“ ஒரு வயசு பையன் இருக்கிற வீட்டில் ஒரு வயசு பொண்ணை தங்க வைப்பீங்களாம்... அதே வயசு பையன் தங்கியிருக்கிற வீட்டில் இன்னொரு வயசு பையனை வேணாம்பீங்களாம்! நல்லாதான் இருக்குடியம்மா காந்தி உன்னோட நியாயம்!” நூற்றுக்கிழவியை போல தாடையில் கை வைத்து அதிசயத்தவனிடம் என்ன சொல்வது எனத் தெரியாது திருதிருத்தார் காந்தி.
கோவிலில் இருந்து வந்த தாயும் மகளும் கார்த்திக்குடன் ஒரு புதியவன் இருக்கவே வரவேற்கும் முகமாக ஒரு புன்னகையை அனைவருக்கும் பொதுவாக சிந்த,அதுவே தன்னுடைய சொற்பொழிவை ஆற்ற அஜய்க்கு போதுமானதாக இருந்தது.
“ஹலோ அத்தை!” கேட்டதும் மீனாவின் அம்மா அதிர்ந்துபோய் “அத்தையா..?” எனக்கேட்க,
“எஸ்... அத்தைதான். ஆன்ட்டியோட தமிழாக்கம் அத்தைதானே? எல்லாம் உங்க மகளோட உபயம் தான்” என அஜய் பரவசமாக சொன்னதும் அவனை விட்டுவிட்டு, முகத்தை ஒரு திருப்புதிருப்பி, மகளை முறைத்தார்.
அவரின் முறைப்பு, திருப்பு எதையும் கண்டுக்கொள்ளாதவனோ, “ஹாய் மீனா! என் பெயர் அஜய். நான் உங்க தூரத்து உறவோட நெருக்கமான பிரெண்ட்.நீங்களும் ஆர்ஜே. நானும் ஆர்\ஜே. உங்களுக்கு பூனால நிறைய விசிறிகள். எனக்கு எங்க போனாலும் நிறைய விசிறிகள். எங்க பாமிலி கூட இந்த ஊரைவிட்டு போய் பல வருஷம் ஆச்சு. நான் மட்டும்தான் இங்க மான்ஷன்ல தங்கி வேலை பார்த்துக்கொண்டிருக்கேன்.நீங்க இந்த ஊருக்கு வந்திறங்கினதில் இருந்து இந்த ஊரு கிளைமேட் முதற்கொண்டு ஆட்டோகாரன் வரை உங்ககிட்ட தகராறு செய்ததா கேள்விப்பட்டேன்.கிளைமேட்ட நம்மால ஒன்னும் செய்யமுடியாது. அது தான் அப்பப்ப நம்மளை நல்லா வச்சி செய்யுது.இப்ப கூட பாருங்க, இன்னும் மார்ச் வரல. அதுக்குள்ள சன் அங்கிள் ஓவர்டைம் பார்க்க ஆரம்பிச்சிட்டார்.அவரை யாராலும் ஒன்னும் பண்ணமுடியாது. ஆனா மத்தபடியான தொல்லைகளில் இருந்து உங்களை சேவ் பண்ண என்னால முடியும். அதுக்காக ‘ட்வென்டி ஃபோர் இண்ட்டு செவன்’ நான் உங்க கூடவே இருப்பேன்” பேசிக்கொண்டே போனான்.
‘நானும் பேசுவேன் தான்... ஆனால் இப்படி கின்னஸ் சாதனைக்கு இடைவிடாது பேசுவதைப்போல பேசமுடியுமா என்னால்? சும்மா காந்திமதி ஆன்ட்டிக்காக கார்த்திக்கை கலாய்க்க காலையில் கொஞ்ச நேரம் விடாது பேசியதற்கே இரண்டுமணி நேரம் எனக்கு தாடை வலித்தது. இவன் என்னடாவென்றால்... இப்படி பேசறான்? இனி நான் டெய்லி இவன் பேசறதைக் கேட்டு அதுக்கு பதில் கொடுத்தா... என்னோட வாய் கோணி காதுகிட்ட போய், காது கேட்காம இல்ல ஆயிடும். எனக்கு தேவையா இதெல்லாம்?’ யோசனையோடு தாயை மீனா பார்க்க, அவரும் அதே எண்ணத்தோடு தான் இவளை பார்த்துக்கொண்டிருந்தார்.
