Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript திரை விமர்சனம் | SudhaRaviNovels

திரை விமர்சனம்

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
ஓ பேபி.
இந்த படத்தில் லட்சுமி கலக்கியிருக்கிறார்!தமிழில் இவரை ஒதுக்கி விட்டாலும் மற்ற மொழிகளில் அசத்துகிறார்!மகன் மருமகள் பேரப்பிள்ளைகளுடன் வாழ்கிறார்.பால்ய கால நண்பருடன் ஒரு பேக்கரி நடத்துகிறார்.கணவனை இழந்து மகன் மீது அளவில்லா பாசத்துடன் இருப்பதும் மருமகளை அதிகாரம் பண்ணுவது பேரனுடன் செல்லம் கொஞ்சவதுன்னு படம் ஆரம்பிக்குது.மன அழுத்தத்தில் மருமகளுக்கு உடல் நலமில்லாது போகிறது.இவரை பார்க்கக் கூட மறுக்கிறாள்.மகன் தர்ம சங்கடத்தில்.பேரன் ஒரு ம்யூஸிக் ட் ரூப் ஆரம்பித்து பெரிய ஆளாய் வர முயற்சிக்கிறான்.அவன் ப்ரோக்ராம் பார்க்க செல்லும் போது ஒரு பெரியவர் குட்டி பிள்ளையாரை கையில் கொடுத்து மறைகிறார்.அதை கையில் வைத்து இருந்தால் நீ நினைப்பது நடக்கும் என சொல்கிறார்.இவருக்கு பாடல் பாடுவது ரொம்ப பிடிக்கும்.சிறு வயதில் பாடகியாக வரணும் என நினைத்து இருந்ததை பேரனிடம் அடிக்கடி சொல்வார்.இப்போது அவர் திடீரென இளம் பெண்ணாக மாறிவிடுவார்!பேரனை தேடி போகும் போது அவனுக்கே அடையாளம் தெரியாது.சமந்தா இந்த கேரக்டரில் நடிக்கிறார்.அருமையா நடிச்சுருக்கார்,வயதான பாட்டியின் உடல் மொழியும் பேச்சுமாய்!தான் வீட்டை விட்டு செல்வதாய் கடிதம் எழுதி அனுப்புவார்.மகன் தேடுவார்.இவர் பேரனுடன் சேத்ந்து அவன் ட் ரூப்பில் பாடுவார்!பேரனை கொஞ்சும் போது தன்னை மறந்து பாட்டியாகவும் இளம்பெண்ணாகவும் மாறி மாறி நடிப்பது அழகு!
ஒரு அழகான காதலும் அவருக்கு வருகிறது!அதை விரும்பவும் முடியாமல் உள்ளுக்குள் ரசிப்பதுமாய்!அவன் பின்னாலேயே சுற்றும் போது அவர் பாட்டி மாதிரி அப்போ அப்போ மாட்டுவது சிரிப்பு.பல் நல்லா இருக்கும் போது நினைச்சதை சாப்பிடணும்ன்னு சாப்பிடுவதும் உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதை ரசிப்பதும் ரசனை!பேரனுக்காக ரத்தம் கொடுக்க செல்லும் போது மீண்டும் பாட்டியை விடும் சூழ் நிலை!நன்பர் தடுக்க பிடிவாதமாய் செல்வார்.மீண்டும் பாட்டியானதும் இப்ப அவர் நண்பர் அந்த பெரியவர் மூலம் இளைஞனாகி வருவார்!லட்சுமியும் சமந்தாவும் கலக்கியிருப்பார்கள்.
 
  • Like
Reactions: Anuya

Anuya

Well-known member
Apr 30, 2019
257
331
63
வாரணம் ஆயிரம்

View attachment IMG_20191130_104523.jpg

வாரணம் ஆயிரம் .... தந்தை மகள் இடையே இருக்கும் அழகான உறவை எடுத்துக்காட்டும் விதமாக பல படங்கள் உள்ளன. ஆனால் தந்தை மகன் உறவை கூறும் படங்கள் வெகு சிலவே உள்ளன. அதில் ஒன்று தான் இந்த வாரணம் ஆயிரம் திரைப்படமும் .

தந்தையாகவும்(கிருஷ்ணா), மகனாகவும்( சூர்யா) இரண்டு வேடங்களில் வளம்வருகிறார் சூர்யா. இந்த இரண்டு கதாபாத்திரமும் நம் மனதில் அப்படியே பதிந்துவிடுகின்றது.

