலையுடன் சொன்னான்.
“தயவுசெய்து கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு வரீங்களா?" என்று சினத்துடன் சொல்ல, சற்று தூரம் சென்றவுடன் யாரும் இல்லாத ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் காரை நிறுத்தினான்.
அவள், ‘என்ன?’ என்பதைப் போல அவனைப் பார்க்க, நிதானமாக இருகைகளையும் உயர்த்திச் சோம்பல் முறித்துவிட்டு புஷ்பாக் சீட்டைப் பின்னால் தள்ளிச் சாய்ந்து அமர்ந்தான் சித்தார்த்.
அவனது செய்கைகள் படபடப்பைக் கொடுக்க, "எதுக்காக காரை இங்கே நிறுத்தனீங்க? நான் வீட்டுக்குப் போகணும்" எனச் சொல்ல, அவன் கைகளிரண்டையும் தலைக்கு அடியில் வைத்துக்கொண்டு கண்களை மூடினான்.
அவளுக்கு ஆத்திரமாக வந்தது. ‘இவன் வேண்டுமென்றே என்னை எரிச்சல்படுத்த இப்படிச் செய்கிறான்’ என்று நினைத்தவள், “இப்போ நீங்க காரை எடுக்கப் போறீங்களா… இல்லையா?” என்று கேட்க, அவன் மூடிய கண்களைத் திறக்கவே இல்லை.
“நீங்க எடுக்கலைன்னா என்ன? நான் ஆட்டோல போறேன்” என்றவள், கதவைத் திறக்க முடியாமல் தடுமாறினாள்.
சீட்டைச் சரிசெய்து அமர்ந்தபடி, “என்னை மீறி உன்னால கதவைத் திறக்க முடியாது மது! சென்ட்ரல் லாக் போட்டிருக்கேன். கண்ட்ரோல் சுவிட்ச் என்கிட்டேயிருக்கு" என்றான்.
மனதளவில் ஓய்ந்து போனவளாக, "உங்களுக்கு என்னதான் வேணும்? ஏன் என்னை இப்படி ஆட்டிப் படைக்கறீங்க?" என்று வேதனையுடன் கேட்டாள்.
“எனக்கு என்ன வேணும்னு, உனக்கே தெரியும். என்னால் இனியும் பொறுமையாய் இருக்க முடியாது. எனக்கு உன்னோட பதில் வேண்டும். இன்னைக்கே சொன்னாலும் சந்தோஷம். இல்லை யோசித்து நாலைந்து நாள் கழித்துச் சொன்னால்கூடப் பரவாயில்லை. ஆனால், உன்னோட பதில் சம்மதம்ன்னு இருக்கணும்."
“என்னோட பதிலை ஏற்கெனவே ரெண்டு முறை சொல்லிட்டேன். இன்னும் என்னை ஏன் தொல்லை செய்றீங்க?"
சில நொடிகள் கண்களை இறுக மூடி ஸ்டியரிங் வீலில் மெல்ல தாளமிட்டவன், சலனமற்ற விழிகளுடன் அவளைப் பார்த்தான். அந்தப் பார்வையில் அவளுக்கு பயத்தை உண்டாக்க, "ப்ளீஸ்! என்னைக் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க சித்தார்த்" எனக் கெஞ்சலாகச் சொன்னாள்.
"அதையே தான் நானும் சொல்றேன். ஏன் என்னைப் புரிஞ்சிக்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்க? நீ எதுக்கு இப்படி உன்னோட வாழ்க்கையை விளையாட்டா நினைத்து வாழ்ந்துட்டிருக்க. அடுத்தவங்க சந்தோஷமா இருக்கணும்னு சொல்லுவியே... எத்தனைப் பேரோட சந்தோஷத்துக்குத் தடையா நீ இருக்கன்னு ஏன் உனக்குப் புரியல?” என்றான் கோபத்துடன்.
"நான், யாரோட சந்தோஷத்தையும் கெடுக்கல. அப்படி உங்களுக்குக் கல்யாண ஆசை வந்தா, உங்க வீட்ல சொல்லி ஒரு பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் செய்துகோங்க இஷ்டம் இல்லாத என்னைக் கஷ்டப்படுத்த உங்களுக்கு எந்த ரைட்ஸும் இல்ல.”
எரிச்சலை அடக்கிக்கொண்டு, "மது! நான் உன்னை மனதார காதலிக்கிறேன். நீ இல்லாத ஒரு வாழ்க்கையை, என்னால் நினைச்சிக்கூடப் பார்க்க முடியாது" என்றான்.
