தனது இருக்கையில் அமர்ந்து அன்று பதிவான வழக்கு குறிப்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தான் செழியன். ஆர்- 7 காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கின்றான்.
அவனது மேஜையின் மீதிருந்த போன் அடிக்க ஆரம்பித்தது. அவன் அருகே நின்றிருந்த ஏகாம்பரத்தை பார்க்க, அவர் உடனே போனை எடுத்தார். எதிர்புறம் இருந்தவரிடம் பேசி விவரங்களை தெரிந்து கொண்ட பின்னர் “சார்! காந்திமதி நகர்ல ஒரு கொலை நடந்திருக்கு”.
பார்த்துக் கொண்டிருந்த கோப்புகளை மூடி வைத்து விட்டு எழுந்து கொண்டவன் “வாங்க போகலாம்! போகும் போது விவரங்களை பேசிக்கலாம்” என்றபடி விறுவிறுவென நடக்க ஆரம்பித்தான்.
அவன் பின்னோடு ஓடியவர் ஜீப்பில் ஏறி அமர்ந்து கொள்ள, கொலை நடந்த இடத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது. வழக்கு பற்றிய விவரங்களை எல்லாம் அவரிடம் கேட்டறிந்து கொண்டான். காந்திமதி நகரில் சம்பவம் நடந்த வீட்டின் முன் சென்று இறங்கியவன், அங்கிருந்த கூட்டத்தை விலக்கிவிட்டு உள்ளே நுழைந்தான்.
அதுவொரு தனி வீடு. கீழே வாடகைக்கு விடப்பட்டு இருந்தது. மேலே ஓனர் குடும்பம் தங்கி இருந்தார்கள். வாசல் கதவை தாண்டி உள்ளே நுழைந்தவனின் பார்வையில் ஹாலின் நடுவே கிடந்த பிணத்தின் மீது படிந்தது. இறந்து கிடந்தவளின் வயது முப்பதுக்குள் தான் இருக்கும்.
பிணத்தின் அருகே சென்றவனின் பார்வை உடலெங்கும் ஆராயத் தொடங்கியது. உடலில் எந்தவொரு சிறு காயமோ, கீறலோ எதுவுமில்லை. இறந்து கிடந்தவளின் முகத்திலும் கடைசி நிமிட வலியோ, வேதனையோ எதுவும் தெரியவில்லை. மொத்தத்தில் உறங்குவது போன்ற தோற்றத்தில் தான் இருந்தாள்.
பிணத்தின் மீதிருந்த பார்வையை விலக்கிக் கொண்டவன் சுற்றுபுறத்தை கண்காளாலேயே அலசத் தொடங்கினான். அதோடு ஏகாம்பரத்திடம் வழக்கு சம்பந்தமான விவரங்களை கேட்கவும் தொடங்கினான்.
“யார் முதல்ல பார்த்தது?”
“வேலைக்கு வரவங்க தான் சார். காலையில வந்து பெல் அடிச்சு திறக்கலேன்னதும் ஓனர் கிட்ட சொல்லி இருக்காங்க. அவங்க தான் நமக்கு இன்பார்ம் பண்ணினாங்க”.
“கோபால் கிட்ட வெளில இருக்கிற கூட்டத்தை கலைக்க சொல்லுங்க. ஓனரை கூப்பிடுங்க” என்றவனது பார்வை அங்குலம் அங்குலமாக ஒவ்வொரு இடத்தையும் ஆராய்ந்தது.
சற்று நேரத்திற்குள் வெளியில் சப்தம் குறைந்திருக்க, ஏகாம்பரத்துடன் அறுபது வயதுடைய ஒருவர் உள்ளே வந்தார்.
“சார் இவர் தணிகாச்சலம் வீட்டு ஓனர்”.
“இவங்கள பற்றிய விவரங்களை சொல்லுங்க”.
கண்களில் கலவரத்துடன் “இந்த பொண்ணு பேரு சிந்து. ஐடி கம்பனியில் வேலை பார்க்குது சார்”.
