அத்தியாயம் – 60
அதிகாலைச் சூரியனின் இதமான அந்தக் காலை வேளையில், தனது கதிர்களால் வெளிச்சத்தைப் பரவவிட்டான். தூக்கம் கலைந்து எழுந்தவன், முன்தின இரவின் இனிய நினைவுகள் சூழ்ந்திருந்தாலும், அவளிடம் மறைத்திருக்கும் விஷயத்தைச் சொல்லாமல் துரோகம் செய்கிறோமோ!’ என்ற எண்ணம், அவனது இதயத்தில் முள்ளாக உறுத்தியது.
‘இது சரியா? என்னதான் அவள் சொல்லவேண்டாம் என்றாலும், நான் சொல்லியிருக்க வேண்டும். காலம் முழுவதும் உறுத்தலுடன் எப்படி வாழ்வது?’ என்று கேள்வி கேட்டு கொண்டாலும், ‘இதுவும் அவளுக்காக, அவளது சந்தோஷத்திற்காக... இப்போதைக்கு, அவளது மன அமைதி தான் முக்கியம். இவ்வளவு நாள் அவள்பட்ட துன்பமெல்லாம் போதும். இனியாவது, அவளை நான் பத்திரமாகப் பார்த்துக்கொள்வேன்.
‘இந்த நிமிடம் தான் நிஜம்! இந்த நிமிடம் என் மது சந்தோஷமாக, நிம்மதியாக இருக்க வேண்டும். அவள் சந்தோஷத்திற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். அவளுக்கு இந்த விஷயம் தெரிய வந்தாலும் சமாளித்துக் கொள்வேன். என் காதலை அவளுக்கு உணர்த்துவேன். நிச்சயம் என்னைப் புரிந்துக்கொள்வாள்’ என்று ஒரு முடிவிற்கு வந்த பின் தான் அவனுக்கு மனம் நிம்மதி அடைந்தது. குளியலறை கதவைத் திறக்கும் சத்தம் கேட்டதும் சித்தார்த் கண்ணை மூடிக்கொண்டான்.
நெற்றிக்குத் திலகம் வைத்துக்கொண்டவள், அங்கிருந்த சுவாமி படத்தை வணங்கிவிட்டு, கணவனின் அருகில் வந்து நின்றாள். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாக நினைத்து சிறிதுநேரம் பார்த்துக்கொண்டே நின்றிருந்தவள், மெல்ல குனிந்து அவனது கன்னத்தில் இதழ் பதித்தாள். அதுவரை தனக்குள் குழம்பிக்கொண்டிருந்தவன், தன்னவளின் அருகாமையில் அதுவரை ஒடிய எண்ணங்கள் எல்லாம் மறந்து போக, அடுத்த நொடி அவனது கையணைப்பில் இருந்தாள்.
“குட் மார்னிங் மேடம்!” என்று அவள் மூக்குடன் மூக்கை வைத்து உரசினான்.
"விடுங்க சித்தூ" என்று எழ முயன்றவளை, இன்னும் இறுக அணைத்து அவளது கூந்தலில் வாசத்தை முகர்ந்தவன், "இப்படிக் காலைல ஃப்ரெஷ்ஷா பக்கத்துல வந்து முத்தம் வேற கொடுத்துட்டு, விடுங்கன்னு சொன்னா என்ன அர்த்தம்?" என்று சொல்லிக்கொண்டே அவள் கழுத்து வளைவில் முத்தமிட ஆரம்பித்தவன் தொடர்ந்து முன்னேற, கூச்சத்தில் தவித்தாள்.
கணவனின் அணைப்பில் நெகிழ்ந்தாலும், தன்னை மீட்டுக்கொள்ள முயன்றபடி, “நேரம் ஆகுதுங்க. இன்னைக்கு நாம ஊருக்குக் கிளம்பணும்" என்று சொல்லிக்கொண்டே எழுந்து கொள்ள முயன்றவளை விடாமல், அவளைச் சிறிதுநேரம் முகம் சிவக்கச் செய்துவிட்டு பின்பே விடுவித்தான்.
அடுத்த ஒருமணி நேரத்தில் தயாரானவர்கள் ஹரியின் நண்பரின் வீட்டிற்குச் சென்று, அவர்களது உதவிக்கு நன்றி கூறி விடைபெற்றுக்கொண்டனர். டெல்லி வந்து சேர்ந்தவர்களை, வரவேற்று, மதுவின் நலத்தையும் கேட்டுகொண்டு ஹரி தன் அலுவலகத்துக்குக் கிளம்பிச் சென்றார்.
குழந்தைகளுக்குப் பள்ளி விடுமுறை என்பதால், வீட்டில் இருந்தனர். வருண் சித்தார்த்தை விளையாட அழைத்தான். இருவரும் வீட்டின் பின்புறமிருந்த டென்னிஸ் கோர்ட்டில் வருணுக்குத் தகுந்தபடி விளையாடிக்கொண்டிருந்த சித்தார்த்தைப் பார்த்துக்கொண்டே, அருந்ததியை மடியில் வைத்து ரைம்ஸ் கேட்டுக் கொண்டிருந்தாள்.
சற்றுநேரத்தில் வருணை அவனுடைய நண்பர்கள் வந்து அழைக்கவும் அவர்களுடன் சென்றுவிட, மது பக்கத்தில் வந்து அமர்ந்தான் சித்தார்த்.
குழந்தையுடன் சேர்ந்து ரைம்ஸ் சொல்லிக்கொண்டிருந்தவளை, “என்ன ட்ரெய்னிங்கா?" என்றான்.
மது அவனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு, குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்.
சித்தார்த் அவளது கழுத்தில் விரல்களால் சில்மிஷம் செய்ய, அவள் கூச்சத்துடன் நெளிந்தாள். அவனது சீண்டல் தொடர்ந்துகொண்டிருக்க, அருந்ததியைத் தூக்கி அவன் மடியில் அமர வைத்துவிட்டு, சிரித்துக்கொண்டே வீட்டின் உள்ளே சென்றாள்.
அன்று மாலை வரை சித்தார்த்தின் அருகில் வராமலே அவனுக்கு ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தாள். மாலையில் சித்தார்த் இருப்பது தெரியாமல் அறைக்குள் சென்றவளை பின்னாலிருந்து அணைத்தவன், “ஏய்... இன்னைக்கெல்லாம் எனக்கு விளையாட்டு காட்டிட்டு இருந்த இல்ல. இப்போ பாரு... வசமா மாட்டிகிட்ட" என்றான் தாபத்துடன்.
"உங்ககிட்டப் பெரிய தொல்லையா போச்சுங்க. ஒரு நேரம் காலம் கிடையாது. கதவு வேற திறந்திருக்கு. குழந்தைங்க வரப்போறாங்க விடுங்க" என்று கெஞ்சும் குரலில் சொன்னாள்.
"சரி, என் கேள்விக்குப் பதில் சொல்லு. விட்டுடறேன். தொல்லையா போச்சுன்னு வேற சொல்லிட்ட... அதுக்கெல்லாம் இருக்கு உனக்குப் பனிஷ்மென்ட்" என்றவன், "உன் வெயிட் எவ்வளவு இருக்கும்?" என்றான்.
"இதென்ன இப்போ கேள்வி? ஐம்பத்தைந்து கிலோ" என்றாள்.
"அப்போ உன்னை பிபிட்டி கேஜீ தாஜ்மகால்னு பாட முடியாதா? சரி நீ சொல்வது உண்மையான்னு டெஸ்ட் பண்ணிடுவோம்" என்று சொல்லிக்கொண்டே சட்டென அவளைத் தூக்கினான்.
இதைச் சற்றும் எதிர்பாராதவள், “ஐயோ! இறக்கிவிடுங்க யாராவது வரப்போறாங்க" என்றவளை கீழே விடாமல், "பார்க்கட்டுமே என் பொண்டாட்டியை, நான் தூக்கறேன்” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, "மது! இந்தப் புடவை…" என்றபடி அறைக்குள் நுழைந்த சுபா ஸ்தம்பித்துப் போனாள்.
இருவரும் இருந்த நிலையைப் பார்த்து என்ன சொல்வது என்று புரியாமல் அவள் நிற்க, தமக்கையை எதிர்பார்க்காத சித்தார்த், அப்படியே நின்றிருக்க, ‘இவ்ளோ நேரம் படித்துப் படித்துச் சொன்னேன். கேட்டா தானே...’ என்று எண்ணிக்கொண்டிருக்க, இவை அனைத்தும் ஒருசில நொடிகளில் நடந்து முடிந்தன.
முதலில் சுதாரித்த சுபா, "சாரி" என்று வந்த சிரிப்பைக் கட்டுப்படுத்த முயன்றபடி வெளியே சென்றாள்.
சித்தார்த், அவளை இறக்கி விட்டுவிட்டுச் சிரிக்க, மதுவோ ஏக கடுப்பில் இருந்தாள்.
"என்ன சிரிப்பு வேண்டியிருக்கு? என் மானமே போச்சு. அப்போதே சொன்னேன் கதவு திறந்திருக்கு யாராவது வரப்போறாங்கன்னு கேட்டீங்களா? நான் எப்படி இனி, அண்ணி முகத்தைப் பார்ப்பேன்?" என்று தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்தாள்.
“அப்போ, கதவை மூடிட்டு வந்து உன்னைத் தூக்கவா?" என்று தீவிர பாவனையுடன் கேட்டவனைப் பார்த்ததும், "உங்களை" என்று சுற்றிப் பார்த்தவளை, "என்ன அடிக்க ஏதாவது தேடறியா? அடிப்பது தான் அடிக்கிற... எதையாவது தூக்கி அடிச்சி வச்சிடாதே. இதிலேயே அடி. மெத்து மெத்துனாவது விழும்" என்று பக்கத்தில் இருந்த தலையணையை எடுத்துக் கொடுக்க, “அடிக்க தலையணையா எடுத்து கொடுக்கறீங்க?" என்று அவனைத் துரத்தினாள்.
அறைவாசலில் சென்று நின்றவன், "நான் இப்போ வெளியே போறேன். தைரியம் இருந்த நீயும் வெளியே வா பார்ப்போம்" என்றதும் ஆத்திரத்துடன் தலையணையை அவன் மீது தூக்கி எறிய, சித்தார்த் மறுபுறம் விலகிச் சென்றுவிட தலையணை ஹாலில் போய் விழுந்தது.
"ஆஹா...! நீ விட்ட ஏவுகணை குறி தவறிப் போய்டுச்சி. இதுக்குத் தான் பேச்சு பேச்சா இருக்கணும். இப்போ பாரு என்ன ஆச்சுன்னு?" என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு செல்ல, சிணுங்கலுடன் அமர்ந்தவளுக்குச் சிரிப்பு தான் வந்தது.
சிரித்துக்கொண்டே ஹரியின் பக்கத்தில் வந்து அமர்ந்தான்.
"என்னடா மாப்பிள்ளை! தலையணை ஹாலுக்கு வந்து விழுது?” என்றார்.
"ஏன்? இந்த நேரம், இத்தனை மணிக்கு, இத்தனை நிமிஷத்துக்கு, இத்தனை நொடிக்கு... இந்த விஷயம் நடந்ததுன்னு, உங்க பொண்டாட்டி பிபிசில நியூஸ் வாசிச்சி இருப்பாங்களே வாசிக்கலையா?" என்று அப்பாவியாகக் கேட்டான்.
"கொழுப்புடா உனக்கு" என்று கையிலிருந்த குஷனை எடுத்து தம்பியை ஒன்று வைத்தாள் சுபா.
"இந்தப் பொம்பளைங்களுக்குத் தலையணைல அடிப்பதுன்னா ரொம்பப் பிடிக்கும் போல" என்றான்.
"உனக்கு இப்போ தான் ஆரம்பிச்சிருக்கு. இது வெறும் ட்ரையல். இனி, தான் எந்தப் பொருளால எந்த மாதிரி அடிக்கலாம்னு ரூம் போட்டு யோசிப்பாங்க " என்று சொன்னதும், சுபா, “நீங்க அப்படி எத்தனை முறை அடி வாங்கி இருக்கீங்க?" என்று கேட்டாள்.
"விடு சுபா! நைட் தோப்புகரணம் போடும்போது கூட ஒரு ஐம்பத்து சேர்த்துப் போடச் சொல்லிடு" என்றதும், "அடப்பாவி நீ சப்போர்ட் பண்ணுவன்னு நினைச்சா இப்படிக் காலை வாரி விடுறியே?" என்றார் ஹரி.
அனைவரும் சிரிப்புடன் அமர்ந்திருக்க, "சித்தார்த்! நீங்க ரெண்டு பேரும் சமாதானம் ஆகிட்டீங்கன்னு தெரிஞ்சதும் எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?" என்று உண்மையான மகிழ்ச்சியுடன் சொன்னாள்.
சித்தார்த் சலிப்புடன் "ம்ச்சு" என்றான்.
"என்னடா ஏன் இவ்வளவு சலிப்பு?" என்றார் ஹரி.
தன் தலையை அழுந்தக் கோதியவன் தன் மனதில் இருக்கும் தவிப்பைச் சொல்ல, சுபா கோபத்துடன், "ஏன்டா! உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? மதுவே இப்போ தான் மனசு மாறி வந்திருக்கா. அவளோட நிம்மதியா குடும்பம் நடத்தற வழியைப் பாரு. பைத்தியக்காரத்தனமா ஏதாவது செய்து இருக்குற நிம்மதியைக் கெடுத்துக்காதே" என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்.
"என்ன பேசற சுபா? எனக்கு மட்டும் அவளோட சந்தோஷமா இருக்கணும்னு எண்ணம் இல்லையா? ஆனா, ஒவ்வொரு நாளும் என் மனசாட்சி என்னைக் கேள்வி கேட்குமே? ”
"சித்தார்த், நீ நல்லவனா இருக்கலாம். அதுக்காக, இவ்ளோ நல்லவனா இருக்க நினைக்கக் கூடாது. இப்போ என்ன ஆகிப்போச்சு? நீ ஆரம்பத்தில் சந்தேகப்பட்ட. அப்போ உனக்கு மதுவைப் பற்றி என்ன தெரியும்? அவ மேல தப்பு இல்லைன்னு தெரிந்ததும் அவளைக் கல்யாணம் செய்துக்கப் பிரியப்பட்ட. அவளோட கடந்த கால வாழ்க்கை தெரிந்ததும் அவளுக்காக உருகின. உன்னால் தான் அவ வாழ்க்கை இப்படி ஆகிடுச்சின்னு உன்னை நீயே வருத்திகிட்டு இருந்த. அவளைக் கலயாணம் செய்து சந்தோஷமா வைத்திருக்கணும்னு நினைச்ச. இதுவரைக்கும் நீ செய்ததெல்லாம் சரி.
ஆனா, தேவையே இல்லாமல் நீ இந்தக் கதையை அவளிடம் ஏன் சொல்லணும்? அவ சந்தோஷமாக இருக்கணும்ன்னு தானே நீ நினைக்கிற. இந்த விஷயம் தெரிஞ்சா அவ சந்தோஷபடுவாளா?" என்று ஹரி அவனுக்குச் சொல்லிக் கொண்டிருக்க, சித்தார்த் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தான்.
"போதும்டா சித்தார்த். நீ பட்ட வேதனையெல்லாம் போதும். இந்த விஷயத்தை நாங்க யாரும் அவளிடம் சொல்லப் போரதில்ல. நீ இன்னும் அந்த டைரியைப் பத்திரமா பொக்கிஷமா வச்சிட்டு இருக்கியா? ஊருக்குப் போனதும் முதல் வேலையா அந்த டைரியை எடுத்து உன் தலையைச் சுத்தித் தூக்கிக் கடல்ல போடுவியோ... இல்ல எரிச்சிச் சாம்பலாக்குவியோ... இன்னொரு முறை உறுத்தலா இருக்கு. அதுவா இருக்குன்னு நீயே உன் வாழ்க்கையை கெடுத்துக்காதே. புரிஞ்சிதா" என்று அவன் கையை ஆதரவாகத் தட்டிக்கொடுத்தாள்.
எதுவும் சொல்லாமல் அமர்ந்திருக்கும் தன் தம்பியைப் பார்த்தவள், நம்பிக்கை இல்லாமல் தன் கணவனைப் பார்த்து உதட்டைச் சுழித்தாள். இதற்கு மேல் கடவுள் விட்ட வழி என்று சொல்வது போல ஒரு பார்வைப் பார்த்துவிட்டுச் சென்றார்.
தற்செயலாக ஜன்னலருகில் வந்த மதுவின் காதில், இவர்கள் பேசியது எதுவும் விழவில்லை என்றாலும், இந்தக் காட்சியைப் பார்த்துக் குழம்பினாள்.
‘இவ்வளவு நேரம் நன்றாகத் தானே இருந்தார். இப்போது என்ன ஆயிற்று? ஒருவேளை பிஸ்னசில் ஏதாவது பிரச்சனையா?’ என்று குழப்பத்துடன் அங்கிருந்து விலகினாள்.
அப்போதிருந்தே சித்தார்த்தைக் கவனிக்க ஆரம்பித்தாள். அனைவரும் இருக்கும் போது நன்றாகப் பேசுபவன் தனிமை கிடைக்கும் போது சற்றுச் சோர்வாகவே இருந்தான். நாளையும் இதே நிலை தொடர்ந்தால், ஊருக்குச் சென்றதும் கட்டாயம் அவனிடம் பேசவேண்டும். அவனுடைய இந்த முகவாட்டம் தன்னைப் பாதிக்கிறது என்று உணர்ந்தாள். அவன் தன் உயிரோடுக் கலந்துவிட்டான் என்று புரிந்தது. முகத்தில் மெல்லப் புன்னகை மலர்ந்தது. ‘என்ன ஆனாலும், உனக்கு நான் இருக்கிறேன்’ என்று தன் நெஞ்சோடு அணைத்து, ஆறுதல் சொல்லவேண்டும் போலத் தோன்றியது.
மறுநாள் எழுந்ததும் சித்தார்த்தின் முகத்தைப் பார்த்தவள், சாதாரணமாக இருப்பதாகத் தோன்ற நிம்மதியுடன் வேலைகளைக் கவனித்தாள். மேலும் இரண்டு நாட்கள் சுபாவின் வீட்டில் இருந்தவர்கள் அன்று ஊருக்கு கிளம்பிக்கொண்டிருந்தனர்.
