பதிப்புரிமை © 2020 by Aruna © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வெளியீட்டில் எந்த பகுதியும் வெளியீட்டாளர் ஆகிய என் அனுமதி இன்றி புகைப்பட நகல், e- புக், PDF, போன்ற எந்த வடிவத்திலும் பதிவு செய்தல் அல்லது பிற மின்னணு அல்லது இயந்திரம் முறைகள் உட்பட எந்த வகையிலும் இனப்பெருக்கம் செய்யவும் விநியோகிக்க அல்லது கடத்தக் கூடாது மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்....
கதையில் குறிப்பிட்டுள்ள கதாபாத்திரங்கள் இடங்கள் மற்றும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. உண்மையான நபர்கள் அல்லது நிஜவாழ்க்கை நிறுவனங்களுடன் எந்த ஒற்றுமையும் முற்றிலும் தற்செயலானது. இந்த படத்தில் தோன்றும் அனைத்து கதாபாத்திரங்களும் பிற நிறுவனங்களுக்கும் கற்பனையானவை. உண்மையான நபர்கள் இறந்தவர்கள் அல்லது உயிருடன் இருப்பவர்கள் அல்லது கடந்தகால அல்லது நிகழ்காலம் நிஜவாழ்க்கை நிறுவனங்களுடன் எந்த ஒரு ஒற்றுமையும் முற்றிலும் தற்செயலானது.....
copyright © 2020 by Aruna.
All rights reserved.
No part of this Publication may be reproduced, distributed or transmitted in any form of are by any means including photo copying, recording or other electronic or mechanical method or without the Prior written permission of the publisher. In the event of violation I will notify you that proper action will be taken. Any resemblance to real persons are other real life entities is purely coincidental . All characters and other entities appearing in this work are fictitious. Any resembles to real persons dead or alive or other real life in entities past and present is purely coincidental....
View attachment ei5KHV832367.jpg
" கௌசல்யா ஸூப்ரஜா ராம பூர்வாஸம்தாயா ப்ரவர்ததே".....
என காலையில் சுப்ரபாதம் ரேடியோவில் பாடிக்கொண்டிருக்க மல்லிகா, "தாரிகா எழுந்திரு" என தன் சுப்ரபாதத்தை பாடிக்கொண்டிருந்தார். மல்லிகா, "இப்போ எழுந்திருக்க போறியா? இல்லையா?. உன்னை விட சின்னவ நட்சத்திரா. அவளே இவ்வளோ சீக்கிரம் எழுந்து குளிச்சு காலேஜுக்கு கிளம்பிட்டா" என கத்திக் கொண்டிருந்தார்.....
தாரிகா அவர் பாடிய சுப்ரபாதத்தில் கடுப்பாகி எழுந்து, "அம்மா அவ சீக்கிரம் கிளம்பி எதுக்குப் போறானு தெரியுமா?" என்றாள்......
நட்சத்திரா ஓடி வந்து அவள் வாயை பொத்தி, "அம்மா ஏன்மா அக்காவை திட்ற. அவள் வேலைக்கு போயிட்டு வந்து டயர்ட்ல தூங்குகுறா" என்றாள். மல்லிகா, "நட்சத்திரா நீ அவளுக்கு சப்போர்ட் பண்ணாமல் போ சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பு" என்று கிச்சனுக்கு சென்றார்......
நட்சத்திரா தாரிகாவிடம் "ஏன்டி எருமை, உன்னை நான் என் அக்காவாவா நினச்சு பழகுனேனா? ஒரு ஃபிரண்டா நினச்சு தான் எல்லாத்தையும் சொன்னேன். ஆனால் நீ இப்படி போட்டு கொடுக்குறீயே" என்றாள்.....
தாரிகா, "அம்மா என்னை திட்டிட்டே இருக்காங்க. நீ இங்க மேக்கப் போட்டுட்டு உன் ஆளைப் பார்க்க கிளம்புறீயா?" என்றாள். நட்சத்திரா, ஹிஹிஹி என அசடு வழிந்தாள். தாரிகா "போதும் போதும் ரொம்ப வழியாத கிளம்பு" என்றாள்.....
நட்சத்திரா வேகமாக இரண்டு இட்லியை விழுங்கிவிட்டு தன் தந்தை சந்திரசேகரிடமும் தாய் மல்லிகாவிடமும் சொல்லிவிட்டு தன் ஸ்கூட்டியில் பறந்துவிட்டாள்.....
சந்திரசேகர், ஒரு பிரைவேட் பேங்க் எம்ப்ளாயி. மல்லிகா ஹவுஸ் வைஃப். சந்திரசேகரின் பெரிய மகள் தாரிகா, இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஒரு பிரபல தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறாள். நட்சத்திரா இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாள்......
நட்சத்திரா கல்லூரிக்குள் நுழைந்ததும் தன் நண்பர்கள் அமர்ந்து அரட்டை அடிக்கும் இடத்திற்கு சென்று தன் தோழி விபிஷாவிடம், "விபி என்ன வந்துட்டானா?" எனக் கேட்க அவள் இல்லை என உதட்டை பிதுக்கினாள்......
நட்சத்திரா தலையை யாரோ தட்ட திரும்பிப்பார்க்க சதீஷ், "ஐ.டி டிபார்ட்மெண்ட் பக்கத்தில உன் ஆளு நிற்கிறான்" எனக் கூற, நட்சத்திரா வேகவேகமாக நடந்து ஐ.டி டிபார்ட்மென்ட்டை அடைந்தாள்.....
அங்கே தூரத்தில் சூர்யபிரகாஷ் தன் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தான். அதை பார்த்ததும் நட்சத்திரா அப்படியே சிலையாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.....
விபிஷா, "நட்சத்திரா கிளாஸ்க்கு டைம் ஆயிடுச்சு. நீ சைட் அடித்தது போதும் வா போலாம்" என்றாள். நட்சத்திராவிற்கு அவள் சொல்வது எதுவுமே காதில் விழவில்லை. அவள் மெய் மறந்து சூர்யாவையே பார்த்து கொண்டிருந்தாள்......
அங்கே சூர்யாவிடம் பேசிக்கொண்டிருந்த விஜய், "மச்சி உன் ஆளு வந்துட்டாடா" என்றான். சூர்யா அவனை முறைத்து, "உனக்கு எத்தனை தடவை சொல்றது. அவளை என் ஆளுன்னு சொல்லாதன்னு" என்றான்.....
விஜய், "ஏன்டா மச்சான், அவளும் உன் பின்னாடி இரண்டு வருஷமா சுத்துறா. நீயும் கண்டுக்குற மாதிரி தெரியலையே? நான் நினைக்கிறேன், அவ உன்னை பார்த்தே கரைச்சிடுவா போல" என்றான். சூர்யா அவளை திரும்பிக்கூட பார்க்கவில்லை.....
