அத்தியாயம் – 13
தீபக்கிடம் பேசி விட்டு வீடு வந்து சேர்ந்தவன் அன்னை தந்தையின் முகத்தை கூட பார்க்காது அறைக்குள் நுழைந்து கொண்டான்.
மகனின் நடத்தையில் காந்திமதிக்கு கவலையாகி போனது.
“என்னங்க இவன் இப்படி இருக்கான்? காது வலிக்க வளவளன்னு பேசிட்டு இருந்தவன் இப்போ ஒரு வார்த்தை கூட பேசாம போறான்?”
மாறனுக்கும் கார்த்திக்கின் நடத்தை கண்டு யோசனையாக தான் இருந்தது. நிச்சயம் மகன் சோர்ந்து போய் இருக்க மாட்டான் என்றும் அவனது மௌனத்திற்கு பின்னே என்ன பூகம்பம் வெடிக்கப் போகிறதோ என்கிற பயமே எழுந்தது.
“நம்ம பையன் அப்படி எல்லாம் கவலைப்படுற ஆள் இல்ல காந்தி...பேசாம இருக்கான்னா ஏதோ வில்லங்கம் வர போகுதுன்னு அர்த்தம்”.
அவரை முறைத்த காந்தி “எப்பவுமே அவனை சந்தேகப்படனுமா? இன்னைக்கு அந்த புள்ளைய பார்க்க கூட உள்ளே வரல. அப்போ அவன் மனசு எந்தளவுக்கு காயப்பட்டிருக்கு...அதை புரிஞ்சுக்காம பேச வேண்டியது” என்று சிடுசிடுத்தார்.
“அப்படியில்ல காந்தி...கார்த்தி அவ்வளவு சீக்கிரம் மனசை விடுறவன் இல்லை...நீ வேணா பாரேன் அந்த பொண்ணு கையில காலில விழுந்தாவது கட்டிக்கிட்டு வந்துடுவான்”.
இவர்கள் இங்கே வழக்கடித்துக் கொண்டிருக்க உள்ளே கட்டிலில் அமர்ந்திருந்தவனோ ‘இதோ பாரு! நியாயத்தை சொல்றேன் அப்படி இப்படின்னு அடிக்கடி எட்டிப் பார்க்க கூடாது’ என்று மனசாட்சியை மொத்திக் கொண்டிருந்தான்.
‘உன் நிலைமை இப்படி ஆகிப் போச்சேடா கார்த்தி! பாட்டுன்னா கார்த்தி! கார்தின்னா பாட்டு! இந்த தொமுகாவால பேச கூட யோசிக்க வேண்டி இருக்கே’ என்று புலம்பிக் கொண்டிருந்தான்.
மகனுக்கு காப்பி கொடுக்கலாம் என்று உள்ளே வந்த காந்தி அவன் தனியே பேசிக் கொண்டிருப்பதை பார்த்ததும் “என்னங்க கொஞ்சம் சீக்கிரம் வாங்க...இவனுக்கு முத்திப் போச்சு...தனியா பேசிகிட்டு இருக்கான்...விட்டா சட்டையை கிழிச்சுக்குவான் போல இருக்குங்க” என்று கத்தினார்.
அன்னையின் அலறலில் சுதாரித்துக் கொண்டவன் “என்னைப் பெத்த ஆத்தா? ஏன் இந்த கொலைவெறி? ஒரு மனுஷன் கொஞ்ச நேரம் மனசாட்சியோட பேசக் கூடாதா? அதுக்குள்ள பைத்தியம்னே முடிவு பண்ணிடுவீங்களா?”
“என்னது மனசாட்சியோட பேசினியா? எப்படி பழைய படத்துல எல்லாம் வந்து வந்து எட்டி பார்க்குமே அப்படியா?” என்றார் கிண்டலாக.
“ஹாஹா...சிரிச்சிட்டேன் உங்க சோக்குக்கு...இந்த கார்த்தியை கலாய்சிட்டாங்கலாமா...மா! நானே என் மௌனி குட்டியை எப்படி கரெக்ட் பண்றதுன்னு பலத்த யோசனையில் இருக்கேன்...நல்ல அம்மாவா பிள்ளைக்கு ஐடியா கொடுக்காம கிண்டல் பண்ண கூடாது”.
“இதெல்லாம் ஓவரு ராசா...பொண்ணை கரெக்ட் பண்றதை பத்தி அம்மா கிட்டேயே பேசுறியே?”
“உங்க பிள்ளை தாய் சொல்லை தட்டாத பிள்ளை மா...நீங்க நல்ல ஐடியாவா கொடுத்து உங்க மருமகளை வீட்டுக்கு கொண்டு வர ஹெல்ப் பண்ணுவீங்களாம்” என்று கன்னம் பிடித்து கொஞ்சினான்.
