அத்தியாயம் – 21
பிம்லா தேவியிடம் பேசிவிட்டு நேரே தங்களின் அறைக்கு வேக நடையோடு நுழைந்தாள். அங்கு தான் இதுவரை நினைத்துக் கூட பார்க்காத இடத்தில் அமர்ந்திருந்தவளைக் கண்டதும் மனதில் பொங்கிக் கொண்டிருந்த உணர்வுகள் வெடித்துக் கிளம்பியது.
வர்ஷினி கட்டிலின் ஓரத்தில் எந்நேரமும் விழுந்து விடுபவளைப் போல ஒருவித சங்கடத்துடன் அமர்ந்திருந்தாள். கதவு வேகமாகத் திறக்கப்பட்டதும் உள்ளே ஒரு பெண் நுழைந்ததையும் பார்த்தவள் அவளின் கோபம் முகம் கண்டு திகைத்து போனாள்.
கேஷ்வியோ “ஏய்! என்ன தைரியம் இருந்தா இந்த ரூமுக்குள்ள வந்ததும் இல்லாம கட்டிலில் வேற உட்கார்ந்திருக்க” என்று கத்திக் கொண்டே அருகே சென்றாள்.
அவளின் பேச்சில் அதிர்ந்து போய் கட்டிலில் இருந்து எழுந்து நின்று தயக்கத்துடன் அவளைப் பார்த்தாள்.
கேஷ்வியோ அவளை முறைத்து “அவுட்! வெளியே போ!” என்று கத்தினாள்.
வர்ஷினிக்கு அவளை யாரென்று தெரியவில்லை. ஒருமுறை மட்டுமே செய்தித்தாளில் பார்த்திருந்தவளுக்கு அவள் சித்தார்த்தின் மனைவி என்று தெரியவில்லை. அதனால் கலக்கத்துடன் கூடிய விழிகளுடன் அவளை பார்த்தபடியே அங்கிருந்து நகராமல் நின்றாள்.
தான் அத்தனை சொல்லியும் அப்படியே நிற்பவளின் மீது கொலைவெறி எழ, ஆத்திரத்தோடு அவளது கையைப் பற்றி தரதரவென்று இழுத்துச் சென்று அறையிலிருந்து வெளியே தள்ளினாள். அவள் தள்ளவும் சரியாக அந்நேரம் சித்தார்த் வரவும் வர்ஷினி அவன் மீது மோதி நின்றாள்.
கேஷ்வி அவளை வெளியே தள்ளியதை பார்த்தவன் வேக நடையுடன் வந்து தாங்கி இருக்க, அவனது கண்களோ சிவந்து கோபத்தை கக்கியது. வர்ஷினியை பாதுகாப்பாக தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டவன் “என்ன பண்ணிட்டு இருக்க கேஷ்வி? எதுக்கு இவளை வெளியே தள்ளின?”
அவன் அவளை அணைத்துக் கொண்டு நிற்பதைக் கண்டதும் நெஞ்சுக்குள் தீயாய் தகிக்க “நம்முடைய அறையில் மூணாவது மனுஷிக்கு என்ன வேலை?” ஈன்றாள் ஏகத்தாளமாக.
“அதை தான் நானும் கேட்கிறேன்? உனக்கு இங்கே என்ன வேலை?” என்றான் அதே நக்கலுடன்.
“சித்தார்த்! நீயும் நானும் கணவன் மனைவி”.
இதழில் எழுந்த ஏளனப் புன்னகையுடன் வர்ஷுவை தன்னோடு இழுத்தணைத்துக் கொண்டவன் “நானும் இவளும் தான் கணவன், மனைவி கேஷ்வி. உனக்கும் எனக்கும் நடந்தது பிசினெஸ் டீல். அவ்வளவு தான்”
“வேண்டாம் சித்தார்த்! தப்பா யோசிக்கிற. உனக்கு எல்லாவிதத்துலேயும் பொருத்தமா இருக்கிறது நான் தான்”.
‘அதை நான் சொல்லணும்”.
இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த வர்ஷினிக்கு உடல் எல்லாம் அருவெருத்துப் போனது. தன்னை உருகி உருகி காதலித்தவன் இன்னொருத்தியையும் மணந்திருக்கிறான். அது மறுக்க முடியாத உண்மை. அவனது காதலால் அனைத்தையும் இழந்து இன்று நிராதரவாக நின்று கொண்டிருக்கிறோம். அவன் தனக்கு மட்டும் கணவன் இல்லை இன்னொருத்திக்கும் அந்த உரிமையை கொடுத்திருக்கிறான் எனும் போது அவன் மீது வெறுப்பே எழுந்தது. ஆயிரம் காரணங்கள் கூறினாலும் நடந்தவற்றை இல்லை என்று மறுக்க முடியாது என்று எண்ணியவள் அவனிடமிருந்து உதறிக் கொண்டு தள்ளி நின்றாள்.
