ஹாய் பிரெண்ட்ஸ்,
இந்தக் கதை நால்வர் சேர்ந்து எழுதியது. தீபிகா, கோகிலா, ராஜேஸ்வரி சிவகுமார் மற்றும் சுதா ரவி எழுதியது. ஏற்கனவே தளத்தில் பதிவிடப்பட்ட கதை தான். மீண்டும் பதிவிடுகிறோம்.
அத்தியாயம் – 1
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபமென்றான் காதல் சொன்னான்
காற்றில் குழலோசை பேசும் பூமேடை மேலே
பாடலை ஒலிக்க விட்டு சாய்வாக நாற்காலியில் அமர்ந்தவன் கண்ணாடியே வழியே தெரிந்த நண்பனின் முகத்தை பார்த்து இருகைகளையும் அசைத்தான்.
அந்த பாடல் முடியும் வரை கண்களை மூடி அதன் வரிகளை அனுபவித்தான். இப்படியொருத்தி தன் வாழ்வில் வர வேண்டும் என்று கண்முன்னே இல்லாத காதலியின் உருவத்தை உருவகப்படுத்தி ரசித்துக் கொண்டிருந்தான்.
பாடல் முடிந்ததை உணர்ந்து ஹெட் போனை மாட்டிக் கொண்டு “நீங்க நான் ராஜா சாருடன் இணைவது உங்கள் கார்த்திக்” என்றான்.
“வணக்கம் கார்த்தி சார்”
எதிரே லைனில் இருப்பவனிடம் வளவளத்துக் கொண்டே அவனுக்கு தேவையான பாடலை போட்டு விட்டு கட்டை விரலை உயர்த்தி நண்பனுக்கு காண்பித்து ரெக்கார்டிங் அறையை விட்டு வெளியே வந்தான்.
“என்ன மச்சி இன்னைக்கு ப்ரோக்ராம் அசத்தல் போல” என்றான் கிரி கிண்டலாக.
தனது பையை எடுத்துக் கொண்டு கிளம்பியவன் “கடைசில வந்தவன் விவகாரமான ஆள் மச்சி. அவன் ஆளுக்கு போட்ட பாட்டை பார்த்தே இல்ல. விடிய விடிய சொல்லித் தருவேன் கேட்டான் பாரு” என்று கூறி கண்ணடித்து விட்டு ஆபிசை விட்டு வெளியேறினான்.
பார்கிங்கில் நின்றிருந்த பைக்கை எடுத்துக் கொண்டு போக்குவரத்து குறைந்த சாலையில் பயணிக்க ஆரம்பித்தான்.
இரவு நேரம் ஈரப்பசையுடன் கூடிய காற்று உடலைத் தழுவ, மனமோ ராஜாவின் பாடல்களை அசைபோட்டபடி இருக்க, ஒருவித உற்சாகத்துடன் தனது வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தான்.
காந்திமதி – மாறன் தம்பதியின் சீமந்த புத்திரன் தான் கார்த்திக். வீட்டின் ஒரே பிள்ளை ஆதலால் கவலைகளற்று வளர்ந்தவன். தாய், தந்தை இருவருமே வாழ்க்கையை ரசித்து வாழ்பவர்கள். அதனால் அவனும் எந்தவொரு பிரச்சனையையும் மனதில் வைத்து புழுங்காமல் அது தீரும்போது தீரட்டும் என்று எண்ணுபவன்.
அவர்களின் வீட்டில் எந்நேரமும் சிரிப்பும், கும்மாளமுமாகவே இருக்கும். சிறிது நாட்களாக காந்திமதி மட்டும் பழையபடி இல்லாது தனக்குள் சுருக்கி கொண்டது போல் தோன்றியது. அவரது செயல்பாடுகளில் ஒரு மந்தநிலை தெரிந்தது. அதை பற்றியே எண்ணிக் கொண்டு வந்தவன் வீடு வந்ததும் வண்டியை பார்க்கிங்கில் போட்டுவிட்டு லிப்ட்டில் ஏறி தங்களின் தளத்திற்கு வந்தடைந்தான்.
தனது வீட்டின் வாயிலுக்கு வந்தபிறகும் கதவு திறக்கப்படாமல் இருப்பதை கண்டு யோசனையுடனே பெல்லை அடித்தான். ரெண்டு மாதங்களுக்கு முன்பு வரை அவன் லிப்ட்டில் வரும் போதே கதவு திறக்கப்பட்டிருக்கும். சிரித்த முகத்துடன் அவனுக்காக காத்திருப்பார் அன்னை.
இப்போதோ மூன்று நான்கு முறை பெல்லை அடித்த பிறகே மெல்ல கதவு திறக்கப்பட்டது. கதவை திறந்தவரின் முகத்திலோ புன்னகை மருந்திற்கு கூட இல்லை. சோர்வாக நின்றிருந்தவரை கண்டவன் “என்னம்மா உடம்பு சரியில்லையா? ரொம்ப டல்லா இருக்கீங்களே?” என்றான்.
