அத்தியாயம்—55
சித்தார்த், திருமணம் முடிந்து இருபது நாட்களுக்குப் பிறகு, அன்றுதான் அலுவலகம் சென்றான். இருவரின் வாழ்வும், தாமரை இலை தண்ணீர் போல, ஒன்றோடு ஒன்று ஒட்டாமலே சென்று கொண்டிருந்தது. அன்றைய நிகழ்வுக்குப் பிறகு, சித்தார்த்திடம் தன் குறும்புத்தனத்தைக் காட்டாமல் இருந்தாள்.
ஆனால், சித்தார்த்தோ நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவளைச் சீண்டிக்கொண்டே இருந்தான். அந்தநேரம் அவனிடம் முகம் திருப்பினாலும், அதை நினைத்துச் சில சமயம் தனிமையில் சிரித்துக் கொள்வாள்.
இடைப்பட்ட நாட்களில் சித்தார்த்தைத் தவிர, வீட்டில் அனைவரிடமும் நன்கு ஒட்டிக்கொண்டாள். மறுநாள் சுபா டெல்லி கிளம்ப வேண்டும். அவளுக்கும், குழந்தைகளுக்கும், ஏதாவது நல்ல கிப்ட் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தாள்.
அலுவலகம் செல்லக் கிளம்பி வந்த சித்தார்த், டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தான். மது அவனுக்கு காலை உணவைப் பரிமாறிவிட்டு தேவகியின் அருகில் சென்றாள்.
"அத்தை!" என்று மெல்ல அழைத்தவளை, "என்ன மது?" என்றார்.
"சுபா அண்ணிக்கு, ஏதாவது நல்ல கிப்டா வாங்கலாம்னு இருக்கேன். வரீங்களா ஈவ்னிங், நாம கடைக்குப் போய்ட்டு வரலாம்?" என்றாள்.
"ஏன்மா? சித்தார்த் கூடப் போயேன். நீயும் வந்து பத்து நாள் ஆச்சு. ரெண்டு பேரும் எங்கேயும் போகவே இல்லையே. இன்னைக்குச் ஷாப்பிங் போயிட்டு அப்படியே வெளியே சாப்டுட்டு வாங்க" என்றார்.
‘நான் எப்படி அவரைக் கூப்பிடுவது?’ என்று நினைத்தபடி தயங்கி நின்றவளைப் பார்த்த மீரா, "என்ன மது யோசனை?" என்றாள்.
“இல்லக்கா! இன்னிக்குத்தான் அவர் ஆபீஸ் போறார். வேலை இருக்கும். நான் எப்படி அவரைச் சீக்கிரம் வரச்சொல்றது?" என்று கேட்டதும் சிரித்த மீரா, "நீ சொல்லு. சித்தார்த் சரியா நேரத்துக்கு வந்து நிற்கிறாரா இல்லையான்னு பாரு" என்று சொல்லிச் சிரித்தாள்.
அதற்குள் சித்தார்த் சாப்பிட்டு முடித்து, கிளம்பச் ஷூ போட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்தவள் அவனருகில் சென்றாள்.
சித்தார்த் என்ன என்பது போல பார்க்க, “இன்னைக்கு ஈவ்னிங் கொஞ்சம் சீக்கிரம் வரீங்களா?" என்றதும் ஆச்சரியத்துடன், “என்ன இன்னைக்கு ஏதாவது விசேஷமா ட்ரை பண்ணப் போறியா? காஃபில உப்பு, சர்க்கரைக்குப் பதிலா வேற ஏதாவது..." என்று கேட்டதும், கடுப்புடன் அவனைப் பார்த்தாள்.
அதே கோபத்தோடு உள்ளே செல்லத் திரும்பியவளை, “ஏய் மது! நில்லுடா" என்று அவள் கையைப் பிடிக்க, "விடுங்க, உங்ககிட்டப் போய்ப் பேச வந்தேன் பாருங்க" என்றாள் கோபத்தோடு.
"மது! அம்மா நின்னு நம்மளையே பார்க்கறாங்க. முகத்தை இப்படிக் கடுகடுன்னு வச்சிட்டுப் பேசாதே! கொஞ்சம் சிரிச்சா மாதிரி பேசு" என்றான்.
அவளும், ‘தாங்கள் இருவரும் இயல்பாக பேசுவது கூட இல்லை என்பதை, எதற்கு அனைவருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்ட், அவர்களது நிம்மதியைக் குலைக்க வேண்டும்’ என்ற எண்ணத்தோடு, சிரித்தபடி, “இன்னைக்குச் சீக்கிரம் வந்தா, போய் சுபா அண்ணிக்கு ஏதாவது நல்ல கிப்ட் வாங்கிட்டு வரலாம்" என்றாள்.
"சரி, முடிஞ்ச அளவுக்குச் சீக்கிரம் வரப் பார்க்கறேன்" என்றவன் அங்கிருந்த ரோஜா செடியிலிருந்து ஒரு பூவைப் பறித்து அவளது கூந்தலில் சொருகியவன், அவளது கன்னத்தைத் தட்டிவிட்டுக் காரில் ஏறினான்.
அவன் கிளம்பிச் சென்றதும் கன்னத்தைத் தடவியபடி, வீட்டின் உள்ளே செல்லத் திரும்பியவளுக்கு, அவர்கள் நின்று பேசிக்கொண்டிருந்த இடத்தை வீட்டின் உள்ளே இருந்து பார்த்தால் ஒன்றும் தெரியாது என்பது அப்போதுதான் புரிந்தது.
‘தன்னிடம் இப்படிப் பேசத் தான், அத்தை உள்ளேயிருந்து பார்ப்பதாகப் பொய் சொன்னான்’ என்று உணர்ந்தவள், எரிச்சலுடன் தலையில் வைத்த ரோஜாவை எடுத்து கீழே எறிய நினைத்தவளுக்கு, என்ன தோன்றியதோ மீண்டும் கூந்தலிலே வைத்துக்கொண்டாள்.
சித்தார்த் அலுவலகத்தின் உள்ளே நுழைந்த சிறிது நேரத்திற்கெல்லாம், ஜீவாவும், ரமேஷும், ஒருவர் பின்னால் ஒருவராக அவனுடைய அறைக்கு வந்தனர்.
ரமேஷ், “என்னடா புது மாப்பிள்ளை எப்படியிருக்க?" என்று கேட்டபடி வந்தவனைப் பார்த்த சித்தார்த் புன்னகையுடன், “ஜம்முன்னு இருக்கேன்?" என்றான்.
சித்தார்த்தின் முகத்தில் இருந்த சந்தோஷத்தைப் பார்த்த ஜீவா, “நீங்க ரெண்டு பேரும் கல்யாணத்தில் இருந்த நிலையைப் பார்த்து, என்ன நடக்குமோ; எது நடக்குமோன்னு பயந்துட்டே இருந்தேன்டா. நீ சந்தோஷமா இருந்தா அது போதும்! என்று சிரித்தான்.
“மது எப்படியிருக்கா? உங்க ரெண்டு பேரையும் அம்மா வீட்டுக்குக் கூப்பிடணும்னு சொல்லிட்டிருந்தாங்க. நான்தான் கொஞ்ச நாள் ஆகட்டும்ன்னு சொன்னேன்” என்ற ரமேஷ் தயங்கியபடி, “சித்தார்த்! மது உன்கிட்ட நல்லபடியாக நடந்துக்கறாளா?" என்று கேட்டான் அக்கறையுடன்.
புன்னகைத்த சித்தார்த், “எதுக்கு இவ்வளவு சந்தேகம்?" என்றவன், காபியில் உப்பைப் போட்டுக் கொடுத்தது முதல், தக்காளி சட்னியில் மிளகாய்த் தூளைக் கொட்டிக் கொடுத்தது வரை சொல்லிவிட்டுச் சிரிக்க, ரமேஷும் இணைத்து சிரித்தான்.
ஜீவா மட்டும் எதுவும் சொல்லாமல் அமர்ந்திருப்பதைப் பார்த்த சித்தார்த், "என்னடா சைலண்டா இருக்க? அம்மாகூட எங்கே உன்னை இந்தப் பக்கம் காணோம்னு கேட்டாங்க. சண்டே லஞ்ச் நம்ம வீட்ல சாப்பிடுவது போல வாங்கடா..." என்றதும், அதை கேட்ட ஜீவாவின் முகம், இன்னதென்று சொல்ல முடியாமல் பல பாவத்தை வெளிப்படுத்தியது.
"உனக்குத்தான் தலையெழுத்து, மாட்டிக்கிட்டு முழிக்கணும்னு இருக்கு. நாங்க என்னடா பாவம் செய்தோம்? எங்களையும் நடுவுல இழுத்து விடுற. நான் வேற அடிக்கடி உங்க வீட்டுக்குச் சாப்பிட வருவேன். போதாக்குறைக்கு மதிய சாப்பாடு எனக்கும் சேர்த்து இத்தனை நாள் உங்க வீட்லயிருந்து தான் வந்தது. இவனுக்கு எதுக்குத் தண்டமா இங்கேயிருந்து சாப்பாடு போகணுங்கற ஆத்திரத்திலோ, இல்ல உன் மேலயிருக்கும் கோபத்திலோ சாப்பாட்டில் ஏதோ செய்யப் போய் அதில் நான் மாட்டிக்கவா? எங்க அம்மாவுக்கு, நான் ஒரே பையன்டா. என்னைப் பார்த்தா பாவமா இல்லையா? தயவுசெய்து என்னை விட்டுடுங்கடா. நான் இந்த விளையாட்டுக்கு வரலடா சாமி!" என்று பெரிதாக ஒரு கும்பிடு போட, நண்பர்கள் இருவரும் வாய்விட்டு நகைத்தனர்.
"சிரிங்கடா சிரிங்க. ஏற்கெனவே மயிரிழையில் உயிர் தப்பினவன் நான். அந்த பயம் எனக்குத்தானே தெரியும்." என்றதும் மேலும் இருவரின் சிரிப்பும் அதிகரித்தது.
சித்தார்த்தின் தோளை தட்டிய ரமேஷ், "சித்தார்த், அவளைத் திரும்பக் குறும்புக்கார மதுவாக பார்க்கச் சந்தோஷமாக இருக்குடா!" என்று சந்தோஷத்துடன் சொன்னான்.
"தேங்க்யூடா” என்றவன், “நான் ஈவ்னிங் கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்குப் போகணும். சுபா, நாளைக்கு ஊருக்குக் கிளம்பறா. அவளுக்கு ஏதாவது வாங்கணும்னு மது சொன்னா" என்றான்.
"ஈவ்னிங் அந்தப் ஃபாரின் கம்பெனி ஜாயின்ட் வென்ச்சர், பத்திப் பேச வரேன்னு சொல்லி இருந்தாங்களே... பரவாயில்லடா! நீ கிளம்பு. நாங்க பார்த்துக்கறோம்" என்று ரமேஷ் நினைவுபடுத்த, "மறந்தே போய்ட்டேன். அதை முடிச்சிட்டுக் கிளம்பிப் போறேன்" என்றவன், அதன்பிறகு வேலையில் மூழ்கிப் போனான்.
ஆனால், சொன்னபடி அவனால் மாலையில் கிளம்ப முடியவில்லை. அந்தப் பிஸ்னஸ் பற்றிய பேச்சு இழுத்துக்கொண்டே போக, வீட்டிற்குப் போன் செய்து தன்னால் இன்று வர முடியாத விஷயத்தைச் சொன்னான். அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இரவு வெகுநேரமாகியும் அவன் வரவில்லை. மீண்டும் தொலைபேசி அழைப்புத் தான் வந்தது. மதுவுடன் விளையாடிக் கொண்டிருந்த அருந்ததி, அத்தையுடன் தான் படுத்துக்கொள்வேன் என்று அடம்பிடிக்க, குழந்தையைத் தூக்கிக்கொண்டு அறைக்கு வந்தவள் கதை சொல்லியபடியே குழந்தையுடன் படுத்தவள் அப்படியே தானும் உறங்கிவிட்டாள்.
சித்தார்த் வீட்டிற்கு வரும்போது மணி பதினொன்றுக்கு மேல் ஆகிவிட்டிருந்தது. அறைக்கு வந்தவன், குழந்தையை அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தவளை புன்னகையுடன் பார்த்தான். இரவு விளக்கின் ஒளியில் தனி அழகோடு இருந்தவளை, சில நொடிகள் பார்த்திருந்தவன் ஒரு பெருமூச்சுடன் குளித்துவிட்டு வந்து படுத்தான்.
இரவு விரைவாக உறங்கியதால், எப்போதும் விழிக்கும் நேரத்திற்கு முன்பே மதுவிற்கு விழிப்பு வந்துவிட, கண்களைத் திறந்தவள் மிக நெருக்கத்தில் சித்தார்த்தின் முகம் தெரிய திடுக்கிட்டுப் போனாள். அவ்வளவு நேரமும், அவனது தோளில் கன்னம் பதித்து உறங்கி இருப்பதை உணர்ந்து படபடப்புடன் எழுந்தாள்.
அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவன், மதுவின் அசைவில் மறுபுறமாகத் திரும்பிப் படுத்தான். ‘எங்கே எழுந்துவிடுவானோ என்ற எண்ணத்துடன் அசையாமல் இருந்தவள், அவன் மறுபுறம் திரும்பிப் படுத்தும், கட்டிலின் ஓரமாகப் படுத்திருந்த அருந்ததியைத் தூக்கி அவனருகில் படுக்க வைத்துவிட்டு, எழுந்து சென்றாள்.
குளியலறையின் கதவை மூடும் சப்தம் கேட்டதும், கண்களைத் திறந்தவன், அவள் சாய்ந்து படுத்திருந்த தோளை ஒருமுறை தடவிச் சிரித்துக்கொண்டான். தூக்கக் கலக்கத்தில் தன்புறமாகத் திரும்பிப் படுத்தவள், தன் தோளில் சாய்ந்துகொண்டது முதல் அவளது முகத்தையே பார்த்தபடி, தன் மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு படுத்திருந்தவன் மதுவின் அசைவால், தூங்குவது போலக் கண்களை மூடிக்கொண்டான். அவள் எழுந்து சென்ற பின்பும், தூக்கம் வராமல் அந்தச் சில நிமிடச் சந்தோஷத்தை மனத்தில் இருத்தி மகிழ்ந்திருந்தான்.
குளித்துவிட்டுப் புத்தம் புது ரோஜாவாக வந்தவள், ஈரக்கூந்தலை உதறியபடி பால்கனியில் சென்று நின்றாள். ஆதவன் மெல்ல மெல்ல எழுந்துவரும் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தவளின் பார்வை, வீட்டின் பின்புறம் இருந்த பறவைகளின் கூண்டின் மேல் நிலைத்தது.
வீட்டிற்கு வந்த இத்தனை நாட்களில் ஒருமுறை கூட, தான் பின்புறம் செல்லவில்லை என்று எண்ணியவள், கூந்தலை அடியில் முடிந்து கொண்டு வீட்டின் பின்புறத்திற்குச் சென்று பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் அறைக்கு வந்தவள். சித்தார்த்தைக் காணாமல், ஜாகிங் சென்றுவிட்டிருப்பான் என்று எண்ணிக்கொண்டே அறையை ஒழுங்குபடுத்தத் துவங்கினாள். அதற்குள் அருந்ததி கண்விழிக்க, “ஹாய் குட்டி, குட் மார்னிங்!" என்று குழந்தையைத் தூக்கி, "செல்லக் குட்டி நைட் அத்தை கூடவே தூங்கிட்டீங்களா? சமர்த்துக்குட்டியா நீங்க..." கொஞ்சியபடி குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு நிமிர்ந்தவள், பால்கனி வாசலில் இருகைகளையும் கட்டிக்கொண்டு சாய்ந்து நின்றபடி தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவனைக் கண்டதும் தன்னையும் அறியாமல் குழந்தையை இறக்கி விட்டுவிட்டு எழுந்து நின்றாள்.
சித்தார்த்தைக் கண்டதும், “மாமா!" என்று ஓடிச்சென்ற குழந்தை, அவனுடைய காலைக் கட்டிக்கொண்டாள். குழந்தையைத் தூக்கி நெற்றியில் முத்தமிட்டவன், மனைவியின் அருகில் வந்து நிற்க, அவள் தன் வேலையைத் தொடர்வது போலத் திரும்பி நின்றுகொண்டாள்.
"டார்லிங்! நேத்து நைட் நல்ல தூக்கம் போல. நான் வரும்போது அசந்து தூங்கிட்டு இருந்தீங்களே" என்று குழந்தையைக் கேட்பது போல அவளைக் கேட்டான். அவன் தன்னைத் தான் சொல்கிறான் எனத் தெரிந்தும் எதுவும் சொல்லாமல் வேலையில் கவனமாக இருந்தாள்.
"அத்தை" என்று குழந்தை மழலையில் அழைக்க, "என்னடா குட்டி" என்று திரும்பியவளிடம் தாவிய குழந்தையை கொடுக்காமல், " ரொம்ப டயர்டா ஹனி! அதான், என் தோளில் சாய்ந்து தூங்கியது கூடத் தெரியாம, தூங்கிட்டு இருந்தீங்களோ!" என்று கேட்டதும், சட்டென நிமிர்ந்து பார்த்தாள்.
அவனது கண்களில் தெரிந்த குறும்பைக் கண்டதும் கன்னம் சிவக்கக் குனிந்து கொண்டவள், “ப்ளீஸ், குழந்தையைக் கொடுங்க. அவளுக்குப் பால் கலந்து கொடுக்கணும்" என்றதும் சிரிப்புடன் குழந்தையைக் கொடுத்தான்.
மது அவசரமாக அங்கிருந்து செல்ல, “எனக்கும் காஃபி கொண்டு வர முடியுமா?” என்றதும், "ம்ம்” என்று, தலையை ஆட்டிவிட்டுச் சென்றாள்.
‘அவனுக்கு எதுவும் தெரியாது... தூங்கிக் கொண்டிருக்கிறான் என்று, தான் நினைத்தது தவறு’ என்று எண்ணியவள், ‘மீண்டும் எப்படி அவன் முன்னால் சென்று நிற்பது?’ என்று எண்ணிக்கொண்டு காஃபி கலந்து நேத்ராவிடம் கொடுத்தனுப்பினாள்.