“ம்ம்..இந்த பொண்ணு மட்டும் தான் இருந்தாங்களா? எத்தனை வருடமா இங்கே இருக்காங்க?”
“இல்ல சார்! ஒரு பையனும் இருக்கான். நாலு வருஷமா இருக்காங்க” என்று இழுத்தார்.
குனிந்து எதையோ எடுத்தவன் சட்டென்று திரும்பி “லிவிங் டுகெதர்ல இருந்தாங்களா?”
“ஆமாம் சார்!”
“அவனை பற்றி சொல்லுங்க? அவனுக்கு இன்பார்ம் பண்ணியாச்சா?”
“அவன் பேர் நரேஷ். ரொம்ப நல்ல பையன் சார். வேலை விஷயமா மும்பை போயிருக்கான். சிந்துவை பார்த்துக்க சொல்லிட்டு தான் போனான்” என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்.
“ம்ம்..சரி சொல்லுங்க இந்த பெண்ணுக்கும் அவனுக்கும் ரிலேஷன்ஷிப் எப்படி இருந்தது? அதாவது கொலை செய்கிற அளவுக்கு அவங்களுக்குள்ள எதுவும்?”
“ஐயோ! இல்லவே இல்ல சார். கல்யாணமான தம்பதிகள் கூட இத்தனை ஒத்துமையாக இருப்பாங்களான்னு கேட்டா சந்தேகம் தான். ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் அவ்வளவு பாசமா இருந்தாங்க. நான் கூட பலமுறை சொல்லி இருக்கேன். இவ்வளவு அன்பா இருக்கிற நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு கேட்டிருக்கேன் ”.
அவனது அவர் சொல்லும் விஷயங்களை கேட்டுக் கொண்டிருந்தாலும், பார்வை வீட்டை சுற்றியே வந்து கொண்டிருந்தது. சிறு விஷயங்கள் கூட அவன் கண்களுக்கு தப்பவில்லை. அனைத்தையும் கேட்டுக் கொண்டவன் ஏகாம்பரத்திடம் நரேஷின் விவரங்களையும், சிந்துவின் பெற்றோர்களின் விவரங்களையும் பெற்றுக் கொள்ள கூறினான். அதோடு நரேஷ் வந்திறங்கியதும் உடனே தகவல் தெரிவிக்கும்படி கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
அவனது சிந்தனை முழுவதும் இந்த வழக்கைப் பற்றியே ஓடியது. இதுவரை பார்த்ததில் எந்த க்ளுவும் கிடைக்கவில்லை. சண்டை நடந்ததற்கான ஆதாரமோ, அடித்து உதைதற்க்கான ஆதாரமோ உடலிலும் இல்லை. பின்னர் எப்படி இந்த மரணம் நிகழ்ந்தது? அவர்கள் இருவருக்குள்ளும் எந்த பிரச்னையும் இல்லை. கொலைக்கான காரணம் என்ன?”
சுமார் இரண்டு மணி நேரம் கடந்த பின்னர் நரேஷ் வந்து விட்டதாக தகவல் வந்தது. அதற்குள் செழியன் சில பல விவரங்களை சேகரித்திருந்தான். அதோடு அரசாங்க பிணவறையில் நரேஷிற்காக காத்திருந்தான்.
ஒல்லியான உருவத்தோடும் பால்வடியும் முகத்தோடும் கலங்கிய விழிகளோடும் தன் முன்னே வந்து நின்றவனை கூர்மையான விழிகளால் ஆராய்ந்தான். உடலில் ஒரு நடுக்கம், கண்களில் கலக்கம் என எதிரே நின்றவனை பார்த்து “என் கூட வாங்க” என்றபடி முன்னே நடந்தான்.
அவனோ “சார்! எப்..எப்படி?” என்றான் உள்ளுக்குள் எழுந்த கேவலை அடக்கியபடி.
சட்டென்று நின்றவன் “நீங்க தான் சொல்லணும்?” என்றான்.
அதில் அதிர்ந்து போய் கண்ணீர் கன்னங்களை தொட “என்ன...என்ன சொல்றீங்க?”.
