அவனுடைய வேலையிலே ஒன்றிப் போனான். இருவரும் ஒன்றாகச் செல்லும் மதிய நேர நடைகள் நின்றுவிட்டன.
வினித்தின் உலகத்தில் சைந்தவி மட்டுமில்லையே? அவனுக்கு வேறு கடமைகளும் இருப்பதால் அவற்றின் ஆக்கிரமிப்பில் நாட்கள் நிமிடங்களாகின.
அடுத்தடுத்து இரண்டு தடவை மும்பைக்குப் போய் வந்தான்.
கோபம்; ஏமாற்றம்; இயலாமை என்றிருக்கும் போது மூளை வேகமாக யோசிக்கும். ஆனால், விவேகமாக யோசிக்காது. சைந்தவிக்குத் தெரிந்திருந்தாலும், உணர்ச்சிப்பட்டிருந்த நேரத்திலே எல்லாவற்றையும் வேக வேகமாகத்தான் நடத்தினாள்.
வெவ்வேறு வேலைகளுக்கும் அதே வேகத்துடன் விண்ணப்பிக்கத் தொடங்கினாள். முதலில் விண்ணப்பித்த மூன்றும் அவளுடைய தகுதிகளுக்குத் தக்கதாயில்லை. அதை அவளும் உணரவே இல்லை. மின்னஞ்சல் ஒன்று வரும் வரையில்.
அதிலே குறிப்பிட்டிருந்த வேலைக்கான தலைப்பைப் பார்த்துத் தலையில் அடித்துக்கொண்டாள்.
“இதுக்குப் போயா ரெஸ்யூமே அனுப்பி வச்சிருக்கேன்!”
பரபரவென்று மற்ற வேலைக்கான தகுதிக் குறிப்புகளையும் பங்களிப்பு விபரங்களையும் ஆராய்ந்தாள். எதுவுமே உவப்பானதாக இருக்கவில்லை.
அதன் பிறகே சைந்தவி நிதானித்தாள். இனி பார்த்துச் செய்ய வேண்டும் என்று மண்டைக்குள் ஏற்றிக் கொண்டாள்.
அவளுடைய வேகமான செயல்கள் அப்பாவிடமிருந்து வந்த குணம் என்று தோன்றிற்று.
உதட்டைக் கடித்தபடியே ஜன்னல் அருகே சென்று தோட்டத்தைக் கடந்து சாலையை வெறித்தாள். சனிக்கிழமையின் இரவை வாகனப் போக்குவரத்து மிகவும் பிஸியாக வைத்திருந்தது.
சிவப்பு மஞ்சள் விளக்கொளிகளின் அசைவையும் வேகத்தையும் அளந்தது பார்வை.
எண்ணங்கள் வேகத்துடன் அப்பாவைப் பற்றிக் கொண்டன. அவரிடம் நிதானம் இருந்திருந்தால் தன்னுடைய வாழ்க்கையில் தனிமை வந்திருக்கவே வந்திருக்காது என்று நிச்சயமாகத் தெரிந்த ஒன்றை மீண்டும் நினைத்துக்கொண்டாள்.
“இப்போ அதை எல்லாம் நினைச்சு என்ன ஆகப் போகுது? போனது திரும்ப வராது. அனுபவிச்சதும் இல்லைன்னு ஆகப் போகுதா? இனி வரப் போவதைப் பற்றி மட்டுமே சிந்திக்கணும்.”
முறுவலின் கசப்பு, நாவின் வறட்சியை உணர்த்தியது. மடமடவென்று தண்ணீரைத் தொண்டையில் சரித்துக்கொண்டாள்.
வினித்தினால் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமையில் தானும் நிதானம் இழந்து போனது புரிந்தது.
அவளுடைய அலுவலகத்திலேயே உடனடி ஆன்சைட் தேவைகள் இருக்குமாயின், தான் வேலை மாற வேண்டாம் என்று நினைத்தாள் சைந்தவி.
அடுத்த அலுவலக நாளில் தன்னுடைய மேலதிகாரியைச் சந்தித்தாள்.
ஆன்சைட் போவதற்குத் தோதான வேறு பிராஜக்ட் தனக்கு அமையுமா என்று முதலில் விசாரித்துப் பார்த்தாள்.
அவர், ‘அதற்கான வாய்ப்பு இப்போது கிடையாது’ என்று சொல்லிவிட்டார். அதன் பின்னரே வெளியே தேடுவது தான் தன்னுடைய முடிவிற்குச் சரியாக வரும் என்று அவளுக்குத் தோன்றியது.
