காருக்குள் புகுந்து பீதி ஏற்படுத்திய நாகப் பாம்பு
திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபரின் காரின் முன்பக்க இயந்திரப் பகுதியில் புகுந்த நாகப்பாம்பு மீட்கப்பட்டு, அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.
திருப்பூர் மாநகர் கல்லூரி சாலையைச் சேர்ந்தவர் விக்னேஸ்ராஜ். இவர், பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 8-ம் தேதி உறவினர்களுடன் திருப்பூரில் இருந்து பிஎம்டபிள்யு கார் மூலமாக மதுரைக்கு சென்றுள்ளார்.
வெள்ளகோவில் அருகே முத்தூர் வட்டக்கரை பகுதியில், காரின் முன்பக்கமாக இயந்திரப் பகுதியை ஒட்டி பாம்பின் தலை காணப்பட்டது. இதனை கவனித்த விக்னேஸ்ராஜ், வட்டக்கரையில் காரை நிறுத்திவிட்டு முன்பக்க இயந்திரப் பகுதியை திறந்துபார்த்தார். அப்போது, பாம்பு எதுவும் தென்படவில்லை.
இதையடுத்து, வெள்ளகோவில் தீயணைப்புத் துறையினர் காரை சோதனையிட்டு பாம்பு இல்லை என தெரிவித்து சென்றுவிட்டனர். இதற்கிடையே, கடந்த 9-ம் தேதி கோவை பிஎம்டபுள்யு கார் சர்வீஸ் ஸ்டேசனுக்கு சென்று விக்னேஸ்ராஜ் பார்த்துள்ளார்.
இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் அவர் கூறிய தாவது:
பாம்பு எங்கு ஏறியது என்று தெரியவில்லை. காரின் இயந்திரப் பகுதியில் மழை நீர் வடிவதற்காக வைக்கப்பட்டிருக்கும் ஃபில்டர் வழியாக பாம்பு உள்ளே புகுந்துள்ளது. கார் ஓடியதால் இயந்திரப் பகுதியில் ஏற்பட்ட சூட்டின் காரணமாக தலையை மட்டும் காண்பித்துள்ளது. ஆனால், உடலை முழுமையாக வெளியே எடுக்க முடியவில்லை. அதனை பார்த்த பின்புதான் இயந்திரப் பகுதியில் இருப்பது தெரியவந்தது.
கடந்த 9-ம் தேதி காலை கோவை யில் உள்ள பிஎம்டபிள்யு சர்வீஸ் ஸ்டேசனுக்கு காரை எடுத்துச் சென்றேன். அங்கு காரை இயக்கிய போது இயந்திரப் பகுதி சூடாகத் தொடங்கியதும் பாம்பின் இருப்பிடமும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து இயந்திரப் பகுதியின் ஒவ்வொரு பாகமாக பிரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கையாக பாம்பு பிடிக்கும் சஞ்சய் என்பவர் வரவழைக் கப்பட்டார். அவரும் லாவகமாக பாம்பை பிடித்தார். சுமார் இரண் டரை மணி நேரப் போராட்டத்துக்குப் பின், பாம்பை பிடித்து வனப்பகுதி யில் விடுவித்தனர். அதற்குள் காரில் இருந்து பாம்பு அப்புறப் படுத்தப்படும் வீடியோ வாட்ஸ் அப் மற்றும் முகநூலில் வைரலாக பரவிவிட்டது' என்றார்.
‘இருக்கை பகுதிக்குள் எதுவும் புகாது’
கார் நிறுவனத்தினர் கூறும்போது, ‘காரின் இயந்திரப் பகுதியில் நாகப்பாம்பு புகுந்ததை அகற்றிவிட்டோம். ஒரு லட்சம் முதல் ஒரு கோடி வரை கார் வாங்கினாலும், காருக்குள் பாம்போ மற்றவையோ புகாத வண்ணம் தான் பொதுவாகவே உற்பத்தி செய்யப்படுகிறது. காருக்குள் உள்ள இருக்கை பகுதிக்குள் எதுவும் புகாது. காரை நிறுத்தியிருந்த இடத்தில் எங்காவது பாம்பு ஏறி இருக்கலாம். அனைத்து வகை கார் ஓட்டுபவர்களும், கார் வைத்திருப்பவர்களும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவை இல்லை' என்றார்.
திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபரின் காரின் முன்பக்க இயந்திரப் பகுதியில் புகுந்த நாகப்பாம்பு மீட்கப்பட்டு, அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.
திருப்பூர் மாநகர் கல்லூரி சாலையைச் சேர்ந்தவர் விக்னேஸ்ராஜ். இவர், பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 8-ம் தேதி உறவினர்களுடன் திருப்பூரில் இருந்து பிஎம்டபிள்யு கார் மூலமாக மதுரைக்கு சென்றுள்ளார்.
வெள்ளகோவில் அருகே முத்தூர் வட்டக்கரை பகுதியில், காரின் முன்பக்கமாக இயந்திரப் பகுதியை ஒட்டி பாம்பின் தலை காணப்பட்டது. இதனை கவனித்த விக்னேஸ்ராஜ், வட்டக்கரையில் காரை நிறுத்திவிட்டு முன்பக்க இயந்திரப் பகுதியை திறந்துபார்த்தார். அப்போது, பாம்பு எதுவும் தென்படவில்லை.
இதையடுத்து, வெள்ளகோவில் தீயணைப்புத் துறையினர் காரை சோதனையிட்டு பாம்பு இல்லை என தெரிவித்து சென்றுவிட்டனர். இதற்கிடையே, கடந்த 9-ம் தேதி கோவை பிஎம்டபுள்யு கார் சர்வீஸ் ஸ்டேசனுக்கு சென்று விக்னேஸ்ராஜ் பார்த்துள்ளார்.
இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் அவர் கூறிய தாவது:
பாம்பு எங்கு ஏறியது என்று தெரியவில்லை. காரின் இயந்திரப் பகுதியில் மழை நீர் வடிவதற்காக வைக்கப்பட்டிருக்கும் ஃபில்டர் வழியாக பாம்பு உள்ளே புகுந்துள்ளது. கார் ஓடியதால் இயந்திரப் பகுதியில் ஏற்பட்ட சூட்டின் காரணமாக தலையை மட்டும் காண்பித்துள்ளது. ஆனால், உடலை முழுமையாக வெளியே எடுக்க முடியவில்லை. அதனை பார்த்த பின்புதான் இயந்திரப் பகுதியில் இருப்பது தெரியவந்தது.
கடந்த 9-ம் தேதி காலை கோவை யில் உள்ள பிஎம்டபிள்யு சர்வீஸ் ஸ்டேசனுக்கு காரை எடுத்துச் சென்றேன். அங்கு காரை இயக்கிய போது இயந்திரப் பகுதி சூடாகத் தொடங்கியதும் பாம்பின் இருப்பிடமும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து இயந்திரப் பகுதியின் ஒவ்வொரு பாகமாக பிரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கையாக பாம்பு பிடிக்கும் சஞ்சய் என்பவர் வரவழைக் கப்பட்டார். அவரும் லாவகமாக பாம்பை பிடித்தார். சுமார் இரண் டரை மணி நேரப் போராட்டத்துக்குப் பின், பாம்பை பிடித்து வனப்பகுதி யில் விடுவித்தனர். அதற்குள் காரில் இருந்து பாம்பு அப்புறப் படுத்தப்படும் வீடியோ வாட்ஸ் அப் மற்றும் முகநூலில் வைரலாக பரவிவிட்டது' என்றார்.
‘இருக்கை பகுதிக்குள் எதுவும் புகாது’
கார் நிறுவனத்தினர் கூறும்போது, ‘காரின் இயந்திரப் பகுதியில் நாகப்பாம்பு புகுந்ததை அகற்றிவிட்டோம். ஒரு லட்சம் முதல் ஒரு கோடி வரை கார் வாங்கினாலும், காருக்குள் பாம்போ மற்றவையோ புகாத வண்ணம் தான் பொதுவாகவே உற்பத்தி செய்யப்படுகிறது. காருக்குள் உள்ள இருக்கை பகுதிக்குள் எதுவும் புகாது. காரை நிறுத்தியிருந்த இடத்தில் எங்காவது பாம்பு ஏறி இருக்கலாம். அனைத்து வகை கார் ஓட்டுபவர்களும், கார் வைத்திருப்பவர்களும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவை இல்லை' என்றார்.