இராணுவ அதிகாரியாக இருக்கும் சூர்யாவிற்கு தனது தந்தை இறந்துவிட்டதாக தகவல் வருகிறது ஆனால் மீட்பு பணி ஒன்றில் இருக்கும் சூர்யாவினால் இடையில் செல்ல முடியாமல் அந்த மீட்பு பணியை தொடர்ந்து மேற்கொள்கிறார். தன் தந்தையுடன் கழித்த நினைவுகள் காட்சிகளாய் கண் முன் வருகிறது சூர்யாவிற்கு இப்படி ஆரம்பம் ஆகிறது வாரணம் ஆயிரம் திரைப்படம்...

தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வரும் சூர்யா இரயிலில் மேக்னாவை(சமீரா ரெட்டி) கண்டு காதல் வயப்படுகிறார். அதை அவரிடம் தெரிவிக்க தான் இன்னும் சில தினங்களில் மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்வதாக கூறி அமெரிக்கா செல்கிறார் மேக்னா. இதனால் என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கும் சூர்யாவிற்கு , தந்தை சூர்யா இங்க இருக்குட அமெரிக்கா போய் கூட்டிட்டு வாவென்று கூறி அனுப்பி வைக்கிறார். அமெரிக்கா செல்லும் சூர்யா, மேக்னாவை கண்டுபிடித்து அவர் முன் சென்று நிற்கிறார் . தனக்காக இவ்வளவு தூரம் தேடி வந்து இருக்கும் சூர்யாவை மிகவும் பிடிக்கிறது மேக்னாவிற்கு. இருவரும் காதலிக்கின்றனர் இச்சமயம் எதிர்பாரா விதமாக நடக்கும் ஒரு தீவிரவாத தாக்குதலில் இறந்துவிடுகிறார் மேக்னா. அவரை மறக்க முடியாமல் தவிக்கும் சூர்யா போதை பழக்கத்திற்கு அடிமையாகிறார். அதன் பிறகு அதிலிருந்து தாய் தந்தை துணையுடன் மீண்டு வந்து ஆர்மியில் சேர்கிறார். சூர்யா தங்கையின் தோழி பிரியா( திவ்யா) சூர்யாவின் மீது காதல் வயப்பட்டு அவரையும் காதலிக்க வைத்து திருமணம் செய்கிறார்.

அட இவ்வளவு சொல்லியாச்சு ... ஆனா நம்ம கிருஷ்ணா & மாலினி யை(சிம்ரன்) விட்டாச்சே.... ரொம்ப ரொம்ப கியூட் பார்ட் இவங்க லவ் சீன் வருவது.... ரொம்ப அழகா இருக்கும் ... அதுவும் கிருஷ்ணா லவ் ப்ரொபோசல் சீன் செம ....

கிருஷ்ணா & சூர்யா கேரக்டர்ஸ் வாவ்... ஒவ்வொரு பையனும் தன் அப்பா இப்படி வேணும்னு நினைக்கிற கேரக்டர் . "இங்க இருக்குடா அமெரிக்கா போய் கூட்டிட்டு வா" அனுப்பி வைப்பது. போதையில் இருக்கும் மகனை மீட்டு கொண்டு வருவதுனு அப்பா சூர்யா செமையோ செம...
Hi கிருஷ்ணா.... இத சொல்லியே ஆகணும் இங்க யாரும் இவ்ளோ கியூட் அஹ் ஒரு அப்பாவ பார்த்து இருக்க மாட்டாங்க... அவ்வளவு அருமை நீங்க...eee

சிம்ரன், திவ்யா, சமீரா ரெட்டி அனைவரும் தங்களது பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.... கிட்டேர் வச்சிட்டு பாட்டு பாடுற சூர்யா செம.... ஹாரிஸ் ஜெய்ராஜ் இசையில் அணைத்து பாடல்களும் அருமை... ஆகா மொத்தம் ஒரு complete package இந்த வாரணம் ஆயிரம் திரைப்படம்....

" காலமும் கடல் அலையும் யாருக்காகவும் காத்திருக்காது" என்பது பழமொழி... அதே போலத்தான் வாழ்க்கையும். எதற்காகவும், எப்பொழுதும், எங்கேயும் நிற்காது . அது பாட்டிற்கு போய்ட்டே தான் இருக்கும் .... சோ இதுவும் கடந்து போகும் என்கின்ற மோட்டோ வை சொல்லி நாம் எல்லா சூழல்களையும் கடந்து செல்வோமாக.... இப்படம் கூறும் கருதும் அதுவே.....