அப்போதும் இருவரின் பேச்சும் நிற்காமல் போய் கொண்டிருக்க “கொஞ்சம் நிறுத்துறீங்களா?’ என்று சப்தம் போட்டாள். இருவரும் அதிர்ந்து அவளை பார்க்க, அவளோ கேஷ்வியை நேராகப் பார்த்து “நான் இங்கே எதையும் எதிர்பார்த்து வரல. என்னால உங்க வாழ்க்கையில் எந்த பிரச்னையும் வராது. என்னைக்கு இருந்தாலும் இது உங்க வாழ்க்கை” என்று அவள் கூறியதும் கேஷ்வியின் முகத்தில் மின்னல் எழுந்து மறைந்தது.
சித்தார்த்தோ அதிர்ந்து “மது! என்ன பேசுற?” என்றான் அதட்டலாக.
“வேறென்ன பேச? எப்படி பேச? இது தானே நிஜம்”.
“வேண்டாம் மது! எதையும் பேசாதே! நீ உள்ளே வா” என்று அவளது கைகளைப் பற்றி அறைக்குள் அழைத்துச் செல்ல முயன்றான்.
அவளோ நகர மறுத்து அழுத்தமாக நிற்க, பார்த்துக் கொண்டிருந்த கேஷ்வியின் முகத்தில் உற்சாகப் புன்னகை. இரு கைகளையும் கட்டிக் கொண்டு வாசலை மறைத்தபடி நின்றவள் “சித்து! அவங்களை கெஸ்ட் ரூமில் கொண்டு விட்டுட்டு வாங்க. அவங்களுக்கு தெரியுது அவங்க இடம் எதுவென்று” என்றாள் கிண்டலாக.
வர்ஷினியின் பேச்சில் காயப்பட்டிருந்தவனை கேஷ்வியின் பேச்சு கொதிக்க வைத்தது.
“ஏய்! நகரு” என்றவன் இருவரும் எதிர்பார்க்கும் முன் வர்ஷினியை அலேக்காக தூக்கிக் கொண்டு தன்னறைக்குள் நுழைந்தான்.
அதில் அதிர்ந்து போய் விலகி வழிவிட, கையில் துள்ளிக் கொண்டிருந்தவளை படுக்கையில் விட்டு விட்டு “நான் உன் மேல வைத்திருந்த காதல் பொய்யாய் போய் இருக்கலாம். நீ என் மேல வைத்திருந்த காதல் உண்மைன்னா இப்படியே இரு” என்றான்.
பிம்லா தேவியிடம் பேசிவிட்டு நேரே தங்களின் அறைக்கு வேக நடையோடு நுழைந்தாள். அங்கு தான் இதுவரை நினைத்துக் கூட பார்க்காத இடத்தில் அமர்ந்திருந்தவளைக் கண்டதும் மனதில் பொங்கிக் கொண்டிருந்த உணர்வுகள் வெடித்துக் கிளம்பியது.
வர்ஷினி கட்டிலின் ஓரத்தில் எந்நேரமும் விழுந்து விடுபவளைப் போல ஒருவித சங்கடத்துடன் அமர்ந்திருந்தாள். கதவு வேகமாகத் திறக்கப்பட்டதும் உள்ளே ஒரு பெண் நுழைந்ததையும் பார்த்தவள் அவளின் கோபம் முகம் கண்டு திகைத்து போனாள்.
கேஷ்வியோ “ஏய்! என்ன தைரியம் இருந்தா இந்த ரூமுக்குள்ள வந்ததும் இல்லாம கட்டிலில் வேற உட்கார்ந்திருக்க” என்று கத்திக் கொண்டே அருகே சென்றாள்.
அவளின் பேச்சில் அதிர்ந்து போய் கட்டிலில் இருந்து எழுந்து நின்று தயக்கத்துடன் அவளைப் பார்த்தாள்.
கேஷ்வியோ அவளை முறைத்து “அவுட்! வெளியே போ!” என்று கத்தினாள்.
வர்ஷினிக்கு அவளை யாரென்று தெரியவில்லை. ஒருமுறை மட்டுமே செய்தித்தாளில் பார்த்திருந்தவளுக்கு அவள் சித்தார்த்தின் மனைவி என்று தெரியவில்லை. அதனால் கலக்கத்துடன் கூடிய விழிகளுடன் அவளை பார்த்தபடியே அங்கிருந்து நகராமல் நின்றாள்.
தான் அத்தனை சொல்லியும் அப்படியே நிற்பவளின் மீது கொலைவெறி எழ, ஆத்திரத்தோடு அவளது கையைப் பற்றி தரதரவென்று இழுத்துச் சென்று அறையிலிருந்து வெளியே தள்ளினாள். அவள் தள்ளவும் சரியாக அந்நேரம் சித்தார்த் வரவும் வர்ஷினி அவன் மீது மோதி நின்றாள்.