விபிஷா நட்சத்திராவிடம், "ஏன்டி அவன் உன்னை கண்டுக்க கூட மாட்றான். ஆனால் நீயும் வெட்கமே இல்லாம இரண்டு வருஷமா அவன் பின்னாடியே சுத்துற. அப்படி என்னதான் அந்த சிடுமூஞ்சி கிட்ட இருக்கோ?" என்று கூறினாள். ஆனால் நட்சத்திரா அதையெல்லாம் காதில் வாங்கவே இல்லை. நட்சத்திரா இன்னும் சூர்யாவை தான் சைட் அடித்தக் கொண்டிருந்தாள்.....
விபிஷா, 'இவ இப்படி சொன்னா கேட்கவேமாட்டா' என நினைத்து, அவளை இழுத்துச் சென்றாள். கிளாஸில் ப்ரொஃபஸர் பாடம் எடுத்துக் கொண்டிருக்க நட்சத்திரா தன் கையில் நோட்டை வைத்து வித விதமான கோணத்தில் திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தாள்.......
விபிஷா சதீஷிடம், "மச்சி இவ ஏன் இப்போ நோட்டை வைத்து வட்டம் போட்றா?" என்றாள். சதீஷ் அந்த நோட்டை எட்டிப்பார்த்து விபிஷாவிடம், "மச்சி அவ அந்த சூர்யா போட்டோவ தான் வச்சு பார்த்துட்டு இருக்கா" என்றான். இதைக் கேட்ட விபிஷா தலையில் அடித்துக் கொண்டாள். கிளாஸ் முடிந்து எல்லோரும் கிளம்பினார்கள். நட்சத்திரா சூர்யாவை பார்த்து விட்டு கிளம்ப மனமே இல்லாமல் கிளம்பினாள்........
சூர்யா வீட்டிற்குள் நுழைந்ததும், "அம்மா... என அழைக்க சூர்யாவின் தந்தை ரவிசங்கர், "என்னடா சூர்யா? இன்னைக்காவது நீ கமிட் ஆயிட்டேன்னு ஒரு நல்ல செய்தியை சொல்லுவியா?" என்றார் . "அப்பா.... என்று அவன் முறைக்க ரவிசங்கர், "ஏன்டா முறைக்கிற?. சின்ன வயசுல இருந்து என் லவ் ஸ்டோரி சொல்லி சொல்லி உன்ன வளர்த்தேனே, எதுக்கு நீ யாரையாவது லவ் பண்ணுவேன்னு தான். ஆனா நீ காலேஜே முடிக்கப் போற, இன்னும் கமிட்டான பாடுதான் இல்லை" என்றார்.
சூர்யா, "ஏன்பா எப்ப பார்த்தாலும் என்ன லவ் பண்ண சொல்லி டார்ச்சர் பண்றீங்க. எனக்குதான் பொண்ணுங்களே பிடிக்காதுன்னு உங்களுக்கு தெரியாதா?" என்றான்.....
கையில் காபியோடு வந்த சூர்யாவின் தாய் ஷீலா, "ஏங்க வந்ததும் வராததுமா அவனை வம்பு இழுக்குறீங்க என்றவர், சூர்யாவிடம் ஏன்டா சூர்யா நீதான் யாரையாவது லவ் பண்ணேன்டா. எவ்வளவு நாள்தான் சிங்கிளாவே இருப்ப?" என்றார். சூர்யா, "அம்மா, நீங்களுமா?" என சிணுங்கிக் கொண்டே காபி கப்புடன் தன் ரூமிற்கு சென்றான்........
இங்கே வீட்டுக்கு வந்த நட்சத்திரா 'ஐயோ என் பேபி இன்னைக்கு ப்ளூ கலர் சட்டைல எவ்ளோ அழகா இருந்தான். என்னால கண்ணை எடுக்கவே முடியல அவன்கிட்ட இருந்து' என தனக்கு தானே புலம்பிக் கொண்டிருந்தாள்......
அவளுக்கு காபி கொடுத்த மல்லிகா, "என்னடி தனியா புலம்பிட்டு இருக்க?" என்றார். நட்சத்திரா, "ஒன்றும் இல்லைமா" என்று முழித்தாள். மல்லிகா, "என்னவோ போ கொஞ்ச நாளா நீ ஆளே சரியில்லை, மந்திரிச்சு விட்ட மாதிரி திரியிற" எனக் கூறிவிட்டு சென்றார்.......
நட்சத்திரா கண்ணாடி முன் நின்று, "ஏய் நட்சு நீ லூசாகிட்டடி அவன் நினப்புல. பாரு அம்மா உன்னை என்ன சொல்லி விட்டு போறாங்கன்னு. டேய் சூர்யா ராஸ்கல் என்ன என்னடா பண்ண? நான் உன் பின்னாடி இப்படி லூசு மாதிரி சுத்திட்டு இருக்கேன். காலேஜே என்னை ஒருமாதிரி பார்க்குது" எனக் கூறி கண்ணாடியை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.......
சூர்யா, 'இந்த நட்சத்திரா ஏன் இப்படி லூசு மாதிரி என் பின்னாடி சுத்திட்டு இருக்கா. அவளை கூப்பிட்டு கண்டிச்சு வைக்கணும். வரவர ரொம்ப ஓவரா போயிட்டு இருக்கா' என நினைத்துக் கொண்டிருந்தான்......
மறுநாள் வழக்கம்போல சீக்கிரமாவே காலேஜுக்கு கிளம்பி சென்றாள் நட்சத்திரா. இன்னும் சூர்யா வராது இருப்பதை தன் நண்பர்கள் மூலம் அறிந்தவள், அவன் எப்போதும் அமரும் இடம் சென்று அங்கே அமர்ந்தவள், 'அவன் உட்கார்ந்த இடமே இவ்வளவு சந்தோஷத்தை எனக்கு கொடுக்குது. அவன் என் கிட்ட பேசினா எப்படி இருக்கும்' என அவள் யோசித்துக் கொண்டிருந்தாள்.....
விபிஷா ஓடி வந்து, "உன் ஆளு வந்துட்டான் வாடி" என அவளை இழுத்துச் சென்றாள். சூர்யா தன் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். நட்சத்திரா வழக்கம்போல சூர்யாவை கண்களால் பருகிக் கொண்டிருந்தாள்......
சூர்யா, "விஜய் அவளை கூப்பிட்டு கண்டிச்சு வைடா. வர வர ரொம்ப ஓவரா போறாள். இவ அட்டகாசத்தால் எல்லோரும் என்னை ஒரு மாதிரியா பாக்குறாங்க" என்றான்.....
விஜய் நட்சத்திராவை பார்த்து இங்கே வா என சைகை செய்தான். நட்சத்திரா வேற யாரையோவா? என நினைத்து திரும்பிப்பார்க்க விஜய், "உன்னதா வா இங்கே" என்றான்......
