அத்தியாயம் – 26
அன்று குஜராத்தின் தொழிலதிபர்களுக்கான மாநாடு மிகப் பெரிய அளவில் ஏற்பாடாகி இருந்தது. பொதுவாக ஒவ்வொரு வருடமும் நடக்கும் இந்த மாநாட்டில் தலைமை ஏற்று நடத்துவது நானாஜி குடும்பத்தினர் தான். இந்த வருடமும் அவர்களை தான் அழைத்திருந்தனர்.
முடிசூடா மன்னர்களாக குஜராத்தின் தொழில் ராஜாங்கத்தில் இருந்தவர்களுக்கு தங்களின் நிலையை எண்ணி எப்பொழுதும் பெருமிதம் உண்டு. இந்த இடத்திற்கு வரவும், தக்க வைத்துக் கொள்ளவும் தாங்கள் செய்த தகிடு தத்தங்கள் எத்தனை குடும்பங்களை அழித்திருக்கிறது என்பதை சிறிதளவும் எண்ணவில்லை.
இன்னும் எத்தனை குடும்பங்களும் தொழில்களும் அழிந்தாலும் தாங்கள் மட்டுமே அரசாள வேண்டும் என்கிற எண்ணம் நானாஜிக்கும், தினுவிற்கும் இருந்தது. அதில் தேவ் கொஞ்சம் நியாயவாதி. ஆரம்பத்தில் அவர்களுக்கு துணை போனவர் தான். ஆனால் என்று பிம்லாவின் வாழ்க்கை இவர்களின் தொழில் ஆசையால் வீனானதோ அன்றிலிருந்து அவர்களிடம் இருந்து விலகி சென்று கொண்டிருக்கிறார்.
சில நாட்களாக தங்களை சுற்றிலும் பிரச்சனைகளுடனே பயணித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த தொழிலதிபர்கள் மாநாடு ஒரு சிறிய சந்தோஷத்தை தந்தது. அங்கே தங்களின் மரியாதை, அந்தஸ்து எல்லாம் தெரியும் என்பதால் ஒவ்வொரு வருடமும் ஆர்வமாக எதிர்பார்ப்பார்கள் . அதிலும் நானாஜியிடம் கேட்காமல் எதையும் செய்ய மாட்டார்கள். அதனால் எல்லாவற்றிலும் நானாஜியின் தலையீடு இல்லாமல் இருக்காது.
அப்படிப்பட்ட ஒரு விழாவிற்கு கிளம்பிக் கொண்டிருந்த நானாஜியின் மனதில் சிறு சலனம். ஏனோ அவரால் உற்சாகமாக கிளம்ப முடியவில்லை. மனதில் ஏதோ நெருடல். பலத்த சிந்தனையுடன் கிளம்பிக் கொண்டிருந்தவரை பார்த்த தினு “என்னாச்சு பப்பா? உங்க முகமே சரியில்ல்லை?” என்றான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவர் “எனக்கென்னவோ நடப்பவற்றை எல்லாம் பார்த்தால் சித்தார்த் எங்கேயோ விளையாடுறானோன்னு தோணுது. எல்லாமே அவனோட திட்டப்படி நடக்குதோன்னு தோணுது தினு” என்றார் அனுபவசாலியாக.
தினுவோ திமிராக “இது நம்ம எழுப்பின சாம்ராஜ்யம் பப்பா. அவன் சின்னப் பையன். அவனால என்ன பண்ண முடியும். கொஞ்ச நாள் வேணா ஆடிப் பார்க்கலாம். நம்மோட மோதுகிற தைரியம் அவனுக்கு கிடையாது” என்றான் தெனாவெட்டாக.
அவனை அதிருப்தியுடன் பார்த்து “யாரையும் அத்தனை எளிதா நினைச்சிடாதே தினு. வெளில இருந்து பார்ப்பதற்கு நம்ம நிலைமை பலமானதா தெரியும். ஆனால் யோசிச்சு பாரு நம்ம நிலை என்னன்னு புரியும்”.
“தேவையில்லாம யோசிக்காதீங்க பப்பா. எதுவும் நம்ம கை விட்டு போகல”.
“வர்ஷினியை கேஷ்வி கடத்திட்டதா சொல்றாங்க. அதை நீ நம்புறியா தினு?”
“நம்புறேன் பப்பா. அவளுக்கு வர்ஷினி மேல அத்தனை கோபம் இருந்தது. நிச்சயம் செய்திருப்பாள்”.
“நான் அப்படி நினைக்கல தினு. நிச்சயம் வர்ஷினி சித்தார்த்தின் பாதுகாப்பில் இருப்பாள்”.
“அவனே யார் கிட்டேயும் சிக்கி இருக்கான். இதுல அவளுக்கு எப்படி அவன் பாதுகாப்பு கொடுக்க முடியும்?”
