அத்தியாயம் – 25
ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த வர்ஷினிக்கு தன்னைச் சுற்றி நடப்பது எதுவும் தெரியாது. தான்யாவோ அக்காவிற்கு என்னவோ ஆகி விட்டது என்கிற பயத்தில் அழுதபடி அமர்ந்திருந்தாள். தாங்கள் கடத்தப்பட்டிருக்கிறோம் என்பதை அவள் உணரவில்லை.
மருத்துவமனையை நோக்கி கிளம்பிய பயணம் முடிவிற்கு வந்து ஓரிடத்தில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு கதவு திறக்கப்பட்டதும் தான் தெரிந்தது அது மருத்துவமனை அல்ல. ஏதோவொரு மாளிகை என்று. மிரண்ட பார்வையுடன் தான்யா தன் எதிரே நின்றவர்களைப் பார்க்க, அவர்களோ அவளின் கையைப் பிடித்து இழுத்துச் சென்று மாளிகையினுள் விட்டனர். சற்று நேரத்தில் வர்ஷினியை தூக்கிக் கொண்டு வந்து ஓர் அறையில் படுக்க வைத்தனர். அதுவரை பயத்துடன் இருந்தவள் பாய்ந்து “யார் நீங்க? எதுக்கு எங்களை இங்கே கொண்டு வந்திருக்கீங்க?” என்று கேட்டாள்.
அவள் கேட்டது அவர்களுக்கு புரியாமல் போனதாலும் அவளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாததாலும் கதவை சாற்றி விட்டு அங்கிருந்து வெளியேறினர்.
பிரம்மாண்டமான அந்த பங்களாவே அவளுக்கு அச்சத்தை கொடுக்க, வர்ஷினியின் அருகில் சென்று அமர்ந்தவளின் கண்களில் கண்ணீர். என்ன செய்வதென்று புரியாமல் அங்குமிங்கும் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அந்நேரம் பங்களாவின் கதவு வேகமாக திறக்கப்படும் சப்தம் கேட்டது. யாரோ வருகிறார்கள் என்று எழுந்து ஓடினாள். அங்கு நின்றவர்களை பார்த்ததும் மிச்சமிருந்த நம்பிக்கையும் காணாமல் போனது.
“அவளை மட்டும் தானே தூக்கிட்டு வர சொன்னேன்? இவளை எதுக்கு கொண்டு வந்தீங்க?”
“ஆம்புலன்சில் வந்ததுனால எங்களால எதுவும் சொல்ல முடியல மேம்”.
“வர வழியில் எங்கேயாவது இறக்கி விட்டிருக்கலாம்”.
“எங்க அக்கா உங்களுக்கு என்ன செஞ்சாங்க? எதுக்கு அவங்களை கடத்தி இருக்கீங்க?”
அவளின் முன்னே நின்ற கேஷ்வி இளக்காரமாக பார்த்து “என்ன செய்யல உங்கக்கா? என்னுடைய திட்டங்களை எல்லாம் கெடுத்தது அவள். சித்தார்த்தின் மனைவி என்கிற அந்தஸ்த்தை என்கிட்டே இருந்து பறிச்சிருக்கா. என்னுடைய பிஸ்னெஸ் சொந்த வாழ்க்கைன்னு எல்லாவற்றையும் என்னிடமிருந்து பரிச்சுக்கிட்டவளை சும்மா விடலாமா?”
“எங்களை விட்டுடுங்க. நானும் எங்கக்காவும் எங்கேயாவது போயிடுறோம்” என்றால் அழுகையுடன்.
“அவ உயிரோடு இருக்கும் வரை என் ஆசைகள் எதுவும் நிறைவேறாது. ஏன்னா சித்தார்த்துக்கு அவள் மேல அளவில்லாத காதல்” என்றவள் “டேய்! நான் சொன்ன மாதிரி ஏற்பாடு செஞ்சிட்டீங்க தானே?” என்று அருகில் இருந்தவர்களிடம் கேட்டாள்.
“எஸ் மேம்! எல்லாமே தயாராக இருக்கு” என்றனர்.
