அத்தியாயம் - 1
அமாவாசை இரவு இருளடர்ந்த காட்டுப் பகுதி. வண்டுகளின் ரீங்காரமும், மிருகங்களின் உறுமல் சத்தமும் காட்டையே நடுங்க வைத்துக் கொண்டிருந்தது.
வழுக்குப் பாறையருகே அமர்ந்து வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தது அந்த சிறு உருவம். முழங்கால்களை கட்டிக் கொண்டு வாயில் எச்சில் ஒழுக வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த உருவத்தின் கண்களில் ஒரு மின்னல்.
சட்டென்று எழுந்து நின்று ஆகாயத்தில் தெரிந்த வெளிச்சத்தைக் கண்டு “உர்..ரூம்ம்ம்...உர்..” என்று சத்தம் எழுப்பியது.
ஆவேசமாக நெஞ்சில் தட்டிக் கொண்டு இரு கைகளை உயரே தூக்கி, கண்களில் கண்ணீர் வழிய “ம்ம்பா...ம்ம்பா..” என்று ஆடியது.
அப்போது சருகுகளின் ஓசை எழும்ப வேகமாக ஓடி வந்த மற்றொரு உருவம் “ஏட்டி கோட்டி! பின்னிரவு நேரத்தில இங்கன வந்து என் உசிர வாங்கு” என்று அவள் தோள் பற்றி இழுத்தாள்.
அந்த சின்ன உருவமோ கண்களில் உற்சாகம் தென்பட தனது தோளைப் பற்றியவளின் கையைப் பற்றி தான் பார்த்த திசையைக் காட்டி “டுர்ர்..ம்ம்பா” என்றது.
சிறு சலிப்புடன் அந்த திசையில் பார்த்து விட்டு கையைப் பிடித்து இழுத்து “இருளு! இன்னும் செத்த நேரமிருந்தா நம்மள எதாவது ஒரு மிருகம் அடிச்சிபுடும்...வெரசா வா” என்று நடக்க ஆரம்பித்தாள்.
சற்று நேரத்தில் காணிகுடியை அடைந்து இருவரும் உள்ளே நுழைந்து கதவடைத்த பின், இருளாயி யோசனையுடனே நின்றிருந்தாள்.
அவளது முகத்தில் தெரிந்த உணர்வுகள் இதுவரை அவளிடத்தில் தோன்றாதது.
பச்சை அவளைப் பிடித்து இழுத்து அமர வைத்தாள்.
அவளோ சத்தமாக சிரிக்க ஆரம்பித்தாள். நெஞ்சில் வேகம்-வேகமாக அடித்துக் கொண்டு “வா!..வா!” என்றாள்.
அதே நேரம் காரையாறு வனப்பகுதியில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலில் இருளில் இடுப்பில் சிறிய துண்டும், தலையெல்லாம் சிக்குப் பிடித்து போன முடியுடனும், கழுத்தில் மிகப் பெரிய ருத்திராட்சத்துடனும் அமர்ந்திருந்தவன் வேகமாக எழுந்து நின்று தன்னிடம் இருந்த விபூதியை எடுத்து உடலெல்லாம் பூசிக் கொள்ள ஆரம்பித்தான்.
சிறிது நேரம் கண் மூடி நின்றவன் “மிதுனமாலினி வந்துட்டா...கார்கோடகா உனக்கு சவால் விட மிதுனமாலினி வந்துட்டா” என்று ஆவேசமாக கத்தினான்.
அதே நேரம் அம்பாசமுத்திரத்திலிருந்து பாபநாசம் மலைத்தொடரை நோக்கி ஒரு கார் பயணிக்க ஆரம்பித்திருந்தது. அதில் கனிகாவும், அஸ்வத்தும் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.
தங்கம்பட்டி ஜமீனின் வாரிசு அவள். அஸ்வத் அவளின் நண்பன். அவனும் அவளும் வெளிநாட்டில் ஒன்றாகப் படித்தவர்கள். முதன்முறையாக தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறான். கனிகா பிறந்தது முதல் வெளிநாட்டில் தான் இருந்திருக்கிறாள். அவளின் பெற்றோர் ஊருக்கு அழைத்து வந்ததில்லை. அவள் ஊருக்கு செல்வதையும் அவர்கள் விரும்பியதில்லை.
ஆனால் இந்த முறை விடாபிடியாக அஸ்வத்துடன் தானும் இந்தியா செல்வேன் என்று சொல்லி ஊருக்கு வந்து விட்டாள்.