கன்னம் சிவந்து நின்றவளையே நினைத்தபடி இருந்த சித்தார்த், ‘என்னடா இது! இன்னைக்கு ரொம்ப அதிசயமெல்லாம் நடக்குது. சண்டை போடுவான்னு நினைச்சா, வெட்கத்தோடு குனிஞ்சிகிட்டா. இப்படிப் போனா, என்னோட வாக்கைக் கடைசிவரை காப்பாற்ற முடியாது போலிருக்கே. இதுக்குத்தான் அவசரப்பட்டு வாயை விடக்கூடாதுன்னு சொல்றாங்க. அவள் முகம் சிவந்து நிற்கும்போது, பெரிய அவஸ்தையாக இருக்கே. சித்தார்த் கன்ட்ரோல் யுவர் ஸெல்ப்! அவசரப்படாதே... அவளோட மனம் இன்னும் முழுதாக மாறவில்லை. பொறுமை பொறுமை’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.
"அண்ணா காஃபி" என்ற குரலில் கண்களைத் திறந்தவன் புன்னகையுடன் தங்கைக்கு, "குட் மார்னிங் நேத்ரா, தேங்க்ஸ்" என்று சொல்லிக் கப்பை வாங்கிக் கொண்டான்.
“நீ சாப்டியா?” என்று பாசத்துடன் கேட்க, “ம்ம்” என்று உற்சாகத்துடன் தலையை ஆட்டினாள்..
"அண்ணி எங்கே? வேலையா இருக்காளா?" என்றான்.
"ரொம்ப முக்கியமான வேலை. கீழே எட்டி பாருங்க" என்று அவன் கையைப் பிடித்து இழுத்துச் சென்று தோட்டத்தைக் காட்டினாள். அங்கே, கையில் பால் டம்ளருடன் அருந்ததியின் பின்னால் சுற்றிச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தாள்.
சிறிதுநேரம் அவளது செயல்களை இரசித்தவன், முதல் வேலையாக ஜீவாவிற்குப் போன் செய்து, தான் இன்று ஆபிஸ் வரவில்லையெனச் சொல்லிவிட்டு அன்று செய்யவேண்டிய வேலைகளைப் பட்டியலிட்டுக் கொண்டிருந்தான்.
காலை உணவை முடித்துக்கொண்டவன், "மது! உன் வேலையை முடிச்சிட்டுக் கொஞ்சம் மேலே வா" என்று அழைத்தான். அவளும், அப்படி இப்படி என்று வேலைகளை ஒவ்வொன்றாக இழுத்துச் செய்து கொண்டிருக்க, "உன்னை சித்தார்த் அப்பவே கூப்பிட்டானே. நீ போ நாங்க பார்த்துக்கறோம்" என்று அவளை அனுப்பி வைத்தாள் சுபா.
"உட்கார் மது" என்றவன், பிரீப்கேஸிலிருந்து சில பேப்பர்ஸை எடுத்து, “இதைப் படிச்சிட்டுக் கையெழுத்து போடு" என்று பேனாவை அவளிடம் கொடுத்தான்.
படித்துப் பார்த்தவள், "எதுக்கு இதெல்லாம்?" என்றவளை கை உயர்த்தி, “நீ கையெழுத்து மட்டும் போடு" என்றான்.
தயக்கத்துடன், "அத்தை, மாமாவுக்குத் தெரியுமா? எதுக்காக இப்போது உங்க பேர்லயிருக்கற நம்ம கம்பெனி ஷேர்ஸ்ல பாதியை, என் பேர்ல மாத்தறீங்க? அதற்கு என்ன அவசியம்? ஜீவாண்ணாவும், ரமேஷ் அண்ணாவும் என்ன நினைப்பங்க?" என்றாள்.
புன்னகைத்தவன், "இது, புதுசா யோசிச்சது இல்ல மது! எப்போதோ முடிவு செய்தது. ரெண்டு பேர்கிட்டயும் பேசிட்டுத் தான் செய்றேன். அப்பா, அம்மாவிடம் சொல்லிவிட்டுத் தான் செய்றேன். நீ கையெழுத்துப் போடு" என்றதும் அரைமனதாக கையெழுத்திட்டாள்.
"கங்கிராஜூலேஷன்ஸ் மேடம்! இனி, நீங்களும் ஒன் ஆப் தி டைரக்டர் ஆப் ஸ்ருஷ்டி மல்ட்டிமீடியா" என்று கையை நீட்டினான்.
அவளும், சிறு தயக்கத்துடன் கையைக் கொடுத்தாள். “மது! இந்த பேப்பர்ஸ்லையும் சைன் பண்ணு. உன் பேர்ல தனியா பேங்க் அக்கௌன்ட், டீமாட் அக்கௌண்ட் ஆரம்பிக்கணும்"
"எனக்குத்தான் தனி அக்கௌன்ட் இருக்கே அப்புறம் இது எதற்கு?" என்றாள்.
“இது, நான் உனக்காகச் செய்வது. இந்தக் கவர்ல, ட்வென்டி தௌசன்ட் இருக்கு. இது இந்த மாசச் செலவுக்கு. உனக்கு ஏதாவது வாங்கணும்னு தோணினா வாங்கிக்க" என்று கொடுத்தான்.
மது மௌனமாக வாங்கிக் கொண்டாள். “இந்த மாசம் உன்கிட்ட கொடுத்துட்டேன். அடுத்த மாசத்துலயிருந்து அக்கௌண்ட்ல போட்டுடுறேன்" என்றான்.
சரி என்பது போலத் தலையை ஆட்டியவள், "அவ்வளவு தானே நான் கிளம்பட்டுமா?" என்றாள்.
"என்ன அவசரம்? இரு உன்னிடம் கொஞ்சம் பேசணும்" என்றான். கையிலிருந்த வளையல்களை அவள் மாற்றி மாற்றி எண்ணிக்கொண்டிருக்க, "திரும்பத் திரும்ப எத்தனை முறை அதையே எண்ணுவ? கொஞ்சம் நிமிர்ந்து எங்ககிட்டயும் பேசலாமே" என்றான்.
நிமிர்ந்து அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
கைகளை சோஃபாவின் பின்னால் நீட்டிக்கொண்டு அமர்ந்தவன், "உனக்கு இங்கே எல்லாம் சௌகர்யமா இருக்கா?" என்றான்.
"ம்ம், இருக்கே. எனக்கு இங்கே எந்தப் பிரச்சனையும் இல்ல" என்றாள்.
"ஆனா, என்னைப் பார்த்தா தான் பிரச்சனை இல்லையா!" என்றதும். “அதெல்லாம் ஒண்ணும் இல்ல" என்றாள்.
"அப்போ ஏன் எல்லோரிடமும் நல்லா பேசும் நீ, என்னிடம் மட்டும் விலகி விலகிப் போற?" என்று ஏக்கத்தோடு கேட்டதும், ஒன்றும் சொல்லத் தோன்றாமல் அமர்ந்திருந்தாள்.
"என்னை ஒரு ஃப்ரெண்டா கூடவா நினைக்கக் கூடாது. இல்ல, அதுக்குக் கூட நான் தகுதி இல்லாதவன் ஆகிட்டேனா?" என்று கேட்டதும் அவளுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.
சில நொடிகள் மௌனமாக இருந்தவள், "சாரி! உங்க மனசை நான் நோகடிச்சிருக்கேன். எனக்கே புரியுது. நானும் உங்ககிட்டச் சாதரணமாக பேசணும்னு தான் நினைக்கிறேன். ஆனா, முடியல" என்றவள், கலங்கிய விழிகளைக் கட்டுப்படுத்தினாள்.
"போனது போகட்டும். அன்னைக்குச் சொன்னது தான் இப்பவும் சொல்றேன். எனக்குத் தேவை உன்னோட மனசுல ஒரு இடம்” என்றவன், எழுந்து நின்றான்.
பின்னாலேயே எழுந்தவள், “சித்தார்த்! நீங்க இப்படி ஃபீல் பண்ணினா, எனக்குக் கஷ்டமா இருக்கு. நான் கொஞ்சங் கொஞ்சமா என்னை மாத்திக்க ட்ரை பண்றேன்” என்றாள் ஆத்மார்த்தமாக.
அவளை வியப்புடன் பார்த்தவன், “தேங்க்யூ ஹனி!” என்று அவன் நேசத்துடன் சொல்ல, முறுவலித்தாள்.
சந்தோஷத்துடன், "சரி, கிளம்பு. சுபாவுக்குக் கிப்ட் வாங்கணும்னு சொன்னியே, போய்ட்டு வந்திடலாம்" என்றான்.
"நீங்க இன்னைக்கு ஆபீஸ் போகலையா?" என்று கேட்டாள்.
“இல்ல. காலையிலேயே லீவ் சொல்லிட்டேன். சீக்கிரம் கிளம்பு. ஷாப்பிங் போய்ட்டு வந்து நாமதான் சுபாவை ஏர்போர்ட் கூட்டிட்டுப் போகணும்" என்றதும், விரைவாகத் தயாராகி இருவரும் மகிழ்ச்சியுடன் கிளம்பிச் செல்வதைப் பார்த்தவர்களுக்குச் சந்தோஷமாக இருந்தது.
ஆனால், இவ்வளவு தூரம் அமர்ந்து பேசியதெல்லாம், அன்று இரவே தலை கீழாக மாறப்போவதை இருவருமே உணரவில்லை.
கடைக்குச் சென்றவள், சுபாவுக்கு மட்டுமல்லாமல், குழந்தைகள் நால்வருக்கும் எடுத்தவள், நேத்ராவுக்கும் ஒரு அனார்கலி சுடிதாரை எடுத்தாள். அவள், சுபாவிற்குப் புடவை தேர்வு செய்துகொண்டிருந்த நேரத்தில், அவளுக்காக ரா சில்க்கில் ஒரு புடவை எடுத்துத் தனியாக வைத்தான்.
இருவரும் வீட்டிற்கு உள்ளே வரும்போது, "அம்மா நான் என்ன வனவாசமா போறேன்? பருப்புப் பொடி, தேங்காய் பொடி, எள்ளுப் பொடின்னு எல்லாத்தையும் செய்து கொடுத்து என்னை இம்சை பண்றீங்களே. இதெல்லாம் கிடைக்காத இடத்திலா இருக்கேன்? கடைக்குப் போனா எல்லாமே கிடைக்கும்" என்று அன்னையின் அன்பிற்கு தாழ் போடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாள் சுபாஷிணி.
"எல்லாம் கிடைக்கும். ஆனா, நாமளே தயார் செய்றது மாதிரி வருமா? இதுக்கு இன்னொரு பேர் பாசம்” என்று மீராவும், மாமியாருக்கு ஒத்து ஊத, “நான் எப்போ வந்து போனாலும் பாதி பிளைட் அடைக்கிற அளவுக்கு லகேஜ் சேர்ந்து போகுது" என்றாள் பெருமையும், தாங்கலுமாக.
உள்ளே வந்த சித்தார்த், “அப்போ இனி, நீ பேசஞ்சர் ஃப்ளைட்ல போகாதே. கார்கோல போ" என்று சொல்ல, "கொழுப்புடா உனக்கு. ஏன் பேசமாட்ட? கார்கோ பிளைட்ல போக நான் என்ன ஜடப்பொருளா?" என்று சீறினாள்.
சிரிப்பும், பேச்சுமாக ஒருவரை மாற்றி ஒருவர் கிண்டல் செய்து கொண்டிருக்க, புன்சிரிப்புடன் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். ‘சித்தார்த்! அலுவலகத்தில் ஒரு தலைமை அதிகாரியாக எப்படியிருக்க வேண்டுமோ அப்படியிருக்கிறான். வீட்டில் அனைவரிடமும் மரியாதை கொடுக்க வேண்டிய இடத்தில் மரியாதையாகவும்; யாரிடம் எப்படிப் பேசவேண்டுமோ அப்படி, ஒவ்வொருவருக்கும் தகுந்தார் போன்று பழகுவதைக் கடந்த பத்து நாட்களாகப் பார்த்துக்கொண்டிருக்கிறாளே!
அருந்ததியைத் தூக்கிக் கொஞ்சியபடியே திரும்பியவன், மது தன்னையே பார்ப்பதைக் கண்டதும் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டுகொண்டே, அவளைப் பார்த்து இரு புருவங்களையும் உயர்த்த, தடதடத்த இதயத்துடன் மாமியாரின் அருகில் சென்று அமர்ந்தாள்.
அங்கே அமர்ந்திருந்தவளின் பார்வை மீண்டும் மீண்டும் அவனிடம் சென்று வர, சித்தார்த்தின் உற்சாகத்திற்குக் கேட்கவா வேண்டும். அவளையே பார்த்துக் கொண்டு குழந்தையிடம் பேசுவதைப் போல ஜாடையாகப் பேசுவதும், கண்களைச் சிமிட்டுவதுமாக இருக்க, அவளுக்குத் தர்மசங்கடமாகப் போயிற்று. தன்னைத் திசை திருப்பிக் கொள்ள, வாங்கி வந்திருந்தவற்றை மாமியாரிடம் காண்பித்தாள்.
கடைசியாக நேத்ராவிற்கு எடுத்த அனார்கலி சுடிதாரை காண்பிக்க, "அண்ணி! எனக்கா? கலர் சூப்பரா இருக்கு. அண்ணினா அண்ணிதான்" என்று மதுவைச் சேர்த்தணைத்து கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டாள்.
"ஹேய்! என்ன இது?" என்று அவள் வெட்கத்துடன் சொல்ல, "அண்ணி அண்ணா எதிரில் இப்படி வெட்கப்பட்டுச் சிரிக்க மாட்டீங்களா? அங்கே பாருங்க அண்ணன் முகத்தில் எவ்வளவு ஏக்கம்?" என்றாள் யதார்த்தமாக.
"நேத்ரா! அத்தை காதுல விழப் போகுது சும்மா இரு?" என்று ரகசிய குரலில் சொன்னாள்.
"அண்ணி அப்படியே திரும்பிக் கொஞ்சம் அண்ணனைப் பாருங்களேன். பார்வையில் காதல் ரசம் சொட்டுது" என்றதும் மது சற்று எரிச்சலுடன், "நேத்ரா! என்ன இப்படியெல்லாம் பேசற?" என்று அதட்டலாகச் சொல்ல, நேத்ரா கொஞ்சம் அடங்கினாள்.
அதன்பிறகு மீரா, சுபாவுடன் பேசிச் சிரித்துக்கொண்டே திரும்பியவள், சித்தார்த்தின் காதல் பார்வையால், தன்னுள் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்வது போலத் தோன்ற, தலையைத் தாழ்த்திக்கொண்டாள்.
சித்தார்த்தின் மடியிலேயே குழந்தை உறங்கிவிட, சுபா பயணத்திற்கு தயார் செய்து கொண்டிருந்ததால், குழந்தையைத் தன்னுடைய அறைக்குக் கொண்டு சென்றான். அவனும் உடை மாற்றிக்கொண்டு படுத்தான். கண்களை மூடினால் அவளது வதனே மீண்டும் மீண்டும் கண்களுக்குள் தோன்றியது. கவனத்தைத் திசை திருப்ப வேலையில் ஈடுபடுத்திக் கொண்டான். அலுவலகத்திற்குப் போன் செய்து பேசினான். ஆனாலும், எண்ணம் முழுவதையும் ஆக்கிரமித்திருந்தவளை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
‘இன்று ஏன் இப்படி என்னை அலைகழிக்கிறாய் மது?’ என்று மனத்திற்குள் புலம்பியவன் அவளது போட்டோவைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
குழந்தையைத் தூக்கிச் செல்ல வந்த சுபா, தம்பியின் தவிப்பைக் கதவருகில் நின்று பார்த்தவள், வந்த சுவடு தெரியாமல் திரும்பிச் சென்றாள். அவள் வந்ததோ, சிறிதுநேரம் நின்று தன்னைக் கவனித்ததோ எதையும் அறியாமல், சித்தார்த் தன் எண்ணத்துடன் போராடிக் கொண்டிருந்தான்.
மதியம் மூன்று மணிக்கு அறைக்கு வந்த மதுமிதா, சித்தார்த் உறங்குவது தெரிந்தது. அவனருகில் திறந்திருந்த லேப்டாப்பை எடுத்து வைக்க அருகில் சென்ற போது தான், ஸ்கிரீன் சேவரில் தன்னுடைய போடோக்கள் மாறி மாறி வருவதைப் பார்த்தாள்.
அதில், பாவாடை தாவணியிலிருக்கும் படம் சிலதும் இருப்பதைக் கண்டாள். அவை தீபாவின் கல்யாணத்தில் எடுத்த புகைப்படங்கள் என்று புரிந்தது. ‘இது எப்படி இவனுக்குக் கிடைத்தது?’ என்று எண்ணியவள், ‘சுரேஷிடமிருந்து வாங்கி இருப்பான்’ என்று அவளே ஒரு தீர்மானமும் செய்து கொண்டாள்.
‘ஆனால், இந்தப் போட்டோக்களை நானே இத்தனை நாட்கள் பார்த்ததில்லையே’ என்று எண்ணிக்கொண்டே அவனருகில் சென்று, "என்னங்க, என்னங்க" என்று குரல் கொடுத்தாள். ஆனால், அவன் கண்ணைத் திறக்கவே இல்லை. அவளது குரல் அவளுக்கே கேட்காத போது அவனுக்கு எப்படிக் கேட்கும்? தயங்கியபடி அவனைத் தொட்டு அசைத்து, “என்னங்க! நேரம் ஆகுது எழுந்திருங்க" என்று சொல்ல, சித்தார்த் கண் விழித்தான்.
"நேரம் ஆகுது. அண்ணியை ஏர்போர்ட் கூட்டிட்டுப் போகணும்" என்றவள், குழந்தையுடன் அறையை விட்டு வெளியேறினாள்.
குழந்தையும் விழித்துவிட, கிளம்பத் தயார் செய்தாள் மதுமிதா. தயாராகி சுபாவின் அறைக்கு வந்தவன், அவளிடமிருந்து அருந்ததியை வாங்கிக்கொண்டவன், ஒரு ட்ராலி பேகை இழுத்துக்கொண்டு ஹாலுக்குச் சென்றான்.