மதுவிற்கு குங்குமம் கொடுத்துவிட்டு, ஆதரவாக அவள் கையைப் பற்றிக்கொண்டு, "ரொம்பச் சந்தோஷம் மது! நாங்க எதிர்பார்த்தது இதைத் தான். அவன் கொஞ்சம் கோபக்காரன். ஏதாவது முன்கோபத்தில் சொன்னாலும், நீ கொஞ்சம் பொறுமையா போடா. அவனுக்கே தெரியாமல் அவன் ஏதாவது தப்பு செய்திருந்தாலும், நீ மட்டும் அவனை வெறுத்துடாதே" என்று கண்கலங்கச் சொன்னதும், "என்ன அண்ணி இப்படிச் சொல்றீங்க? அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது" என்று சொல்லிகொண்டிருக்கும் போது சித்தார்த் அருந்ததியைத் தூக்கிக்கொண்டு வந்தான்.
அவள் அவசரமாகக் கண்ணைத் துடைப்பதைப் பார்த்தவன், “என்ன சுபா என் பொண்டாட்டியை ஏதாவது மிரட்டினாயா?" என்று கேட்டான்.
"நான் ஏன்டாப்பா உன் பொண்டாட்டியைத் திட்டப் போறேன். உன்னைப் பத்திக் கொஞ்சம் சொன்னேன். உன் பொண்டாட்டி பயந்துட்டா" என் பாவனையுடன் சொல்ல மூவரும் சேர்ந்து சிரித்தனர்.
மதுவிடம் ரகசியமாக, “மது கூடிய சீக்கிரம் நல்ல விஷயம் சொல்லணும் ஓகே வா?" என்று சுபா கேட்டதும், கன்னங்கள் சிவந்து நாணப் புன்னகையுடன் நின்றவளைக் கண் நிறைய நிறைத்துக் கொண்டான்.
ஊருக்குச் செல்லும் முன்பு இருந்தவர்களுக்கும், இப்போது இருப்பவர்களுக்கும் இருந்த வித்தியாசத்தை அனைவருமே நன்கு உணர்ந்தனர். சுபா ஏற்கெனவே விஷயத்தைச் சொல்லியிருந்தாள். தேவகி சந்தோஷத்தை வெளிக்காட்டாத போதும், பாபா கோவிலில் பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்ததே, அவரது மனத்தின் நிறைவை வெளிக்காட்டியது.
மறுநாள் காலையில் ஹோமிற்குச் செல்லக் கிளம்பிய மது, நேத்ராவையும் அழைத்துச் செல்ல எண்ணி அவளது அறைக்குச் சென்றாள். எப்போதும் துள்ளிக் குதித்து அஷ்வந்துடன் வம்பு செய்தபடி வளைய வருபவள், இன்று கண்களில் கண்ணீருடன் கட்டிலில் அமர்ந்திருப்பதைக் கண்டாள்.
“நேத்ரா! ஏன் டல்லா இருக்க? ஹாஸ்பிட்டல்ல ஏதாவது பிரச்சனையா? எதுக்கு அழற?" என்று கேட்டதும் பொங்கிவந்த அழுகையைக் கட்டுப்படுத்தியபடி, "ஒண்ணுமில்ல அண்ணி! நேத்து ஹாஸ்பிட்டல்ல ஒரு கேஸ் ரொம்ப முயற்சி செய்தும் காப்பாத்த முடியல. அதை நினைச்சேன்..." என்று பாதி உண்மையையும் பாதி பொய்யுமாகச் சொல்லி முடித்தாள்.
"ஒஹ்! என்ன செய்றது? சில சமயம் நம்மையும் மீறி ஏதாவது நடக்கும் போது, நாம ஒண்ணுமே செய்ய முடியாது" என்று சொல்லிவிட்டுப் பெருமூச்சு விட்டவள், "சரி நான் ஹோமுக்குப் போறேன். நீயும் வரியான்னு கேட்கத்தான் வந்தேன்" என்றாள்.
ஹோமுக்கு என்றதும் அவசரமாக திரும்பியவள், “இல்லண்ணி எனக்கு எங்கேயும் வரப் பிடிக்கல. நீங்க போய்ட்டு வாங்க" என்றாள்.
யோசனையுடன் நாத்தனாரைப் பார்த்துவிட்டு அவள் கிளம்பிச் சென்றதும், நேத்ரா கதவை மூடிவிட்டு முகத்தை மூடிக்கொண்டு அழுதாள். நேத்ராவின் நடவடிக்கையில் தெரியும் மாற்றத்தைக் கவனித்து கொண்டிருந்த அஷ்வந்த், இரண்டு நாள்களாக அவளிடம் பெரும் மாற்றம் தெரிவதை உணர்ந்தான்.
அதைப் பற்றி யோசித்தபடி தோட்டத்தில் உலவிக்கொண்டிருந்தவன் அறைக்குள் நடந்த இருவரின் உரையாடலையும், மது சென்றதும் நேத்ராவின் அழுகையும் அவனை ஓரளவிற்கு நடந்தவற்றை யூகிக்க வைத்தது.
நேத்ரா இரண்டு நாள்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியை எண்ணி எண்ணி அழுது கொண்டிருந்தாள். அன்று வீட்டிற்கு ஸ்ரீ தன் நண்பரை அழைத்துக்கொண்டு ஆதியைப் பார்ப்பதற்காக வந்திருந்தான். ஸ்ரீராமைக் கண்டதும் நேத்ரா அலுவலக அறைக்குச் சென்று பேசிக்கொண்டிருக்க, அவன் வேண்டா வெறுப்பாக அவளது கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருப்பதைப் போல அவளுக்கே தோன்றியது.
அவளுக்குப் போன் வரவும், வெளியே வந்து பேசிக்கொண்டிருந்த போதும், பார்வை முழுதும் ஸ்ரீராமின் மீதே இருந்தது. ஆனால், அவன் மறந்தும் அவளைத் திரும்பிப் பார்க்கவில்லை. காஃபி கொண்டு வந்த மீராவிடமும், அவனை விசாரித்த தனது அன்னையிடமும் எந்தத் தயக்கமும் இல்லாமல் நன்றாகச் சிரித்துப் பேசுபவன் தன்னிடம் மட்டும் அளந்து வைத்தது போலப் பேசுவதையும், அதுவும் சில நாள்களாகத் தன்னை வேண்டுமென்றே தவிர்ப்பது போலத் தோன்ற, ‘இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும்’ என்று எண்ணிக்கொண்டாள்.
அவனுக்காக வெளியே தோட்டத்திலேயே காத்திருந்தாள். ஆனால், வெளியே வந்தவன், அவள் அங்கே நின்றிருந்ததைப் பார்த்தது போல் கூட அவளுக்குத் தோன்றவில்லை. தன் நண்பருடன் பேசிக்கொண்டே சென்றுவிட்டான்.
‘ஸ்ரீ நீங்க என்னை எவ்வளவு அவாய்ட் பண்றீங்களோ... அந்த அளவுக்கு என் மனசுல ஆழமா பதிந்துக்கொண்டே தான் இருக்கிறீர்கள். வரேன் எனக்கு இரண்டில் ஒன்று தெரிந்ததே ஆகவேண்டும்’ என்ற அவளது பிடிவாத குணம் தலை தூக்கியது.
மறுநாள் விடிந்தும் விடியாததுமாக, ஸ்ரீராமின் வீட்டுக் கதவை தட்டினாள். ‘யாரது? இவ்வளவு காலையில் ஏதாவது குழந்தைக்குப் பிரச்சனையா?’ என்று எண்ணிக்கொண்டே தூக்கம் கலையாத கண்களுடன் அவசரமாக வந்து கதவைத் திறந்தான்.
புன்னகையுடன் நின்றிருந்த நேத்ராவைப் பார்த்ததும் என்ன சொல்வதென்று தோன்றாமல் நின்றுகொண்டிருக்க, "குட் மார்னிங் ஸ்ரீ!" என்று அவளே ஆரம்பித்தாள்.
பதிலுக்குக் "குட் மார்னிங்" என்றான்.
"ஹலோ உங்க வீட்டுக்கு வந்திருக்கேன். உள்ளே வான்னு கூப்பிட மாட்டீங்களா?" என்று கேட்டாள்.
"உள்ளே வா! உட்கார்" என்றவன் முகத்தைக் கழுவிக்கொண்டு இருவருக்கும் காஃபி எடுத்துக்கொண்டு வந்தான்.
"ம்ம்.. தேங்க்ஸ்" என்று சொல்லி வாங்கிக்கொண்டவள், அதை ரசித்து ருசித்துப் பருக, அவனது பொறுமை பறந்து கொண்டிருந்தது.
அவள் ஒரு முடிவுடன் தான் வந்திருக்கிறாள் என்று புரிந்துக்கொண்டவன், "என்ன விஷயமா என்னைப் பார்க்க இவ்வளவு காலையில் கிளம்பி வந்திருக்கிங்க?" என்றான்.
அவள் பொறுமையாக, "காஃபி சூப்பரா இருந்தது" என்று புன்னகைத்தாள்.
கடுப்பானவன், "அவ்வளவு தானே ரொம்பத் தேங்க்ஸ். யாரும் பார்க்கும் முன்ன கிளம்புங்க" என்று அவளைத் துரத்தாத குறையாகச் சொல்லிவிட்டு, கப்புகளை எடுத்துச் சென்று கழுவி வைத்துவிட்டுத் திரும்பியவன், கிச்சன் வாசலில் நின்றிருந்த நேத்ராவைப் பார்த்தான்.
“இந்த வேலையையும் நீங்கதான் செய்யணுமா? இதுக்குத் தான் வீட்ல ஒரு பொண்ணு இருக்கணும்ங்கறது. வீட்டு வேலையையும் கவனிச்சிக்கிட்டு, உங்களையும் பார்த்துக்குவாங்க" என்றாள் பார்வையில் எதிர்பார்ப்புடன்.
அவளை ஒரு பார்வைப் பார்த்தவன், "உங்க சஜஷனுக்கு ரொம்ப நன்றி. நீங்க கிளம்பறீங்களா... எனக்கு வேலையிருக்கு" என்று சொல்லிவிட்டு அவளைத் தாண்டிச் செல்ல முயன்றான்.
நேத்ரா கோபத்துடன் குறுக்கே நின்று, அவனைத் தடுத்து நிறுத்தினாள்.
"நேத்ரா! என்ன இது? வழியை விடு" என்றான்.
"ஸ்ரீ இன்னுமா உங்களுக்குப் புரியல? இல்ல, புரியாதது போல நடிக்கிறீங்களா? இன்னும் எப்படிச் சொல்லி உங்களுக்குப் புரிய வைப்பேன்" என்று அழாத குறையாகச் சொன்னாள்.
"நீ சொல்றது, எனக்குப் புரியுது. ஆனா, இது நடக்காத விஷயம். உன் மனசைக் குழப்பிக்காதே. நீ சின்னப் பொண்ணு. உனக்கு எப்போ என்ன செய்யணும்னு பார்த்துச் செய்ய உனக்கு அப்பா, அம்மா, கூடப் பிறந்தவர்கள் இருக்காங்க. நீ முட்டாள்தனமாக ஏதாவது யோசிக்காதே. இன்னைக்குச் சரின்னு தோணுறதெல்லாம் நாளைக்கு உனக்குத் தப்பா தெரியும். வீட்டுக்குப் போய் நல்லா யோசி. உனக்கே புரியும்" என்று பொறுமையாகச் சொன்னான்.
"இல்ல ஸ்ரீ! நான் நிதானமா தான் இருக்கேன். எங்க வீட்டில் ஏதாவது சொல்வாங்கன்னு நினைக்கிறீர்களா? அதெல்லாம் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்" என்று பேசிக்கொண்டே போக அவன் கோபத்துடன், "நானும் சின்னப் பொண்ணாச்சேன்னு பார்த்துட்டே இருக்கேன். நீ பேசிட்டே போற. வீட்ல சொல்லும் மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்துகிட்டி நிம்மதியா இரு.
நான் இந்த ஹோமை என் உயிரா நினைத்துக்கொண்டிருக்கிறேன். இதை விட்டு என்னால் வரமுடியாது. இந்த வீட்டில உன்னால வாழ முடியாது. நீ வசதியா வளர்ந்தப் பொண்ணு. என்னைக் கல்யாணம் செய்துகிட்டா அதையெல்லாம் இழக்கணும். என்னை நம்பி வரும் பொண்ணுக்கு மூன்று வேலை சாப்பாடு போட்டு, அவளை நிம்மதியா வச்சிக்க மட்டும்தான் என்னால முடியும். அப்படிச் சாதாரணமா வாழ உன்னால முடியாது.
இந்த ஹோமை கவனிச்சிக்க பொறுமை ரொம்ப முக்கியம். உன்னோட துடுக்குத்தனத்திற்கும், கோபத்திற்கும், விளையாட்டுத்தனத்திற்கும், இந்த இடம் ஒத்துவராது இதுக்கு மேல, நீ எதுவும் பேசாம கிளம்பு. இனி, நீ இங்கே வரவேண்டாம்" என்று சொன்னதும், அவள் அசையாமல் அவனையே பார்த்துக்கொண்டு நிற்க, கோபத்துடன் அவள் கையைப் பிடித்து இழுத்துவந்து வெளியே விட்டான்.
நடந்ததை நினைத்தவள், "ஸ்ரீ! எப்படி ஸ்ரீ என்னோட காதலை மறுக்க உங்களால முடிஞ்சது?" என்று அழுகையோடு புலம்பினாள்.
ஜன்னல் வழியாகப் பார்த்த அஷ்வந்த், தன் தங்கையின் கண்ணீரைக் கண்டதும் தாங்க முடியவில்லை. இன்றே இந்த விஷயத்திற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று எண்ணிக்கொண்டே சென்றான்.
அன்று மாலை ஆதியும், சித்தார்த்தும் வந்ததும் தன் அண்ணிகளை, தனியாக அழைத்துச் சென்றவன் அனைத்தையும் சொன்னான். அதன்படி ஐவரும் கூடிப் பேசி, அப்பாவிடம் சொல்லி நேத்ராவிற்கு உடனே மாப்பிள்ளைப் பார்க்க ஏற்பாடு செய்யவேண்டும் என்ற முடிவுடன், அன்று இரவே தன் பெற்றோரிடம் சென்று பேசினார். இது எதையும் அறியாத நேத்ரா, தன் அறையில் சுருண்டு படுத்திருந்தாள்.
இரண்டு நாள்களுக்குப் பிறகு, அன்று காலையில் நேத்ரா ஹாஸ்பிட்டலுக்குக் கிளம்பிக் கொண்டிருக்கும் போது, அவளது தந்தை அழைத்தார்.
"நேத்ராம்மா! உனக்குக் கல்யாணம் செய்துடலாம்ன்னு முடிவு செய்திருக்கோம். நல்ல சம்மந்தம். நீ மாப்பிள்ளையோட போட்டோ பார்த்துச் சரின்னு சொன்னா, நிச்சயத்தை முடிச்சிடலாம். என்ன சொல்கிறாய்?" என்றதும், நேத்ரா கோபத்துடன் கையிலிருந்த கோட்டை தூக்கி வீசினாள்.
"யாரைக் கேட்டு இந்த ஏற்பாடு செய்தீங்க? எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்" என்று திடமாகச் சொன்னாள்.
"நேத்ரா! ஏன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கிற? அப்பா உன்னோட நன்மைக்குத் தானே சொல்றாங்க. மாப்பிள்ளை வீட்ல பெரியவர்க யாரும் கிடையாது. ஒரே ஒரு தங்கை மட்டும் தான் இருக்காம்" என்று மதுவைப் பார்த்துச் சொல்ல, அவள் புன்னகையோடு நின்றிருந்தாள்.
"யாருக்கு யார் வேணாலும் இருந்துட்டுப் போகட்டும். எனக்கு இந்தக் கல்யாணம் வேணாம்" என்று எரிச்சலுடன் சொன்னாள்.
"அடடடடா... நீங்க முதலில் மாப்பிள்ளையோட போட்டோவை அவகிட்ட காட்டுங்க. இந்த மாப்பிள்ளையை அவ வேண்டாம்னு சொன்னா அவள் காலம் பூரா ஒவ்வையார் தான். அவளுக்கு வேற மாப்பிள்ளையைப் பார்க்கவே பார்க்காதீங்க. நேரா நம்ம மேட்டரை முடிச்சிடுங்க" என்று வெட்கப்படுவது போலச் சொன்னான் அஷ்வந்த்.
"ரொம்ப நிம்மதி! நானா உங்களைக் கல்யாணம் செய்து வைங்கன்னு கேட்டேன். அப்படி உங்களுக்கெல்லாம் யாருக்காவது கல்யாணம் செய்து வைக்கிறதென்றால் இதோ, இந்த தடியனுக்கே கல்யாணம் செய்து வைங்க. எனக்கு நேரமாகுது" என்று கிளம்ப ஆயத்தமானாள்.
"நேத்ரா! இந்தப் போட்டோவைப் பாரு. உனக்குப் பிடிக்கலைனா வேண்டாம்" என்று ஆதி சொல்ல, "பாரு நேத்ரா! உனக்கு வேண்டாம்னா வேண்டாம்" என்று சித்தார்த்தும் அழுத்திச் சொன்னான்.
வேறு வழி இல்லாமல் போட்டோவை வாங்கிப் பார்த்தவள் நம்பமுடியாமலும், சந்தோஷத்திலும் போட்டோவையே பார்த்துக் கொண்டிருக்க. "என்ன நேத்ரா இந்த மாப்பிள்ளை பிடிக்கலையா? வேண்டாம்னு சொல்லிடலாமா?" என்று கேட்ட அம்மாவை ஓடிச்சென்று அணைத்துக்கொண்டாள். சந்தோஷத்தில் அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
"இன்னும் ரெண்டு நாள்ல நிச்சயதார்த்தம். சந்தோஷமா?" என்று கேட்டதும், "அப்பா தேங்க்ஸ்! ரொம்பத் தேங்க்ஸ்" என்று அவரது கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.
