அந்நேரம் அங்கே வந்த கோணேஸ்வரன் “மருதும்மா குழந்தையை தூக்கிக் கொண்டு உள்ளே செல்!” என்று கத்தினார்.
காண்டீபனோ அவசரமாக தனது குடிசைக்குள் நுழைந்து வேர் இருக்குமிடம் அருகே அமர்ந்து கொண்டான். வந்திருப்பது கார்கோடகன் என்பதை அவன் உணர்ந்து கொண்டான்.
வெளியில் நடப்பவற்றை அறிந்து கொண்ட முருகபூபதி வந்து பார்த்துவிட்டு கோணேஸ்வரனை அழைத்துக் கொண்டு மாளிகையின் பின்புறம் உள்ள ஐய்யனாரின் சிலை முன் வந்து நின்றார்கள். இரு கை கூப்பி “ஐயா! மந்திரவாதியிடமிருந்து குழந்தையைக் காப்பாற்று” என்று வேண்டினார்கள்.
நெருப்புச் சுவற்றின் மீது நீரை தெளித்ததும் அது விலகி வழி கொடுக்கும் என்று எதிர்பார்க்க, அக்னியோ மேலும் கொழுந்து விட்டு எரிந்தது. அதைக் கண்டு மேலும் உக்கிரமானவன் மந்திரத்தை உச்சரித்து பாதை ஏற்படுத்திக் கொள்ள முனைந்தான்.
அந்நேரம் குதிரையின் குளம்பொலி வெகு அருகே கேட்க, எரிச்சலுடன் திரும்பிப் பார்த்தவனின் விழிகள் விரிந்தது.
வெள்ளைக் குதிரையின் மீது அடர்ந்த மீசையுடனும், கையில் அருவாளுடனும் அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த உருவத்தைப் பார்த்ததும் தான் வரக் கூடாத இடத்திற்கு வந்து விட்டோம் என்று புரிந்து போனது.
குதிரையின் மீதிருந்த உருவம் “ம்ம்ம்...” என்று உறும குதிரை கார்கோடகனை நோக்கி வர ஆரம்பித்தது.
அவ்வளவு தான் இனியும் தாமத்திதால் தனக்கு மரணம் தான் என்பதை உணர்ந்தவன் ஓட்டமெடுக்க ஆரம்பித்தான். குதிரையும் அவனை விரட்டிக் கொண்டு பின்னே சென்றது.
மலைப்பகுதியை அடையும் வரை இந்த ஓட்டம் தொடர்ந்தது. அவன் வனப்பகுதிக்குள் நுழைந்ததும் குதிரை மாயமாய் மறைந்து போனது.
உயிரை காத்துக் கொள்ள ஓடி வர வேண்டிய நிலையை எண்ணி ஆத்திரமடைந்த கார்கோடகன் வனத்திற்குள் ஒரு பேரழிவையே கொண்டு வந்து விட்டான். பார்க்கும் மரங்கள் எல்லாம் பிடுங்கி எறியப்பட்டது. அவனது மனநிலைக்கேற்ப கருமேகங்கள் சூழ்ந்து அமில மழை பொழிய ஆரம்பித்தது. வழியில் தென்பட்ட காணிக்குடி ஆண்களை எல்லாம் கொன்று தீர்த்தான்.
காட்டில் நடக்கும் பேயாட்டத்தைக் கண்டு அது கார்கோடனின் கோபம் தான் என்பதை உணர்ந்து கொண்டார்கள் செங்கோடனும் சடையரும்.
“அவன் வந்து கொண்டிருக்கிறான் செங்கோடா. இம்முறை உன் மகளை நீயே கொண்டு வந்து கொடுக்கும்படி சொல்லப் போகிறான்” என்றார் கவலையாக.
செங்கோடனும் அதை தான் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் கார்கோடகன் அவர்களிடம் வரவில்லை. தனது சக்தியை அதிகரிக்க வேண்டும் என்கிற எண்ணத்திற்கு வந்திருந்தான். அதனால் தனது கோபத்தை எல்லாம் புறந்தள்ளி விட்டு ஒரு குகையில் அடைந்து கொண்டான். அங்கேயே அமர்ந்து ஆழ்ந்த தவத்தில் தனது சக்தியை அதிகரிக்கும் வழியில் ஈடுபட ஆரம்பித்தான்.