“இந்த லகேஜையும் கொண்டு போகட்டுமா அண்ணி” என்றவளிடன், "ஆங்.. கொண்டு போகலாம்” என்றவள் தம்பி மனைவியின் கையைப் பற்றிக் கொண்டாள். மதுமிதா விழிகள் அகல, “என்ன அண்ணி?” என்றாள்.
“உன்கிட்ட சில விஷயங்கள் பேசணும். பேசலாமா?" என்று கேட்டாள்.
அவள் என்ன பேசப் போகிறாள் என்று மதுவும் அறிந்தே இருந்தாள். "இதென்ன கேள்வி? சொல்லுங்க " என்றாள்.
"நான் என்ன சொல்லப் போறேன்னு உனக்கும் புரிஞ்சிருக்கும். இருந்தாலும், நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிடுறேன். நீ தப்பா, உங்க விஷயத்துல தலையிடுவதா நினைக்காதே. ஏன்னா, இது உங்க ரெண்டு பேரோட வாழ்க்கை சம்மந்தபட்டது மட்டுமில்ல. ரெண்டு குடும்பத்தோட சந்தோஷம்" என்றாள்.
மதுமிதா மௌனமாக தலைகுனிந்து நின்றிருக்க, “கல்யாணமாகி இருபது, நாளைக்கு மேல ஆகுது. ஆனா, நீங்க ரெண்டு பேரும் சகஜமா பேசுறது கூடயில்ல, இல்லையா?" என்று சிறு தயக்கத்துடன் கேட்டாள் சுபா.
பதில் சொல்லும் தைரியம் அற்றவளாக, மதுமிதா நின்றிருந்தாள்.
"நீ எங்ககிட்ட பேசுறதுல பாதி கூடச் சித்தார்த்கிட்டப் பேசறதில்ல. உனக்குத் தெரியுமா! சித்தார்த்தை, இவ்வளவு பொறுமையானவனா நாங்க பார்த்ததே இல்ல. அதுக்காக, அவன் அவசரக்காரன் இல்ல. எல்லாத்திலேயும் யோசிச்சித் தான் முடிவெடுப்பான். அது சரியா இருந்தா, யாருக்காகவும் அவனோட முடிவை மாத்திக்கமாட்டான்.
ஆனா, உன் விஷயத்துல அவன் ரொம்பவே பொறுமையா இருக்கான். அவனையே அறியாமல் கூட, உன்னைக் காயப்படுத்திடக் கூடாதுன்னு நினைக்கிறான். அதுக்குக் காரணம், அவன் உன் மேல வச்சிருக்கற உண்மையான காதல் தான் மது!" என்ற சுபாவை நேருக்கு நேராகப் பார்த்தாள்.
“கல்யாணத்துக்கு முன்னால, உன்கிட்டச் சில சமயம் கொஞ்சம் கடுமையா பேசியிருக்கலாம். அதுக்குக் காரணமும், அவனோட காதல் தான். நீ வேலையை விட்டுப் போக அவன்தான் காரணம்னு சொன்னதும், அவனோட மனசு என்ன பாடுபட்டதுன்னு தெரியுமா உனக்கு? இனி, உன் வாழ்க்கையில வரமாட்டேன்னு உன்கிட்ட பேசிட்டு வந்த அன்னைக்கு, என்கிட்டச் சொல்லி ரொம்பவே கஷ்டப்பட்டான். நான் கூட, இப்படிப் பைத்தியக்காரத்தனமா பேசிவிட்டு வந்திருக்கிறாயேன்னு திட்டினேன். அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா?" என்று சொல்லி நிறுத்திவிட்டு மதுவைப் பார்த்தாள்.
‘அப்படி என்ன சொன்னான்?’ என்று அறிந்து கொள்ளும் ஆவல், அவள் கண்களில் தெரிந்தது.
"நான் அவளோட வாழ்க்கைலயிருந்து போனாதான் அவளுக்குச் சந்தோஷம்னா, என்னோட காதல் தான் அவளோட நிம்மதியைக் குலைக்குதுன்னா அப்படிப்பட்டக் காதல் எனக்குத் தேவையில்ல. மது என்னைக் கல்யாணம் செய்யாம இருந்தாலும், இல்ல நாளைக்கே மனசு மாறி வேற யாரையாவது கல்யாணம் செய்துகிட்டாலும், அவள் சந்தோஷமா இருந்தா எனக்கு அது போதும். அவளோட சந்தோஷத்தைப் பார்த்துட்டே நான் நிம்மதியா இருந்திடுவேன்னு சொன்னான்" என்று தழுதழுத்தாள்.
திகைப்பும், தவிப்புமாக மனம் அலைபாய, கண்கள் கண்ணீரைப் பொழிந்தன.
அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டவள், "நீ அழணும்ன்னு இதைச் சொல்லல. காதலிச்ச பொண்ணைக் கைக்கெட்டும் தூரத்துல வச்சிட்டு, கையைக் கட்டி வேடிக்கை பார்க்கறது எவ்வளவு அவஸ்தைன்னு உனக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்ல. இப்போதைக்கு, அவன் பொறுமையா இருக்கலாம். ஆனா, இதுவே இன்னும் கொஞ்ச நாள் தொடர்ந்தா, ஒரு அலுப்பு தட்டிடும். சலிப்பு வந்துட்டா வாழ்க்கையே வெறுத்துடும் மது!" என்றாள் ஆதூரத்துடன்.
சுபா, “அதுக்காக உன்னை உடனே, மாறணும்னு சொல்லலை. அவனோட உணர்வுகளை நீயும் கொஞ்சம் புரிஞ்சி நடக்க முயற்சி செய்ன்னு தான் சொல்றேம். நாம நினைச்சா முடியாதது ஒண்ணுமில்ல. நீயும் முயற்சி செய்றன்னு எங்களுக்கும் புரியுது. ஆனா, அவனைச் சில சமயம் பார்க்கும்போது ரொம்பக் கஷ்டமாக இருக்கு மது! நான் சொல்றதை அறிவுரையா எடுத்துக்காம ஒரு ஆலோசனையாக எடுத்துக்கோ மது. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும். அதுதான் எங்க எல்லோருடைய ஆசையும்" என்று அவளுடைய கையைப் பற்றிக்கொண்டு, “ரொம்பக் காலம் தாழ்த்திடாதே மது! நமக்காக நேரம் காத்துட்டு இருக்கறதில்ல. நான் கிளம்பறேன். நீயும், சித்தார்த்தும் அவசியம் வீட்டுக்கு வரணும்" என்றவள், அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினாள்.
சுபாவை ப்ளைட் ஏற்றிவிட்டு வரும்போது இருவரின் இடையேயும் கனத்த மௌனமே நிலவியது. வீட்டிலிருந்து கிளம்பும் போதே அவளைக் கவனித்தான். செவ்வரியோடிய விழிகள், அவள் அழுததைச் சொல்லாமலே அவனுக்கு உணர்த்தியது. சுபா, அவளிடம் ஏதோ பேசியிருக்கிறாள் என்று புரிந்து கொண்டான். இதே நிலையில் அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்றால், தனக்குள் முடங்கிக்கொள்வாள் என்று நினைத்து வண்டியை கொட்டிவாக்கத்திற்குச் செலுத்தினான்.
"மது! உங்க மாமா வீட்டிற்குப் போகப் போகிறோம். முகம் கொஞ்சம் டல்லா இருக்கு முகத்தைக் கழுவிக்கோ” என்றவன், வழியில் வண்டியை நிறுத்தி வீட்டிற்குச் ஸ்வீட், பூ என்று வாங்க, அதற்குள் மதுவும் முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தாள்.
வீட்டினருகில் காரை நிறுத்தியவுடன், அனைவரையும் பார்க்கும் ஆவலில், “அத்தை!" என்று உற்சாக குரல் கொடுத்தபடி செல்ல, "மதும்மா!" என்று அவளை எதிர்கொண்டு வந்த ராஜியைப் பிடித்து இரண்டு சுற்றுச் சுற்றினாள்.
"மது! எப்படிடா இருக்கே?" என்று ஆசையுடன் அவள் கன்னத்தை வருடியபடி கேட்க, சலுகையுடன் அவர் தோளில் சாய்ந்து கழுத்தைக் கட்டிக்கொண்டு, “போங்க அத்தை! என்னை எல்லோரும் மறந்துட்டீங்க. நான் வீட்டுக்குப் போன அன்னைக்கு மறுநாள் வந்ததோடு சரி. அம்மாவும், அப்பாவும் ரெண்டு நாளைக்கு முன்னால ஊருக்குப் போயிட்டு வரேன்னு சொல்லிக்க வந்தாங்க. போன் செய்து நாலு வார்த்தை பேசுவதோடு சரி. என்னை அனுப்பிட்டு நீங்க எல்லோரும் நிம்மதியாக இருக்கீங்க இல்ல?" என்று சிணுங்கலாகக் கேட்டாள்.
‘இதுவரை தன்னிடம் சாதரணமாகக் கூடச் சிரித்துப் பேசியதில்லையே’ என்ற எண்ணம் தோன்றினாலும், அவளது முகத்தில் தெரிந்தச் சந்தோஷத்தையும், புன்னகையையும் வாசற்படியில் சாய்ந்து நின்று ரசித்துக் கொண்டிருந்தான்.
"உன்னைப் போய் மறப்போமா? நீ இல்லாம, வீடே வெறிச்சின்னு இருக்குடா ராஜாத்தி!" என்று கன்னத்தைத் தடவியபடி நிமிர்ந்தவர், அப்போதுதான் சித்தார்த்தைக் கவனித்தார். "வாங்க வாங்க. உள்ளே வாங்க" என்று வரவேற்றார்.
"நான் நேராக உள்ளே வந்திருந்தா, இவ்வளவு நேரம் நடந்த கண்கொள்ளா காட்சியைப் பார்த்திருக்க முடியாதே" என்று மதுவைப் பார்த்துக்கொண்டே சொல்ல, அவள் உதட்டைக் கடித்தபடி ராஜியின் பின்னால் ஒட்டிக்கொண்டாள்.
"உட்காருங்க. ரெண்டு பேரும் பேசிட்டிருங்க. காஃபி கொண்டு வரேன்" என்று கிச்சனுக்குச் செல்ல, சித்தார்த்தின் பார்வை மதுவை அளவிட்டுக் கொண்டிருந்தது.
அவனது பார்வை வீச்சின் ஆளுமையில் அவஸ்தையுடன் நெளிந்தவள், "அத்தை! நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்” என்று ராஜியின் பின்னால் விரைந்தாள்.
சித்தார்த் சிரித்துக்கொண்டே, அங்கிருந்த மேகசினை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தான்.
ராஜியும், மதுவும் கிச்சனில் இருந்து பேசியது, அவனது காதுகளில் தெளிவாக விழுந்தது,
“மாமாவும், அத்தையும் என்னிடம் ரொம்பப் பிரியமா இருக்காங்க. மீரா அக்கா சொல்லவே வேண்டாம். ரொம்ப அட்ஜஸ்டபுல். பெரிய அத்தான் சைலென்ட். ஆனா, அவர் டைமிங் ஜோக் அடிக்கறதுல கில்லாடி. ரெண்டு குட்டீஸும் ரொம்பச் சமர்த்து. ஆர்த்தி மழலைல பேசினா, கேட்டுட்டே இருக்கலாம். அப்புறம், எங்க வீட்டு விஐபிஸ் ரெண்டு பேர் இருக்காங்க. அஷ்வந்த், நேத்ரா. குழந்தைங்க ரெண்டு பேரையும் கூடச் சமாளிச்சிடலாம். ஆனா, இவங்க ரெண்டு பேரையும் சமாளிக்கறது ரொம்பக் கஷ்டம்ன்னு அத்தை புலம்புவாங்க" என்று ஒவ்வொருவரைப் பற்றியும் விலாவாரியாக கூறிக்கொண்டிருந்தாள்.
சிரித்துக்கொண்டே அனைத்தையும் கேட்டுகொண்டிருந்த ராஜி, "மாப்பிள்ளையை ரூமுக்கு அழைச்சிட்டுப் போ. முகம் கழுவிக்கச் சொல்லிட்டு வந்து டிபனை எடுத்துட்டுப் போ. ரெண்டு பேரும் டின்னர் முடிச்சிட்டுத் தான் கிளம்பணும்" என்றார்.
"நாங்க இங்கே வர்றதை அத்தைகிட்டச் சொல்லலை. அவர்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுச் சொல்றேனே" என்றதும், அவளது பதிலில் மகிழ்ந்து போனார் ராஜி.
ஹாலுக்கு வந்தவள், "என்னங்க! நீங்க கொஞ்சம் ரெரெஷ் பண்ணிக்கோங்க" என்று தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றாள். முகம் கழுவிக்கொண்டு வந்தவனிடம் தன் ஷெல்பிலிருந்து டவலை எடுத்துக் கொடுத்தாள். "அத்தை! இன்னைக்கு நைட் இங்கேயே சாப்பிட்டுட்டுப் போகலாம்னு சொல்றாங்க. நீங்க என்ன சொல்றீங்க? நாம அத்தைகிட்ட இங்கே வருவதைச் சொல்லவே இல்லையே?" என்றாள்.
"அதனால் என்ன? போன் செய்து அம்மாகிட்டச் சொல்லிடறேன்” என்றான்.
அதை ராஜியிடமும் சொல்லிவிட்டு டிபனை எடுத்துக்கொண்டு மேலே வந்தவள், ஊஞ்சலில் அமர்ந்திருந்தவனிடம் கொடுத்தாள். இருவரும் சாப்பிட்டு முடிக்கும் வரை எதுவும் பேசவில்லை. பிளாஸ்க்கில் இருந்த காபியை ஊற்றிக் கொடுக்க, சித்தார்த் கைப்பிடிச் சுவரில் சாய்ந்து நின்று தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, ‘எங்கே திரும்பி விடுவானோ என்ற சஞ்சலத்துடன்’ தன்னை மீட்டுக்கொண்டாள்.
வானில் பௌர்ணமி நிலா பவனிவர தொடங்க அந்தி நேரம். ‘இரு மாதங்களுக்கு முன் வந்த பௌர்ணமி, தன் வாழ்வை அமாவாசையாக ஆகிவிட்டதோ! என்று எண்ணி எண்ணி மருகிய அதே பௌர்ணமியில் இன்று, தன் உரிமையாக இருப்பதை நினைத்துப் புன்னகைத்துக் கொண்டான். திரும்பி வந்தவன், அவளை நெருங்கி அமர்ந்தான். அவளுக்குத் திக்திக் கென்றது.
"அப்புறம், சொல்லு மது!" என்று அவளது முகத்தைப் பார்த்துக் கேட்டதும், "ம்ம்... என்...ன. சொல்லணும்?" என்று கேட்டுக்கொண்டே அவன் புறமாகத் திரும்பியவள், அவனை இத்தனை நெருக்கத்தில் பார்த்ததும், ஒரு கணம் தடுமாறினாள்.
சட்டென தலையைக் கவிழ்ந்து கொண்டவள், "நான் இதையெல்லாம் கொண்டு போய் வச்சிட்டு வரேன்" என்று எழுந்தவளின் கையைப் பற்றி அமரவைத்தவன், “அதெல்லாம் அப்புறம் கொண்டு போகலாம். உட்கார்" என்றான்.
மீறமுடியாமல் அமர்ந்தவளை, இடது கையால் வளைத்தான். மதுவின் இதயம், பந்தயக் குதிரையின் வேகத்திற்கு ஓடியது. ஒருபக்கம், அனைவரின் அறிவுரை; மறுபக்கம் அவனது அன்பிலும், அரவணைப்பிலும் கொஞ்சம் கொஞ்சமாக அவன் அன்பில் தோற்றுக் கொண்டிருக்கிறோமோ! என்ற எண்ணம் அவளைக் கலவையாகக் குழப்பிக் கொண்டிருந்தது.
தன்னைச் சமாளித்தபடி இருக்க முயன்றும் முடியாமல், "ப்ளீஸ்! யாராவது பார்க்கப் போறாங்க" என்று நிமிர்ந்து பாராமலே சொன்னாள்.
அவள் கையைப் பற்றி அறைக்கு அழைத்துச் சென்றவன், முதல் வேலையாக கதவைத் தாளிட்டான். அவள் கலவரத்துடன், அவனுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு நின்றாள். அவனது மூச்சுக்காற்றின் வெப்பம், அவனது நெருக்கத்தை உணர்த்த, பயத்துடன் கண்களை மூடிக்கொண்டாள்.
சித்தார்த்தின் கரங்கள் மாலையென பின்னாலிருந்து தழுவிக்கொள்ள, அந்த அணைப்பை ஏற்கவும் முடியாமல், விலக்கவும் முடியாமல் தனக்குள் தவித்தாள். அவளது நிராகரிப்பற்ற அந்த மௌனமே, அவனுக்குப் போதுமானதாக இருந்தது. அவனது அணைப்பு மேலும் இறுக, அவளது கழுத்தில் முத்தமிட, இதயம் படபடக்க, கால்கள் துவள அருகிலிருந்த கட்டிலைப் பிடித்துக்கொண்டாள்.
அவனது உதடுகள் மேலும் முன்னேறி காதுமடல்களைச் ஸ்பரிசிக்க, “சித்தார்த்!” என்றவளது குரல் வெறும் உதட்டசைவாக வெளிவந்தது. அவனது காதல் படிதாண்டும் முன், அவனது கைப்பேசி அழைக்க, சட்டென்று கனவுலகிலிருந்து தன்னை மீட்டுக் கொண்டான்.
நினைவிற்கு வந்தவனுக்கு, ‘தன்னை மீறி, இப்படி நடந்து கொண்டோமே’ என்ற எண்ணம் தோன்ற, அவளைப் பரிதவிப்புடன் பார்த்தான். நடந்தது நிஜமா; கனவா? என்று புரியாமல், இனம் புரியாத உணர்வில் மனம் தத்தளிக்க, ‘இப்போதைக்கு அந்த இடத்தை விட்டுச் சென்றால் போதும்’ என்ற முடிவுடன், வெளியே சென்றாள்.
