விழிகளிலே ஒரு கவிதை 10
நட்சத்திரா வேறு வழியின்றி கடனே என்று கிளம்பிக் கொண்டிருந்தாள். சூர்யா நட்ச்ததிராவிடன் ஆபீஸில் ஒன்றாக இருக்கப் போவதை நினைத்து குஷியாகி விட்டான்.
"நட்சத்திரா, சீக்கிரம் கிளம்பு..." என அவளை பாடாய் படுத்திக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்கமுடியாமல் நட்சத்திரா, "டேய்! இப்படியே தொல்ல பண்ணிட்டு இருந்த என்ன நடந்தாலும் பரவாயில்லைன்னு நான் வராமல் இருந்துடுவேன்" என்றாள். சூர்யா உடனே அமைதியாகி விட்டான்.
நட்சத்திரா உடுத்துவதற்கு எந்த சேலையை எடுப்பது என யோசித்துக் கொண்டிருக்க, சூர்யா, "இதை கட்டு..." என ஒரு சேலையை எடுத்து கொடுத்தான்.
நட்சத்திரா அவனை கேள்வியாக பார்த்தாள். சூர்யா, "என் ட்ரெஸூக்கு மேட்சா இருக்கும்" என்றான்.
நட்சத்திரா, "ஓ.. அப்படியா?" என்று அதை வாங்கியவள் பெட்டில் தூக்கிப்போட்டுவிட்டு, "எதை வேணா போடுவேன். ஆனால் இதை போட மாட்டேன்" என்றாள்.
இதை கேட்டதும் சூர்யாவின் முகம் வாடியது எல்லாம் ஒரு நொடிதான். மறுநிமிடமே தன்னை சமன்படுத்தி கொண்டவன், "நோ ப்ராப்ளம் டார்லிங். நீ போடுற ட்ரெஸ்க்கு மேட்சா நான் மாத்திக்கிறேன்" என்றான் கைகளை விரித்து.....
அவன் பதிலில் நட்சத்திரா ஒரு நிமிடம் ஆச்சரியப்பட்டுப் போனாள். 'என்ன பண்ணுனாலும் கோபப்பட மாட்டுறானே! இவன கடுப்பாகி இவனே விட்டுட்டுப் போக வைக்கணும்' என நினைத்தவள், அவனை முறைத்து விட்டு வேறு உடை எடுத்து குளிக்கச் சென்றாள்.
அவள் வேண்டுமென்றே அரை மணி நேரம் குளித்தாள். அவள் குளித்து வர சூர்யா கடுப்பாகி இருப்பான் என நினைக்க அவனும் ஆசுவாசமாக உக்கார்ந்து கொண்டு, "என்ன டார்லிங், சீக்கிரமா வந்துட்ட.... இன்னும் டைம் இருக்கு. மெதுவா குளிச்சிட்டு வர வேண்டியதுதானே!" என்றான்.
நட்சத்திரா, 'சரியான ரோசம் கெட்டவனா இருப்பான் போல' என மனதிற்குள் திட்ட, சூர்யா, "ஆமா..." என்றான்.
நட்சத்திரா, "என்ன ஆமா?" என கேட்க,
சூர்யா, "அதான் மனசுக்குள்ள நினைச்சியை.... நான் ரோஷன் கெட்டவன்னு... அதான் ஆமான்னு சொல்றேன்" என்றான்.
நட்சத்திரா, 'அடப்பாவி! மனசுல நினைக்கிறது கூட கண்டுபிடிச்சுடுறானே! என நினைத்து பார்க்க,
சூர்யா, "ஆமா, நான் ரோஷன் கெட்டவன் தான், உன் விஷயத்தில் மட்டும் எனக்கு காதலை தவிர வேற எதுவுமே கிடையாது" என்றான் அவளை ஆழ்ந்து பார்த்த படி. அவன் பார்வையை தாங்க முடியாதவள் தன் முகத்தை திருப்பி கொண்டாள்.
'எப்போ பார்த்தாலும் ஏதாவது டயலாக் பேசியே ஆஃப் பண்ணிடுறான்' என திட்டியவள் மனதில், 'ஆமா நானும் எத்தனை வருஷமா இவன் பின்னாடி சுத்துனேன். ஆனால் ஒரு தடவை கூட இப்படி பேசினது இல்லையே!' என தோன்ற அதை அவனிடமே கேட்டு விட்டாள்.
அவள் கேள்வியை கேட்டு சிரித்தவன், "ஆங்... உனக்கு தெரியாம ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் வச்சிருக்கேன். அவ என்கிட்ட பேசற டயலாக் எல்லாம் மாறாம அப்படியே உன்கிட்ட சொல்லிட்டு இருக்கேன்" என்று கூறி கண்ணடித்தான்.