அவன் அடங்கியதுமே வனம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. காலங்கள் உருண்டோடியது. கார்கோடகன் அந்தக் குகையை விட்டு வெளியே வரவே இல்லை. சுமார் பதினெட்டு வருடங்கள் கடந்திருந்தது. மிதுனமாலினியும் நஞ்சுண்டனும் சேர்ந்தே வளர்ந்தார்கள்.
அழகு பதுமையாக பதினெட்டு வயது பருவ மங்கையாக வளர்ந்திருந்தாள் மிதுனமாலினி. அன்று அவள் இந்த பூமிக்கு வந்த தினம். காளி சிலையின் முன் அமர்ந்திருந்த அவளை வாழ்த்தினார் கோணேஸ்வரன்.
ஜமீன் தம்பதியருக்கு அவளை பிரிய வேண்டுமே என்கிற கவலையோடு வாழ்த்தினார்கள். நஞ்சுண்டன் அப்பிறவியிலும் வாய் பேச முடியாதவனாகவே பிறந்திருந்தான்.
காண்டீபனிடம் அந்த மந்திர வேர் அடங்கிய பேழையை எடுத்து வர சொன்னார் கோணேஸ்வரன். அவன் எடுத்து வரவும் அதை திறந்து உள்ளே இருந்த வேரை எடுத்து மிதுனமாலினியின் தலையில் வைத்தார். அடுத்த நிமிடம் தனது பிறப்பிற்கான அனைத்தும் அதன் மூலம் தெரிந்தது. அதோடு கார்கோடகனை எதிர்க்கும் சக்தியும் அவளுக்கு வந்திருந்தது.
அதுவரை நளினமான பெண்ணாக இருந்தவளின் உடலில் உறுதி பிறந்தது. அங்கிருந்த அனைவரையும் பார்த்தவள் “என்னை வளர்த்தவர்களுக்கு நன்றி. பாதுகாத்தவர்களுக்கும் பெரும் நன்றி. இப்பிறப்பின் காரியத்தை நிறைவேற்றப் போகிறேன். இப்பிறவியில் வெற்றி பெற முடியாமல் போனால் மீண்டும் நானே வருவேன் உங்களின் குடும்பத்திலேயே பிறப்பேன். என் பகையை முடிப்பேன்” என்று கூறினாள்.
ஜமீன்தாரின் மனைவி அவளை அணைத்து கண்ணீர் விட்டு வழியனுப்பி வைத்தார்.
இருவரும் அங்கிருந்து காரையாறு வனப்பகுதி நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். மலையடிவாரத்திற்கு செல்லும் நேரம் குதிரையின் குளம்பொலி கேட்க ஆரம்பித்தது.
மிதுனமாலினி நின்று தங்களின் பின்னே ஒலிக்கும் சப்தத்தைக் கேட்டு எதிர்பார்ப்புடன் நின்றாள்.
வெள்ளைக் குதிரை மீது வந்து நின்றார் ஐய்யனார். இருவரின் கண்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டன.
“சென்று வா மகளே! மீண்டும் வா உனக்கா காத்திருப்பேன்” என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.
அவரின் வார்த்தைகள் சொன்ன செய்தியை உணர்ந்து கொண்டவளின் இதழ்களில் புன்னகை.
அதே நேரம் பதினெட்டு வருடங்கள் கழித்து குகையை விட்டு வெளியே வந்திருந்தான் கார்கோடகன்.
அத்தியாயம் – 4
வனத்தின் வாசத்தை அனுபவித்தவன் “வா மிதுனா! உன்னை வரவேற்க காத்திருக்கிறேன் விரைந்து வா!” என்றான் காடே அதிர.
