உடனே பதில் தந்தான்.
“ப்ச் நீ வேற… ஏன்னு சொல்லு!”
“எதுக்கு இப்போ இந்தக் கேள்வி… இங்க திருப்பி வந்து அந்தப் பிளைட்டைப் பிடிக்கப் போறியா என்ன?”
“என்னன்னு கேட்டா பதிலை ஒழுங்கா சொல்லணும்! அதைவிட்டுட்டு… என்னாச்சு உனக்கு இந்த நேரத்தில் நக்கல் பண்ணிட்டு இருக்க?”
“உங்க அப்பாவை நீ ரிசீவ் பண்ண லட்சணத்தைப் பார்த்துட்டு வந்த கடுப்பு. வேறென்ன?”
“??????”
கண்ணை உருட்டிப் பார்க்கும் எமோஜிகளைத் தட்டிவிட்டாள்.
“நீ திருந்த மாட்டேயில்ல?”
அவன் கேட்டான்.
“??????”
அதற்கு அவளிடம் இருந்த வரிசைகட்டிக் கொண்டு இந்தத் தலைகீழ் ஸ்மைலிக்கள் பறந்தன.
“நான் தலைகீழா நின்னு பார்த்தாலும் மாட்டேன்ற? ரைட்டு! நான் இனி மேல் பேசுறதுக்கு ஒன்னுமில்லை. அந்தப் பிளைட் ஈவ்னிங் அஞ்சு மணிக்கப்புறம் தான் டைமிங். தெரியுமில்ல? அதுவும் போக இன்னைக்கு அதுவும் இல்லையாம். கேன்சல் பண்ணி வச்சிருக்காங்க.
உங்கப்பா வந்து இறங்க லேட்டாகும்னு தெரிஞ்சதும் அலெக்ஸ் வேற எதுவும் வழியிருக்கா சீக்கிரம் போகன்னு எல்லாத்தையும் பார்த்திட்டான். உங்கப்பாவுக்கும் தெரியும். உங்க வீட்டுக்குத் தகவல் தெரிவிச்சிட்டாரு.
நீ இதையெல்லாம் வெட்டியா யோசிச்சது போதும். இப்போ உருப்படியா யோசிச்சு கொஞ்சம் படா (பெரிய) மனசு பண்ணி அவருக்குத் துணையா நில்லு போதும்.
ஏற்கெனவே நொந்து போயிருக்கும் மனுசனை மேலும் வருத்தப்பட வச்சு தொலைக்காதே. இப்ப எனக்கு மெசேஜ் பண்ணுறதை நிறுத்து. நான் ஆஃபீஸ்ல இருக்கேன். ரொம்ப முக்கியமான வேலை போயிட்டு இருக்கு.”
“Ttylbye!”
அப்புறம் பேசலாம் என்று சைந்தவியும் வினித்திற்கு ‘பை’ சொன்னாள். அவன் முக்கியமான வேலை போயிட்டு இருக்கு என்று சொன்னதும் புரிந்து கொண்டாள். மனிதாபிமானம் எட்டிப் பார்த்ததில், அப்பாவிற்காக இப்போதும் சப்போர்ட் பண்ணிப் பேசுகிறான் என்று அவனிடம் எகிறவில்லை.
காரைச் சற்றே வேகத்துடன் தான் அந்த ஓட்டுநர் செலுத்திக் கொண்டிருந்தான். ஒரே டீ பிரேக் எடுத்ததுடன் சரி. வேறு எங்கும் அவர்கள் காரை நிறுத்தவில்லை.
அவ்வளவு விரைந்த போதும் உபயோகமில்லாமல் போனது. முக்கால்வாசி தூரத்தைக் கடக்கும் போதே நேரம் ஐந்தரையைக் கடந்து இருந்தது.
வழக்கத்தை விடவும் நாற்பது நிமிடங்களுக்கு முன்னர் வந்தடைய இருந்தும், அவர்களுடைய ஊரான தர்மபுரி வரும் முன்னரே வானம் வேறு இருட்டிக் கொண்டு வந்தது. அவர்களைத் துரத்திக்கொண்டு வந்த மழை மேகங்கள் முந்திச் சென்று இறங்கி இருந்தன.