நட்சத்திரா, "சீ... காமெடி பண்ணாத! உனக்கு நானே ஓவரு... இதுல வேற ஒரு பொண்ணா? உனக்கு அவ்ளோ எல்லாம் டேலன்ட் இல்ல" என்றாள்.
சூர்யா, "என்னடி படக்குனு இப்படி சொல்லிட்ட... நான் கண்ணசைச்சா என் பின்னாடி எத்தனை பேர் வருவாங்கன்னு தெரியுமா?" என்றான் காலரை தூக்கியபடி.
நட்சத்திரா, "யாரு நம்ம ஆபீஸ் ஸ்டாப்ஃபா?" என்றாள்.
சூர்யா, "ஏன்டி மறுபடியும் மறுபடியும் என் இமேஜை டேமேஜ் பண்ற.... இதுக்காகவே ஒரு பொண்ண கரெக்ட் பண்றேன்" என்க,
நட்சத்திரா, "நீ மறுபடியும் மறுபடியும் காமெடி பண்ணாத. உன் பின்னாடி இத்தனை வருஷமா சுத்துனா என்னையே உன்னால கரெக்ட் பண்ண முடியலை. மூஞ்சியை இஞ்சி தின்ன குரங்கு மாதிரி வச்சிருந்தா யாரும் உன்னை திரும்பி பார்க்க மாட்டாங்க" என்றாள்.
சூர்யா, "அடியே! அது பார்ட் 1லடி இது பார்ட் 2 டி... இப்போ ஐயா லெவலே வேற... நான் காதல் மன்னனாகிட்டேன்... தெரியுமா?" என்றான்.
நட்சத்திரா, "இந்த வெத்து வேட்டு சீன் எல்லாம் போடாத.... தள்ளிப் போ நான் ரெடி ஆகணும்" என்க,
சூர்யா, "நானும் ஒரு பொண்ணை கூடிய சீக்கிரமே கரெக்ட் பண்ணி காட்டுகிறேன். அப்போ நீயே ஒத்துக்குவ.." என்றான்.
நட்சத்திரா அவன் கூறுவதை கவனிக்காமல் ரெடியாகினாள்.சூர்யா, நட்சத்திரா சேலைக்கு மேட்ச்சாக ஒரு சட்டையை அணிந்து வந்து, "டார்லிங், எப்படி இருக்கு?" என கேட்டான்.
நட்சத்திரா 'ஒரு பேச்சுக்கு சொன்னான்னு என்று நினைச்சா உண்மைக்கே மாத்திட்டு வந்து நிக்குறான்' என நினைத்து அவனைப் பார்த்த சூர்யா, "டார்லிங், கேள்வி கேட்டா பதில் சொல்லாமல் எவ்வளவு நேரம் என்னைவே சைட் அடிப்ப?" என்றான்.
நட்சத்திரா, "சைட் அடிக்கிற அளவுக்கு எல்லாம் நீ வொர்த் இல்ல" என்று உதட்டை சுழிக்க,
சூர்யா, "காலேஜ் படிக்கும் போது யாரோ என்ன முழுங்குற மாதிரி சைட் அடிச்சுகிட்டே இருப்பாங்க..." என்றான்.
நட்சத்திரா, "அது புத்தி இல்லாம பண்ணிட்டேன். இப்போதான் எனக்கு புத்தி வந்து இருக்கு..." என்று கூறி வெளியே சென்றாள். சூர்யா சிரித்துக் கொண்டே அவள் பின்னாடி சென்றான்.
அவர்கள் கீழே இறங்கி வர ஷீலா, "இவ்வளவு நேரமா கிளம்பிட்டு இருக்கீங்க..... சீக்கிரம் கிளம்ப வேண்டாமா?" எனக் கேட்க,
சூர்யா குடும்பமே கிளம்பி நிற்பதை பார்த்து விட்டு, "நீங்க எல்லாரும் எங்க கிளம்பிட்டீங்க? நாங்க ரெண்டு பேரும் மட்டும் தான் ஆபிசுக்கு கிளம்பிட்டு இருக்கோம்..." என்றான்.
ஷீலா, "என்னது ஆபீஸா? இன்னைக்கு மேக்னா நிச்சயதார்த்தத்திற்கு புடவை எடுக்க போறோம். நீ ஆபீஸ் எல்லாம் ஒன்னும் போக வேண்டாம். எங்க கூட வா..." என்றார்.
சூர்யா அதிர்ச்சியாகி, "நாளைக்கு தானே போறதா ப்ளான் இருந்துச்சு.." என்றான்.