"ம்ம்...ம்ம்... போதும் போதும் இந்தப் பாச மழை. இவ்வளவு சீக்கிரம் இந்த விஷயம் முடிவாக யாரு காரணம்னு நம்ம கல்யாணப் பொண்ணுகிட்ட எடுத்துச் சொல்லுங்க" என்று அஷ்வந்த் சாவதானமாக கால் மேல் கால் போட்டு சோஃபாவில் அமர்ந்தான்.
"ஆமாம் நேத்ரா! அஷ்வந்த் தான் எங்களிடம் வந்து சொன்னான். அதனால் தான் நாங்க நேராக போய் ஸ்ரீராமிடம் கல்யாணத்திற்குப் பேசினோம்” என்றாள் மீரா.
"மாமாவும், உங்க அண்ணன்களும் நேர்ல போய்ப் பேசினாங்க. ஹரி அண்ணாவும் டெல்லிலயிருந்து பேசினாங்க" என்று மது சொல்ல, அஷ்வந்தை நோக்கி வந்தவள் “ரொம்பத் தேங்க்ஸ்டா அஷ்வந்த்” என்று அவன் மடியில் சாய்ந்து அழ, அவன் மட்டும் அல்ல அனைவருமே நெகிழ்ந்து இருந்தனர்.
அவளைச் சிரிக்க வைக்கவேண்டி, "ஏய் நேத்ஸ்! இப்போ உனக்கு ஒரு கதை சொல்றேன் கேட்க்கிறாயா?" என்றான்.
"ஏன்டா? உன்கிட்டக் கொன்சம் ஃபீளிங்க்ஸைக் காட்டினதுக்கு, நீ கதைன்னு சொல்லிப் போடப் போற மொக்கைக்கு நாங்களெல்லாம் பலி ஆகணுமா?" என்று பரிதாபமாகக் கேட்டாள்.
“ச்சு.. தேவையில்லாம பேசாதே. கதையைக் கேளு" என்றவன், ஒரு காட்டுல ஒரு குரங்கு கூட்டம் இருந்ததாம். அந்தக் குரங்கு கூட்டத்துத் தலைவன் திடீர்ன்னு இறந்து போச்சாம். உடனே, எல்லாக் குரங்கும் கூடி நமக்கு ஒரு தலைவன் தேவை. அதனால் நாமளே ஒரு தலைவனைத் தேர்ந்தெடுக்கணுன்னு ஒரு வயசான குரங்கு சொல்லுச்சாம். சரின்னு எல்லா குரங்கும் ஒத்துக்குச்சாம்.
அப்போ அந்த வயசானக் குரங்கு, நான் ஒரு கேள்வி கேட்பேன். அதுக்கு யார் சரியான பதில் சொல்றாங்களோ, அவங்க தான் தலைவன்னு சொன்னதும், எல்லா குரங்குகளும் சரின்னு சம்மதம் சொல்லிவிச்சி. இப்போ அந்த வயசான குரங்கு கேட்டுதாம்" என்று சொல்லிக்கொண்டிருக்க, அது என்ன கேள்வி என்று அனைவரும் அஷ்வந்தின் முகத்தைப் ஆர்வத்துடன் பார்த்தனர்.
"சேவல், வட்டமா முட்டை போடுமா? இல்ல ,சதுரமா முட்டை போடுமா?" என்று கேட்டதும் நேத்ரா அவசரமாக, "டேய்! சேவல் எங்கேடா முட்டை போடும்? கோழி தானே முட்டை போடும்" என்று சொல்ல, அஷ்வந்த் அவளது கன்னத்தை வழித்து, “என் தங்கம்!” என்றவன் தன்னை மீறி வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான்.
"ஏன்டா நீ என்ன லூசா? எதுக்கு இப்படிச் சிரிக்கிற?" என்று எரிச்சல் பட்டதும், "கங்கிராஜுலேஷன்ஸ்!” என்று அவள் கையைப் பிடித்துக் குலுக்கினான்.
"எதுக்குடா?" என்றவளைப் பார்த்துச் சிரிப்புடன், "நீ சரியா பதில் சொல்லி அவ்வளவு பெரிய குரங்கு கூட்டத்துக்குத் தலைவியா ஆகிட்டியே அதுக்குத்தான்" என்றதும், அனைவரும் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க, "அடப்பாவி! உன்னை என்ன செய்கிறேன் பார்" என்று நேத்ரா அவனைத் துரத்த, வேண்டுமென்றே அவளிடம் மாட்டி இரண்டு உதை வாங்கினான்.
சந்தோஷத்திலும், சிரிப்பிலுமே அன்றைய நாள் ஓடியது. இரவு, சித்தார்த்திற்குப் பால் எடுத்துக் கொண்டு வந்தவளை, கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவன், கை நீட்டி அழைக்க, புன்னகையுடன் அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள். இருவருமே சிறிதுநேரம் ஒன்றும் பேசவில்லை.
"ஏங்க. நீங்க ஸ்ரீ அண்ணாகிட்ட போய் பேசி நேத்ரா கல்யாணத்தை இவ்வளவு சீக்கிரம் முடித்துவைப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்லை. ஸ்ரீ அண்ணா ஸாஃப்ட். ஆனா, ஒரு முடிவெடுத்தா, அதிலிருந்து மாறவே மாட்டார். அதான் எனக்கு ஆச்சரியம்" என்றாள்.
"அது பெரிதாக ஒன்றும் இல்லை மது! நேத்ரா பத்திக் கொஞ்சம் எடுத்துச் சொன்னேன். அவர் கொஞ்சம் கௌரவம் பார்க்கிறவர். அதான், கல்யாணமானாலும் நாம் அவருக்குத் தெரிந்தோ தெரியாமலோ எந்த விதத்திலும் அவராக கேட்காம உதவி செய்யக்கூடாதுன்னு நினைத்தார். அவரோட பேச்சிலேயே அது தெரிந்தது. அதான், அதற்கு ஏற்றார்போல பேசினேன். விஷயம் சுபம்" என்றான்.
"நீங்க யாரு? எவ்வளவு பெரிய பிஸ்னஸ் மேன். உங்க பேச்சுல மயங்காத ஆள் இருக்க முடியுமா?" என்று அவள் சிரிக்க, "உன்னைத் தவிர" என்றான் புன்னகையுடன்.
புன்னகைத்தவள் அவன் மார்பை நீவியபடி, "அது அப்போ, இப்போ...” என்று சொல்லிவிட்டு அவன் மார்பில் முகம் புதைத்தவள் அன்புடன் முத்தமிட்டாள்.
"என்ன மேடம்?, இன்னைக்கு நல்ல மூட்லயிருக்கீங்களா... கேட்காமலே எல்லாம் கிடைக்குது" என்று சிரித்தான்.
நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள், “இன்னைக்கு நம்ம குடும்பம் சந்தோஷமா இருக்குன்னா, அதுக்கு நீங்களும் ஒரு காரணம்ன்னு நினைக்கும் போது எனக்கு அப்படியே பறக்கறது போலயிருக்கு" என்றாள்.
"பறந்தது போதும்... கொஞ்சம் கீழே வாங்க" என்று மேலும் இறுக அணைத்துக்கொண்டான்.
அவளும் சிறிதுநேரம் அவனுக்கு ஈடுகொடுத்து நடந்துகொண்டாள். இருவரும் தங்களை மீட்டுக்கொண்ட நேரத்தில் மது அவனிடமிருந்து விலகிச் செல்ல முயல, “எங்கே போற? போதும் நீ என்னைப் பார்த்து ஓடி ஒளிந்ததெல்லாம். இனி, என்னை விட்டுப் போக நினைச்சா அவ்வளவுதான்" என்று அவளை அருகில் இழுத்து அணைத்தான்.
சிரித்தபடி, "ஆசை அறுபது நாள்; மோகம் முப்பது நாள்ன்னு ஒரு பழமொழி இருக்கு தெரியுமா உங்களுக்கு" என்று சொல்லிவிட்டுக் குறும்பாகச் சிரித்தாள்.
"அது, காதலிக்கத் தெரியாதவர்களுக்காகச் சொல்லி இருப்பாங்க. நாம தான் காதல் பறவைகளாச்சே" என்று அவள் கழுத்தில் முத்தமிட்டவன், தொடர்ந்து முன்னேற அவனது கரங்களும் அவளுடலில் அத்துமீறத் துவங்கின.
அத்தியாயம்---61
காலையிலிருந்து அனைவரும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்க, மது மாமா வீட்டிலிருந்து அனைவரும் வந்தனர். தேவகியும், ராம மூர்த்தியும், வாசலுக்கே வந்து வரவேற்று அழைத்து சென்றனர். "அக்கா ஒரு வழியா பொண்ணுக்கும் கல்யாணத்தை முடிவு செய்துட்டீங்க" என்று ராஜி சொல்ல. "எல்லாம் கடவுள் செயல் ராஜி, விமலா வாங்க இப்படி உட்காருங்க. வாம்மா வித்யா, மேகலா எப்படியிருக்கீங்க? செக்அப் போய் வரீங்களா?" என்று விசாரித்துக் கொண்டிருந்தார்.
"பெரியம்மா மது எங்கே?" என்றாள் வித்யா. “மேல அவ ரூம்லயிருக்காம்மா போய் பாரேன்" என்று வித்யாவையும், மேகலாவையும் அனுப்பி வைத்தார்.
சித்தார்த் மதுவின் இடையை பற்றி அணைத்தபடி நின்றிருக்க "பேசாம நில்லுங்க சித்தூ! நீங்க என்ன சின்னக் குழந்தையா? இன்னைக்கு என்னவோ புதுசா என்னை டை கட்டிவிடச் சொல்றீங்க?" என்று புலம்பிக்கொண்டே டையைக் கட்டினாள்.
டையைக் கட்டி முடித்ததும் விலக முயன்றவளை விடாமல் அவள் இடையில் சித்தார்த்தின் கரங்கள் விளையாட, "என்னங்க இது, எல்லோரும் வந்திடுவாங்க. கிளம்பியாச்சு இல்ல, நல்ல பிள்ளை இல்ல. கீழே போங்க. நான் பத்து நிமிடத்தில் வந்துவிடுகிறேன்" என்று அவன் தாடையை பிடித்து கொஞ்சியபடி சொன்னாள்.
"ஹே ... ஏஞ்சல் இன்னைக்கு என்னவோ தெரியலைடா அப்படியே உன்னைப் பார்த்துக்கொண்டே இருக்கணும் போலிருக்கு. என் கைக்குள்ளேயே வைத்திருக்கணும் போலிருக்கு. என்ன மாயம்டா செய்த, என்னை இப்படி மயக்கி வச்சிருக்க?" என்றான் கிறக்கமாக.
உதட்டைக் கடித்துக்கொண்டு சிரித்தவளின் முகத்தைப் பற்றி அருகில் இழுத்தவன், "மது....மை....ஸ்வீட் லிட்டில் ஏஞ்சல்" என்று கிறக்க குரலில் கொஞ்சிக்கொண்டே அவள் முகமெங்கும் இதழ் பதித்தான்.
தன் முகம் சிவக்க வாங்கிக்கொண்டு அவனுக்குப் பதில் கொடுத்துக்கொண்டிருந்தவள் நிலைமையை உணர்ந்து, "சித்தூ! எல்லோரும் வந்திடுவாங்க. கிளம்பி போகணும் சித்தூ” என்று சொன்னாலும் குரல் வெளியே வராமலும், அவனிடமிருந்து விலகாமலும் சொன்னாள்.
அவனும் அவளை விலக்காமல், "போவதென்றால் போ" என்றான்.
"போ போன்னு சொல்லிட்டு இப்படி என்னை விடாமல் பிடித்திருந்தால் என்ன அர்த்தம்?” என்று பேசிக்கொண்டே தன்னாலும் அவனிடமிருந்து தன்னை மீட்டுக்கொண்டு வர முடியாமலும், அவனது அன்பின் வேகத்தில் கட்டுண்டு, தன் இரு கைகளையும் மாலையாக கோர்த்து அவன் கழுத்தை சுற்றிப் போட்டவள்......
"அச்சச்சோ....., அய்யோ...!! ஐயம் சாரி" என்ற வார்த்தைகளால் திடுக்கிட்டு இருவரும் திரும்பிப் பார்க்க, மேகலாவும், வித்யாவும், கதவை மூடிக்கொண்டு வெளியே செல்வதைப் பார்த்ததும், மது வெட்கத்திலும், சித்தார்த் ஒருவிதமான தவிப்பிலும் இருக்க, சமாளித்த சித்தார்த், "மது நான் கீழே போறேண்டா, நீ சீக்கிரம் வா" என்று கட்டிலில் அம்ர்ந்திருந்தவளின் கரத்தை பிடித்து அழுத்திவிட்டுக் கதவைத் திறந்துக்கொண்டு வெளியே சென்றான்.
வெளியே மேகலாவும், வித்யாவும், மனம் நிறைய மதுவின் மாற்றம் குறித்து சந்தோஷத்துடனும், இப்படி அவர்களின் அந்தரங்கத்தில் அத்து மீறி நுழைந்துவிட்டோமே என்று சற்று கவலையுடனும் நின்றிருக்க, வெளியில் வந்த சித்தார்த் சாதாரணமாக இருவரையும் விசாரித்து விட்டு, “உள்ளே போங்க" என்று சொல்லிவிட்டு கீழே சென்றுவிட்டான்.
உள்ளே சென்ற இருவரும், மதுவின் அருகில் சென்று நிற்க மது எழுந்து நின்றதும் வித்யா , "சாரிமா நாங்க ரெண்டுத் தடவை கதவை தட்டினோம் ஆனால், குரலே இல்லை அதனால் தான்...." என்று விளக்கம் சொல்ல நிமிர்ந்து இருவரையும் பார்த்த மது, "பரவாயில்லை" என்று நாணப்புன்னகை புரிய மேகலா, "அத்தான் சரியா சொல்லி இருந்தார் மது, மது சீக்கிரமே மனம் மாறிவிடுவாள், சித்தார்த் அவளைப் பார்த்துப்பார். பொறுப்பான கைகளில் நாம் மதுவை ஒப்படைத்துவிட்டோம் எந்தக் கவலையும் நமக்கு வேண்டாம் அப்படின்னு. அது இன்னைக்கு உண்மையாக ஆகிடுச்சி".
"உங்க அண்ணன் இதை கேட்டால் எப்படி சந்தோஷப்படுவார் தெரியுமா? எங்களுடைய இத்தனை நாள் வேண்டுதல் வீண் போகவில்லை. சரி கீழே போகலாமா?” என்று ஒன்றும் பேசாமல் நின்றிருந்தவளை கேட்டதும், “ம்ம்..." என்று சொல்லிக்கொண்டே என்னோட சந்தோஷம் எத்தனைப் பேரை சந்தோஷபட வைக்கிறது. ஆனால், இவ்வளவு பாசமாக இருப்பவர்களை நான் எவ்வளவு,கவலைப்பட வைத்திருக்கிறேன்' என்று எண்ணிக்கொண்டே கீழே வந்தவள் அங்கிருந்த தன் உறவினர்களை எல்லாம் பார்த்து சகஜ நிலைக்குத் திரும்பினாள்.
சற்றுநேரத்தில், ஜீவா, சுரேஷ், ரமேஷ், அவன் அம்மா, கீதா, சம்மந்தி வீட்டினர், மற்றும் சில நெருங்கிய உறவினர்கள் சூழ்ந்திருக்க, அத்வைதும், ஹரியும், ஸ்ரீயை அழைத்துவர சென்றுவிட, சித்தார்த், அஷ்வந்த் இருவரும் வீட்டில் இருந்து அனைவரையும் வரவேற்று, உபசரித்துக்கொண்டிருந்தனர்.
ஸ்ரீ ராமும் வந்து விட நிச்சய தாம்பூலம் சிறப்பாக நடந்து முடிந்தது. மதுவும், மீராவும், வீட்டு மருமகள்களாக எல்லாவற்றையும் பொறுப்பாக செய்துக்கொண்டிருந்தனர். இடையிடையே சித்தார்த்தும், மதுவும், கண் ஜாடையிலேயே பேசிக்கொள்ளவும் தவறவில்லை. அது மற்றவர் கண்களுக்கும் தவறவில்லை.
ஸ்ரீராம் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பிச்சென்றதும், நண்பர்கள் கூட்டம் முழுதும் தோட்டத்தில் போடப்பட்டிருந்த பந்தலின் கீழே அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்க, நேரம் ஓடிக்கொண்டிருந்தது, அஷ்வந்த் வழக்கம் போல தன் ஜோக்குகளால் அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தான்.
பேச்சு திசை மாறி திசை மாறி, கணவன் மனைவிக்கு இடையே வரும் பிரச்சனைகளைப் பற்றி வந்து நின்றது. ஆண்கள் அனைவரும் பிரச்சனைகளுக்கு முழுக்காரணமும் பெண்களே என்று சொல்ல, பெண்களோ ஆண்களே என்று சூடாக விவாதித்துக்கொண்டிருந்தனர்.
அஷ்வந்த், "இங்க பாருங்க. பெண்கள் எல்லோரும் வெளியே கிளம்பச் சொன்னால் அவ்வளவு தான். நாளைக்குப் போறதுக்கு நாம் இன்னைக்கே சொல்லணும். நீங்களே ‘லேடி’ன்னு தமிழ்ல எழுதிட்டு அதை ரிவேர்ஸ்ல படிங்க ‘டிலே’ ன்னு வரும் என்றதும், "டேய் அஷ் எப்படில்லாம் திங்க் பண்றடா. மேதைடா நீ" என்றான் சுரேஷ்.
"நன்றி தலைவா" என்று சொல்லிவிட்டுச் சிரித்தான்.
"போதும்டா ரம்பம், கொஞ்சம் உன் வாயை மூடு. உனக்கு வரப்போறா பாரு ஐயோ பாவம் அந்த மகராசி எங்கே இருக்காளோ" என்று வானத்தைப் பார்த்து கையைத் தூக்கி சொன்னாள்.
"உனக்கே ஒரு ஸ்ரீராம் கிடைக்கும் போது எனக்கு ஒரு ஸ்ரீதேவி கிடைக்க மாட்டாளா?" என்று பந்தாவாக கூற, தீபக்கும், மதுவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.
"என்ன அண்ணி இப்படி மர்மமா சிரிக்கிறீங்க? என்ன விஷயம்?" என்றான்.