தாய் மகள் பார்வை பரிமாற்றத்தை பார்த்து உஷாரான காந்தி, ”உனக்கு இருக்கிற வேலையே தலைக்கு மேல இருக்கும்னு கார்த்தி அடிக்கடி சொல்லுவான். இதுல எதுக்கு எக்ஸ்ட்ரா இந்த வேலையும் உனக்கு.அதெல்லாம் அவங்களே பார்த்துப்பாங்க” நைசாக அவனை கழட்டிவிடப்பார்த்தார்.
“என்னம்மா இபப்டி சொல்லிட்டீங்க? நமக்கு ஆயிரம் வேலை எப்போதும் இருக்க தான் செய்யும். அதுக்காக அத்தையை புது ஊரில் தனியா தவிக்க விடலாமா? அப்படி அவங்க கஷ்டப்பட்டா உங்க மனசுதான் தாங்குமா? இல்ல என் மனசு தான் தூங்குமா? இவங்க வந்த வேலை முடியற வரைக்கும் என்னோட ப்ரோக்ராம் எல்லாத்தையும் கார்த்தி பார்த்துக்கறேன்னு சொல்லிட்டான்-ம்மா. சோ... உங்க விருந்தாளியோட வேலைகளை வெற்றிகரமா முடித்து, அவர்களை பத்திரமா ஊருக்கு வண்டி ஏத்தி விடும்வரை என்னோட பொறுப்பில் விட்டுட்டு நீங்க நிம்மதியா இருங்க” என கூறி தான் கார்த்திக்கின் நண்பன் என்பதை நிருபித்தான்.
இதற்க்கு மேல் சொல்வதற்கு என்ன இருக்கிறது என்பதைப்போல் அங்கிருந்த பெண்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர்.
“ம்மா!அதான் உங்க தூரத்து சொந்தக்காரங்களை அஜய் பொறுப்பில் விட்டாச்சு இல்ல? நாம நாளைக்கு ஹாஸ்பிடல் போகலாமா?அப்பாவை அப்பாயின்மென்ட் வாங்க சொல்லிடட்டுமா?” கார்த்திக் கேட்டதற்கு என்ன பத்தி சொல்வதென புரியாது காந்தி விழித்துக்கொண்டு நின்றார்.
“ப்ரோ! இது தான் சந்துல சிந்து பாடறதா?” அப்பாவியாய் கேட்டவனுக்கு முதலில் ஆணவமாய் ஒரு பார்வையை பரிசளித்து,
“எங்க திறமைக்கு நாங்க ஏன் சந்துல போய் சிந்து பாடனும்? மெயின் ரோட்ல... அதுவும் மவுண்ட் ரோட்லயே மெலடி பாடுவோம்டா!” என கெத்தாய் கார்த்திக் பதிலளித்தான்.
இப்போதைக்கு தங்கள் பூர்வீக சொத்தை விற்கும் ஐடியா இல்லை என சொல்லிக்கொண்டு இங்கு வந்த மூன்றாம் நாளே மீனாவின் தாய் தங்கள் ஊருக்கு சென்றுவிட்டார்.ஒரு மாதகாலம் தங்கியிருக்க வந்த மீனா அன்ட் கோவை மூன்றே நாட்களில் மூட்டையை கட்டவைத்த பெருமை அஜய்யையே சாரும். அதில் அவனுக்கு சதி ஆலோசனைகளை அள்ளிவீசிய கார்த்திக்கும் பங்குண்டு.