நட்சத்திரா விபிஷாவைப் பார்க்க அவள் "நான் சொல்ல சொல்ல கேட்காம அவனை சைட் அடிச்சேல, போ போய் வாங்கி கட்டிக்க" என்றாள். நட்சத்திரா என்ன வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு அங்கே சென்றாள்......
அவள் சூர்யாவை பார்த்துவிட்டு அப்படியே உறைந்து விட்டாள். அவனையே ரசித்து கொண்டு இருந்தாள். ஆறடி உயரம், சிறிய கண்கள், கூர்மையான நாசி, சிகரெட் பிடிக்காததால் சிவந்த உதடுகள், பிளாக் கலர் சட்டை , ஜீன்ஸ் பேண்ட் என அவனை அணு அணுவாக ரசித்துக் கொண்டிருந்தாள்......
சூர்யா இவளை பார்க்கக்கூட இல்லை . விஜய் அவளிடம், "இனிமேல் அங்க இங்கன்னு நின்னுட்டு இவனை பார்க்கக்கூடாது" என அவன் கூறிக் கொண்டிருக்க அவள் சூர்யாவை ரசித்துக்கொண்டிருந்தாள்.....
இதை பார்த்து கடுப்பான விஜய், "மச்சான் நீ இருக்க வரைக்கும் இவ நான் சொல்றதை கேட்க மாட்ட. நீ கிளம்பு இவளை நான் பார்த்துக்குறேன்" என்றான்......
சூர்யா கிளம்பி போக அவன் உருவம் மறையும் வரை அங்கேயே நட்சத்திரா பார்த்துக்கொண்டிருந்தாள். விஜய், "ஏம்மா நட்சத்திரா" என சத்தமாக அழைக்கச் சுயநினைவு பெற்றவள், "சொல்லுங்க சீனியர்" என்றாள்......
விஜய், "இவ்வளவு நேரம் நான் பேசுனது உன் காதுல விழுந்துச்சா?" என்றான். நட்சத்திரா திருட்டு முழி முழிக்க....விஜய், "நீ முழிக்குறதிலயே தெரியுது. நீ எதையும் கவனிக்கலன்னு. இனிமே நீ சூர்யா பின்னாடி சுத்துறத நிறுத்தனும். நீ இப்படி பண்றது அவனுக்கு பிடிக்கலையாம்" என்றான்.....
நட்சத்திரா, "ஓகே சீனியர், நீங்க சொன்னதை நான் கேட்கிறேன்" தலையை ஆட்டினாள். விஜய், 'என்ன சொன்னதும் ஓகே சொல்லிட்டா' என நினைத்து விட்டு, "சரி நீ கிளம்பு நான் சொன்னது ஞாபகம் வச்சுக்கோ" என்றான். நட்சத்திர , "ஒ.கே சீனியர்" என்று ஓடி விட்டாள்......
வழக்கம் போல நட்சத்திரா வகுப்பில் சூர்யா போட்டோவை வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.....
"உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன் எழுந்துமே மறுபடி தொலைகிறேன்".....
என்று அவள் மொபைல் பாடிக் கொண்டிருக்க அதை சட்டை செய்யாமல் இவள் அவன் போட்டோவை பார்த்து கொண்டிருந்தாள். ப்ரொஃபசர் யார் மொபைல் அடிக்கிறது என தேடிக்கொண்டிருக்க எல்லோரும் திரும்பி நட்சத்திராவைப் பார்த்தனர்......
விபிஷா, "மச்சி மச்சி" என உளுக்க அப்போதும் அவள் சுய நினைவு பெறவில்லை.
ப்ரொஃபசர், "நட்சத்திரா..." என கத்த திடீரென ஷாக் அடித்தது போல் எழுந்து நின்றவள் பேவென முழிக்க, ப்ரொஃபசர், "கிளாஸ் ரூம்ல மொபைலை சைலன்ட்ல போட மாட்டியா?" எனக் கேட்க அப்போது தான் அவள் மொபைல் அடிப்பதை பார்த்து வேகமாக எடுத்து அதை ஆப் செய்து அவரை பார்த்தாள்....
அவர், "கெட் அவுட்" என கத்த உள்ளுக்குள் சந்தோஷத்தில் குதித்துக் கொண்டு வெளியில் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு வெளியேறினாள்.......
வகுப்பறையை விட்டு வெளியேறி சூர்யா கிளாஸ்க்கு சென்று ஜன்னல் தெரியும்படி அமர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்....
வகுப்பறையை விட்டு வெளியேறிய நட்சத்திரா, சூர்யா கிளாஸ்க்கு சென்று ஜன்னல் தெரியும்படி அமர்ந்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.....
எதேச்சையாக ஜன்னல் பக்கம் திரும்பிய விஜய் இதை பார்த்து விட்டான். விஜய் இவ திருந்த மாட்ட போலயே. காலையில் தலைய தலைய ஆட்டும் போதே நினச்சேன் என நினைத்தவன் சூர்யாவிடம், "மச்சான் பேசாம அந்த நட்சத்திராவுக்கு நீ ஓகே சொல்லிடு" என்றான்.....
சூர்யா அவனை முதுகில் அடித்து , "ஏன்டா எருமை கிளாஸ் கவனிக்கிறதை விட்டுட்டு அவளை பத்தி பேசிட்டு இருக்க" என்றான். விஜய், "மச்சான் எனக்கு என்னமோ அவ உன்ன விடமாட்டான்னு தோணுது" என்றான். சூர்யா, "டேய் எதுக்கு தேவை இல்லாம இப்போ குதர்க்கமாக பேசுற?" என்றான்.....
விஜய், "மச்சான் நான் தேவையில்லாம பேசலை. அங்க பாரு அந்த சேர்ல உட்காந்து உன்னையே அவ வெறிச்சிட்டு இருக்கா" என்றான். சூர்யா அவளை பார்த்துவிட்டு, "மச்சான் இவ ரொம்ப பண்றடா. கிளாஸ் முடியட்டும் அவளுக்கு இருக்கு" என்றான்.......
அவன் கிளாஸ் முடிந்து வரும்வரை அங்கேயே அமர்ந்து இருந்தாள். சூர்யா அவளை நோக்கி கோபமாக வந்தான். இதைப்பார்த்த நட்சத்திராவிற்கு லைட்டா ஜெர்க் ஆகியது. இருந்தாலும் இன்னும் எவ்வளவோ பார்க்க வேண்டியது இருக்கு இதற்கே பயந்தால் எப்படி என தனக்குதானே சமாதானம் செய்து கொண்டு எழுந்து நின்றாள்......