ஷீலா, "ஆமாடா! ஆனால் காலையிலதான் ஜெயராஜ் அண்ணா கால் பண்ணி இன்னைக்கு நல்ல நாளா இருக்கு... இன்னைக்கே போகலாம்னு என்று சொல்லிட்டாரு..." என்றார்.
இதைக் கேட்ட சூர்யா மைண்ட் வாய்ஸில் 'சூர்யா, எல்லோரும் உனக்கு எதிராக சதி பண்றாங்க. இந்த தடவை விட்றாதடா..' என சொல்லிக் கொண்டவன், "அம்மா, என்னம்மா... இப்போ வந்து கடைசி நேரத்தில் சொல்றீங்க.... எனக்கு ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு" என்றான்.
ஷீலா, "ரொம்ப முக்கியமான மீட்டிங்கா?" என கேட்க,
சூர்யா, 'ஆஹா! நம்ம பிளான் ஒர்க்வுட் ஆகிருச்சு... இப்படியே இதைப் புடிச்சு ஆபீஸ் போயிடணும்' என நினைத்தவன், முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு, "ஆமாம்மா.... ரொம்ப முக்கியமான மீட்டிங் இருக்கு. ஃபாரின் கிளையண்ட்ஸ் எல்லாம் வராங்க... அவங்கள போய் நான் ரிசீவ் பண்ணலைனாஅவங்க நம்ம நாட்டை பத்தி என்ன நினைப்பாங்க?" என்றான்.
கிஷோர் 'அது யாருடா நமக்குத் தெரியாம பாரின் கிளையண்ட்ஸ்' என நினைத்தான்.
ஷீலா சில வினாடிகள் யோசித்துவிட்டு, "சரிடா... அப்ப நீ மட்டும் போயிட்டுவா. நாங்க நட்சத்திராவை மட்டும் கூட்டிட்டு போறோம்" என்று அவன் தலையில் இடியை இறக்கினார்.
சூர்யா 'என்ன இப்படி முதலுக்கே மோசம் ஆயிடுச்சே!' என நினைத்தவன், "அம்மா, அவளும் என் கூட வரட்டும்..." என்றான்.
ஷீலா, "அவ எதுக்கு? உனக்கு தான மீட்டிங்..?" என கேட்க,
நட்சத்திரா, "ஆமா, நான் அத்தை கூடவே போறேன். நீங்க பாரின் கிளையண்ட்ஸை ரிசீவ் பண்ணுங்க..." என்றாள்.
சூர்யா 'வேற வழி இல்ல சரண்டர் ஆகி விட வேண்டியதுதான்' என நினைத்தவன், "சரிம்மா.. நீங்க இவ்வளவு தூரம் கேட்கிறதுனால நானும் உங்க கூட வரேன்" என்றான்.
ஷீலா, "நீ இவ்வளவு பீல் பண்ணி எல்லாம் வரத்தேவையில்லை. நாங்களே போய்க்கிறோம்" என்றார்.
சூர்யா, "இல்லமா... நான் இல்லாம நீங்க எப்படி போக முடியும்? எனக் கேட்க,
ஷீலா, "நீதான் ரொம்ப ரொம்ப முக்கியமான மீட்டிங்... ஃபாரின் கிளையண்ட்ஸ் எல்லாம் வேற வராங்கன்னு சொன்ன... அதனால நீ போய் அவங்களை ரிசீவ் பண்ணு. இல்லைனா அவங்க நம்ம நாட்டைப் பத்தி எதாவது தப்பா நினைச்சிடப் போறாங்க" என்றார்.
சூர்யா, "எனக்கு ஃபாரின் கிளையண்ட்ஸை விட என் குடும்பம் தான் முக்கியம்" என்று வீரவசனம் பேச ஷீலா, "இல்லடா, நீ ஆபிஸ பார்த்தாதான் சம்பாதிச்சு உனக்கு பிடிச்ச உன் குடும்பத்தை நல்லா பாத்துக்க முடியும். சோ நீ ஆபீசுக்கே போ..." என்றவர் மற்றவர்களிடம், "வாங்க நாமெல்லாம் கிளம்பலாம்.." என்றார்.
சூர்யா முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு நிற்க நட்சத்திரா அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே அவர்களோடு சென்றாள்.
சூர்யா, 'ம்கூம்... விடமாட்டேன். இனி அந்த விதியே சதி பண்ணினாலும் நான் ஜெயிக்காம விடமாட்டேன்' என நினைத்தவன் அவர்களுக்கு முன்னாடி அந்த துணிக்கடைக்கு போகணும் என்று வேகமாக கிளம்பினான். போகும் வழியிலே விஜய்க்கு கால் செய்தான்.