காலையில் கண் விழித்ததிலிருந்து ஒரு குரல் காதில் ஓயாது ஒலித்துக்கொண்டிருந்தால் எவ்வளவு நேரம் தான் பொறுமையாக இருக்கமுடியும்? கார்த்திக்கும் அஜய்யும் சேர்ந்துக்கொண்டு அம்மா மகள் இருவரையும் பேசி பேசியே ஒரு வழியாக்கிவிட்டார்கள்.இங்குதான் இந்த தொல்லை என எண்ணி வெளியே கிளம்பினாலோ பூனைப்படையை போல அஜய் அவர்களுக்கு முன் அங்கு நின்றுக்கொண்டிருந்தான். அவன் வந்ததிலிருந்து அவர்களை சுதந்திரமாக தனியே தங்களுக்குள் பேசக்கூட விடவில்லை. உறவிற்கு உதவி செய்வதிலும் ஒரு அளவு இருக்கிறது அல்லவா? காந்திக்கு உதவ போய் இவர்களுக்கு காதில் ஏதாவது பிரச்சனை வந்துவிட்டால் யார் இவர்களை கவனிப்பார்களாம்!
இப்போதே அந்த இருவரின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் கொடுத்தே மீனாவிற்கு தொண்டை கட்டிக்கொண்டு பேச்சு சரியாக வரவில்லை. முன்பு மீனா அழகில்தான் மயிலுக்கு போட்டியாக இருந்தாள். இப்போது குரலும் மயிலுக்கு போட்டியாகிவிட்டது. காந்தியை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்ல கார்த்திக் பாய்ந்துக்கொண்டு வருவதைபோல இவளுக்கு யார் வருவார்களாம்? [ ஹாஸ்பிடலுக்கு செல்ல கார்த்திக் ஏன் இந்த பாய்ச்சல் பாய்கிறான் என்பது பாவம் இந்த அப்பாவிக்கு தெரியவில்லை]
தனக்கு கொடுத்த மிஷனை எப்படியெல்லாம் சிறப்பாக முடித்தான் என்பதை அஜய்ஒருமணி நேரமாக பெருமை பேசிக்கொண்டிருக்க, அதில் கடுப்பான கார்த்தி, ”டேய்! போதும் ஷட்டரை க்ளோஸ் பண்ணுடா. சும்மாவே உன் வாய் கொஞ்ச நேரம் ரெஸ்ட்ல இருக்காது. இப்ப ரெண்டு நாளா அந்த ஓட்ட வாய் கூட பேசி பேசியே இன்னும் ஓவரா ஆயிடிச்சு” என்றான்.
“கார்த்தி! யாரை யார்கூட கோத்துவிடற! யாரு... அந்த பொண்ணு எனக்கு இணையா! என் கூட அவளால அரைமணிநேரம் பேசமுடில. அவங்க அம்மாக்கு ஆக்ஷன் காட்டி அவங்களை என்கிட்டே மாட்டிவிட்டு அவ எஸ் ஆயிடறா. இந்த அழகுல அவ கூட பேசினதால தான் எனக்கு வாய் ஓவரா ஆயிடுச்சுன்னு நீ சொல்ற! டேய்... அந்த பொண்ணு பஞ்சத்துக்கு பரதேசி ஆனவ. நாமெல்லாம் பிறக்கும் போதே பரதேசியா பிறந்தவங்க. அவளால நம்ம கூட எல்லாம் போட்டி போடமுடியுமா?” சொல்லிக்கொண்டே காலரை தூக்கிவிட்டுக் கொண்டவனை,
“பரதேசி... ! எதுல தான் பெருமை பேசறதுன்னு ஒரு வரைமுறை இல்லாத பரதேசி!” வெளுத்து வாங்கிவிட்டான் கார்த்திக்.