ராஜி, கணவருக்குப் போன் செய்து பேசிக்கொண்டிருக்க, அவனது ஸ்பரிசத்தை மறுக்கவும் முடியாமல்; ஏற்கவும் இயலாமல் உள்ளுக்குள் குழம்பியவாறு ஹாலில் அமர்ந்தாள்.
சற்று நேரத்திற்கெல்லாம், "ஏய் அல்லிராணி! எப்போ வந்த? எப்படியிருக்கே?” என்று சிரித்துக்கொண்டே வந்த தீபக் மதுவின் பக்கத்தில் அமர்ந்தான்.
புன்னகைத்தவள், “ஹாய் அத்தான்! நான் நல்லயிருக்கேன். நீங்க எப்படியிருக்கீங்க?" என்றாள்.
"ஹ்ம்ம்...” என்றவன், “எங்கே உன்னோட ஹீரோ ஆளைக் காணோம்?"
"மேலே ரூம்ல போன் பேசிட்டு இருக்கார்" என்றாள்.
“அவரைத் தனியா ரூம்ல விட்டுட்டு, நீ என்ன பண்ற இங்கே?" என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, சித்தார்த் இறங்கி வந்தான்.
இருவரும் பேசிக்கொண்டிருக்க, மது தீபக்கிற்கு டிபனும், காபியும் கொண்டுவந்து கொடுத்தாள்.
இருவரும் பேசிகொண்டிருக்க, மது ராஜிக்கு உதவியாக கிச்சனில் நின்றிருந்தாள். சற்றுநேரத்தில் ஒருவர் பின் ஒருவராக வெளியே சென்றிருந்த வித்யாவும், மேகலாவும் வர, சற்றுநேரத்தில் ராஜேஷ் அலுவலகத்திலிருந்தும், ஈஸ்வரன் கல்லூரியிலிருந்தும் வந்து சேர்ந்தனர்.
அனைவரும் சேர்ந்து கதைகள் பேசிக்கொண்டும், ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொண்டும் இருக்க, மதுவும் சற்றுநேரத்தில் சகஜமானாள்.
இரவு உணவுக்குப் பின், "வாங்களேன் இன்னைக்குப் பௌர்ணமி. பீச்ல ஒரு வாக் போயிட்டு வரலாம்" என்றான் ராஜேஷ்.
ஈஸ்வரன், “என்னையும், என் மனைவியையும் தொல்லை பண்ணாம எங்களுக்குத் தனிமை கொடுத்துட்டு, நீங்க எல்லோரும் முதலில் இடத்தைக் காலி பண்ணுங்க" என்று சொல்ல, "அப்பா நீங்க வரலன்னு சொல்றதுக்கு இவ்வளவு பில்டப்பா" என்று தீபக் சிரித்தான்.
மூன்று ஜோடிகளும் பீச்சில் சிறிது தூரம் நடந்தனர். பின்னர், “எங்களுக்குக் கொஞ்சம் தனிமை வேணும். நாங்க தனியா பௌர்ணமியை ரசிக்கப் போறோம்” என்று, மது சித்தார்த்திற்குத் தனிமை கொடுத்து ராஜேஷும், தீபக்கும் வேறு வேறு திசையில் தங்கள் மனைவிகளுடன் சென்றனர்.
சில நொடிகள் எதுவும் பேசாமல் இருவரும் மௌனமாய் அமர்ந்திருக்க, அவளை நெருங்கி அமர்ந்தான். மாலையில் நடந்தவை நினைவிற்கு வந்தபோதும், விலகாமல் அமர்ந்திருந்தாள்.
"ஏன் மது? ராஜி சித்திகிட்ட, நம்ம வீட்டில இருக்கவங்க எல்லோரை பத்தியும் சொன்ன. ஆனால், என்னைப் பற்றி ஒண்ணுமே சொல்லலையே?" என்று ஏக்கத்துடன் கேட்டான்.
‘அப்போதுதான், அவனைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை’ என்று உணர்ந்து, "எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. அதான்...” என்றாள்.
"ஹ்ம்ம்.... உனக்கு ஒண்ணு தெரியுமா! நமக்கு ரொம்பப் பிடிச்சவங்களைப் பத்திக் கூடச் சிலசமயம் சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லாதது போலத் தோணுமாம். அது நிஜமா மது..." என்று கேட்டுக்கொண்டே, அவளது கையை எடுத்து தன் கைகளில் வைத்துக்கொண்டு, “ஏய் மது.... என்ன இப்படி உன் கை ஜில்லுன்னு இருக்கு" என்று சொல்லிக்கொண்டே அவளது கையில் முத்தமிட, மது கையை உருவிக் கொள்ள முயல, அவன் விடாமல் மற்றொரு கையில் முத்தமிட, "சித்தூ... ப்ளீஸ்... இது பப்ளிக் பிளேஸ்” என்று குரலே எழும்பாமல் சொல்ல,
அவள் முதன்முறையாக, தன்னைச் சித்தூ என்று அழைத்ததைக் குறித்துக்கொண்டான். உள்ளுக்குள் மலர்ந்த புன்னகையுடன், "அப்போ, நம்ம ப்ரைவசி போகாத நம்ம ரூமா இருந்தா ஓகேவா" என்று தாபத்துடன் அவள் காதருகில் கேட்க, அவள் எதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள். அவளது மௌனத்தையே சம்மதமாகக் கொண்டு, "தேங்க்ஸ் மது!" என்றவன் சட்டென அவளது கன்னத்தில் இதழ் பதித்தான்.
அந்த மென்மையான இதழ் ஒற்றலை, கண்களை மூடி சிறு முறுவலுடன் ஏற்றுக்கொண்டாள்.
சிறிது தூரத்தில் ராஜேஷ் வருவது தெரிந்ததும், "மது! கிளம்பலாமா. ராஜேஷ் வந்துட்டான்" என்றதும் , அவனை நிமிர்ந்து பார்க்காமலேயே , “ம்ம்.." என்றாள்.
எழுந்தவன், அவளுக்காகக் கையை நீட்ட, அவளும் மறுக்காமல் கையைப் பற்றிக்கொண்டு எழுந்தாள். பற்றிய கரத்தை விடாமல் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பும் நேரம், “அத்தை! அம்மாவும், அப்பாவும் என்னைக்கு ஊர்லயிருந்து வராங்க?" என்றாள். "இன்னும் 4 நாள் ஆகும் மது" என்றார் ராஜி.
"சரி அத்தை! நாங்க கிளம்புகிறோம். வீட்டுக்கு வாங்க” என்று சொல்லிக்கொண்டு கிளம்ப, “இரு மது! குங்குமம் எடுத்துக்கோ” என்றவர், “திரும்பு இந்தப் பூவை வச்சிக்க” என்று சொல்லி அவள் தலையில் சூட்டினார்.
மீதமிருந்த பூவை எடுத்தவள், “அம்மா, அப்பா படத்துக்கு வச்சிட்டு வரேன்” என்று பூஜையறைக்கு ஓடினாள்.
தன் பெற்றோரின் படத்திற்குச் சூட்டும் வரை, எந்தச் சலனமும் இல்லாமல் இருந்தவளின் கண்களில் பூவை வைத்துவிட்டுத் திரும்பும் நேரம் அர்ஜுனின் புகைப்படத்தில் அவளது பார்வை நிலைத்தது. மலரத் துடித்துக்கொண்டிருந்த இதயத்தின் உணர்வுகள் எல்லாம் இப்போது மறத்துப் போனது.
விழிகள் ஈரமாக, ‘கடவுளே! இதை நான் எப்படி மறந்தேன்?’ என்று தவிப்புடன் சுவற்றில் சாய்ந்து நின்றுவிட்டாள். தான் ஏன் இப்போது பூஜையறைக்கு வர வேண்டும் என்று தன்னையே நொந்து கொண்டாள்.
வெளியே சித்தார்த்தின் சிரிப்புச் சப்தம் கேட்க, அவளது இதயத்தைக் குத்திக் கிழிப்பது போலயிருந்தது. ‘கடவுளே! என்னை இப்படி ஒரு இக்கட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டாயே?’ என்று கலங்கியவளை, "மது! இன்னும் என்னம்மா செய்ற? நேரமாகுது பார்" என்ற ஈஸ்வரின் குரலுக்கு, தன்னைச் சற்று நிலைபடுத்திக் கொண்டு வந்தவள், வலிய வரவழைத்த புன்னகையுடன் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினாள்.
சித்தார்த் இருந்த சந்தோஷ மனநிலையில், அவளது முகமாறுதலைச் சரியாகக் கவனிக்கவில்லை. மது, தன் பார்வை முழுவதையும் சாலையில் பதித்திருந்தாலும், மனம் முழுவதும் குழப்பத்திலேயே உழன்றது.
போர்ட்டிக்கோவில் காரை நிறுத்தும்போதே, "ஹனி! உனக்கு வெறும் பத்து நிமிஷம் தான் டைம். அதுக்குள்ள எல்லோரையும் பேசிச் சமாளிச்சிட்டு மேல வர்ற” என்றதும், “சித்தார்த்...” என்று பலகீனமான குரலில் அவள் அழைக்க, “எந்த சாக்குபோக்கும் கிடையாது. வர்ற” என்றவன் உள்ளே சென்றுவிட, செய்வதறியாமல் தவிப்புடன் நின்றாள்.
சித்தார்த், அன்னையிடம் பேசிவிட்டு அறைக்குச் செல்லும் முன், ‘சீக்கிரம் வா’ என்று கண்களால் ஜாடை செய்துவிட்டுச் செல்ல, அவளது நிலை இருதலைக்கொள்ளி எறும்பை ஒத்திருந்தது.
தேவகியிடம் சற்று நேரம் அவள் பேசிக்கொண்டிருக்க, மீரா அவளிடம் இரு பால் டம்ளர்களைக் கொடுட்தாள்.
“நீ போம்மா!” என்று தேவகியே அனுப்பி வைக்க, பேசும் திறனற்றவளைப் போல, தலையை ஆட்டிவிட்டு எழுந்து சென்றாள்.
அவள் வருவதற்குள் குளித்துவிட்டு வந்த சித்தார்த், கதவைத் திறக்கும் ஓசை கேட்டதும் ஒளிந்து நின்றான். கணவனைக் காணாமல் அவள் பார்வையைச் சுழற்ற, பின்னாலிருந்து அணைத்தவன், “ஐ லவ் யுடா ஹனி" என்றான்.
அவன் பின்னாலிருந்து அணைத்ததுமே கண்களை அழுந்த மூடி, கையிலிருந்த ட்ரேவை இறுகப் பற்றிக்கொண்டாள். “உங்களுக்குப் பால் கொண்டு வந்திருக்கேன். குடிச்சிடுங்க. அப்புறம் ஆறிடும்" என்று திக்கித் திணறிச் சொல்ல, "பால் மட்டுமா சூடாயிருக்கு?" என்று தாபத்துடன் சொன்னவனுக்கு, காலையில் எடுத்து வந்த புடவை நினைவிற்கு வந்தது.
"மது! உன் ஷெல்ஃப்ல ஒரு கவர் இருக்கு. அதை எடுத்துட்டு வா" என்றபடி அவளிடமிருந்து டம்ளர்கள் இருந்த ட்ரேயை வாங்கிக் கொண்டான்.
அவளும் கொண்டுவர, "பிரிச்சிப் பாரு" என்றான்.
எடுக்கும்போதே, அது புடவை என்று புரிந்தது. “பாரு மது" என்று மீண்டும் சொல்ல, மெல்லக் கவரை பிரித்தவள், உள்ளிருந்த புடவையைப் பார்த்ததும் முகம் வெளிற, கண்கள் மளமளவென கண்ணீரைப் பொழிந்தன.
அவளுக்குப் பின்னால் நின்றிருந்தவனால், அவளது முகபாவத்தை அறிய முடியவில்லை. பார்த்திருந்தால் அதன்பிறகு ஏற்படவிருந்த மன வருத்தம் அதிகமாகாமல் தடுத்திருப்பான். ஆனால்!
அருகில் வந்தவன், “என்ன மேடம்? எப்படியிருக்குன்னு சொல்லவே இல்லையே?" என்று கேட்க. அவள் காதில் அர்ஜுன் அன்று கேட்டது போலவே கேட்கவும் அதுவும் அர்ஜுன் முதன்முதலாக ஆசையுடன் வாங்கிக் கொடுத்த அதே தேன் நிறத்தில் இருக்கவும், மதுவின் கோபத்தை அதிகபடுத்த அந்த ஒன்றே போதுமானதாக இருந்தது.
நடுங்கும் விரல்களால் அந்தப் புடவையைக் கையில் எடுத்தவள், சித்தார்த்தின் புறமாகத் திரும்பி அவனையும், புடவையும் மாறி மாறிப் பார்த்தாள். அவனது புன்னகை நிறைந்த முகத்தைப் பார்த்ததும், என்ன செய்கிறோம் என்று உணரும் முன்பே, ஆத்திரத்துடன் புடவையை சித்தார்த்தின் முகத்திலேயே விட்டெறிந்தாள்.
அடுத்த நொடியே வெறி பிடித்தவள் போல, "யாரைக் கேட்டு இப்போ புடவை வாங்கிட்டு வந்தீங்க? நானா உங்களைக் கேட்டேன்? ஓஹ்! புடவை வாங்கிக் கொடுத்து, பேங்க் அக்கௌன்ட் ஆரம்பிச்சு கம்பெனில பாட்னர் ஆக்கிட்டா, உங்க இஷ்டப்படி ஆடுவேன்னு நினைச்சீங்களா? இல்ல, இதெல்லாம் செய்தா நான் உங்ககிட்ட மயங்கி உங்க காலடியில் விழுந்திடுவேன்னு நினைச்சீங்களா?" என்று ஆத்திரத்துடன் கத்தினாள்.
அவளது செய்கையில் அதிர்ந்து போனவன், அவளது வார்த்தைகளைக் கேட்டதும் ஆத்திரத்துடன், “ஏய்... என்ன பேசறோம்னு புரிஞ்சு பேசறியா இல்லையா? அப்படியே, ஒரு அறைவிட்டா எப்படியிருக்கும் தெரியுமா? நான் எதுக்குடி உன்னை மயக்கணும்? நீ, என் பொண்டாட்டி. உன்கிட்ட, எனக்கில்லாத உரிமை வேற யாருக்கு இருக்கு? நானும் முடிஞ்ச அளவுக்குப் பொறுமையா இருக்கேன். நீ என்னடான்னா என்னையே இவ்வளவு கேவலமா பேசற. ஒரு புடவை ஆசையா வாங்கிக் கொடுத்தா, அதுக்கு இப்படித் தான் பேசுவியா? நீ யாரையும் எதிர்பார்க்கக் கூடாதுன்னு நினைச்சித் தானே உனக்குப் பேங்க் அக்கௌன்ட் ஆரம்பிச்சிக் கொடுத்தேன்" என்று சித்தார்த்தும் பதிலுக்குச் சப்தம் போட, அன்று முழுவதும் இருந்த ஒரு நூலிழை அன்பும், முற்றிலுமாக அறுந்து விழுந்தது.
அவனது வார்த்தைகளில் இருந்த உண்மையை, அவள் உணர்ந்திருந்த போதும், "என்னை வெறுப்பேத்தத் தானே இந்தக் கலர்ல புடவை வாங்கிக் கொடுத்தீங்க" என்று கண்ணீர் உகுத்தவளைப் பரிதாபமாகப் பார்த்தான்.
"ஏதாவது உளறாதடி! நான் எதுக்கு உன்னை வெறுப்பேத்தணும்? ராஜேஷ் கல்யாணத்துல இந்தக் கலர்ல நீ புடவை கட்டியிருந்ததைப் பார்த்தேன். உனக்கு ரொம்பப் பொருத்தமா இருந்தது. அதான், கடைல அந்தக் கலர்ல பார்த்தும் ஆசையா வாங்கிட்டு வந்தேன். அதுக்கு என்னவெல்லாம் பேசற. என்னைப் பார்த்தா உனக்கு எப்படித் தோணுது? சே..." என்று தலையை அழுந்தக் கோதிக்கொண்டு கோபத்துடன் கார் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டான்.
அவளும் அழுதுக்கொண்டே தரையில் அமர்ந்தாள். பீச்சில் காரை நிறுத்திவிட்டு ஸ்டியரிங் வீலின் மீது கவிழ்ந்து கொண்டான். ‘தன் வாழ்க்கையில், என்றுமே அமாவாசைதானா!’ என்று அவனது இதயம் கேள்வி கேட்டது. குளிர்ந்த காற்றும், அமைதியும் அவனது மனத்தைச் சற்று இளக்க, நடந்தவைகளைப் பொறுமையாக யோசித்தான். ‘அவளது இந்த எதிர்பாராத் ஆக்ரோஷத்திற்கு ஏதாவது உள்ளர்த்தம் இருக்குமோ?’ என்று எண்ணினான்.
சித்தார்த் வெளியே சென்று இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது. சற்றுநேரம் அழுதுகொண்டிருந்தவள், தனது வார்த்தையின் வீரியம் அவனை எந்த அளவிற்குத் தாக்கியிருக்கும் என்று உணர்ந்தவளுக்கு, தன்னை நினைத்தே எரிச்சலாக வந்தது.
‘கோபமாகச் சென்றானே... எங்கே சென்றானோ?’ என்ற கவலையுடன் அறைக்குள்ளேயே உலவிக் கொண்டிருந்தாள். வெளியே கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டதும் மனத்தில் சிறு நிம்மதி பரவ, வேகமாக வந்து பெட்ஷீட்டை இழுத்து மூடிக்கொண்டு படுத்துக்கொண்டாள்.
அறைக்குள் வந்தவன் கட்டிலின் அருகிலிருந்த டேபிள் மேலே புடவை மடித்து வைக்கபட்டிருந்தது. திரும்பி அவளைப் பார்த்தான். அவள் முகத்தைப் பார்க்காவிட்டாலும், அவள் இன்னும் உறங்கவில்லை என்று அறிந்து கொண்டவன், எதுவும் சொல்லாமல் படுத்துக்கொண்டான்.
நாளுக்கு நாள் மனத்தில் கேள்விகள் மட்டும் பெருகிக் கொண்டே இருந்தன. அதற்கான விடைகள் காலத்தின் கைகளில் இருந்தன.