விஜய் அன்னைக்கு மாதிரி ஒன்னும் எதாவது ஆகாத வேலைக்கு என் உயிரை வாங்குவானே! என நினைத்துக்கொண்டு காலை அட்டன்ட் செய்தான்.
சூர்யா, "மச்சான், எங்க இருக்க? ஒரு அவசரம்" என்க,
விஜய் 'இந்த தடவையும் உன்கிட்ட ஏமாற நாம் முட்டாள் இல்லை' என நினைத்தவன், "இல்லடா மச்சான், நான் ஒரு முக்கியமான விஷயமா கோவாவுக்கு வந்திருக்கேன்" என்றான்.
சூர்யா, "ஓ... அப்படியா? சரி நான் விபிஷாகிட்ட வேற யாராவது மீட்டிங் அட்டென்ட் பண்ண சொல்லிடுகிறேன்" என்றான்.
விஜய் விபிஷா பெயரைக் கேட்டதும் துள்ளிக்குதித்து, "என்னடா சொல்ற..?" என்றான்.
சூர்யா, "அதான் உன்னால வர முடியாதுன்னு சொல்லிட்டல... உனக்கு எதுக்கு கஷ்டம்டா. நான் வேற யாருக்காவது இன்ஃபார்ம் பண்றேன்" என்றான்.
விஜய், "என்னடா மச்சான், உயிர் நண்பன் நான் இருக்கும் போது நீ வேற யார்கிட்டயும் உதவி கேட்க போற..." என்க,
சூர்யா, "டேய், அதான் நீங்க இல்லையே! கோவால இருக்கன்னு சொல்ற... அப்போ எனக்கு எப்படி உதவி பண்ண முடியும்?" என்றான்.
விஜய், "மச்சான், உன் காதுல அப்படியா விழுந்துச்சு.... உன் காதுல தப்பா விழுந்துருக்குடா... நான் வீட்ல உட்கார்ந்து பால்கோவா சாப்பிட்டுட்டு இருக்கேன்."
சூர்யா, 'வாடா மகனே! என்கிட்டயே பொய் சொல்றியா?' என நினைத்தவன், "இல்லடா, நீ கோவால இருக்கேன்னு சொன்ன மாதிரிதான் கேட்டுச்சு..." என்றான்.
விஜய், "டேய்! நான் சொன்னா நீ நம்ப மாட்டியா? இன்னும் பத்து நிமிஷத்துல நான் உன் ஆபீஸ்ல இருப்பேன்" என்றான்.
'அப்பாடா! அடிமை தானா வந்து தலையை நீட்டுது' என நினைத்தவன், "சரிடா... நீ சொன்ன பொய்யை நான் நம்பிட்டேன். இப்போ நீ ஆபீசுக்கு போ. . அங்க விகே கம்பெனியோட ஒரு மீட்டிங் இருக்கு. விபிஷாகிட்ட டீடெயில்ஸும் கேட்டுட்டு அதை அட்டென்ட் பண்ணிடு" என்றான்.
விஜய், "மச்சி, நீ கவலைப்படாதடா... நல்லபடியாக முடிச்சுடுவேன்" என்று காலை கட் செய்தான்.
சூர்யா அவர்களுக்கு முன்னாடி அந்த டெக்ஸ்டைல்ஸை அடைந்தான். நட்சத்திரா 'அப்பாடா! அவன் தொல்லை ஒழிந்தது' என மகிழ்ச்சியாக சென்றாள். கிஷோர் வந்த கார் வர, சூர்யா அவர்களைப் பார்த்து விட்டு, ஒரு சட்டையை பார்ப்பது போல் திரும்பி நின்று கொண்டான்.
ஆனால் கிஷோர் உள்ளே நுழைந்ததும் சூர்யாவை பார்த்து விட்டான். கிஷோர், "சூர்யா..." என்று அழைக்க, மொத்த குடும்பமும் சூர்யாவை தான் பார்த்தனர்.
கிஷோர், "டேய்! நீ இங்க என்ன பண்ற?" எனக் கேட்க, சூர்யா என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழித்தான்.
கவிதைகள் தொடரும்....
மக்களே! தாமதமான பதிவுக்கு மன்னிக்கவும். எனக்கு எழுத வரலைன்னு சொல்லிதான் நான் லேட்டா யூடி போடுறேன். சோ நல்லா என்னை என்கரேஜ் பண்ணுங்க... நல்லா கமெண்ட் பண்ணுங்க. முடிஞ்சா நாளைக்கு ஒரு யூடி தர ட்ரை பண்றேன்...