ஊருக்குள் நுழைய பத்துக் கிலோ மீட்டர் இருக்கும் போதே மழை பிடித்துக் கொண்டது. கொஞ்சம் நஞ்சமில்லை… சரசரவென இறங்கியது பின்னர் இடி முழக்கங்களுடன் அடித்துச் சாய்க்க முயன்றது.
“திடீர்னு இப்படிப் பிடிச்சிக்கிடுச்சே!”
ஓட்டுநர் வருத்தத்தை வெளியிட்டபடியே சாலையில் கவனமானான். இருட்டும் மழையும் எனச் சேர்ந்து பார்வைக்குப் பாதையை மங்கலாக்கி இருந்தன.
“பார்த்துப்பா… நீ சூதானமா ஓட்டு. இந்த மழைக்காக எத்தனை ஜனங்க காத்திட்டு இருந்தாங்களோ. பெய்யட்டும் பெய்யட்டும். எல்லாத்துக்கும் ஒரு நேரத்தைக் குறிச்சி வச்சிருக்கு. அது அது அப்ப தானே நடக்கும். நீயும் எங்களுக்காக இந்தளவு முயற்சி செஞ்சது ரொம்ப பெரிய விசயம்ப்பா.”
சரள்கண்ணன் ஓட்டுநரிடம் பேசியபடி தனக்கும் ஆறுதல் சொல்லிக் கொண்டார்.
சோவெனக் கொட்டும் மழையைக் கண்டதும், ‘இனி எந்த நேரம் போய் இறங்கினால் என்ன’ என்று நினைத்தவராக உட்கார்ந்திருந்தார்.
வெளியே சொல்லிவிட்டார் தான். அமைதியாகத் தன்னைக் காட்டிக்கொள்ள முயன்றாலும், அவரின் மனத்தில் துக்கத்தின் பந்தாட்டம்.
கூடைப்பந்து கூடைக்குள் விழுவது போலவே, துக்கப்பந்து உருண்டையும் மனச்சுவற்றில் முட்டி முட்டி கீழே இறங்கி உருண்டு, வயிற்றைக் கவ்வி பிடித்துக் கொண்டிருந்தது.
அப்பாவின் நிலையைக் கவனித்த சைந்தவி, எட்டி அவருடைய தோளில் கை வைத்து அழுத்தினாள். கண் மூடி அதனைக் கிரகித்தவர், திரும்பி மகளைப் பார்த்தார். அவருடைய கண்கள் கலங்கியிருந்தன.
அவளுக்கு, உள்ளுக்குள் வேதனை சுருண்டு வந்தது. ஆனால், அதனை அவரிடம் வார்த்தைகளாகப் பகிர்ந்து கொள்ளவில்லை. அவருக்கும் பேச்சில்லா மௌனம் ஆட்சி செய்த கணங்கள் ஆகினும், மகளின் செய்கையால் பொங்கி வந்தது. அவளின் கையின் அழுத்தம் பலம் தந்தது.
அப்படியே இருவரும் ஊர் போய்ச் சேர்ந்திருக்கலாம். ஆனால், அவரை வேறொரு கடமை அழைத்தது. மழை இன்னும் பெய்தாலும் வேகம் சற்றுத் தணிந்து இருந்தது. காருக்குள் நிலவிய அமைதியில் சரள்கண்ணன் நேரத்தைப் பார்க்க...
‘தாமினி… மினிக்குச் சொல்ல வேண்டும்.’ நினைத்தார்.
நினைத்த உடனேயே தன்னுடைய மொபைலை எடுத்துப் பார்த்தார். எப்போதும் எடுத்து வரும் இந்திய சிம் கார்ட்டைக் கொண்டு வரவில்லை என்கிற ஞாபகம் மீண்டும் வந்தது.
சென்னையிலேயே அதனைக் கவனித்து இருந்தார். விமானத்தைவிட்டு வெளியே வந்ததும், அங்கேயே விமான நிலையத்திலிருக்கும் பொதுத் தொலைபேசி வழியே தாமினியைக் கூப்பிட்டுப் பேசியிருந்தார்.
இப்போது நேரத்தைப் பார்த்தவருக்கு அவளுக்குக் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டால் நல்லது என்று பட்டது. இந்திய நேரத்தைவிட மலேசிய நேரம் இரண்டரை மணி நேரம் முன்னே நகர்கிறது.