Whatever happens in life. Life doesn't stop ,it moves on and people gets change ,they grow, eventually they forget about past and pass on... That's life..:giggle:
 
Last edited:

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.
துல்கரின் இருபத்து ஐந்தாவது படம்.படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை யாரை நம்புவதுன்னு தெரியல!அவ்வளவு ட்விஸ்ட்டுகள்!சஸ்பென்ஸ் விரும்பிகள் மிஸ் பண்ணிடாதிங்க!ரட்சன்,துல்கர் நண்பர்கள்,இருவரும் திருட்டு வேலைகள் செய்பவர்கள்.ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது அவற்றை நல்லா இல்லன்னு திருப்பி அனுப்புவது ,அதற்குள் உள்ளிருக்கும் பார்ட்ஸ்களை மாற்றி விற்பது இப்படி!
இருவருக்கும் காதல் முளைக்குது .இரு தோழிகள் ,நித்துவர்மா மற்றவர் பெயர் நினைவில்லை.அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து நேர்மையாக வீடு வீடாக பார்லர் வேலை செய்பவர்!
இவர்களின் காதலும் நட்பும் சூடு பிடிக்க கதை நாம் எதிர் பாராத வண்ணம் திசை மாறுகிறது!படம் பார்க்காதவர்களுக்காக நான் சஸ்பென்ஸ் உடைக்கவில்லை!படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க.படத்தில் சைபர் க்ரைம் குற்றங்கள் பத்தி அவ்ளோ விஷயங்கள் இருக்கு!நாம் இதை பார்த்து எச்சரிக்கையா இருக்கணும்.எத்தனை ஏமாற்று வேலைகள்?!ரட்சனின் டயலாக்குகளும் நடிப்பும் அட்டகாசம்!விஜய் டி வியின் இன்னுமொரு நட்சத்திரம்!துல்கர் இளமை துள்ளலும் ஸ்டைலும் அசத்துறார்!கவுதம் மேனன் எதிர் பாராத பாத்திரம்!அவருக்கும் ஒரு ட்விஸ்ட் இருக்கு!வழக்கமான படங்கள் பார்த்து சலிச்சவங்க இந்த படம் மிஸ் பண்ணாம பாருங்க !
 
  • Like
Reactions: sudharavi

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
கே டி.
கருப்பு துரை என்னும் முதியவரின் கதை.படுக்கையில் இருக்கும் பெரியவரின் சொத்துக்களுக்காக அவரை கருணை கொலை செய்ய பிள்ளைகள் முடிவெடுக்கிறார்கள்.எண்ணெய் தலையில் வைத்து குளிப்பாட்டி இள நீர் கொடுத்தால் இழுத்து கொண்டிருக்கும் முதியவர்கள் இறந்து விடுவார்கள்!இது இன்றும் நடைமுறையில் இருப்பதுதான்!
சட்டென முழித்து எழும் பெரியவர் பிள்ளைகள் பேசுவதை கேட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்!ஒரு கோவிலில் தங்கும் அவரை அங்கு இருக்கும் குட்டி பையன் விரட்டி விடுவான்!பின் அவருடன் சேர்ந்து அவனும் ஊர் ஊராக சுற்றுவான்.இருவரும் நெருங்கி விடுவார்கள்.அந்த குட்டி பையனின் நடிப்பு அட்டகாசம்!பெரியவரின் ஆசைகளை எழுதி வைத்து ஒண்ணு ஒண்ணா நிறைவேற்றுவது அழகு!எம் ஜி ஆர் போல் நடிப்பது,சிறு வயது தோழியை பார்க்க செல்வது,வண்டி ஓட்டுவது என இருவரும் செய்யும் அலப்பறைகள் கவிதை!படம் முழுவதும் ரசிப்புக்குரிய சீன்கள் நிறைய இருக்கு!சிற்வனும் பெரியவரும் போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள்!
 
  • Like
Reactions: sudharavi and Anuya

Anuya

Well-known member
Apr 30, 2019
257
331
63
ஆயிரத்தில் ஒருவன்....

2009யில் வெளிவந்த திரைப்படம். 10 ஆண்டுகள் கடந்து 2019ல 10 years of aayirathil oruvan என்று re-release செய்யப்பட்ட போது இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு 10 வருடங்கள் முன்பு கிடைக்காமல் போனது எனோ. எதற்சையாக YouTubeயில் decode of aayirathil oruvan என்று ஒரு வீடியோ பார்த்தேன்அதில் இந்த படத்தில் கூறி இருக்கும் சில indirect messages and scenes ah அழகா சொல்லி இருப்பாங்க. அப்பா.... வேற லேவல் படம்.... அதுவும் ரொம்ப சின்ன சின்ன விசியங்களை கூட ஒன்றுக்கொன்று relate பண்ணி இருப்பது எல்லாம் அருமையோ அருமை. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை தெரிகிறது படக்குழுவினரின் அயராத உழைப்பு.