நட்சத்திரா வேறு வழியின்றி கடனே என்று கிளம்பிக் கொண்டிருந்தாள். சூர்யா நட்ச்ததிராவிடன் ஆபீஸில் ஒன்றாக இருக்கப் போவதை நினைத்து குஷியாகி விட்டான்.
"நட்சத்திரா, சீக்கிரம் கிளம்பு..." என அவளை பாடாய் படுத்திக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்கமுடியாமல் நட்சத்திரா, "டேய்! இப்படியே தொல்ல பண்ணிட்டு இருந்த என்ன நடந்தாலும் பரவாயில்லைன்னு நான் வராமல் இருந்துடுவேன்" என்றாள். சூர்யா உடனே அமைதியாகி விட்டான்.
நட்சத்திரா உடுத்துவதற்கு எந்த சேலையை எடுப்பது என யோசித்துக் கொண்டிருக்க, சூர்யா, "இதை கட்டு..." என ஒரு சேலையை எடுத்து கொடுத்தான்.
நட்சத்திரா அவனை கேள்வியாக பார்த்தாள். சூர்யா, "என் ட்ரெஸூக்கு மேட்சா இருக்கும்" என்றான்.
நட்சத்திரா, "ஓ.. அப்படியா?" என்று அதை வாங்கியவள் பெட்டில் தூக்கிப்போட்டுவிட்டு, "எதை வேணா போடுவேன். ஆனால் இதை போட மாட்டேன்" என்றாள்.
இதை கேட்டதும் சூர்யாவின் முகம் வாடியது எல்லாம் ஒரு நொடிதான். மறுநிமிடமே தன்னை சமன்படுத்தி கொண்டவன், "நோ ப்ராப்ளம் டார்லிங். நீ போடுற ட்ரெஸ்க்கு மேட்சா நான் மாத்திக்கிறேன்" என்றான் கைகளை விரித்து.....
அவன் பதிலில் நட்சத்திரா ஒரு நிமிடம் ஆச்சரியப்பட்டுப் போனாள். 'என்ன பண்ணுனாலும் கோபப்பட மாட்டுறானே! இவன கடுப்பாகி இவனே விட்டுட்டுப் போக வைக்கணும்' என நினைத்தவள், அவனை முறைத்து விட்டு வேறு உடை எடுத்து குளிக்கச் சென்றாள்.
அவள் வேண்டுமென்றே அரை மணி நேரம் குளித்தாள். அவள் குளித்து வர சூர்யா கடுப்பாகி இருப்பான் என நினைக்க அவனும் ஆசுவாசமாக உக்கார்ந்து கொண்டு, "என்ன டார்லிங், சீக்கிரமா வந்துட்ட.... இன்னும் டைம் இருக்கு. மெதுவா குளிச்சிட்டு வர வேண்டியதுதானே!" என்றான்.
நட்சத்திரா, 'சரியான ரோசம் கெட்டவனா இருப்பான் போல' என மனதிற்குள் திட்ட, சூர்யா, "ஆமா..." என்றான்.
நட்சத்திரா, "என்ன ஆமா?" என கேட்க,
சூர்யா, "அதான் மனசுக்குள்ள நினைச்சியை.... நான் ரோஷன் கெட்டவன்னு... அதான் ஆமான்னு சொல்றேன்" என்றான்.
நட்சத்திரா, 'அடப்பாவி! மனசுல நினைக்கிறது கூட கண்டுபிடிச்சுடுறானே! என நினைத்து பார்க்க,
சூர்யா, "ஆமா, நான் ரோஷன் கெட்டவன் தான், உன் விஷயத்தில் மட்டும் எனக்கு காதலை தவிர வேற எதுவுமே கிடையாது" என்றான் அவளை ஆழ்ந்து பார்த்த படி. அவன் பார்வையை தாங்க முடியாதவள் தன் முகத்தை திருப்பி கொண்டாள்.
'எப்போ பார்த்தாலும் ஏதாவது டயலாக் பேசியே ஆஃப் பண்ணிடுறான்' என திட்டியவள் மனதில், 'ஆமா நானும் எத்தனை வருஷமா இவன் பின்னாடி சுத்துனேன். ஆனால் ஒரு தடவை கூட இப்படி பேசினது இல்லையே!' என தோன்ற அதை அவனிடமே கேட்டு விட்டாள்.
அவள் கேள்வியை கேட்டு சிரித்தவன், "ஆங்... உனக்கு தெரியாம ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் வச்சிருக்கேன். அவ என்கிட்ட பேசற டயலாக் எல்லாம் மாறாம அப்படியே உன்கிட்ட சொல்லிட்டு இருக்கேன்" என்று கூறி கண்ணடித்தான்.