தான்யாவிற்கு எப்படியாவது அக்காவை காப்பாற்றி விட வேண்டும் என்கிற எண்ணம் எழுந்தது. ஓட முயற்ச்சித்தாலும் அக்காவை அங்கிருந்து எப்படி அழைத்துச் செல்வது என்கிற யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அந்நேரம் கதவை திறந்து கொண்டு ஒரு பெரிய படையே உள்ளே நுழைந்தது. அதை பார்த்ததும் கேஷ்வியின் ஆட்கள் “ஏய்! யார் நீங்க?” என்று அவர்களை நோக்கிச் சென்றனர்.
அப்போது வேக நடையுடன் உள்ளே நுழைந்தான் சித்தார்த். அவனைக் கண்டதும் கேஷ்வியின் முகம் பயத்தில் வெளிறிப் போனது.
அவள் முன்னே சென்று நின்றவன் “நான் உன்னைப் பற்றி கணித்தது சரியா போச்சு. நீ இதை தான் செய்வேன்னு எனக்கு தெரியும்” என்றான் இகழ்ச்சியான குரலில்.
“நா...நான்” என்று அவள் பேசும் முன் இடைமறித்தவன் “தொழிலில் பெரியாளா வரது தான் என் நோக்கம் எனக்கு இந்த திருமணத்தில் ஆர்வம் இல்லேன்னு சொன்னதா ஞாபகம். ஆனா நீ எதிலேயும் தீவிரமா இருக்க மாட்டேன்னு தோணுது”.
“இல்ல சித்தார்த். ஒரு கட்டாயத்தில் நான் இந்த உறவில் நுழைந்தாலும் எனக்கு உங்க மேல ஈர்ப்பு வந்ததை எப்படி தவறுன்னு சொல்லலாம்”.
“அதை தவறுன்னு சொல்லல. ஆனா எனக்கும் வர்ஷுவுக்குமான காதலை அறிந்த பிறகும் அவளை என் வாழ்க்கையில் இருந்து அப்புறபடுத்தனும்னு நினைத்த பாரு அது தான் தவறு”.
“உங்கள் குடும்பத்தினால எங்கள் தொழிலையும் பார்க்க முடியல. என்னுடைய திருமண வாழ்க்கையும் கேள்விகுறியா இருக்கு. அப்போ இதற்கு தீர்வு தான் என்ன?’
“அவளை கொன்னுட்டா நான் உன்னோட வாழ்ந்திடுவேன்னு நினைச்சியா?” என்றான் அருவெறுப்பாக முகத்தை சுளித்தபடி.
“அது அப்படி இல்ல...”
“இங்கே பார் கேஷ்வி! இப்பவும் எனக்கு உன் மேல கோபம் இல்லை. வருத்தம் தான் இருக்கு. எனக்கு தெரிந்து நீ ஒரு சூழ்நிலைக் கைதி தான். உன்னுடைய பிஸ்னெஸ் கனவு நிறைவேறணும்னா அதற்கு என்னால உதவ முடியும். ஆனா என் வாழ்க்கையில் இணைய நினைத்தால் அதற்கு நான் தயார் இல்லை. காதலித்து பார் கேஷ்வி அந்த வாழ்க்கையின் சுவாரசியம் புரியும்”.
கன்னங்களில் கண்ணீர் வழிய “சாரி சித்தார்த். இத்தனைக்குப் பிறகும் எனக்காக யோசிச்சு சொல்றீங்க பாருங்க. ரொம்ப நன்றி. நான் எக்காரணம் கொண்டும் உங்கள் வாழ்க்கையின் குறுக்கே வர மாட்டேன்” என்றாள்.
அவளையும் தான்யாவையும் அழைத்துக் கொண்டு வர்ஷினி இருந்த அறைக்குச் சென்றவன், அவளுக்கு என்ன மருந்து கொடுக்கப்பட்டது என்பதை அறிந்து கொண்டு தன்னுடன் அழைத்து வந்திருந்த மருத்துவரிடம் சொல்லி ட்ரீட்மென்ட் செய்ய சொன்னான். அதன்பின்னர் கேஷ்வியிடம் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டவன் தான் சொல்லும் சிலவற்றை செய்ய சொன்னான்.
ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த வர்ஷினிக்கு தன்னைச் சுற்றி நடப்பது எதுவும் தெரியாது. தான்யாவோ அக்காவிற்கு என்னவோ ஆகி விட்டது என்கிற பயத்தில் அழுதபடி அமர்ந்திருந்தாள். தாங்கள் கடத்தப்பட்டிருக்கிறோம் என்பதை அவள் உணரவில்லை.
மருத்துவமனையை நோக்கி கிளம்பிய பயணம் முடிவிற்கு வந்து ஓரிடத்தில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு கதவு திறக்கப்பட்டதும் தான் தெரிந்தது அது மருத்துவமனை அல்ல. ஏதோவொரு மாளிகை என்று. மிரண்ட பார்வையுடன் தான்யா தன் எதிரே நின்றவர்களைப் பார்க்க, அவர்களோ அவளின் கையைப் பிடித்து இழுத்துச் சென்று மாளிகையினுள் விட்டனர். சற்று நேரத்தில் வர்ஷினியை தூக்கிக் கொண்டு வந்து ஓர் அறையில் படுக்க வைத்தனர். அதுவரை பயத்துடன் இருந்தவள் பாய்ந்து “யார் நீங்க? எதுக்கு எங்களை இங்கே கொண்டு வந்திருக்கீங்க?” என்று கேட்டாள்.
அவள் கேட்டது அவர்களுக்கு புரியாமல் போனதாலும் அவளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாததாலும் கதவை சாற்றி விட்டு அங்கிருந்து வெளியேறினர்.
பிரம்மாண்டமான அந்த பங்களாவே அவளுக்கு அச்சத்தை கொடுக்க, வர்ஷினியின் அருகில் சென்று அமர்ந்தவளின் கண்களில் கண்ணீர். என்ன செய்வதென்று புரியாமல் அங்குமிங்கும் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அந்நேரம் பங்களாவின் கதவு வேகமாக திறக்கப்படும் சப்தம் கேட்டது. யாரோ வருகிறார்கள் என்று எழுந்து ஓடினாள். அங்கு நின்றவர்களை பார்த்ததும் மிச்சமிருந்த நம்பிக்கையும் காணாமல் போனது.
“அவளை மட்டும் தானே தூக்கிட்டு வர சொன்னேன்? இவளை எதுக்கு கொண்டு வந்தீங்க?”
“ஆம்புலன்சில் வந்ததுனால எங்களால எதுவும் சொல்ல முடியல மேம்”.
“வர வழியில் எங்கேயாவது இறக்கி விட்டிருக்கலாம்”.
“எங்க அக்கா உங்களுக்கு என்ன செஞ்சாங்க? எதுக்கு அவங்களை கடத்தி இருக்கீங்க?”
அவளின் முன்னே நின்ற கேஷ்வி இளக்காரமாக பார்த்து “என்ன செய்யல உங்கக்கா? என்னுடைய திட்டங்களை எல்லாம் கெடுத்தது அவள். சித்தார்த்தின் மனைவி என்கிற அந்தஸ்த்தை என்கிட்டே இருந்து பறிச்சிருக்கா. என்னுடைய பிஸ்னெஸ் சொந்த வாழ்க்கைன்னு எல்லாவற்றையும் என்னிடமிருந்து பரிச்சுக்கிட்டவளை சும்மா விடலாமா?”
“எங்களை விட்டுடுங்க. நானும் எங்கக்காவும் எங்கேயாவது போயிடுறோம்” என்றால் அழுகையுடன்.
“அவ உயிரோடு இருக்கும் வரை என் ஆசைகள் எதுவும் நிறைவேறாது. ஏன்னா சித்தார்த்துக்கு அவள் மேல அளவில்லாத காதல்” என்றவள் “டேய்! நான் சொன்ன மாதிரி ஏற்பாடு செஞ்சிட்டீங்க தானே?” என்று அருகில் இருந்தவர்களிடம் கேட்டாள்.
“எஸ் மேம்! எல்லாமே தயாராக இருக்கு” என்றனர்.