சோழ மக்களை நோக்கி செல்லும் கார்த்தி, andrea, reema sen எதிர்நோக்கும் அந்த் மணல் புதைகுழி, பாம்பு, காட்டுவாசி போன்ற சோழர்கள் உருவாக்கிய இடர்கள் ஆகட்டும் அவர்களை கண்டுபிடித்த பின் அங்கு சோழர்களுக்கும் - நவீன பாண்டியர்களுக்கும் நடக்கும் போர் காட்சிகளில் சோழர்களின் போர் முறைகளை காட்சி படுத்திய விதமாகட்டும் எல்லாமே வேற லெவல்.....

உணவு, தண்ணீர் இன்றி வறுமையில் வாடி உடல் ஒட்டி போய் இருக்கும் மக்கள், இவ்வுலகம் நவீனமயமாகி விட்டது மன்னராட்சிகள் ஒழிக்கப்பட்டு விட்டது என்பதை அறியாமல் துதுவன் வருவான் நம்மை நம் தேசத்திற்கு அழைத்து செல்வான் என்று நம்பிக்கொண்டு இருக்கும் அரசனை பார்க்கும் போது அந்த அறியாமையை எண்ணி மனம் கனத்துபோகிறது.

ரீமாசென், கார்த்தி, andrea , பார்த்திபன் என்று அனைவருமே அழகாக அந்த கதாப்பாத்திரத்துடன் பொருந்தி போயினர். பார்த்திபன் தவிர வேறு யாரும் இந்த மன்னர் கதாபாத்திரத்திற்கு இவ்வளவு அழகாக பொருந்தி இருப்பார்களா என்று தெரியவில்லை.

அதே போல படத்தின் நிறைய இடங்களில் யார் அந்த தூதுவன் என்றும் இன்னும் சில விஷியங்களிற்கும் நிறைய hints கொடுத்திருப்பார்கள். படம் பார்க்கும் பொழுது நாம் அவ்வளவாக அவற்றை எல்லாம் கவனித்திருக்க மாட்டோம். நான் அந்த hidden details video பார்த்த பிறகு தான் இத்தனை விசியங்கள் இருக்கா இதற்குள் என்று தெரிந்தது.

அதே போல தான், ரீமாசென் கார்த்தி முதுகில் இருக்கும் அந்த புலி சின்னத்தில் கூட ஒரு hint வைத்திருக்கிறார் செல்வா சார்.

கார்த்தி முதுகில் இருக்கும் அந்த புலி சின்னம் சோழர் கொடிகளில் உள்ளது போல மேல் நோக்கி பாயும் புலி சின்னமாக இருக்கும்.

அதே போல் ரீமாசென் முதுகில் கிழ் நோக்கி பாயும் புலி சின்னம் இருக்கும். இது சோழர்களின் வீழ்ச்சியை குறிப்பதாகும்.

போரில் அந்த நவீன பாண்டியர்கள் தங்களது நவீன கருவிகளை பயன்படுத்தி வென்று அவர்களது குலதெய்வ சிலையை எடுத்துகொண்டு அந்த மக்களை சிறை எடுத்து செல்லும் காட்சி கொடுமை.

G.V prakash இசை மாஸ்... Celebration of life எத்தனை முறை கேட்டாலும் goosebumps வரும் வேற லெவல் feel....

இந்த படம் வந்த போது எனக்குலாம் 10 வயசு தான். அப்போ பார்த்து இருந்தாலும் ஒன்னும் புரிந்து இருக்காது. ஆனா இப்போ part 2 வரணும் என்று ஆசையா இருக்கு....

சோழனின் பயணம் தொடருமா?... தொடரனும் தொடர்ந்தால் நல்லா இருக்கும்?❤.

May be படத்தில் சொல்ல வந்ததை தெளிவா சொல்லி இருந்தால் அப்போவே நல்ல ஹிட் குடுத்து இருக்கும். இப்போ இவ்வளவு search panni பார்த்து தான் நமக்கு படம் புரியுது... அப்படி இல்லாம எல்லோராலும் easy ah purinchikura மாதிரி இருந்தா நல்லா இருக்கும். My all time fav movie aayirathil oruvan...??❤❤