அத்தியாயம் – 24
நடப்பது எதையும் அறியாத மூவரும் தேவ்வை இதில் சிக்க வைத்து தப்பித்துக் கொள்ளலாம் என்று மகளுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். அந்நேரம் அவர்கள் இருந்த அறையின் கதவு தட்டப்பட, தினு சென்று திறக்கவும் பிம்லாவின் பிஎ டென்ஷனுடன் உள்ளே நுழைந்தான்.
“மேம்! தேவ் சார் ஷேர்ஹோல்டர்களை மீட் பண்ணி பேசிட்டு இருக்கார்” என்கிற குண்டைத் தூக்கிப் போட்டான்.
அதைக் கேட்டதும் அங்கிருந்த மூவருக்கும் அதிர்ச்சி. பிம்லா நாற்காலியை விட்டு எழுந்து கொண்டு “என்ன! என்னை கேட்காம எப்படி?” என்றார் அவனிடம்.
“நான் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டார் மேம்” என்றான் பதட்டத்துடன்.
தினு அவசரமாக அங்கிருந்து செல்ல முயல “எங்கே போற தினு? இப்போ போகாதே! அங்கே போய் கலாட்டா எதுவும் செஞ்சா பிம்லாவுக்கு தான் கஷ்டம். அமைதியா இரு. என்ன நடக்குதுன்னு பார்ப்போம்” என்றார் நானாஜி.
“அவனுக்கு எதுக்கு இந்த வேலை பப்பா? பிம்லா பதில் சொல்ல வேண்டிய கேள்விக்கு இவன் என்ன சொல்லப் போறான்?” என்றான் எரிச்சலாக.
“அவனை நன்றாக கவனின்னு சொன்னப்ப அதை சரியா செய்யல நீ. அவன் எப்போதும் நீரஜுக்கு சப்போர்ட் செய்றவன். நீ உன் வேலையை சரியா செஞ்சிருந்தா இந்த பிரச்சனை வந்திருக்காது” என்றார் கோபமாக.
தந்தையிடம் பதில் சொல்ல முடியாமல் அடிப்பட்ட புலி போல அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான். பிம்லாவோ ஏசி அறையிலும் வியர்க்க விறுவிறுக்க, மனதில் பல குழப்பங்களுடன் அமர்ந்திருந்தார்.
அவர்கள் அனைவரையும் டென்ஷனில் வைத்திருந்த தேவ் மீட்டிங்கை முடித்து விட்டு அவர்களுக்குள் டிஸ்கஸ் செய்ய டைம் கொடுத்துவிட்டு தங்கையைப் பார்க்க வந்தார். அவர் அறையினுள் நுழைந்ததுமே பாய்ந்து அவரின் சட்டையைப் பிடித்த தினுவை “என்னாச்சு தினு? என்ன டென்ஷன்?” என்றார் எந்தவித பதட்டமும் இல்லாமல்.
அவன் பதில் சொல்லாமல் சட்டையை அழுத்திப் பிடித்திருக்க பிம்லாவோ “நீ எதுக்கு அவர்களை மீட் பண்ணுனீங்க? அதுவும் என்னை கேட்காமல் எதுக்கு மீட்டிங் அரேஞ் செஞ்சீங்க?” என்றார் கோபமாக.
அதைக் கேட்டதும் தினுவின் கைகளை சட்டையிலிருந்து மெதுவாக எடுத்து விட்டவர் “இதுக்கா எல்லோரும் கோபமா இருக்கீங்க?” என்றவரின் பார்வை தந்தையின் மீது படிந்து விலகியது.
கூர்மையான பார்வையுடன் “எங்களை கேட்காம, கலந்துக்காம நீ மட்டும் எப்படி மீட்டிங்கை ஏற்பாடு செய்யலாம்?” என்றார் நானாஜி.
