அத்தியாயம் – 2
அமைதியான பௌர்ணமி இரவு ஊரடங்கிய வேளையில் கருப்பு நிற ஜாகுவார் கார் சீரான வேகத்துடன் போய்க் கொண்டிருந்தது. நாள் முழுவதும் ஓடி உழைத்து அசதியில் உறங்கும் மக்களிடையே குற்றங்கள் புரியும் மனங்கள் மட்டும் உறங்காது விழித்திருந்தது. கடற்கரையின் இருளில் காரை நிறுத்தி பூட்டிவிட்டு தன் நீள கால்களை வேக வேகமாக எடுத்து வைத்து நாலே எட்டில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகின் அருகே வந்தான். அவன் படகின் அருகில் வந்த மறுநிமிடம் செடிகளின் இடையில் இருந்து படு வேகமாக ஒருவன் ஓடி வந்து தன் இரு கைகளையும் பவ்யமாக கட்டிக் கொண்டு ஆர்ஜேவின் முன் நின்றான்.
படகில் தாவி ஏறியவன் அங்கு நின்றிருந்தவனிடம் காரை காட்டி பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு துடுப்புப் போட ஆரம்பித்தான். ஆர்ஜே சிறிது தூரம் செல்லும் வரை தன் தலையை சொறிந்தபடியே பார்த்துக் கொண்டிருந்தவன் மெதுவாக காரினருகில் சென்று படுத்துக் கொண்டான்.
இரு மருங்கிலும் குறுமரங்களும் செடிகளும் நெருக்கமாக வளர்ந்திருக்கும் சதுப்புநில காடுகளில் பகலில் பார்க்கும் போது ரம்யமாக தெரிந்த காட்சிகள் இரவில் ஒரு வித பயத்தையே கொடுத்தன. எப்பேர்பட்ட பலவானும் அந்த இருட்டில் அக்காடுகளில் பயணப்படும் போது சற்று சலனப்பட்டு தான் போவான். ஆனால் ஆர்ஜேவோ எதற்கும் அஞ்சாமல் நெஞ்சுரமும் உறுதியும் கொண்டு தான் செல்ல வேண்டிய இடத்திற்கு அந்த இரவிலும் மிகச் சரியாக வந்து சேர்ந்தான்....
பிச்சாவரத்தில் பில்லுமேடு என்கிற அந்த திட்டு சுனாமிக்கு முன்பு மீனவர்கள் வாழ்ந்தப் பகுதி தான். ஆனால் சுனாமியால் அங்கிருந்தவர்கள் அழிந்த போக, அரசாங்கம் அங்கு குடிபுகுவதை தடை செய்தது. படகை கரையில் கொண்டு நிறுத்தி வைத்து விட்டு காட்டிற்குள் நடக்க ஆரம்பித்தான்.விழுந்து கிடந்த சருகுகளின் மீது அவன் நடக்கும் போது ஏற்படுத்திய ஓசை அங்கிருந்த அமைதியான சூழலில் திகிலை ஏற்படுத்தியது. ஒரு கையில் டார்சும் மறு
கையில் சிறு கத்தியும் வைத்துக் கொண்டு வழியில் குறுக்கிட்ட செடியின் கிளைகளை வெட்டி வழி ஏற்படுத்திக் கொண்டே நடந்தான். ஆளரவமின்றி போனதால் எங்கும் செடிகொடிகள் செழித்து வளர்ந்து கிடந்தன. சிறிது தூரம் போனதும், செடிகளின் ஊடே சல சலவென்று சத்தம் எழுந்தது.ஒரு நிமிடம் தயங்கியவன் வேகமாக நடக்க ஆரம்பித்தான். எவ்வளவு விரைவாக நடக்க முடியுமோ நடந்து தான் செல்ல வேண்டிய இடத்தை அடைந்து விட வேண்டும் என்று நினைத்து நடந்தான். நரி ஒன்று தன்னை கவனித்து விட்டு வந்து கொண்டிருக்கின்றது என்பது புரிந்து போனது. ஒற்றை நரி என்றால்
சமாளித்து விடலாம். கூட்டமாக வந்து விட்டால் தப்பிப்பது சிரமம் என்பதை புரிந்தவன் நடையை வேகப்படுத்தினான்.
அவனது நோக்கம் புரிந்த நரி ஊ...ஊ...என்று தன் கூட்டாளிகளை துணைக்க அழைக்க ஊளையிட ஆரம்பித்தது. நரியின் ஊளையை கேட்ட மற்ற நரிகளும் அதற்கு பதில் கொடுக்க ஓநாய்களும் அவற்றுடன் சேர்ந்து கொண்டது. அதை கேட்டதும் ஆர்ஜே ஓட ஆரம்பித்தான். அவன் சுதாரித்து கொண்டதை அறிந்த நரி எங்காவது தன் இரை தன்னிடம் இருந்து போய்விடுமோ என்ற பயத்தில் அவன் மீது பாய்ந்து விட்டது.