சித்தார்த், திருமணம் முடிந்து இருபது நாட்களுக்குப் பிறகு, அன்றுதான் அலுவலகம் சென்றான். இருவரின் வாழ்வும், தாமரை இலை தண்ணீர் போல, ஒன்றோடு ஒன்று ஒட்டாமலே சென்று கொண்டிருந்தது. அன்றைய நிகழ்வுக்குப் பிறகு, சித்தார்த்திடம் தன் குறும்புத்தனத்தைக் காட்டாமல் இருந்தாள்.
ஆனால், சித்தார்த்தோ நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவளைச் சீண்டிக்கொண்டே இருந்தான். அந்தநேரம் அவனிடம் முகம் திருப்பினாலும், அதை நினைத்துச் சில சமயம் தனிமையில் சிரித்துக் கொள்வாள்.
இடைப்பட்ட நாட்களில் சித்தார்த்தைத் தவிர, வீட்டில் அனைவரிடமும் நன்கு ஒட்டிக்கொண்டாள். மறுநாள் சுபா டெல்லி கிளம்ப வேண்டும். அவளுக்கும், குழந்தைகளுக்கும், ஏதாவது நல்ல கிப்ட் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தாள்.
அலுவலகம் செல்லக் கிளம்பி வந்த சித்தார்த், டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தான். மது அவனுக்கு காலை உணவைப் பரிமாறிவிட்டு தேவகியின் அருகில் சென்றாள்.
"அத்தை!" என்று மெல்ல அழைத்தவளை, "என்ன மது?" என்றார்.
"சுபா அண்ணிக்கு, ஏதாவது நல்ல கிப்டா வாங்கலாம்னு இருக்கேன். வரீங்களா ஈவ்னிங், நாம கடைக்குப் போய்ட்டு வரலாம்?" என்றாள்.
"ஏன்மா? சித்தார்த் கூடப் போயேன். நீயும் வந்து பத்து நாள் ஆச்சு. ரெண்டு பேரும் எங்கேயும் போகவே இல்லையே. இன்னைக்குச் ஷாப்பிங் போயிட்டு அப்படியே வெளியே சாப்டுட்டு வாங்க" என்றார்.
‘நான் எப்படி அவரைக் கூப்பிடுவது?’ என்று நினைத்தபடி தயங்கி நின்றவளைப் பார்த்த மீரா, "என்ன மது யோசனை?" என்றாள்.
“இல்லக்கா! இன்னிக்குத்தான் அவர் ஆபீஸ் போறார். வேலை இருக்கும். நான் எப்படி அவரைச் சீக்கிரம் வரச்சொல்றது?" என்று கேட்டதும் சிரித்த மீரா, "நீ சொல்லு. சித்தார்த் சரியா நேரத்துக்கு வந்து நிற்கிறாரா இல்லையான்னு பாரு" என்று சொல்லிச் சிரித்தாள்.
அதற்குள் சித்தார்த் சாப்பிட்டு முடித்து, கிளம்பச் ஷூ போட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்தவள் அவனருகில் சென்றாள்.
சித்தார்த் என்ன என்பது போல பார்க்க, “இன்னைக்கு ஈவ்னிங் கொஞ்சம் சீக்கிரம் வரீங்களா?" என்றதும் ஆச்சரியத்துடன், “என்ன இன்னைக்கு ஏதாவது விசேஷமா ட்ரை பண்ணப் போறியா? காஃபில உப்பு, சர்க்கரைக்குப் பதிலா வேற ஏதாவது..." என்று கேட்டதும், கடுப்புடன் அவனைப் பார்த்தாள்.
அதே கோபத்தோடு உள்ளே செல்லத் திரும்பியவளை, “ஏய் மது! நில்லுடா" என்று அவள் கையைப் பிடிக்க, "விடுங்க, உங்ககிட்டப் போய்ப் பேச வந்தேன் பாருங்க" என்றாள் கோபத்தோடு.
"மது! அம்மா நின்னு நம்மளையே பார்க்கறாங்க. முகத்தை இப்படிக் கடுகடுன்னு வச்சிட்டுப் பேசாதே! கொஞ்சம் சிரிச்சா மாதிரி பேசு" என்றான்.
அவளும், ‘தாங்கள் இருவரும் இயல்பாக பேசுவது கூட இல்லை என்பதை, எதற்கு அனைவருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்ட், அவர்களது நிம்மதியைக் குலைக்க வேண்டும்’ என்ற எண்ணத்தோடு, சிரித்தபடி, “இன்னைக்குச் சீக்கிரம் வந்தா, போய் சுபா அண்ணிக்கு ஏதாவது நல்ல கிப்ட் வாங்கிட்டு வரலாம்" என்றாள்.
"சரி, முடிஞ்ச அளவுக்குச் சீக்கிரம் வரப் பார்க்கறேன்" என்றவன் அங்கிருந்த ரோஜா செடியிலிருந்து ஒரு பூவைப் பறித்து அவளது கூந்தலில் சொருகியவன், அவளது கன்னத்தைத் தட்டிவிட்டுக் காரில் ஏறினான்.
அவன் கிளம்பிச் சென்றதும் கன்னத்தைத் தடவியபடி, வீட்டின் உள்ளே செல்லத் திரும்பியவளுக்கு, அவர்கள் நின்று பேசிக்கொண்டிருந்த இடத்தை வீட்டின் உள்ளே இருந்து பார்த்தால் ஒன்றும் தெரியாது என்பது அப்போதுதான் புரிந்தது.
‘தன்னிடம் இப்படிப் பேசத் தான், அத்தை உள்ளேயிருந்து பார்ப்பதாகப் பொய் சொன்னான்’ என்று உணர்ந்தவள், எரிச்சலுடன் தலையில் வைத்த ரோஜாவை எடுத்து கீழே எறிய நினைத்தவளுக்கு, என்ன தோன்றியதோ மீண்டும் கூந்தலிலே வைத்துக்கொண்டாள்.
சித்தார்த் அலுவலகத்தின் உள்ளே நுழைந்த சிறிது நேரத்திற்கெல்லாம், ஜீவாவும், ரமேஷும், ஒருவர் பின்னால் ஒருவராக அவனுடைய அறைக்கு வந்தனர்.
ரமேஷ், “என்னடா புது மாப்பிள்ளை எப்படியிருக்க?" என்று கேட்டபடி வந்தவனைப் பார்த்த சித்தார்த் புன்னகையுடன், “ஜம்முன்னு இருக்கேன்?" என்றான்.
சித்தார்த்தின் முகத்தில் இருந்த சந்தோஷத்தைப் பார்த்த ஜீவா, “நீங்க ரெண்டு பேரும் கல்யாணத்தில் இருந்த நிலையைப் பார்த்து, என்ன நடக்குமோ; எது நடக்குமோன்னு பயந்துட்டே இருந்தேன்டா. நீ சந்தோஷமா இருந்தா அது போதும்! என்று சிரித்தான்.
“மது எப்படியிருக்கா? உங்க ரெண்டு பேரையும் அம்மா வீட்டுக்குக் கூப்பிடணும்னு சொல்லிட்டிருந்தாங்க. நான்தான் கொஞ்ச நாள் ஆகட்டும்ன்னு சொன்னேன்” என்ற ரமேஷ் தயங்கியபடி, “சித்தார்த்! மது உன்கிட்ட நல்லபடியாக நடந்துக்கறாளா?" என்று கேட்டான் அக்கறையுடன்.
புன்னகைத்த சித்தார்த், “எதுக்கு இவ்வளவு சந்தேகம்?" என்றவன், காபியில் உப்பைப் போட்டுக் கொடுத்தது முதல், தக்காளி சட்னியில் மிளகாய்த் தூளைக் கொட்டிக் கொடுத்தது வரை சொல்லிவிட்டுச் சிரிக்க, ரமேஷும் இணைத்து சிரித்தான்.
ஜீவா மட்டும் எதுவும் சொல்லாமல் அமர்ந்திருப்பதைப் பார்த்த சித்தார்த், "என்னடா சைலண்டா இருக்க? அம்மாகூட எங்கே உன்னை இந்தப் பக்கம் காணோம்னு கேட்டாங்க. சண்டே லஞ்ச் நம்ம வீட்ல சாப்பிடுவது போல வாங்கடா..." என்றதும், அதை கேட்ட ஜீவாவின் முகம், இன்னதென்று சொல்ல முடியாமல் பல பாவத்தை வெளிப்படுத்தியது.
"உனக்குத்தான் தலையெழுத்து, மாட்டிக்கிட்டு முழிக்கணும்னு இருக்கு. நாங்க என்னடா பாவம் செய்தோம்? எங்களையும் நடுவுல இழுத்து விடுற. நான் வேற அடிக்கடி உங்க வீட்டுக்குச் சாப்பிட வருவேன். போதாக்குறைக்கு மதிய சாப்பாடு எனக்கும் சேர்த்து இத்தனை நாள் உங்க வீட்லயிருந்து தான் வந்தது. இவனுக்கு எதுக்குத் தண்டமா இங்கேயிருந்து சாப்பாடு போகணுங்கற ஆத்திரத்திலோ, இல்ல உன் மேலயிருக்கும் கோபத்திலோ சாப்பாட்டில் ஏதோ செய்யப் போய் அதில் நான் மாட்டிக்கவா? எங்க அம்மாவுக்கு, நான் ஒரே பையன்டா. என்னைப் பார்த்தா பாவமா இல்லையா? தயவுசெய்து என்னை விட்டுடுங்கடா. நான் இந்த விளையாட்டுக்கு வரலடா சாமி!" என்று பெரிதாக ஒரு கும்பிடு போட, நண்பர்கள் இருவரும் வாய்விட்டு நகைத்தனர்.
"சிரிங்கடா சிரிங்க. ஏற்கெனவே மயிரிழையில் உயிர் தப்பினவன் நான். அந்த பயம் எனக்குத்தானே தெரியும்." என்றதும் மேலும் இருவரின் சிரிப்பும் அதிகரித்தது.
சித்தார்த்தின் தோளை தட்டிய ரமேஷ், "சித்தார்த், அவளைத் திரும்பக் குறும்புக்கார மதுவாக பார்க்கச் சந்தோஷமாக இருக்குடா!" என்று சந்தோஷத்துடன் சொன்னான்.
"தேங்க்யூடா” என்றவன், “நான் ஈவ்னிங் கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்குப் போகணும். சுபா, நாளைக்கு ஊருக்குக் கிளம்பறா. அவளுக்கு ஏதாவது வாங்கணும்னு மது சொன்னா" என்றான்.
"ஈவ்னிங் அந்தப் ஃபாரின் கம்பெனி ஜாயின்ட் வென்ச்சர், பத்திப் பேச வரேன்னு சொல்லி இருந்தாங்களே... பரவாயில்லடா! நீ கிளம்பு. நாங்க பார்த்துக்கறோம்" என்று ரமேஷ் நினைவுபடுத்த, "மறந்தே போய்ட்டேன். அதை முடிச்சிட்டுக் கிளம்பிப் போறேன்" என்றவன், அதன்பிறகு வேலையில் மூழ்கிப் போனான்.
ஆனால், சொன்னபடி அவனால் மாலையில் கிளம்ப முடியவில்லை. அந்தப் பிஸ்னஸ் பற்றிய பேச்சு இழுத்துக்கொண்டே போக, வீட்டிற்குப் போன் செய்து தன்னால் இன்று வர முடியாத விஷயத்தைச் சொன்னான். அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இரவு வெகுநேரமாகியும் அவன் வரவில்லை. மீண்டும் தொலைபேசி அழைப்புத் தான் வந்தது. மதுவுடன் விளையாடிக் கொண்டிருந்த அருந்ததி, அத்தையுடன் தான் படுத்துக்கொள்வேன் என்று அடம்பிடிக்க, குழந்தையைத் தூக்கிக்கொண்டு அறைக்கு வந்தவள் கதை சொல்லியபடியே குழந்தையுடன் படுத்தவள் அப்படியே தானும் உறங்கிவிட்டாள்.
சித்தார்த் வீட்டிற்கு வரும்போது மணி பதினொன்றுக்கு மேல் ஆகிவிட்டிருந்தது. அறைக்கு வந்தவன், குழந்தையை அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தவளை புன்னகையுடன் பார்த்தான். இரவு விளக்கின் ஒளியில் தனி அழகோடு இருந்தவளை, சில நொடிகள் பார்த்திருந்தவன் ஒரு பெருமூச்சுடன் குளித்துவிட்டு வந்து படுத்தான்.
இரவு விரைவாக உறங்கியதால், எப்போதும் விழிக்கும் நேரத்திற்கு முன்பே மதுவிற்கு விழிப்பு வந்துவிட, கண்களைத் திறந்தவள் மிக நெருக்கத்தில் சித்தார்த்தின் முகம் தெரிய திடுக்கிட்டுப் போனாள். அவ்வளவு நேரமும், அவனது தோளில் கன்னம் பதித்து உறங்கி இருப்பதை உணர்ந்து படபடப்புடன் எழுந்தாள்.
அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவன், மதுவின் அசைவில் மறுபுறமாகத் திரும்பிப் படுத்தான். ‘எங்கே எழுந்துவிடுவானோ என்ற எண்ணத்துடன் அசையாமல் இருந்தவள், அவன் மறுபுறம் திரும்பிப் படுத்தும், கட்டிலின் ஓரமாகப் படுத்திருந்த அருந்ததியைத் தூக்கி அவனருகில் படுக்க வைத்துவிட்டு, எழுந்து சென்றாள்.
குளியலறையின் கதவை மூடும் சப்தம் கேட்டதும், கண்களைத் திறந்தவன், அவள் சாய்ந்து படுத்திருந்த தோளை ஒருமுறை தடவிச் சிரித்துக்கொண்டான். தூக்கக் கலக்கத்தில் தன்புறமாகத் திரும்பிப் படுத்தவள், தன் தோளில் சாய்ந்துகொண்டது முதல் அவளது முகத்தையே பார்த்தபடி, தன் மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு படுத்திருந்தவன் மதுவின் அசைவால், தூங்குவது போலக் கண்களை மூடிக்கொண்டான். அவள் எழுந்து சென்ற பின்பும், தூக்கம் வராமல் அந்தச் சில நிமிடச் சந்தோஷத்தை மனத்தில் இருத்தி மகிழ்ந்திருந்தான்.
குளித்துவிட்டுப் புத்தம் புது ரோஜாவாக வந்தவள், ஈரக்கூந்தலை உதறியபடி பால்கனியில் சென்று நின்றாள். ஆதவன் மெல்ல மெல்ல எழுந்துவரும் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தவளின் பார்வை, வீட்டின் பின்புறம் இருந்த பறவைகளின் கூண்டின் மேல் நிலைத்தது.
வீட்டிற்கு வந்த இத்தனை நாட்களில் ஒருமுறை கூட, தான் பின்புறம் செல்லவில்லை என்று எண்ணியவள், கூந்தலை அடியில் முடிந்து கொண்டு வீட்டின் பின்புறத்திற்குச் சென்று பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் அறைக்கு வந்தவள். சித்தார்த்தைக் காணாமல், ஜாகிங் சென்றுவிட்டிருப்பான் என்று எண்ணிக்கொண்டே அறையை ஒழுங்குபடுத்தத் துவங்கினாள். அதற்குள் அருந்ததி கண்விழிக்க, “ஹாய் குட்டி, குட் மார்னிங்!" என்று குழந்தையைத் தூக்கி, "செல்லக் குட்டி நைட் அத்தை கூடவே தூங்கிட்டீங்களா? சமர்த்துக்குட்டியா நீங்க..." கொஞ்சியபடி குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு நிமிர்ந்தவள், பால்கனி வாசலில் இருகைகளையும் கட்டிக்கொண்டு சாய்ந்து நின்றபடி தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவனைக் கண்டதும் தன்னையும் அறியாமல் குழந்தையை இறக்கி விட்டுவிட்டு எழுந்து நின்றாள்.
சித்தார்த்தைக் கண்டதும், “மாமா!" என்று ஓடிச்சென்ற குழந்தை, அவனுடைய காலைக் கட்டிக்கொண்டாள். குழந்தையைத் தூக்கி நெற்றியில் முத்தமிட்டவன், மனைவியின் அருகில் வந்து நிற்க, அவள் தன் வேலையைத் தொடர்வது போலத் திரும்பி நின்றுகொண்டாள்.
"டார்லிங்! நேத்து நைட் நல்ல தூக்கம் போல. நான் வரும்போது அசந்து தூங்கிட்டு இருந்தீங்களே" என்று குழந்தையைக் கேட்பது போல அவளைக் கேட்டான். அவன் தன்னைத் தான் சொல்கிறான் எனத் தெரிந்தும் எதுவும் சொல்லாமல் வேலையில் கவனமாக இருந்தாள்.
"அத்தை" என்று குழந்தை மழலையில் அழைக்க, "என்னடா குட்டி" என்று திரும்பியவளிடம் தாவிய குழந்தையை கொடுக்காமல், " ரொம்ப டயர்டா ஹனி! அதான், என் தோளில் சாய்ந்து தூங்கியது கூடத் தெரியாம, தூங்கிட்டு இருந்தீங்களோ!" என்று கேட்டதும், சட்டென நிமிர்ந்து பார்த்தாள்.
அவனது கண்களில் தெரிந்த குறும்பைக் கண்டதும் கன்னம் சிவக்கக் குனிந்து கொண்டவள், “ப்ளீஸ், குழந்தையைக் கொடுங்க. அவளுக்குப் பால் கலந்து கொடுக்கணும்" என்றதும் சிரிப்புடன் குழந்தையைக் கொடுத்தான்.
மது அவசரமாக அங்கிருந்து செல்ல, “எனக்கும் காஃபி கொண்டு வர முடியுமா?” என்றதும், "ம்ம்” என்று, தலையை ஆட்டிவிட்டுச் சென்றாள்.
‘அவனுக்கு எதுவும் தெரியாது... தூங்கிக் கொண்டிருக்கிறான் என்று, தான் நினைத்தது தவறு’ என்று எண்ணியவள், ‘மீண்டும் எப்படி அவன் முன்னால் சென்று நிற்பது?’ என்று எண்ணிக்கொண்டு காஃபி கலந்து நேத்ராவிடம் கொடுத்தனுப்பினாள்.
