அத்தியாயம் – 12
அன்று மாலை வீடு வந்து சேர்ந்த வர்ஷினிக்கு மனம் சோர்வடைந்திருந்தது. தன்னைச் சுற்றி எழும் பேச்சுக்களை எண்ணி மருகிக் கொண்டிருந்தாள். என்ன தான் எதையும் நினைக்கவில்லை என்றாலும், நடந்த நிகழ்வுகளை இல்லை என்று மறுத்துவிட முடியாதே. அதிலும் கல்லூரியில் அவர்களின் காதலை அறியாதவர்கள் மிக கம்மியான ஆட்களே. காதலை அறிந்தவர்களுக்கு அவளுக்கு அவனுடனான திருமணம் பற்றி தெரியாதது நல்லதாக போயிற்று. அதுவும் தெரிந்திருந்தால் அவளது நிலை மேலும் மோசமாகி இருக்க கூடும்.
சோர்வுடன் அமர்ந்திருந்தவளின் அருகே வந்தமர்ந்த வசந்தா “என்னடா கண்ணு? அம்மா அப்பா நினைவு வந்துடுச்சா?” என்றார் அவளது தலையை வருடியபடி.
கண்கள் கலங்க பாட்டியைப் பார்த்தவள் அப்படியே சரிந்து அவர் மடியில் படுத்துக் கொண்டவள் “நீங்களும் இல்லேன்னா நானும் தான்யாவும் என்ன ஆகி இருப்போம்னு தெரியல பாட்டி”.
“என்ன அவசரமோ உங்களை இப்படி விட்டுட்டு என் பொன்னும் மாப்பிள்ளையும் போயிட்டாங்க. நானும் மாமாவும் உங்களை அப்படி விட்டுட மாட்டோம்டா”.
அந்நேரம் சரவணனுக்கு அழைத்திருந்தான் சித்தார்த்.
“சொல்லு”.
“நீ என் மேல கோபமா இருப்பேன்னு தெரியும் சரவணா. என்னோட சூழ்நிலை அப்படி. ஆனால் எக்காரணம் கொண்டும் அவளை விட்டுட மாட்டேன்”.
“நான் ஒன்னு கேட்கலாமா? நீ ஆயிரம் காரணம் சொல்லலாம் ஆனா அவளுக்கு ஒரு போன் கூட பண்ணாம அவ எப்படி இருக்கிறான்னு விசாரிக்காம இருக்கிறது எனக்கே உன் மேல சந்தேகத்தை வரவழைக்குது சித்தார்த்”
அவன் கேட்டதும் நீண்ட பெருமூச்சை விட்டவன் “என்னால பேச முடியாம இல்ல சரவணா. ஆனா நான் பேசுவதன் மூலமா அவளுக்கு இன்னும் ஆபத்தை இழுத்து வச்சிடுவேன்”.
“எனக்கு என்னமோ சரியாபடல சித்தார்த். உன்னை என் நண்பனா அத்தனை நம்பிக்கை வச்சிருந்தேன். நீ ஏமாற்ற மாட்டேன்னு நினைச்சு தான் உனக்கு ஹெல்ப் பண்ணினேன். ஆனா எனக்கே வர்ஷினியை பார்க்கும் போது தப்பு பண்ணிட்டேனோ அப்படிங்கற எண்ணம் வருது”.
“இல்ல-டா எங்கேயும் என்னோட காதல் பொய்யில்லை”.
“எது இன்னொரு பெண்ணை கல்யாணம் பண்ணின பிறகு இப்படி பேசுற பாரு...இன்னமும் எங்களை கூமுட்டையா நினைக்கிற இல்ல”.
“டேய்! என்னால இப்போ எதையும் சொல்ல முடியாது. அனா ஒன்னு மட்டும் மனசுல வச்சுக்கோ. வர்ஷினிக்கு நான் எப்போதும் இருப்பேன். அவள் மட்டும் தான் என் மனைவி. உன் கிட்ட கேட்கிறது ஒன்னே ஒன்னு தான். அவளை நான் வரும் வரை பார்த்துக்கோ. அந்த லோகேஷ் எதுவும் பிரச்சனை பண்ணினா அப்படியே விட்டுடாதே”.
ஏனோ சித்தார்த்தின் பேச்சு அவன் மனதை தொட தான் செய்தது. அது எதனால் என்று அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை. நிச்சயம் அவன் வருவான் என்பது போல நம்பிக்கை பிறந்தது.
சரவணனிடம் பேசிவிட்டு வைத்தவனின் எண்ணம் முழுவதும் எப்படியாவது அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு அவளிடம் சென்று விட வேண்டும் என்பதே. அவனது யோசனையை கலைப்பது போல, அறைக் கதவை தட்டக் கூட இல்லாமல் படாரென்று திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் தினு.
திமிரும், அதிகார போக்கும் உடையவன் மாமா தினு. யாரையும் மதிக்கும் தன்மை அவனிடம் அதிகம் இருக்காது. அவன் மதிக்கும் ஒரே ஆள் அவனுடைய தாத்தா கோவிந்த் பட்டேல். மற்றவர் அனைவரையும் அவன் பார்வையிலேயே தள்ளி வைத்துவிடுவான்.