அவனது இறங்கிய பிடிவாதமான குரல் அவளுக்குக் கோபத்தை உண்டாக்க, " உங்களை வேண்டாம்னு சொல்ற பொண்ணுகிட்ட, என்னைக் கல்யாணம் செய்துக்கோன்னு கெஞ்சறீங்களே அசிங்கமா இல்ல உங்களுக்கு" என்றாள் ஆத்திரத்துடன்.
தன்னுடைய கோபத்தை இழுத்துப் பிடித்தபடி, "நீயே உன்னை ஏமாத்திக்கிற மது! உன்னோட ஆழ் மனசைக் கேளு. உனக்குள்ளே நான் இருக்கேனா இல்லையான்னு..."
“இல்லை இல்லை இல்லை நீங்க என்னோட மனசுக்குள்ளே ஒரு நாளும் வர முடியாது” என்று கண்ணை மூடிக்கொண்டு சத்தமாகச் சொல்ல, "ஏன் வர முடியாது?" என்று அவனும் அதே அளவிற்குக் குரலை உயர்த்தினான்.
“வர முடியாதுன்னா... வர முடியாது. என்னை இப்படி அலைக்கழிக்காதீங்க சித்தார்த்! தினம் தினம் என்னால போராட முடியல. ஏற்கெனவே, எல்லாத்தையும் தொலைச்சிட்டு நிக்கிறேன். இதுக்கு மேல எதையும் தாங்கிக்கிற சக்தி எனக்கு இல்ல... ப்ளீஸ்!" என்றவள் கண்ணீருடன் கெஞ்சினாள்.
அவளது பிடிவாதமான பேச்சுக்கு எதிர் பேச்சு பேசியவன், அவளது கண்ணீருக்குப் பதிலாக ஆறுதலாகச் சாய்ந்து கொள்ள தனது நெஞ்சைக் கொடுக்கத் தயாராக இருந்தான். ஆனால், அவள் ஏற்கத் தயாராக இல்லையே…
சில நொடிகள் அமைதியாக இருந்தவன், "நீ ஏன் வேண்டாம்னு சொல்றங்கற காரணத்தை நான் சொல்லவா?" என்று கேட்க, அவள் மிரட்சியுடன் அவனைப் பார்த்தாள்.
அவன் சொன்னதைக் கேட்டவளுக்கி உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைந்தது போலிருக்க, கண்கள் கலங்க அமர்ந்திருந்தாள்.
“நீ, வருதப்படணும்னு சொல்லலை மது! நல்லா யோசி... நடந்து முடிந்து போனதை இன்னும் எத்தனை நாளைக்கு நினைச்சிட்டு இருப்ப? உன் வாழ்க்கையை நீயே ஏன் ஒண்ணுமில்லாம அழிச்சிக்கிற. இன்னும் உன்னோட வாழ்க்கையை நீ ஆரம்பிக்கவே இல்ல. எவ்வளவோ பிரச்சனையோட இருக்கும் எத்தனையோ பேர், தங்களோட கடந்த காலத்தை ஒதுக்கிட்டுச் சந்தோஷமா வாழறபோது நீ ஏன் தயங்கற?
நான் உன்னை என்ன கேட்கிறேன்? நடந்ததை ஒரு கனவா நினைச்சி ஒதுக்கிட்டு, உன் மனசுல எனக்கு ஒரு இடம் கொடுன்னு தானே கேட்கிறேன். உனக்காக எவ்வளவு காலம் வேணும்னாலும் காத்திருக்க தயாராக இருக்கேன். என்னைப் புரிஞ்சிக்கிட்டு, என் வாழ்க்கைத் துணையா வந்தா ரொம்பவே சந்தோஷப்படுவேன்" என உணர்ச்சி ததும்ப சொன்னவன், அவள் பதிலை எதிர்பாராமல் காரைக் கிளப்பினான்.
வீட்டின் முன்பாக காரை நிறுத்திவிட்டு அவளைத் திரும்பிப் பார்த்தான். தன் நிலையறியா சிலை போல் அமர்ந்திருக்க, "மது! வீடு வந்தாச்சு" என்று அவள் கையைத் தட்டிச் சொன்னான்.
கனவிலிருந்து எழுபவளைப் போல விழித்தவள் இறங்க முற்பட, அவளது வலது கரத்தைப் பிடித்தான்.
அவள் கோபத்துடன் கையை இழுக்க, அவன் விடாமல், “காலம் பூராவும் உன் கையைப் பிடிச்சிக்கிட்டு உன் துணையா வரணும்னு ஆசைப்படுகிறேன். உன்கிட்டயிருந்து நல்ல பதிலை எதிர்பார்க்கறேன்" என்றான்.