கன்னம் சிவந்து நின்றவளையே நினைத்தபடி இருந்த சித்தார்த், ‘என்னடா இது! இன்னைக்கு ரொம்ப அதிசயமெல்லாம் நடக்குது. சண்டை போடுவான்னு நினைச்சா, வெட்கத்தோடு குனிஞ்சிகிட்டா. இப்படிப் போனா, என்னோட வாக்கைக் கடைசிவரை காப்பாற்ற முடியாது போலிருக்கே. இதுக்குத்தான் அவசரப்பட்டு வாயை விடக்கூடாதுன்னு சொல்றாங்க. அவள் முகம் சிவந்து நிற்கும்போது, பெரிய அவஸ்தையாக இருக்கே. சித்தார்த் கன்ட்ரோல் யுவர் ஸெல்ப்! அவசரப்படாதே... அவளோட மனம் இன்னும் முழுதாக மாறவில்லை. பொறுமை பொறுமை’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.
"அண்ணா காஃபி" என்ற குரலில் கண்களைத் திறந்தவன் புன்னகையுடன் தங்கைக்கு, "குட் மார்னிங் நேத்ரா, தேங்க்ஸ்" என்று சொல்லிக் கப்பை வாங்கிக் கொண்டான்.
“நீ சாப்டியா?” என்று பாசத்துடன் கேட்க, “ம்ம்” என்று உற்சாகத்துடன் தலையை ஆட்டினாள்..
"அண்ணி எங்கே? வேலையா இருக்காளா?" என்றான்.
"ரொம்ப முக்கியமான வேலை. கீழே எட்டி பாருங்க" என்று அவன் கையைப் பிடித்து இழுத்துச் சென்று தோட்டத்தைக் காட்டினாள். அங்கே, கையில் பால் டம்ளருடன் அருந்ததியின் பின்னால் சுற்றிச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தாள்.
சிறிதுநேரம் அவளது செயல்களை இரசித்தவன், முதல் வேலையாக ஜீவாவிற்குப் போன் செய்து, தான் இன்று ஆபிஸ் வரவில்லையெனச் சொல்லிவிட்டு அன்று செய்யவேண்டிய வேலைகளைப் பட்டியலிட்டுக் கொண்டிருந்தான்.
காலை உணவை முடித்துக்கொண்டவன், "மது! உன் வேலையை முடிச்சிட்டுக் கொஞ்சம் மேலே வா" என்று அழைத்தான். அவளும், அப்படி இப்படி என்று வேலைகளை ஒவ்வொன்றாக இழுத்துச் செய்து கொண்டிருக்க, "உன்னை சித்தார்த் அப்பவே கூப்பிட்டானே. நீ போ நாங்க பார்த்துக்கறோம்" என்று அவளை அனுப்பி வைத்தாள் சுபா.
"உட்கார் மது" என்றவன், பிரீப்கேஸிலிருந்து சில பேப்பர்ஸை எடுத்து, “இதைப் படிச்சிட்டுக் கையெழுத்து போடு" என்று பேனாவை அவளிடம் கொடுத்தான்.
படித்துப் பார்த்தவள், "எதுக்கு இதெல்லாம்?" என்றவளை கை உயர்த்தி, “நீ கையெழுத்து மட்டும் போடு" என்றான்.
தயக்கத்துடன், "அத்தை, மாமாவுக்குத் தெரியுமா? எதுக்காக இப்போது உங்க பேர்லயிருக்கற நம்ம கம்பெனி ஷேர்ஸ்ல பாதியை, என் பேர்ல மாத்தறீங்க? அதற்கு என்ன அவசியம்? ஜீவாண்ணாவும், ரமேஷ் அண்ணாவும் என்ன நினைப்பங்க?" என்றாள்.
புன்னகைத்தவன், "இது, புதுசா யோசிச்சது இல்ல மது! எப்போதோ முடிவு செய்தது. ரெண்டு பேர்கிட்டயும் பேசிட்டுத் தான் செய்றேன். அப்பா, அம்மாவிடம் சொல்லிவிட்டுத் தான் செய்றேன். நீ கையெழுத்துப் போடு" என்றதும் அரைமனதாக கையெழுத்திட்டாள்.
"கங்கிராஜூலேஷன்ஸ் மேடம்! இனி, நீங்களும் ஒன் ஆப் தி டைரக்டர் ஆப் ஸ்ருஷ்டி மல்ட்டிமீடியா" என்று கையை நீட்டினான்.
அவளும், சிறு தயக்கத்துடன் கையைக் கொடுத்தாள். “மது! இந்த பேப்பர்ஸ்லையும் சைன் பண்ணு. உன் பேர்ல தனியா பேங்க் அக்கௌன்ட், டீமாட் அக்கௌண்ட் ஆரம்பிக்கணும்"
"எனக்குத்தான் தனி அக்கௌன்ட் இருக்கே அப்புறம் இது எதற்கு?" என்றாள்.
“இது, நான் உனக்காகச் செய்வது. இந்தக் கவர்ல, ட்வென்டி தௌசன்ட் இருக்கு. இது இந்த மாசச் செலவுக்கு. உனக்கு ஏதாவது வாங்கணும்னு தோணினா வாங்கிக்க" என்று கொடுத்தான்.
மது மௌனமாக வாங்கிக் கொண்டாள். “இந்த மாசம் உன்கிட்ட கொடுத்துட்டேன். அடுத்த மாசத்துலயிருந்து அக்கௌண்ட்ல போட்டுடுறேன்" என்றான்.
சரி என்பது போலத் தலையை ஆட்டியவள், "அவ்வளவு தானே நான் கிளம்பட்டுமா?" என்றாள்.
"என்ன அவசரம்? இரு உன்னிடம் கொஞ்சம் பேசணும்" என்றான். கையிலிருந்த வளையல்களை அவள் மாற்றி மாற்றி எண்ணிக்கொண்டிருக்க, "திரும்பத் திரும்ப எத்தனை முறை அதையே எண்ணுவ? கொஞ்சம் நிமிர்ந்து எங்ககிட்டயும் பேசலாமே" என்றான்.
நிமிர்ந்து அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
கைகளை சோஃபாவின் பின்னால் நீட்டிக்கொண்டு அமர்ந்தவன், "உனக்கு இங்கே எல்லாம் சௌகர்யமா இருக்கா?" என்றான்.
"ம்ம், இருக்கே. எனக்கு இங்கே எந்தப் பிரச்சனையும் இல்ல" என்றாள்.
"ஆனா, என்னைப் பார்த்தா தான் பிரச்சனை இல்லையா!" என்றதும். “அதெல்லாம் ஒண்ணும் இல்ல" என்றாள்.
"அப்போ ஏன் எல்லோரிடமும் நல்லா பேசும் நீ, என்னிடம் மட்டும் விலகி விலகிப் போற?" என்று ஏக்கத்தோடு கேட்டதும், ஒன்றும் சொல்லத் தோன்றாமல் அமர்ந்திருந்தாள்.
"என்னை ஒரு ஃப்ரெண்டா கூடவா நினைக்கக் கூடாது. இல்ல, அதுக்குக் கூட நான் தகுதி இல்லாதவன் ஆகிட்டேனா?" என்று கேட்டதும் அவளுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.
சில நொடிகள் மௌனமாக இருந்தவள், "சாரி! உங்க மனசை நான் நோகடிச்சிருக்கேன். எனக்கே புரியுது. நானும் உங்ககிட்டச் சாதரணமாக பேசணும்னு தான் நினைக்கிறேன். ஆனா, முடியல" என்றவள், கலங்கிய விழிகளைக் கட்டுப்படுத்தினாள்.
"போனது போகட்டும். அன்னைக்குச் சொன்னது தான் இப்பவும் சொல்றேன். எனக்குத் தேவை உன்னோட மனசுல ஒரு இடம்” என்றவன், எழுந்து நின்றான்.
பின்னாலேயே எழுந்தவள், “சித்தார்த்! நீங்க இப்படி ஃபீல் பண்ணினா, எனக்குக் கஷ்டமா இருக்கு. நான் கொஞ்சங் கொஞ்சமா என்னை மாத்திக்க ட்ரை பண்றேன்” என்றாள் ஆத்மார்த்தமாக.
அவளை வியப்புடன் பார்த்தவன், “தேங்க்யூ ஹனி!” என்று அவன் நேசத்துடன் சொல்ல, முறுவலித்தாள்.
சந்தோஷத்துடன், "சரி, கிளம்பு. சுபாவுக்குக் கிப்ட் வாங்கணும்னு சொன்னியே, போய்ட்டு வந்திடலாம்" என்றான்.
"நீங்க இன்னைக்கு ஆபீஸ் போகலையா?" என்று கேட்டாள்.
“இல்ல. காலையிலேயே லீவ் சொல்லிட்டேன். சீக்கிரம் கிளம்பு. ஷாப்பிங் போய்ட்டு வந்து நாமதான் சுபாவை ஏர்போர்ட் கூட்டிட்டுப் போகணும்" என்றதும், விரைவாகத் தயாராகி இருவரும் மகிழ்ச்சியுடன் கிளம்பிச் செல்வதைப் பார்த்தவர்களுக்குச் சந்தோஷமாக இருந்தது.
ஆனால், இவ்வளவு தூரம் அமர்ந்து பேசியதெல்லாம், அன்று இரவே தலை கீழாக மாறப்போவதை இருவருமே உணரவில்லை.
அத்தியாயம்—55
கடைக்குச் சென்றவள், சுபாவுக்கு மட்டுமல்லாமல், குழந்தைகள் நால்வருக்கும் எடுத்தவள், நேத்ராவுக்கும் ஒரு அனார்கலி சுடிதாரை எடுத்தாள். அவள், சுபாவிற்குப் புடவை தேர்வு செய்துகொண்டிருந்த நேரத்தில், அவளுக்காக ரா சில்க்கில் ஒரு புடவை எடுத்துத் தனியாக வைத்தான்.
இருவரும் வீட்டிற்கு உள்ளே வரும்போது, "அம்மா நான் என்ன வனவாசமா போறேன்? பருப்புப் பொடி, தேங்காய் பொடி, எள்ளுப் பொடின்னு எல்லாத்தையும் செய்து கொடுத்து என்னை இம்சை பண்றீங்களே. இதெல்லாம் கிடைக்காத இடத்திலா இருக்கேன்? கடைக்குப் போனா எல்லாமே கிடைக்கும்" என்று அன்னையின் அன்பிற்கு தாழ் போடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாள் சுபாஷிணி.
"எல்லாம் கிடைக்கும். ஆனா, நாமளே தயார் செய்றது மாதிரி வருமா? இதுக்கு இன்னொரு பேர் பாசம்” என்று மீராவும், மாமியாருக்கு ஒத்து ஊத, “நான் எப்போ வந்து போனாலும் பாதி பிளைட் அடைக்கிற அளவுக்கு லகேஜ் சேர்ந்து போகுது" என்றாள் பெருமையும், தாங்கலுமாக.
உள்ளே வந்த சித்தார்த், “அப்போ இனி, நீ பேசஞ்சர் ஃப்ளைட்ல போகாதே. கார்கோல போ" என்று சொல்ல, "கொழுப்புடா உனக்கு. ஏன் பேசமாட்ட? கார்கோ பிளைட்ல போக நான் என்ன ஜடப்பொருளா?" என்று சீறினாள்.
சிரிப்பும், பேச்சுமாக ஒருவரை மாற்றி ஒருவர் கிண்டல் செய்து கொண்டிருக்க, புன்சிரிப்புடன் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். ‘சித்தார்த்! அலுவலகத்தில் ஒரு தலைமை அதிகாரியாக எப்படியிருக்க வேண்டுமோ அப்படியிருக்கிறான். வீட்டில் அனைவரிடமும் மரியாதை கொடுக்க வேண்டிய இடத்தில் மரியாதையாகவும்; யாரிடம் எப்படிப் பேசவேண்டுமோ அப்படி, ஒவ்வொருவருக்கும் தகுந்தார் போன்று பழகுவதைக் கடந்த பத்து நாட்களாகப் பார்த்துக்கொண்டிருக்கிறாளே!
அருந்ததியைத் தூக்கிக் கொஞ்சியபடியே திரும்பியவன், மது தன்னையே பார்ப்பதைக் கண்டதும் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டுகொண்டே, அவளைப் பார்த்து இரு புருவங்களையும் உயர்த்த, தடதடத்த இதயத்துடன் மாமியாரின் அருகில் சென்று அமர்ந்தாள்.
அங்கே அமர்ந்திருந்தவளின் பார்வை மீண்டும் மீண்டும் அவனிடம் சென்று வர, சித்தார்த்தின் உற்சாகத்திற்குக் கேட்கவா வேண்டும். அவளையே பார்த்துக் கொண்டு குழந்தையிடம் பேசுவதைப் போல ஜாடையாகப் பேசுவதும், கண்களைச் சிமிட்டுவதுமாக இருக்க, அவளுக்குத் தர்மசங்கடமாகப் போயிற்று. தன்னைத் திசை திருப்பிக் கொள்ள, வாங்கி வந்திருந்தவற்றை மாமியாரிடம் காண்பித்தாள்.
கடைசியாக நேத்ராவிற்கு எடுத்த அனார்கலி சுடிதாரை காண்பிக்க, "அண்ணி! எனக்கா? கலர் சூப்பரா இருக்கு. அண்ணினா அண்ணிதான்" என்று மதுவைச் சேர்த்தணைத்து கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டாள்.
"ஹேய்! என்ன இது?" என்று அவள் வெட்கத்துடன் சொல்ல, "அண்ணி அண்ணா எதிரில் இப்படி வெட்கப்பட்டுச் சிரிக்க மாட்டீங்களா? அங்கே பாருங்க அண்ணன் முகத்தில் எவ்வளவு ஏக்கம்?" என்றாள் யதார்த்தமாக.
"நேத்ரா! அத்தை காதுல விழப் போகுது சும்மா இரு?" என்று ரகசிய குரலில் சொன்னாள்.
"அண்ணி அப்படியே திரும்பிக் கொஞ்சம் அண்ணனைப் பாருங்களேன். பார்வையில் காதல் ரசம் சொட்டுது" என்றதும் மது சற்று எரிச்சலுடன், "நேத்ரா! என்ன இப்படியெல்லாம் பேசற?" என்று அதட்டலாகச் சொல்ல, நேத்ரா கொஞ்சம் அடங்கினாள்.
அதன்பிறகு மீரா, சுபாவுடன் பேசிச் சிரித்துக்கொண்டே திரும்பியவள், சித்தார்த்தின் காதல் பார்வையால், தன்னுள் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்வது போலத் தோன்ற, தலையைத் தாழ்த்திக்கொண்டாள்.
சித்தார்த்தின் மடியிலேயே குழந்தை உறங்கிவிட, சுபா பயணத்திற்கு தயார் செய்து கொண்டிருந்ததால், குழந்தையைத் தன்னுடைய அறைக்குக் கொண்டு சென்றான். அவனும் உடை மாற்றிக்கொண்டு படுத்தான். கண்களை மூடினால் அவளது வதனே மீண்டும் மீண்டும் கண்களுக்குள் தோன்றியது. கவனத்தைத் திசை திருப்ப வேலையில் ஈடுபடுத்திக் கொண்டான். அலுவலகத்திற்குப் போன் செய்து பேசினான். ஆனாலும், எண்ணம் முழுவதையும் ஆக்கிரமித்திருந்தவளை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
‘இன்று ஏன் இப்படி என்னை அலைகழிக்கிறாய் மது?’ என்று மனத்திற்குள் புலம்பியவன் அவளது போட்டோவைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
குழந்தையைத் தூக்கிச் செல்ல வந்த சுபா, தம்பியின் தவிப்பைக் கதவருகில் நின்று பார்த்தவள், வந்த சுவடு தெரியாமல் திரும்பிச் சென்றாள். அவள் வந்ததோ, சிறிதுநேரம் நின்று தன்னைக் கவனித்ததோ எதையும் அறியாமல், சித்தார்த் தன் எண்ணத்துடன் போராடிக் கொண்டிருந்தான்.
மதியம் மூன்று மணிக்கு அறைக்கு வந்த மதுமிதா, சித்தார்த் உறங்குவது தெரிந்தது. அவனருகில் திறந்திருந்த லேப்டாப்பை எடுத்து வைக்க அருகில் சென்ற போது தான், ஸ்கிரீன் சேவரில் தன்னுடைய போடோக்கள் மாறி மாறி வருவதைப் பார்த்தாள்.
அதில், பாவாடை தாவணியிலிருக்கும் படம் சிலதும் இருப்பதைக் கண்டாள். அவை தீபாவின் கல்யாணத்தில் எடுத்த புகைப்படங்கள் என்று புரிந்தது. ‘இது எப்படி இவனுக்குக் கிடைத்தது?’ என்று எண்ணியவள், ‘சுரேஷிடமிருந்து வாங்கி இருப்பான்’ என்று அவளே ஒரு தீர்மானமும் செய்து கொண்டாள்.
‘ஆனால், இந்தப் போட்டோக்களை நானே இத்தனை நாட்கள் பார்த்ததில்லையே’ என்று எண்ணிக்கொண்டே அவனருகில் சென்று, "என்னங்க, என்னங்க" என்று குரல் கொடுத்தாள். ஆனால், அவன் கண்ணைத் திறக்கவே இல்லை. அவளது குரல் அவளுக்கே கேட்காத போது அவனுக்கு எப்படிக் கேட்கும்? தயங்கியபடி அவனைத் தொட்டு அசைத்து, “என்னங்க! நேரம் ஆகுது எழுந்திருங்க" என்று சொல்ல, சித்தார்த் கண் விழித்தான்.
"நேரம் ஆகுது. அண்ணியை ஏர்போர்ட் கூட்டிட்டுப் போகணும்" என்றவள், குழந்தையுடன் அறையை விட்டு வெளியேறினாள்.
குழந்தையும் விழித்துவிட, கிளம்பத் தயார் செய்தாள் மதுமிதா. தயாராகி சுபாவின் அறைக்கு வந்தவன், அவளிடமிருந்து அருந்ததியை வாங்கிக்கொண்டவன், ஒரு ட்ராலி பேகை இழுத்துக்கொண்டு ஹாலுக்குச் சென்றான்.