தான்யாவிற்கு எப்படியாவது அக்காவை காப்பாற்றி விட வேண்டும் என்கிற எண்ணம் எழுந்தது. ஓட முயற்ச்சித்தாலும் அக்காவை அங்கிருந்து எப்படி அழைத்துச் செல்வது என்கிற யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அந்நேரம் கதவை திறந்து கொண்டு ஒரு பெரிய படையே உள்ளே நுழைந்தது. அதை பார்த்ததும் கேஷ்வியின் ஆட்கள் “ஏய்! யார் நீங்க?” என்று அவர்களை நோக்கிச் சென்றனர்.
அப்போது வேக நடையுடன் உள்ளே நுழைந்தான் சித்தார்த். அவனைக் கண்டதும் கேஷ்வியின் முகம் பயத்தில் வெளிறிப் போனது.
அவள் முன்னே சென்று நின்றவன் “நான் உன்னைப் பற்றி கணித்தது சரியா போச்சு. நீ இதை தான் செய்வேன்னு எனக்கு தெரியும்” என்றான் இகழ்ச்சியான குரலில்.
“நா...நான்” என்று அவள் பேசும் முன் இடைமறித்தவன் “தொழிலில் பெரியாளா வரது தான் என் நோக்கம் எனக்கு இந்த திருமணத்தில் ஆர்வம் இல்லேன்னு சொன்னதா ஞாபகம். ஆனா நீ எதிலேயும் தீவிரமா இருக்க மாட்டேன்னு தோணுது”.
“இல்ல சித்தார்த். ஒரு கட்டாயத்தில் நான் இந்த உறவில் நுழைந்தாலும் எனக்கு உங்க மேல ஈர்ப்பு வந்ததை எப்படி தவறுன்னு சொல்லலாம்”.
“அதை தவறுன்னு சொல்லல. ஆனா எனக்கும் வர்ஷுவுக்குமான காதலை அறிந்த பிறகும் அவளை என் வாழ்க்கையில் இருந்து அப்புறபடுத்தனும்னு நினைத்த பாரு அது தான் தவறு”.
“உங்கள் குடும்பத்தினால எங்கள் தொழிலையும் பார்க்க முடியல. என்னுடைய திருமண வாழ்க்கையும் கேள்விகுறியா இருக்கு. அப்போ இதற்கு தீர்வு தான் என்ன?’
“அவளை கொன்னுட்டா நான் உன்னோட வாழ்ந்திடுவேன்னு நினைச்சியா?” என்றான் அருவெறுப்பாக முகத்தை சுளித்தபடி.
“அது அப்படி இல்ல...”
“இங்கே பார் கேஷ்வி! இப்பவும் எனக்கு உன் மேல கோபம் இல்லை. வருத்தம் தான் இருக்கு. எனக்கு தெரிந்து நீ ஒரு சூழ்நிலைக் கைதி தான். உன்னுடைய பிஸ்னெஸ் கனவு நிறைவேறணும்னா அதற்கு என்னால உதவ முடியும். ஆனா என் வாழ்க்கையில் இணைய நினைத்தால் அதற்கு நான் தயார் இல்லை. காதலித்து பார் கேஷ்வி அந்த வாழ்க்கையின் சுவாரசியம் புரியும்”.
கன்னங்களில் கண்ணீர் வழிய “சாரி சித்தார்த். இத்தனைக்குப் பிறகும் எனக்காக யோசிச்சு சொல்றீங்க பாருங்க. ரொம்ப நன்றி. நான் எக்காரணம் கொண்டும் உங்கள் வாழ்க்கையின் குறுக்கே வர மாட்டேன்” என்றாள்.
அவளையும் தான்யாவையும் அழைத்துக் கொண்டு வர்ஷினி இருந்த அறைக்குச் சென்றவன், அவளுக்கு என்ன மருந்து கொடுக்கப்பட்டது என்பதை அறிந்து கொண்டு தன்னுடன் அழைத்து வந்திருந்த மருத்துவரிடம் சொல்லி ட்ரீட்மென்ட் செய்ய சொன்னான். அதன்பின்னர் கேஷ்வியிடம் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டவன் தான் சொல்லும் சிலவற்றை செய்ய சொன்னான்.