"என்னால, உங்களைக் கல்யாணம் செய்துக்க முடியாது. நீங்க எதிர்பார்க்கற நல்ல மனைவியா, என்னால உங்களோட வாழமுடியாது. வாழ்க்கைல உங்களுக்கு எந்தவித சந்தோஷத்தையும் கொடுக்க முடியாது. தயவுசெஞ்சி இனி, என்னை வற்புறுத்தாதீங்க” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னவள், தன் கையை இழுத்து விடுவித்துக்கொண்டு இறங்கினாள்.
சித்தார்த் கோபத்தோடு இறங்கி அவளுக்கு எதிரில் வந்து நின்றான். இருவரும் நேருக்கு நேராகப் பார்த்துக்கொள்ள, “நீ நிச்சயம் மனசு மாறுவ. என்னைக் கல்யாணம் செய்துக்க சம்மதம்ன்னு சொல்லுவ. என் மனைவியா என் கூட வாழத்தான் போற. என்னோட காதல் உண்மைன்னா, அது கூடிய சீக்கிரம் நடக்கத்தான் போகுது” என்று உறுதியோடு சொல்லிவிட்டுச் சென்றவனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.
சித்தார்த்தின் வீட்டில் குடும்பமே ஹாலில் கூடி இருந்தது. அனைவரும் காஃபி அருந்தியபடி பேசிக்கொண்டிருந்தனர். ராமமூர்த்தி, தனது மாப்பிள்ளையிடம் எல்லாவற்றையும் விளக்கமாகச் சொன்னார்.
“நல்ல விஷயம் மாமா! சுபா எல்லா விஷயமும் சொன்னா. நம்ம சித்தார்த்துக்குப் பிடிச்சிருந்தா முடிச்சிடலாம். அவங்க குடும்பம் எங்கே இருக்கு?"
"பொண்ணு பேரு மதுமிதா. திருவான்மியூர்ல இருக்காங்க. அவங்க அப்பா பேரு சந்திரசேகர். " என்றார் சித்தார்த்தின் தந்தை ராமமூர்த்தி.
அவர் சொன்ன பெயர்களைக் கேட்ட ஹரி பிரசாத் ஏதோ தோன்ற, “சந்திர சேகர்? அவர் ரிடையர்ட் மிலிட்டரி ஆஃபிஸரா? அவங்க மனைவி பேரு விமலா தானே? அவங்களுக்கு ஒரு பையன் கூட இருந்தானே…" என்று இடைமறித்து அவசரமாகக் கேட்டவனை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
“சரியா சொல்றீங்களே! உங்களுக்கு அவங்களைத் தெரியுமா? ஆனா, அவள் ஒரே பொண்ணு தானே… பையன்" என்று இழுத்தான் ஆதி.
“அது இருக்கட்டும். மதுமிதாவுக்கு இந்தக் கல்யாணத்தில் சம்மதமான்னு தெரியுமா?" என்றான்.
“நம்ம சித்தார்த் கூட நல்லா தானே பழகறா. நம்ம வீட்டுக்குக்கூட வந்திருக்காளே. அவளுக்கும் சம்மதம்னு தான் நினைக்கிறோம்" என்று சந்தேகத்துடனே பதில் சொன்னார் தேவகி.
“எனக்கு என்னவோ நம்பிக்கை இல்லை. மாமா! முதல்ல, சித்தார்த்கிட்ட நல்லா விசாரிங்க” என்று ஹரி பிரசாத் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, உள்ளே நுழைந்த சுபா, “என்ன வட்ட மேஜை மாநாடா?” என்று கேட்டுக்கொண்டே கணவனின் அருகில் அமர்ந்தவள், “என்னங்க இன்னைக்கு ஒரு சர்ப்ரைஸ்! லேண்ட்மார்க்ல நம்ம மதுமிதாவைப் பார்த்தேன்" என்றாள்.
“அண்ணியைப் பார்த்தீங்களா அக்கா! அண்ணாவோட செலெக்ஷன் எப்படி?" என்று கேட்டாள் நேத்ரா.
“நான் எங்கே மதுவைப் பார்த்தேன்? நான் சொல்ற மதுமிதா, எங்களுக்குத் தெரிஞ்ச பொண்ணு" என்றவளிடம், “இல்லை சுபா. மதுமிதான்னு ஒரே பொண்ணுதான். நம்ம சித்தார்த், அவளைத்த் தான் விரும்பறான்" என்றார் ஹரி பிரசாத்.
