அடுத்தடுத்து உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு நிலை; சென்னைக்கு மழை எப்போது? - வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கணிப்பு
சென்னை
நவம்பர் 29ம்- தேதி தொடங்கி மழை கொடுக்கும் காற்றழுத்த தாழ்வு நிலையின் பாதை
தமிழகத்தில் நாளை மீண்டும் மழை தொடங்கும் எனவும், டிசம்பர் 5-ம் தேதி மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பு இருப்பதாகவும் அப்போது பரவலாக கனமழை பெய்யும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது
மாலத்தீவு அருகே உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் நாளை தமிழகத்தில் மீண்டும் மழை தொடங்கும். இதனால் வடகிழக்கு காற்று தமிழக கடலோர மாவட்டங்களுக்குள் நுழையும் சாதக சூழல் உள்ளது. நாளை தொடங்கி டிசம்பர் 1-ம் தேதி வரை இந்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
காற்று வலிமையாக இல்லாததால் உள்மாவட்டங்களில் இதனால் பெரிய அளவில் மழை இருக்காது. அதேசமயம், கடலோர மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் கனமழையை எதிர்பார்க்கலாம். நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை போன்ற தென் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.
கடலோர மாவட்டங்களை பொறுத்தவரை மகாபலிபுரம் தொடங்கி கன்னியாகுமாரி வரையில் மட்டுமே மழைக்கு சாதகமான காற்று உள்ளது. அதுவும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம். அதேசமயம் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் இது அதிகமழைக்கு வாய்ப்பில்லை.
2வது காற்றழுத்த தாழ்வு நிலை
இதனைத் தொடர்ந்து டிசம்பர் 5-ம் தேதி மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. இலங்கைக்கு தென் கிழக்கே உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை சற்று வலிமை கொண்டதாக உருவாகும். இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர் புயல் சின்னமாக மாறவும் வாய்ப்புள்ளது.
டிசம்பர் 5-ம் தேதிக்கு பிறகே அதன் போக்கை முழுமையாக கணிக்க முடியும். எனினும் இது நாளை மழை கொடுக்கும் காற்றழுத்த தாழ்வு நிலையை விட வலுவானதாக இருக்கும்.
டிசம்பர் 5-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலையால் கோவை, நீலகரி, ஈரோடு போன்ற மேற்கு மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு அதிக வாய்ப்புள்ளது. மற்ற கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களிலும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
டிசம்பர் 5-ம் தேதி முதல் மழை கொடுக்கும் காற்றழுத்த தாழ்வு நிலையின் பாதை
சென்னை
நவம்பர் 29ம்- தேதி தொடங்கி மழை கொடுக்கும் காற்றழுத்த தாழ்வு நிலையின் பாதை
தமிழகத்தில் நாளை மீண்டும் மழை தொடங்கும் எனவும், டிசம்பர் 5-ம் தேதி மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பு இருப்பதாகவும் அப்போது பரவலாக கனமழை பெய்யும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது
மாலத்தீவு அருகே உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் நாளை தமிழகத்தில் மீண்டும் மழை தொடங்கும். இதனால் வடகிழக்கு காற்று தமிழக கடலோர மாவட்டங்களுக்குள் நுழையும் சாதக சூழல் உள்ளது. நாளை தொடங்கி டிசம்பர் 1-ம் தேதி வரை இந்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
காற்று வலிமையாக இல்லாததால் உள்மாவட்டங்களில் இதனால் பெரிய அளவில் மழை இருக்காது. அதேசமயம், கடலோர மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் கனமழையை எதிர்பார்க்கலாம். நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை போன்ற தென் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.
கடலோர மாவட்டங்களை பொறுத்தவரை மகாபலிபுரம் தொடங்கி கன்னியாகுமாரி வரையில் மட்டுமே மழைக்கு சாதகமான காற்று உள்ளது. அதுவும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம். அதேசமயம் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் இது அதிகமழைக்கு வாய்ப்பில்லை.
2வது காற்றழுத்த தாழ்வு நிலை
இதனைத் தொடர்ந்து டிசம்பர் 5-ம் தேதி மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. இலங்கைக்கு தென் கிழக்கே உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை சற்று வலிமை கொண்டதாக உருவாகும். இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர் புயல் சின்னமாக மாறவும் வாய்ப்புள்ளது.
டிசம்பர் 5-ம் தேதிக்கு பிறகே அதன் போக்கை முழுமையாக கணிக்க முடியும். எனினும் இது நாளை மழை கொடுக்கும் காற்றழுத்த தாழ்வு நிலையை விட வலுவானதாக இருக்கும்.
டிசம்பர் 5-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலையால் கோவை, நீலகரி, ஈரோடு போன்ற மேற்கு மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு அதிக வாய்ப்புள்ளது. மற்ற கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களிலும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
டிசம்பர் 5-ம் தேதி முதல் மழை கொடுக்கும் காற்றழுத்த தாழ்வு நிலையின் பாதை