சூர்யா அவளிடம் கோபமாக, "ஏய் உன் மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்க?" என்றான். நட்சத்திரா, "உன்ன தான் நினைச்சுட்டு இருக்கேன்" என்றாள். அவள் கூறிய பதிலில் சூர்யா ஆடி போய்விட்டான். சூர்யா பின் தன்னை சமன்படுத்திவிட்டு "எனக்கு உன்னை பிடிக்கலை, என் பின்னாடி சுத்தாத" என்றான். நட்சத்திரா, "உனக்கு பிடிக்கலைனா என்ன? எனக்கு பிடிச்சிருக்கு" என்றாள்....
அவன், "எனக்கு உன்னை பார்த்தாலே எரிச்சலா வருது" என்றான். நட்சத்திரா, "ஆனா எனக்கு உன்ன பார்த்தாலே காதல் பொங்கி வருது" என்றாள். அவன் கடுப்பாகி "எனக்கு உன் மேல காதலும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. இனிமே என்னை தொல்லை பண்ணாத" என்றான்......
நட்சத்திரா, "உனக்கு லவ் இல்லன்னா பரவாயில்லை. உனக்கும் சேர்த்து நானே லவ் பண்ணுகிறேன் . அப்புறம் உனக்கு பிடிக்கலைன்னா பரவாயில்லை . என்னை லவ் பண்ண கூடாதுன்னு நீ சொல்லக் கூடாது சூர்யா என்று கண்ணடித்தவள், லவ் யூ பேபி. வரட்டா பேபி" என்று கூறிக் கிளம்பினாள்......
அவள் கூறியதில் சூர்யா அதிர்ச்சியாகி அப்படியே நின்றுவிட்டான். விஜய் வந்து, "மச்சான் ஏன்டா இப்படி பேயறைஞ்ச மாதிரி நிற்க்குற?. நீ வந்த வேகத்தைப் பார்த்தா அவளை வச்சு செஞ்சுடுவேன்னு பார்த்தா அவ உன்ன உன்ன செஞ்சுட்டு போயிட்டா போல" எனக் கூறி அவனை பார்த்து சிரித்தான்.....
சூர்யா, "டேய் இப்ப நீ சிரிக்கிறதை நிறுத்தல உன்ன அவ்வளவுதான்" என்றான். விஜய், "போடா டேய் உன் பவுசு எல்லாம் என்கிட்ட தான். இவ்வளவு நேரம் உன்ன வச்சு வாங்கினாலே அவ கிட்ட பேச வேண்டியதுதானே. அப்புறம் மச்சான் எனக்கு என்னமோ அவ உன்னை கரெக்ட் பண்ணிடுவான்னு தோணுது" என்றவன், சூர்யா கீழே எதையோ தேட விஜய் நம்மள அடிக்க தான் கல்லை தேடுறானோ? என்று நினைத்தவன், "சரி அப்புறம் பேசலாம் மச்சான்" என எஸ்கேப் ஆகிவிட்டான்.......
விபிஷா நட்சத்திராவை, "ஏய் எங்கடி போன இவ்வளவு நேரம்?" என்றாள். நட்சத்திரா விபிஷாவை கட்டியணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.."விபி நான் இன்னைக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கேன்" என்றாள். விபி அவளை விலக்கி, "அடியே பப்ளிக் ப்ளேஸ்ல இப்படி பண்றியே , யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க, பைத்தியம்" என்று திட்டினாள்.....
நட்சத்திரா அதையெல்லாம் சிரித்துக்கொண்டே வாங்கினாள். விபி, "ஏன்டி திட்டிட்டு இருக்கேன் நீ சிரிச்சிட்டே இருக்க. முழு பைத்தியம் ஆயிட்டியா?" என்றாள். சதீஷ் வந்து, "நட்சத்திரா என்ன உன் ஆள் உன் கிட்ட பேசினானாமே? கேள்விப்பட்டேன்" என்றான்......
இதைக் கேட்ட விபிஷா, "அதுதான் இந்த மேடம் என்ன கட்டிப்புடிச்சு பாசமழை பொழிந்தாங்களோ?" என்றாள். நட்சத்திரா சிரித்துக்கொண்டே தலையை ஆட்டினாள். விபி, "பார்த்துடி தல கழண்டு விழுந்திட போது என்றவள் சரி சரி கிளம்பு டைம் ஆயிடுச்சு" என்றாள். நட்சத்திரா சிரித்துக்கொண்டே ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினாள்......
இங்கே சங்கர் தன் பெரிய மகன் கிஷோரிடம் பேசிக்கொண்டிருந்தார். "டேய் மகனே என்னடா இன்னைக்காவது அந்த பொண்ணுகிட்ட உன் லவ்வை சொன்னியாடா?" என்றார். கிஷோர், "ஏன் பா நீங்க வேற? . அவளை பார்த்தாலே எனக்கு உள்ளுக்குள்ள உதறுது" என்றான்.....
சங்கர், "ஏன்டா ஒரு கம்பெனி எம்.டியா இருந்துட்டு இப்படி பயப்படுற?. நான்லாம் எவ்வளோ தைரியமா உங்க அம்மாகிட்ட லவ்வ சொன்னேன் தெரியுமா?" என்றார்.....
காபி கொண்டு வந்த ஷீலா, "ஏன் சங்கர் இப்படி பொய் சொல்றீங்க. நீங்க ரெண்டு வருஷமா என்னை தூரத்தில் இருந்து பார்த்துட்டு மட்டும் தான் இருந்தீங்க என்றவர், கிஷோரிடம் டேய் கண்ணா தைரியமா அந்த பொண்ணுகிட்ட போய் பேசுபா" என்றார். கிஷோர், "ட்ரை பண்றேன்மா" என்றான்.....
சரியாக அந்த நேரம் உள்ளே நுழைந்த சூர்யா, "என்ன கிஷோர் ட்ரை பண்ண போற?" என்றான். சங்கர், "டேய் சூர்யா அதுக்கு நீ சரிபட்டு வரமாட்டடா" என்றார்.....
சூர்யா அதிர்ச்சியாகி, "தி கிரேட் சூர்யா என்னால் முடியாதது எதுவுமே கிடையாது" என்றான். ஷீலா, "சூர்யா அவசரப்பட்டு வார்த்தையைவிடாதடா" என்றார்.....
சூர்யா, "நீங்க சும்மா இருங்கம்மா என்றவன், சங்கரிடம் அப்பா சொல்லுங்கப்பா நான் எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன் சொல்லுங்க" என்றான்....
சங்கர், "வேணாம்டா சூர்யா உன்னால அதை செய்ய முடியாதுடா" என்றார் . சூர்யா, "அப்பா நீங்க சொல்லுங்க முதல்ல அப்புறம் நான் அதை செய்யலன்னா என் பெயரை மாத்திக்கிறேன்" என்றான்....
சங்கர், "பேச்சு மாறக் கூடாதுடா மகனே!" என்றார். சூர்யா, "சொல்லப் போறீங்களா? இல்லையா?" என்றான்.......