தங்களின் பொறுமையின் அளவு மூன்று நாட்கள் தான் என சொல்லிக்கொண்டு மீனா குடும்பம் வீட்டைவிட்டு சென்றதும் தனக்களித்த பணியை செய்வனே முடித்துவைத்த அஜய்யும் அங்கிருந்து கிளம்பிவிட்டான்
மூன்றே நாட்களில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிட்ட தங்களின் வீட்டில் தனித்திருந்த மாறனும் காந்தியும் மாலையில் தங்கள் மகன் வந்து என்னென்ன பேச்செல்லாம் பேசப்போகிறானோ என்ற பீதியில் இருந்தனர்.மீனா வீட்டிற்கு வந்த மாலையே கார்த்திக் அஜையுடன் வரும்போதே அவனுக்கு தன் தில்லாலங்கடி தெரிந்துவிட்டது என்பதை காந்தி புரிந்துக்கொண்டார். இத்தனை நாட்கள் அவன் அமைதியாக இருந்ததே வெளியாட்கள் வீட்டில் இருந்ததால் என்பதை மாறனும் அறிந்தே இருந்தார். எனவேதான் சாயங்காலம் வானவேடிக்கையுடன் கூடிய கொண்டாட்டத்தில் தங்கள் இல்லம் களைகட்ட போகிறது என காத்திருந்தனர்.
அவர்களின் நினைப்பிற்கு மாறாக கார்த்திக் எதையும் பேசாது அமைதியாக இருக்கவும் அவனை அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தனர். அதை பார்த்தவனோ,
”என்ன... சும்மா சும்மா என்னை பார்க்கறீங்க? என்கிட்டே ஏதாவது சொல்லனுமா?” என தன தந்தையை பார்த்துக் கேட்டான்.
“இல்லப்பா... அம்மாவ ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்னு சொன்னியே... அப்பாயின்ட்மென்ட் வாங்கிட்டியா? எப்போ கிளம்பனும்” என மாறன் தயங்கி தயங்கிக் கேட்டார்.
“வாங்கிட்டேன் ப்பா! நாளைக்கு காலையில் பத்து மணிக்கு அங்கயிருக்கனும். நான் என்னோட ப்ரோக்ராம் டைமிங் அதுக்கு ஏற்றார்போல மாத்திட்டேன். நானே அம்மாவை கூடிட்டு போறேன்” என்றவன் காந்தியிடம் ஏதும் பேசாது தன்னறைக்கு செல்ல திரும்பினான்.
கோவிலில் இருந்து வந்த தாயும் மகளும் கார்த்திக்குடன் ஒரு புதியவன் இருக்கவே வரவேற்கும் முகமாக ஒரு புன்னகையை அனைவருக்கும் பொதுவாக சிந்த,அதுவே தன்னுடைய சொற்பொழிவை ஆற்ற அஜய்க்கு போதுமானதாக இருந்தது.
“ஹலோ அத்தை!” கேட்டதும் மீனாவின் அம்மா அதிர்ந்துபோய் “அத்தையா..?” எனக்கேட்க,
“எஸ்... அத்தைதான். ஆன்ட்டியோட தமிழாக்கம் அத்தைதானே? எல்லாம் உங்க மகளோட உபயம் தான்” என அஜய் பரவசமாக சொன்னதும் அவனை விட்டுவிட்டு, முகத்தை ஒரு திருப்புதிருப்பி, மகளை முறைத்தார்.