அதிர்ச்சியுடன் கணவரைப் பார்த்தவள், “அதெப்படிங்க முடியும்? இப்போகூட அவளோட தான் பேசிட்டு வரேன். இன்னமும் மனசளவுல அவள் கொஞ்சங்கூட மாறாம தான் இருக்கா” என்றவள் புரியாமல் ஜீவாவைப் பார்த்தாள்.
அவன் என்ன சொல்வதெனத் தெரியாமல் நின்றிருக்க, “நீ சித்தார்த் கூடத் தானே போன. இப்போ, ஜீவா கூட வந்திருக்க. சித்தார்த் எங்கே?" என்று விசாரித்தான் ஆதி.
“நான்தான் மதுமிதாவை, அவங்க வீட்ல விட்டுட்டு வான்னு சொன்னேன்" என்றாள்.
இப்போது அனைவரின் பார்வையும் ஜீவாவிடம் திரும்ப, அவன் தவிப்புடன் நின்றிருந்தான்.
“ஜீவா! சித்தார்த் எல்லாத்தையும் உன்கிட்டச் சொல்வானே... நீ சொல்லு. ரெண்டு பேரும் காதலிக்கறது உண்மைதானே?" என்று தவிப்புடன் கேட்டார் தேவகி.
தலையைக் கோதிக்கொண்டவன், “இல்லம்மா, சித்தார்த் மட்டும்தான்...” என்றதைக் கேட்ட அனைவரும் அதிர்ந்து போயிருக்க, சித்தார்த்தின் கார் போர்டிக்கோவில் வந்து நின்றது.
உள்ளே வந்தவனை அனைவரும் பார்க்க, அவர்களது பார்வையே எதோ பிரச்சனை என அவனுக்குப் புரிய வைத்தது.
அன்னையின் அருகில் சென்றவன், “என்ன எல்லோரும் ஒரு மாதிரி இருக்கீங்க?" என்று கேட்டான்.
“சித்தார்த்! என்னடா இது... புதுசா ஒரு பிரச்சனை?" என்ற தேவகியின் உள்ளம் மகனுக்காகத் துடித்தது.
"என்னன்னு சொன்னா தானே, எனக்குத் தெரியும்" என்றவன் அருகில் வந்த ஹரி, “சித்தார்த் உன்னைக் கல்யாணம் செய்துக்க மதுமிதாவுக்குச் சம்மதமா?" என்று கேட்டார்.
அவனது பார்வை நண்பனைத் தொடர்ந்தது. அவன், தலையை அசைக்க, அழுந்த தலையைக் கோதிக்கொண்டே, “மதுவைப் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சி போச்சா? நம்ம வீட்டு விசேஷம் முடிஞ்சதும் நானே சொல்லலாம்னு இருந்தேன்" என்றவன் முதன் முதலில் அவளைச் சந்தித்தது முதல், அவளது வாழ்க்கையில் நடந்த துயர சம்பவம் வரை அனைத்தையும் சொல்லி முடித்து அங்கிருந்த இருக்கையில் தளர்ந்து போய் அமர்ந்தான்.
மொத்தக் குடும்பமும் திகைத்துப் போய் கண்களில் கண்ணீருடன் அமர்ந்திருந்தனர்.
“இந்தச் சின்ன வயசுல எவ்வளவு கஷ்டத்தை அனுபவிச்சிட்டா. அந்தக் கடவுள் அவளுக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கையைக் கொடுத்திருக்கக் கூடாதா?” என்றபடி முந்தானையால் தனது கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்.
தம்பியின் முதுகில் தட்டிக் கொடுத்த ஆதி, "இவ்வளவு நடந்தும் நீ அவளைக் காதலிக்கிற பாரு... உன்னை நினைச்சா எனக்குப் பெருமையா இருக்குடா. ஆனா, அவளுக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லைன்னா, நீ ஏன் அவளைக் கட்டாயப்படுத்துற?" என்று கேட்டான்.
“தெரிந்தோ தெரியாமலோ, அவளோட வாழ்க்கை இப்படி ஆனதுக்கு, நானும் ஒரு காரணமோன்னு என்னோட மனசு உறுத்திக்கிட்டே இருக்கு. நான் மட்டும் ஆரம்பத்திலேயே அவளிடம் சொல்லியிருந்தா, அவள் இந்த மாதிரிக் கஷ்டத்தை அனுபவிக்காம இருந்திருப்பா இல்லையா?" என்றான் தழுதழுத்தக் குரலில்.