“என்னடா எலி அம்மணமா போகுதேன்னு நான் கூட தப்பா யோசிச்சிட்டேன்...இந்தா இதை குடிச்சா ஏதாவது ஐடியா கிடைக்கும். அதைப் போல செஞ்சிட்டு மருமக கிட்ட செருப்படி வாங்கு” என்று கடுப்புடன் கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
கொஞ்சமும் அயராமல் அன்னை வைத்துவிட்டு போன காப்பியை எடுத்து குடித்தவன் ‘இந்த உலகம் நம்மளை நல்லா புரிஞ்சு வச்சிருக்கே...தொமுக ரொம்ப தான் மண்டை காய வைக்கிறா’ என்று யோசித்துக் கொண்டே காப்பி கப்பை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான்.
அங்கே மாறன் “நான் தான் சொன்னேன் இல்ல காந்தி...அவன் அமைதியா இருக்கான்னா பின்னாடி வில்லங்கம் இருக்குன்னு” என்றார்.
அவர் முன்னே சென்று கோபமாக முறைத்தவன் “என்னைப் பார்த்தா வில்லன் மாதிரியாப்பா இருக்கு”.
“ச்சே..ச்சே...உன்னைப் போய் அப்படி சொல்வாங்களா கார்த்தி” என்றதும் காலரை தூக்கி விட்டுக் கொண்டவன் “இப்போ தானப்பா நீங்க சரியா என்னைப் பத்தி நினைச்சிருக்கீங்க” என்றான்.
அவரோ சிரிப்பை அடக்கியபடி “காமெடி பீசா வேணா நினைப்பாங்க” என்றார்.
அதைக் கேட்டு காந்திமதி சிரிக்க, தந்தையை கொலைவெறியுடன் பார்த்துவிட்டு “காமெடி பீசாவே நினைங்க...இந்த காமெடி பீசு வில்லன் வேலை பண்ணினதும் புரிஞ்சுபீங்க” என்று வெடுவெடுத்துவிட்டு நகர்ந்தான்.
“போடா...போடா முதல்ல தைரியமா அந்த பொண்ணு கிட்ட லவ்வ சொல்லிடு. அப்புறம் சொல்றேன் நீ காமெடியனா வில்லனான்னு” என்று அவனை மேலும் சீண்டினார் மாறன்.
அவர் தோளில் தட்டி “ஏங்க நீங்க அவனுக்கு அப்பா...பிள்ளை கிட்ட பேசுற பேச்சா பேசுறீங்க?” என்று அதட்டினார்.
“பின்னே என்னடி இவன் பண்ற அலப்பறை தாங்க முடியல...அந்த பொண்ணுக்கும் இவனுக்கும் நிச்சயமா ஒத்தே வராது. அவ அமைதியின் சிகரம்...இது அலப்பறையின் சிகரம்...இது ரெண்டும் எப்படி ஒத்து போகும் சொல்லு?” என்றார் கோபமாக.
தீபக்கிடம் பேசி விட்டு வீடு வந்து சேர்ந்தவன் அன்னை தந்தையின் முகத்தை கூட பார்க்காது அறைக்குள் நுழைந்து கொண்டான்.
மகனின் நடத்தையில் காந்திமதிக்கு கவலையாகி போனது.
“என்னங்க இவன் இப்படி இருக்கான்? காது வலிக்க வளவளன்னு பேசிட்டு இருந்தவன் இப்போ ஒரு வார்த்தை கூட பேசாம போறான்?”
மாறனுக்கும் கார்த்திக்கின் நடத்தை கண்டு யோசனையாக தான் இருந்தது. நிச்சயம் மகன் சோர்ந்து போய் இருக்க மாட்டான் என்றும் அவனது மௌனத்திற்கு பின்னே என்ன பூகம்பம் வெடிக்கப் போகிறதோ என்கிற பயமே எழுந்தது.
“நம்ம பையன் அப்படி எல்லாம் கவலைப்படுற ஆள் இல்ல காந்தி...பேசாம இருக்கான்னா ஏதோ வில்லங்கம் வர போகுதுன்னு அர்த்தம்”.
அவரை முறைத்த காந்தி “எப்பவுமே அவனை சந்தேகப்படனுமா? இன்னைக்கு அந்த புள்ளைய பார்க்க கூட உள்ளே வரல. அப்போ அவன் மனசு எந்தளவுக்கு காயப்பட்டிருக்கு...அதை புரிஞ்சுக்காம பேச வேண்டியது” என்று சிடுசிடுத்தார்.
“அப்படியில்ல காந்தி...கார்த்தி அவ்வளவு சீக்கிரம் மனசை விடுறவன் இல்லை...நீ வேணா பாரேன் அந்த பொண்ணு கையில காலில விழுந்தாவது கட்டிக்கிட்டு வந்துடுவான்”.
இவர்கள் இங்கே வழக்கடித்துக் கொண்டிருக்க உள்ளே கட்டிலில் அமர்ந்திருந்தவனோ ‘இதோ பாரு! நியாயத்தை சொல்றேன் அப்படி இப்படின்னு அடிக்கடி எட்டிப் பார்க்க கூடாது’ என்று மனசாட்சியை மொத்திக் கொண்டிருந்தான்.
‘உன் நிலைமை இப்படி ஆகிப் போச்சேடா கார்த்தி! பாட்டுன்னா கார்த்தி! கார்தின்னா பாட்டு! இந்த தொமுகாவால பேச கூட யோசிக்க வேண்டி இருக்கே’ என்று புலம்பிக் கொண்டிருந்தான்.