தந்தையின் முன் சென்று அமர்ந்தவர் “இத்தனை வருடம் உங்களோட இருக்கேன் பப்பா. ஒரு விஷயத்தை எப்படி ஹாண்டில் செய்யணும்னு கூடவா தெரியாது. அதுவும் பிம்லாவுக்கு குடும்பத்தில் நிறைய பிரச்சனை. அவளே அந்த டென்ஷனில் இருக்கிறாள் அதனால தான் நானே இதை பார்த்துக்கலாம்னு முடிவு செஞ்சேன்” என்றார்.
“பிஸ்னெஸ் பொறுத்தவரை யாரும் யாரையும் கேட்காம எதையும் செய்வது இல்லை தேவ். முக்கியமா என்னிடம் சொல்லாமல் எந்த முடிவுகளும் எடுப்பதில்லைன்னு உனக்கு தெரியாதா?’ என்றார் கத்திப் போன்ற குரலில்.
“நீங்க சொல்றது எல்லாம் சரி தான் பப்பா. ஆனா பிம்லா கஷ்டத்தில் இருக்காளே அவளுக்கு உதவனும்னு தான் இந்த முடிவு எடுத்தேன்” என்றார்.
அந்நேரம் மீண்டும் கதவு தட்டப்பட் பிஎ உள்ளே வந்தான். ஷேர்ஹோல்டர்கள் அனைவரையும் அழைப்பதாக கூறினான். நானாஜிக்கு எதுவோ சரியில்லை என்கிற எண்ணம் எழ தினுவை பார்த்தார். அவனுக்குமே அப்படித்தான் தோன்றியது. பிம்லாவோ அவர்களின் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது என்கிற சிந்தனையுடனே கிளம்பினார்.
அந்த சூழலே ஒருவித இறுக்கத்துடன் அமைய, அனைவரும் மீட்டிங் ஹாலிற்கு சென்றனர். அங்கு பிம்லா நடுநாயகமாக அமர, அவரின் ஒருபுறம் நானாஜி அமர்ந்து கொள்ள, மறுபுறம் தேவ் அமர்ந்தார். மற்றொரு நாற்காலியில் அமர்ந்து அனைவரின் முகத்திலும் தெரியும் உணர்வுகளை ஆராய்ந்து கொண்டிருந்தான் தினு.
அவர்கள் அனைவரையும் கண்டதும் அங்கு பேரமைதி சூழ்ந்தது. ஒரு சில நிமிடங்கள் யார் ஆரம்பிப்பது என்கிற யோசனையுடன் செல்ல, மூத்தவர் ஒருவர் மெல்ல ஆரம்பித்தார். நடந்தவற்றில் முழு தவறும் பிம்லாவின் மீது இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதால் வரப் போகும் நஷ்டம் அனைத்தையும் அவர் மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
மற்றவர்களும் அவரின் பேச்சிற்கு ஆதரவு தெரிவிக்க, பிம்லா அதிர்ந்து போனார். அவரின் கனவு ப்ராஜெக்ட் இது. பல கோடிகளை கொட்டும் என்று எதிர்பார்த்து ஆரம்பித்த ஒன்று. அதற்கு முன்னேற்பாடாக சில கோடிகளை செலவழித்து இருக்கிறார். மொத்த நஷ்டத்தையும் தானே ஏற்றால் தன்னுடைய இத்தனை வருட கையிருப்பும் குறையும் அபாயம் இருப்பதாக தோன்ற அவர்களின் முடிவை மறுத்தார்.
“இதை என்னால் ஏற்க முடியாது. இந்த பிஸ்னெஸ் மற்றும் கம்பனிகள் எல்லாமே சித்தார்த்திற்காக நான் பார்த்துக் கொள்வது. அவனுடைய சம்மதத்தின் பேரில் தான் இந்த ப்ராஜெக்ட்டில் என்னுடைய தலையீடு இருந்தது. அப்படி இருக்கும் போது நான் மட்டுமே இந்த தவறுக்கு எப்படி பொறுப்பேற்க முடியும்?”.