அமைதியான பௌர்ணமி இரவு ஊரடங்கிய வேளையில் கருப்பு நிற ஜாகுவார் கார் சீரான வேகத்துடன் போய்க் கொண்டிருந்தது. நாள் முழுவதும் ஓடி உழைத்து அசதியில் உறங்கும் மக்களிடையே குற்றங்கள் புரியும் மனங்கள் மட்டும் உறங்காது விழித்திருந்தது. கடற்கரையின் இருளில் காரை நிறுத்தி பூட்டிவிட்டு தன் நீள கால்களை வேக வேகமாக எடுத்து வைத்து நாலே எட்டில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகின் அருகே வந்தான். அவன் படகின் அருகில் வந்த மறுநிமிடம் செடிகளின் இடையில் இருந்து படு வேகமாக ஒருவன் ஓடி வந்து தன் இரு கைகளையும் பவ்யமாக கட்டிக் கொண்டு ஆர்ஜேவின் முன் நின்றான்.
படகில் தாவி ஏறியவன் அங்கு நின்றிருந்தவனிடம் காரை காட்டி பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு துடுப்புப் போட ஆரம்பித்தான். ஆர்ஜே சிறிது தூரம் செல்லும் வரை தன் தலையை சொறிந்தபடியே பார்த்துக் கொண்டிருந்தவன் மெதுவாக காரினருகில் சென்று படுத்துக் கொண்டான்.
இரு மருங்கிலும் குறுமரங்களும் செடிகளும் நெருக்கமாக வளர்ந்திருக்கும் சதுப்புநில காடுகளில் பகலில் பார்க்கும் போது ரம்யமாக தெரிந்த காட்சிகள் இரவில் ஒரு வித பயத்தையே கொடுத்தன. எப்பேர்பட்ட பலவானும் அந்த இருட்டில் அக்காடுகளில் பயணப்படும் போது சற்று சலனப்பட்டு தான் போவான். ஆனால் ஆர்ஜேவோ எதற்கும் அஞ்சாமல் நெஞ்சுரமும் உறுதியும் கொண்டு தான் செல்ல வேண்டிய இடத்திற்கு அந்த இரவிலும் மிகச் சரியாக வந்து சேர்ந்தான்....
பிச்சாவரத்தில் பில்லுமேடு என்கிற அந்த திட்டு சுனாமிக்கு முன்பு மீனவர்கள் வாழ்ந்தப் பகுதி தான். ஆனால் சுனாமியால் அங்கிருந்தவர்கள் அழிந்த போக, அரசாங்கம் அங்கு குடிபுகுவதை தடை செய்தது. படகை கரையில் கொண்டு நிறுத்தி வைத்து விட்டு காட்டிற்குள் நடக்க ஆரம்பித்தான்.விழுந்து கிடந்த சருகுகளின் மீது அவன் நடக்கும் போது ஏற்படுத்திய ஓசை அங்கிருந்த அமைதியான சூழலில் திகிலை ஏற்படுத்தியது. ஒரு கையில் டார்சும் மறு
கையில் சிறு கத்தியும் வைத்துக் கொண்டு வழியில் குறுக்கிட்ட செடியின் கிளைகளை வெட்டி வழி ஏற்படுத்திக் கொண்டே நடந்தான். ஆளரவமின்றி போனதால் எங்கும் செடிகொடிகள் செழித்து வளர்ந்து கிடந்தன. சிறிது தூரம் போனதும், செடிகளின் ஊடே சல சலவென்று சத்தம் எழுந்தது.ஒரு நிமிடம் தயங்கியவன் வேகமாக நடக்க ஆரம்பித்தான். எவ்வளவு விரைவாக நடக்க முடியுமோ நடந்து தான் செல்ல வேண்டிய இடத்தை அடைந்து விட வேண்டும் என்று நினைத்து நடந்தான். நரி ஒன்று தன்னை கவனித்து விட்டு வந்து கொண்டிருக்கின்றது என்பது புரிந்து போனது. ஒற்றை நரி என்றால்
சமாளித்து விடலாம். கூட்டமாக வந்து விட்டால் தப்பிப்பது சிரமம் என்பதை புரிந்தவன் நடையை வேகப்படுத்தினான்.
அவனது நோக்கம் புரிந்த நரி ஊ...ஊ...என்று தன் கூட்டாளிகளை துணைக்க அழைக்க ஊளையிட ஆரம்பித்தது. நரியின் ஊளையை கேட்ட மற்ற நரிகளும் அதற்கு பதில் கொடுக்க ஓநாய்களும் அவற்றுடன் சேர்ந்து கொண்டது. அதை கேட்டதும் ஆர்ஜே ஓட ஆரம்பித்தான். அவன் சுதாரித்து கொண்டதை அறிந்த நரி எங்காவது தன் இரை தன்னிடம் இருந்து போய்விடுமோ என்ற பயத்தில் அவன் மீது பாய்ந்து விட்டது.