அவரின் முறைப்பு, திருப்பு எதையும் கண்டுக்கொள்ளாதவனோ, “ஹாய் மீனா! என் பெயர் அஜய். நான் உங்க தூரத்து உறவோட நெருக்கமான பிரெண்ட்.நீங்களும் ஆர்ஜே. நானும் ஆர்\ஜே. உங்களுக்கு பூனால நிறைய விசிறிகள். எனக்கு எங்க போனாலும் நிறைய விசிறிகள். எங்க பாமிலி கூட இந்த ஊரைவிட்டு போய் பல வருஷம் ஆச்சு. நான் மட்டும்தான் இங்க மான்ஷன்ல தங்கி வேலை பார்த்துக்கொண்டிருக்கேன்.நீங்க இந்த ஊருக்கு வந்திறங்கினதில் இருந்து இந்த ஊரு கிளைமேட் முதற்கொண்டு ஆட்டோகாரன் வரை உங்ககிட்ட தகராறு செய்ததா கேள்விப்பட்டேன்.கிளைமேட்ட நம்மால ஒன்னும் செய்யமுடியாது. அது தான் அப்பப்ப நம்மளை நல்லா வச்சி செய்யுது.இப்ப கூட பாருங்க, இன்னும் மார்ச் வரல. அதுக்குள்ள சன் அங்கிள் ஓவர்டைம் பார்க்க ஆரம்பிச்சிட்டார்.அவரை யாராலும் ஒன்னும் பண்ணமுடியாது. ஆனா மத்தபடியான தொல்லைகளில் இருந்து உங்களை சேவ் பண்ண என்னால முடியும். அதுக்காக ‘ட்வென்டி ஃபோர் இண்ட்டு செவன்’ நான் உங்க கூடவே இருப்பேன்” பேசிக்கொண்டே போனான்.
‘நானும் பேசுவேன் தான்... ஆனால் இப்படி கின்னஸ் சாதனைக்கு இடைவிடாது பேசுவதைப்போல பேசமுடியுமா என்னால்? சும்மா காந்திமதி ஆன்ட்டிக்காக கார்த்திக்கை கலாய்க்க காலையில் கொஞ்ச நேரம் விடாது பேசியதற்கே இரண்டுமணி நேரம் எனக்கு தாடை வலித்தது. இவன் என்னடாவென்றால்... இப்படி பேசறான்? இனி நான் டெய்லி இவன் பேசறதைக் கேட்டு அதுக்கு பதில் கொடுத்தா... என்னோட வாய் கோணி காதுகிட்ட போய், காது கேட்காம இல்ல ஆயிடும். எனக்கு தேவையா இதெல்லாம்?’ யோசனையோடு தாயை மீனா பார்க்க, அவரும் அதே எண்ணத்தோடு தான் இவளை பார்த்துக்கொண்டிருந்தார்.
தாய் மகள் பார்வை பரிமாற்றத்தை பார்த்து உஷாரான காந்தி, ”உனக்கு இருக்கிற வேலையே தலைக்கு மேல இருக்கும்னு கார்த்தி அடிக்கடி சொல்லுவான். இதுல எதுக்கு எக்ஸ்ட்ரா இந்த வேலையும் உனக்கு.அதெல்லாம் அவங்களே பார்த்துப்பாங்க” நைசாக அவனை கழட்டிவிடப்பார்த்தார்.
“என்னம்மா இபப்டி சொல்லிட்டீங்க? நமக்கு ஆயிரம் வேலை எப்போதும் இருக்க தான் செய்யும். அதுக்காக அத்தையை புது ஊரில் தனியா தவிக்க விடலாமா? அப்படி அவங்க கஷ்டப்பட்டா உங்க மனசுதான் தாங்குமா? இல்ல என் மனசு தான் தூங்குமா? இவங்க வந்த வேலை முடியற வரைக்கும் என்னோட ப்ரோக்ராம் எல்லாத்தையும் கார்த்தி பார்த்துக்கறேன்னு சொல்லிட்டான்-ம்மா. சோ... உங்க விருந்தாளியோட வேலைகளை வெற்றிகரமா முடித்து, அவர்களை பத்திரமா ஊருக்கு வண்டி ஏத்தி விடும்வரை என்னோட பொறுப்பில் விட்டுட்டு நீங்க நிம்மதியா இருங்க” என கூறி தான் கார்த்திக்கின் நண்பன் என்பதை நிருபித்தான்.
இதற்க்கு மேல் சொல்வதற்கு என்ன இருக்கிறது என்பதைப்போல் அங்கிருந்த பெண்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர்.