நட்சத்திரா, "சீ... காமெடி பண்ணாத! உனக்கு நானே ஓவரு... இதுல வேற ஒரு பொண்ணா? உனக்கு அவ்ளோ எல்லாம் டேலன்ட் இல்ல" என்றாள்.
சூர்யா, "என்னடி படக்குனு இப்படி சொல்லிட்ட... நான் கண்ணசைச்சா என் பின்னாடி எத்தனை பேர் வருவாங்கன்னு தெரியுமா?" என்றான் காலரை தூக்கியபடி.
நட்சத்திரா, "யாரு நம்ம ஆபீஸ் ஸ்டாப்ஃபா?" என்றாள்.
சூர்யா, "ஏன்டி மறுபடியும் மறுபடியும் என் இமேஜை டேமேஜ் பண்ற.... இதுக்காகவே ஒரு பொண்ண கரெக்ட் பண்றேன்" என்க,
நட்சத்திரா, "நீ மறுபடியும் மறுபடியும் காமெடி பண்ணாத. உன் பின்னாடி இத்தனை வருஷமா சுத்துனா என்னையே உன்னால கரெக்ட் பண்ண முடியலை. மூஞ்சியை இஞ்சி தின்ன குரங்கு மாதிரி வச்சிருந்தா யாரும் உன்னை திரும்பி பார்க்க மாட்டாங்க" என்றாள்.
சூர்யா, "அடியே! அது பார்ட் 1லடி இது பார்ட் 2 டி... இப்போ ஐயா லெவலே வேற... நான் காதல் மன்னனாகிட்டேன்... தெரியுமா?" என்றான்.
நட்சத்திரா, "இந்த வெத்து வேட்டு சீன் எல்லாம் போடாத.... தள்ளிப் போ நான் ரெடி ஆகணும்" என்க,
சூர்யா, "நானும் ஒரு பொண்ணை கூடிய சீக்கிரமே கரெக்ட் பண்ணி காட்டுகிறேன். அப்போ நீயே ஒத்துக்குவ.." என்றான்.
நட்சத்திரா அவன் கூறுவதை கவனிக்காமல் ரெடியாகினாள்.சூர்யா, நட்சத்திரா சேலைக்கு மேட்ச்சாக ஒரு சட்டையை அணிந்து வந்து, "டார்லிங், எப்படி இருக்கு?" என கேட்டான்.
நட்சத்திரா 'ஒரு பேச்சுக்கு சொன்னான்னு என்று நினைச்சா உண்மைக்கே மாத்திட்டு வந்து நிக்குறான்' என நினைத்து அவனைப் பார்த்த சூர்யா, "டார்லிங், கேள்வி கேட்டா பதில் சொல்லாமல் எவ்வளவு நேரம் என்னைவே சைட் அடிப்ப?" என்றான்.
நட்சத்திரா, "சைட் அடிக்கிற அளவுக்கு எல்லாம் நீ வொர்த் இல்ல" என்று உதட்டை சுழிக்க,
சூர்யா, "காலேஜ் படிக்கும் போது யாரோ என்ன முழுங்குற மாதிரி சைட் அடிச்சுகிட்டே இருப்பாங்க..." என்றான்.
நட்சத்திரா, "அது புத்தி இல்லாம பண்ணிட்டேன். இப்போதான் எனக்கு புத்தி வந்து இருக்கு..." என்று கூறி வெளியே சென்றாள். சூர்யா சிரித்துக் கொண்டே அவள் பின்னாடி சென்றான்.
அவர்கள் கீழே இறங்கி வர ஷீலா, "இவ்வளவு நேரமா கிளம்பிட்டு இருக்கீங்க..... சீக்கிரம் கிளம்ப வேண்டாமா?" எனக் கேட்க,
சூர்யா குடும்பமே கிளம்பி நிற்பதை பார்த்து விட்டு, "நீங்க எல்லாரும் எங்க கிளம்பிட்டீங்க? நாங்க ரெண்டு பேரும் மட்டும் தான் ஆபிசுக்கு கிளம்பிட்டு இருக்கோம்..." என்றான்.
ஷீலா, "என்னது ஆபீஸா? இன்னைக்கு மேக்னா நிச்சயதார்த்தத்திற்கு புடவை எடுக்க போறோம். நீ ஆபீஸ் எல்லாம் ஒன்னும் போக வேண்டாம். எங்க கூட வா..." என்றார்.
சூர்யா அதிர்ச்சியாகி, "நாளைக்கு தானே போறதா ப்ளான் இருந்துச்சு.." என்றான்.