‘அடுத்து வேலை கிடைத்தாலும், அங்கே ஆன்சைட் வாய்ப்பு எப்போது அமையும் என்று உறுதியாகத் தெரியாது. அப்படி உடனே வருவது எல்லாம் அரிதான அதிர்ஷ்டம்’ நினைத்துக் கொண்டாள்.
தற்போதுள்ள அலுவலக வளாகத்தைவிட்டுத் தள்ளியிருக்கும் அலுவலகம் என்றால் கூட முதலில் சேர்ந்து கொள்ளலாம் என்றே நினைத்தாள். வினித்தை அடிக்கடி பார்க்க நேரிடுவதைத் தவிர்க்க நல்ல வழியாக இருக்கும்.
சைந்தவி முடிவாகக் கனத்த மனதுடன் வேறு வேலையைத் தேடுவதில் தீவிரமாக இறங்கியிருந்தாள். அதில் முதல் முக்கியத் தேவையாக ஆன்சைட் வாய்ப்பைத் தரக்கூடிய நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்தே விண்ணப்பித்திருந்தாள்.
தற்போதுள்ள நிறுவனத்திலிருந்து ஒரு முறை ஆன்சைட் சென்று வந்த அனுபவத்துடன்; குறிப்பிட்ட வகையில் சிறப்புத் தகுதிகளைப் பெற்றிருந்தாள்.
வினித்தின் வழிக்காட்டலிலும் வலியுறுத்தலிலும் தனித்துவம் வாய்ந்ததொரு டெக்னிகல் தகுதியைச் சமீபத்தில் வளர்த்துக் கொண்டிருந்தாள். புதிய டெக்னாலஜி… நுண்ணியத் திறனுடன் ஆற்றக் கூடிய பணி அது.
இந்த ‘ஸ்பெஷல் ஸ்கில் செட்’ (சிறப்புத் தகுதி) அவளுக்குப் புதிய வேலையில் நியமனம் பெறக் காரணமாகியது. அதுவும் வெகு விரைவிலேயே.
அவள், இத்தனை விரைவில் தன்னுடைய எதிர்பார்ப்பிற்குத் தக்க மாதிரி வேறு வேலை அமையும் என்று நினைத்திருக்கவில்லை. அதிலும் அந்தக் குறிப்பிடத்தக்க நிறுவனத்திலே.
இந்த வேலைக்காக நான்கு கட்டங்களைக் கொண்ட நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. தகுதித் தேர்வு, வேலைத் திறனின் சோதனை மற்றும் நேர்காணல் என்று அத்தனையையும் கடப்பது சைந்தவிக்கு எளிதாக இருந்திருக்கவில்லை.
தன்னால் இயன்ற அளவு நன்றாகவே செய்திருந்த போதும், அவ்வேலை கிடைக்கும் என்று சைந்தவி எதிர்பார்த்திருக்கவில்லை.
எதிர்பாராமல் வந்த நியமனக்கடிதத்தைப் பார்த்ததும் அவளுடைய மனத்தில் சந்தோஷம் பூத்தது. சந்தோஷத்தில் இரண்டு குதி குதித்தாள். தன்னுடைய சந்தோஷத்தை உடனே வினித்திடம் பகிர மனது பரபரத்தது.
மறந்து போயிருந்தாள் அந்தக் கணம்… அவனைவிட்டுத் தூரப் போகவே இந்த வேலையைத் தேர்ந்தெடுத்தது. இனி சில நாட்களில் புதிய வேலையில் சேர வேண்டும். வினித்தைவிட்டுப் போகும் வாய்ப்பு கிடைத்ததிற்கான மகிழ்வா?
இதை உணராமல் குதூகலித்தாள். தன்னுடைய குதூகலத்தைக் கொண்டாட வினித்தையும் அழைத்தாள்.
சைந்தவி அழைத்த போது வினித் நீலிமாவுடன் மும்முரமாகப் பேசிக் கொண்டிருந்தான். யாருடைய அழைப்பு என்று பார்க்காமலேயே சைந்தவியின் அழைப்பை நிராகரித்தான். மூன்று நான்கு முறை முயன்று பார்த்து ஓய்ந்தாள் சைவி.
நீலிமாவைவிட வினித்திற்கு வேறு எதுவும் அந்த நேரம் பெரிதில்லை. அவளுடன் பேசி முடித்து அந்த ஞாபகத்துடன் சுற்றி வந்தான். நீண்ட நேரம் சென்றே மீண்டும் மொபைலைக் கையில் எடுத்தான்.
அப்போது தான் கவனித்தான், சைந்தவியிடம் இருந்து வந்திருந்த அழைப்புகளை. புருவச் சுறுக்கங்களுடன் யோசித்தான்…
‘இவ எதுக்கு இந்த நேரத்திலே கூப்பிட்டிருக்கா? அதுவும் இத்தனை நாளா பேசாமல் இருந்திட்டு?’