மலையில் ஏறிக் கொண்டிருந்தவர்களின் காதில் அது விழுந்தது. நஞ்சுண்டன் மிதுனாவின் கரங்களைப் பற்றி “ம்..பா..ம்..பா” என்றான் தன்னெஞ்சில் அடித்து.
“நான் உன்னைப் பார்த்துக் கொள்கிறேன்” என்பதை தான் அவளிடம் அவ்வாறு கூறினான்.
மெல்லிய சிரிப்புடன் “இந்த மிதுனமாலினி அவனை அழிக்கவே பிறந்தவள் நஞ்சுண்டா! என் இனத்தை காப்பதற்கு உயிரையும் கொடுப்பேன்”.
காணிக்குடியில் தியானத்தில் அமர்ந்திருந்த சடையருக்கு மிதுனா வருவது தெரிந்து போனது. குடிசையிலிருந்து வெளியே வந்தவர் செங்கோடனிடம் சென்றார்.
“உன் மகள் வருகிறாள் செங்கோடா”.
“யுத்தம் தொடங்கப் போகிறதா சடையரே?”
“ஆம்! கடும் யுத்தம் நடக்கப் போகிறது. இந்த பதினெட்டு வருடத்தில் அசாத்திய சக்தியைப் பெற்று விட்டான் கார்கோடகன்”.
“என் மகளால் சமாளிக்க முடியுமா?”
கண்களை மூடித் திறந்தவர் “இந்த யுத்தம் உன் இனத்திற்கானது மட்டுமல்ல. நல்லவற்றிற்கும் தீய சக்திக்கும் நடக்கப் போகும் யுத்தம்”.
“நல்லவை என்றால் என் மகள் வென்றுவிடுவாள்” என்றவனின் முகத்தில் மகழ்ச்சி வெள்ளம்.
அதைப் பார்த்து எதுவும் சொல்லாமல் தலையசைத்துவிட்டு பெண்களின் பக்கம் திரும்பியவர் “சில நாட்களுக்கு நாம் யாரும் காட்டிற்குள் செல்ல முடியாது. அதனால் தானியங்கள், உணவுப் பொருட்கள் அனைத்தையும் சேமித்து வைத்து விடுங்கள்” என்றார்.
காண்டீபனோ அவசரமாக தனது குடிசைக்குள் நுழைந்து வேர் இருக்குமிடம் அருகே அமர்ந்து கொண்டான். வந்திருப்பது கார்கோடகன் என்பதை அவன் உணர்ந்து கொண்டான்.
வெளியில் நடப்பவற்றை அறிந்து கொண்ட முருகபூபதி வந்து பார்த்துவிட்டு கோணேஸ்வரனை அழைத்துக் கொண்டு மாளிகையின் பின்புறம் உள்ள ஐய்யனாரின் சிலை முன் வந்து நின்றார்கள். இரு கை கூப்பி “ஐயா! மந்திரவாதியிடமிருந்து குழந்தையைக் காப்பாற்று” என்று வேண்டினார்கள்.
நெருப்புச் சுவற்றின் மீது நீரை தெளித்ததும் அது விலகி வழி கொடுக்கும் என்று எதிர்பார்க்க, அக்னியோ மேலும் கொழுந்து விட்டு எரிந்தது. அதைக் கண்டு மேலும் உக்கிரமானவன் மந்திரத்தை உச்சரித்து பாதை ஏற்படுத்திக் கொள்ள முனைந்தான்.
அந்நேரம் குதிரையின் குளம்பொலி வெகு அருகே கேட்க, எரிச்சலுடன் திரும்பிப் பார்த்தவனின் விழிகள் விரிந்தது.
வெள்ளைக் குதிரையின் மீது அடர்ந்த மீசையுடனும், கையில் அருவாளுடனும் அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த உருவத்தைப் பார்த்ததும் தான் வரக் கூடாத இடத்திற்கு வந்து விட்டோம் என்று புரிந்து போனது.
குதிரையின் மீதிருந்த உருவம் “ம்ம்ம்...” என்று உறும குதிரை கார்கோடகனை நோக்கி வர ஆரம்பித்தது.