“ம்ச்...அதெல்லாம் இல்ல கார்த்தி...டிரஸ் மாத்திட்டு வா சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று உள்ளே செல்ல சென்றார்.
அவரின் கைகளைப் பற்றி நிறுத்தியவன் “நீங்க போய் தூங்குங்க. நான் சாப்பிட்டுகிறேன்” என்றான் அவரின் முகத்தை ஆராய்ந்தபடி.
சிறிது நேரம் அவன் முகத்தையே பார்த்திருந்தவர் “என்னை தூங்க சொல்றியா?” என்றார்.
“ஆமாம்மா!”
ஒன்றும் பேசாது சமயலறைக்குச் சென்று உணவை எடுத்து மேஜை மேல் வைத்துவிட்டு “சாப்பிட்டிட்டு மீதம் இருக்கிறதை பிரிட்ஜ்ல வச்சிடு” என்று கூறி படுக்க சென்றார்.
யோசனையுடனே குளித்து முடித்து வந்தவன், உணவை முடித்துக் கொண்டு டிவியின் முன்பு அமர்ந்தான். சேனல்களை மாற்றிக் கொண்டிருந்தாலும் அன்னையின் நடவடிக்கையே மனதில் ஓடிக் கொண்டிருந்தது. என்னவாயிற்று அம்மாவிற்கு? அவரின் உற்சாகம் எங்கு சென்றது? என்று மனதை போட்டு உழப்பிக் கொண்டிருந்தான்.
அப்போது அறைக் கதவு மெலிதாக திறக்கும் சத்தம் கேட்க, மெல்ல திரும்பி பார்த்தான். தந்தை தான் மெதுவாக வந்து அவன் அருகில் அமர்ந்தார்.
“என்னப்பா தூங்கலையா?”
அவனை கவலையுடன் பார்த்தவர் “அம்மாவை கவனிச்சியா கார்த்தி? ரொம்ப சோர்ந்து போயிருக்கிற மாதிரி இல்ல?” என்றார்.
அவசரமாக டிவியை அனைத்தவன் “ஆமாம்ப்பா! நானும் அதை தான் யோசிச்சிட்டு இருந்தேன்” என்றான்.
“அவளுக்கு சரியா காது கேட்கலையோன்னு தோணுது கார்த்தி” என்றார் கவலையாக.
“என்னப்பா சொல்றீங்க?” என்றான் அதிர்ச்சியுடன்.
இந்தக் கதை நால்வர் சேர்ந்து எழுதியது. தீபிகா, கோகிலா, ராஜேஸ்வரி சிவகுமார் மற்றும் சுதா ரவி எழுதியது. ஏற்கனவே தளத்தில் பதிவிடப்பட்ட கதை தான். மீண்டும் பதிவிடுகிறோம்.
அத்தியாயம் – 1
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபமென்றான் காதல் சொன்னான்
காற்றில் குழலோசை பேசும் பூமேடை மேலே
பாடலை ஒலிக்க விட்டு சாய்வாக நாற்காலியில் அமர்ந்தவன் கண்ணாடியே வழியே தெரிந்த நண்பனின் முகத்தை பார்த்து இருகைகளையும் அசைத்தான்.
அந்த பாடல் முடியும் வரை கண்களை மூடி அதன் வரிகளை அனுபவித்தான். இப்படியொருத்தி தன் வாழ்வில் வர வேண்டும் என்று கண்முன்னே இல்லாத காதலியின் உருவத்தை உருவகப்படுத்தி ரசித்துக் கொண்டிருந்தான்.
பாடல் முடிந்ததை உணர்ந்து ஹெட் போனை மாட்டிக் கொண்டு “நீங்க நான் ராஜா சாருடன் இணைவது உங்கள் கார்த்திக்” என்றான்.
“வணக்கம் கார்த்தி சார்”
எதிரே லைனில் இருப்பவனிடம் வளவளத்துக் கொண்டே அவனுக்கு தேவையான பாடலை போட்டு விட்டு கட்டை விரலை உயர்த்தி நண்பனுக்கு காண்பித்து ரெக்கார்டிங் அறையை விட்டு வெளியே வந்தான்.
“என்ன மச்சி இன்னைக்கு ப்ரோக்ராம் அசத்தல் போல” என்றான் கிரி கிண்டலாக.
தனது பையை எடுத்துக் கொண்டு கிளம்பியவன் “கடைசில வந்தவன் விவகாரமான ஆள் மச்சி. அவன் ஆளுக்கு போட்ட பாட்டை பார்த்தே இல்ல. விடிய விடிய சொல்லித் தருவேன் கேட்டான் பாரு” என்று கூறி கண்ணடித்து விட்டு ஆபிசை விட்டு வெளியேறினான்.
பார்கிங்கில் நின்றிருந்த பைக்கை எடுத்துக் கொண்டு போக்குவரத்து குறைந்த சாலையில் பயணிக்க ஆரம்பித்தான்.