“ப்ச் நீ வேற… ஏன்னு சொல்லு!”
“எதுக்கு இப்போ இந்தக் கேள்வி… இங்க திருப்பி வந்து அந்தப் பிளைட்டைப் பிடிக்கப் போறியா என்ன?”
“என்னன்னு கேட்டா பதிலை ஒழுங்கா சொல்லணும்! அதைவிட்டுட்டு… என்னாச்சு உனக்கு இந்த நேரத்தில் நக்கல் பண்ணிட்டு இருக்க?”
“உங்க அப்பாவை நீ ரிசீவ் பண்ண லட்சணத்தைப் பார்த்துட்டு வந்த கடுப்பு. வேறென்ன?”
“??????”
கண்ணை உருட்டிப் பார்க்கும் எமோஜிகளைத் தட்டிவிட்டாள்.
“நீ திருந்த மாட்டேயில்ல?”
அவன் கேட்டான்.
“??????”
அதற்கு அவளிடம் இருந்த வரிசைகட்டிக் கொண்டு இந்தத் தலைகீழ் ஸ்மைலிக்கள் பறந்தன.
“நான் தலைகீழா நின்னு பார்த்தாலும் மாட்டேன்ற? ரைட்டு! நான் இனி மேல் பேசுறதுக்கு ஒன்னுமில்லை. அந்தப் பிளைட் ஈவ்னிங் அஞ்சு மணிக்கப்புறம் தான் டைமிங். தெரியுமில்ல? அதுவும் போக இன்னைக்கு அதுவும் இல்லையாம். கேன்சல் பண்ணி வச்சிருக்காங்க.
உங்கப்பா வந்து இறங்க லேட்டாகும்னு தெரிஞ்சதும் அலெக்ஸ் வேற எதுவும் வழியிருக்கா சீக்கிரம் போகன்னு எல்லாத்தையும் பார்த்திட்டான். உங்கப்பாவுக்கும் தெரியும். உங்க வீட்டுக்குத் தகவல் தெரிவிச்சிட்டாரு.
நீ இதையெல்லாம் வெட்டியா யோசிச்சது போதும். இப்போ உருப்படியா யோசிச்சு கொஞ்சம் படா (பெரிய) மனசு பண்ணி அவருக்குத் துணையா நில்லு போதும்.
ஏற்கெனவே நொந்து போயிருக்கும் மனுசனை மேலும் வருத்தப்பட வச்சு தொலைக்காதே. இப்ப எனக்கு மெசேஜ் பண்ணுறதை நிறுத்து. நான் ஆஃபீஸ்ல இருக்கேன். ரொம்ப முக்கியமான வேலை போயிட்டு இருக்கு.”
“Ttylbye!”
அப்புறம் பேசலாம் என்று சைந்தவியும் வினித்திற்கு ‘பை’ சொன்னாள். அவன் முக்கியமான வேலை போயிட்டு இருக்கு என்று சொன்னதும் புரிந்து கொண்டாள். மனிதாபிமானம் எட்டிப் பார்த்ததில், அப்பாவிற்காக இப்போதும் சப்போர்ட் பண்ணிப் பேசுகிறான் என்று அவனிடம் எகிறவில்லை.
காரைச் சற்றே வேகத்துடன் தான் அந்த ஓட்டுநர் செலுத்திக் கொண்டிருந்தான். ஒரே டீ பிரேக் எடுத்ததுடன் சரி. வேறு எங்கும் அவர்கள் காரை நிறுத்தவில்லை.
அவ்வளவு விரைந்த போதும் உபயோகமில்லாமல் போனது. முக்கால்வாசி தூரத்தைக் கடக்கும் போதே நேரம் ஐந்தரையைக் கடந்து இருந்தது.
வழக்கத்தை விடவும் நாற்பது நிமிடங்களுக்கு முன்னர் வந்தடைய இருந்தும், அவர்களுடைய ஊரான தர்மபுரி வரும் முன்னரே வானம் வேறு இருட்டிக் கொண்டு வந்தது. அவர்களைத் துரத்திக்கொண்டு வந்த மழை மேகங்கள் முந்திச் சென்று இறங்கி இருந்தன.