நடப்பது எதையும் அறியாத மூவரும் தேவ்வை இதில் சிக்க வைத்து தப்பித்துக் கொள்ளலாம் என்று மகளுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். அந்நேரம் அவர்கள் இருந்த அறையின் கதவு தட்டப்பட, தினு சென்று திறக்கவும் பிம்லாவின் பிஎ டென்ஷனுடன் உள்ளே நுழைந்தான்.
“மேம்! தேவ் சார் ஷேர்ஹோல்டர்களை மீட் பண்ணி பேசிட்டு இருக்கார்” என்கிற குண்டைத் தூக்கிப் போட்டான்.
அதைக் கேட்டதும் அங்கிருந்த மூவருக்கும் அதிர்ச்சி. பிம்லா நாற்காலியை விட்டு எழுந்து கொண்டு “என்ன! என்னை கேட்காம எப்படி?” என்றார் அவனிடம்.
“நான் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டார் மேம்” என்றான் பதட்டத்துடன்.
தினு அவசரமாக அங்கிருந்து செல்ல முயல “எங்கே போற தினு? இப்போ போகாதே! அங்கே போய் கலாட்டா எதுவும் செஞ்சா பிம்லாவுக்கு தான் கஷ்டம். அமைதியா இரு. என்ன நடக்குதுன்னு பார்ப்போம்” என்றார் நானாஜி.
“அவனுக்கு எதுக்கு இந்த வேலை பப்பா? பிம்லா பதில் சொல்ல வேண்டிய கேள்விக்கு இவன் என்ன சொல்லப் போறான்?” என்றான் எரிச்சலாக.
“அவனை நன்றாக கவனின்னு சொன்னப்ப அதை சரியா செய்யல நீ. அவன் எப்போதும் நீரஜுக்கு சப்போர்ட் செய்றவன். நீ உன் வேலையை சரியா செஞ்சிருந்தா இந்த பிரச்சனை வந்திருக்காது” என்றார் கோபமாக.
தந்தையிடம் பதில் சொல்ல முடியாமல் அடிப்பட்ட புலி போல அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான். பிம்லாவோ ஏசி அறையிலும் வியர்க்க விறுவிறுக்க, மனதில் பல குழப்பங்களுடன் அமர்ந்திருந்தார்.
அவர்கள் அனைவரையும் டென்ஷனில் வைத்திருந்த தேவ் மீட்டிங்கை முடித்து விட்டு அவர்களுக்குள் டிஸ்கஸ் செய்ய டைம் கொடுத்துவிட்டு தங்கையைப் பார்க்க வந்தார். அவர் அறையினுள் நுழைந்ததுமே பாய்ந்து அவரின் சட்டையைப் பிடித்த தினுவை “என்னாச்சு தினு? என்ன டென்ஷன்?” என்றார் எந்தவித பதட்டமும் இல்லாமல்.
அவன் பதில் சொல்லாமல் சட்டையை அழுத்திப் பிடித்திருக்க பிம்லாவோ “நீ எதுக்கு அவர்களை மீட் பண்ணுனீங்க? அதுவும் என்னை கேட்காமல் எதுக்கு மீட்டிங் அரேஞ் செஞ்சீங்க?” என்றார் கோபமாக.
அதைக் கேட்டதும் தினுவின் கைகளை சட்டையிலிருந்து மெதுவாக எடுத்து விட்டவர் “இதுக்கா எல்லோரும் கோபமா இருக்கீங்க?” என்றவரின் பார்வை தந்தையின் மீது படிந்து விலகியது.
கூர்மையான பார்வையுடன் “எங்களை கேட்காம, கலந்துக்காம நீ மட்டும் எப்படி மீட்டிங்கை ஏற்பாடு செய்யலாம்?” என்றார் நானாஜி.