"உங்க அண்ணிக்கு நானும் அவளும் சின்ன வயசுல போடும் சண்டையெல்லாம் ஞாபகம் வந்துவிட்டதாம்." என்றான் தீபக்.
"மது போடாத சண்டையா? நாங்க வாங்காத அடியா? அப்பா! இப்போ நினைத்தாலும் அப்படியே நடுங்குது" என்றான் சுரேஷ்.
"போதும் போதும் அப்படியே பேசி வேற டாபிக் போய்டாதீங்க. முதலில் விஷயத்தை முடிங்க. மது நீ சொல்லுடி உன்னோட கருத்தை" என்று கீதா சொன்னதும், மது, “என்னைப் பொறுத்த வரைக்கும் பிரச்சனை வர ரெண்டு பேருமே தான் காரணம்" என்றதும், சுரேஷ், "மது நீ நியாயவாதி! எப்படி உண்மையைச் சொல்ற பாரு?" என்றான்.
"ஹஸ்பன்ட் அண்ட் வைப் ரெண்டு பேருக்கும் எதனால பிரச்சனை வருது? ரெண்டு பேரும் முதலில் மனம் விட்டுப் பேசுறதே கிடையாது. ஒருத்தர் மேல ஒருத்தர் நம்பிக்கை வைக்கணும். தெரியாம செய்யும் தவறை பெரிசு பண்ணக்கூடாது. ஒருவருக்கு ஒருவர் உண்மையா, ஒளிவு மறைவு இல்லாத வாழ்க்கை வாழ்ந்தா நிச்சயம் பிரச்சனைகள் வராது. இது தான் என்னுடைய கருத்து" என்றதும் அனைவரும் மதுவின் கூற்றில் உண்மை இருப்பதாக சொல்லிக்கொண்டனர்.
மது, சித்தார்த்தை திரும்பிப் பார்க்க அவன் முகமோ கலவையான முக பாவத்தை வெளிப்படுத்தியது. குழப்பம் நிறைத்து காணப்பட்டது.
‘அன்று சுபா அண்ணியின் வீட்டில் இருந்தபோதும் சித்தார்த்தின் முகம் இதே போலத் தானே இருந்தது. இவனுக்கு என்ன பிரச்சனை. இன்று கட்டாயம் என்ன விஷயம் என்று கேட்டுத் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும். அவன் நிம்மதி தான், தன் வாழ்க்கை’ என்று நினைத்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்.
இரவு அனைவரும் கிளம்பிச் சென்றுவிட சுபா, மது, மீரா மூவரும் சமையலறையை சீர் படுத்திக் கொண்டிருந்த போது அங்கே வந்த தேவகி, "போதும்மா! மூணு பேரும் போய்ப் படுங்க. நேரம் ஆகுது. காலையில் எழுந்து மற்ற வேலைகளைப் பார்த்துக்கொள்ளலாம். மூணு பேரும் பாலை எடுத்துட்டுக் கிளம்புங்க" என்று மூவரையும் பிடித்துத் தள்ளாத குறையாக அனுப்பி வைத்தார்.
விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தவனின் அருகில் வந்து அமர்ந்தவள், "என்ன தீவிர சிந்தனைல இருக்கீங்க?" என்றாள்.
ஒன்றும் சொல்லாமல் எழுந்து அமர்ந்தவனிடம் பால் டம்ளரைக் கொடுத்தவள், “நீங்க குடிங்க. நான் போய்க் குளிச்சிட்டு வந்திடுறேன்” என்று சொல்லிவிட்டு அவனைப் பார்த்துக்கொண்டே குளியலறைக்குச் சென்றாள்.
அலுப்புத் தீரக் குளித்துவிட்டு வந்தவள், பால் டம்ளர் கட்டிலருகிலிருந்த மேஜை மீது இருக்க, அவன் மாடியில் உலவிக்கொண்டிருந்தான். யோசனையுடன் நடந்து கொண்டிருந்தவன் அருகில் சென்றவள், பின்னாலிருந்து அவனை அணைத்துக்கொண்டாள்.
சித்தார்த் கண்களை மூடிக்கொண்டு நின்றிருந்தான். அவளை விலக்கவும் இல்லை. அணைக்கவும் முயலவில்லை. ஒருவிதமான தடுமாற்றத்துடனேயே இருந்தான். அவனிடமிருந்து எந்தவிதமான பதிலும் கிடைக்காததில் குழப்பத்துடன் அவனெதிரில் வந்து நின்றாள்.
அவன் எதுவும் பேசாமல் அறைக்குச் செல்ல, குழப்பத்துடன் பின் தொடர்ந்தாள். இரு கைகளிலும் தலையைத் தாங்கியபடி அமர்ந்திருந்தவனைக் கண்டதும் அவன் எதிரில் சென்று மண்டியிட்டு அமர்ந்தாள்.
"என்னங்க ஆச்சு உங்களுக்கு? நானும் இந்த இரண்டு வாரமா பார்த்துட்டிருக்கேன். அடிக்கடி ஏதோ யோசனைக்குப் போயிடுறீங்க. ஆஃபீஸ்ல ஏதாவது பிரச்சனையா? ஆனா, அதுக்கெல்லாம் நீங்க இப்படி அப்செட் ஆகமாட்டீங்களே? எதாவது சொல்லுங்க. எனக்கு உங்களை இந்த நிலைல பார்க்கவே முடியல" என்று கெஞ்சலாகச் சொன்னதும், அவளை அமரவைத்து கையைப் பற்றிக்கொண்டான்.
"உன்னிடம் இதை எப்படிச் சொல்றதுன்னு தெரியல மது? என்னை நினைச்சி, என் செயலை நினைச்சி நானே வேதனைப்பட்டுட்டு இருக்கேன். பல முறை உன்கிட்டச் சொல்லிணும்னு நினைப்பேன். ஆனா, முடியல" என்று வேதனை நிறைந்த குரலில் அவன் சொல்லச் சொல்ல, அவளது மனத்தில் ஒரு பயம் சூழ ஆரம்பித்தது.
"அதுவும் நீ இன்னைக்குப் பேசியதைக் கேட்டதும், இனியும் உன்னிடம் மறைக்கக் கூடாதுன்னு முடிவு செய்துவிட்டேன். ஆனா, அதை எப்படி ஆரம்பிக்கறதுன்னு தான் தெரியல" என்றவன், ஒரு முடிவுடன் பீரோவிலிருந்த டைரியை எடுத்துக் கொடுத்தான்.
“மது! இந்த டைரியைப் படி. என்னுடைய இந்த நிலைக்கான விளக்கம் உனக்குக் கிடைக்கும். நான் ஒரு ஒரு மணி நேரம் கழிச்சி வரேன்” என்றவன் அவள் பதிலை எதிர் பாராமல் வீட்டுச் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டான். அவன் செல்லும் வரை பார்த்துக்கொண்டிருந்தவள், நடுங்கும் விரல்களால் அந்த டைரியைத் திறந்தாள்.
முன்னால் சில பக்கங்கள் வெற்றுத் தாள்களாக இருந்தன. திருப்பிக்கொண்டே வந்தவளின் கண்கள் ஓரிடத்தில் நிலைத்தது. சித்தார்த்தின் அழகிய கையெழுத்தில்,எழுதி இருந்த கவிதை
"பெண்ணே நீ என் தேவதை
பார்த்தவுடன் என் நெஞ்சில்
நிறைந்த தாரகை
நீயா அல்லி ராணி
இல்லை இல்லை
என் இதய வீட்டில்
குடியிருக்கும் என்
இதய ராணி .....
என் இதய சிம்மாசனத்தில்
அமர்ந்திருக்கும்
உன்னை நான்
மாலைசூட்டி ஆக்குவேன்
என் பட்டத்து ராணி.....”
அந்தக் கவிதையை வாசித்தவள் மெதுவாகப் பக்கத்தைத் திருப்ப, அதிலிருந்த போட்டோவைக் கண்டதும் நம்ப முடியாமல் விழி அகலப் பார்த்தாள்.
ஒவ்வொரு பக்கமாக படித்துக்கொண்டே வர, அவளது நெஞ்சில் தோன்றிய உணர்வுகளைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. அவளது நெஞ்சக்கூட்டுக்குள் ஆயிரம் ஆயிரம் உணர்ச்சிகள் அலை மோதின
மொத்த டைரியும் படித்தவள், பொத்தென சோஃபாவில் அமர்ந்தாள். ஒன்றரை மணி நேரமாக மனக்கலக்கத்துடன் பீச்சில் அமர்ந்திருந்த சித்தார்த் வீட்டை நோக்கி நடந்தான்.
அறைக்கதவைத் திறந்தவன், சிலையென அமர்ந்திருந்தவள் அருகில் சென்று, “மது" என்றழைத்தபடி அவளது தோளில் கையை வைத்ததும், சரேலென்று அவனை நிமிர்ந்து பார்த்தவளது விழிகளில் தோன்றிய பாவம், இன்னதென்று அவனால் வரையறுக்க இயலவில்லை.
அவ்வளவு நேரமும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தவள் அவனைக் கண்டதும், “நீங்களா..? நீங்களா... என்னைச் சந்தேகப்பட்டீங்க சித்தூ!” என்று மெல்லிய குரலில் கேட்டுக்கொண்டே அவனிடமிருந்து விலகிப் பின்னாலேயே சென்றாள்.
இரண்டே எட்டில் அவளை அணுகியவன், "இல்லடா மது..." என்று பேசத் தொடங்கியவனை "வேற யார் சந்தேகப்பட்டிருந்தாலும் பரவாயில்ல. நீங்..க.. நீங்க எப்படிச் சித்தூ சந்தேகப்படலாம்? அதுவும் என்னை... என்னைப் போய்..." என்று கத்திக்கொண்டே பாய்ந்து அவன் சட்டையைப் பிடித்து உலுக்கியபடி கேட்க, அடிபட்ட மானின் கதறலாய் அவளது வார்த்தைகள், அவனது செவியில் அறைந்தன.
'இதற்கு என்ன பதில் சொல்வேன் கடவுளே!' என்று அவன் மனம் அரற்றத் துவங்க அதற்கு மேல் அவளது கதறல்கள், அவனுடைய காதில் நுழைந்தாலும், கருத்தில் பதியவில்லை.
"மது! ப்ளீஸ்டா... அழாதே" என்றதும் அவன் நெஞ்சில் சாய்ந்து கதறினாள்.
“ஏன்.. ஏன்...? சித்தூ நீங்க என்கிட்ட மறைச்சீங்க. நீங்க என்னைக் காதலித்ததை ஏன் முதலிலேயே என்கிட்டச் சொல்லலை? எதுக்காக என்னிடமிருந்து விலகி போனீர்கள்? நீங்க அன்னைக்கே என்கிட்டச் சொல்லியிருந்தா, அர்ஜுன்னு ஒருவன் என் வாழ்க்கையில் வராமலேயே போயிருப்பானே. வேற ஏதாவது ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, உயிரோடு இருந்திருப்பானே!
என் வாழ்க்கையும் திசை மாறிப் போகாமல் இருந்திருக்குமே. நாமளும் சந்தோஷமாக இருந்திருக்கலாமே? ஏன் சித்தூ நீங்க முதலிலேயே சொல்லவில்லை? நீங்க என்னை சந்தேகப்பட்ட போதாவது நேரடியா வந்து என்னிடம் பேசி இருக்கலாமே?" என்று தன் மீது சாய்ந்துக்கொண்டு புலம்புபவளைத் தேற்ற வழி தெரியாமல் நின்றுகொண்டிருந்தான்.
அவன் மனதில் மீண்டும் மீண்டும், ‘நீ என்னைச் சந்தேகபட்டாயே?’ என்ற அந்த ஒரு கேள்வியே சுற்றிச் சுற்றி வந்து அவனைச் சுட்டேரித்துக்கொண்டிருந்தது. அவள் புலம்பிய மற்ற எதுவும், அவனது மனத்தில் பதியவில்லை. மனம் நிறைய வலியுடன், ஒன்றும் பேசாமல் அவளை அணைத்தபடி நின்றுகொண்டிருந்தான்.
தான் இவ்வளவு தூரம் பேசியும் அவனிடமிருந்து ஒரு பதிலும் வராததால், நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தவள் திகைத்தாள். உலகத்தின் அத்தனைச் சோகத்தையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டவனைப் போன்ற அவனது முகபாவனை, அவளைத் திகைக்க வைத்தது. அவள் வாயிலிருந்து, மேலும் வெளிவரத் துடித்த வார்த்தைகள் அப்படியே அடங்கின.
மெல்ல தன் அணைப்பிலிருந்து விலகத் தொடங்கியவளை அவனது கரங்கள் விலகவிடாமல் இறுகப் பற்றியது. தன்னை மறந்து மீண்டும் அவன் மார்பில் ஒண்டியவளின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுக்க ஆரம்பித்தது.
அந்த ஆற்றில் கலக்கத் துடிக்கும் அருவி நீர் போல, அவனது கண்களிலிருந்தும் கண்ணீர் வெளிவர ஆரம்பித்தது. தன் மேல் விழுந்த முதல் இரண்டுத் துளி கண்ணீரை உணர்ந்தவள், அவனை நிமிர்ந்து பார்த்தாள். கலங்கிய இருவரின் கண்களிலும் அடுத்தவர் உருவம், பனித்திரையின் ஊடே பார்பது போல்தான் தெரிந்தது.
தன்னை மறந்து கத்தியதால் எழுந்த உணர்ச்சி வேகத்தில், அவள் உடல் தள்ளாடுவதை உணர்ந்தவன், அவளை மெல்ல நடத்திச் சென்று கட்டிலில் அமர வைத்தான். பயத்தில் இருக்கும் புறாவின் சிறகுகள் போல, அவளது உடல் நடுங்க, ஆதரவுடன் அணைத்துக் கொண்டான்.
சிறு குழந்தையைத் தேற்றுவது போல், அவனது விரல்கள் அவளை வருடிக்கொடுத்தன. ஆயிரம் வார்த்தைகள் தராத ஆறுதலை, அவனுடைய அந்த வருடல் தந்தது. அவளது அழுகை மெல்ல விசும்பலாகி, ஓய்ந்து போய் அவள் தூங்கும் வரை இந்த நிலை தொடர்ந்தது.
எதிலிருந்தோ அவளைக் காப்பாற்றத் துடிப்பவன் போல், அவளை தன் மீது சாய்த்துக் கொண்டு இறுக அணைத்திருந்த சித்தார்த், தூக்கத்தில் அவள் தளர்வதைக் கண்டதும், அலுங்காமல் அவளைப் படுக்கையில் படுக்க வைத்தான்.
தூக்கத்திலும் விசும்பும், அவளது நிலையைக் கண்டவன் நெஞ்சம், உலைகலனாய் கொதித்தது. ‘என் மதுவை இனி, கண் போலப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேனே ஆண்டவா! இன்று அந்தக் கண்களில் வழியும் கண்ணீரைக்கூட என்னால் துடைக்க முடியவில்லையே… அதற்குரிய தகுதியும் எனக்கில்லையே. அவள் கேட்ட எந்த ஒரு கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லையே...’ என்று தன்னைத் தானே நொந்து கொண்டான்.
குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தவன், அந்த அறையில் மூச்சு முட்டுவது போல் உணர்ந்தான். மது நல்ல உறக்கத்தில் இருப்பதைத் தெளிவு படுத்திக்கொண்டு அறையிலிருந்து வேகத்துடன் கிளம்பினான்.
மதுவின் கண்ணீர் துளிகள் பட்டு, கறையாகியிருந்த அவனுடைய சர்ட், கண்ணில் பட்டாலும் அது அவனது கருத்தில் எட்டவில்லை, வருத்தத்துடன் தலையைக் குலுக்கிக் கொண்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
விவரம் தெரிந்த நாளிலிருந்து காரை இயக்கிக் கொண்டிருப்பதால், அனிச்சை செயலாக கைகளும் கால்களும் ஒத்துழைக்க, கார் சாலையில் போய் கொண்டிருந்தது. அவனது மனம் அவளது வார்த்தைகளிலேயே சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும், தன் காதுகளில் ஒலித்த அவளது கதறல் மட்டுமே அவனை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது.
வெளிக்காற்று முகத்தில் பட்டு, சிறிதே சமநிலை அடைந்தவன், சடாரென்று காரை நிறுத்தினான்.
'ஓ மது! நீ என்ன சொன்னாய்?' இது வரை அவள் கதறல் ஒலி மட்டுமே காதுகளையும், மனதையும் அடைத்திருக்க அந்த நொடியில்தான் அவளுடைய வார்த்தைகளின் அர்த்தம், கதறல் ஒலியைக் கிழித்துக்கொண்டு அவனது மனத்தில் நுழைந்தது.
‘ஏன், சித்தூ நீங்கள் உடனே வந்து சொல்லவில்லை?' அவளுடைய வார்த்தைகளின் முழு அர்த்தம் புரிந்ததும், கோடி பிரகாசம் அவன் கண்களில் தோன்றியது. அந்த நொடி வரை தன்னை உலகதிலேயே அதிகம் சபிக்கப்பட்டவனாய் உணர்ந்தவன் இப்போது, உலகத்திலேயே அதிகம் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்ந்தான்.
‘மது! இந்த நிலையிலும் நீ என்னை வெறுக்கவில்லை. உனக்கு என் காதலை உன்னிடம் சொல்லாதது தான் வருத்தமா? அப்படியானால் நான் உன்னைத் தவறாக புரிந்து கொண்டதை நீ மன்னித்துவிட்டாயா? நான்தான் நீ சொன்ன வார்த்தைகளின் முழு உண்மையையும் அறியமுடியாத குழப்பத்தில் ஆழ்ந்திருந்தேன். அவ்வளவு நேரமும் மனத்தில் இருந்த இறுக்கம் மறைந்து, உற்சாகம் பிறந்தது.
‘இதோ வந்துவிட்டேன் என் உயிரே! இனி, நம்மைப் பிரிப்பதற்கு இந்த உலகத்தில் எதற்கும் சக்தியில்லை’ என்று கூறியபடி, மனம் முழுதும் உற்சாகம் பெருக்கெடுக்க தன்னவளை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் முழு வேகத்தில் அவன் வந்த பாதையில் அவன் காரைத் திருப்பிய போது..
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள், "சித்தூ..." என்ற கூக்குரலுடன் அலறித் துடித்து எழுந்தாள்.