கவிதைகள் தொடரும்.....
இந்த வெளியீட்டில் எந்த பகுதியும் வெளியீட்டாளர் ஆகிய என் அனுமதி இன்றி புகைப்பட நகல், e- புக், PDF, போன்ற எந்த வடிவத்திலும் பதிவு செய்தல் அல்லது பிற மின்னணு அல்லது இயந்திரம் முறைகள் உட்பட எந்த வகையிலும் இனப்பெருக்கம் செய்யவும் விநியோகிக்க அல்லது கடத்தக் கூடாது மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்....
கதையில் குறிப்பிட்டுள்ள கதாபாத்திரங்கள் இடங்கள் மற்றும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. உண்மையான நபர்கள் அல்லது நிஜவாழ்க்கை நிறுவனங்களுடன் எந்த ஒற்றுமையும் முற்றிலும் தற்செயலானது. இந்த படத்தில் தோன்றும் அனைத்து கதாபாத்திரங்களும் பிற நிறுவனங்களுக்கும் கற்பனையானவை. உண்மையான நபர்கள் இறந்தவர்கள் அல்லது உயிருடன் இருப்பவர்கள் அல்லது கடந்தகால அல்லது நிகழ்காலம் நிஜவாழ்க்கை நிறுவனங்களுடன் எந்த ஒரு ஒற்றுமையும் முற்றிலும் தற்செயலானது.....
copyright © 2020 by Aruna.
All rights reserved.
No part of this Publication may be reproduced, distributed or transmitted in any form of are by any means including photo copying, recording or other electronic or mechanical method or without the Prior written permission of the publisher. In the event of violation I will notify you that proper action will be taken. Any resemblance to real persons are other real life entities is purely coincidental . All characters and other entities appearing in this work are fictitious. Any resembles to real persons dead or alive or other real life in entities past and present is purely coincidental....
View attachment ei5KHV832367.jpg
" கௌசல்யா ஸூப்ரஜா ராம பூர்வாஸம்தாயா ப்ரவர்ததே".....
என காலையில் சுப்ரபாதம் ரேடியோவில் பாடிக்கொண்டிருக்க மல்லிகா, "தாரிகா எழுந்திரு" என தன் சுப்ரபாதத்தை பாடிக்கொண்டிருந்தார். மல்லிகா, "இப்போ எழுந்திருக்க போறியா? இல்லையா?. உன்னை விட சின்னவ நட்சத்திரா. அவளே இவ்வளோ சீக்கிரம் எழுந்து குளிச்சு காலேஜுக்கு கிளம்பிட்டா" என கத்திக் கொண்டிருந்தார்.....
தாரிகா அவர் பாடிய சுப்ரபாதத்தில் கடுப்பாகி எழுந்து, "அம்மா அவ சீக்கிரம் கிளம்பி எதுக்குப் போறானு தெரியுமா?" என்றாள்......
நட்சத்திரா ஓடி வந்து அவள் வாயை பொத்தி, "அம்மா ஏன்மா அக்காவை திட்ற. அவள் வேலைக்கு போயிட்டு வந்து டயர்ட்ல தூங்குகுறா" என்றாள். மல்லிகா, "நட்சத்திரா நீ அவளுக்கு சப்போர்ட் பண்ணாமல் போ சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பு" என்று கிச்சனுக்கு சென்றார்......
நட்சத்திரா தாரிகாவிடம் "ஏன்டி எருமை, உன்னை நான் என் அக்காவாவா நினச்சு பழகுனேனா? ஒரு ஃபிரண்டா நினச்சு தான் எல்லாத்தையும் சொன்னேன். ஆனால் நீ இப்படி போட்டு கொடுக்குறீயே" என்றாள்.....
தாரிகா, "அம்மா என்னை திட்டிட்டே இருக்காங்க. நீ இங்க மேக்கப் போட்டுட்டு உன் ஆளைப் பார்க்க கிளம்புறீயா?" என்றாள். நட்சத்திரா, ஹிஹிஹி என அசடு வழிந்தாள். தாரிகா "போதும் போதும் ரொம்ப வழியாத கிளம்பு" என்றாள்.....
நட்சத்திரா வேகமாக இரண்டு இட்லியை விழுங்கிவிட்டு தன் தந்தை சந்திரசேகரிடமும் தாய் மல்லிகாவிடமும் சொல்லிவிட்டு தன் ஸ்கூட்டியில் பறந்துவிட்டாள்.....
சந்திரசேகர், ஒரு பிரைவேட் பேங்க் எம்ப்ளாயி. மல்லிகா ஹவுஸ் வைஃப். சந்திரசேகரின் பெரிய மகள் தாரிகா, இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஒரு பிரபல தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறாள். நட்சத்திரா இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாள்......
நட்சத்திரா கல்லூரிக்குள் நுழைந்ததும் தன் நண்பர்கள் அமர்ந்து அரட்டை அடிக்கும் இடத்திற்கு சென்று தன் தோழி விபிஷாவிடம், "விபி என்ன வந்துட்டானா?" எனக் கேட்க அவள் இல்லை என உதட்டை பிதுக்கினாள்......
நட்சத்திரா தலையை யாரோ தட்ட திரும்பிப்பார்க்க சதீஷ், "ஐ.டி டிபார்ட்மெண்ட் பக்கத்தில உன் ஆளு நிற்கிறான்" எனக் கூற, நட்சத்திரா வேகவேகமாக நடந்து ஐ.டி டிபார்ட்மென்ட்டை அடைந்தாள்.....
அங்கே தூரத்தில் சூர்யபிரகாஷ் தன் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தான். அதை பார்த்ததும் நட்சத்திரா அப்படியே சிலையாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.....
விபிஷா, "நட்சத்திரா கிளாஸ்க்கு டைம் ஆயிடுச்சு. நீ சைட் அடித்தது போதும் வா போலாம்" என்றாள். நட்சத்திராவிற்கு அவள் சொல்வது எதுவுமே காதில் விழவில்லை. அவள் மெய் மறந்து சூர்யாவையே பார்த்து கொண்டிருந்தாள்......
அங்கே சூர்யாவிடம் பேசிக்கொண்டிருந்த விஜய், "மச்சி உன் ஆளு வந்துட்டாடா" என்றான். சூர்யா அவனை முறைத்து, "உனக்கு எத்தனை தடவை சொல்றது. அவளை என் ஆளுன்னு சொல்லாதன்னு" என்றான்.....
விஜய், "ஏன்டா மச்சான், அவளும் உன் பின்னாடி இரண்டு வருஷமா சுத்துறா. நீயும் கண்டுக்குற மாதிரி தெரியலையே? நான் நினைக்கிறேன், அவ உன்னை பார்த்தே கரைச்சிடுவா போல" என்றான். சூர்யா அவளை திரும்பிக்கூட பார்க்கவில்லை.....