வினித்தின் உலகத்தில் சைந்தவி மட்டுமில்லையே? அவனுக்கு வேறு கடமைகளும் இருப்பதால் அவற்றின் ஆக்கிரமிப்பில் நாட்கள் நிமிடங்களாகின.
அடுத்தடுத்து இரண்டு தடவை மும்பைக்குப் போய் வந்தான்.
கோபம்; ஏமாற்றம்; இயலாமை என்றிருக்கும் போது மூளை வேகமாக யோசிக்கும். ஆனால், விவேகமாக யோசிக்காது. சைந்தவிக்குத் தெரிந்திருந்தாலும், உணர்ச்சிப்பட்டிருந்த நேரத்திலே எல்லாவற்றையும் வேக வேகமாகத்தான் நடத்தினாள்.
வெவ்வேறு வேலைகளுக்கும் அதே வேகத்துடன் விண்ணப்பிக்கத் தொடங்கினாள். முதலில் விண்ணப்பித்த மூன்றும் அவளுடைய தகுதிகளுக்குத் தக்கதாயில்லை. அதை அவளும் உணரவே இல்லை. மின்னஞ்சல் ஒன்று வரும் வரையில்.
அதிலே குறிப்பிட்டிருந்த வேலைக்கான தலைப்பைப் பார்த்துத் தலையில் அடித்துக்கொண்டாள்.
“இதுக்குப் போயா ரெஸ்யூமே அனுப்பி வச்சிருக்கேன்!”
பரபரவென்று மற்ற வேலைக்கான தகுதிக் குறிப்புகளையும் பங்களிப்பு விபரங்களையும் ஆராய்ந்தாள். எதுவுமே உவப்பானதாக இருக்கவில்லை.
அதன் பிறகே சைந்தவி நிதானித்தாள். இனி பார்த்துச் செய்ய வேண்டும் என்று மண்டைக்குள் ஏற்றிக் கொண்டாள்.
அவளுடைய வேகமான செயல்கள் அப்பாவிடமிருந்து வந்த குணம் என்று தோன்றிற்று.
உதட்டைக் கடித்தபடியே ஜன்னல் அருகே சென்று தோட்டத்தைக் கடந்து சாலையை வெறித்தாள். சனிக்கிழமையின் இரவை வாகனப் போக்குவரத்து மிகவும் பிஸியாக வைத்திருந்தது.
சிவப்பு மஞ்சள் விளக்கொளிகளின் அசைவையும் வேகத்தையும் அளந்தது பார்வை.
எண்ணங்கள் வேகத்துடன் அப்பாவைப் பற்றிக் கொண்டன. அவரிடம் நிதானம் இருந்திருந்தால் தன்னுடைய வாழ்க்கையில் தனிமை வந்திருக்கவே வந்திருக்காது என்று நிச்சயமாகத் தெரிந்த ஒன்றை மீண்டும் நினைத்துக்கொண்டாள்.
“இப்போ அதை எல்லாம் நினைச்சு என்ன ஆகப் போகுது? போனது திரும்ப வராது. அனுபவிச்சதும் இல்லைன்னு ஆகப் போகுதா? இனி வரப் போவதைப் பற்றி மட்டுமே சிந்திக்கணும்.”
முறுவலின் கசப்பு, நாவின் வறட்சியை உணர்த்தியது. மடமடவென்று தண்ணீரைத் தொண்டையில் சரித்துக்கொண்டாள்.
வினித்தினால் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமையில் தானும் நிதானம் இழந்து போனது புரிந்தது.
அவளுடைய அலுவலகத்திலேயே உடனடி ஆன்சைட் தேவைகள் இருக்குமாயின், தான் வேலை மாற வேண்டாம் என்று நினைத்தாள் சைந்தவி.
அடுத்த அலுவலக நாளில் தன்னுடைய மேலதிகாரியைச் சந்தித்தாள்.
ஆன்சைட் போவதற்குத் தோதான வேறு பிராஜக்ட் தனக்கு அமையுமா என்று முதலில் விசாரித்துப் பார்த்தாள்.
அவர், ‘அதற்கான வாய்ப்பு இப்போது கிடையாது’ என்று சொல்லிவிட்டார். அதன் பின்னரே வெளியே தேடுவது தான் தன்னுடைய முடிவிற்குச் சரியாக வரும் என்று அவளுக்குத் தோன்றியது.
‘அடுத்து வேலை கிடைத்தாலும், அங்கே ஆன்சைட் வாய்ப்பு எப்போது அமையும் என்று உறுதியாகத் தெரியாது. அப்படி உடனே வருவது எல்லாம் அரிதான அதிர்ஷ்டம்’ நினைத்துக் கொண்டாள்.