“இந்த லகேஜையும் கொண்டு போகட்டுமா அண்ணி” என்றவளிடன், "ஆங்.. கொண்டு போகலாம்” என்றவள் தம்பி மனைவியின் கையைப் பற்றிக் கொண்டாள். மதுமிதா விழிகள் அகல, “என்ன அண்ணி?” என்றாள்.
“உன்கிட்ட சில விஷயங்கள் பேசணும். பேசலாமா?" என்று கேட்டாள்.
அவள் என்ன பேசப் போகிறாள் என்று மதுவும் அறிந்தே இருந்தாள். "இதென்ன கேள்வி? சொல்லுங்க " என்றாள்.
"நான் என்ன சொல்லப் போறேன்னு உனக்கும் புரிஞ்சிருக்கும். இருந்தாலும், நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிடுறேன். நீ தப்பா, உங்க விஷயத்துல தலையிடுவதா நினைக்காதே. ஏன்னா, இது உங்க ரெண்டு பேரோட வாழ்க்கை சம்மந்தபட்டது மட்டுமில்ல. ரெண்டு குடும்பத்தோட சந்தோஷம்" என்றாள்.
மதுமிதா மௌனமாக தலைகுனிந்து நின்றிருக்க, “கல்யாணமாகி இருபது, நாளைக்கு மேல ஆகுது. ஆனா, நீங்க ரெண்டு பேரும் சகஜமா பேசுறது கூடயில்ல, இல்லையா?" என்று சிறு தயக்கத்துடன் கேட்டாள் சுபா.
பதில் சொல்லும் தைரியம் அற்றவளாக, மதுமிதா நின்றிருந்தாள்.
"நீ எங்ககிட்ட பேசுறதுல பாதி கூடச் சித்தார்த்கிட்டப் பேசறதில்ல. உனக்குத் தெரியுமா! சித்தார்த்தை, இவ்வளவு பொறுமையானவனா நாங்க பார்த்ததே இல்ல. அதுக்காக, அவன் அவசரக்காரன் இல்ல. எல்லாத்திலேயும் யோசிச்சித் தான் முடிவெடுப்பான். அது சரியா இருந்தா, யாருக்காகவும் அவனோட முடிவை மாத்திக்கமாட்டான்.
ஆனா, உன் விஷயத்துல அவன் ரொம்பவே பொறுமையா இருக்கான். அவனையே அறியாமல் கூட, உன்னைக் காயப்படுத்திடக் கூடாதுன்னு நினைக்கிறான். அதுக்குக் காரணம், அவன் உன் மேல வச்சிருக்கற உண்மையான காதல் தான் மது!" என்ற சுபாவை நேருக்கு நேராகப் பார்த்தாள்.
“கல்யாணத்துக்கு முன்னால, உன்கிட்டச் சில சமயம் கொஞ்சம் கடுமையா பேசியிருக்கலாம். அதுக்குக் காரணமும், அவனோட காதல் தான். நீ வேலையை விட்டுப் போக அவன்தான் காரணம்னு சொன்னதும், அவனோட மனசு என்ன பாடுபட்டதுன்னு தெரியுமா உனக்கு? இனி, உன் வாழ்க்கையில வரமாட்டேன்னு உன்கிட்ட பேசிட்டு வந்த அன்னைக்கு, என்கிட்டச் சொல்லி ரொம்பவே கஷ்டப்பட்டான். நான் கூட, இப்படிப் பைத்தியக்காரத்தனமா பேசிவிட்டு வந்திருக்கிறாயேன்னு திட்டினேன். அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா?" என்று சொல்லி நிறுத்திவிட்டு மதுவைப் பார்த்தாள்.
‘அப்படி என்ன சொன்னான்?’ என்று அறிந்து கொள்ளும் ஆவல், அவள் கண்களில் தெரிந்தது.
"நான் அவளோட வாழ்க்கைலயிருந்து போனாதான் அவளுக்குச் சந்தோஷம்னா, என்னோட காதல் தான் அவளோட நிம்மதியைக் குலைக்குதுன்னா அப்படிப்பட்டக் காதல் எனக்குத் தேவையில்ல. மது என்னைக் கல்யாணம் செய்யாம இருந்தாலும், இல்ல நாளைக்கே மனசு மாறி வேற யாரையாவது கல்யாணம் செய்துகிட்டாலும், அவள் சந்தோஷமா இருந்தா எனக்கு அது போதும். அவளோட சந்தோஷத்தைப் பார்த்துட்டே நான் நிம்மதியா இருந்திடுவேன்னு சொன்னான்" என்று தழுதழுத்தாள்.
திகைப்பும், தவிப்புமாக மனம் அலைபாய, கண்கள் கண்ணீரைப் பொழிந்தன.
அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டவள், "நீ அழணும்ன்னு இதைச் சொல்லல. காதலிச்ச பொண்ணைக் கைக்கெட்டும் தூரத்துல வச்சிட்டு, கையைக் கட்டி வேடிக்கை பார்க்கறது எவ்வளவு அவஸ்தைன்னு உனக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்ல. இப்போதைக்கு, அவன் பொறுமையா இருக்கலாம். ஆனா, இதுவே இன்னும் கொஞ்ச நாள் தொடர்ந்தா, ஒரு அலுப்பு தட்டிடும். சலிப்பு வந்துட்டா வாழ்க்கையே வெறுத்துடும் மது!" என்றாள் ஆதூரத்துடன்.
சுபா, “அதுக்காக உன்னை உடனே, மாறணும்னு சொல்லலை. அவனோட உணர்வுகளை நீயும் கொஞ்சம் புரிஞ்சி நடக்க முயற்சி செய்ன்னு தான் சொல்றேம். நாம நினைச்சா முடியாதது ஒண்ணுமில்ல. நீயும் முயற்சி செய்றன்னு எங்களுக்கும் புரியுது. ஆனா, அவனைச் சில சமயம் பார்க்கும்போது ரொம்பக் கஷ்டமாக இருக்கு மது! நான் சொல்றதை அறிவுரையா எடுத்துக்காம ஒரு ஆலோசனையாக எடுத்துக்கோ மது. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும். அதுதான் எங்க எல்லோருடைய ஆசையும்" என்று அவளுடைய கையைப் பற்றிக்கொண்டு, “ரொம்பக் காலம் தாழ்த்திடாதே மது! நமக்காக நேரம் காத்துட்டு இருக்கறதில்ல. நான் கிளம்பறேன். நீயும், சித்தார்த்தும் அவசியம் வீட்டுக்கு வரணும்" என்றவள், அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினாள்.
சுபாவை ப்ளைட் ஏற்றிவிட்டு வரும்போது இருவரின் இடையேயும் கனத்த மௌனமே நிலவியது. வீட்டிலிருந்து கிளம்பும் போதே அவளைக் கவனித்தான். செவ்வரியோடிய விழிகள், அவள் அழுததைச் சொல்லாமலே அவனுக்கு உணர்த்தியது. சுபா, அவளிடம் ஏதோ பேசியிருக்கிறாள் என்று புரிந்து கொண்டான். இதே நிலையில் அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்றால், தனக்குள் முடங்கிக்கொள்வாள் என்று நினைத்து வண்டியை கொட்டிவாக்கத்திற்குச் செலுத்தினான்.
"மது! உங்க மாமா வீட்டிற்குப் போகப் போகிறோம். முகம் கொஞ்சம் டல்லா இருக்கு முகத்தைக் கழுவிக்கோ” என்றவன், வழியில் வண்டியை நிறுத்தி வீட்டிற்குச் ஸ்வீட், பூ என்று வாங்க, அதற்குள் மதுவும் முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தாள்.
வீட்டினருகில் காரை நிறுத்தியவுடன், அனைவரையும் பார்க்கும் ஆவலில், “அத்தை!" என்று உற்சாக குரல் கொடுத்தபடி செல்ல, "மதும்மா!" என்று அவளை எதிர்கொண்டு வந்த ராஜியைப் பிடித்து இரண்டு சுற்றுச் சுற்றினாள்.
"மது! எப்படிடா இருக்கே?" என்று ஆசையுடன் அவள் கன்னத்தை வருடியபடி கேட்க, சலுகையுடன் அவர் தோளில் சாய்ந்து கழுத்தைக் கட்டிக்கொண்டு, “போங்க அத்தை! என்னை எல்லோரும் மறந்துட்டீங்க. நான் வீட்டுக்குப் போன அன்னைக்கு மறுநாள் வந்ததோடு சரி. அம்மாவும், அப்பாவும் ரெண்டு நாளைக்கு முன்னால ஊருக்குப் போயிட்டு வரேன்னு சொல்லிக்க வந்தாங்க. போன் செய்து நாலு வார்த்தை பேசுவதோடு சரி. என்னை அனுப்பிட்டு நீங்க எல்லோரும் நிம்மதியாக இருக்கீங்க இல்ல?" என்று சிணுங்கலாகக் கேட்டாள்.
‘இதுவரை தன்னிடம் சாதரணமாகக் கூடச் சிரித்துப் பேசியதில்லையே’ என்ற எண்ணம் தோன்றினாலும், அவளது முகத்தில் தெரிந்தச் சந்தோஷத்தையும், புன்னகையையும் வாசற்படியில் சாய்ந்து நின்று ரசித்துக் கொண்டிருந்தான்.
"உன்னைப் போய் மறப்போமா? நீ இல்லாம, வீடே வெறிச்சின்னு இருக்குடா ராஜாத்தி!" என்று கன்னத்தைத் தடவியபடி நிமிர்ந்தவர், அப்போதுதான் சித்தார்த்தைக் கவனித்தார். "வாங்க வாங்க. உள்ளே வாங்க" என்று வரவேற்றார்.
"நான் நேராக உள்ளே வந்திருந்தா, இவ்வளவு நேரம் நடந்த கண்கொள்ளா காட்சியைப் பார்த்திருக்க முடியாதே" என்று மதுவைப் பார்த்துக்கொண்டே சொல்ல, அவள் உதட்டைக் கடித்தபடி ராஜியின் பின்னால் ஒட்டிக்கொண்டாள்.
"உட்காருங்க. ரெண்டு பேரும் பேசிட்டிருங்க. காஃபி கொண்டு வரேன்" என்று கிச்சனுக்குச் செல்ல, சித்தார்த்தின் பார்வை மதுவை அளவிட்டுக் கொண்டிருந்தது.
அவனது பார்வை வீச்சின் ஆளுமையில் அவஸ்தையுடன் நெளிந்தவள், "அத்தை! நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்” என்று ராஜியின் பின்னால் விரைந்தாள்.
சித்தார்த் சிரித்துக்கொண்டே, அங்கிருந்த மேகசினை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தான்.
ராஜியும், மதுவும் கிச்சனில் இருந்து பேசியது, அவனது காதுகளில் தெளிவாக விழுந்தது,
“மாமாவும், அத்தையும் என்னிடம் ரொம்பப் பிரியமா இருக்காங்க. மீரா அக்கா சொல்லவே வேண்டாம். ரொம்ப அட்ஜஸ்டபுல். பெரிய அத்தான் சைலென்ட். ஆனா, அவர் டைமிங் ஜோக் அடிக்கறதுல கில்லாடி. ரெண்டு குட்டீஸும் ரொம்பச் சமர்த்து. ஆர்த்தி மழலைல பேசினா, கேட்டுட்டே இருக்கலாம். அப்புறம், எங்க வீட்டு விஐபிஸ் ரெண்டு பேர் இருக்காங்க. அஷ்வந்த், நேத்ரா. குழந்தைங்க ரெண்டு பேரையும் கூடச் சமாளிச்சிடலாம். ஆனா, இவங்க ரெண்டு பேரையும் சமாளிக்கறது ரொம்பக் கஷ்டம்ன்னு அத்தை புலம்புவாங்க" என்று ஒவ்வொருவரைப் பற்றியும் விலாவாரியாக கூறிக்கொண்டிருந்தாள்.
சிரித்துக்கொண்டே அனைத்தையும் கேட்டுகொண்டிருந்த ராஜி, "மாப்பிள்ளையை ரூமுக்கு அழைச்சிட்டுப் போ. முகம் கழுவிக்கச் சொல்லிட்டு வந்து டிபனை எடுத்துட்டுப் போ. ரெண்டு பேரும் டின்னர் முடிச்சிட்டுத் தான் கிளம்பணும்" என்றார்.
"நாங்க இங்கே வர்றதை அத்தைகிட்டச் சொல்லலை. அவர்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுச் சொல்றேனே" என்றதும், அவளது பதிலில் மகிழ்ந்து போனார் ராஜி.
ஹாலுக்கு வந்தவள், "என்னங்க! நீங்க கொஞ்சம் ரெரெஷ் பண்ணிக்கோங்க" என்று தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றாள். முகம் கழுவிக்கொண்டு வந்தவனிடம் தன் ஷெல்பிலிருந்து டவலை எடுத்துக் கொடுத்தாள். "அத்தை! இன்னைக்கு நைட் இங்கேயே சாப்பிட்டுட்டுப் போகலாம்னு சொல்றாங்க. நீங்க என்ன சொல்றீங்க? நாம அத்தைகிட்ட இங்கே வருவதைச் சொல்லவே இல்லையே?" என்றாள்.
"அதனால் என்ன? போன் செய்து அம்மாகிட்டச் சொல்லிடறேன்” என்றான்.
அதை ராஜியிடமும் சொல்லிவிட்டு டிபனை எடுத்துக்கொண்டு மேலே வந்தவள், ஊஞ்சலில் அமர்ந்திருந்தவனிடம் கொடுத்தாள். இருவரும் சாப்பிட்டு முடிக்கும் வரை எதுவும் பேசவில்லை. பிளாஸ்க்கில் இருந்த காபியை ஊற்றிக் கொடுக்க, சித்தார்த் கைப்பிடிச் சுவரில் சாய்ந்து நின்று தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, ‘எங்கே திரும்பி விடுவானோ என்ற சஞ்சலத்துடன்’ தன்னை மீட்டுக்கொண்டாள்.
வானில் பௌர்ணமி நிலா பவனிவர தொடங்க அந்தி நேரம். ‘இரு மாதங்களுக்கு முன் வந்த பௌர்ணமி, தன் வாழ்வை அமாவாசையாக ஆகிவிட்டதோ! என்று எண்ணி எண்ணி மருகிய அதே பௌர்ணமியில் இன்று, தன் உரிமையாக இருப்பதை நினைத்துப் புன்னகைத்துக் கொண்டான். திரும்பி வந்தவன், அவளை நெருங்கி அமர்ந்தான். அவளுக்குத் திக்திக் கென்றது.
"அப்புறம், சொல்லு மது!" என்று அவளது முகத்தைப் பார்த்துக் கேட்டதும், "ம்ம்... என்...ன. சொல்லணும்?" என்று கேட்டுக்கொண்டே அவன் புறமாகத் திரும்பியவள், அவனை இத்தனை நெருக்கத்தில் பார்த்ததும், ஒரு கணம் தடுமாறினாள்.
சட்டென தலையைக் கவிழ்ந்து கொண்டவள், "நான் இதையெல்லாம் கொண்டு போய் வச்சிட்டு வரேன்" என்று எழுந்தவளின் கையைப் பற்றி அமரவைத்தவன், “அதெல்லாம் அப்புறம் கொண்டு போகலாம். உட்கார்" என்றான்.
மீறமுடியாமல் அமர்ந்தவளை, இடது கையால் வளைத்தான். மதுவின் இதயம், பந்தயக் குதிரையின் வேகத்திற்கு ஓடியது. ஒருபக்கம், அனைவரின் அறிவுரை; மறுபக்கம் அவனது அன்பிலும், அரவணைப்பிலும் கொஞ்சம் கொஞ்சமாக அவன் அன்பில் தோற்றுக் கொண்டிருக்கிறோமோ! என்ற எண்ணம் அவளைக் கலவையாகக் குழப்பிக் கொண்டிருந்தது.
தன்னைச் சமாளித்தபடி இருக்க முயன்றும் முடியாமல், "ப்ளீஸ்! யாராவது பார்க்கப் போறாங்க" என்று நிமிர்ந்து பாராமலே சொன்னாள்.
அவள் கையைப் பற்றி அறைக்கு அழைத்துச் சென்றவன், முதல் வேலையாக கதவைத் தாளிட்டான். அவள் கலவரத்துடன், அவனுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு நின்றாள். அவனது மூச்சுக்காற்றின் வெப்பம், அவனது நெருக்கத்தை உணர்த்த, பயத்துடன் கண்களை மூடிக்கொண்டாள்.
சித்தார்த்தின் கரங்கள் மாலையென பின்னாலிருந்து தழுவிக்கொள்ள, அந்த அணைப்பை ஏற்கவும் முடியாமல், விலக்கவும் முடியாமல் தனக்குள் தவித்தாள். அவளது நிராகரிப்பற்ற அந்த மௌனமே, அவனுக்குப் போதுமானதாக இருந்தது. அவனது அணைப்பு மேலும் இறுக, அவளது கழுத்தில் முத்தமிட, இதயம் படபடக்க, கால்கள் துவள அருகிலிருந்த கட்டிலைப் பிடித்துக்கொண்டாள்.
அவனது உதடுகள் மேலும் முன்னேறி காதுமடல்களைச் ஸ்பரிசிக்க, “சித்தார்த்!” என்றவளது குரல் வெறும் உதட்டசைவாக வெளிவந்தது. அவனது காதல் படிதாண்டும் முன், அவனது கைப்பேசி அழைக்க, சட்டென்று கனவுலகிலிருந்து தன்னை மீட்டுக் கொண்டான்.
நினைவிற்கு வந்தவனுக்கு, ‘தன்னை மீறி, இப்படி நடந்து கொண்டோமே’ என்ற எண்ணம் தோன்ற, அவளைப் பரிதவிப்புடன் பார்த்தான். நடந்தது நிஜமா; கனவா? என்று புரியாமல், இனம் புரியாத உணர்வில் மனம் தத்தளிக்க, ‘இப்போதைக்கு அந்த இடத்தை விட்டுச் சென்றால் போதும்’ என்ற முடிவுடன், வெளியே சென்றாள்.