அவ்வளவு தான் இனியும் தாமத்திதால் தனக்கு மரணம் தான் என்பதை உணர்ந்தவன் ஓட்டமெடுக்க ஆரம்பித்தான். குதிரையும் அவனை விரட்டிக் கொண்டு பின்னே சென்றது.
மலைப்பகுதியை அடையும் வரை இந்த ஓட்டம் தொடர்ந்தது. அவன் வனப்பகுதிக்குள் நுழைந்ததும் குதிரை மாயமாய் மறைந்து போனது.
உயிரை காத்துக் கொள்ள ஓடி வர வேண்டிய நிலையை எண்ணி ஆத்திரமடைந்த கார்கோடகன் வனத்திற்குள் ஒரு பேரழிவையே கொண்டு வந்து விட்டான். பார்க்கும் மரங்கள் எல்லாம் பிடுங்கி எறியப்பட்டது. அவனது மனநிலைக்கேற்ப கருமேகங்கள் சூழ்ந்து அமில மழை பொழிய ஆரம்பித்தது. வழியில் தென்பட்ட காணிக்குடி ஆண்களை எல்லாம் கொன்று தீர்த்தான்.
காட்டில் நடக்கும் பேயாட்டத்தைக் கண்டு அது கார்கோடனின் கோபம் தான் என்பதை உணர்ந்து கொண்டார்கள் செங்கோடனும் சடையரும்.
“அவன் வந்து கொண்டிருக்கிறான் செங்கோடா. இம்முறை உன் மகளை நீயே கொண்டு வந்து கொடுக்கும்படி சொல்லப் போகிறான்” என்றார் கவலையாக.
செங்கோடனும் அதை தான் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் கார்கோடகன் அவர்களிடம் வரவில்லை. தனது சக்தியை அதிகரிக்க வேண்டும் என்கிற எண்ணத்திற்கு வந்திருந்தான். அதனால் தனது கோபத்தை எல்லாம் புறந்தள்ளி விட்டு ஒரு குகையில் அடைந்து கொண்டான். அங்கேயே அமர்ந்து ஆழ்ந்த தவத்தில் தனது சக்தியை அதிகரிக்கும் வழியில் ஈடுபட ஆரம்பித்தான்.
அவன் அடங்கியதுமே வனம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. காலங்கள் உருண்டோடியது. கார்கோடகன் அந்தக் குகையை விட்டு வெளியே வரவே இல்லை. சுமார் பதினெட்டு வருடங்கள் கடந்திருந்தது. மிதுனமாலினியும் நஞ்சுண்டனும் சேர்ந்தே வளர்ந்தார்கள்.
அழகு பதுமையாக பதினெட்டு வயது பருவ மங்கையாக வளர்ந்திருந்தாள் மிதுனமாலினி. அன்று அவள் இந்த பூமிக்கு வந்த தினம். காளி சிலையின் முன் அமர்ந்திருந்த அவளை வாழ்த்தினார் கோணேஸ்வரன்.
ஜமீன் தம்பதியருக்கு அவளை பிரிய வேண்டுமே என்கிற கவலையோடு வாழ்த்தினார்கள். நஞ்சுண்டன் அப்பிறவியிலும் வாய் பேச முடியாதவனாகவே பிறந்திருந்தான்.
காண்டீபனிடம் அந்த மந்திர வேர் அடங்கிய பேழையை எடுத்து வர சொன்னார் கோணேஸ்வரன். அவன் எடுத்து வரவும் அதை திறந்து உள்ளே இருந்த வேரை எடுத்து மிதுனமாலினியின் தலையில் வைத்தார். அடுத்த நிமிடம் தனது பிறப்பிற்கான அனைத்தும் அதன் மூலம் தெரிந்தது. அதோடு கார்கோடகனை எதிர்க்கும் சக்தியும் அவளுக்கு வந்திருந்தது.