“ம்மா!அதான் உங்க தூரத்து சொந்தக்காரங்களை அஜய் பொறுப்பில் விட்டாச்சு இல்ல? நாம நாளைக்கு ஹாஸ்பிடல் போகலாமா?அப்பாவை அப்பாயின்மென்ட் வாங்க சொல்லிடட்டுமா?” கார்த்திக் கேட்டதற்கு என்ன பத்தி சொல்வதென புரியாது காந்தி விழித்துக்கொண்டு நின்றார்.
“ப்ரோ! இது தான் சந்துல சிந்து பாடறதா?” அப்பாவியாய் கேட்டவனுக்கு முதலில் ஆணவமாய் ஒரு பார்வையை பரிசளித்து,
“எங்க திறமைக்கு நாங்க ஏன் சந்துல போய் சிந்து பாடனும்? மெயின் ரோட்ல... அதுவும் மவுண்ட் ரோட்லயே மெலடி பாடுவோம்டா!” என கெத்தாய் கார்த்திக் பதிலளித்தான்.
இப்போதைக்கு தங்கள் பூர்வீக சொத்தை விற்கும் ஐடியா இல்லை என சொல்லிக்கொண்டு இங்கு வந்த மூன்றாம் நாளே மீனாவின் தாய் தங்கள் ஊருக்கு சென்றுவிட்டார்.ஒரு மாதகாலம் தங்கியிருக்க வந்த மீனா அன்ட் கோவை மூன்றே நாட்களில் மூட்டையை கட்டவைத்த பெருமை அஜய்யையே சாரும். அதில் அவனுக்கு சதி ஆலோசனைகளை அள்ளிவீசிய கார்த்திக்கும் பங்குண்டு.
காலையில் கண் விழித்ததிலிருந்து ஒரு குரல் காதில் ஓயாது ஒலித்துக்கொண்டிருந்தால் எவ்வளவு நேரம் தான் பொறுமையாக இருக்கமுடியும்? கார்த்திக்கும் அஜய்யும் சேர்ந்துக்கொண்டு அம்மா மகள் இருவரையும் பேசி பேசியே ஒரு வழியாக்கிவிட்டார்கள்.இங்குதான் இந்த தொல்லை என எண்ணி வெளியே கிளம்பினாலோ பூனைப்படையை போல அஜய் அவர்களுக்கு முன் அங்கு நின்றுக்கொண்டிருந்தான். அவன் வந்ததிலிருந்து அவர்களை சுதந்திரமாக தனியே தங்களுக்குள் பேசக்கூட விடவில்லை. உறவிற்கு உதவி செய்வதிலும் ஒரு அளவு இருக்கிறது அல்லவா? காந்திக்கு உதவ போய் இவர்களுக்கு காதில் ஏதாவது பிரச்சனை வந்துவிட்டால் யார் இவர்களை கவனிப்பார்களாம்!
இப்போதே அந்த இருவரின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் கொடுத்தே மீனாவிற்கு தொண்டை கட்டிக்கொண்டு பேச்சு சரியாக வரவில்லை. முன்பு மீனா அழகில்தான் மயிலுக்கு போட்டியாக இருந்தாள். இப்போது குரலும் மயிலுக்கு போட்டியாகிவிட்டது. காந்தியை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்ல கார்த்திக் பாய்ந்துக்கொண்டு வருவதைபோல இவளுக்கு யார் வருவார்களாம்? [ ஹாஸ்பிடலுக்கு செல்ல கார்த்திக் ஏன் இந்த பாய்ச்சல் பாய்கிறான் என்பது பாவம் இந்த அப்பாவிக்கு தெரியவில்லை]
தனக்கு கொடுத்த மிஷனை எப்படியெல்லாம் சிறப்பாக முடித்தான் என்பதை அஜய்ஒருமணி நேரமாக பெருமை பேசிக்கொண்டிருக்க, அதில் கடுப்பான கார்த்தி, ”டேய்! போதும் ஷட்டரை க்ளோஸ் பண்ணுடா. சும்மாவே உன் வாய் கொஞ்ச நேரம் ரெஸ்ட்ல இருக்காது. இப்ப ரெண்டு நாளா அந்த ஓட்ட வாய் கூட பேசி பேசியே இன்னும் ஓவரா ஆயிடிச்சு” என்றான்.