ராஜி, கணவருக்குப் போன் செய்து பேசிக்கொண்டிருக்க, அவனது ஸ்பரிசத்தை மறுக்கவும் முடியாமல்; ஏற்கவும் இயலாமல் உள்ளுக்குள் குழம்பியவாறு ஹாலில் அமர்ந்தாள்.
சற்று நேரத்திற்கெல்லாம், "ஏய் அல்லிராணி! எப்போ வந்த? எப்படியிருக்கே?” என்று சிரித்துக்கொண்டே வந்த தீபக் மதுவின் பக்கத்தில் அமர்ந்தான்.
புன்னகைத்தவள், “ஹாய் அத்தான்! நான் நல்லயிருக்கேன். நீங்க எப்படியிருக்கீங்க?" என்றாள்.
"ஹ்ம்ம்...” என்றவன், “எங்கே உன்னோட ஹீரோ ஆளைக் காணோம்?"
"மேலே ரூம்ல போன் பேசிட்டு இருக்கார்" என்றாள்.
“அவரைத் தனியா ரூம்ல விட்டுட்டு, நீ என்ன பண்ற இங்கே?" என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, சித்தார்த் இறங்கி வந்தான்.
இருவரும் பேசிக்கொண்டிருக்க, மது தீபக்கிற்கு டிபனும், காபியும் கொண்டுவந்து கொடுத்தாள்.
இருவரும் பேசிகொண்டிருக்க, மது ராஜிக்கு உதவியாக கிச்சனில் நின்றிருந்தாள். சற்றுநேரத்தில் ஒருவர் பின் ஒருவராக வெளியே சென்றிருந்த வித்யாவும், மேகலாவும் வர, சற்றுநேரத்தில் ராஜேஷ் அலுவலகத்திலிருந்தும், ஈஸ்வரன் கல்லூரியிலிருந்தும் வந்து சேர்ந்தனர்.
அனைவரும் சேர்ந்து கதைகள் பேசிக்கொண்டும், ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொண்டும் இருக்க, மதுவும் சற்றுநேரத்தில் சகஜமானாள்.
இரவு உணவுக்குப் பின், "வாங்களேன் இன்னைக்குப் பௌர்ணமி. பீச்ல ஒரு வாக் போயிட்டு வரலாம்" என்றான் ராஜேஷ்.
ஈஸ்வரன், “என்னையும், என் மனைவியையும் தொல்லை பண்ணாம எங்களுக்குத் தனிமை கொடுத்துட்டு, நீங்க எல்லோரும் முதலில் இடத்தைக் காலி பண்ணுங்க" என்று சொல்ல, "அப்பா நீங்க வரலன்னு சொல்றதுக்கு இவ்வளவு பில்டப்பா" என்று தீபக் சிரித்தான்.
மூன்று ஜோடிகளும் பீச்சில் சிறிது தூரம் நடந்தனர். பின்னர், “எங்களுக்குக் கொஞ்சம் தனிமை வேணும். நாங்க தனியா பௌர்ணமியை ரசிக்கப் போறோம்” என்று, மது சித்தார்த்திற்குத் தனிமை கொடுத்து ராஜேஷும், தீபக்கும் வேறு வேறு திசையில் தங்கள் மனைவிகளுடன் சென்றனர்.
சில நொடிகள் எதுவும் பேசாமல் இருவரும் மௌனமாய் அமர்ந்திருக்க, அவளை நெருங்கி அமர்ந்தான். மாலையில் நடந்தவை நினைவிற்கு வந்தபோதும், விலகாமல் அமர்ந்திருந்தாள்.
"ஏன் மது? ராஜி சித்திகிட்ட, நம்ம வீட்டில இருக்கவங்க எல்லோரை பத்தியும் சொன்ன. ஆனால், என்னைப் பற்றி ஒண்ணுமே சொல்லலையே?" என்று ஏக்கத்துடன் கேட்டான்.
‘அப்போதுதான், அவனைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை’ என்று உணர்ந்து, "எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. அதான்...” என்றாள்.
"ஹ்ம்ம்.... உனக்கு ஒண்ணு தெரியுமா! நமக்கு ரொம்பப் பிடிச்சவங்களைப் பத்திக் கூடச் சிலசமயம் சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லாதது போலத் தோணுமாம். அது நிஜமா மது..." என்று கேட்டுக்கொண்டே, அவளது கையை எடுத்து தன் கைகளில் வைத்துக்கொண்டு, “ஏய் மது.... என்ன இப்படி உன் கை ஜில்லுன்னு இருக்கு" என்று சொல்லிக்கொண்டே அவளது கையில் முத்தமிட, மது கையை உருவிக் கொள்ள முயல, அவன் விடாமல் மற்றொரு கையில் முத்தமிட, "சித்தூ... ப்ளீஸ்... இது பப்ளிக் பிளேஸ்” என்று குரலே எழும்பாமல் சொல்ல,
அவள் முதன்முறையாக, தன்னைச் சித்தூ என்று அழைத்ததைக் குறித்துக்கொண்டான். உள்ளுக்குள் மலர்ந்த புன்னகையுடன், "அப்போ, நம்ம ப்ரைவசி போகாத நம்ம ரூமா இருந்தா ஓகேவா" என்று தாபத்துடன் அவள் காதருகில் கேட்க, அவள் எதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள். அவளது மௌனத்தையே சம்மதமாகக் கொண்டு, "தேங்க்ஸ் மது!" என்றவன் சட்டென அவளது கன்னத்தில் இதழ் பதித்தான்.
அந்த மென்மையான இதழ் ஒற்றலை, கண்களை மூடி சிறு முறுவலுடன் ஏற்றுக்கொண்டாள்.
சிறிது தூரத்தில் ராஜேஷ் வருவது தெரிந்ததும், "மது! கிளம்பலாமா. ராஜேஷ் வந்துட்டான்" என்றதும் , அவனை நிமிர்ந்து பார்க்காமலேயே , “ம்ம்.." என்றாள்.
எழுந்தவன், அவளுக்காகக் கையை நீட்ட, அவளும் மறுக்காமல் கையைப் பற்றிக்கொண்டு எழுந்தாள். பற்றிய கரத்தை விடாமல் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பும் நேரம், “அத்தை! அம்மாவும், அப்பாவும் என்னைக்கு ஊர்லயிருந்து வராங்க?" என்றாள். "இன்னும் 4 நாள் ஆகும் மது" என்றார் ராஜி.
"சரி அத்தை! நாங்க கிளம்புகிறோம். வீட்டுக்கு வாங்க” என்று சொல்லிக்கொண்டு கிளம்ப, “இரு மது! குங்குமம் எடுத்துக்கோ” என்றவர், “திரும்பு இந்தப் பூவை வச்சிக்க” என்று சொல்லி அவள் தலையில் சூட்டினார்.
மீதமிருந்த பூவை எடுத்தவள், “அம்மா, அப்பா படத்துக்கு வச்சிட்டு வரேன்” என்று பூஜையறைக்கு ஓடினாள்.
தன் பெற்றோரின் படத்திற்குச் சூட்டும் வரை, எந்தச் சலனமும் இல்லாமல் இருந்தவளின் கண்களில் பூவை வைத்துவிட்டுத் திரும்பும் நேரம் அர்ஜுனின் புகைப்படத்தில் அவளது பார்வை நிலைத்தது. மலரத் துடித்துக்கொண்டிருந்த இதயத்தின் உணர்வுகள் எல்லாம் இப்போது மறத்துப் போனது.
விழிகள் ஈரமாக, ‘கடவுளே! இதை நான் எப்படி மறந்தேன்?’ என்று தவிப்புடன் சுவற்றில் சாய்ந்து நின்றுவிட்டாள். தான் ஏன் இப்போது பூஜையறைக்கு வர வேண்டும் என்று தன்னையே நொந்து கொண்டாள்.
வெளியே சித்தார்த்தின் சிரிப்புச் சப்தம் கேட்க, அவளது இதயத்தைக் குத்திக் கிழிப்பது போலயிருந்தது. ‘கடவுளே! என்னை இப்படி ஒரு இக்கட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டாயே?’ என்று கலங்கியவளை, "மது! இன்னும் என்னம்மா செய்ற? நேரமாகுது பார்" என்ற ஈஸ்வரின் குரலுக்கு, தன்னைச் சற்று நிலைபடுத்திக் கொண்டு வந்தவள், வலிய வரவழைத்த புன்னகையுடன் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினாள்.
சித்தார்த் இருந்த சந்தோஷ மனநிலையில், அவளது முகமாறுதலைச் சரியாகக் கவனிக்கவில்லை. மது, தன் பார்வை முழுவதையும் சாலையில் பதித்திருந்தாலும், மனம் முழுவதும் குழப்பத்திலேயே உழன்றது.
போர்ட்டிக்கோவில் காரை நிறுத்தும்போதே, "ஹனி! உனக்கு வெறும் பத்து நிமிஷம் தான் டைம். அதுக்குள்ள எல்லோரையும் பேசிச் சமாளிச்சிட்டு மேல வர்ற” என்றதும், “சித்தார்த்...” என்று பலகீனமான குரலில் அவள் அழைக்க, “எந்த சாக்குபோக்கும் கிடையாது. வர்ற” என்றவன் உள்ளே சென்றுவிட, செய்வதறியாமல் தவிப்புடன் நின்றாள்.
சித்தார்த், அன்னையிடம் பேசிவிட்டு அறைக்குச் செல்லும் முன், ‘சீக்கிரம் வா’ என்று கண்களால் ஜாடை செய்துவிட்டுச் செல்ல, அவளது நிலை இருதலைக்கொள்ளி எறும்பை ஒத்திருந்தது.
தேவகியிடம் சற்று நேரம் அவள் பேசிக்கொண்டிருக்க, மீரா அவளிடம் இரு பால் டம்ளர்களைக் கொடுட்தாள்.
“நீ போம்மா!” என்று தேவகியே அனுப்பி வைக்க, பேசும் திறனற்றவளைப் போல, தலையை ஆட்டிவிட்டு எழுந்து சென்றாள்.
அவள் வருவதற்குள் குளித்துவிட்டு வந்த சித்தார்த், கதவைத் திறக்கும் ஓசை கேட்டதும் ஒளிந்து நின்றான். கணவனைக் காணாமல் அவள் பார்வையைச் சுழற்ற, பின்னாலிருந்து அணைத்தவன், “ஐ லவ் யுடா ஹனி" என்றான்.
அவன் பின்னாலிருந்து அணைத்ததுமே கண்களை அழுந்த மூடி, கையிலிருந்த ட்ரேவை இறுகப் பற்றிக்கொண்டாள். “உங்களுக்குப் பால் கொண்டு வந்திருக்கேன். குடிச்சிடுங்க. அப்புறம் ஆறிடும்" என்று திக்கித் திணறிச் சொல்ல, "பால் மட்டுமா சூடாயிருக்கு?" என்று தாபத்துடன் சொன்னவனுக்கு, காலையில் எடுத்து வந்த புடவை நினைவிற்கு வந்தது.
"மது! உன் ஷெல்ஃப்ல ஒரு கவர் இருக்கு. அதை எடுத்துட்டு வா" என்றபடி அவளிடமிருந்து டம்ளர்கள் இருந்த ட்ரேயை வாங்கிக் கொண்டான்.
அவளும் கொண்டுவர, "பிரிச்சிப் பாரு" என்றான்.
எடுக்கும்போதே, அது புடவை என்று புரிந்தது. “பாரு மது" என்று மீண்டும் சொல்ல, மெல்லக் கவரை பிரித்தவள், உள்ளிருந்த புடவையைப் பார்த்ததும் முகம் வெளிற, கண்கள் மளமளவென கண்ணீரைப் பொழிந்தன.
அவளுக்குப் பின்னால் நின்றிருந்தவனால், அவளது முகபாவத்தை அறிய முடியவில்லை. பார்த்திருந்தால் அதன்பிறகு ஏற்படவிருந்த மன வருத்தம் அதிகமாகாமல் தடுத்திருப்பான். ஆனால்!
அருகில் வந்தவன், “என்ன மேடம்? எப்படியிருக்குன்னு சொல்லவே இல்லையே?" என்று கேட்க. அவள் காதில் அர்ஜுன் அன்று கேட்டது போலவே கேட்கவும் அதுவும் அர்ஜுன் முதன்முதலாக ஆசையுடன் வாங்கிக் கொடுத்த அதே தேன் நிறத்தில் இருக்கவும், மதுவின் கோபத்தை அதிகபடுத்த அந்த ஒன்றே போதுமானதாக இருந்தது.
நடுங்கும் விரல்களால் அந்தப் புடவையைக் கையில் எடுத்தவள், சித்தார்த்தின் புறமாகத் திரும்பி அவனையும், புடவையும் மாறி மாறிப் பார்த்தாள். அவனது புன்னகை நிறைந்த முகத்தைப் பார்த்ததும், என்ன செய்கிறோம் என்று உணரும் முன்பே, ஆத்திரத்துடன் புடவையை சித்தார்த்தின் முகத்திலேயே விட்டெறிந்தாள்.
அடுத்த நொடியே வெறி பிடித்தவள் போல, "யாரைக் கேட்டு இப்போ புடவை வாங்கிட்டு வந்தீங்க? நானா உங்களைக் கேட்டேன்? ஓஹ்! புடவை வாங்கிக் கொடுத்து, பேங்க் அக்கௌன்ட் ஆரம்பிச்சு கம்பெனில பாட்னர் ஆக்கிட்டா, உங்க இஷ்டப்படி ஆடுவேன்னு நினைச்சீங்களா? இல்ல, இதெல்லாம் செய்தா நான் உங்ககிட்ட மயங்கி உங்க காலடியில் விழுந்திடுவேன்னு நினைச்சீங்களா?" என்று ஆத்திரத்துடன் கத்தினாள்.
அவளது செய்கையில் அதிர்ந்து போனவன், அவளது வார்த்தைகளைக் கேட்டதும் ஆத்திரத்துடன், “ஏய்... என்ன பேசறோம்னு புரிஞ்சு பேசறியா இல்லையா? அப்படியே, ஒரு அறைவிட்டா எப்படியிருக்கும் தெரியுமா? நான் எதுக்குடி உன்னை மயக்கணும்? நீ, என் பொண்டாட்டி. உன்கிட்ட, எனக்கில்லாத உரிமை வேற யாருக்கு இருக்கு? நானும் முடிஞ்ச அளவுக்குப் பொறுமையா இருக்கேன். நீ என்னடான்னா என்னையே இவ்வளவு கேவலமா பேசற. ஒரு புடவை ஆசையா வாங்கிக் கொடுத்தா, அதுக்கு இப்படித் தான் பேசுவியா? நீ யாரையும் எதிர்பார்க்கக் கூடாதுன்னு நினைச்சித் தானே உனக்குப் பேங்க் அக்கௌன்ட் ஆரம்பிச்சிக் கொடுத்தேன்" என்று சித்தார்த்தும் பதிலுக்குச் சப்தம் போட, அன்று முழுவதும் இருந்த ஒரு நூலிழை அன்பும், முற்றிலுமாக அறுந்து விழுந்தது.
அவனது வார்த்தைகளில் இருந்த உண்மையை, அவள் உணர்ந்திருந்த போதும், "என்னை வெறுப்பேத்தத் தானே இந்தக் கலர்ல புடவை வாங்கிக் கொடுத்தீங்க" என்று கண்ணீர் உகுத்தவளைப் பரிதாபமாகப் பார்த்தான்.
"ஏதாவது உளறாதடி! நான் எதுக்கு உன்னை வெறுப்பேத்தணும்? ராஜேஷ் கல்யாணத்துல இந்தக் கலர்ல நீ புடவை கட்டியிருந்ததைப் பார்த்தேன். உனக்கு ரொம்பப் பொருத்தமா இருந்தது. அதான், கடைல அந்தக் கலர்ல பார்த்தும் ஆசையா வாங்கிட்டு வந்தேன். அதுக்கு என்னவெல்லாம் பேசற. என்னைப் பார்த்தா உனக்கு எப்படித் தோணுது? சே..." என்று தலையை அழுந்தக் கோதிக்கொண்டு கோபத்துடன் கார் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டான்.
அவளும் அழுதுக்கொண்டே தரையில் அமர்ந்தாள். பீச்சில் காரை நிறுத்திவிட்டு ஸ்டியரிங் வீலின் மீது கவிழ்ந்து கொண்டான். ‘தன் வாழ்க்கையில், என்றுமே அமாவாசைதானா!’ என்று அவனது இதயம் கேள்வி கேட்டது. குளிர்ந்த காற்றும், அமைதியும் அவனது மனத்தைச் சற்று இளக்க, நடந்தவைகளைப் பொறுமையாக யோசித்தான். ‘அவளது இந்த எதிர்பாராத் ஆக்ரோஷத்திற்கு ஏதாவது உள்ளர்த்தம் இருக்குமோ?’ என்று எண்ணினான்.
சித்தார்த் வெளியே சென்று இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது. சற்றுநேரம் அழுதுகொண்டிருந்தவள், தனது வார்த்தையின் வீரியம் அவனை எந்த அளவிற்குத் தாக்கியிருக்கும் என்று உணர்ந்தவளுக்கு, தன்னை நினைத்தே எரிச்சலாக வந்தது.
‘கோபமாகச் சென்றானே... எங்கே சென்றானோ?’ என்ற கவலையுடன் அறைக்குள்ளேயே உலவிக் கொண்டிருந்தாள். வெளியே கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டதும் மனத்தில் சிறு நிம்மதி பரவ, வேகமாக வந்து பெட்ஷீட்டை இழுத்து மூடிக்கொண்டு படுத்துக்கொண்டாள்.
அறைக்குள் வந்தவன் கட்டிலின் அருகிலிருந்த டேபிள் மேலே புடவை மடித்து வைக்கபட்டிருந்தது. திரும்பி அவளைப் பார்த்தான். அவள் முகத்தைப் பார்க்காவிட்டாலும், அவள் இன்னும் உறங்கவில்லை என்று அறிந்து கொண்டவன், எதுவும் சொல்லாமல் படுத்துக்கொண்டான்.
நாளுக்கு நாள் மனத்தில் கேள்விகள் மட்டும் பெருகிக் கொண்டே இருந்தன. அதற்கான விடைகள் காலத்தின் கைகளில் இருந்தன.