சித்தார்த்தின் முன் வந்து அமர்ந்தவன் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அவனை ஆராயும் பார்வை பார்த்து “நீ கேஷ்வி பாக்டரிக்கு ஏன் போகல? அவ அங்கே தனியா கஷ்டப்பட்டுக் கிட்டு இருக்காளே”.
அவனைப் போலவே நாற்காலியில் நன்றாக சாய்ந்தமர்ந்து கொண்ட சித்தார்த் “இதை கேட்கவா இவ்வளவு தூரம் வந்தீங்க மா...மா?” என்றான் நக்கலாக.
ஏனோ தினுவை பார்த்ததும் அவன் மனம் பாட்டி சொன்ன எதிரிகளில் அவனும் இருப்பான் என்று சொன்னது.
அவனது பேச்சில் கடுப்பான தினு “என்ன சித்து மரியாதை எல்லாம் குறையுது? எனக்கென்னவோ உன்னுடைய நடவடிக்கை சந்தேகத்தை கொடுக்குது”.
எதுவுமே தெரியாதது போல “என்ன சந்தேகம் மாமா?” என்றவனது விரல்கள் மேஜைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த மொபைலில் இருந்து செய்தி அனுப்பிக் கொண்டிருந்தது. தினுவைப் பற்றிய ரிபோர்ட் வேண்டும் என்று டிடெக்டிவ் நண்பனிடம் கேட்டு விட்டான்.
“நீ தமிழ் நாட்டிற்கு படிக்க போனதில் இருந்து சரியில்லேன்னு சொல்றா அக்கா” என்று சொல்லியவன் கண்கள் அவனை ஆராய்ந்தது.
மேஜையின் முன்னே சரிந்து அமர்ந்தவன் “அப்போ இருந்து தானா மாமா? அதுக்கு முன்னே இல்லையா?”
நறநறவென்று பற்களை கடித்தவன் “எங்களை கேட்காம நீயா சில முடிவுகளை பிஸிநெசில் எடுக்கிற. உனக்கு அதற்கான அனுபவமும் இல்லை. உன்னுடைய நடவடிக்கையை நினைத்து அக்கா பயப்படுறா”.
“ஓஹோ...ம்ம்...இது என் அப்பாவோட பிஸ்னெஸ். இதுல எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. இந்த தொழிலில் நீங்க யார் எனக்கு அட்வைஸ் பண்ண?’
அன்று மாலை வீடு வந்து சேர்ந்த வர்ஷினிக்கு மனம் சோர்வடைந்திருந்தது. தன்னைச் சுற்றி எழும் பேச்சுக்களை எண்ணி மருகிக் கொண்டிருந்தாள். என்ன தான் எதையும் நினைக்கவில்லை என்றாலும், நடந்த நிகழ்வுகளை இல்லை என்று மறுத்துவிட முடியாதே. அதிலும் கல்லூரியில் அவர்களின் காதலை அறியாதவர்கள் மிக கம்மியான ஆட்களே. காதலை அறிந்தவர்களுக்கு அவளுக்கு அவனுடனான திருமணம் பற்றி தெரியாதது நல்லதாக போயிற்று. அதுவும் தெரிந்திருந்தால் அவளது நிலை மேலும் மோசமாகி இருக்க கூடும்.
சோர்வுடன் அமர்ந்திருந்தவளின் அருகே வந்தமர்ந்த வசந்தா “என்னடா கண்ணு? அம்மா அப்பா நினைவு வந்துடுச்சா?” என்றார் அவளது தலையை வருடியபடி.
கண்கள் கலங்க பாட்டியைப் பார்த்தவள் அப்படியே சரிந்து அவர் மடியில் படுத்துக் கொண்டவள் “நீங்களும் இல்லேன்னா நானும் தான்யாவும் என்ன ஆகி இருப்போம்னு தெரியல பாட்டி”.
“என்ன அவசரமோ உங்களை இப்படி விட்டுட்டு என் பொன்னும் மாப்பிள்ளையும் போயிட்டாங்க. நானும் மாமாவும் உங்களை அப்படி விட்டுட மாட்டோம்டா”.
அந்நேரம் சரவணனுக்கு அழைத்திருந்தான் சித்தார்த்.
“சொல்லு”.
“நீ என் மேல கோபமா இருப்பேன்னு தெரியும் சரவணா. என்னோட சூழ்நிலை அப்படி. ஆனால் எக்காரணம் கொண்டும் அவளை விட்டுட மாட்டேன்”.
“நான் ஒன்னு கேட்கலாமா? நீ ஆயிரம் காரணம் சொல்லலாம் ஆனா அவளுக்கு ஒரு போன் கூட பண்ணாம அவ எப்படி இருக்கிறான்னு விசாரிக்காம இருக்கிறது எனக்கே உன் மேல சந்தேகத்தை வரவழைக்குது சித்தார்த்”
அவன் கேட்டதும் நீண்ட பெருமூச்சை விட்டவன் “என்னால பேச முடியாம இல்ல சரவணா. ஆனா நான் பேசுவதன் மூலமா அவளுக்கு இன்னும் ஆபத்தை இழுத்து வச்சிடுவேன்”.