“இது தான் நீ. எந்தவொரு விஷயத்தையும் முழுசா ஆராயாம முடிவிற்கு வந்துடுவ. சித்தார்த்தை யாரும் கடத்தல. நம்மள திசைதிருப்புவதற்காக அவன் ஆடிய நாடகம் அது. அதே மாதிரி கேஷ்வி கடத்தி இருந்தாலும் அவளிடம் இருந்து வர்ஷினியை அவன் காப்பாற்றி இருப்பான்”.
“பப்பா நல்ல கற்பனை உங்களுக்கு” என்று கேலியாக சிரித்தான்.
அவனை வருத்தமாகப் பார்த்து “எனக்குப் பிறகு இந்த சாம்ராஜ்யத்தை நல்லா பார்துப்பன்னு நினைச்சேன் தினு. உனக்கு அறிவில்லேன்னு நிருபிச்சிட்ட” என்றபடி சக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டு அங்கிருந்து சென்றார்.
“போங்க உங்க பெரிய பையன் தான் உங்களுக்கு பிறகு எல்லாவற்றையும் கட்டி காப்பாத்துவான்” என்று கத்தினான்.
“அவன் தான் எப்பவோ விலை போயிட்டானே” என்றபடி சென்றார்.
அவரின் மனதில் அன்று ஏதோ பெரிய சம்பவம் நடக்க இருப்பதாக தோன்றியது. சின்ன மகன் இத்தனை முட்டாளாக இருக்க வேண்டாம் என்று எண்ணிக் கொண்டே சென்றார். தங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களை அறிந்து கொள்ளாது பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருட்டு என்று நம்புவது போல நம்பிக் கொண்டிருப்பதாக தோன்றியது.
தந்தை,மகன் இருவரும் அவரவர் யோசனையில் மூழ்கியபடி காரில் பயணிக்க, தேவ்வோ உற்சாகமாக பாட்டு பாடிக் கொண்டே அமர்ந்திருந்தார். அதில் சற்று எரிச்சல் அடைந்த நானாஜி “என்ன தேவா? ரொம்ப உற்சாகமா இருக்க?”
“இந்த மாநாடு நமக்கு எப்பவும் ஸ்பெஷல் இல்லையா பப்பா?
“அது மட்டும் தானா இல்ல வேற எதுவும் இருக்கா?”
பட்டென்று தந்தையை திரும்பி பார்த்தவர் “வேற என்ன இருக்கும்னு நினைக்கிறீங்க?” என்றார்.
“இப்போ எல்லாம் நீ எங்க கிட்ட எதையும் சொல்வது இல்லை கேட்பதும் இல்லை. அதனால தான் கேட்டேன்”.
அன்று குஜராத்தின் தொழிலதிபர்களுக்கான மாநாடு மிகப் பெரிய அளவில் ஏற்பாடாகி இருந்தது. பொதுவாக ஒவ்வொரு வருடமும் நடக்கும் இந்த மாநாட்டில் தலைமை ஏற்று நடத்துவது நானாஜி குடும்பத்தினர் தான். இந்த வருடமும் அவர்களை தான் அழைத்திருந்தனர்.
முடிசூடா மன்னர்களாக குஜராத்தின் தொழில் ராஜாங்கத்தில் இருந்தவர்களுக்கு தங்களின் நிலையை எண்ணி எப்பொழுதும் பெருமிதம் உண்டு. இந்த இடத்திற்கு வரவும், தக்க வைத்துக் கொள்ளவும் தாங்கள் செய்த தகிடு தத்தங்கள் எத்தனை குடும்பங்களை அழித்திருக்கிறது என்பதை சிறிதளவும் எண்ணவில்லை.
இன்னும் எத்தனை குடும்பங்களும் தொழில்களும் அழிந்தாலும் தாங்கள் மட்டுமே அரசாள வேண்டும் என்கிற எண்ணம் நானாஜிக்கும், தினுவிற்கும் இருந்தது. அதில் தேவ் கொஞ்சம் நியாயவாதி. ஆரம்பத்தில் அவர்களுக்கு துணை போனவர் தான். ஆனால் என்று பிம்லாவின் வாழ்க்கை இவர்களின் தொழில் ஆசையால் வீனானதோ அன்றிலிருந்து அவர்களிடம் இருந்து விலகி சென்று கொண்டிருக்கிறார்.
சில நாட்களாக தங்களை சுற்றிலும் பிரச்சனைகளுடனே பயணித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த தொழிலதிபர்கள் மாநாடு ஒரு சிறிய சந்தோஷத்தை தந்தது. அங்கே தங்களின் மரியாதை, அந்தஸ்து எல்லாம் தெரியும் என்பதால் ஒவ்வொரு வருடமும் ஆர்வமாக எதிர்பார்ப்பார்கள் . அதிலும் நானாஜியிடம் கேட்காமல் எதையும் செய்ய மாட்டார்கள். அதனால் எல்லாவற்றிலும் நானாஜியின் தலையீடு இல்லாமல் இருக்காது.