ஷீலா, "ஆமாடா! ஆனால் காலையிலதான் ஜெயராஜ் அண்ணா கால் பண்ணி இன்னைக்கு நல்ல நாளா இருக்கு... இன்னைக்கே போகலாம்னு என்று சொல்லிட்டாரு..." என்றார்.
இதைக் கேட்ட சூர்யா மைண்ட் வாய்ஸில் 'சூர்யா, எல்லோரும் உனக்கு எதிராக சதி பண்றாங்க. இந்த தடவை விட்றாதடா..' என சொல்லிக் கொண்டவன், "அம்மா, என்னம்மா... இப்போ வந்து கடைசி நேரத்தில் சொல்றீங்க.... எனக்கு ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு" என்றான்.
ஷீலா, "ரொம்ப முக்கியமான மீட்டிங்கா?" என கேட்க,
சூர்யா, 'ஆஹா! நம்ம பிளான் ஒர்க்வுட் ஆகிருச்சு... இப்படியே இதைப் புடிச்சு ஆபீஸ் போயிடணும்' என நினைத்தவன், முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு, "ஆமாம்மா.... ரொம்ப முக்கியமான மீட்டிங் இருக்கு. ஃபாரின் கிளையண்ட்ஸ் எல்லாம் வராங்க... அவங்கள போய் நான் ரிசீவ் பண்ணலைனாஅவங்க நம்ம நாட்டை பத்தி என்ன நினைப்பாங்க?" என்றான்.
கிஷோர் 'அது யாருடா நமக்குத் தெரியாம பாரின் கிளையண்ட்ஸ்' என நினைத்தான்.
ஷீலா சில வினாடிகள் யோசித்துவிட்டு, "சரிடா... அப்ப நீ மட்டும் போயிட்டுவா. நாங்க நட்சத்திராவை மட்டும் கூட்டிட்டு போறோம்" என்று அவன் தலையில் இடியை இறக்கினார்.
சூர்யா 'என்ன இப்படி முதலுக்கே மோசம் ஆயிடுச்சே!' என நினைத்தவன், "அம்மா, அவளும் என் கூட வரட்டும்..." என்றான்.
ஷீலா, "அவ எதுக்கு? உனக்கு தான மீட்டிங்..?" என கேட்க,
நட்சத்திரா, "ஆமா, நான் அத்தை கூடவே போறேன். நீங்க பாரின் கிளையண்ட்ஸை ரிசீவ் பண்ணுங்க..." என்றாள்.
சூர்யா 'வேற வழி இல்ல சரண்டர் ஆகி விட வேண்டியதுதான்' என நினைத்தவன், "சரிம்மா.. நீங்க இவ்வளவு தூரம் கேட்கிறதுனால நானும் உங்க கூட வரேன்" என்றான்.
ஷீலா, "நீ இவ்வளவு பீல் பண்ணி எல்லாம் வரத்தேவையில்லை. நாங்களே போய்க்கிறோம்" என்றார்.
சூர்யா, "இல்லமா... நான் இல்லாம நீங்க எப்படி போக முடியும்? எனக் கேட்க,
ஷீலா, "நீதான் ரொம்ப ரொம்ப முக்கியமான மீட்டிங்... ஃபாரின் கிளையண்ட்ஸ் எல்லாம் வேற வராங்கன்னு சொன்ன... அதனால நீ போய் அவங்களை ரிசீவ் பண்ணு. இல்லைனா அவங்க நம்ம நாட்டைப் பத்தி எதாவது தப்பா நினைச்சிடப் போறாங்க" என்றார்.
சூர்யா, "எனக்கு ஃபாரின் கிளையண்ட்ஸை விட என் குடும்பம் தான் முக்கியம்" என்று வீரவசனம் பேச ஷீலா, "இல்லடா, நீ ஆபிஸ பார்த்தாதான் சம்பாதிச்சு உனக்கு பிடிச்ச உன் குடும்பத்தை நல்லா பாத்துக்க முடியும். சோ நீ ஆபீசுக்கே போ..." என்றவர் மற்றவர்களிடம், "வாங்க நாமெல்லாம் கிளம்பலாம்.." என்றார்.
சூர்யா முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு நிற்க நட்சத்திரா அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே அவர்களோடு சென்றாள்.
சூர்யா, 'ம்கூம்... விடமாட்டேன். இனி அந்த விதியே சதி பண்ணினாலும் நான் ஜெயிக்காம விடமாட்டேன்' என நினைத்தவன் அவர்களுக்கு முன்னாடி அந்த துணிக்கடைக்கு போகணும் என்று வேகமாக கிளம்பினான். போகும் வழியிலே விஜய்க்கு கால் செய்தான்.