மகனுக்கு காப்பி கொடுக்கலாம் என்று உள்ளே வந்த காந்தி அவன் தனியே பேசிக் கொண்டிருப்பதை பார்த்ததும் “என்னங்க கொஞ்சம் சீக்கிரம் வாங்க...இவனுக்கு முத்திப் போச்சு...தனியா பேசிகிட்டு இருக்கான்...விட்டா சட்டையை கிழிச்சுக்குவான் போல இருக்குங்க” என்று கத்தினார்.
அன்னையின் அலறலில் சுதாரித்துக் கொண்டவன் “என்னைப் பெத்த ஆத்தா? ஏன் இந்த கொலைவெறி? ஒரு மனுஷன் கொஞ்ச நேரம் மனசாட்சியோட பேசக் கூடாதா? அதுக்குள்ள பைத்தியம்னே முடிவு பண்ணிடுவீங்களா?”
“என்னது மனசாட்சியோட பேசினியா? எப்படி பழைய படத்துல எல்லாம் வந்து வந்து எட்டி பார்க்குமே அப்படியா?” என்றார் கிண்டலாக.
“ஹாஹா...சிரிச்சிட்டேன் உங்க சோக்குக்கு...இந்த கார்த்தியை கலாய்சிட்டாங்கலாமா...மா! நானே என் மௌனி குட்டியை எப்படி கரெக்ட் பண்றதுன்னு பலத்த யோசனையில் இருக்கேன்...நல்ல அம்மாவா பிள்ளைக்கு ஐடியா கொடுக்காம கிண்டல் பண்ண கூடாது”.
“இதெல்லாம் ஓவரு ராசா...பொண்ணை கரெக்ட் பண்றதை பத்தி அம்மா கிட்டேயே பேசுறியே?”
“உங்க பிள்ளை தாய் சொல்லை தட்டாத பிள்ளை மா...நீங்க நல்ல ஐடியாவா கொடுத்து உங்க மருமகளை வீட்டுக்கு கொண்டு வர ஹெல்ப் பண்ணுவீங்களாம்” என்று கன்னம் பிடித்து கொஞ்சினான்.
“என்னடா எலி அம்மணமா போகுதேன்னு நான் கூட தப்பா யோசிச்சிட்டேன்...இந்தா இதை குடிச்சா ஏதாவது ஐடியா கிடைக்கும். அதைப் போல செஞ்சிட்டு மருமக கிட்ட செருப்படி வாங்கு” என்று கடுப்புடன் கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
கொஞ்சமும் அயராமல் அன்னை வைத்துவிட்டு போன காப்பியை எடுத்து குடித்தவன் ‘இந்த உலகம் நம்மளை நல்லா புரிஞ்சு வச்சிருக்கே...தொமுக ரொம்ப தான் மண்டை காய வைக்கிறா’ என்று யோசித்துக் கொண்டே காப்பி கப்பை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான்.
அங்கே மாறன் “நான் தான் சொன்னேன் இல்ல காந்தி...அவன் அமைதியா இருக்கான்னா பின்னாடி வில்லங்கம் இருக்குன்னு” என்றார்.
அவர் முன்னே சென்று கோபமாக முறைத்தவன் “என்னைப் பார்த்தா வில்லன் மாதிரியாப்பா இருக்கு”.
“ச்சே..ச்சே...உன்னைப் போய் அப்படி சொல்வாங்களா கார்த்தி” என்றதும் காலரை தூக்கி விட்டுக் கொண்டவன் “இப்போ தானப்பா நீங்க சரியா என்னைப் பத்தி நினைச்சிருக்கீங்க” என்றான்.
அவரோ சிரிப்பை அடக்கியபடி “காமெடி பீசா வேணா நினைப்பாங்க” என்றார்.
அதைக் கேட்டு காந்திமதி சிரிக்க, தந்தையை கொலைவெறியுடன் பார்த்துவிட்டு “காமெடி பீசாவே நினைங்க...இந்த காமெடி பீசு வில்லன் வேலை பண்ணினதும் புரிஞ்சுபீங்க” என்று வெடுவெடுத்துவிட்டு நகர்ந்தான்.
“போடா...போடா முதல்ல தைரியமா அந்த பொண்ணு கிட்ட லவ்வ சொல்லிடு. அப்புறம் சொல்றேன் நீ காமெடியனா வில்லனான்னு” என்று அவனை மேலும் சீண்டினார் மாறன்.
அவர் தோளில் தட்டி “ஏங்க நீங்க அவனுக்கு அப்பா...பிள்ளை கிட்ட பேசுற பேச்சா பேசுறீங்க?” என்று அதட்டினார்.
“பின்னே என்னடி இவன் பண்ற அலப்பறை தாங்க முடியல...அந்த பொண்ணுக்கும் இவனுக்கும் நிச்சயமா ஒத்தே வராது. அவ அமைதியின் சிகரம்...இது அலப்பறையின் சிகரம்...இது ரெண்டும் எப்படி ஒத்து போகும் சொல்லு?” என்றார் கோபமாக.