“கார்த்தி! யாரை யார்கூட கோத்துவிடற! யாரு... அந்த பொண்ணு எனக்கு இணையா! என் கூட அவளால அரைமணிநேரம் பேசமுடில. அவங்க அம்மாக்கு ஆக்ஷன் காட்டி அவங்களை என்கிட்டே மாட்டிவிட்டு அவ எஸ் ஆயிடறா. இந்த அழகுல அவ கூட பேசினதால தான் எனக்கு வாய் ஓவரா ஆயிடுச்சுன்னு நீ சொல்ற! டேய்... அந்த பொண்ணு பஞ்சத்துக்கு பரதேசி ஆனவ. நாமெல்லாம் பிறக்கும் போதே பரதேசியா பிறந்தவங்க. அவளால நம்ம கூட எல்லாம் போட்டி போடமுடியுமா?” சொல்லிக்கொண்டே காலரை தூக்கிவிட்டுக் கொண்டவனை,
“பரதேசி... ! எதுல தான் பெருமை பேசறதுன்னு ஒரு வரைமுறை இல்லாத பரதேசி!” வெளுத்து வாங்கிவிட்டான் கார்த்திக்.
தங்களின் பொறுமையின் அளவு மூன்று நாட்கள் தான் என சொல்லிக்கொண்டு மீனா குடும்பம் வீட்டைவிட்டு சென்றதும் தனக்களித்த பணியை செய்வனே முடித்துவைத்த அஜய்யும் அங்கிருந்து கிளம்பிவிட்டான்
மூன்றே நாட்களில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிட்ட தங்களின் வீட்டில் தனித்திருந்த மாறனும் காந்தியும் மாலையில் தங்கள் மகன் வந்து என்னென்ன பேச்செல்லாம் பேசப்போகிறானோ என்ற பீதியில் இருந்தனர்.மீனா வீட்டிற்கு வந்த மாலையே கார்த்திக் அஜையுடன் வரும்போதே அவனுக்கு தன் தில்லாலங்கடி தெரிந்துவிட்டது என்பதை காந்தி புரிந்துக்கொண்டார். இத்தனை நாட்கள் அவன் அமைதியாக இருந்ததே வெளியாட்கள் வீட்டில் இருந்ததால் என்பதை மாறனும் அறிந்தே இருந்தார். எனவேதான் சாயங்காலம் வானவேடிக்கையுடன் கூடிய கொண்டாட்டத்தில் தங்கள் இல்லம் களைகட்ட போகிறது என காத்திருந்தனர்.
அவர்களின் நினைப்பிற்கு மாறாக கார்த்திக் எதையும் பேசாது அமைதியாக இருக்கவும் அவனை அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தனர். அதை பார்த்தவனோ,
”என்ன... சும்மா சும்மா என்னை பார்க்கறீங்க? என்கிட்டே ஏதாவது சொல்லனுமா?” என தன தந்தையை பார்த்துக் கேட்டான்.
“இல்லப்பா... அம்மாவ ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்னு சொன்னியே... அப்பாயின்ட்மென்ட் வாங்கிட்டியா? எப்போ கிளம்பனும்” என மாறன் தயங்கி தயங்கிக் கேட்டார்.
“வாங்கிட்டேன் ப்பா! நாளைக்கு காலையில் பத்து மணிக்கு அங்கயிருக்கனும். நான் என்னோட ப்ரோக்ராம் டைமிங் அதுக்கு ஏற்றார்போல மாத்திட்டேன். நானே அம்மாவை கூடிட்டு போறேன்” என்றவன் காந்தியிடம் ஏதும் பேசாது தன்னறைக்கு செல்ல திரும்பினான்.