அதிகாலைச் சூரியனின் இதமான அந்தக் காலை வேளையில், தனது கதிர்களால் வெளிச்சத்தைப் பரவவிட்டான். தூக்கம் கலைந்து எழுந்தவன், முன்தின இரவின் இனிய நினைவுகள் சூழ்ந்திருந்தாலும், அவளிடம் மறைத்திருக்கும் விஷயத்தைச் சொல்லாமல் துரோகம் செய்கிறோமோ!’ என்ற எண்ணம், அவனது இதயத்தில் முள்ளாக உறுத்தியது.
‘இது சரியா? என்னதான் அவள் சொல்லவேண்டாம் என்றாலும், நான் சொல்லியிருக்க வேண்டும். காலம் முழுவதும் உறுத்தலுடன் எப்படி வாழ்வது?’ என்று கேள்வி கேட்டு கொண்டாலும், ‘இதுவும் அவளுக்காக, அவளது சந்தோஷத்திற்காக... இப்போதைக்கு, அவளது மன அமைதி தான் முக்கியம். இவ்வளவு நாள் அவள்பட்ட துன்பமெல்லாம் போதும். இனியாவது, அவளை நான் பத்திரமாகப் பார்த்துக்கொள்வேன்.
‘இந்த நிமிடம் தான் நிஜம்! இந்த நிமிடம் என் மது சந்தோஷமாக, நிம்மதியாக இருக்க வேண்டும். அவள் சந்தோஷத்திற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். அவளுக்கு இந்த விஷயம் தெரிய வந்தாலும் சமாளித்துக் கொள்வேன். என் காதலை அவளுக்கு உணர்த்துவேன். நிச்சயம் என்னைப் புரிந்துக்கொள்வாள்’ என்று ஒரு முடிவிற்கு வந்த பின் தான் அவனுக்கு மனம் நிம்மதி அடைந்தது. குளியலறை கதவைத் திறக்கும் சத்தம் கேட்டதும் சித்தார்த் கண்ணை மூடிக்கொண்டான்.
நெற்றிக்குத் திலகம் வைத்துக்கொண்டவள், அங்கிருந்த சுவாமி படத்தை வணங்கிவிட்டு, கணவனின் அருகில் வந்து நின்றாள். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாக நினைத்து சிறிதுநேரம் பார்த்துக்கொண்டே நின்றிருந்தவள், மெல்ல குனிந்து அவனது கன்னத்தில் இதழ் பதித்தாள். அதுவரை தனக்குள் குழம்பிக்கொண்டிருந்தவன், தன்னவளின் அருகாமையில் அதுவரை ஒடிய எண்ணங்கள் எல்லாம் மறந்து போக, அடுத்த நொடி அவனது கையணைப்பில் இருந்தாள்.
“குட் மார்னிங் மேடம்!” என்று அவள் மூக்குடன் மூக்கை வைத்து உரசினான்.
"விடுங்க சித்தூ" என்று எழ முயன்றவளை, இன்னும் இறுக அணைத்து அவளது கூந்தலில் வாசத்தை முகர்ந்தவன், "இப்படிக் காலைல ஃப்ரெஷ்ஷா பக்கத்துல வந்து முத்தம் வேற கொடுத்துட்டு, விடுங்கன்னு சொன்னா என்ன அர்த்தம்?" என்று சொல்லிக்கொண்டே அவள் கழுத்து வளைவில் முத்தமிட ஆரம்பித்தவன் தொடர்ந்து முன்னேற, கூச்சத்தில் தவித்தாள்.
கணவனின் அணைப்பில் நெகிழ்ந்தாலும், தன்னை மீட்டுக்கொள்ள முயன்றபடி, “நேரம் ஆகுதுங்க. இன்னைக்கு நாம ஊருக்குக் கிளம்பணும்" என்று சொல்லிக்கொண்டே எழுந்து கொள்ள முயன்றவளை விடாமல், அவளைச் சிறிதுநேரம் முகம் சிவக்கச் செய்துவிட்டு பின்பே விடுவித்தான்.
அடுத்த ஒருமணி நேரத்தில் தயாரானவர்கள் ஹரியின் நண்பரின் வீட்டிற்குச் சென்று, அவர்களது உதவிக்கு நன்றி கூறி விடைபெற்றுக்கொண்டனர். டெல்லி வந்து சேர்ந்தவர்களை, வரவேற்று, மதுவின் நலத்தையும் கேட்டுகொண்டு ஹரி தன் அலுவலகத்துக்குக் கிளம்பிச் சென்றார்.
குழந்தைகளுக்குப் பள்ளி விடுமுறை என்பதால், வீட்டில் இருந்தனர். வருண் சித்தார்த்தை விளையாட அழைத்தான். இருவரும் வீட்டின் பின்புறமிருந்த டென்னிஸ் கோர்ட்டில் வருணுக்குத் தகுந்தபடி விளையாடிக்கொண்டிருந்த சித்தார்த்தைப் பார்த்துக்கொண்டே, அருந்ததியை மடியில் வைத்து ரைம்ஸ் கேட்டுக் கொண்டிருந்தாள்.
சற்றுநேரத்தில் வருணை அவனுடைய நண்பர்கள் வந்து அழைக்கவும் அவர்களுடன் சென்றுவிட, மது பக்கத்தில் வந்து அமர்ந்தான் சித்தார்த்.
குழந்தையுடன் சேர்ந்து ரைம்ஸ் சொல்லிக்கொண்டிருந்தவளை, “என்ன ட்ரெய்னிங்கா?" என்றான்.
மது அவனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு, குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்.
சித்தார்த் அவளது கழுத்தில் விரல்களால் சில்மிஷம் செய்ய, அவள் கூச்சத்துடன் நெளிந்தாள். அவனது சீண்டல் தொடர்ந்துகொண்டிருக்க, அருந்ததியைத் தூக்கி அவன் மடியில் அமர வைத்துவிட்டு, சிரித்துக்கொண்டே வீட்டின் உள்ளே சென்றாள்.
அன்று மாலை வரை சித்தார்த்தின் அருகில் வராமலே அவனுக்கு ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தாள். மாலையில் சித்தார்த் இருப்பது தெரியாமல் அறைக்குள் சென்றவளை பின்னாலிருந்து அணைத்தவன், “ஏய்... இன்னைக்கெல்லாம் எனக்கு விளையாட்டு காட்டிட்டு இருந்த இல்ல. இப்போ பாரு... வசமா மாட்டிகிட்ட" என்றான் தாபத்துடன்.
"உங்ககிட்டப் பெரிய தொல்லையா போச்சுங்க. ஒரு நேரம் காலம் கிடையாது. கதவு வேற திறந்திருக்கு. குழந்தைங்க வரப்போறாங்க விடுங்க" என்று கெஞ்சும் குரலில் சொன்னாள்.
"சரி, என் கேள்விக்குப் பதில் சொல்லு. விட்டுடறேன். தொல்லையா போச்சுன்னு வேற சொல்லிட்ட... அதுக்கெல்லாம் இருக்கு உனக்குப் பனிஷ்மென்ட்" என்றவன், "உன் வெயிட் எவ்வளவு இருக்கும்?" என்றான்.
"இதென்ன இப்போ கேள்வி? ஐம்பத்தைந்து கிலோ" என்றாள்.
"அப்போ உன்னை பிபிட்டி கேஜீ தாஜ்மகால்னு பாட முடியாதா? சரி நீ சொல்வது உண்மையான்னு டெஸ்ட் பண்ணிடுவோம்" என்று சொல்லிக்கொண்டே சட்டென அவளைத் தூக்கினான்.
இதைச் சற்றும் எதிர்பாராதவள், “ஐயோ! இறக்கிவிடுங்க யாராவது வரப்போறாங்க" என்றவளை கீழே விடாமல், "பார்க்கட்டுமே என் பொண்டாட்டியை, நான் தூக்கறேன்” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, "மது! இந்தப் புடவை…" என்றபடி அறைக்குள் நுழைந்த சுபா ஸ்தம்பித்துப் போனாள்.
இருவரும் இருந்த நிலையைப் பார்த்து என்ன சொல்வது என்று புரியாமல் அவள் நிற்க, தமக்கையை எதிர்பார்க்காத சித்தார்த், அப்படியே நின்றிருக்க, ‘இவ்ளோ நேரம் படித்துப் படித்துச் சொன்னேன். கேட்டா தானே...’ என்று எண்ணிக்கொண்டிருக்க, இவை அனைத்தும் ஒருசில நொடிகளில் நடந்து முடிந்தன.
முதலில் சுதாரித்த சுபா, "சாரி" என்று வந்த சிரிப்பைக் கட்டுப்படுத்த முயன்றபடி வெளியே சென்றாள்.
சித்தார்த், அவளை இறக்கி விட்டுவிட்டுச் சிரிக்க, மதுவோ ஏக கடுப்பில் இருந்தாள்.
"என்ன சிரிப்பு வேண்டியிருக்கு? என் மானமே போச்சு. அப்போதே சொன்னேன் கதவு திறந்திருக்கு யாராவது வரப்போறாங்கன்னு கேட்டீங்களா? நான் எப்படி இனி, அண்ணி முகத்தைப் பார்ப்பேன்?" என்று தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்தாள்.
“அப்போ, கதவை மூடிட்டு வந்து உன்னைத் தூக்கவா?" என்று தீவிர பாவனையுடன் கேட்டவனைப் பார்த்ததும், "உங்களை" என்று சுற்றிப் பார்த்தவளை, "என்ன அடிக்க ஏதாவது தேடறியா? அடிப்பது தான் அடிக்கிற... எதையாவது தூக்கி அடிச்சி வச்சிடாதே. இதிலேயே அடி. மெத்து மெத்துனாவது விழும்" என்று பக்கத்தில் இருந்த தலையணையை எடுத்துக் கொடுக்க, “அடிக்க தலையணையா எடுத்து கொடுக்கறீங்க?" என்று அவனைத் துரத்தினாள்.
அறைவாசலில் சென்று நின்றவன், "நான் இப்போ வெளியே போறேன். தைரியம் இருந்த நீயும் வெளியே வா பார்ப்போம்" என்றதும் ஆத்திரத்துடன் தலையணையை அவன் மீது தூக்கி எறிய, சித்தார்த் மறுபுறம் விலகிச் சென்றுவிட தலையணை ஹாலில் போய் விழுந்தது.
"ஆஹா...! நீ விட்ட ஏவுகணை குறி தவறிப் போய்டுச்சி. இதுக்குத் தான் பேச்சு பேச்சா இருக்கணும். இப்போ பாரு என்ன ஆச்சுன்னு?" என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு செல்ல, சிணுங்கலுடன் அமர்ந்தவளுக்குச் சிரிப்பு தான் வந்தது.
சிரித்துக்கொண்டே ஹரியின் பக்கத்தில் வந்து அமர்ந்தான்.
"என்னடா மாப்பிள்ளை! தலையணை ஹாலுக்கு வந்து விழுது?” என்றார்.
"ஏன்? இந்த நேரம், இத்தனை மணிக்கு, இத்தனை நிமிஷத்துக்கு, இத்தனை நொடிக்கு... இந்த விஷயம் நடந்ததுன்னு, உங்க பொண்டாட்டி பிபிசில நியூஸ் வாசிச்சி இருப்பாங்களே வாசிக்கலையா?" என்று அப்பாவியாகக் கேட்டான்.
"கொழுப்புடா உனக்கு" என்று கையிலிருந்த குஷனை எடுத்து தம்பியை ஒன்று வைத்தாள் சுபா.
"இந்தப் பொம்பளைங்களுக்குத் தலையணைல அடிப்பதுன்னா ரொம்பப் பிடிக்கும் போல" என்றான்.
"உனக்கு இப்போ தான் ஆரம்பிச்சிருக்கு. இது வெறும் ட்ரையல். இனி, தான் எந்தப் பொருளால எந்த மாதிரி அடிக்கலாம்னு ரூம் போட்டு யோசிப்பாங்க " என்று சொன்னதும், சுபா, “நீங்க அப்படி எத்தனை முறை அடி வாங்கி இருக்கீங்க?" என்று கேட்டாள்.
"விடு சுபா! நைட் தோப்புகரணம் போடும்போது கூட ஒரு ஐம்பத்து சேர்த்துப் போடச் சொல்லிடு" என்றதும், "அடப்பாவி நீ சப்போர்ட் பண்ணுவன்னு நினைச்சா இப்படிக் காலை வாரி விடுறியே?" என்றார் ஹரி.
அனைவரும் சிரிப்புடன் அமர்ந்திருக்க, "சித்தார்த்! நீங்க ரெண்டு பேரும் சமாதானம் ஆகிட்டீங்கன்னு தெரிஞ்சதும் எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?" என்று உண்மையான மகிழ்ச்சியுடன் சொன்னாள்.
சித்தார்த் சலிப்புடன் "ம்ச்சு" என்றான்.
"என்னடா ஏன் இவ்வளவு சலிப்பு?" என்றார் ஹரி.
தன் தலையை அழுந்தக் கோதியவன் தன் மனதில் இருக்கும் தவிப்பைச் சொல்ல, சுபா கோபத்துடன், "ஏன்டா! உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? மதுவே இப்போ தான் மனசு மாறி வந்திருக்கா. அவளோட நிம்மதியா குடும்பம் நடத்தற வழியைப் பாரு. பைத்தியக்காரத்தனமா ஏதாவது செய்து இருக்குற நிம்மதியைக் கெடுத்துக்காதே" என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்.
"என்ன பேசற சுபா? எனக்கு மட்டும் அவளோட சந்தோஷமா இருக்கணும்னு எண்ணம் இல்லையா? ஆனா, ஒவ்வொரு நாளும் என் மனசாட்சி என்னைக் கேள்வி கேட்குமே? ”
"சித்தார்த், நீ நல்லவனா இருக்கலாம். அதுக்காக, இவ்ளோ நல்லவனா இருக்க நினைக்கக் கூடாது. இப்போ என்ன ஆகிப்போச்சு? நீ ஆரம்பத்தில் சந்தேகப்பட்ட. அப்போ உனக்கு மதுவைப் பற்றி என்ன தெரியும்? அவ மேல தப்பு இல்லைன்னு தெரிந்ததும் அவளைக் கல்யாணம் செய்துக்கப் பிரியப்பட்ட. அவளோட கடந்த கால வாழ்க்கை தெரிந்ததும் அவளுக்காக உருகின. உன்னால் தான் அவ வாழ்க்கை இப்படி ஆகிடுச்சின்னு உன்னை நீயே வருத்திகிட்டு இருந்த. அவளைக் கலயாணம் செய்து சந்தோஷமா வைத்திருக்கணும்னு நினைச்ச. இதுவரைக்கும் நீ செய்ததெல்லாம் சரி.
ஆனா, தேவையே இல்லாமல் நீ இந்தக் கதையை அவளிடம் ஏன் சொல்லணும்? அவ சந்தோஷமாக இருக்கணும்ன்னு தானே நீ நினைக்கிற. இந்த விஷயம் தெரிஞ்சா அவ சந்தோஷபடுவாளா?" என்று ஹரி அவனுக்குச் சொல்லிக் கொண்டிருக்க, சித்தார்த் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தான்.
"போதும்டா சித்தார்த். நீ பட்ட வேதனையெல்லாம் போதும். இந்த விஷயத்தை நாங்க யாரும் அவளிடம் சொல்லப் போரதில்ல. நீ இன்னும் அந்த டைரியைப் பத்திரமா பொக்கிஷமா வச்சிட்டு இருக்கியா? ஊருக்குப் போனதும் முதல் வேலையா அந்த டைரியை எடுத்து உன் தலையைச் சுத்தித் தூக்கிக் கடல்ல போடுவியோ... இல்ல எரிச்சிச் சாம்பலாக்குவியோ... இன்னொரு முறை உறுத்தலா இருக்கு. அதுவா இருக்குன்னு நீயே உன் வாழ்க்கையை கெடுத்துக்காதே. புரிஞ்சிதா" என்று அவன் கையை ஆதரவாகத் தட்டிக்கொடுத்தாள்.
எதுவும் சொல்லாமல் அமர்ந்திருக்கும் தன் தம்பியைப் பார்த்தவள், நம்பிக்கை இல்லாமல் தன் கணவனைப் பார்த்து உதட்டைச் சுழித்தாள். இதற்கு மேல் கடவுள் விட்ட வழி என்று சொல்வது போல ஒரு பார்வைப் பார்த்துவிட்டுச் சென்றார்.
தற்செயலாக ஜன்னலருகில் வந்த மதுவின் காதில், இவர்கள் பேசியது எதுவும் விழவில்லை என்றாலும், இந்தக் காட்சியைப் பார்த்துக் குழம்பினாள்.
‘இவ்வளவு நேரம் நன்றாகத் தானே இருந்தார். இப்போது என்ன ஆயிற்று? ஒருவேளை பிஸ்னசில் ஏதாவது பிரச்சனையா?’ என்று குழப்பத்துடன் அங்கிருந்து விலகினாள்.
அப்போதிருந்தே சித்தார்த்தைக் கவனிக்க ஆரம்பித்தாள். அனைவரும் இருக்கும் போது நன்றாகப் பேசுபவன் தனிமை கிடைக்கும் போது சற்றுச் சோர்வாகவே இருந்தான். நாளையும் இதே நிலை தொடர்ந்தால், ஊருக்குச் சென்றதும் கட்டாயம் அவனிடம் பேசவேண்டும். அவனுடைய இந்த முகவாட்டம் தன்னைப் பாதிக்கிறது என்று உணர்ந்தாள். அவன் தன் உயிரோடுக் கலந்துவிட்டான் என்று புரிந்தது. முகத்தில் மெல்லப் புன்னகை மலர்ந்தது. ‘என்ன ஆனாலும், உனக்கு நான் இருக்கிறேன்’ என்று தன் நெஞ்சோடு அணைத்து, ஆறுதல் சொல்லவேண்டும் போலத் தோன்றியது.
மறுநாள் எழுந்ததும் சித்தார்த்தின் முகத்தைப் பார்த்தவள், சாதாரணமாக இருப்பதாகத் தோன்ற நிம்மதியுடன் வேலைகளைக் கவனித்தாள். மேலும் இரண்டு நாட்கள் சுபாவின் வீட்டில் இருந்தவர்கள் அன்று ஊருக்கு கிளம்பிக்கொண்டிருந்தனர்.