தந்தையின் முன் சென்று அமர்ந்தவர் “இத்தனை வருடம் உங்களோட இருக்கேன் பப்பா. ஒரு விஷயத்தை எப்படி ஹாண்டில் செய்யணும்னு கூடவா தெரியாது. அதுவும் பிம்லாவுக்கு குடும்பத்தில் நிறைய பிரச்சனை. அவளே அந்த டென்ஷனில் இருக்கிறாள் அதனால தான் நானே இதை பார்த்துக்கலாம்னு முடிவு செஞ்சேன்” என்றார்.
“பிஸ்னெஸ் பொறுத்தவரை யாரும் யாரையும் கேட்காம எதையும் செய்வது இல்லை தேவ். முக்கியமா என்னிடம் சொல்லாமல் எந்த முடிவுகளும் எடுப்பதில்லைன்னு உனக்கு தெரியாதா?’ என்றார் கத்திப் போன்ற குரலில்.
“நீங்க சொல்றது எல்லாம் சரி தான் பப்பா. ஆனா பிம்லா கஷ்டத்தில் இருக்காளே அவளுக்கு உதவனும்னு தான் இந்த முடிவு எடுத்தேன்” என்றார்.
அந்நேரம் மீண்டும் கதவு தட்டப்பட் பிஎ உள்ளே வந்தான். ஷேர்ஹோல்டர்கள் அனைவரையும் அழைப்பதாக கூறினான். நானாஜிக்கு எதுவோ சரியில்லை என்கிற எண்ணம் எழ தினுவை பார்த்தார். அவனுக்குமே அப்படித்தான் தோன்றியது. பிம்லாவோ அவர்களின் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது என்கிற சிந்தனையுடனே கிளம்பினார்.
அந்த சூழலே ஒருவித இறுக்கத்துடன் அமைய, அனைவரும் மீட்டிங் ஹாலிற்கு சென்றனர். அங்கு பிம்லா நடுநாயகமாக அமர, அவரின் ஒருபுறம் நானாஜி அமர்ந்து கொள்ள, மறுபுறம் தேவ் அமர்ந்தார். மற்றொரு நாற்காலியில் அமர்ந்து அனைவரின் முகத்திலும் தெரியும் உணர்வுகளை ஆராய்ந்து கொண்டிருந்தான் தினு.
அவர்கள் அனைவரையும் கண்டதும் அங்கு பேரமைதி சூழ்ந்தது. ஒரு சில நிமிடங்கள் யார் ஆரம்பிப்பது என்கிற யோசனையுடன் செல்ல, மூத்தவர் ஒருவர் மெல்ல ஆரம்பித்தார். நடந்தவற்றில் முழு தவறும் பிம்லாவின் மீது இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதால் வரப் போகும் நஷ்டம் அனைத்தையும் அவர் மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
மற்றவர்களும் அவரின் பேச்சிற்கு ஆதரவு தெரிவிக்க, பிம்லா அதிர்ந்து போனார். அவரின் கனவு ப்ராஜெக்ட் இது. பல கோடிகளை கொட்டும் என்று எதிர்பார்த்து ஆரம்பித்த ஒன்று. அதற்கு முன்னேற்பாடாக சில கோடிகளை செலவழித்து இருக்கிறார். மொத்த நஷ்டத்தையும் தானே ஏற்றால் தன்னுடைய இத்தனை வருட கையிருப்பும் குறையும் அபாயம் இருப்பதாக தோன்ற அவர்களின் முடிவை மறுத்தார்.
“இதை என்னால் ஏற்க முடியாது. இந்த பிஸ்னெஸ் மற்றும் கம்பனிகள் எல்லாமே சித்தார்த்திற்காக நான் பார்த்துக் கொள்வது. அவனுடைய சம்மதத்தின் பேரில் தான் இந்த ப்ராஜெக்ட்டில் என்னுடைய தலையீடு இருந்தது. அப்படி இருக்கும் போது நான் மட்டுமே இந்த தவறுக்கு எப்படி பொறுப்பேற்க முடியும்?”.