கேஷ்வி அவளை வெளியே தள்ளியதை பார்த்தவன் வேக நடையுடன் வந்து தாங்கி இருக்க, அவனது கண்களோ சிவந்து கோபத்தை கக்கியது. வர்ஷினியை பாதுகாப்பாக தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டவன் “என்ன பண்ணிட்டு இருக்க கேஷ்வி? எதுக்கு இவளை வெளியே தள்ளின?”
அவன் அவளை அணைத்துக் கொண்டு நிற்பதைக் கண்டதும் நெஞ்சுக்குள் தீயாய் தகிக்க “நம்முடைய அறையில் மூணாவது மனுஷிக்கு என்ன வேலை?” ஈன்றாள் ஏகத்தாளமாக.
“அதை தான் நானும் கேட்கிறேன்? உனக்கு இங்கே என்ன வேலை?” என்றான் அதே நக்கலுடன்.
“சித்தார்த்! நீயும் நானும் கணவன் மனைவி”.
இதழில் எழுந்த ஏளனப் புன்னகையுடன் வர்ஷுவை தன்னோடு இழுத்தணைத்துக் கொண்டவன் “நானும் இவளும் தான் கணவன், மனைவி கேஷ்வி. உனக்கும் எனக்கும் நடந்தது பிசினெஸ் டீல். அவ்வளவு தான்”
“வேண்டாம் சித்தார்த்! தப்பா யோசிக்கிற. உனக்கு எல்லாவிதத்துலேயும் பொருத்தமா இருக்கிறது நான் தான்”.
‘அதை நான் சொல்லணும்”.
இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த வர்ஷினிக்கு உடல் எல்லாம் அருவெருத்துப் போனது. தன்னை உருகி உருகி காதலித்தவன் இன்னொருத்தியையும் மணந்திருக்கிறான். அது மறுக்க முடியாத உண்மை. அவனது காதலால் அனைத்தையும் இழந்து இன்று நிராதரவாக நின்று கொண்டிருக்கிறோம். அவன் தனக்கு மட்டும் கணவன் இல்லை இன்னொருத்திக்கும் அந்த உரிமையை கொடுத்திருக்கிறான் எனும் போது அவன் மீது வெறுப்பே எழுந்தது. ஆயிரம் காரணங்கள் கூறினாலும் நடந்தவற்றை இல்லை என்று மறுக்க முடியாது என்று எண்ணியவள் அவனிடமிருந்து உதறிக் கொண்டு தள்ளி நின்றாள்.
அப்போதும் இருவரின் பேச்சும் நிற்காமல் போய் கொண்டிருக்க “கொஞ்சம் நிறுத்துறீங்களா?’ என்று சப்தம் போட்டாள். இருவரும் அதிர்ந்து அவளை பார்க்க, அவளோ கேஷ்வியை நேராகப் பார்த்து “நான் இங்கே எதையும் எதிர்பார்த்து வரல. என்னால உங்க வாழ்க்கையில் எந்த பிரச்னையும் வராது. என்னைக்கு இருந்தாலும் இது உங்க வாழ்க்கை” என்று அவள் கூறியதும் கேஷ்வியின் முகத்தில் மின்னல் எழுந்து மறைந்தது.
சித்தார்த்தோ அதிர்ந்து “மது! என்ன பேசுற?” என்றான் அதட்டலாக.
“வேறென்ன பேச? எப்படி பேச? இது தானே நிஜம்”.
“வேண்டாம் மது! எதையும் பேசாதே! நீ உள்ளே வா” என்று அவளது கைகளைப் பற்றி அறைக்குள் அழைத்துச் செல்ல முயன்றான்.
அவளோ நகர மறுத்து அழுத்தமாக நிற்க, பார்த்துக் கொண்டிருந்த கேஷ்வியின் முகத்தில் உற்சாகப் புன்னகை. இரு கைகளையும் கட்டிக் கொண்டு வாசலை மறைத்தபடி நின்றவள் “சித்து! அவங்களை கெஸ்ட் ரூமில் கொண்டு விட்டுட்டு வாங்க. அவங்களுக்கு தெரியுது அவங்க இடம் எதுவென்று” என்றாள் கிண்டலாக.
வர்ஷினியின் பேச்சில் காயப்பட்டிருந்தவனை கேஷ்வியின் பேச்சு கொதிக்க வைத்தது.
“ஏய்! நகரு” என்றவன் இருவரும் எதிர்பார்க்கும் முன் வர்ஷினியை அலேக்காக தூக்கிக் கொண்டு தன்னறைக்குள் நுழைந்தான்.
அதில் அதிர்ந்து போய் விலகி வழிவிட, கையில் துள்ளிக் கொண்டிருந்தவளை படுக்கையில் விட்டு விட்டு “நான் உன் மேல வைத்திருந்த காதல் பொய்யாய் போய் இருக்கலாம். நீ என் மேல வைத்திருந்த காதல் உண்மைன்னா இப்படியே இரு” என்றான்.