விஜய் அன்னைக்கு மாதிரி ஒன்னும் எதாவது ஆகாத வேலைக்கு என் உயிரை வாங்குவானே! என நினைத்துக்கொண்டு காலை அட்டன்ட் செய்தான்.
சூர்யா, "மச்சான், எங்க இருக்க? ஒரு அவசரம்" என்க,
விஜய் 'இந்த தடவையும் உன்கிட்ட ஏமாற நாம் முட்டாள் இல்லை' என நினைத்தவன், "இல்லடா மச்சான், நான் ஒரு முக்கியமான விஷயமா கோவாவுக்கு வந்திருக்கேன்" என்றான்.
சூர்யா, "ஓ... அப்படியா? சரி நான் விபிஷாகிட்ட வேற யாராவது மீட்டிங் அட்டென்ட் பண்ண சொல்லிடுகிறேன்" என்றான்.
விஜய் விபிஷா பெயரைக் கேட்டதும் துள்ளிக்குதித்து, "என்னடா சொல்ற..?" என்றான்.
சூர்யா, "அதான் உன்னால வர முடியாதுன்னு சொல்லிட்டல... உனக்கு எதுக்கு கஷ்டம்டா. நான் வேற யாருக்காவது இன்ஃபார்ம் பண்றேன்" என்றான்.
விஜய், "என்னடா மச்சான், உயிர் நண்பன் நான் இருக்கும் போது நீ வேற யார்கிட்டயும் உதவி கேட்க போற..." என்க,
சூர்யா, "டேய், அதான் நீங்க இல்லையே! கோவால இருக்கன்னு சொல்ற... அப்போ எனக்கு எப்படி உதவி பண்ண முடியும்?" என்றான்.
விஜய், "மச்சான், உன் காதுல அப்படியா விழுந்துச்சு.... உன் காதுல தப்பா விழுந்துருக்குடா... நான் வீட்ல உட்கார்ந்து பால்கோவா சாப்பிட்டுட்டு இருக்கேன்."
சூர்யா, 'வாடா மகனே! என்கிட்டயே பொய் சொல்றியா?' என நினைத்தவன், "இல்லடா, நீ கோவால இருக்கேன்னு சொன்ன மாதிரிதான் கேட்டுச்சு..." என்றான்.
விஜய், "டேய்! நான் சொன்னா நீ நம்ப மாட்டியா? இன்னும் பத்து நிமிஷத்துல நான் உன் ஆபீஸ்ல இருப்பேன்" என்றான்.
'அப்பாடா! அடிமை தானா வந்து தலையை நீட்டுது' என நினைத்தவன், "சரிடா... நீ சொன்ன பொய்யை நான் நம்பிட்டேன். இப்போ நீ ஆபீசுக்கு போ. . அங்க விகே கம்பெனியோட ஒரு மீட்டிங் இருக்கு. விபிஷாகிட்ட டீடெயில்ஸும் கேட்டுட்டு அதை அட்டென்ட் பண்ணிடு" என்றான்.
விஜய், "மச்சி, நீ கவலைப்படாதடா... நல்லபடியாக முடிச்சுடுவேன்" என்று காலை கட் செய்தான்.
சூர்யா அவர்களுக்கு முன்னாடி அந்த டெக்ஸ்டைல்ஸை அடைந்தான். நட்சத்திரா 'அப்பாடா! அவன் தொல்லை ஒழிந்தது' என மகிழ்ச்சியாக சென்றாள். கிஷோர் வந்த கார் வர, சூர்யா அவர்களைப் பார்த்து விட்டு, ஒரு சட்டையை பார்ப்பது போல் திரும்பி நின்று கொண்டான்.
ஆனால் கிஷோர் உள்ளே நுழைந்ததும் சூர்யாவை பார்த்து விட்டான். கிஷோர், "சூர்யா..." என்று அழைக்க, மொத்த குடும்பமும் சூர்யாவை தான் பார்த்தனர்.
கிஷோர், "டேய்! நீ இங்க என்ன பண்ற?" எனக் கேட்க, சூர்யா என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழித்தான்.
கவிதைகள் தொடரும்....
மக்களே! தாமதமான பதிவுக்கு மன்னிக்கவும். எனக்கு எழுத வரலைன்னு சொல்லிதான் நான் லேட்டா யூடி போடுறேன். சோ நல்லா என்னை என்கரேஜ் பண்ணுங்க... நல்லா கமெண்ட் பண்ணுங்க. முடிஞ்சா நாளைக்கு ஒரு யூடி தர ட்ரை பண்றேன்...