“எனக்கு என்னமோ சரியாபடல சித்தார்த். உன்னை என் நண்பனா அத்தனை நம்பிக்கை வச்சிருந்தேன். நீ ஏமாற்ற மாட்டேன்னு நினைச்சு தான் உனக்கு ஹெல்ப் பண்ணினேன். ஆனா எனக்கே வர்ஷினியை பார்க்கும் போது தப்பு பண்ணிட்டேனோ அப்படிங்கற எண்ணம் வருது”.
“இல்ல-டா எங்கேயும் என்னோட காதல் பொய்யில்லை”.
“எது இன்னொரு பெண்ணை கல்யாணம் பண்ணின பிறகு இப்படி பேசுற பாரு...இன்னமும் எங்களை கூமுட்டையா நினைக்கிற இல்ல”.
“டேய்! என்னால இப்போ எதையும் சொல்ல முடியாது. அனா ஒன்னு மட்டும் மனசுல வச்சுக்கோ. வர்ஷினிக்கு நான் எப்போதும் இருப்பேன். அவள் மட்டும் தான் என் மனைவி. உன் கிட்ட கேட்கிறது ஒன்னே ஒன்னு தான். அவளை நான் வரும் வரை பார்த்துக்கோ. அந்த லோகேஷ் எதுவும் பிரச்சனை பண்ணினா அப்படியே விட்டுடாதே”.
ஏனோ சித்தார்த்தின் பேச்சு அவன் மனதை தொட தான் செய்தது. அது எதனால் என்று அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை. நிச்சயம் அவன் வருவான் என்பது போல நம்பிக்கை பிறந்தது.
சரவணனிடம் பேசிவிட்டு வைத்தவனின் எண்ணம் முழுவதும் எப்படியாவது அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு அவளிடம் சென்று விட வேண்டும் என்பதே. அவனது யோசனையை கலைப்பது போல, அறைக் கதவை தட்டக் கூட இல்லாமல் படாரென்று திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் தினு.
திமிரும், அதிகார போக்கும் உடையவன் மாமா தினு. யாரையும் மதிக்கும் தன்மை அவனிடம் அதிகம் இருக்காது. அவன் மதிக்கும் ஒரே ஆள் அவனுடைய தாத்தா கோவிந்த் பட்டேல். மற்றவர் அனைவரையும் அவன் பார்வையிலேயே தள்ளி வைத்துவிடுவான்.
சித்தார்த்தின் முன் வந்து அமர்ந்தவன் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அவனை ஆராயும் பார்வை பார்த்து “நீ கேஷ்வி பாக்டரிக்கு ஏன் போகல? அவ அங்கே தனியா கஷ்டப்பட்டுக் கிட்டு இருக்காளே”.
அவனைப் போலவே நாற்காலியில் நன்றாக சாய்ந்தமர்ந்து கொண்ட சித்தார்த் “இதை கேட்கவா இவ்வளவு தூரம் வந்தீங்க மா...மா?” என்றான் நக்கலாக.
ஏனோ தினுவை பார்த்ததும் அவன் மனம் பாட்டி சொன்ன எதிரிகளில் அவனும் இருப்பான் என்று சொன்னது.
அவனது பேச்சில் கடுப்பான தினு “என்ன சித்து மரியாதை எல்லாம் குறையுது? எனக்கென்னவோ உன்னுடைய நடவடிக்கை சந்தேகத்தை கொடுக்குது”.
எதுவுமே தெரியாதது போல “என்ன சந்தேகம் மாமா?” என்றவனது விரல்கள் மேஜைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த மொபைலில் இருந்து செய்தி அனுப்பிக் கொண்டிருந்தது. தினுவைப் பற்றிய ரிபோர்ட் வேண்டும் என்று டிடெக்டிவ் நண்பனிடம் கேட்டு விட்டான்.
“நீ தமிழ் நாட்டிற்கு படிக்க போனதில் இருந்து சரியில்லேன்னு சொல்றா அக்கா” என்று சொல்லியவன் கண்கள் அவனை ஆராய்ந்தது.
மேஜையின் முன்னே சரிந்து அமர்ந்தவன் “அப்போ இருந்து தானா மாமா? அதுக்கு முன்னே இல்லையா?”
நறநறவென்று பற்களை கடித்தவன் “எங்களை கேட்காம நீயா சில முடிவுகளை பிஸிநெசில் எடுக்கிற. உனக்கு அதற்கான அனுபவமும் இல்லை. உன்னுடைய நடவடிக்கையை நினைத்து அக்கா பயப்படுறா”.
“ஓஹோ...ம்ம்...இது என் அப்பாவோட பிஸ்னெஸ். இதுல எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. இந்த தொழிலில் நீங்க யார் எனக்கு அட்வைஸ் பண்ண?’