மதுவிற்கு குங்குமம் கொடுத்துவிட்டு, ஆதரவாக அவள் கையைப் பற்றிக்கொண்டு, "ரொம்பச் சந்தோஷம் மது! நாங்க எதிர்பார்த்தது இதைத் தான். அவன் கொஞ்சம் கோபக்காரன். ஏதாவது முன்கோபத்தில் சொன்னாலும், நீ கொஞ்சம் பொறுமையா போடா. அவனுக்கே தெரியாமல் அவன் ஏதாவது தப்பு செய்திருந்தாலும், நீ மட்டும் அவனை வெறுத்துடாதே" என்று கண்கலங்கச் சொன்னதும், "என்ன அண்ணி இப்படிச் சொல்றீங்க? அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது" என்று சொல்லிகொண்டிருக்கும் போது சித்தார்த் அருந்ததியைத் தூக்கிக்கொண்டு வந்தான்.
அவள் அவசரமாகக் கண்ணைத் துடைப்பதைப் பார்த்தவன், “என்ன சுபா என் பொண்டாட்டியை ஏதாவது மிரட்டினாயா?" என்று கேட்டான்.
"நான் ஏன்டாப்பா உன் பொண்டாட்டியைத் திட்டப் போறேன். உன்னைப் பத்திக் கொஞ்சம் சொன்னேன். உன் பொண்டாட்டி பயந்துட்டா" என் பாவனையுடன் சொல்ல மூவரும் சேர்ந்து சிரித்தனர்.
மதுவிடம் ரகசியமாக, “மது கூடிய சீக்கிரம் நல்ல விஷயம் சொல்லணும் ஓகே வா?" என்று சுபா கேட்டதும், கன்னங்கள் சிவந்து நாணப் புன்னகையுடன் நின்றவளைக் கண் நிறைய நிறைத்துக் கொண்டான்.
ஊருக்குச் செல்லும் முன்பு இருந்தவர்களுக்கும், இப்போது இருப்பவர்களுக்கும் இருந்த வித்தியாசத்தை அனைவருமே நன்கு உணர்ந்தனர். சுபா ஏற்கெனவே விஷயத்தைச் சொல்லியிருந்தாள். தேவகி சந்தோஷத்தை வெளிக்காட்டாத போதும், பாபா கோவிலில் பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்ததே, அவரது மனத்தின் நிறைவை வெளிக்காட்டியது.
மறுநாள் காலையில் ஹோமிற்குச் செல்லக் கிளம்பிய மது, நேத்ராவையும் அழைத்துச் செல்ல எண்ணி அவளது அறைக்குச் சென்றாள். எப்போதும் துள்ளிக் குதித்து அஷ்வந்துடன் வம்பு செய்தபடி வளைய வருபவள், இன்று கண்களில் கண்ணீருடன் கட்டிலில் அமர்ந்திருப்பதைக் கண்டாள்.
“நேத்ரா! ஏன் டல்லா இருக்க? ஹாஸ்பிட்டல்ல ஏதாவது பிரச்சனையா? எதுக்கு அழற?" என்று கேட்டதும் பொங்கிவந்த அழுகையைக் கட்டுப்படுத்தியபடி, "ஒண்ணுமில்ல அண்ணி! நேத்து ஹாஸ்பிட்டல்ல ஒரு கேஸ் ரொம்ப முயற்சி செய்தும் காப்பாத்த முடியல. அதை நினைச்சேன்..." என்று பாதி உண்மையையும் பாதி பொய்யுமாகச் சொல்லி முடித்தாள்.
"ஒஹ்! என்ன செய்றது? சில சமயம் நம்மையும் மீறி ஏதாவது நடக்கும் போது, நாம ஒண்ணுமே செய்ய முடியாது" என்று சொல்லிவிட்டுப் பெருமூச்சு விட்டவள், "சரி நான் ஹோமுக்குப் போறேன். நீயும் வரியான்னு கேட்கத்தான் வந்தேன்" என்றாள்.
ஹோமுக்கு என்றதும் அவசரமாக திரும்பியவள், “இல்லண்ணி எனக்கு எங்கேயும் வரப் பிடிக்கல. நீங்க போய்ட்டு வாங்க" என்றாள்.
யோசனையுடன் நாத்தனாரைப் பார்த்துவிட்டு அவள் கிளம்பிச் சென்றதும், நேத்ரா கதவை மூடிவிட்டு முகத்தை மூடிக்கொண்டு அழுதாள். நேத்ராவின் நடவடிக்கையில் தெரியும் மாற்றத்தைக் கவனித்து கொண்டிருந்த அஷ்வந்த், இரண்டு நாள்களாக அவளிடம் பெரும் மாற்றம் தெரிவதை உணர்ந்தான்.
அதைப் பற்றி யோசித்தபடி தோட்டத்தில் உலவிக்கொண்டிருந்தவன் அறைக்குள் நடந்த இருவரின் உரையாடலையும், மது சென்றதும் நேத்ராவின் அழுகையும் அவனை ஓரளவிற்கு நடந்தவற்றை யூகிக்க வைத்தது.
நேத்ரா இரண்டு நாள்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியை எண்ணி எண்ணி அழுது கொண்டிருந்தாள். அன்று வீட்டிற்கு ஸ்ரீ தன் நண்பரை அழைத்துக்கொண்டு ஆதியைப் பார்ப்பதற்காக வந்திருந்தான். ஸ்ரீராமைக் கண்டதும் நேத்ரா அலுவலக அறைக்குச் சென்று பேசிக்கொண்டிருக்க, அவன் வேண்டா வெறுப்பாக அவளது கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருப்பதைப் போல அவளுக்கே தோன்றியது.
அவளுக்குப் போன் வரவும், வெளியே வந்து பேசிக்கொண்டிருந்த போதும், பார்வை முழுதும் ஸ்ரீராமின் மீதே இருந்தது. ஆனால், அவன் மறந்தும் அவளைத் திரும்பிப் பார்க்கவில்லை. காஃபி கொண்டு வந்த மீராவிடமும், அவனை விசாரித்த தனது அன்னையிடமும் எந்தத் தயக்கமும் இல்லாமல் நன்றாகச் சிரித்துப் பேசுபவன் தன்னிடம் மட்டும் அளந்து வைத்தது போலப் பேசுவதையும், அதுவும் சில நாள்களாகத் தன்னை வேண்டுமென்றே தவிர்ப்பது போலத் தோன்ற, ‘இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும்’ என்று எண்ணிக்கொண்டாள்.
அவனுக்காக வெளியே தோட்டத்திலேயே காத்திருந்தாள். ஆனால், வெளியே வந்தவன், அவள் அங்கே நின்றிருந்ததைப் பார்த்தது போல் கூட அவளுக்குத் தோன்றவில்லை. தன் நண்பருடன் பேசிக்கொண்டே சென்றுவிட்டான்.
‘ஸ்ரீ நீங்க என்னை எவ்வளவு அவாய்ட் பண்றீங்களோ... அந்த அளவுக்கு என் மனசுல ஆழமா பதிந்துக்கொண்டே தான் இருக்கிறீர்கள். வரேன் எனக்கு இரண்டில் ஒன்று தெரிந்ததே ஆகவேண்டும்’ என்ற அவளது பிடிவாத குணம் தலை தூக்கியது.
மறுநாள் விடிந்தும் விடியாததுமாக, ஸ்ரீராமின் வீட்டுக் கதவை தட்டினாள். ‘யாரது? இவ்வளவு காலையில் ஏதாவது குழந்தைக்குப் பிரச்சனையா?’ என்று எண்ணிக்கொண்டே தூக்கம் கலையாத கண்களுடன் அவசரமாக வந்து கதவைத் திறந்தான்.
புன்னகையுடன் நின்றிருந்த நேத்ராவைப் பார்த்ததும் என்ன சொல்வதென்று தோன்றாமல் நின்றுகொண்டிருக்க, "குட் மார்னிங் ஸ்ரீ!" என்று அவளே ஆரம்பித்தாள்.
பதிலுக்குக் "குட் மார்னிங்" என்றான்.
"ஹலோ உங்க வீட்டுக்கு வந்திருக்கேன். உள்ளே வான்னு கூப்பிட மாட்டீங்களா?" என்று கேட்டாள்.
"உள்ளே வா! உட்கார்" என்றவன் முகத்தைக் கழுவிக்கொண்டு இருவருக்கும் காஃபி எடுத்துக்கொண்டு வந்தான்.
"ம்ம்.. தேங்க்ஸ்" என்று சொல்லி வாங்கிக்கொண்டவள், அதை ரசித்து ருசித்துப் பருக, அவனது பொறுமை பறந்து கொண்டிருந்தது.
அவள் ஒரு முடிவுடன் தான் வந்திருக்கிறாள் என்று புரிந்துக்கொண்டவன், "என்ன விஷயமா என்னைப் பார்க்க இவ்வளவு காலையில் கிளம்பி வந்திருக்கிங்க?" என்றான்.
அவள் பொறுமையாக, "காஃபி சூப்பரா இருந்தது" என்று புன்னகைத்தாள்.
கடுப்பானவன், "அவ்வளவு தானே ரொம்பத் தேங்க்ஸ். யாரும் பார்க்கும் முன்ன கிளம்புங்க" என்று அவளைத் துரத்தாத குறையாகச் சொல்லிவிட்டு, கப்புகளை எடுத்துச் சென்று கழுவி வைத்துவிட்டுத் திரும்பியவன், கிச்சன் வாசலில் நின்றிருந்த நேத்ராவைப் பார்த்தான்.
“இந்த வேலையையும் நீங்கதான் செய்யணுமா? இதுக்குத் தான் வீட்ல ஒரு பொண்ணு இருக்கணும்ங்கறது. வீட்டு வேலையையும் கவனிச்சிக்கிட்டு, உங்களையும் பார்த்துக்குவாங்க" என்றாள் பார்வையில் எதிர்பார்ப்புடன்.
அவளை ஒரு பார்வைப் பார்த்தவன், "உங்க சஜஷனுக்கு ரொம்ப நன்றி. நீங்க கிளம்பறீங்களா... எனக்கு வேலையிருக்கு" என்று சொல்லிவிட்டு அவளைத் தாண்டிச் செல்ல முயன்றான்.
நேத்ரா கோபத்துடன் குறுக்கே நின்று, அவனைத் தடுத்து நிறுத்தினாள்.
"நேத்ரா! என்ன இது? வழியை விடு" என்றான்.
"ஸ்ரீ இன்னுமா உங்களுக்குப் புரியல? இல்ல, புரியாதது போல நடிக்கிறீங்களா? இன்னும் எப்படிச் சொல்லி உங்களுக்குப் புரிய வைப்பேன்" என்று அழாத குறையாகச் சொன்னாள்.
"நீ சொல்றது, எனக்குப் புரியுது. ஆனா, இது நடக்காத விஷயம். உன் மனசைக் குழப்பிக்காதே. நீ சின்னப் பொண்ணு. உனக்கு எப்போ என்ன செய்யணும்னு பார்த்துச் செய்ய உனக்கு அப்பா, அம்மா, கூடப் பிறந்தவர்கள் இருக்காங்க. நீ முட்டாள்தனமாக ஏதாவது யோசிக்காதே. இன்னைக்குச் சரின்னு தோணுறதெல்லாம் நாளைக்கு உனக்குத் தப்பா தெரியும். வீட்டுக்குப் போய் நல்லா யோசி. உனக்கே புரியும்" என்று பொறுமையாகச் சொன்னான்.
"இல்ல ஸ்ரீ! நான் நிதானமா தான் இருக்கேன். எங்க வீட்டில் ஏதாவது சொல்வாங்கன்னு நினைக்கிறீர்களா? அதெல்லாம் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்" என்று பேசிக்கொண்டே போக அவன் கோபத்துடன், "நானும் சின்னப் பொண்ணாச்சேன்னு பார்த்துட்டே இருக்கேன். நீ பேசிட்டே போற. வீட்ல சொல்லும் மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்துகிட்டி நிம்மதியா இரு.
நான் இந்த ஹோமை என் உயிரா நினைத்துக்கொண்டிருக்கிறேன். இதை விட்டு என்னால் வரமுடியாது. இந்த வீட்டில உன்னால வாழ முடியாது. நீ வசதியா வளர்ந்தப் பொண்ணு. என்னைக் கல்யாணம் செய்துகிட்டா அதையெல்லாம் இழக்கணும். என்னை நம்பி வரும் பொண்ணுக்கு மூன்று வேலை சாப்பாடு போட்டு, அவளை நிம்மதியா வச்சிக்க மட்டும்தான் என்னால முடியும். அப்படிச் சாதாரணமா வாழ உன்னால முடியாது.
இந்த ஹோமை கவனிச்சிக்க பொறுமை ரொம்ப முக்கியம். உன்னோட துடுக்குத்தனத்திற்கும், கோபத்திற்கும், விளையாட்டுத்தனத்திற்கும், இந்த இடம் ஒத்துவராது இதுக்கு மேல, நீ எதுவும் பேசாம கிளம்பு. இனி, நீ இங்கே வரவேண்டாம்" என்று சொன்னதும், அவள் அசையாமல் அவனையே பார்த்துக்கொண்டு நிற்க, கோபத்துடன் அவள் கையைப் பிடித்து இழுத்துவந்து வெளியே விட்டான்.
நடந்ததை நினைத்தவள், "ஸ்ரீ! எப்படி ஸ்ரீ என்னோட காதலை மறுக்க உங்களால முடிஞ்சது?" என்று அழுகையோடு புலம்பினாள்.
ஜன்னல் வழியாகப் பார்த்த அஷ்வந்த், தன் தங்கையின் கண்ணீரைக் கண்டதும் தாங்க முடியவில்லை. இன்றே இந்த விஷயத்திற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று எண்ணிக்கொண்டே சென்றான்.
அன்று மாலை ஆதியும், சித்தார்த்தும் வந்ததும் தன் அண்ணிகளை, தனியாக அழைத்துச் சென்றவன் அனைத்தையும் சொன்னான். அதன்படி ஐவரும் கூடிப் பேசி, அப்பாவிடம் சொல்லி நேத்ராவிற்கு உடனே மாப்பிள்ளைப் பார்க்க ஏற்பாடு செய்யவேண்டும் என்ற முடிவுடன், அன்று இரவே தன் பெற்றோரிடம் சென்று பேசினார். இது எதையும் அறியாத நேத்ரா, தன் அறையில் சுருண்டு படுத்திருந்தாள்.
இரண்டு நாள்களுக்குப் பிறகு, அன்று காலையில் நேத்ரா ஹாஸ்பிட்டலுக்குக் கிளம்பிக் கொண்டிருக்கும் போது, அவளது தந்தை அழைத்தார்.
"நேத்ராம்மா! உனக்குக் கல்யாணம் செய்துடலாம்ன்னு முடிவு செய்திருக்கோம். நல்ல சம்மந்தம். நீ மாப்பிள்ளையோட போட்டோ பார்த்துச் சரின்னு சொன்னா, நிச்சயத்தை முடிச்சிடலாம். என்ன சொல்கிறாய்?" என்றதும், நேத்ரா கோபத்துடன் கையிலிருந்த கோட்டை தூக்கி வீசினாள்.
"யாரைக் கேட்டு இந்த ஏற்பாடு செய்தீங்க? எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்" என்று திடமாகச் சொன்னாள்.
"நேத்ரா! ஏன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கிற? அப்பா உன்னோட நன்மைக்குத் தானே சொல்றாங்க. மாப்பிள்ளை வீட்ல பெரியவர்க யாரும் கிடையாது. ஒரே ஒரு தங்கை மட்டும் தான் இருக்காம்" என்று மதுவைப் பார்த்துச் சொல்ல, அவள் புன்னகையோடு நின்றிருந்தாள்.
"யாருக்கு யார் வேணாலும் இருந்துட்டுப் போகட்டும். எனக்கு இந்தக் கல்யாணம் வேணாம்" என்று எரிச்சலுடன் சொன்னாள்.
"அடடடடா... நீங்க முதலில் மாப்பிள்ளையோட போட்டோவை அவகிட்ட காட்டுங்க. இந்த மாப்பிள்ளையை அவ வேண்டாம்னு சொன்னா அவள் காலம் பூரா ஒவ்வையார் தான். அவளுக்கு வேற மாப்பிள்ளையைப் பார்க்கவே பார்க்காதீங்க. நேரா நம்ம மேட்டரை முடிச்சிடுங்க" என்று வெட்கப்படுவது போலச் சொன்னான் அஷ்வந்த்.
"ரொம்ப நிம்மதி! நானா உங்களைக் கல்யாணம் செய்து வைங்கன்னு கேட்டேன். அப்படி உங்களுக்கெல்லாம் யாருக்காவது கல்யாணம் செய்து வைக்கிறதென்றால் இதோ, இந்த தடியனுக்கே கல்யாணம் செய்து வைங்க. எனக்கு நேரமாகுது" என்று கிளம்ப ஆயத்தமானாள்.
"நேத்ரா! இந்தப் போட்டோவைப் பாரு. உனக்குப் பிடிக்கலைனா வேண்டாம்" என்று ஆதி சொல்ல, "பாரு நேத்ரா! உனக்கு வேண்டாம்னா வேண்டாம்" என்று சித்தார்த்தும் அழுத்திச் சொன்னான்.
வேறு வழி இல்லாமல் போட்டோவை வாங்கிப் பார்த்தவள் நம்பமுடியாமலும், சந்தோஷத்திலும் போட்டோவையே பார்த்துக் கொண்டிருக்க. "என்ன நேத்ரா இந்த மாப்பிள்ளை பிடிக்கலையா? வேண்டாம்னு சொல்லிடலாமா?" என்று கேட்ட அம்மாவை ஓடிச்சென்று அணைத்துக்கொண்டாள். சந்தோஷத்தில் அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
"இன்னும் ரெண்டு நாள்ல நிச்சயதார்த்தம். சந்தோஷமா?" என்று கேட்டதும், "அப்பா தேங்க்ஸ்! ரொம்பத் தேங்க்ஸ்" என்று அவரது கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.