செழியன் அவனது கண்ணீரையோ உணர்வுகளையோ கண்டு கொள்ளவில்லை. இது போன்று தினமும் பலரை சந்திப்பவனுக்கு அவனது உணர்வு சாதரணமாக தெரிந்தது. அதோடு அவனது சந்தேக லிஸ்ட்டில் முதலில் இருப்பவனும் அவன் தான். அதனால் சிந்துவின் பிணம் இருந்த இடத்திற்கு சென்று நின்றான்.
அதே சமயம் வெளியில் கதறலும், அழுகை சப்தமும் கேட்க ஏகாம்பரத்தை அழைத்து என்னவென்று பார்க்க கூறினான். சிந்துவின் உடலைக் கண்டதும் பாய்ந்து கட்டிக் கொண்டு கதற முயன்றான். அருகே இருந்த பிணவறை காப்பாளார்கள் அவனை பிடித்து தங்களின் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதே நேரம் சிந்துவின் பெற்றோரும் கண்ணீருடனும், அழுகையுடனும் வந்து விட்டிருந்தனர். அவர்கள் அனைவரையும் பிணத்தின் அருகே செல்லாதவாறு பார்த்துக் கொள்ள ஏற்பாடுகளை செய்தவன் தள்ளி நின்று ஒவ்வொருவரின் நடவடிக்கையையும் கவனித்தான்.
சிந்துவின் பெற்றோர் மகளை கண்டு கதறினாலும் நரேஷை அவர்கள் திட்டவோ, சாபமிடவோ செய்யவில்லை. அவனும் அவர்கள் அருகே செல்லவில்லை என்றாலும் சிந்துவை பார்த்து கண்ணீர் விட்டபடியே நின்றான்.
அவர்கள் அனைவரையும் பிணவறையிலிருந்து வெளியேற சொல்லிவிட்டு தானும் வெளியேறினான். போனில் டாக்டரை தொடர்பு கொண்டு எப்போது பிரேத பரிசோதனை ஆரம்பிக்கப்படும் என்கிற விவரத்தையும் அறிந்து கொண்டவன் பார்வை நரேஷின் மீது விழுந்தது.
அவனது மேஜையின் மீதிருந்த போன் அடிக்க ஆரம்பித்தது. அவன் அருகே நின்றிருந்த ஏகாம்பரத்தை பார்க்க, அவர் உடனே போனை எடுத்தார். எதிர்புறம் இருந்தவரிடம் பேசி விவரங்களை தெரிந்து கொண்ட பின்னர் “சார்! காந்திமதி நகர்ல ஒரு கொலை நடந்திருக்கு”.
பார்த்துக் கொண்டிருந்த கோப்புகளை மூடி வைத்து விட்டு எழுந்து கொண்டவன் “வாங்க போகலாம்! போகும் போது விவரங்களை பேசிக்கலாம்” என்றபடி விறுவிறுவென நடக்க ஆரம்பித்தான்.
அவன் பின்னோடு ஓடியவர் ஜீப்பில் ஏறி அமர்ந்து கொள்ள, கொலை நடந்த இடத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது. வழக்கு பற்றிய விவரங்களை எல்லாம் அவரிடம் கேட்டறிந்து கொண்டான். காந்திமதி நகரில் சம்பவம் நடந்த வீட்டின் முன் சென்று இறங்கியவன், அங்கிருந்த கூட்டத்தை விலக்கிவிட்டு உள்ளே நுழைந்தான்.
அதுவொரு தனி வீடு. கீழே வாடகைக்கு விடப்பட்டு இருந்தது. மேலே ஓனர் குடும்பம் தங்கி இருந்தார்கள். வாசல் கதவை தாண்டி உள்ளே நுழைந்தவனின் பார்வையில் ஹாலின் நடுவே கிடந்த பிணத்தின் மீது படிந்தது. இறந்து கிடந்தவளின் வயது முப்பதுக்குள் தான் இருக்கும்.