“கனி! நாம மார்னிங் வந்திருக்கலாம். நேச்ச்சரை ரசித்துக் கொண்டே போயிருக்கலாம்”.
“நோ வே அஸ்! நீ தான் பார்த்தேயில்ல. நாம வந்து இறங்கியதிலிருந்து அந்தக் கிழவி என்னை ஊருக்குப் போகச் சொல்லி மிரட்டிகிட்டே இருந்ததை”.
“ம்ம்...ஐ தின்க் ஓல்ட் லேடிக்கு சைக்கலாஜிக்கல் இஷ்யூஸ் இருக்கு”.
“அதை விடு! நாம விடிகிற நேரத்துக்குள்ள பாணதீர்த்த அருவி கிட்ட போயிடனும். அந்த ரேஞ்சர் அது தான் சொன்னார். அப்போ தான் நாம காட்டுக்குள்ள போனது யாருக்கும் தெரியாம போகும்னு சொன்னார்”.
இருவரும் பேசிக் கொண்டே நகரத்தின் எல்லையைக் கடந்து வனத்தின் எல்லைக்குள் நுழைந்திருந்தனர். அவர்களின் கார் வனத்தினுள் நுழையும் போது அதுவரை அமைதியாக இருந்த சூழ்நிலை மாறி காற்றின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. எங்கிருந்தோ மேகங்கள் எல்லாம் வனத்தின் வான்பரப்பை சூழ ஆரம்பித்தது.
கருமேகங்கள் வனத்தின் அடர்த்தியை மேலும் கூட்டியது. மண் வாசனை எழ காற்றின் வேகத்தோடு லேசான தூறல் விழ ஆரம்பித்தது. மலையின் மீது ஏற ஆரம்பித்த கார் திணற ஆரம்பித்தது. மழை பொழிய இடியும் சேர்ந்து கொண்டது.
“ஒ மை காட்! என்ன இது அஸ்?”
“எஸ்! பாரெஸ்ட்டில் இப்படித்தான் இருக்கும். டோன்ட் வொர்ரி” என்றபடி எதிரே இருந்த பாதையை உற்று நோக்கிக் கொண்டு வண்டியை செலுத்த ஆரம்பித்தான்.
அமாவாசை இரவு இருளடர்ந்த காட்டுப் பகுதி. வண்டுகளின் ரீங்காரமும், மிருகங்களின் உறுமல் சத்தமும் காட்டையே நடுங்க வைத்துக் கொண்டிருந்தது.
வழுக்குப் பாறையருகே அமர்ந்து வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தது அந்த சிறு உருவம். முழங்கால்களை கட்டிக் கொண்டு வாயில் எச்சில் ஒழுக வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த உருவத்தின் கண்களில் ஒரு மின்னல்.
சட்டென்று எழுந்து நின்று ஆகாயத்தில் தெரிந்த வெளிச்சத்தைக் கண்டு “உர்..ரூம்ம்ம்...உர்..” என்று சத்தம் எழுப்பியது.
ஆவேசமாக நெஞ்சில் தட்டிக் கொண்டு இரு கைகளை உயரே தூக்கி, கண்களில் கண்ணீர் வழிய “ம்ம்பா...ம்ம்பா..” என்று ஆடியது.
அப்போது சருகுகளின் ஓசை எழும்ப வேகமாக ஓடி வந்த மற்றொரு உருவம் “ஏட்டி கோட்டி! பின்னிரவு நேரத்தில இங்கன வந்து என் உசிர வாங்கு” என்று அவள் தோள் பற்றி இழுத்தாள்.
அந்த சின்ன உருவமோ கண்களில் உற்சாகம் தென்பட தனது தோளைப் பற்றியவளின் கையைப் பற்றி தான் பார்த்த திசையைக் காட்டி “டுர்ர்..ம்ம்பா” என்றது.
சிறு சலிப்புடன் அந்த திசையில் பார்த்து விட்டு கையைப் பிடித்து இழுத்து “இருளு! இன்னும் செத்த நேரமிருந்தா நம்மள எதாவது ஒரு மிருகம் அடிச்சிபுடும்...வெரசா வா” என்று நடக்க ஆரம்பித்தாள்.
சற்று நேரத்தில் காணிகுடியை அடைந்து இருவரும் உள்ளே நுழைந்து கதவடைத்த பின், இருளாயி யோசனையுடனே நின்றிருந்தாள்.