"ம்ம்...ம்ம்... போதும் போதும் இந்தப் பாச மழை. இவ்வளவு சீக்கிரம் இந்த விஷயம் முடிவாக யாரு காரணம்னு நம்ம கல்யாணப் பொண்ணுகிட்ட எடுத்துச் சொல்லுங்க" என்று அஷ்வந்த் சாவதானமாக கால் மேல் கால் போட்டு சோஃபாவில் அமர்ந்தான்.
"ஆமாம் நேத்ரா! அஷ்வந்த் தான் எங்களிடம் வந்து சொன்னான். அதனால் தான் நாங்க நேராக போய் ஸ்ரீராமிடம் கல்யாணத்திற்குப் பேசினோம்” என்றாள் மீரா.
"மாமாவும், உங்க அண்ணன்களும் நேர்ல போய்ப் பேசினாங்க. ஹரி அண்ணாவும் டெல்லிலயிருந்து பேசினாங்க" என்று மது சொல்ல, அஷ்வந்தை நோக்கி வந்தவள் “ரொம்பத் தேங்க்ஸ்டா அஷ்வந்த்” என்று அவன் மடியில் சாய்ந்து அழ, அவன் மட்டும் அல்ல அனைவருமே நெகிழ்ந்து இருந்தனர்.
அவளைச் சிரிக்க வைக்கவேண்டி, "ஏய் நேத்ஸ்! இப்போ உனக்கு ஒரு கதை சொல்றேன் கேட்க்கிறாயா?" என்றான்.
"ஏன்டா? உன்கிட்டக் கொன்சம் ஃபீளிங்க்ஸைக் காட்டினதுக்கு, நீ கதைன்னு சொல்லிப் போடப் போற மொக்கைக்கு நாங்களெல்லாம் பலி ஆகணுமா?" என்று பரிதாபமாகக் கேட்டாள்.
“ச்சு.. தேவையில்லாம பேசாதே. கதையைக் கேளு" என்றவன், ஒரு காட்டுல ஒரு குரங்கு கூட்டம் இருந்ததாம். அந்தக் குரங்கு கூட்டத்துத் தலைவன் திடீர்ன்னு இறந்து போச்சாம். உடனே, எல்லாக் குரங்கும் கூடி நமக்கு ஒரு தலைவன் தேவை. அதனால் நாமளே ஒரு தலைவனைத் தேர்ந்தெடுக்கணுன்னு ஒரு வயசான குரங்கு சொல்லுச்சாம். சரின்னு எல்லா குரங்கும் ஒத்துக்குச்சாம்.
அப்போ அந்த வயசானக் குரங்கு, நான் ஒரு கேள்வி கேட்பேன். அதுக்கு யார் சரியான பதில் சொல்றாங்களோ, அவங்க தான் தலைவன்னு சொன்னதும், எல்லா குரங்குகளும் சரின்னு சம்மதம் சொல்லிவிச்சி. இப்போ அந்த வயசான குரங்கு கேட்டுதாம்" என்று சொல்லிக்கொண்டிருக்க, அது என்ன கேள்வி என்று அனைவரும் அஷ்வந்தின் முகத்தைப் ஆர்வத்துடன் பார்த்தனர்.
"சேவல், வட்டமா முட்டை போடுமா? இல்ல ,சதுரமா முட்டை போடுமா?" என்று கேட்டதும் நேத்ரா அவசரமாக, "டேய்! சேவல் எங்கேடா முட்டை போடும்? கோழி தானே முட்டை போடும்" என்று சொல்ல, அஷ்வந்த் அவளது கன்னத்தை வழித்து, “என் தங்கம்!” என்றவன் தன்னை மீறி வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான்.
"ஏன்டா நீ என்ன லூசா? எதுக்கு இப்படிச் சிரிக்கிற?" என்று எரிச்சல் பட்டதும், "கங்கிராஜுலேஷன்ஸ்!” என்று அவள் கையைப் பிடித்துக் குலுக்கினான்.
"எதுக்குடா?" என்றவளைப் பார்த்துச் சிரிப்புடன், "நீ சரியா பதில் சொல்லி அவ்வளவு பெரிய குரங்கு கூட்டத்துக்குத் தலைவியா ஆகிட்டியே அதுக்குத்தான்" என்றதும், அனைவரும் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க, "அடப்பாவி! உன்னை என்ன செய்கிறேன் பார்" என்று நேத்ரா அவனைத் துரத்த, வேண்டுமென்றே அவளிடம் மாட்டி இரண்டு உதை வாங்கினான்.
சந்தோஷத்திலும், சிரிப்பிலுமே அன்றைய நாள் ஓடியது. இரவு, சித்தார்த்திற்குப் பால் எடுத்துக் கொண்டு வந்தவளை, கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவன், கை நீட்டி அழைக்க, புன்னகையுடன் அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள். இருவருமே சிறிதுநேரம் ஒன்றும் பேசவில்லை.
"ஏங்க. நீங்க ஸ்ரீ அண்ணாகிட்ட போய் பேசி நேத்ரா கல்யாணத்தை இவ்வளவு சீக்கிரம் முடித்துவைப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்லை. ஸ்ரீ அண்ணா ஸாஃப்ட். ஆனா, ஒரு முடிவெடுத்தா, அதிலிருந்து மாறவே மாட்டார். அதான் எனக்கு ஆச்சரியம்" என்றாள்.
"அது பெரிதாக ஒன்றும் இல்லை மது! நேத்ரா பத்திக் கொஞ்சம் எடுத்துச் சொன்னேன். அவர் கொஞ்சம் கௌரவம் பார்க்கிறவர். அதான், கல்யாணமானாலும் நாம் அவருக்குத் தெரிந்தோ தெரியாமலோ எந்த விதத்திலும் அவராக கேட்காம உதவி செய்யக்கூடாதுன்னு நினைத்தார். அவரோட பேச்சிலேயே அது தெரிந்தது. அதான், அதற்கு ஏற்றார்போல பேசினேன். விஷயம் சுபம்" என்றான்.
"நீங்க யாரு? எவ்வளவு பெரிய பிஸ்னஸ் மேன். உங்க பேச்சுல மயங்காத ஆள் இருக்க முடியுமா?" என்று அவள் சிரிக்க, "உன்னைத் தவிர" என்றான் புன்னகையுடன்.
புன்னகைத்தவள் அவன் மார்பை நீவியபடி, "அது அப்போ, இப்போ...” என்று சொல்லிவிட்டு அவன் மார்பில் முகம் புதைத்தவள் அன்புடன் முத்தமிட்டாள்.
"என்ன மேடம்?, இன்னைக்கு நல்ல மூட்லயிருக்கீங்களா... கேட்காமலே எல்லாம் கிடைக்குது" என்று சிரித்தான்.
நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள், “இன்னைக்கு நம்ம குடும்பம் சந்தோஷமா இருக்குன்னா, அதுக்கு நீங்களும் ஒரு காரணம்ன்னு நினைக்கும் போது எனக்கு அப்படியே பறக்கறது போலயிருக்கு" என்றாள்.
"பறந்தது போதும்... கொஞ்சம் கீழே வாங்க" என்று மேலும் இறுக அணைத்துக்கொண்டான்.
அவளும் சிறிதுநேரம் அவனுக்கு ஈடுகொடுத்து நடந்துகொண்டாள். இருவரும் தங்களை மீட்டுக்கொண்ட நேரத்தில் மது அவனிடமிருந்து விலகிச் செல்ல முயல, “எங்கே போற? போதும் நீ என்னைப் பார்த்து ஓடி ஒளிந்ததெல்லாம். இனி, என்னை விட்டுப் போக நினைச்சா அவ்வளவுதான்" என்று அவளை அருகில் இழுத்து அணைத்தான்.
சிரித்தபடி, "ஆசை அறுபது நாள்; மோகம் முப்பது நாள்ன்னு ஒரு பழமொழி இருக்கு தெரியுமா உங்களுக்கு" என்று சொல்லிவிட்டுக் குறும்பாகச் சிரித்தாள்.
"அது, காதலிக்கத் தெரியாதவர்களுக்காகச் சொல்லி இருப்பாங்க. நாம தான் காதல் பறவைகளாச்சே" என்று அவள் கழுத்தில் முத்தமிட்டவன், தொடர்ந்து முன்னேற அவனது கரங்களும் அவளுடலில் அத்துமீறத் துவங்கின.
அத்தியாயம்---61
காலையிலிருந்து அனைவரும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்க, மது மாமா வீட்டிலிருந்து அனைவரும் வந்தனர். தேவகியும், ராம மூர்த்தியும், வாசலுக்கே வந்து வரவேற்று அழைத்து சென்றனர். "அக்கா ஒரு வழியா பொண்ணுக்கும் கல்யாணத்தை முடிவு செய்துட்டீங்க" என்று ராஜி சொல்ல. "எல்லாம் கடவுள் செயல் ராஜி, விமலா வாங்க இப்படி உட்காருங்க. வாம்மா வித்யா, மேகலா எப்படியிருக்கீங்க? செக்அப் போய் வரீங்களா?" என்று விசாரித்துக் கொண்டிருந்தார்.
"பெரியம்மா மது எங்கே?" என்றாள் வித்யா. “மேல அவ ரூம்லயிருக்காம்மா போய் பாரேன்" என்று வித்யாவையும், மேகலாவையும் அனுப்பி வைத்தார்.
சித்தார்த் மதுவின் இடையை பற்றி அணைத்தபடி நின்றிருக்க "பேசாம நில்லுங்க சித்தூ! நீங்க என்ன சின்னக் குழந்தையா? இன்னைக்கு என்னவோ புதுசா என்னை டை கட்டிவிடச் சொல்றீங்க?" என்று புலம்பிக்கொண்டே டையைக் கட்டினாள்.
டையைக் கட்டி முடித்ததும் விலக முயன்றவளை விடாமல் அவள் இடையில் சித்தார்த்தின் கரங்கள் விளையாட, "என்னங்க இது, எல்லோரும் வந்திடுவாங்க. கிளம்பியாச்சு இல்ல, நல்ல பிள்ளை இல்ல. கீழே போங்க. நான் பத்து நிமிடத்தில் வந்துவிடுகிறேன்" என்று அவன் தாடையை பிடித்து கொஞ்சியபடி சொன்னாள்.
"ஹே ... ஏஞ்சல் இன்னைக்கு என்னவோ தெரியலைடா அப்படியே உன்னைப் பார்த்துக்கொண்டே இருக்கணும் போலிருக்கு. என் கைக்குள்ளேயே வைத்திருக்கணும் போலிருக்கு. என்ன மாயம்டா செய்த, என்னை இப்படி மயக்கி வச்சிருக்க?" என்றான் கிறக்கமாக.
உதட்டைக் கடித்துக்கொண்டு சிரித்தவளின் முகத்தைப் பற்றி அருகில் இழுத்தவன், "மது....மை....ஸ்வீட் லிட்டில் ஏஞ்சல்" என்று கிறக்க குரலில் கொஞ்சிக்கொண்டே அவள் முகமெங்கும் இதழ் பதித்தான்.
தன் முகம் சிவக்க வாங்கிக்கொண்டு அவனுக்குப் பதில் கொடுத்துக்கொண்டிருந்தவள் நிலைமையை உணர்ந்து, "சித்தூ! எல்லோரும் வந்திடுவாங்க. கிளம்பி போகணும் சித்தூ” என்று சொன்னாலும் குரல் வெளியே வராமலும், அவனிடமிருந்து விலகாமலும் சொன்னாள்.
அவனும் அவளை விலக்காமல், "போவதென்றால் போ" என்றான்.
"போ போன்னு சொல்லிட்டு இப்படி என்னை விடாமல் பிடித்திருந்தால் என்ன அர்த்தம்?” என்று பேசிக்கொண்டே தன்னாலும் அவனிடமிருந்து தன்னை மீட்டுக்கொண்டு வர முடியாமலும், அவனது அன்பின் வேகத்தில் கட்டுண்டு, தன் இரு கைகளையும் மாலையாக கோர்த்து அவன் கழுத்தை சுற்றிப் போட்டவள்......
"அச்சச்சோ....., அய்யோ...!! ஐயம் சாரி" என்ற வார்த்தைகளால் திடுக்கிட்டு இருவரும் திரும்பிப் பார்க்க, மேகலாவும், வித்யாவும், கதவை மூடிக்கொண்டு வெளியே செல்வதைப் பார்த்ததும், மது வெட்கத்திலும், சித்தார்த் ஒருவிதமான தவிப்பிலும் இருக்க, சமாளித்த சித்தார்த், "மது நான் கீழே போறேண்டா, நீ சீக்கிரம் வா" என்று கட்டிலில் அம்ர்ந்திருந்தவளின் கரத்தை பிடித்து அழுத்திவிட்டுக் கதவைத் திறந்துக்கொண்டு வெளியே சென்றான்.
வெளியே மேகலாவும், வித்யாவும், மனம் நிறைய மதுவின் மாற்றம் குறித்து சந்தோஷத்துடனும், இப்படி அவர்களின் அந்தரங்கத்தில் அத்து மீறி நுழைந்துவிட்டோமே என்று சற்று கவலையுடனும் நின்றிருக்க, வெளியில் வந்த சித்தார்த் சாதாரணமாக இருவரையும் விசாரித்து விட்டு, “உள்ளே போங்க" என்று சொல்லிவிட்டு கீழே சென்றுவிட்டான்.
உள்ளே சென்ற இருவரும், மதுவின் அருகில் சென்று நிற்க மது எழுந்து நின்றதும் வித்யா , "சாரிமா நாங்க ரெண்டுத் தடவை கதவை தட்டினோம் ஆனால், குரலே இல்லை அதனால் தான்...." என்று விளக்கம் சொல்ல நிமிர்ந்து இருவரையும் பார்த்த மது, "பரவாயில்லை" என்று நாணப்புன்னகை புரிய மேகலா, "அத்தான் சரியா சொல்லி இருந்தார் மது, மது சீக்கிரமே மனம் மாறிவிடுவாள், சித்தார்த் அவளைப் பார்த்துப்பார். பொறுப்பான கைகளில் நாம் மதுவை ஒப்படைத்துவிட்டோம் எந்தக் கவலையும் நமக்கு வேண்டாம் அப்படின்னு. அது இன்னைக்கு உண்மையாக ஆகிடுச்சி".
"உங்க அண்ணன் இதை கேட்டால் எப்படி சந்தோஷப்படுவார் தெரியுமா? எங்களுடைய இத்தனை நாள் வேண்டுதல் வீண் போகவில்லை. சரி கீழே போகலாமா?” என்று ஒன்றும் பேசாமல் நின்றிருந்தவளை கேட்டதும், “ம்ம்..." என்று சொல்லிக்கொண்டே என்னோட சந்தோஷம் எத்தனைப் பேரை சந்தோஷபட வைக்கிறது. ஆனால், இவ்வளவு பாசமாக இருப்பவர்களை நான் எவ்வளவு,கவலைப்பட வைத்திருக்கிறேன்' என்று எண்ணிக்கொண்டே கீழே வந்தவள் அங்கிருந்த தன் உறவினர்களை எல்லாம் பார்த்து சகஜ நிலைக்குத் திரும்பினாள்.
சற்றுநேரத்தில், ஜீவா, சுரேஷ், ரமேஷ், அவன் அம்மா, கீதா, சம்மந்தி வீட்டினர், மற்றும் சில நெருங்கிய உறவினர்கள் சூழ்ந்திருக்க, அத்வைதும், ஹரியும், ஸ்ரீயை அழைத்துவர சென்றுவிட, சித்தார்த், அஷ்வந்த் இருவரும் வீட்டில் இருந்து அனைவரையும் வரவேற்று, உபசரித்துக்கொண்டிருந்தனர்.
ஸ்ரீ ராமும் வந்து விட நிச்சய தாம்பூலம் சிறப்பாக நடந்து முடிந்தது. மதுவும், மீராவும், வீட்டு மருமகள்களாக எல்லாவற்றையும் பொறுப்பாக செய்துக்கொண்டிருந்தனர். இடையிடையே சித்தார்த்தும், மதுவும், கண் ஜாடையிலேயே பேசிக்கொள்ளவும் தவறவில்லை. அது மற்றவர் கண்களுக்கும் தவறவில்லை.
ஸ்ரீராம் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பிச்சென்றதும், நண்பர்கள் கூட்டம் முழுதும் தோட்டத்தில் போடப்பட்டிருந்த பந்தலின் கீழே அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்க, நேரம் ஓடிக்கொண்டிருந்தது, அஷ்வந்த் வழக்கம் போல தன் ஜோக்குகளால் அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தான்.
பேச்சு திசை மாறி திசை மாறி, கணவன் மனைவிக்கு இடையே வரும் பிரச்சனைகளைப் பற்றி வந்து நின்றது. ஆண்கள் அனைவரும் பிரச்சனைகளுக்கு முழுக்காரணமும் பெண்களே என்று சொல்ல, பெண்களோ ஆண்களே என்று சூடாக விவாதித்துக்கொண்டிருந்தனர்.
அஷ்வந்த், "இங்க பாருங்க. பெண்கள் எல்லோரும் வெளியே கிளம்பச் சொன்னால் அவ்வளவு தான். நாளைக்குப் போறதுக்கு நாம் இன்னைக்கே சொல்லணும். நீங்களே ‘லேடி’ன்னு தமிழ்ல எழுதிட்டு அதை ரிவேர்ஸ்ல படிங்க ‘டிலே’ ன்னு வரும் என்றதும், "டேய் அஷ் எப்படில்லாம் திங்க் பண்றடா. மேதைடா நீ" என்றான் சுரேஷ்.
"நன்றி தலைவா" என்று சொல்லிவிட்டுச் சிரித்தான்.
"போதும்டா ரம்பம், கொஞ்சம் உன் வாயை மூடு. உனக்கு வரப்போறா பாரு ஐயோ பாவம் அந்த மகராசி எங்கே இருக்காளோ" என்று வானத்தைப் பார்த்து கையைத் தூக்கி சொன்னாள்.
"உனக்கே ஒரு ஸ்ரீராம் கிடைக்கும் போது எனக்கு ஒரு ஸ்ரீதேவி கிடைக்க மாட்டாளா?" என்று பந்தாவாக கூற, தீபக்கும், மதுவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.
"என்ன அண்ணி இப்படி மர்மமா சிரிக்கிறீங்க? என்ன விஷயம்?" என்றான்.