அப்படிப்பட்ட ஒரு விழாவிற்கு கிளம்பிக் கொண்டிருந்த நானாஜியின் மனதில் சிறு சலனம். ஏனோ அவரால் உற்சாகமாக கிளம்ப முடியவில்லை. மனதில் ஏதோ நெருடல். பலத்த சிந்தனையுடன் கிளம்பிக் கொண்டிருந்தவரை பார்த்த தினு “என்னாச்சு பப்பா? உங்க முகமே சரியில்ல்லை?” என்றான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவர் “எனக்கென்னவோ நடப்பவற்றை எல்லாம் பார்த்தால் சித்தார்த் எங்கேயோ விளையாடுறானோன்னு தோணுது. எல்லாமே அவனோட திட்டப்படி நடக்குதோன்னு தோணுது தினு” என்றார் அனுபவசாலியாக.
தினுவோ திமிராக “இது நம்ம எழுப்பின சாம்ராஜ்யம் பப்பா. அவன் சின்னப் பையன். அவனால என்ன பண்ண முடியும். கொஞ்ச நாள் வேணா ஆடிப் பார்க்கலாம். நம்மோட மோதுகிற தைரியம் அவனுக்கு கிடையாது” என்றான் தெனாவெட்டாக.
அவனை அதிருப்தியுடன் பார்த்து “யாரையும் அத்தனை எளிதா நினைச்சிடாதே தினு. வெளில இருந்து பார்ப்பதற்கு நம்ம நிலைமை பலமானதா தெரியும். ஆனால் யோசிச்சு பாரு நம்ம நிலை என்னன்னு புரியும்”.
“தேவையில்லாம யோசிக்காதீங்க பப்பா. எதுவும் நம்ம கை விட்டு போகல”.
“வர்ஷினியை கேஷ்வி கடத்திட்டதா சொல்றாங்க. அதை நீ நம்புறியா தினு?”
“நம்புறேன் பப்பா. அவளுக்கு வர்ஷினி மேல அத்தனை கோபம் இருந்தது. நிச்சயம் செய்திருப்பாள்”.
“நான் அப்படி நினைக்கல தினு. நிச்சயம் வர்ஷினி சித்தார்த்தின் பாதுகாப்பில் இருப்பாள்”.
“அவனே யார் கிட்டேயும் சிக்கி இருக்கான். இதுல அவளுக்கு எப்படி அவன் பாதுகாப்பு கொடுக்க முடியும்?”
“இது தான் நீ. எந்தவொரு விஷயத்தையும் முழுசா ஆராயாம முடிவிற்கு வந்துடுவ. சித்தார்த்தை யாரும் கடத்தல. நம்மள திசைதிருப்புவதற்காக அவன் ஆடிய நாடகம் அது. அதே மாதிரி கேஷ்வி கடத்தி இருந்தாலும் அவளிடம் இருந்து வர்ஷினியை அவன் காப்பாற்றி இருப்பான்”.
“பப்பா நல்ல கற்பனை உங்களுக்கு” என்று கேலியாக சிரித்தான்.
அவனை வருத்தமாகப் பார்த்து “எனக்குப் பிறகு இந்த சாம்ராஜ்யத்தை நல்லா பார்துப்பன்னு நினைச்சேன் தினு. உனக்கு அறிவில்லேன்னு நிருபிச்சிட்ட” என்றபடி சக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டு அங்கிருந்து சென்றார்.
“போங்க உங்க பெரிய பையன் தான் உங்களுக்கு பிறகு எல்லாவற்றையும் கட்டி காப்பாத்துவான்” என்று கத்தினான்.
“அவன் தான் எப்பவோ விலை போயிட்டானே” என்றபடி சென்றார்.
அவரின் மனதில் அன்று ஏதோ பெரிய சம்பவம் நடக்க இருப்பதாக தோன்றியது. சின்ன மகன் இத்தனை முட்டாளாக இருக்க வேண்டாம் என்று எண்ணிக் கொண்டே சென்றார். தங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களை அறிந்து கொள்ளாது பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருட்டு என்று நம்புவது போல நம்பிக் கொண்டிருப்பதாக தோன்றியது.
தந்தை,மகன் இருவரும் அவரவர் யோசனையில் மூழ்கியபடி காரில் பயணிக்க, தேவ்வோ உற்சாகமாக பாட்டு பாடிக் கொண்டே அமர்ந்திருந்தார். அதில் சற்று எரிச்சல் அடைந்த நானாஜி “என்ன தேவா? ரொம்ப உற்சாகமா இருக்க?”
“இந்த மாநாடு நமக்கு எப்பவும் ஸ்பெஷல் இல்லையா பப்பா?
“அது மட்டும் தானா இல்ல வேற எதுவும் இருக்கா?”
பட்டென்று தந்தையை திரும்பி பார்த்தவர் “வேற என்ன இருக்கும்னு நினைக்கிறீங்க?” என்றார்.
“இப்போ எல்லாம் நீ எங்க கிட்ட எதையும் சொல்வது இல்லை கேட்பதும் இல்லை. அதனால தான் கேட்டேன்”.