அவளது முகத்தில் தெரிந்த உணர்வுகள் இதுவரை அவளிடத்தில் தோன்றாதது.
பச்சை அவளைப் பிடித்து இழுத்து அமர வைத்தாள்.
அவளோ சத்தமாக சிரிக்க ஆரம்பித்தாள். நெஞ்சில் வேகம்-வேகமாக அடித்துக் கொண்டு “வா!..வா!” என்றாள்.
அதே நேரம் காரையாறு வனப்பகுதியில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலில் இருளில் இடுப்பில் சிறிய துண்டும், தலையெல்லாம் சிக்குப் பிடித்து போன முடியுடனும், கழுத்தில் மிகப் பெரிய ருத்திராட்சத்துடனும் அமர்ந்திருந்தவன் வேகமாக எழுந்து நின்று தன்னிடம் இருந்த விபூதியை எடுத்து உடலெல்லாம் பூசிக் கொள்ள ஆரம்பித்தான்.
சிறிது நேரம் கண் மூடி நின்றவன் “மிதுனமாலினி வந்துட்டா...கார்கோடகா உனக்கு சவால் விட மிதுனமாலினி வந்துட்டா” என்று ஆவேசமாக கத்தினான்.
அதே நேரம் அம்பாசமுத்திரத்திலிருந்து பாபநாசம் மலைத்தொடரை நோக்கி ஒரு கார் பயணிக்க ஆரம்பித்திருந்தது. அதில் கனிகாவும், அஸ்வத்தும் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.
தங்கம்பட்டி ஜமீனின் வாரிசு அவள். அஸ்வத் அவளின் நண்பன். அவனும் அவளும் வெளிநாட்டில் ஒன்றாகப் படித்தவர்கள். முதன்முறையாக தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறான். கனிகா பிறந்தது முதல் வெளிநாட்டில் தான் இருந்திருக்கிறாள். அவளின் பெற்றோர் ஊருக்கு அழைத்து வந்ததில்லை. அவள் ஊருக்கு செல்வதையும் அவர்கள் விரும்பியதில்லை.
ஆனால் இந்த முறை விடாபிடியாக அஸ்வத்துடன் தானும் இந்தியா செல்வேன் என்று சொல்லி ஊருக்கு வந்து விட்டாள்.
“கனி! நாம மார்னிங் வந்திருக்கலாம். நேச்ச்சரை ரசித்துக் கொண்டே போயிருக்கலாம்”.
“நோ வே அஸ்! நீ தான் பார்த்தேயில்ல. நாம வந்து இறங்கியதிலிருந்து அந்தக் கிழவி என்னை ஊருக்குப் போகச் சொல்லி மிரட்டிகிட்டே இருந்ததை”.
“ம்ம்...ஐ தின்க் ஓல்ட் லேடிக்கு சைக்கலாஜிக்கல் இஷ்யூஸ் இருக்கு”.
“அதை விடு! நாம விடிகிற நேரத்துக்குள்ள பாணதீர்த்த அருவி கிட்ட போயிடனும். அந்த ரேஞ்சர் அது தான் சொன்னார். அப்போ தான் நாம காட்டுக்குள்ள போனது யாருக்கும் தெரியாம போகும்னு சொன்னார்”.
இருவரும் பேசிக் கொண்டே நகரத்தின் எல்லையைக் கடந்து வனத்தின் எல்லைக்குள் நுழைந்திருந்தனர். அவர்களின் கார் வனத்தினுள் நுழையும் போது அதுவரை அமைதியாக இருந்த சூழ்நிலை மாறி காற்றின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. எங்கிருந்தோ மேகங்கள் எல்லாம் வனத்தின் வான்பரப்பை சூழ ஆரம்பித்தது.
கருமேகங்கள் வனத்தின் அடர்த்தியை மேலும் கூட்டியது. மண் வாசனை எழ காற்றின் வேகத்தோடு லேசான தூறல் விழ ஆரம்பித்தது. மலையின் மீது ஏற ஆரம்பித்த கார் திணற ஆரம்பித்தது. மழை பொழிய இடியும் சேர்ந்து கொண்டது.
“ஒ மை காட்! என்ன இது அஸ்?”
“எஸ்! பாரெஸ்ட்டில் இப்படித்தான் இருக்கும். டோன்ட் வொர்ரி” என்றபடி எதிரே இருந்த பாதையை உற்று நோக்கிக் கொண்டு வண்டியை செலுத்த ஆரம்பித்தான்.
Attachments
-
88.7 KB Views: 0