பிணத்தின் அருகே சென்றவனின் பார்வை உடலெங்கும் ஆராயத் தொடங்கியது. உடலில் எந்தவொரு சிறு காயமோ, கீறலோ எதுவுமில்லை. இறந்து கிடந்தவளின் முகத்திலும் கடைசி நிமிட வலியோ, வேதனையோ எதுவும் தெரியவில்லை. மொத்தத்தில் உறங்குவது போன்ற தோற்றத்தில் தான் இருந்தாள்.
பிணத்தின் மீதிருந்த பார்வையை விலக்கிக் கொண்டவன் சுற்றுபுறத்தை கண்காளாலேயே அலசத் தொடங்கினான். அதோடு ஏகாம்பரத்திடம் வழக்கு சம்பந்தமான விவரங்களை கேட்கவும் தொடங்கினான்.
“யார் முதல்ல பார்த்தது?”
“வேலைக்கு வரவங்க தான் சார். காலையில வந்து பெல் அடிச்சு திறக்கலேன்னதும் ஓனர் கிட்ட சொல்லி இருக்காங்க. அவங்க தான் நமக்கு இன்பார்ம் பண்ணினாங்க”.
“கோபால் கிட்ட வெளில இருக்கிற கூட்டத்தை கலைக்க சொல்லுங்க. ஓனரை கூப்பிடுங்க” என்றவனது பார்வை அங்குலம் அங்குலமாக ஒவ்வொரு இடத்தையும் ஆராய்ந்தது.
சற்று நேரத்திற்குள் வெளியில் சப்தம் குறைந்திருக்க, ஏகாம்பரத்துடன் அறுபது வயதுடைய ஒருவர் உள்ளே வந்தார்.
“சார் இவர் தணிகாச்சலம் வீட்டு ஓனர்”.
“இவங்கள பற்றிய விவரங்களை சொல்லுங்க”.
கண்களில் கலவரத்துடன் “இந்த பொண்ணு பேரு சிந்து. ஐடி கம்பனியில் வேலை பார்க்குது சார்”.
“ம்ம்..இந்த பொண்ணு மட்டும் தான் இருந்தாங்களா? எத்தனை வருடமா இங்கே இருக்காங்க?”
“இல்ல சார்! ஒரு பையனும் இருக்கான். நாலு வருஷமா இருக்காங்க” என்று இழுத்தார்.
குனிந்து எதையோ எடுத்தவன் சட்டென்று திரும்பி “லிவிங் டுகெதர்ல இருந்தாங்களா?”
“ஆமாம் சார்!”
“அவனை பற்றி சொல்லுங்க? அவனுக்கு இன்பார்ம் பண்ணியாச்சா?”
“அவன் பேர் நரேஷ். ரொம்ப நல்ல பையன் சார். வேலை விஷயமா மும்பை போயிருக்கான். சிந்துவை பார்த்துக்க சொல்லிட்டு தான் போனான்” என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்.
“ம்ம்..சரி சொல்லுங்க இந்த பெண்ணுக்கும் அவனுக்கும் ரிலேஷன்ஷிப் எப்படி இருந்தது? அதாவது கொலை செய்கிற அளவுக்கு அவங்களுக்குள்ள எதுவும்?”
“ஐயோ! இல்லவே இல்ல சார். கல்யாணமான தம்பதிகள் கூட இத்தனை ஒத்துமையாக இருப்பாங்களான்னு கேட்டா சந்தேகம் தான். ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் அவ்வளவு பாசமா இருந்தாங்க. நான் கூட பலமுறை சொல்லி இருக்கேன். இவ்வளவு அன்பா இருக்கிற நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு கேட்டிருக்கேன் ”.