“நான் உன்னை இன்னும் அதே விளையாட்டுப் பையனாவே நினைசிட்டேன்டா. பெருமையா இருக்குடா. நீ எதுக்குமே பொறுப்பாக முடியாதுன்னு இருக்கும் போதே, அவளுடைய கஷ்டத்தைத் தன்னால் தீர்க்க முடியாமல் போச்சேன்னு... உன் காதலை அவளிடம் சொல்லாதது ஒரு காரணமாக இருக்குமோன்னு நினைச்சி கவலைப்படறியே இந்த மனசு எத்தனைப் பேருக்கு வரும்? ஹேட்ஸ் ஆஃப் யூ சித்தார்த்” என்று சல்யூட் அடித்தான்.
“ஹய்யோ! மாமா… நான் உங்களை விடச் சின்னவன்” என்றவன் தன் பெற்றோரைப் பார்த்தான். தான் வந்தது முதல் ஏதும் பேசாமல் இருக்கும் தன் தந்தையின் அருகில் சென்று மண்டியிட்டு, “அப்பா!" என்றவனை ஆரத்தழுவிக் கொண்டார்.
“நான் இன்னைக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கேன் கண்ணா! ஒண்ணு மட்டும் மறந்துடாதே. இன்னைக்கு இருக்கும் இதே மனஉறுதி; உன் வாழ்க்கை முழுசுக்கும் உன் கூடவே இருக்கணும். எந்த நிலையிலும் அவளைக் காயப்படுத்திடாதே" என்றவரிடம் சிரிப்புடன் ஒப்புதலாகத் தலையசைத்தான்.
தேவகி மகனின் நெற்றியில் முத்தமிட, அவ்வளவு நேரமும் தன் மனத்தில் அழுதிக் கொண்டிருந்த சுமையை இறக்கி வைத்ததில் ஏற்பட்ட ஒரு விடுதலை உணர்வில் கண்ணீர் சிந்தினான்.
“நீ அழக்கூடாதுடா ராஜா! உன்னோட நல்ல மனசுக்கு, எல்லாமே நல்லபடியா நடக்கும். மதுவை நாம எல்லோரும் சேர்ந்து நம்ம கண்ணுக்குள்ளே வச்சி பார்த்துக்கலாம். உன்னோட தைரியமும், வார்த்தையும் தான் அவளுக்கு வாழ்க்கையில் பற்றை ஏற்படுத்தணும். உன்னோட ஓவ்வொரு அசைவும், அவளுக்காகத் தான்னு, புரிய வைக்கணும். மது இந்த வீட்டுக்கு வந்து, உன்னோட சந்தோஷமா மன நிறைவோட வாழணும். சீக்கிரமே நாங்க போய்ப் பேசறோம். மதுவை கல்யாணத்துக்குச் சம்மதிக்க வைப்பது எங்களோட பொறுப்பு" என்று மகனைத் தட்டிக் கொடுத்தார்.
நண்பனை இறுக அணைத்துத் தன் வாழ்த்தையும் தெரிவித்தான் ஜீவா.
இரண்டு மணி நேரமாக கால்களைக் கட்டிக்கொண்டு சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் மதுமிதா. அவள் சித்தார்த்தின் காரில் வந்து இறங்கியதையும், இருவரும் முறைத்துக்கொண்டு நின்றிருந்ததையும் பார்த்த விமலாவும், சந்துருவும் அவளை எதுவும் கேட்கவில்லை.
மீண்டும் மீண்டும் அவன் கடைசியாகச் சொல்லிவிட்டுச் சென்ற வாக்கியமே அவளைச் சுற்றி சுற்றி வந்தது. ‘உன்னோட மறுப்புக்குக் காரணம், அர்ஜுன் தானே!’ என்றது முதல், அவளது மனம் நிலை கொள்ளாமல் தவித்தது.
‘அர்ஜுன், அர்ஜுன்’ என்று அவளது மனம் அரற்ற, பழைய நினைவுகள் கொடுத்த அழுத்தத்தை ஒரு நிலைக்கு மேல் தாங்க முடியாமல், "அர்ஜுன்! ஏன் அர்ஜுன் என்னை இப்படித் தவிக்க விட்டுட்டுப் போய்ட்டீங்க?" என்று வாய் விட்டுக் கதறினாள்.
ஹாலில் அமர்ந்திருந்த விமலாவும் அழ, கண்களில் கண்ணீருடன் தன் அறையில் ஷெல்பிலிருந்த புகைப்படத்தைப் பார்த்தவண்ணம் நின்றிருந்தார் சந்துரு.
கண்கள் நிறைய கனவுடனும், முகம் நிறைய பூரிப்பும், வெட்கமும் போட்டியிட மதுமிதா மணக்கோலத்தில் நின்றிருக்க, ஆழ்ந்த நீலநிற கோட் சூட்டில் முகம் நிறைய பரவசத்துடன் அவளை அணைத்தபடி நின்றிருந்தான் அர்ஜுன்.