இரவு நேரம் ஈரப்பசையுடன் கூடிய காற்று உடலைத் தழுவ, மனமோ ராஜாவின் பாடல்களை அசைபோட்டபடி இருக்க, ஒருவித உற்சாகத்துடன் தனது வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தான்.
காந்திமதி – மாறன் தம்பதியின் சீமந்த புத்திரன் தான் கார்த்திக். வீட்டின் ஒரே பிள்ளை ஆதலால் கவலைகளற்று வளர்ந்தவன். தாய், தந்தை இருவருமே வாழ்க்கையை ரசித்து வாழ்பவர்கள். அதனால் அவனும் எந்தவொரு பிரச்சனையையும் மனதில் வைத்து புழுங்காமல் அது தீரும்போது தீரட்டும் என்று எண்ணுபவன்.
அவர்களின் வீட்டில் எந்நேரமும் சிரிப்பும், கும்மாளமுமாகவே இருக்கும். சிறிது நாட்களாக காந்திமதி மட்டும் பழையபடி இல்லாது தனக்குள் சுருக்கி கொண்டது போல் தோன்றியது. அவரது செயல்பாடுகளில் ஒரு மந்தநிலை தெரிந்தது. அதை பற்றியே எண்ணிக் கொண்டு வந்தவன் வீடு வந்ததும் வண்டியை பார்க்கிங்கில் போட்டுவிட்டு லிப்ட்டில் ஏறி தங்களின் தளத்திற்கு வந்தடைந்தான்.
தனது வீட்டின் வாயிலுக்கு வந்தபிறகும் கதவு திறக்கப்படாமல் இருப்பதை கண்டு யோசனையுடனே பெல்லை அடித்தான். ரெண்டு மாதங்களுக்கு முன்பு வரை அவன் லிப்ட்டில் வரும் போதே கதவு திறக்கப்பட்டிருக்கும். சிரித்த முகத்துடன் அவனுக்காக காத்திருப்பார் அன்னை.
இப்போதோ மூன்று நான்கு முறை பெல்லை அடித்த பிறகே மெல்ல கதவு திறக்கப்பட்டது. கதவை திறந்தவரின் முகத்திலோ புன்னகை மருந்திற்கு கூட இல்லை. சோர்வாக நின்றிருந்தவரை கண்டவன் “என்னம்மா உடம்பு சரியில்லையா? ரொம்ப டல்லா இருக்கீங்களே?” என்றான்.
“ம்ச்...அதெல்லாம் இல்ல கார்த்தி...டிரஸ் மாத்திட்டு வா சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று உள்ளே செல்ல சென்றார்.
அவரின் கைகளைப் பற்றி நிறுத்தியவன் “நீங்க போய் தூங்குங்க. நான் சாப்பிட்டுகிறேன்” என்றான் அவரின் முகத்தை ஆராய்ந்தபடி.
சிறிது நேரம் அவன் முகத்தையே பார்த்திருந்தவர் “என்னை தூங்க சொல்றியா?” என்றார்.
“ஆமாம்மா!”
ஒன்றும் பேசாது சமயலறைக்குச் சென்று உணவை எடுத்து மேஜை மேல் வைத்துவிட்டு “சாப்பிட்டிட்டு மீதம் இருக்கிறதை பிரிட்ஜ்ல வச்சிடு” என்று கூறி படுக்க சென்றார்.
யோசனையுடனே குளித்து முடித்து வந்தவன், உணவை முடித்துக் கொண்டு டிவியின் முன்பு அமர்ந்தான். சேனல்களை மாற்றிக் கொண்டிருந்தாலும் அன்னையின் நடவடிக்கையே மனதில் ஓடிக் கொண்டிருந்தது. என்னவாயிற்று அம்மாவிற்கு? அவரின் உற்சாகம் எங்கு சென்றது? என்று மனதை போட்டு உழப்பிக் கொண்டிருந்தான்.
அப்போது அறைக் கதவு மெலிதாக திறக்கும் சத்தம் கேட்க, மெல்ல திரும்பி பார்த்தான். தந்தை தான் மெதுவாக வந்து அவன் அருகில் அமர்ந்தார்.
“என்னப்பா தூங்கலையா?”
அவனை கவலையுடன் பார்த்தவர் “அம்மாவை கவனிச்சியா கார்த்தி? ரொம்ப சோர்ந்து போயிருக்கிற மாதிரி இல்ல?” என்றார்.
அவசரமாக டிவியை அனைத்தவன் “ஆமாம்ப்பா! நானும் அதை தான் யோசிச்சிட்டு இருந்தேன்” என்றான்.
“அவளுக்கு சரியா காது கேட்கலையோன்னு தோணுது கார்த்தி” என்றார் கவலையாக.
“என்னப்பா சொல்றீங்க?” என்றான் அதிர்ச்சியுடன்.