தற்போதுள்ள அலுவலக வளாகத்தைவிட்டுத் தள்ளியிருக்கும் அலுவலகம் என்றால் கூட முதலில் சேர்ந்து கொள்ளலாம் என்றே நினைத்தாள். வினித்தை அடிக்கடி பார்க்க நேரிடுவதைத் தவிர்க்க நல்ல வழியாக இருக்கும்.
சைந்தவி முடிவாகக் கனத்த மனதுடன் வேறு வேலையைத் தேடுவதில் தீவிரமாக இறங்கியிருந்தாள். அதில் முதல் முக்கியத் தேவையாக ஆன்சைட் வாய்ப்பைத் தரக்கூடிய நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்தே விண்ணப்பித்திருந்தாள்.
தற்போதுள்ள நிறுவனத்திலிருந்து ஒரு முறை ஆன்சைட் சென்று வந்த அனுபவத்துடன்; குறிப்பிட்ட வகையில் சிறப்புத் தகுதிகளைப் பெற்றிருந்தாள்.
வினித்தின் வழிக்காட்டலிலும் வலியுறுத்தலிலும் தனித்துவம் வாய்ந்ததொரு டெக்னிகல் தகுதியைச் சமீபத்தில் வளர்த்துக் கொண்டிருந்தாள். புதிய டெக்னாலஜி… நுண்ணியத் திறனுடன் ஆற்றக் கூடிய பணி அது.
இந்த ‘ஸ்பெஷல் ஸ்கில் செட்’ (சிறப்புத் தகுதி) அவளுக்குப் புதிய வேலையில் நியமனம் பெறக் காரணமாகியது. அதுவும் வெகு விரைவிலேயே.
அவள், இத்தனை விரைவில் தன்னுடைய எதிர்பார்ப்பிற்குத் தக்க மாதிரி வேறு வேலை அமையும் என்று நினைத்திருக்கவில்லை. அதிலும் அந்தக் குறிப்பிடத்தக்க நிறுவனத்திலே.
இந்த வேலைக்காக நான்கு கட்டங்களைக் கொண்ட நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. தகுதித் தேர்வு, வேலைத் திறனின் சோதனை மற்றும் நேர்காணல் என்று அத்தனையையும் கடப்பது சைந்தவிக்கு எளிதாக இருந்திருக்கவில்லை.
தன்னால் இயன்ற அளவு நன்றாகவே செய்திருந்த போதும், அவ்வேலை கிடைக்கும் என்று சைந்தவி எதிர்பார்த்திருக்கவில்லை.
எதிர்பாராமல் வந்த நியமனக்கடிதத்தைப் பார்த்ததும் அவளுடைய மனத்தில் சந்தோஷம் பூத்தது. சந்தோஷத்தில் இரண்டு குதி குதித்தாள். தன்னுடைய சந்தோஷத்தை உடனே வினித்திடம் பகிர மனது பரபரத்தது.
மறந்து போயிருந்தாள் அந்தக் கணம்… அவனைவிட்டுத் தூரப் போகவே இந்த வேலையைத் தேர்ந்தெடுத்தது. இனி சில நாட்களில் புதிய வேலையில் சேர வேண்டும். வினித்தைவிட்டுப் போகும் வாய்ப்பு கிடைத்ததிற்கான மகிழ்வா?
இதை உணராமல் குதூகலித்தாள். தன்னுடைய குதூகலத்தைக் கொண்டாட வினித்தையும் அழைத்தாள்.
சைந்தவி அழைத்த போது வினித் நீலிமாவுடன் மும்முரமாகப் பேசிக் கொண்டிருந்தான். யாருடைய அழைப்பு என்று பார்க்காமலேயே சைந்தவியின் அழைப்பை நிராகரித்தான். மூன்று நான்கு முறை முயன்று பார்த்து ஓய்ந்தாள் சைவி.
நீலிமாவைவிட வினித்திற்கு வேறு எதுவும் அந்த நேரம் பெரிதில்லை. அவளுடன் பேசி முடித்து அந்த ஞாபகத்துடன் சுற்றி வந்தான். நீண்ட நேரம் சென்றே மீண்டும் மொபைலைக் கையில் எடுத்தான்.
அப்போது தான் கவனித்தான், சைந்தவியிடம் இருந்து வந்திருந்த அழைப்புகளை. புருவச் சுறுக்கங்களுடன் யோசித்தான்…
‘இவ எதுக்கு இந்த நேரத்திலே கூப்பிட்டிருக்கா? அதுவும் இத்தனை நாளா பேசாமல் இருந்திட்டு?’