அதுவரை நளினமான பெண்ணாக இருந்தவளின் உடலில் உறுதி பிறந்தது. அங்கிருந்த அனைவரையும் பார்த்தவள் “என்னை வளர்த்தவர்களுக்கு நன்றி. பாதுகாத்தவர்களுக்கும் பெரும் நன்றி. இப்பிறப்பின் காரியத்தை நிறைவேற்றப் போகிறேன். இப்பிறவியில் வெற்றி பெற முடியாமல் போனால் மீண்டும் நானே வருவேன் உங்களின் குடும்பத்திலேயே பிறப்பேன். என் பகையை முடிப்பேன்” என்று கூறினாள்.
ஜமீன்தாரின் மனைவி அவளை அணைத்து கண்ணீர் விட்டு வழியனுப்பி வைத்தார்.
இருவரும் அங்கிருந்து காரையாறு வனப்பகுதி நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். மலையடிவாரத்திற்கு செல்லும் நேரம் குதிரையின் குளம்பொலி கேட்க ஆரம்பித்தது.
மிதுனமாலினி நின்று தங்களின் பின்னே ஒலிக்கும் சப்தத்தைக் கேட்டு எதிர்பார்ப்புடன் நின்றாள்.
வெள்ளைக் குதிரை மீது வந்து நின்றார் ஐய்யனார். இருவரின் கண்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டன.
“சென்று வா மகளே! மீண்டும் வா உனக்கா காத்திருப்பேன்” என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.
அவரின் வார்த்தைகள் சொன்ன செய்தியை உணர்ந்து கொண்டவளின் இதழ்களில் புன்னகை.
அதே நேரம் பதினெட்டு வருடங்கள் கழித்து குகையை விட்டு வெளியே வந்திருந்தான் கார்கோடகன்.
அத்தியாயம் – 4
வனத்தின் வாசத்தை அனுபவித்தவன் “வா மிதுனா! உன்னை வரவேற்க காத்திருக்கிறேன் விரைந்து வா!” என்றான் காடே அதிர.
மலையில் ஏறிக் கொண்டிருந்தவர்களின் காதில் அது விழுந்தது. நஞ்சுண்டன் மிதுனாவின் கரங்களைப் பற்றி “ம்..பா..ம்..பா” என்றான் தன்னெஞ்சில் அடித்து.
“நான் உன்னைப் பார்த்துக் கொள்கிறேன்” என்பதை தான் அவளிடம் அவ்வாறு கூறினான்.
மெல்லிய சிரிப்புடன் “இந்த மிதுனமாலினி அவனை அழிக்கவே பிறந்தவள் நஞ்சுண்டா! என் இனத்தை காப்பதற்கு உயிரையும் கொடுப்பேன்”.
காணிக்குடியில் தியானத்தில் அமர்ந்திருந்த சடையருக்கு மிதுனா வருவது தெரிந்து போனது. குடிசையிலிருந்து வெளியே வந்தவர் செங்கோடனிடம் சென்றார்.
“உன் மகள் வருகிறாள் செங்கோடா”.
“யுத்தம் தொடங்கப் போகிறதா சடையரே?”
“ஆம்! கடும் யுத்தம் நடக்கப் போகிறது. இந்த பதினெட்டு வருடத்தில் அசாத்திய சக்தியைப் பெற்று விட்டான் கார்கோடகன்”.
“என் மகளால் சமாளிக்க முடியுமா?”
கண்களை மூடித் திறந்தவர் “இந்த யுத்தம் உன் இனத்திற்கானது மட்டுமல்ல. நல்லவற்றிற்கும் தீய சக்திக்கும் நடக்கப் போகும் யுத்தம்”.
“நல்லவை என்றால் என் மகள் வென்றுவிடுவாள்” என்றவனின் முகத்தில் மகழ்ச்சி வெள்ளம்.
அதைப் பார்த்து எதுவும் சொல்லாமல் தலையசைத்துவிட்டு பெண்களின் பக்கம் திரும்பியவர் “சில நாட்களுக்கு நாம் யாரும் காட்டிற்குள் செல்ல முடியாது. அதனால் தானியங்கள், உணவுப் பொருட்கள் அனைத்தையும் சேமித்து வைத்து விடுங்கள்” என்றார்.