விபிஷா நட்சத்திராவிடம், "ஏன்டி அவன் உன்னை கண்டுக்க கூட மாட்றான். ஆனால் நீயும் வெட்கமே இல்லாம இரண்டு வருஷமா அவன் பின்னாடியே சுத்துற. அப்படி என்னதான் அந்த சிடுமூஞ்சி கிட்ட இருக்கோ?" என்று கூறினாள். ஆனால் நட்சத்திரா அதையெல்லாம் காதில் வாங்கவே இல்லை. நட்சத்திரா இன்னும் சூர்யாவை தான் சைட் அடித்தக் கொண்டிருந்தாள்.....
விபிஷா, 'இவ இப்படி சொன்னா கேட்கவேமாட்டா' என நினைத்து, அவளை இழுத்துச் சென்றாள். கிளாஸில் ப்ரொஃபஸர் பாடம் எடுத்துக் கொண்டிருக்க நட்சத்திரா தன் கையில் நோட்டை வைத்து வித விதமான கோணத்தில் திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தாள்.......
விபிஷா சதீஷிடம், "மச்சி இவ ஏன் இப்போ நோட்டை வைத்து வட்டம் போட்றா?" என்றாள். சதீஷ் அந்த நோட்டை எட்டிப்பார்த்து விபிஷாவிடம், "மச்சி அவ அந்த சூர்யா போட்டோவ தான் வச்சு பார்த்துட்டு இருக்கா" என்றான். இதைக் கேட்ட விபிஷா தலையில் அடித்துக் கொண்டாள். கிளாஸ் முடிந்து எல்லோரும் கிளம்பினார்கள். நட்சத்திரா சூர்யாவை பார்த்து விட்டு கிளம்ப மனமே இல்லாமல் கிளம்பினாள்........
சூர்யா வீட்டிற்குள் நுழைந்ததும், "அம்மா... என அழைக்க சூர்யாவின் தந்தை ரவிசங்கர், "என்னடா சூர்யா? இன்னைக்காவது நீ கமிட் ஆயிட்டேன்னு ஒரு நல்ல செய்தியை சொல்லுவியா?" என்றார் . "அப்பா.... என்று அவன் முறைக்க ரவிசங்கர், "ஏன்டா முறைக்கிற?. சின்ன வயசுல இருந்து என் லவ் ஸ்டோரி சொல்லி சொல்லி உன்ன வளர்த்தேனே, எதுக்கு நீ யாரையாவது லவ் பண்ணுவேன்னு தான். ஆனா நீ காலேஜே முடிக்கப் போற, இன்னும் கமிட்டான பாடுதான் இல்லை" என்றார்.
சூர்யா, "ஏன்பா எப்ப பார்த்தாலும் என்ன லவ் பண்ண சொல்லி டார்ச்சர் பண்றீங்க. எனக்குதான் பொண்ணுங்களே பிடிக்காதுன்னு உங்களுக்கு தெரியாதா?" என்றான்.....
கையில் காபியோடு வந்த சூர்யாவின் தாய் ஷீலா, "ஏங்க வந்ததும் வராததுமா அவனை வம்பு இழுக்குறீங்க என்றவர், சூர்யாவிடம் ஏன்டா சூர்யா நீதான் யாரையாவது லவ் பண்ணேன்டா. எவ்வளவு நாள்தான் சிங்கிளாவே இருப்ப?" என்றார். சூர்யா, "அம்மா, நீங்களுமா?" என சிணுங்கிக் கொண்டே காபி கப்புடன் தன் ரூமிற்கு சென்றான்........
இங்கே வீட்டுக்கு வந்த நட்சத்திரா 'ஐயோ என் பேபி இன்னைக்கு ப்ளூ கலர் சட்டைல எவ்ளோ அழகா இருந்தான். என்னால கண்ணை எடுக்கவே முடியல அவன்கிட்ட இருந்து' என தனக்கு தானே புலம்பிக் கொண்டிருந்தாள்......
அவளுக்கு காபி கொடுத்த மல்லிகா, "என்னடி தனியா புலம்பிட்டு இருக்க?" என்றார். நட்சத்திரா, "ஒன்றும் இல்லைமா" என்று முழித்தாள். மல்லிகா, "என்னவோ போ கொஞ்ச நாளா நீ ஆளே சரியில்லை, மந்திரிச்சு விட்ட மாதிரி திரியிற" எனக் கூறிவிட்டு சென்றார்.......
நட்சத்திரா கண்ணாடி முன் நின்று, "ஏய் நட்சு நீ லூசாகிட்டடி அவன் நினப்புல. பாரு அம்மா உன்னை என்ன சொல்லி விட்டு போறாங்கன்னு. டேய் சூர்யா ராஸ்கல் என்ன என்னடா பண்ண? நான் உன் பின்னாடி இப்படி லூசு மாதிரி சுத்திட்டு இருக்கேன். காலேஜே என்னை ஒருமாதிரி பார்க்குது" எனக் கூறி கண்ணாடியை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.......
சூர்யா, 'இந்த நட்சத்திரா ஏன் இப்படி லூசு மாதிரி என் பின்னாடி சுத்திட்டு இருக்கா. அவளை கூப்பிட்டு கண்டிச்சு வைக்கணும். வரவர ரொம்ப ஓவரா போயிட்டு இருக்கா' என நினைத்துக் கொண்டிருந்தான்......
மறுநாள் வழக்கம்போல சீக்கிரமாவே காலேஜுக்கு கிளம்பி சென்றாள் நட்சத்திரா. இன்னும் சூர்யா வராது இருப்பதை தன் நண்பர்கள் மூலம் அறிந்தவள், அவன் எப்போதும் அமரும் இடம் சென்று அங்கே அமர்ந்தவள், 'அவன் உட்கார்ந்த இடமே இவ்வளவு சந்தோஷத்தை எனக்கு கொடுக்குது. அவன் என் கிட்ட பேசினா எப்படி இருக்கும்' என அவள் யோசித்துக் கொண்டிருந்தாள்.....
விபிஷா ஓடி வந்து, "உன் ஆளு வந்துட்டான் வாடி" என அவளை இழுத்துச் சென்றாள். சூர்யா தன் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். நட்சத்திரா வழக்கம்போல சூர்யாவை கண்களால் பருகிக் கொண்டிருந்தாள்......
சூர்யா, "விஜய் அவளை கூப்பிட்டு கண்டிச்சு வைடா. வர வர ரொம்ப ஓவரா போறாள். இவ அட்டகாசத்தால் எல்லோரும் என்னை ஒரு மாதிரியா பாக்குறாங்க" என்றான்.....
விஜய் நட்சத்திராவை பார்த்து இங்கே வா என சைகை செய்தான். நட்சத்திரா வேற யாரையோவா? என நினைத்து திரும்பிப்பார்க்க விஜய், "உன்னதா வா இங்கே" என்றான்......