அவனது அவர் சொல்லும் விஷயங்களை கேட்டுக் கொண்டிருந்தாலும், பார்வை வீட்டை சுற்றியே வந்து கொண்டிருந்தது. சிறு விஷயங்கள் கூட அவன் கண்களுக்கு தப்பவில்லை. அனைத்தையும் கேட்டுக் கொண்டவன் ஏகாம்பரத்திடம் நரேஷின் விவரங்களையும், சிந்துவின் பெற்றோர்களின் விவரங்களையும் பெற்றுக் கொள்ள கூறினான். அதோடு நரேஷ் வந்திறங்கியதும் உடனே தகவல் தெரிவிக்கும்படி கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
அவனது சிந்தனை முழுவதும் இந்த வழக்கைப் பற்றியே ஓடியது. இதுவரை பார்த்ததில் எந்த க்ளுவும் கிடைக்கவில்லை. சண்டை நடந்ததற்கான ஆதாரமோ, அடித்து உதைதற்க்கான ஆதாரமோ உடலிலும் இல்லை. பின்னர் எப்படி இந்த மரணம் நிகழ்ந்தது? அவர்கள் இருவருக்குள்ளும் எந்த பிரச்னையும் இல்லை. கொலைக்கான காரணம் என்ன?”
சுமார் இரண்டு மணி நேரம் கடந்த பின்னர் நரேஷ் வந்து விட்டதாக தகவல் வந்தது. அதற்குள் செழியன் சில பல விவரங்களை சேகரித்திருந்தான். அதோடு அரசாங்க பிணவறையில் நரேஷிற்காக காத்திருந்தான்.
ஒல்லியான உருவத்தோடும் பால்வடியும் முகத்தோடும் கலங்கிய விழிகளோடும் தன் முன்னே வந்து நின்றவனை கூர்மையான விழிகளால் ஆராய்ந்தான். உடலில் ஒரு நடுக்கம், கண்களில் கலக்கம் என எதிரே நின்றவனை பார்த்து “என் கூட வாங்க” என்றபடி முன்னே நடந்தான்.
அவனோ “சார்! எப்..எப்படி?” என்றான் உள்ளுக்குள் எழுந்த கேவலை அடக்கியபடி.
சட்டென்று நின்றவன் “நீங்க தான் சொல்லணும்?” என்றான்.
அதில் அதிர்ந்து போய் கண்ணீர் கன்னங்களை தொட “என்ன...என்ன சொல்றீங்க?”.
செழியன் அவனது கண்ணீரையோ உணர்வுகளையோ கண்டு கொள்ளவில்லை. இது போன்று தினமும் பலரை சந்திப்பவனுக்கு அவனது உணர்வு சாதரணமாக தெரிந்தது. அதோடு அவனது சந்தேக லிஸ்ட்டில் முதலில் இருப்பவனும் அவன் தான். அதனால் சிந்துவின் பிணம் இருந்த இடத்திற்கு சென்று நின்றான்.
அதே சமயம் வெளியில் கதறலும், அழுகை சப்தமும் கேட்க ஏகாம்பரத்தை அழைத்து என்னவென்று பார்க்க கூறினான். சிந்துவின் உடலைக் கண்டதும் பாய்ந்து கட்டிக் கொண்டு கதற முயன்றான். அருகே இருந்த பிணவறை காப்பாளார்கள் அவனை பிடித்து தங்களின் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதே நேரம் சிந்துவின் பெற்றோரும் கண்ணீருடனும், அழுகையுடனும் வந்து விட்டிருந்தனர். அவர்கள் அனைவரையும் பிணத்தின் அருகே செல்லாதவாறு பார்த்துக் கொள்ள ஏற்பாடுகளை செய்தவன் தள்ளி நின்று ஒவ்வொருவரின் நடவடிக்கையையும் கவனித்தான்.
சிந்துவின் பெற்றோர் மகளை கண்டு கதறினாலும் நரேஷை அவர்கள் திட்டவோ, சாபமிடவோ செய்யவில்லை. அவனும் அவர்கள் அருகே செல்லவில்லை என்றாலும் சிந்துவை பார்த்து கண்ணீர் விட்டபடியே நின்றான்.
அவர்கள் அனைவரையும் பிணவறையிலிருந்து வெளியேற சொல்லிவிட்டு தானும் வெளியேறினான். போனில் டாக்டரை தொடர்பு கொண்டு எப்போது பிரேத பரிசோதனை ஆரம்பிக்கப்படும் என்கிற விவரத்தையும் அறிந்து கொண்டவன் பார்வை நரேஷின் மீது விழுந்தது.