"உங்க அண்ணிக்கு நானும் அவளும் சின்ன வயசுல போடும் சண்டையெல்லாம் ஞாபகம் வந்துவிட்டதாம்." என்றான் தீபக்.
"மது போடாத சண்டையா? நாங்க வாங்காத அடியா? அப்பா! இப்போ நினைத்தாலும் அப்படியே நடுங்குது" என்றான் சுரேஷ்.
"போதும் போதும் அப்படியே பேசி வேற டாபிக் போய்டாதீங்க. முதலில் விஷயத்தை முடிங்க. மது நீ சொல்லுடி உன்னோட கருத்தை" என்று கீதா சொன்னதும், மது, “என்னைப் பொறுத்த வரைக்கும் பிரச்சனை வர ரெண்டு பேருமே தான் காரணம்" என்றதும், சுரேஷ், "மது நீ நியாயவாதி! எப்படி உண்மையைச் சொல்ற பாரு?" என்றான்.
"ஹஸ்பன்ட் அண்ட் வைப் ரெண்டு பேருக்கும் எதனால பிரச்சனை வருது? ரெண்டு பேரும் முதலில் மனம் விட்டுப் பேசுறதே கிடையாது. ஒருத்தர் மேல ஒருத்தர் நம்பிக்கை வைக்கணும். தெரியாம செய்யும் தவறை பெரிசு பண்ணக்கூடாது. ஒருவருக்கு ஒருவர் உண்மையா, ஒளிவு மறைவு இல்லாத வாழ்க்கை வாழ்ந்தா நிச்சயம் பிரச்சனைகள் வராது. இது தான் என்னுடைய கருத்து" என்றதும் அனைவரும் மதுவின் கூற்றில் உண்மை இருப்பதாக சொல்லிக்கொண்டனர்.
மது, சித்தார்த்தை திரும்பிப் பார்க்க அவன் முகமோ கலவையான முக பாவத்தை வெளிப்படுத்தியது. குழப்பம் நிறைத்து காணப்பட்டது.
‘அன்று சுபா அண்ணியின் வீட்டில் இருந்தபோதும் சித்தார்த்தின் முகம் இதே போலத் தானே இருந்தது. இவனுக்கு என்ன பிரச்சனை. இன்று கட்டாயம் என்ன விஷயம் என்று கேட்டுத் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும். அவன் நிம்மதி தான், தன் வாழ்க்கை’ என்று நினைத்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்.
இரவு அனைவரும் கிளம்பிச் சென்றுவிட சுபா, மது, மீரா மூவரும் சமையலறையை சீர் படுத்திக் கொண்டிருந்த போது அங்கே வந்த தேவகி, "போதும்மா! மூணு பேரும் போய்ப் படுங்க. நேரம் ஆகுது. காலையில் எழுந்து மற்ற வேலைகளைப் பார்த்துக்கொள்ளலாம். மூணு பேரும் பாலை எடுத்துட்டுக் கிளம்புங்க" என்று மூவரையும் பிடித்துத் தள்ளாத குறையாக அனுப்பி வைத்தார்.
விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தவனின் அருகில் வந்து அமர்ந்தவள், "என்ன தீவிர சிந்தனைல இருக்கீங்க?" என்றாள்.
ஒன்றும் சொல்லாமல் எழுந்து அமர்ந்தவனிடம் பால் டம்ளரைக் கொடுத்தவள், “நீங்க குடிங்க. நான் போய்க் குளிச்சிட்டு வந்திடுறேன்” என்று சொல்லிவிட்டு அவனைப் பார்த்துக்கொண்டே குளியலறைக்குச் சென்றாள்.
அலுப்புத் தீரக் குளித்துவிட்டு வந்தவள், பால் டம்ளர் கட்டிலருகிலிருந்த மேஜை மீது இருக்க, அவன் மாடியில் உலவிக்கொண்டிருந்தான். யோசனையுடன் நடந்து கொண்டிருந்தவன் அருகில் சென்றவள், பின்னாலிருந்து அவனை அணைத்துக்கொண்டாள்.
சித்தார்த் கண்களை மூடிக்கொண்டு நின்றிருந்தான். அவளை விலக்கவும் இல்லை. அணைக்கவும் முயலவில்லை. ஒருவிதமான தடுமாற்றத்துடனேயே இருந்தான். அவனிடமிருந்து எந்தவிதமான பதிலும் கிடைக்காததில் குழப்பத்துடன் அவனெதிரில் வந்து நின்றாள்.
அவன் எதுவும் பேசாமல் அறைக்குச் செல்ல, குழப்பத்துடன் பின் தொடர்ந்தாள். இரு கைகளிலும் தலையைத் தாங்கியபடி அமர்ந்திருந்தவனைக் கண்டதும் அவன் எதிரில் சென்று மண்டியிட்டு அமர்ந்தாள்.
"என்னங்க ஆச்சு உங்களுக்கு? நானும் இந்த இரண்டு வாரமா பார்த்துட்டிருக்கேன். அடிக்கடி ஏதோ யோசனைக்குப் போயிடுறீங்க. ஆஃபீஸ்ல ஏதாவது பிரச்சனையா? ஆனா, அதுக்கெல்லாம் நீங்க இப்படி அப்செட் ஆகமாட்டீங்களே? எதாவது சொல்லுங்க. எனக்கு உங்களை இந்த நிலைல பார்க்கவே முடியல" என்று கெஞ்சலாகச் சொன்னதும், அவளை அமரவைத்து கையைப் பற்றிக்கொண்டான்.
"உன்னிடம் இதை எப்படிச் சொல்றதுன்னு தெரியல மது? என்னை நினைச்சி, என் செயலை நினைச்சி நானே வேதனைப்பட்டுட்டு இருக்கேன். பல முறை உன்கிட்டச் சொல்லிணும்னு நினைப்பேன். ஆனா, முடியல" என்று வேதனை நிறைந்த குரலில் அவன் சொல்லச் சொல்ல, அவளது மனத்தில் ஒரு பயம் சூழ ஆரம்பித்தது.
"அதுவும் நீ இன்னைக்குப் பேசியதைக் கேட்டதும், இனியும் உன்னிடம் மறைக்கக் கூடாதுன்னு முடிவு செய்துவிட்டேன். ஆனா, அதை எப்படி ஆரம்பிக்கறதுன்னு தான் தெரியல" என்றவன், ஒரு முடிவுடன் பீரோவிலிருந்த டைரியை எடுத்துக் கொடுத்தான்.
“மது! இந்த டைரியைப் படி. என்னுடைய இந்த நிலைக்கான விளக்கம் உனக்குக் கிடைக்கும். நான் ஒரு ஒரு மணி நேரம் கழிச்சி வரேன்” என்றவன் அவள் பதிலை எதிர் பாராமல் வீட்டுச் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டான். அவன் செல்லும் வரை பார்த்துக்கொண்டிருந்தவள், நடுங்கும் விரல்களால் அந்த டைரியைத் திறந்தாள்.
முன்னால் சில பக்கங்கள் வெற்றுத் தாள்களாக இருந்தன. திருப்பிக்கொண்டே வந்தவளின் கண்கள் ஓரிடத்தில் நிலைத்தது. சித்தார்த்தின் அழகிய கையெழுத்தில்,எழுதி இருந்த கவிதை
"பெண்ணே நீ என் தேவதை
பார்த்தவுடன் என் நெஞ்சில்
நிறைந்த தாரகை
நீயா அல்லி ராணி
இல்லை இல்லை
என் இதய வீட்டில்
குடியிருக்கும் என்
இதய ராணி .....
என் இதய சிம்மாசனத்தில்
அமர்ந்திருக்கும்
உன்னை நான்
மாலைசூட்டி ஆக்குவேன்
என் பட்டத்து ராணி.....”
அந்தக் கவிதையை வாசித்தவள் மெதுவாகப் பக்கத்தைத் திருப்ப, அதிலிருந்த போட்டோவைக் கண்டதும் நம்ப முடியாமல் விழி அகலப் பார்த்தாள்.
ஒவ்வொரு பக்கமாக படித்துக்கொண்டே வர, அவளது நெஞ்சில் தோன்றிய உணர்வுகளைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. அவளது நெஞ்சக்கூட்டுக்குள் ஆயிரம் ஆயிரம் உணர்ச்சிகள் அலை மோதின
மொத்த டைரியும் படித்தவள், பொத்தென சோஃபாவில் அமர்ந்தாள். ஒன்றரை மணி நேரமாக மனக்கலக்கத்துடன் பீச்சில் அமர்ந்திருந்த சித்தார்த் வீட்டை நோக்கி நடந்தான்.
அறைக்கதவைத் திறந்தவன், சிலையென அமர்ந்திருந்தவள் அருகில் சென்று, “மது" என்றழைத்தபடி அவளது தோளில் கையை வைத்ததும், சரேலென்று அவனை நிமிர்ந்து பார்த்தவளது விழிகளில் தோன்றிய பாவம், இன்னதென்று அவனால் வரையறுக்க இயலவில்லை.
அவ்வளவு நேரமும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தவள் அவனைக் கண்டதும், “நீங்களா..? நீங்களா... என்னைச் சந்தேகப்பட்டீங்க சித்தூ!” என்று மெல்லிய குரலில் கேட்டுக்கொண்டே அவனிடமிருந்து விலகிப் பின்னாலேயே சென்றாள்.
இரண்டே எட்டில் அவளை அணுகியவன், "இல்லடா மது..." என்று பேசத் தொடங்கியவனை "வேற யார் சந்தேகப்பட்டிருந்தாலும் பரவாயில்ல. நீங்..க.. நீங்க எப்படிச் சித்தூ சந்தேகப்படலாம்? அதுவும் என்னை... என்னைப் போய்..." என்று கத்திக்கொண்டே பாய்ந்து அவன் சட்டையைப் பிடித்து உலுக்கியபடி கேட்க, அடிபட்ட மானின் கதறலாய் அவளது வார்த்தைகள், அவனது செவியில் அறைந்தன.
'இதற்கு என்ன பதில் சொல்வேன் கடவுளே!' என்று அவன் மனம் அரற்றத் துவங்க அதற்கு மேல் அவளது கதறல்கள், அவனுடைய காதில் நுழைந்தாலும், கருத்தில் பதியவில்லை.
"மது! ப்ளீஸ்டா... அழாதே" என்றதும் அவன் நெஞ்சில் சாய்ந்து கதறினாள்.
“ஏன்.. ஏன்...? சித்தூ நீங்க என்கிட்ட மறைச்சீங்க. நீங்க என்னைக் காதலித்ததை ஏன் முதலிலேயே என்கிட்டச் சொல்லலை? எதுக்காக என்னிடமிருந்து விலகி போனீர்கள்? நீங்க அன்னைக்கே என்கிட்டச் சொல்லியிருந்தா, அர்ஜுன்னு ஒருவன் என் வாழ்க்கையில் வராமலேயே போயிருப்பானே. வேற ஏதாவது ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, உயிரோடு இருந்திருப்பானே!
என் வாழ்க்கையும் திசை மாறிப் போகாமல் இருந்திருக்குமே. நாமளும் சந்தோஷமாக இருந்திருக்கலாமே? ஏன் சித்தூ நீங்க முதலிலேயே சொல்லவில்லை? நீங்க என்னை சந்தேகப்பட்ட போதாவது நேரடியா வந்து என்னிடம் பேசி இருக்கலாமே?" என்று தன் மீது சாய்ந்துக்கொண்டு புலம்புபவளைத் தேற்ற வழி தெரியாமல் நின்றுகொண்டிருந்தான்.
அவன் மனதில் மீண்டும் மீண்டும், ‘நீ என்னைச் சந்தேகபட்டாயே?’ என்ற அந்த ஒரு கேள்வியே சுற்றிச் சுற்றி வந்து அவனைச் சுட்டேரித்துக்கொண்டிருந்தது. அவள் புலம்பிய மற்ற எதுவும், அவனது மனத்தில் பதியவில்லை. மனம் நிறைய வலியுடன், ஒன்றும் பேசாமல் அவளை அணைத்தபடி நின்றுகொண்டிருந்தான்.
தான் இவ்வளவு தூரம் பேசியும் அவனிடமிருந்து ஒரு பதிலும் வராததால், நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தவள் திகைத்தாள். உலகத்தின் அத்தனைச் சோகத்தையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டவனைப் போன்ற அவனது முகபாவனை, அவளைத் திகைக்க வைத்தது. அவள் வாயிலிருந்து, மேலும் வெளிவரத் துடித்த வார்த்தைகள் அப்படியே அடங்கின.
மெல்ல தன் அணைப்பிலிருந்து விலகத் தொடங்கியவளை அவனது கரங்கள் விலகவிடாமல் இறுகப் பற்றியது. தன்னை மறந்து மீண்டும் அவன் மார்பில் ஒண்டியவளின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுக்க ஆரம்பித்தது.
அந்த ஆற்றில் கலக்கத் துடிக்கும் அருவி நீர் போல, அவனது கண்களிலிருந்தும் கண்ணீர் வெளிவர ஆரம்பித்தது. தன் மேல் விழுந்த முதல் இரண்டுத் துளி கண்ணீரை உணர்ந்தவள், அவனை நிமிர்ந்து பார்த்தாள். கலங்கிய இருவரின் கண்களிலும் அடுத்தவர் உருவம், பனித்திரையின் ஊடே பார்பது போல்தான் தெரிந்தது.
தன்னை மறந்து கத்தியதால் எழுந்த உணர்ச்சி வேகத்தில், அவள் உடல் தள்ளாடுவதை உணர்ந்தவன், அவளை மெல்ல நடத்திச் சென்று கட்டிலில் அமர வைத்தான். பயத்தில் இருக்கும் புறாவின் சிறகுகள் போல, அவளது உடல் நடுங்க, ஆதரவுடன் அணைத்துக் கொண்டான்.
சிறு குழந்தையைத் தேற்றுவது போல், அவனது விரல்கள் அவளை வருடிக்கொடுத்தன. ஆயிரம் வார்த்தைகள் தராத ஆறுதலை, அவனுடைய அந்த வருடல் தந்தது. அவளது அழுகை மெல்ல விசும்பலாகி, ஓய்ந்து போய் அவள் தூங்கும் வரை இந்த நிலை தொடர்ந்தது.
எதிலிருந்தோ அவளைக் காப்பாற்றத் துடிப்பவன் போல், அவளை தன் மீது சாய்த்துக் கொண்டு இறுக அணைத்திருந்த சித்தார்த், தூக்கத்தில் அவள் தளர்வதைக் கண்டதும், அலுங்காமல் அவளைப் படுக்கையில் படுக்க வைத்தான்.
தூக்கத்திலும் விசும்பும், அவளது நிலையைக் கண்டவன் நெஞ்சம், உலைகலனாய் கொதித்தது. ‘என் மதுவை இனி, கண் போலப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேனே ஆண்டவா! இன்று அந்தக் கண்களில் வழியும் கண்ணீரைக்கூட என்னால் துடைக்க முடியவில்லையே… அதற்குரிய தகுதியும் எனக்கில்லையே. அவள் கேட்ட எந்த ஒரு கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லையே...’ என்று தன்னைத் தானே நொந்து கொண்டான்.
குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தவன், அந்த அறையில் மூச்சு முட்டுவது போல் உணர்ந்தான். மது நல்ல உறக்கத்தில் இருப்பதைத் தெளிவு படுத்திக்கொண்டு அறையிலிருந்து வேகத்துடன் கிளம்பினான்.
மதுவின் கண்ணீர் துளிகள் பட்டு, கறையாகியிருந்த அவனுடைய சர்ட், கண்ணில் பட்டாலும் அது அவனது கருத்தில் எட்டவில்லை, வருத்தத்துடன் தலையைக் குலுக்கிக் கொண்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
விவரம் தெரிந்த நாளிலிருந்து காரை இயக்கிக் கொண்டிருப்பதால், அனிச்சை செயலாக கைகளும் கால்களும் ஒத்துழைக்க, கார் சாலையில் போய் கொண்டிருந்தது. அவனது மனம் அவளது வார்த்தைகளிலேயே சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும், தன் காதுகளில் ஒலித்த அவளது கதறல் மட்டுமே அவனை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது.
வெளிக்காற்று முகத்தில் பட்டு, சிறிதே சமநிலை அடைந்தவன், சடாரென்று காரை நிறுத்தினான்.
'ஓ மது! நீ என்ன சொன்னாய்?' இது வரை அவள் கதறல் ஒலி மட்டுமே காதுகளையும், மனதையும் அடைத்திருக்க அந்த நொடியில்தான் அவளுடைய வார்த்தைகளின் அர்த்தம், கதறல் ஒலியைக் கிழித்துக்கொண்டு அவனது மனத்தில் நுழைந்தது.
‘ஏன், சித்தூ நீங்கள் உடனே வந்து சொல்லவில்லை?' அவளுடைய வார்த்தைகளின் முழு அர்த்தம் புரிந்ததும், கோடி பிரகாசம் அவன் கண்களில் தோன்றியது. அந்த நொடி வரை தன்னை உலகதிலேயே அதிகம் சபிக்கப்பட்டவனாய் உணர்ந்தவன் இப்போது, உலகத்திலேயே அதிகம் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்ந்தான்.
‘மது! இந்த நிலையிலும் நீ என்னை வெறுக்கவில்லை. உனக்கு என் காதலை உன்னிடம் சொல்லாதது தான் வருத்தமா? அப்படியானால் நான் உன்னைத் தவறாக புரிந்து கொண்டதை நீ மன்னித்துவிட்டாயா? நான்தான் நீ சொன்ன வார்த்தைகளின் முழு உண்மையையும் அறியமுடியாத குழப்பத்தில் ஆழ்ந்திருந்தேன். அவ்வளவு நேரமும் மனத்தில் இருந்த இறுக்கம் மறைந்து, உற்சாகம் பிறந்தது.
‘இதோ வந்துவிட்டேன் என் உயிரே! இனி, நம்மைப் பிரிப்பதற்கு இந்த உலகத்தில் எதற்கும் சக்தியில்லை’ என்று கூறியபடி, மனம் முழுதும் உற்சாகம் பெருக்கெடுக்க தன்னவளை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் முழு வேகத்தில் அவன் வந்த பாதையில் அவன் காரைத் திருப்பிய போது..
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள், "சித்தூ..." என்ற கூக்குரலுடன் அலறித் துடித்து எழுந்தாள்.