நட்சத்திரா விபிஷாவைப் பார்க்க அவள் "நான் சொல்ல சொல்ல கேட்காம அவனை சைட் அடிச்சேல, போ போய் வாங்கி கட்டிக்க" என்றாள். நட்சத்திரா என்ன வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு அங்கே சென்றாள்......
அவள் சூர்யாவை பார்த்துவிட்டு அப்படியே உறைந்து விட்டாள். அவனையே ரசித்து கொண்டு இருந்தாள். ஆறடி உயரம், சிறிய கண்கள், கூர்மையான நாசி, சிகரெட் பிடிக்காததால் சிவந்த உதடுகள், பிளாக் கலர் சட்டை , ஜீன்ஸ் பேண்ட் என அவனை அணு அணுவாக ரசித்துக் கொண்டிருந்தாள்......
சூர்யா இவளை பார்க்கக்கூட இல்லை . விஜய் அவளிடம், "இனிமேல் அங்க இங்கன்னு நின்னுட்டு இவனை பார்க்கக்கூடாது" என அவன் கூறிக் கொண்டிருக்க அவள் சூர்யாவை ரசித்துக்கொண்டிருந்தாள்.....
இதை பார்த்து கடுப்பான விஜய், "மச்சான் நீ இருக்க வரைக்கும் இவ நான் சொல்றதை கேட்க மாட்ட. நீ கிளம்பு இவளை நான் பார்த்துக்குறேன்" என்றான்......
சூர்யா கிளம்பி போக அவன் உருவம் மறையும் வரை அங்கேயே நட்சத்திரா பார்த்துக்கொண்டிருந்தாள். விஜய், "ஏம்மா நட்சத்திரா" என சத்தமாக அழைக்கச் சுயநினைவு பெற்றவள், "சொல்லுங்க சீனியர்" என்றாள்......
விஜய், "இவ்வளவு நேரம் நான் பேசுனது உன் காதுல விழுந்துச்சா?" என்றான். நட்சத்திரா திருட்டு முழி முழிக்க....விஜய், "நீ முழிக்குறதிலயே தெரியுது. நீ எதையும் கவனிக்கலன்னு. இனிமே நீ சூர்யா பின்னாடி சுத்துறத நிறுத்தனும். நீ இப்படி பண்றது அவனுக்கு பிடிக்கலையாம்" என்றான்.....
நட்சத்திரா, "ஓகே சீனியர், நீங்க சொன்னதை நான் கேட்கிறேன்" தலையை ஆட்டினாள். விஜய், 'என்ன சொன்னதும் ஓகே சொல்லிட்டா' என நினைத்து விட்டு, "சரி நீ கிளம்பு நான் சொன்னது ஞாபகம் வச்சுக்கோ" என்றான். நட்சத்திர , "ஒ.கே சீனியர்" என்று ஓடி விட்டாள்......
வழக்கம் போல நட்சத்திரா வகுப்பில் சூர்யா போட்டோவை வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.....
"உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன் எழுந்துமே மறுபடி தொலைகிறேன்".....
என்று அவள் மொபைல் பாடிக் கொண்டிருக்க அதை சட்டை செய்யாமல் இவள் அவன் போட்டோவை பார்த்து கொண்டிருந்தாள். ப்ரொஃபசர் யார் மொபைல் அடிக்கிறது என தேடிக்கொண்டிருக்க எல்லோரும் திரும்பி நட்சத்திராவைப் பார்த்தனர்......
விபிஷா, "மச்சி மச்சி" என உளுக்க அப்போதும் அவள் சுய நினைவு பெறவில்லை.
ப்ரொஃபசர், "நட்சத்திரா..." என கத்த திடீரென ஷாக் அடித்தது போல் எழுந்து நின்றவள் பேவென முழிக்க, ப்ரொஃபசர், "கிளாஸ் ரூம்ல மொபைலை சைலன்ட்ல போட மாட்டியா?" எனக் கேட்க அப்போது தான் அவள் மொபைல் அடிப்பதை பார்த்து வேகமாக எடுத்து அதை ஆப் செய்து அவரை பார்த்தாள்....
அவர், "கெட் அவுட்" என கத்த உள்ளுக்குள் சந்தோஷத்தில் குதித்துக் கொண்டு வெளியில் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு வெளியேறினாள்.......
வகுப்பறையை விட்டு வெளியேறி சூர்யா கிளாஸ்க்கு சென்று ஜன்னல் தெரியும்படி அமர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்....
வகுப்பறையை விட்டு வெளியேறிய நட்சத்திரா, சூர்யா கிளாஸ்க்கு சென்று ஜன்னல் தெரியும்படி அமர்ந்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.....
எதேச்சையாக ஜன்னல் பக்கம் திரும்பிய விஜய் இதை பார்த்து விட்டான். விஜய் இவ திருந்த மாட்ட போலயே. காலையில் தலைய தலைய ஆட்டும் போதே நினச்சேன் என நினைத்தவன் சூர்யாவிடம், "மச்சான் பேசாம அந்த நட்சத்திராவுக்கு நீ ஓகே சொல்லிடு" என்றான்.....
சூர்யா அவனை முதுகில் அடித்து , "ஏன்டா எருமை கிளாஸ் கவனிக்கிறதை விட்டுட்டு அவளை பத்தி பேசிட்டு இருக்க" என்றான். விஜய், "மச்சான் எனக்கு என்னமோ அவ உன்ன விடமாட்டான்னு தோணுது" என்றான். சூர்யா, "டேய் எதுக்கு தேவை இல்லாம இப்போ குதர்க்கமாக பேசுற?" என்றான்.....
விஜய், "மச்சான் நான் தேவையில்லாம பேசலை. அங்க பாரு அந்த சேர்ல உட்காந்து உன்னையே அவ வெறிச்சிட்டு இருக்கா" என்றான். சூர்யா அவளை பார்த்துவிட்டு, "மச்சான் இவ ரொம்ப பண்றடா. கிளாஸ் முடியட்டும் அவளுக்கு இருக்கு" என்றான்.......
அவன் கிளாஸ் முடிந்து வரும்வரை அங்கேயே அமர்ந்து இருந்தாள். சூர்யா அவளை நோக்கி கோபமாக வந்தான். இதைப்பார்த்த நட்சத்திராவிற்கு லைட்டா ஜெர்க் ஆகியது. இருந்தாலும் இன்னும் எவ்வளவோ பார்க்க வேண்டியது இருக்கு இதற்கே பயந்தால் எப்படி என தனக்குதானே சமாதானம் செய்து கொண்டு எழுந்து நின்றாள்......