ஊருக்குள் நுழைய பத்துக் கிலோ மீட்டர் இருக்கும் போதே மழை பிடித்துக் கொண்டது. கொஞ்சம் நஞ்சமில்லை… சரசரவென இறங்கியது பின்னர் இடி முழக்கங்களுடன் அடித்துச் சாய்க்க முயன்றது.
“திடீர்னு இப்படிப் பிடிச்சிக்கிடுச்சே!”
ஓட்டுநர் வருத்தத்தை வெளியிட்டபடியே சாலையில் கவனமானான். இருட்டும் மழையும் எனச் சேர்ந்து பார்வைக்குப் பாதையை மங்கலாக்கி இருந்தன.
“பார்த்துப்பா… நீ சூதானமா ஓட்டு. இந்த மழைக்காக எத்தனை ஜனங்க காத்திட்டு இருந்தாங்களோ. பெய்யட்டும் பெய்யட்டும். எல்லாத்துக்கும் ஒரு நேரத்தைக் குறிச்சி வச்சிருக்கு. அது அது அப்ப தானே நடக்கும். நீயும் எங்களுக்காக இந்தளவு முயற்சி செஞ்சது ரொம்ப பெரிய விசயம்ப்பா.”
சரள்கண்ணன் ஓட்டுநரிடம் பேசியபடி தனக்கும் ஆறுதல் சொல்லிக் கொண்டார்.
சோவெனக் கொட்டும் மழையைக் கண்டதும், ‘இனி எந்த நேரம் போய் இறங்கினால் என்ன’ என்று நினைத்தவராக உட்கார்ந்திருந்தார்.
வெளியே சொல்லிவிட்டார் தான். அமைதியாகத் தன்னைக் காட்டிக்கொள்ள முயன்றாலும், அவரின் மனத்தில் துக்கத்தின் பந்தாட்டம்.
கூடைப்பந்து கூடைக்குள் விழுவது போலவே, துக்கப்பந்து உருண்டையும் மனச்சுவற்றில் முட்டி முட்டி கீழே இறங்கி உருண்டு, வயிற்றைக் கவ்வி பிடித்துக் கொண்டிருந்தது.
அப்பாவின் நிலையைக் கவனித்த சைந்தவி, எட்டி அவருடைய தோளில் கை வைத்து அழுத்தினாள். கண் மூடி அதனைக் கிரகித்தவர், திரும்பி மகளைப் பார்த்தார். அவருடைய கண்கள் கலங்கியிருந்தன.
அவளுக்கு, உள்ளுக்குள் வேதனை சுருண்டு வந்தது. ஆனால், அதனை அவரிடம் வார்த்தைகளாகப் பகிர்ந்து கொள்ளவில்லை. அவருக்கும் பேச்சில்லா மௌனம் ஆட்சி செய்த கணங்கள் ஆகினும், மகளின் செய்கையால் பொங்கி வந்தது. அவளின் கையின் அழுத்தம் பலம் தந்தது.
அப்படியே இருவரும் ஊர் போய்ச் சேர்ந்திருக்கலாம். ஆனால், அவரை வேறொரு கடமை அழைத்தது. மழை இன்னும் பெய்தாலும் வேகம் சற்றுத் தணிந்து இருந்தது. காருக்குள் நிலவிய அமைதியில் சரள்கண்ணன் நேரத்தைப் பார்க்க...
‘தாமினி… மினிக்குச் சொல்ல வேண்டும்.’ நினைத்தார்.
நினைத்த உடனேயே தன்னுடைய மொபைலை எடுத்துப் பார்த்தார். எப்போதும் எடுத்து வரும் இந்திய சிம் கார்ட்டைக் கொண்டு வரவில்லை என்கிற ஞாபகம் மீண்டும் வந்தது.
சென்னையிலேயே அதனைக் கவனித்து இருந்தார். விமானத்தைவிட்டு வெளியே வந்ததும், அங்கேயே விமான நிலையத்திலிருக்கும் பொதுத் தொலைபேசி வழியே தாமினியைக் கூப்பிட்டுப் பேசியிருந்தார்.
இப்போது நேரத்தைப் பார்த்தவருக்கு அவளுக்குக் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டால் நல்லது என்று பட்டது. இந்திய நேரத்தைவிட மலேசிய நேரம் இரண்டரை மணி நேரம் முன்னே நகர்கிறது.