சூர்யா அவளிடம் கோபமாக, "ஏய் உன் மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்க?" என்றான். நட்சத்திரா, "உன்ன தான் நினைச்சுட்டு இருக்கேன்" என்றாள். அவள் கூறிய பதிலில் சூர்யா ஆடி போய்விட்டான். சூர்யா பின் தன்னை சமன்படுத்திவிட்டு "எனக்கு உன்னை பிடிக்கலை, என் பின்னாடி சுத்தாத" என்றான். நட்சத்திரா, "உனக்கு பிடிக்கலைனா என்ன? எனக்கு பிடிச்சிருக்கு" என்றாள்....
அவன், "எனக்கு உன்னை பார்த்தாலே எரிச்சலா வருது" என்றான். நட்சத்திரா, "ஆனா எனக்கு உன்ன பார்த்தாலே காதல் பொங்கி வருது" என்றாள். அவன் கடுப்பாகி "எனக்கு உன் மேல காதலும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. இனிமே என்னை தொல்லை பண்ணாத" என்றான்......
நட்சத்திரா, "உனக்கு லவ் இல்லன்னா பரவாயில்லை. உனக்கும் சேர்த்து நானே லவ் பண்ணுகிறேன் . அப்புறம் உனக்கு பிடிக்கலைன்னா பரவாயில்லை . என்னை லவ் பண்ண கூடாதுன்னு நீ சொல்லக் கூடாது சூர்யா என்று கண்ணடித்தவள், லவ் யூ பேபி. வரட்டா பேபி" என்று கூறிக் கிளம்பினாள்......
அவள் கூறியதில் சூர்யா அதிர்ச்சியாகி அப்படியே நின்றுவிட்டான். விஜய் வந்து, "மச்சான் ஏன்டா இப்படி பேயறைஞ்ச மாதிரி நிற்க்குற?. நீ வந்த வேகத்தைப் பார்த்தா அவளை வச்சு செஞ்சுடுவேன்னு பார்த்தா அவ உன்ன உன்ன செஞ்சுட்டு போயிட்டா போல" எனக் கூறி அவனை பார்த்து சிரித்தான்.....
சூர்யா, "டேய் இப்ப நீ சிரிக்கிறதை நிறுத்தல உன்ன அவ்வளவுதான்" என்றான். விஜய், "போடா டேய் உன் பவுசு எல்லாம் என்கிட்ட தான். இவ்வளவு நேரம் உன்ன வச்சு வாங்கினாலே அவ கிட்ட பேச வேண்டியதுதானே. அப்புறம் மச்சான் எனக்கு என்னமோ அவ உன்னை கரெக்ட் பண்ணிடுவான்னு தோணுது" என்றவன், சூர்யா கீழே எதையோ தேட விஜய் நம்மள அடிக்க தான் கல்லை தேடுறானோ? என்று நினைத்தவன், "சரி அப்புறம் பேசலாம் மச்சான்" என எஸ்கேப் ஆகிவிட்டான்.......
விபிஷா நட்சத்திராவை, "ஏய் எங்கடி போன இவ்வளவு நேரம்?" என்றாள். நட்சத்திரா விபிஷாவை கட்டியணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.."விபி நான் இன்னைக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கேன்" என்றாள். விபி அவளை விலக்கி, "அடியே பப்ளிக் ப்ளேஸ்ல இப்படி பண்றியே , யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க, பைத்தியம்" என்று திட்டினாள்.....
நட்சத்திரா அதையெல்லாம் சிரித்துக்கொண்டே வாங்கினாள். விபி, "ஏன்டி திட்டிட்டு இருக்கேன் நீ சிரிச்சிட்டே இருக்க. முழு பைத்தியம் ஆயிட்டியா?" என்றாள். சதீஷ் வந்து, "நட்சத்திரா என்ன உன் ஆள் உன் கிட்ட பேசினானாமே? கேள்விப்பட்டேன்" என்றான்......
இதைக் கேட்ட விபிஷா, "அதுதான் இந்த மேடம் என்ன கட்டிப்புடிச்சு பாசமழை பொழிந்தாங்களோ?" என்றாள். நட்சத்திரா சிரித்துக்கொண்டே தலையை ஆட்டினாள். விபி, "பார்த்துடி தல கழண்டு விழுந்திட போது என்றவள் சரி சரி கிளம்பு டைம் ஆயிடுச்சு" என்றாள். நட்சத்திரா சிரித்துக்கொண்டே ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினாள்......
இங்கே சங்கர் தன் பெரிய மகன் கிஷோரிடம் பேசிக்கொண்டிருந்தார். "டேய் மகனே என்னடா இன்னைக்காவது அந்த பொண்ணுகிட்ட உன் லவ்வை சொன்னியாடா?" என்றார். கிஷோர், "ஏன் பா நீங்க வேற? . அவளை பார்த்தாலே எனக்கு உள்ளுக்குள்ள உதறுது" என்றான்.....
சங்கர், "ஏன்டா ஒரு கம்பெனி எம்.டியா இருந்துட்டு இப்படி பயப்படுற?. நான்லாம் எவ்வளோ தைரியமா உங்க அம்மாகிட்ட லவ்வ சொன்னேன் தெரியுமா?" என்றார்.....
காபி கொண்டு வந்த ஷீலா, "ஏன் சங்கர் இப்படி பொய் சொல்றீங்க. நீங்க ரெண்டு வருஷமா என்னை தூரத்தில் இருந்து பார்த்துட்டு மட்டும் தான் இருந்தீங்க என்றவர், கிஷோரிடம் டேய் கண்ணா தைரியமா அந்த பொண்ணுகிட்ட போய் பேசுபா" என்றார். கிஷோர், "ட்ரை பண்றேன்மா" என்றான்.....
சரியாக அந்த நேரம் உள்ளே நுழைந்த சூர்யா, "என்ன கிஷோர் ட்ரை பண்ண போற?" என்றான். சங்கர், "டேய் சூர்யா அதுக்கு நீ சரிபட்டு வரமாட்டடா" என்றார்.....
சூர்யா அதிர்ச்சியாகி, "தி கிரேட் சூர்யா என்னால் முடியாதது எதுவுமே கிடையாது" என்றான். ஷீலா, "சூர்யா அவசரப்பட்டு வார்த்தையைவிடாதடா" என்றார்.....
சூர்யா, "நீங்க சும்மா இருங்கம்மா என்றவன், சங்கரிடம் அப்பா சொல்லுங்கப்பா நான் எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன் சொல்லுங்க" என்றான்....
சங்கர், "வேணாம்டா சூர்யா உன்னால அதை செய்ய முடியாதுடா" என்றார் . சூர்யா, "அப்பா நீங்க சொல்லுங்க முதல்ல அப்புறம் நான் அதை செய்யலன்னா என் பெயரை மாத்திக்கிறேன்" என்றான்....
சங்கர், "பேச்சு மாறக் கூடாதுடா மகனே!" என்றார். சூர்யா, "சொல்லப் போறீங்களா? இல்லையா?" என்றான்.......
கவிதைகள் தொடரும்.....